என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 225460"
- முட்டையில் பொடிமாஸ் செய்து இருப்பீங்க.. இன்று மீல் மேக்கரில் பொடிமாஸ் செய்யலாம்.
- இது தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் - 20
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 3
வெங்காயம் - ஒன்று
குழம்பு மசாலா பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - ஒன்றரை டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து வறுத்து பின்னர் மிக்ஸிஜாரில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஊறவைத்த மீல் மேக்கரை நன்றாகப் பிழிந்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்..
ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக ஆனதும், குழம்பு மசாலா, கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்..
பிறகு, அரைத்து வைத்த மீல் மேக்கர், உப்பு சேர்த்து கிளறிவிடவும்.
இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி கிளறி 2 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான மீல் மேக்கர் பொடிமாஸ் ரெடி..!.
- சப்பாத்திக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.
- பட்ட்ர் சிக்கனை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
முந்திரி விழுது - 2 தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
சீரகப்பொடி - அரை தேக்கரண்டி
தயிர் - 1 கப்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
வெண்ணெய் - 4 தேக்கரண்டி
பிரெஷ் கிரீம் - 2 தேக்கரண்டி
கருப்பு உப்பு - 1 தேக்கரண்டி
சிவப்பு கலர் - அரை தேக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
செய்முறை :
சிக்கன் துண்டுகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தயிர், கறிமசாலா, கருப்பு உப்பு, கஸ்தூரி மேத்தி, சிவப்பு கலர் ஆகியவற்றை நன்றாக கலந்து அதில் சிக்கனை போட்டு நன்றாக கலந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயில் வெண்ணெய் ஊற்றி உருகியதும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
சிக்கனை ஊற வைத்த மசாலா கலவை மீதமிருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளவும். மசாலா கலவை வேக தேவையான நீர் விடவும்.
ஊற வைத்த சிக்கனை தந்தூரி அடுப்பில் அல்லது மைக்ரோவேவ் ஓவனில் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
தயார் செய்த மசாலா கலவையுடன், வெந்த சிக்கனை சேர்த்து, பிரெஷ் கிரீமையும் சேர்க்கவும்.
பட்டர் சிக்கன் மசாலாவை இறக்கும் முன், அரைத்த முந்திரி விழுதையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இப்போது சூப்பரான பட்டர் சிக்கன் ரெடி.
- வாரத்தில் இரண்டு முறையேனும் கீரை சேர்த்துக் கொள்வது நல்லது.
- இதனை சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பாலக்கீரை - 2 கப்
முட்டை -2-3
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பில்லை - 1 கொத்து
பச்சைமிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 - 3/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, மஞ்சள் தூள், கீரைக்குத் தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.
கீரை 5 நிமிடங்கள் வதங்கினால் போதுமானது. கீரை வதங்கியவுடன் கலக்கி வைத்துள்ள முட்டை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மற்றும் முட்டைக்குத் தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும்.
முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் உதிரியாக வரும் வரை வதக்கினால் பாலக் முட்டை புர்ஜி தயார்.
- தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- முட்டையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்:
முட்டை - 5
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்த, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* பிறகு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, நன்கு கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
* முட்டை நன்கு வெந்ததும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு முட்டை பொடிமாஸ் தயார்.
- தினமும் கொத்தமல்லி சாப்பிட்டால் கல்லீரலில் வீக்கம் ஏதும் ஏற்பட்டிருந்தால் அது குணமாகும்.
- இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும் இந்த தேங்காய் – கொத்தமல்லி சட்னி.
தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி – ஒரு கட்டு (கழுவி சுத்தம் செய்யவும்),
பச்சை மிளகாய் – 4,
தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்,
பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை
எண்ணெய் - அரை டீஸ்பூன்
செய்முறை:
மிக்சியில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்துக் அரைத்து எடுக்கவும் (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்).
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அரைத்த வைத்துள்ள சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சத்தான சுவையான சட்னி ரெடி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்