search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225386"

    • அன்னை சத்யா மைதானத்தில் குழந்தைகள் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை.
    • இயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து மைதானம் அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அவரிடம் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மைதானத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து எடுத்துக் கூறினார்.

    தொடர்ந்து மைதானத்தில் சர்வதேச செயற்கை ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து வருவதை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    இதையடுத்து இயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து மைதானம் அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டார். அப்போது அவர் கால்பந்து மைதானம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    மேலும் மைதானத்தில் குழந்தைகள் விளையாடும் அரங்கம் அமைக்கப்படும் என்றும், மைதானத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வில் மருத்துவ கல்லூரி பகுதி தி.மு.க. செயலாளர் சதாசிவம், மாநகராட்சி கவுன்சிலர்கள் அண்ணா.பிரகாஷ், சுகந்தா, ஓய்வு பெற்ற மாவட்ட அலுவலர்கள் மோகன், காந்தி, பயிற்சியாளர்கள் பாபு, ரஞ்சித், மகேஷ், நீலவேணி, தி.மு.க. நிர்வாகிகள் சேகர், ரங்கராஜ், எடிசன், இளங்கோ, கார்த்தி, வினோத் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • திற்பரப்பு சந்திப்பு பகுதியிலிருந்து பெரிய ஏலா வழியாக அருவிப் பகுதிக்கு செல்லும் பாதையை மேம்படுத்த ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி:

    களியல்-அழகியபாண்டி யபுரம் கூட்டுத்குடிநீர்த் திட்டத்தில் குழாய் பதிப்ப தற்காக சாலை உடைக்கப்பட்ட நிலை யில், களியல் முதல் உண்ணியூர்கோணம் வரையிலான 3.5 கி.மீ. பகுதிகள் சீரமைக்கப்படா மல் கிடப்பில் போடப்பட் டன.

    இந்நிலையில் இந்த சாலையை ரூ.80 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணியினை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    திற்பரப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நெடுஞ் சாலைத்துறை உதவி பொறியாளர் தினேஷ், திருவட்டார் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வக்கீல் ஜான்சன், திற்பரப்பு பேரூர் செயலாளர் ஜான் எபனேசர், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஜெ.எம்.ஆர். ராஜா, குலசேகரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜோஸ் எட்வர்ட், திற்பரப்பு பேரூ ராட்சி துணைத் தலைவர் ஸ்டாலின் தாஸ், வார்டு உறுப்பினர் கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண் டனர்.

    திற்பரப்பு அருவியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் திற்பரப்பு சந்திப்பு பகுதியிலிருந்து பெரிய ஏலா வழியாக அருவிப் பகுதிக்கு செல்லும் பாதையை மேம்படுத்தி ஒருவழிப்பாதையில் வாகனங்களை இயக்குவது தொடர்பாக அமைச்சர் மனோதங்கராஜ் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர் களிடம் கூறுகையில், தமிழக அரசு சார்பில் திற்பரப்பு அருவியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட உள் ளன. தற்போது அருவிக்கு செல்லும் பாதையில் மாற்று ஒரு வழிப்பாதை அமைக்கும் வகையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அருவிப்பகுதியில் அரசுத்துறை சார்பில் தங்கும் விடுதி (யாத்ரா நிவாஸ்), கட்டுவது என்றும் கூடுதல் கழிப்பறைகள், கோவில் எதிரே உள்ள கல் மண்டபத்திற்கு செல்லும் பாலத்தை சீரமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கும் என்றார்.

    • ராசிபுரம் டவுன் மேட்டு தெருவில் பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்து வருகிறது.
    • இதன்படி 32-வது ஆண்டாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 50 ஆயிரம் லட்டுகளை பிரசாதமாக வழங்க ஜனகல்யாண் இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் மேட்டு தெருவில் பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்து வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டு சொர்க்கவாசல் திறப்பு விழா வருகிற 2-ந் தேதி அதிகாலை 5 மணி அளவில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். பெருமாளை வணங்கும் பக்தர்கள் 10-நாட்களுக்கு விரதம் இருந்து பரமபத வாசல் வழியே வந்தால் மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பொன் வரதராஜ பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் ராசிபுரம் ஜன கல்யாண் இயக்கத்தினர் லட்டு பிரசாதமாக வழங்கி வருகின்றனர். இதன்படி 32-வது ஆண்டாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 50 ஆயிரம் லட்டுகளை பிரசாதமாக வழங்க ஜனகல்யாண் இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

