search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225386"

    • 3 இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்க மண் பரிசோதனை பணி தீவிரம்
    • போக்குவரத்து நெரிசலை தவிர்க்க

    திருச்சி:

    தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.ேநரு, திருச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் மூன்று இடங்களில் உயர் மட்டப் பாலம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

    அதன்படி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பும் வெளியானது. தமிழக நெடுஞ்சாலைத்துறை திருச்சி கோட்டம் சார்பில் அண்ணாசிலை முதல் ஜங்சன் மற்றம் போஸ்ட் ஆபீஸ் முதல் அரசு தலைமை மருத்துவமனை வரை என இரண்டு உயர்மட்ட பாலம் பணிகளையும், தமிழக நெடுஞ்சாலைத்துறை திருச்சி கோட்டம் சார்ப்பில் காவரி பாலம் முதல் குடமுருட்டி வரையிலான உயர்மட்டப் பாலப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன..

    விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக நிலம் ஆர்ஜித கணக்கெடுப்பு மற்றும் மண்ணின் உறுதித்தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயர் மட்டப் பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த 2 வாரங்களாக இந்த வழித்தடங்களில் 25 முதல் 50 மீட்டர் வரையிலான இடைவெளியில் மண் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக அண்ணா சிலை முதல் ஜங்சன் வரை ரூ.2.7 கோடியும், போஸ்ட் ஆபீஸ் முதல் அரசு மருத்துவமனை வரையில் ரூ.1.24 கோடியும், காவிரி பாலம் முதல் குடமுருட்டி வரை ரூ.1.20 கோடி என மொத்தம் ரூ.5.14 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும் போது, உயர்மட்ட பாலம் அமைக்க நில ஆர்ஜிதம் செய்வதற்கான கணக்கெடுப்பு பணிகள், மண் பரிசோதனை பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதத்துக்குள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படும். டி.பி.ஆர். தயாரான பிறகுதான் பாலம் கட்ட எத்தனை கோடி செலவாகும் என தெரியவரும்.

    மேலும் திருச்சி நகரில் உள்ள ப ாலக்கரை, புத்தூர் சுரங்கப்பாதைகளுக்கு மேல் உயர்மட்ட பாலம் அமைய உள்ளது. 9 மீட்டர் அகலத்தில் இரு வழிப்பாதையில் இப்பாலம் அமைக்கிறது. இந்த உயர்மட்டப்பாலம் வந்தால் திருச்சியின் தோற்றம் புதுப்பொலிவு பெறுவதோடு, போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்றார்.

    • மாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி நல்லாம்பாளையம் பகுதியில் ஏரி உள்ளது.
    • ரூ.10 லட்சம் அரசு நிதி உதவி பெற்று ஏரியின் கரைகளை புதிதாக அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி நல்லாம்பாளையம் பகுதியில் ஏரி உள்ளது. இது சிறுக, சிறுக மண் அரிப்பு ஏற்பட்டு இந்த கரைகள் முற்றிலும் சேதமானது. இதனால் மழை நீர் வந்தால் தேங்காமல் வீணாக சென்று விடுகிறது.

    இதனை புதிதாக கரை கட்டி தண்ணீர் சேமித்து வைக்க இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, ஊராட்சி தலைவி புஷ்பா இதற்கான முயற்சி எடுத்து, ரூ.10 லட்சம் அரசு நிதி உதவி பெற்று ஏரியின் கரைகளை புதிதாக அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஏரியில் மழை நீர் நின்றால், இப்ப குதி விவசாய கிணறுகளில் நீர் பெருகும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து போர்வெல்களில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலை யில் இருக்கும். இதனால் இப்பகுதி விவசாயிகள் தண்ணீர் கவலையில்லாமல் விவசாயம் செய்ய உதவியாக இருக்கும். கால்ந டைகளுக்கும் போதுமான குடிநீர் கிடைக்கும்.

