என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 225460"
- சித்திரை விஷு பண்டிகை அன்று பல்வேறு சுவையான ரெசிபிக்கள் சமைக்கப்படும்.
- ஓலன் வெள்ளை சாதத்துடன் மட்டுமின்றி, கலவை சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
நீர் பூசணி/வெள்ளை பூசணி - 1 1/2 கப்
தட்டைப்பயறு - 1 கப்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
மிகவும் நீர் போன்ற தேங்காய் பால் - 1 கப்
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 டீபூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* நீர் பூசணிக்காயின் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* தட்டை பயறை 8 மணிநேரம் ஊற வைத்துக் கொண்டு, பின் அதை குக்கரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் அரை கப் நீர் ஊற்றி, அத்துடன் ஒரு கப் நீர் போன்றுள்ள தேங்காய் பால் ஊற்றி, அதோடு நீர் பூசணிக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பில் வைத்து, காயை நன்கு வேக வைக்க வேண்டும்.
* நீர் பூசணி நன்கு வெந்ததும், அத்துடன் வேக வைத்துள்ள தட்டை பயறை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, பின் கெட்டி தேங்காய் பாலை ஊற்றி, கொதிக்க ஆரம்பிக்கும் முன்பே அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் ஊற்றினால், ஓணம் சத்யா ஸ்பெஷல் ஓலன் தயார்.
குறிப்பு:
* நீர் பூசணிக்காய் மற்றும் தட்டைப் பயறு நன்கு மென்மையாக வெந்திருந்தால் தான், அது தேங்காய் பாலை நன்கு உறிஞ்சியிருக்கும்.
* கெட்டியான தேங்காய் பால் சேர்த்த பின் நீண்ட நேரம் அடுப்பில் வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது திரிய ஆரம்பித்துவிடும்.
* சமைத்து முடித்த பின் குறைந்தது அரை மணிநேரம் கழித்து சாப்பிட பரிமாறினால் தான், தேங்காய் பாலுடன் காய்கறிகள் நன்கு ஊறி இருக்கும்.
* ஓலன் ரெசிபிக்கு நீர் பூசணியுடன், மஞ்சள் பூசணியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- கேரளாவில் சித்திரை விஷு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும்.
- கேரள நாட்டு பாரம்பரிய உணவுகளில் ஒன்றான அவியல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சௌசௌ - 150 கிராம்
உருளைக்கிழங்கு - 150 கிராம்
கேரட் - 150 கிராம்
பூசணிக்காய் - 150 கிராம்
வாழைக்காய் - 150 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
தேங்காய் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4
தயிர் - 1/2 கப்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* காய்கறிகள், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
* மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து, அனைத்து காய்கறிகளையும் போட்டு, காய்கறிகள் வேகும் அளவு தண்ணீர் விட்டு, 20 நிமிடம் மூடி வேக வைத்து இறக்கிக் கொள்ளவும்.
* குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து, காய்கறிகளில் உள்ள தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் சிறிது உப்பை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடவும்.
* பின் அதில் தயிரை ஊற்றி 2 நிமிடம் கிளறி இறக்கி விடவும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்த, பின் வெங்காயம் சேர்த்து, அதனை பொன்னிறமாக வதக்கி, அத்துடன் அந்த காய்கறி கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு, கொத்தமல்லி இலையை தூவி இறக்கி விடவும்.
* இப்போது சுவையான அவியல் ரெடி!!!
* அவியல் தொக்கு போல் வேண்டும் என்பவர்கள் காய்கறி தண்ணீரை வற்ற விடாமல் தேங்காய் சேர்த்து செய்ய வேண்டும்.
- மக்கானா என்பது தாமரை விதைகள்.
- மக்கானாவைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை தயாரிக்கலாம்.
மக்கானா என்பது தாமரை விதைகள். இந்த விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த விதைகள் அனைத்து சூப்பர் மார்கெட் கடைகளிலும் கிடைக்கும். இந்த மக்கானாவைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை தயாரிக்கலாம். அதில் மக்கானா கிரேவி சப்பாத்தி, பூரி, புல்கா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் சாப்பாத்தி அல்லது புல்கா செய்வதாக இருந்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக மக்கானா கிரேவி செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்:
மக்கானா/தாமரை விதைகள் - 2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 3/4 கப்
உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
முந்திரி - 5
வரமிளகாய் - 2
மிளகு - 1 /4 டீஸ்பூன்
சோம்பு - 1 /2 டீஸ்பூன்
செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு பச்சை வாசனை போக மென்மையாக வதக்கி இறக்கி குளிர வைத்து ஆறியதும் மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் முந்திரி, வரமிளகாய், சோம்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பேனில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், மக்கானாவைப் போட்டு மொறுமொறுவென்று மாறும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்த பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுதை சேர்த்து கிளறி 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, சில நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்பு அதில் 3/4 கப் நீரை ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை குறைந்தது 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
அடுத்து அதில் வறுத்த மக்கானாவை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து, பின் பிரஷ் க்ரீம் சேர்த்து கிளறி இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மக்கானா கிரேவி தயார்.
