என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் கைது"

    • விஷ்ணுபரத் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மகன் கத்தியால் குத்தப்பட்ட தகவல் கிடைத்து விஷ்ணு பரத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனை தேடி வந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஷ்ணுபரத் (வயது 17). கன்னியாகுமரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த அவன், பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தான்.

    தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அந்த பகுதியில் நடைபெற்ற கோவில் விழாவுக்கு நேற்று இரவு சென்று உள்ளான். அவர்கள் அனைவரும் கோவில் வளாகத்தின் அருகே நள்ளிரவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் சந்துரு (21) வந்தார். தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் இவர், பகுதி நேரமாக ஆட்டோவும் ஓட்டி வருகிறார். அவருக்கும், விஷ்ணுபரத் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

    அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதமும் நடந்துள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சந்துரு, தான் ஓட்டும் ஆட்டோவின் சாவியோடு இணைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியால் விஷ்ணுபரத்தின் விலா மற்றும் பின்பகுதியில் குத்தி உள்ளார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். ஆத்திரத்தில் செய்த செயலால் அதிர்ச்சி அடைந்த சந்துரு பின்னர் சுதாரித்துக்கொண்டு தனது ஆட்டோவில் விஷ்ணு பரத்தை தூக்கி போட்டுக்கொண்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், விஷ்ணு பரத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையில் மகன் கத்தியால் குத்தப்பட்ட தகவல் கிடைத்து விஷ்ணு பரத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனை தேடி வந்தனர். அப்போது சந்துரு, தனது ஆட்டோவில் விஷ்ணு பரத் உடலைக்கொண்டு வந்து வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.

    பள்ளி மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் நேரில் வந்து பலியான விஷ்ணு பரத்தின் உடலை பார்வையிட்டார். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் சந்துரு, நாளை நடைபெறும் திருவிழாவிற்கு நீ வரக்கூடாது என விஷ்ணு பரத்திடம் கூறியதாகவும், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பி ஓடிய சந்துருவை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் அவர் நெல்லை மாவட்டம் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த விவரம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்று சந்துருவை கைது செய்ய கூடங்குளம் சென்றனர்.

    பின்பு அவரை கைது செய்து கன்னியாகுமரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-1 மாணவனை கல்லூரி மாணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சரண் அடைந்த கார்த்திக், அக்பர்ஷா ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
    • மாணவனை போலீசார் கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் டவுனில் உள்ள ஒரு பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவுபிக் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 18-ந் தேதி அதிகாலையில் ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது 3 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவுபிக், அவருடைய சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர் ஷா ஆகியோரை தேடி வந்தனர். இதில் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். கிருஷ்ணமூர்த்தியை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

    சரண் அடைந்த கார்த்திக், அக்பர்ஷா ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களுடைய உறவினரான 16 வயது சிறுவன், இந்த கொலை சம்பவத்திற்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்த சிறுவனை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    பிளஸ்-1 படித்து வரும் அந்த சிறுவன், சம்பவத்தன்று ஜாகீர் உசேன் பிஜிலி தொழுகையை முடித்து விட்டு பள்ளிவாசலில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றதை கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாணவனை போலீசார் நேற்று கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நூர்நிஷாவை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

    ஜாகீர் உசேன் கொலை வழக்கில் சரணடைந்த அக்பர்ஷாவின் சகோதரர் பீர் முகமது (37) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜாகீர் உசேனை கொலை செய்ய அக்பர்ஷாவின் சகோதரர் பீர் முகமது உதவியதாக கிடைத்த தகவலின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • மாணவனை கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி(வயது 60). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவர் டவுனில் உள்ள ஒரு பள்ளி வாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார்.

    இவர் கடந்த 18-ந்தேதி அதிகாலை ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அருகே உள்ள ஜாமியா தைக்கா பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.

    இதுகுறித்து டவுன் போலீசார் நடத்திய விசாரணையில் அவருக்கும், தொட்டிப்பாலம் தெருவில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் இடையே இருந்து வந்த இடப்பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்த நிலையில், 2 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று கோர்ட்டில் மீண்டும் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை தனிப்படையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த நிலையில் அவருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கார்த்திக், அக்பர் ஷாவிடம் நடத்திய விசாரணையில், அவர்களது உறவினரான 16 வயது சிறுவன் ஒருவன் இந்த கொலை சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று மாலையில் சிறுவனை பிடித்து விசாரித்தனர். பிளஸ்-1 படிக்கும் அந்த சிறுவன், சம்பவத்தன்று ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு புறப்பட்டதை கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தது தெரியவந்தது.