    • இரண்டு காவலர்கள் முழு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காரணம் இல்லாமல் வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சீர்காழி :

    தமிழகத்தில் கோவையில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் என ஏழு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில்வே ரோடு பகுதியில் வசிக்கும் இந்து முன்னணி மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சரண்ராஜ் மற்றும் தென் பாதி வ.உ.சி தெருவில் வசிக்கும் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன், திருவெண்காடு பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோரது இல்லங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    1 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு காவலர் என இரண்டு காவலர்கள் முழு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரம் போலீஸ் ஒன்று பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    இரவு நேரங்களில் தேவை இன்றி உரிய காரணங்கள் இல்லாமல் வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சீர்காழி பகுதியில் பெட்ரோல் பங்குகளில் கேன்கள் மற்றும் பாட்டில்களில் சில்லரை பெட்ரோல் விற்பனை செய்ய காவல்துறை தடை செய்து அறிவித்துள்ளது.

    இதனால் பெட்ரோல் நிலையங்களில் சில்லறை பெட்ரோல் விற்பனை இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    • கரியகோவில் அணைக்கு தினமும் 50 கன அடி நீர் கூடுதலாக கிடைக்கும் கைக்கான்வளவு திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.
    • இதில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பாப்பநாயக்கன்பட்டியில் 188.76 ஏக்கரில் கரியகோவில் அணை கட்டப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாட்டில் மேட்டூர், பவானிசாகர், அமராவதி, பாபநாசம், பெருஞ்சாணி, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, முல்லைப் பெரியாறு, திருமூர்த்தி, வைகை உள்பட 100-க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இந்த அணைகள் தமிழகத்தின் நீர்வளத்தை பாதுகாக்கின்றன.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மேட்டூர், கரியகோவில், ஆனைமடுவு உள்ளிட்ட முக்கிய அணைகள் உள்ளது. இதில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பாப்பநாயக்கன்பட்டியில் 188.76 ஏக்கரில் கரியகோவில் அணை கட்டப்பட்டுள்ளது. அதன்மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    அணைக்கு கூடுதல் தண்ணீர் பெற 2020-ல் கைக்கான்வளவு நீரோடை திட்டம் அமைப்பது குறித்து அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். ெதாடர்ந்து 7.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணியை 18 மாதங்களில் முடிக்க அரசு அறிவுறுத்தியது.

    மதகுகள் அமைப்பு

    அதன்படி 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பணி தொடங்கப்பட்டது. செப்டம்பர் பருவ மழைக்கு பின், 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் பணி தொடங்கப்பட்டது. கரியகோவில் அணைக்கு கைக்கான்வளவு நீரோடையில் இருந்து புதிதாக ஓடை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. அங்கு மதகுகள் அமைத்து, அைணக்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகள் மகிழ்ச்சி

    தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் (நீர்வளம்) கூறியதாவது:-

    கைக்கான்வளவு திட்டத்தில் சீரான இடைவெளியில் 8 தொட்டிகள் அமைத்து, அங்கிருந்து நீர் வர, 295 மீட்டர் தூரம் கான்கிரீட் கால்வாய் அமைக்கப்படுகிறது. கால்வாய் கட்டுமானப்பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. குறிப்பாக 90 சதவீத பணி முடிந்துள்ளது.

    நவம்பரில்...

    நவம்பரில் இத்திட்டம் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் கரியகோவில் அணைக்கு பருவ மழையின்போது தினமும் 50 கன அடி நீர் கூடுதலாக கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மை பணியை மேற்கொள்ள நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து வடசேரி பஸ் நிலையத்தில் தூய்மை பணியை மேயர் மகேஷ் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த எந்திரத்தின் மூலமாக கழிவறைகள் நவீன முறையில் சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து மேயர் மகேஷ் பொன்னப்ப நாடார் காலனியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான சாலை பணியையும் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆணை யாளர் ஆனந்த மோகன்,தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் முத்துராமன், கவுன்சிலர் நவீன்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . வ.உ.சி. பிறந்த நாளையொட்டி தாழக்குடியில் உள்ள அவரது சிலைக்கு மேயர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • கழிவு நீர் வாய்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது
    • 9-வது வார்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடந்தது