    லட்டுகள் தயாரிக்கும் பணி தனியார் திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. இதற்காக 1000 கிலோ கடலை மாவு, 1000 கிலோ சர்க்கரை, 500 கிலோ நெய், 1000 லிட்டர் கடலை எண்ணெய், 25 கிலோ முந்திரி மற்றும் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், 5 கிலோ, திராட்சை 25 கிலோ உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு லட்டுகள் தயாரித்து வருகின்றனர். இந்த பணியில் 25-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஜன கல்யாண் இயக்க தலைவர் எஸ்.எம்.ஆர் பரந்தாமன், செயலாளர் மூர்த்தி, ராகவன், ரமேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் சங்ககிரில் இருந்து பவானி செல்லும் சாலையில், சாமியார் தோட்டத்தில் இருந்து கவுண்டனுார் வரை, ரூ.5.1 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப்பணி, தடுப்புச்சுவர் கட்டுதல், வடிகால் கட்டுதல், குழாய் பாலம் அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
    • மகுடஞ்சா வடியில் இருந்து இடைப்பாடி வழியாக குமாரபாளையம் வரை ரூ.6.81 கோடி மதிப்பில், இருவழிச் சாலை அகலப்படுத்துதல், மேம்படுத்தும் பணிகளும் நடக்கிறது.

    சங்ககிரி:

    மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், சேலம் மாவட்டம் சங்ககிரில் இருந்து பவானி செல்லும் சாலையில், சாமியார் தோட்டத்தில் இருந்து கவுண்டனுார் வரை, ரூ.5.1 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப்பணி, தடுப்புச்சுவர் கட்டுதல், வடிகால் கட்டுதல், குழாய் பாலம் அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதேபோல், மகுடஞ்சா வடியில் இருந்து இடைப்பாடி வழியாக குமாரபாளையம் வரை ரூ.6.81 கோடி மதிப்பில், இருவழிச் சாலை அகலப்படுத்துதல், மேம்படுத்தும் பணிகளும் நடக்கிறது. மேலும், ஆலத்தூர்ரெட்டி பாளை யத்தில் இருந்து தேவூர் செல்லும் சாலையில் ரூ.71 லட்சத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை நேற்று, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, சேலம் கண்கா ணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அப்போது, அவர் சாலையோரம் இடையூறாக உள்ள மரங்களை உடனே அகற்றி பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, இடைப்பாடி நெடுஞ்சா

    லைத்துறை கோட்டப்பொ றியாளர் சண்முகசுந்தரம், சங்ககிரி உதவி கோட்டப்பொறியாளர் வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
    • சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் உட்பட 75-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 11 மற்றும் 12-வதுவார்டு ஆகிய பகுதியில் பொது சுகாதாரப் பணிகளை மேற்க்கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.

    முகமிற்கு பேரூராட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் உட்பட 75-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 11 மற்றும் 12-வதுவார்டு பகுதிகளான பாப்பாத்தி அம்மன் கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, காவேரி சாலை கஞ்சிமடம் தெரு, அக்ரகாரம் தெரு ஆகிய இடங்களில் பொது சுகாதாரப் பணிகளை மேற்க்கொண்டனர்.

    மேலும் பராமரிப்பு செய்தல், கொசு ஒழிப்பு மருந்து அடித்தல் மற்றும் பொது மக்களின் தேவைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

    • ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், திருச்சி தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
    • 4 ஆண்டாக நடத்தி வரும் இயற்கை வேளாண் பண்ணையில், நேற்று பணி அனுபவப் பயிற்சி பெற்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், திருச்சி தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இக்குழுவினர், வாழப்பாடி அருகே மத்தூரில் விவசாயிகள் பழனிசாமி, சக்திவேல் மற்றும் குடும்பத்தினர் 4 ஆண்டாக நடத்தி வரும் இயற்கை வேளாண் பண்ணையில், நேற்று பணி அனுபவப் பயிற்சி பெற்றனர்.