    இதையடுத்து மாணவனையும் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள நூர்நிஷாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • 8-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவி வீட்டிற்கு நண்பருடன் சென்றார்.
    • போலீசார் மாணவனை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவி வீட்டிற்கு நண்பருடன் சென்றார். அங்கு மாணவியை பிடித்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான். பின்னர் அந்த மாணவியின் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டு ஓடிவிட்டான்.

    இதுபற்றி மாணவி போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவன் வந்த மோட்டார் சைக்கிள் மூலம் அவரை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் மகராஜ்கஞ்ச் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாணவி 6 மாத கர்ப்பம் அடைந்த நிலையில், இதுகுறித்து பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
    • மாணவியை தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து மருத்துவ பரிசோதனை நடத்தினர்.

    தருமபுரி:

    தருமபுரியை அடுத்துள்ள டி.கடிகார அள்ளி கிராமத்தை சேர்ந்தவர், 17 வயது மாணவி. இவர் ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

    இதே பள்ளியில் படிக்கும் உம்மியம்பட்டி பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, மாணவியிடம் ஆசை வார்த்தைகள் பேசி மயக்கிய அந்த மாணவன் பல முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதில் அந்த மாணவி, 6 மாத கர்ப்பம் அடைந்த நிலையில், இதுகுறித்து, மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

    இதையடுத்து அந்த மாணவியை தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்து மருத்துவ பரிசோதனை நடத்தினர்.

    பின்னர் பெற்றோர் உதவியுடன் மாணவி கொடுத்த புகாரின் பேரில், தருமபுரி அனைத்து மகளிர் போலீசார், மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • துப்பாக்கியுடன் வந்த மாணவனை பள்ளியில் இருந்து நீக்க நிர்வாகம் உத்தரவிட்டது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போர்ட்லாண்ட்:

    அமெரிக்காவின் மேனே மாகாணத்தில் மன்றோ என்ற இடத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்தான். இந்த தகவலை அறிந்த போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று வகுப்பாசிரியர் உதவியுடன் மாணவனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் துப்பாக்கியுடன் வந்த மாணவனை பள்ளியில் இருந்து நீக்க நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.

    அந்த மாணவர் யாருக்கும் மிரட்டல் விடுக்கவில்லை. எனவே அவன் என்ன காரணத்துக்காக பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு வந்தான் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தப்பி ஓடிய சிறுவனை தேடி கண்டுபிடித்து அவனிடம் இருந்த செல்போனை போலீசார் வாங்கி பார்த்தனர்.
    • போலீசார் சிறுவனின் செல்போனை முழுமையாக ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    சென்னை கொடுங்கையூர் எம்.கே.பி. நகர் பகுதியில் ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர் வசித்து வருகிறார். திருமணமான இவர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் நேற்று காலையில் வேலைக்கு செல்வதற்காக இவர் கிளம்பினார்.

    இதையடுத்து வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்று குளித்தார். அப்போது தனது வீட்டு அருகில் வசிக்கும் சிறுவன் ஒருவன் மறைந்திருந்து ஜன்னல் வழியாக படம் பிடிப்பதை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் குளியல் அறையில் இருந்து வெளியில் வந்து சிறுவனை சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் திரண்டனர். அதற்குள் சிறுவன் அங்கிருந்து ஓடி விட்டான்.

    இதுபற்றி எம்.கே.பி. நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய சிறுவனை தேடி கண்டுபிடித்து அவனிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்தனர். அப்போது குளியல் காட்சிகளை சிறுவன் அழித்திருந்தான்.