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டில் உள்ள குளத்து பாளையம், திட்ட சாலை, பெரியார் காலனி, பிள்ளையார் கோவில் தெரு, சந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவையால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீருடன் மழை நீர் வெளியேறியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இது குறித்து தகவல் அறிந்த கரூர் மாநகராட்சியின் 9-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், கரூர் வடக்கு நகர காங்கிரஸ் தலைவருமான ஸ்டீபன் பாபு கழிவுநீர் வெளியேறிய பகுதிகளை பார்வையிட்டு அதனை மாநகராட்சியின் சிறிய பொக்லைன் இயந்திரம் வரவழைத்து உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய்களை சரி செய்து கொடுத்த மாநகராட்சி உறுப்பினர் ஸ்டீபன் பாபு க்கு நன்றி கூறினர்

    • சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
    • 180 மீட்டருக்கு மையத்தடுப்புச்சுவர் வைக்கும் பணி தொடங்கியது.

    மங்கலம் :

    திருப்பூர் - மங்கலம் ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் சாலையை அகலப்படுத்த வேண்டும். வளைவு, விபத்து ஏற்படக்கூடிய இடங்கள், நான்கு, மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் வாகனங்கள் விதிமீறி முந்தி செல்வதை தடுக்க மையத்தடுப்புச்சுவர் வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.ஒரு மாதம் முன் நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.

    இந்நிலையில் 2021 - 22ம் ஆண்டு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, முதல்கட்டமாக 180 மீட்டருக்கு மையத்தடுப்புச்சுவர் வைக்கும் பணி தொடங்கியது. லாரிகளில் கொண்டு வந்த மையத்தடுப்புக்கற்களை கிரேன் உதவியுடன் நிறுவும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர்.

    நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், மங்கலம் - திருப்பூர் ரோட்டில் அதிக நெரிசல் மற்றும் விபத்து அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்ட பாரப்பாளையம், பெரியாண்டிபாளையம் சந்திப்பில் முதல்கட்டமாக மையத்தடுப்பு கற்கள் வைக்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் விதிமீறி முன்னேறி செல்லக்கூடாது.தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடதுபுறத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்பட்டு மேலும் சில சந்திப்புகளில் மையத்தடுப்புச்சுவர் ஏற்படுத்தப்படும் என்றனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை
    • வருகிற 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் 5 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி கமிஷனர் ஆனந்த மோகன் மற்றும் நெடுஞ்சாலை துறை, வீட்டு வசதி வாரியம் ,குடிநீர் வடிகால் வாரியத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் உட்பட பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆலோசிக் கப்பட்டது. பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஏற்கனவே அஞ்சு கிராமம், புளியடி பகுதியில் தற்போது வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளது. அஞ்சுகிராமத்தில் 480 வீடுகள் உள்ளதில் 50 வீடுகள் தற்போது காலியாக உள்ளது. அதில் பயனாளிகளை அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் புளியடி பகுதியில் 30 வீடுகள் காலியாக உள்ளது. அந்த வீடுகளையும் பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    புதிதாக புதுகுளம் பகுதியில் 384 வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. அதை மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர வேண்டும். வருகிற 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் 5 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கன்னியா குமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக சீரமைப்பு பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சாலை பிரச்சினை தொடர்பாக சில புகார்கள் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியில்லாத காண்ட்ராக்டர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • சேலம் ரெயில்வே கோட்டத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்து அதிகம் உள்ள வழித்தடங்களில் ஒன்றாக சேலம் மேட்டூர் ரெயில் பாதை உள்ளது.
    • இந்த நிலையில் சேலம் ஓமலூர் இடையே 11 கிலோமீட்டர் நீளத்திற்கு ஈரோட்டில் ரெயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்து அதிகம் உள்ள வழித்தடங்களில் ஒன்றாக சேலம் மேட்டூர் ரெயில் பாதை உள்ளது. மேட்டூரில் உள்ள தொழிற்சா லைகளுக்கு தேவையான கச்சா பொருட்கள், மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு தேவைப்படும் நிலக்கரி உள்ளிட்டவை கொண்டு வருவதற்கும் மேட்டூரில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவும் சேலம் மேட்டூர் ரெயில்வே வழித்தடம் பயனுள்ளதாக உள்ளது .