- இந்த சட்னி இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்.
- இன்று இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
தேங்காய் துருவல் - சிறிதளவு
புதினா - 1 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிய துண்டு
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - சுவைக்கு
தாளிக்க
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உளுந்தம் பருப்பு - டீஸ்பூன்
செய்முறை :
புதினா, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி, புதினாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆறவைக்கவும்.
மிக்சி ஜாரில் வதக்கிய கொத்தமல்லி, புதினாவை போட்டு அதனுடன் வேர்க்கடலை, தேங்காய் துருவல், ப.மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு தாளித்து அரைத்த சட்னியில் ஊற்றி கிளறுங்கள்.
அவ்வளவுதான் வேர்க்கடலை புதினா சட்னி தயார்.
இதை இட்லி , தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.
- சப்ஜி வட மாநிலங்களின் உணவு வகையாகும்.
- இன்று வெங்காய சப்ஜி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 5
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - 1/2 துண்டு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கடுகு -1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தே.அ
செய்முறை :
* கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சின்ன வெங்காயம் (தோல் உரித்து), இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
* பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.
* நன்கு வதங்கியதும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பிரட்டி வதக்குங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
* இதில் தண்ணீர் ஊற்றக்கூடாது எண்ணெயிலேயே சுருங்க வதங்கி சுண்ட வேண்டும்.
* 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து மூடி வைக்கவும்.
* நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை இருந்து இறக்கி பரிமாறவும்.
* அவ்வளவுதான் ஆனியன் சப்ஜி ரெசிபி..!
- வாழைக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
- சாம்பார், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 1
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்க
தேங்காய் துருவல் - கால் கப்
ப.மிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிக்க
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து மஞ்சள் தூள் சேர்த்த பின்னர் நறுக்கிய வாழைக்காயை சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும். வாழைக்காய் வேக அதிக நேரம் ஆகாது.
* வாழைக்காய் வெந்தவுடன் அரைத்த தேங்காயை போட்டு 2 நிமிடம் மூடி போட்டு மிதமான தீயில் வைத்த இறக்கி பரிமாறவும்.
* இப்போது சூப்பரான வாழைக்காய் வறுவல் ரெடி.
- தென் மாவட்டங்களில் மட்டன் உப்புகண்டம் மிகவும் பிரபலம்.
- பழைய சோறு, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
ஆட்டு இறைச்சி - 1 கிலோ
பூண்டு - 20 பல்,
காய்ந்த மிளகாய் - 15
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ஆட்டு இறைச்சியை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். உப்பு சிறிதளவு தான் போட வேண்டும். ஏனெனில் மட்டன் காயும் போது சுருங்கும். அதனால் உப்பு அதிகரித்து விடக்கூடாது.
இந்த விழுதினை நறுக்கி வைத்த மட்டனில் சேர்த்து நன்கு கலக்கவும். மசாலா நன்றாக பிடிக்க வேண்டும்.
இதனை ஒரு நூலில் கோர்த்து வெயிலில் காய வைக்கவும். ஈரம் வற்றும் வரை 1 வாரம் காய வைக்கவும். நன்றாக காய்ந்த உடன் காற்று புகாதா டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது.
தேவைப்படும் போது உப்புக்கண்டத்தை எடுத்து அம்மிக்கல்லில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடவும்.
சுவையான ருசியான உப்புக்கண்டம் ரெடி.
- இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
- இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 150 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 2
துருவிய தேங்காய் - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லித் தழை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
இனிப்பில்லாத கோவா - 100 கிராம்
பால் - 20 மில்லி
பன்னீர் - 60 கிராம்
குங்குமப்பூ - 1 கிராம்
சோளமாவு - 1 தேக்கரண்டி
மைதா மாவு - 1 மேசைக்கரண்டி
திராட்சை 20 கிராம்
முந்திரி - 20 கிராம்
பாதாம் பருப்பு - 20 கிராம்
தனியா - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
ஏலக்காய் - 2
கிராம்பு - 4
பட்டை - 2
எண்ணெய் - தேவைக்கேற்ப
பிரெஷ் கிரீம் - 40 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
உருளைக்கிழங்கை மசித்துகொள்ளவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் காய்ச்சிய பாலை ஊற்றி அதில் குங்குமப்பூவைக் கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, பன்னீர், கோவா, சோள மாவு, மைதா மாவு, திராட்சை, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு இவை எல்லாவற்றையும் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
மிக்சி ஜாரில் நறுக்கிய வெங்காயம், முந்திரி, பாதாம், தனியா, கசகசா, சீரகம், துருவிய தேங்காய், இஞ்சி, ஒரு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், ஏலக்காய், கிராம்பு, பட்டை, கறிவேப்பிலை, 70 மில்லி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு அதில் தக்காளி விழுது சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றவும்.
கலவை கொதித்து வரும்போது அதில் பிரெஷ் கிரீம் சேர்க்கவும்.
10 நிமிடங்கள் கழித்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் பதத்தில், பொரித்த உருண்டைகளை அதில் போடவும்.
சிறிது நேரம் கழித்து அதன் மேல் கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கவும்.
'நவாபி கோப்தா கறி' ரெடி.
இதை சப்பாத்தி, தோசை, இட்லி அல்லது பரோட்டாவுடன் சேர்த்து பரிமாறலாம்.
- இந்த சட்னி 2 ,3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
- இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 75 கிராம்
தக்காளி - 2
பூண்டு - 6 பற்கள்
வர மிளகாய்- 12
புளி - எலுமிச்சை அளவு
கடுகு - 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிக்சி ஜாரில் வெங்காயம், பூண்டு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கொரகொரவென அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே ஜாரில் பழுத்த தக்காளியுடன் புளியையும் சேர்த்து அதனை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும்.
அடுத்தாக அதில் தக்காளி பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். சட்னியின் காரத் தன்மை போகும் வரை அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
சட்னியில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து விட்டு, பின் அடுப்பில் இருந்து இறக்கினால் சட்னி ரெடி!
சுட சுட இட்லிக்கு இந்த கடப்பா சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்! இந்த சட்னி 2 ,3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
- சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டையை வறுக்க
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள், மிளகாய் தூள் - தலா 1/4 டீஸ்பூன்
வேகவைத்த முட்டை - 7
மசாலா செய்ய
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
சீரக தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - நறுக்கியது
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* பிறகு அதில் வேகவைத்த முட்டையை கீறி சேர்த்து 3 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
* மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் சேர்த்து கலந்து தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.
* மசாலா வெந்ததும் அதில் கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
* பிறகு வறுத்த முட்டைகளை சேர்த்து கலந்து, சிறிது கொத்தமல்லி தூவி இறக்கினால் வெங்காயம் முட்டை மசாலா தயார்.
- இந்த ரெசிபி மிகவும் காரமாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும்.
- குழந்தைகளுக்கு சிக்கன் 65 என்றால் மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
முட்டை - 1
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பொளலில் சோள மாவு, அரிசி மாவு, முட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மிளகு தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை, சோள மாவு கலவையில் சேர்த்து கலந்து, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் பொரித்து, எடுத்து விட வேண்டும்.
பின் அந்த எண்ணெயில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இறுதியில் அதனை ஒரு தட்டில் போட்டு, அதன் மேல் பொரித்து வைத்துள்ள கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் தூவி அலங்கரித்து பரிமாறினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி ரெடி!!!
- தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும்.
- சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
மட்டன் மூளை - 5
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
சீரக தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 2 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* மட்டன் மூளையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் சூடானதும் அதில் மட்டன் மூளையை போட்டு அதனுடன் 1/2 டீஸ்பூன், சிறிது உப்பு போட்டு 5 நிமிடம் வேகவிடவும். பிறகு தண்ணீரில் இருந்து எடுத்து, அதில் உள்ள நரம்புகளை நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
* தக்காளி குழைய வதங்கி எண்ணெய் பிரிந்தது வரும் போது அதில் நறுக்கிய மட்டன் மூளையை சேர்த்து கலந்து, அதனுடன் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
* பிறகு கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
* தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்ததும் இதில் சிறிது அளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் மட்டன் மூளை மிளகு மசாலா தயார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்