    இயற்கை முறையில் கரும்பு, பப்பாளி, வாழை, பீர்க்கங்காய், பாகற்காய், மிளகாய், வெண்டை, வெங்காயம் போன்ற பயிர் சாகுபடி குறித்து கேட்டறிந்தனர். இயற்கை முறை வேளாண்மை , ஊடுபயிர் மேலாண்மை, பல அடுக்கு முறை விவசாயம், இயற்கை வளர்ச்சியூக்கிகள், பூச்சி விரட்டிகள் குறித்தும் அனுபவ பயிற்சி பெற்றனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
    • மாற்றுத்திறன் கொண்ட 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி 19.12.2022 முதல் 11.01.2023 வரை நடைபெற உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி 19.12.2022 முதல் 11.01.2023 வரை நடைபெற உள்ளது.

    இப்பணியை வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுபா, அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் அனிதா குமார், ராஜா, பார்வதி, செல்வராணி மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், பிசியோதெரபிஸ்ட், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம்

    தேடி கல்வி தன்னார்வ லர்கள் மற்றும் மற்ற துறைகள் இணைந்து செய்து வருகின்றனர்.

    மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ரமேஷ், பரமத்தி வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் இந்த பணிகளை பார்வை யிட்டார். அப்போது தங்கள் பகுதிகளில் பள்ளிச் செல்லா குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் எவரேனும் கண்டறி யப்பட்டால், தங்கள் பகுதிக்கு உட்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    • பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஏற்பாடு
    • கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 22-வது ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாநாளை (வியாழக்கிழமை) தொடங்கு கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரைதொடர்ந்து 2 நாட்கள் நடக்கிறது. இதையொட்டிநாளை அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. 5.15 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி ஹோமும் 7 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. 7.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது 8 மணி முதல் மாலை 5 மணி வரை அகண்ட ராமநாம ஜெபம் நடக்கிறது. கொட்டாரம் ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பஜனை குழுவினர் இந்த ஜெபத்தை நடத்துகிறார்கள். மாலை 5மணிக்குபஜனையும் இரவு 7 மணிக்கு தீபாராதனையும் இரவு 7.15 மணிக்குஆன்மீக சொற்பொழிவும் நடக்கிறது.

    2-வது நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையும், 5.15 மணிக்கு கலச பூஜையும், 8 மணிக்கு பஜனையும், 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அப்போது ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், ஆயிரக்கணக்கான லிட்டர் பால் மற்றும் தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை பழச்சாறு, கரும்புச்சாறு, மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம், விபூதி, களபம், பன்னீர், நெய், பச்சரிசி மாவு, உள்பட 16 வகையான வாசனை திரவியங்கள் அடங்கிய சோடச அபிஷேகம் நடக்கிறது. 11.15 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது பகல் 11.30 மணிக்கு மகா அன்னதானம் நடக்கிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனமும் 6.30 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

    ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, தட்டு வடை, குங்குமம், விபூதி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற கனி வகைகளும் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துஉள்ளது. இதற்காக 5 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

    • அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
    • உயர்மட்ட அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்றுவரும் பணி கள் குறித்து, உயர் மட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலை மையில் நடைபெற்றது.

    ஆய்வுக்கூட்டத்தில், வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை (கட்டடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம். மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட் சிகள் ஊராட்சி கள். வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மின்சாரத்துறை, மீன்வளத்துறை, போக்குவ ரத்துத்துறை, காவல்துறை, கூட்டுறவுத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார் பில், நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும். முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற் ெகாள்ளப்பட்டதோடு, ஒவ்வொரு துறைக்கும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவ டிக்கைகள் குறித்து கேட்ட றியப்பட்டது.

    பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பு, கட்ட டம், கடலரிப்பு தடுப்புக் கோட்டம், நெடுஞ்சாலை ஆகியவற்றின் மூலம்மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணி களை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட டது. வளர்ச்சி பணிகளின் செயலாக்கத்தின்போது ஏற்படும் தடைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள் ளப்பட்டு வரும் பணிகளில் ஏதேனும் தடைகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்படின் அது குறித்து மாவட்ட நிர் வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவு றுத்தப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பி ரியா, நாகர்கோவில் மாநக ராட்சி ஆணையர் ஆனந்த மோகன் பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம் உட்பட அனைத் துத்துறை சார்ந்த அலுவ லர்கள் பலர் கலந்து கொண் டனர்.