    இருப்பினும் போலீசார் சிறுவனின் செல்போனை முழுமையாக ஆய்வு செய்தனர். அப்போது ஐ.டி.பெண் ஊழியரின் குளியல் காட்சிகள் சேமிக்கும் பகுதியில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்தனர். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த அவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் எம்.கே.பி. நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • பயந்துபோன மாணவி தனக்கு நேர்ந்து வரும் கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்தார்.
    • கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர், கசவநல்லாத்தூரை சேர்ந்த 15 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆரா என்கிற ஆரோக்கியராஜ் (23) என்பவர் பால் பாக்கெட் போட்டு வந்தார். அப்போது மாணவியுடன், ஆரோக்கியராஜ் நெருங்கி பழகினார். மேலும் காதலிப்பதாகவும் ஆசைவார்த்தை கூறினார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மாணவியுடன் ஆரோக்கியராஜ் உல்லாசமாக இருந்தார். தொடர்ந்து அவர் காதல் ஆசை காட்டி மாணவியுடன் நெருக்கமாக இருந்தார்.

    இதற்கிடையே இதுபற்றி அறிந்த அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுவன் மற்றும் சுப்பு என்கிற சுகுவனேஸ்வரன் (22) ஆகிய இருவரும் நெருங்கி பழகினர். அவர்கள் மாணவியின் காதல் விவகாரம் தெரிந்து இதுபற்றி வெளியில் சொல்லி விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் காதல் ஆசைவார்த்தை கூறி மாணவனும், ஆரோக்கியராஜூம் மாணவியை சீரழித்தனர். பயந்துபோன மாணவி தனக்கு நேர்ந்து வரும் கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்தார்.

    இதற்கிடையே கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மாணவியின் நிலை குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவித்தார். அவர்கள் விசாரித்தபோதுதான் ஆரோக்கியராஜ், மாணவன் மற்றும் சுகுவனேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து மாணவியை சீரழித்து வந்தது தெரிந்தது.

    இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆராக்கியராஜ், மாணவனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுகுவனேஸ்வரனை தேடி வருகின்றனர்.

    விசாரணையில் மாணவியை கடந்த 2 ஆண்டாக அவர்கள் தொடர்ந்து சீரழித்து வந்திருப்பது தெரியவந்தது.

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர், கசவநல்லாத்தூரை சேர்ந்த 15 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆரா என்கிற ஆரோக்கியராஜ் (23) என்பவர் பால் பாக்கெட் போட்டு வந்தார். அப்போது மாணவியுடன், ஆரோக்கியராஜ் நெருங்கி பழகினார். மேலும் காதலிப்பதாகவும் ஆசைவார்த்தை கூறினார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மாணவியுடன் ஆரோக்கியராஜ் உல்லாசமாக இருந்தார். தொடர்ந்து அவர் காதல் ஆசை காட்டி மாணவியுடன் நெருக்கமாக இருந்தார்.

    இதற்கிடையே இதுபற்றி அறிந்த அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுவன் மற்றும் சுப்பு என்கிற சுகுவனேஸ்வரன் (22) ஆகிய இருவரும் நெருங்கி பழகினர். அவர்கள் மாணவியின் காதல் விவகாரம் தெரிந்து இதுபற்றி வெளியில் சொல்லி விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் காதல் ஆசைவார்த்தை கூறி மாணவனும், ஆரோக்கியராஜூம் மாணவியை சீரழித்தனர். பயந்துபோன மாணவி தனக்கு நேர்ந்து வரும் கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்தார்.

    இதற்கிடையே கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மாணவியின் நிலை குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவித்தார். அவர்கள் விசாரித்தபோதுதான் ஆரோக்கியராஜ், மாணவன் மற்றும் சுகுவனேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து மாணவியை சீரழித்து வந்தது தெரிந்தது.

    இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆராக்கியராஜ், மாணவனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுகுவனேஸ்வரனை தேடி வருகின்றனர்.

    விசாரணையில் மாணவியை கடந்த 2 ஆண்டாக அவர்கள் தொடர்ந்து சீரழித்து வந்திருப்பது தெரியவந்தது.

    • படிக்க வைத்த முதலாளி வீட்டில் துணிகரம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அதே பகுதியில் திருமண மண்டம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கரி (வயது 53).