    சேலம் மேட்டூர் வழித்தடத்தில் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க வசதியாக இந்த பாதையை இரட்டை வழித்தடமாக மாற்றும் பணி கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது .அதில் சேலம் ஓமலூர் மற்றும் ஓமலூர்-மேட்டூர் இடையே என இரண்டு பிரிவுகளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    முதல் கட்டமாக மேட்டூர் ஓமலூர் இடையே இரட்டை பாதை அமைக்கப்பட்டு ரெயில் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில் சேலம் ஓமலூர் இடையே 11 கிலோமீட்டர் நீளத்திற்கு ஈரோட்டில் ரெயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

    இந்த பணி ரூ. 40 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நிலையில் மின்சார பாதை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓமலூர்-மேட்டூர் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு முடிவற்ற நிலையில் சேலம் ஜங்ஷனுடன் ஓமலூர் இரட்டை ரெயில் பாதையை இணைக்கும் வகையில் பணிகள் நிறைவு நிலைக்கு நெருங்கி வருகிறது.பெருமளவு பணிகள் முடிவடைந்துள்ளதால் வரும் அக்டோபர் மாதத்திற்குள் ஒட்டுமொத்த பணிகளும் நிறைவடையும். அதன்பின்னர் சேலம்-ஓமலூர் மேட்டூர் இடையே மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரெயில் பாதையில் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இலங்கை தமிழர்களுக்கு 70 வீடுகள் கட்டும் பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
    • இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அனுப்பங்குளம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு செவலூரில் ரூ.3 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 70 வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து வேலை உத்தரவு ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் முன்னிலை வகித்தார். பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    அவர் பேசும் போது கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 60 தொகுப்பு வீடுகள் ரூ.3 கோடி மதிப்பிலும், 2 தனிவீடுகள் ரூ.11.30 லட்சம் மதிப்பிலும், அனுப்பங்குளம் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 8 தொகுப்பு வீடுகள் ரூ.40 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.3.51 கோடி மதிப்பில் 70 வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்து, வேலை உத்தரவு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், இலங்கை தமிழர்க ளுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசின் அனைத்து நலத்திட்ட ங்களும் படிப்படி யாக செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திலகவதி, சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) உமாசங்கர்,சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முத்துலட்சுமி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டாட்சியர் (இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்) கார்த்திகேயினி, சிவகாசி வட்டாட்சியர் லோகநாதன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய மற்றும் மாநில அரசு தலா, 2.40 லட்சம் நிதி வழங்கி, 74 வீடுகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
    • ஆனால், குடியிருப்பு கட்டிட பணி துவங்கப்படாமல் இருந்து வந்தது.

    சங்ககிரி:

    சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 22 ஊராட்சி மன்றங்களில், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், 2021–22 நிதியாண்டில், ஒன்றிய மற்றும் மாநில அரசு தலா, 2.40 லட்சம் நிதி வழங்கி, 74 வீடுகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், குடியிருப்பு கட்டிட பணி துவங்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலரும், உட்கட்டமைப்பு மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல அலுவலருமான நக்கீரன் தலைமையில் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகணேஷ், பி.டி.ஓ .முத்து, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா ,பணி மேற்பார்வையாளர் குமார் ஆகியோர் நேரில் சென்றனர். அங்கு பயனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி முதல் கட்டமாக கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சியில், 10 வீடுகள் கட்ட அளவீடுகள் செய்து பணிகளை தொடங்கினர்.

    • சேலம் மாவட்டம் சங்க கிரி ஊராட்சி ஒன்றியம் ஐவேலி ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.
    • அள்ளப்பட்டு மீண்டும் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்க கிரி ஊராட்சி ஒன்றியம் ஐவேலி ஊராட்சியில் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இதையொட்டி ஊரில் பொது இடத்தில் குவிக்கப்பட்ட குப்பைகள் அள்ளப்பட்டு மீண்டும் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு) எல். நக்கீரன் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர். ஒன்றியக்குழு உறுப்பினர். வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ). வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களும் ஊராட்சி செயலாளர் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×