    • ரூ.40 ஊதிய உயர்வு வழங்கப்படும்
    • அடிப்படை ஊதியமாக பால்வடிப்பு தொழிலாளர்களுக்கு ரூ.343-ம், களப்பணி தொழிலாளர்களுக்கு ரூ.328-ம், தொழிற்கூட தொழிலாளர்களுக்கு ரூ.338.74-ம் கிடைக்கும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கோதையாறு, சிற்றாறு, மணலோடை, கீரிப்பாறை என 4 கோட்டங்களாக ரப்பர் கழகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுமார் 2 ஆயிரத்து 500 பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு தினசரி ரூ.40 ஊதிய உயர்வு வழங்க 3 துறை அமைச்சர்கள் முன்னிலையில் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஓப்புக் கொள்ளப்பட்டது.

    ஆனால் இதனை செயல்படுத்த ரப்பர் தோட்டக் கழகம் தாமதம் செய்ததால், பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டனர். கடந்த மாதம் 7-ந் தேதி முதல் அவர்கள் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில், தொழிற்சங்க த்தினருடனான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடை பெற்றது. நள்ளிரவை தாண்டியும் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை நேற்று அதிகாலை 1.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.

    அதன்படி ரூ.40 ஊதிய உயர்வு உள்பட அடிப்படை ஊதியமாக பால்வடிப்பு தொழிலாளர்களுக்கு ரூ.343-ம், களப்பணி தொழிலாளர்களுக்கு ரூ.328-ம், தொழிற்கூட தொழிலாளர்களுக்கு ரூ.338.74-ம் கிடைக்கும். மேலும் ஊதிய உயர்வு நிலுவைத் தொகை முதல் தவணையாக வருகிற 15-ந் தேதிக்கு முன்பும், 2-ம் தவணை வருகிற 23-ந் தேதிக்கு முன்பும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பணியா ளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அவர்கள் 7-ந் தேதி (இன்று) முதல் வேலைக்குச் செல்வதாக அறிவித்தனர். அதன்படி இன்று காலை அவர்கள் பணிக்கு வந்தனர். 30 நாட்களுக்கு பிறகு அவர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மின்‌ இணைப்பு எண்ணை, ஆதாருடன்‌ இணைக்கும்‌ பணி சேலம்‌ மின்‌ பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின்‌ வாரிய பிரிவு அலுவலகங்களிலும்‌ நவம்பர்‌ 28-ந்‌ தேதி முதல்‌ டிசம்பர்‌ 31-ந்‌ தேதி வரை நடைபெற்று வருகிறது.
    • ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும்‌ காலை 10.30மணி முதல்‌ மாலை 5.15மணி வரை சிறப்பு முகாம்‌நடைபெறும்‌.

    சேலம்:

    சேலம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வீடுகள்‌, கைத்தறி, விசைத்தறி, சூடிசை மற்றும்‌ விவசாய மின்‌ இணைப்புதாரர்கள்‌ தங்க ளது மின்‌ இணைப்பு எண்ணை, ஆதாருடன்‌ இணைக்கும்‌ பணி சேலம்‌ மின்‌ பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின்‌ வாரிய பிரிவு அலுவலகங்களிலும்‌ நவம்பர்‌ 28-ந்‌ தேதி முதல்‌

    டிசம்பர்‌ 31-ந்‌ தேதி வரை நடைபெற்று வருகிறது. ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும்‌ காலை 10.30மணி முதல்‌ மாலை 5.15மணி வரை சிறப்பு முகாம்‌நடைபெறும்‌. இந்த சிறப்பு

    முகாமை பயன்படுத்தி பொது மக்கள்‌ பயன்‌ பெறுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வாா்டு எண் 59 அமராவதிபாளையம்-கட்டுப்பாளையம் பிரதான சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தாா் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
    • மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகராட்சி 2, 3 வது மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி  நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதில், வாா்டு எண் 59 அமராவதிபாளையம்-கட்டுப்பாளையம் பிரதான சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தாா் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

    இதைத்தொடா்ந்து மாநகராட்சி 2 வது மண்டலத்துக்கு உட்பட்ட வாா்டு எண் 32 ல் புது ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சாலைகளின் தரம் மற்றும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

    அதே போல திருப்பூா் மாநகராட்சி 3 -வது மண்டலத்துக்கு உட்பட்ட வாா்டு எண் 33ல் அம்ருத் 2 திட்டத்தின்கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மூளிக்குளத்தின் கரையை பலப்படுத்தும் பணியையும் ஆய்வு செய்தாா். அப்போது மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

    ஆய்வின்போது மாநகராட்சி உதவி ஆணையா்கள், அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    ×