    பாஸ்கர் வீட்டில் அதே பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். சங்கர் மகன் விஜயகாந்த் (22). இவர் குடியாத்தத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    விஜயகாந்த் பிறந்ததில் இருந்து இப்போது கல்லூரி படிக்கும் வரை அனைத்து செலவுகளையும் பாஸ்கர் மனைவி சங்கரி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

    இதன்காரணமாக அவர் தனது மகன் போல் பாவித்து வீட்டின் அனைத்து பகுதிக்கும் சென்று வர அனுமதியளித்துள்ளார். விஜயகாந்தின் அக்காவின் திருமணத்தையும் பாஸ்கர் மனைவி சங்கரி முன்னின்று நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 25-ந் தேதி வெளியே சென்று வீட்டினுள் நுழைந்த பாஸ்கர் மனைவி சங்கரி அறையினுள் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிலிருந்த நகை பெட்டியில் வைத்தி ருந்த 27.5 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து பாஸ்கர் மனைவி சங்கரி ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் விஜயகாந்த் அந்த நகைகளை திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் விஜயகாந்தை கைது செய்து, அவரிடமிருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

    • சிறுவன் நீண்ட நேரமாகியும் விடுதிக்கு திரும்பாததால் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கத்தப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் தனியார் பவுண்டேசன் சார்பில் அரபி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த 13 மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.

    சம்பவத்தன்று அரபி பள்ளியில் படிக்கும் ஷாநவாஸ் (வயது 9) என்ற சிறுவனுக்கும், அவருடன் படிக்கும் 13 வயது மாணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் அங்கு காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுவன் ஷாநவாசை சரமாரியாக குத்தினான்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷாநவாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். பதட்டத்தில் கொலை செய்ததை உணர்ந்த 13 வயதுடைய மாணவன் சிறுவனின் உடலை யாருக்கும் தெரியாமல் மறைக்க முயற்சி செய்தான்.

    அதன்படிஅருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் ஷாநவாஸ் உடலை போட்டு மறைத்து விட்டு எதுவும் நடக்காததுபோல் மீண்டும் பள்ளிக்கு வந்து விட்டான்.

    இதற்கிடையில் சிறுவன் ஷாநவாஸ் நீண்ட நேரமாகியும் விடுதிக்கு திரும்பாததால் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் மேலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது 13 வயது மாணவனின் பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் ஷாநவாசை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் மறைத்து வைத்ததை ஒப்புக்கொண்டான். சிறுவன் ஷாநவாஸ், தனது தாயை தவறாக பேசியதால் கொலை செய்ததாக அழுது கொண்டே தெரிவித்தான்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    போலீசார் கழிவுநீர் தொட்டியில் கிடந்த ஷாநவாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 9 வயது சிறுவனை சக மாணவன் கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மாங்காட்டில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 8-ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    அசாம் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் மாங்காடு பட்டூர் பகுதியில் வீடு எடுத்து தங்கி தனியார் கம்பெனி ஒன்றில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார்.

    தினசரி பெற்றோர் வேலைக்கு சென்றவுடன் அதே பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயதான பள்ளி மாணவன், சிறுமியுடன் சேர்ந்து விளையாடுவது வழக்கம்.

    இந்த நிலையில் விளையாடுவது போல நடித்து பள்ளி மாணவன் அடிக்கடி சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளான். இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் பூந்தமல்லி அனைத்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பள்ளி மாணவனை கைது செய்தனர்.
    • வீடியோவை வெளியிட்ட கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜிகணேசன் என்பவரை கைது செய்தனர்.
    • கைதான மாணவர் பண்ருட்டி சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து சிதம்பரம் டவுன், அனைத்து மகளிர் நிலைய போலீசார் மாணவி, மாணவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவி சிதம்பரம் அருகே உள்ள வெங்காயதளமேடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும், இவர் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தது தெரியவந்தது. மாணவிக்கு தாலி கட்டிய மாணவர் புவனகிரி அருகே உள்ள வடகறிராஜபுறத்தை சேர்ந்தவர் என்றும் இவர் கீரப்பாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் மாணவி கடலூரில் உள்ள காப்பகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்ட நபர் மீது மாணவியின் பெற்றோர் சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தனர்.

    அதன் அடிப்படையில் வீடியோவை வெளியிட்ட கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜிகணேசன் என்பவரை கைது செய்தனர். இவர் சமூக அவலங்களை வீடியோ எடுத்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதைத்தொடர்ந்து மாணவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இவர் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். கைதான மாணவர் பண்ருட்டி சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து கடலூர் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள மாணவியிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு சமூகநலத்துறை அதிகாரிகள் கவுன்சிலிங் வழங்கி வருகிறார்கள்.

    ×