என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 225460"
- பேபி கார்னில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இந்த ரெசிபியை செய்ய 30 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
பேபி கார்ன் - 1 பாக்கெட்
பிரஷ் க்ரீம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பால் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வதக்கி அரைப்பதற்கு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 4 பற்கள்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பேபி கார்னை துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி இறக்கி குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்க்க வேண்டும்.
பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
அடுத்து அதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிரேவி போன்று வந்ததும், தீயைக் குறைத்து 1 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் பேபி கார்னை நீருடன் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தூவி இறக்கினால், பேபி கார்ன் மசாலா ரெடி.
- 30 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்யலாம்.
- சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
நெத்திலி கருவாடு - 100 கிராம்
தக்காளி - 4 நறுக்கியது
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 1
தட்டிய இஞ்சி பூண்டு - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிதளவு
கடுகு - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* கருவாட்டை இரண்டு மூன்று முறை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
* தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பூண்டு, சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்தது வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமானதும், இதில் தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி பச்சை வாசனை போனதும், இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
* மசாலாவில் பச்சை வாசனை போனதும் இதில் கருவாடை போட்டு கிளறவும்.
* சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
* கிரேவி திக்கான பதம் வந்ததும் இறுதியாக சிறிது கறிவேப்பில்லை சேர்த்து இறக்கவும்.
* இப்போது சூப்பரான நெத்திலி கருவாடு தொக்கு ரெடி.
- இந்த சட்னி சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் உட்கொள்வது நல்லது.
- வாழைத்தண்டு சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
வாழைத்தண்டு (நறுக்கியது) - ஒரு கப்
பூண்டு - 4 பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
தேங்காய்த்துருவல் - 10 டீஸ்பூன்
புளி - தேவையான அளவு
உளுந்து - 3 டீஸ்பூன்
தனியா(மல்லி) - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை :
வாழைத்தண்டை நார் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
வெறும் வாணலியில் உளுந்து, தனியா (மல்லி), சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் வெள்ளை எள்ளை அடுத்தடுத்து சேர்த்து வறுத்து ஆறவிடவும்.
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வாழைத்தண்டு சேர்த்து மிதமான தீயில் லேசாக வதக்கவும்.
வாழைத்தண்டு ஆறியதும், ஏற்கெனவே வதக்கிய வற்றுடன் சேர்த்து, தேங்காய்த் துருவல், உப்பு, புளி, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சூப்பரான சத்தான வாழைத்தண்டு சட்னி ரெடி.
- பழைய சாதத்தில் எத்தனையோ உணவு வகைகளை செய்யலாம்.
- இன்று மீந்த போன பழைய சாதத்தில் வத்தல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 5,
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் - 1/4 டேபிள் ஸ்பூன்,
உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
முதல் நாள் மீந்த சாதத்தை தண்ணீர் ஊற்றி எடுத்து வைத்து, அடுத்த நாள் அதை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் இருந்தால் மாவு புளித்து விடும்.
வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
காய்ந்த மிளகாய் வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக (சில்லி பிளேக்ஸ்) பொடித்துக் கொள்ளுங்கள்.
அதே ஜாரில் வெங்காயத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து தனியாக வைக்கவும்.
கடைசியாக பிழிந்து வைத்த சாதத்தை ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து அதை ஒரு அகலமான கிண்ணத்தில் ஊற்றவும்.
இப்போது அதனுடன் அரைத்து வெங்காய விழுது, சில்லி பிளேக்ஸ், சீரகம், பெருங்காயம், உப்பு அனைத்தையும் சேர்த்து மாவை தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
இப்பொழுது நல்ல வெயிலில் ஒரு பேப்பர் போட்டு அதன் மேல் பிளாஸ்டிக் கவரை விரித்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் மாவை நன்றாக ஒரு முறை அடித்து விட்டு ஒரு கரண்டி மாவு எடுத்து தோசை ஊட்டுவது போல் சிறிது சிறிதாக அந்த பிளாஸ்டிக் கவர் மீது ஊற்றி தேய்த்து விடுங்கள். இதே போல அனைத்து மாவையும் ஊற்றி ஒரு நாள் முழுவதும் வெயிலில் வைத்து விடுங்கள்.
இப்போது இருக்கும் வெயிலுக்கு காலை ஊற்றி வைத்தால் மாலையே நன்றாக காய்ந்து விடும். அதை கவரில் இருந்து அப்படியே எடுத்து மறுபுறம் திருப்பிப் போட்டு அடுத்தநாள் இதே போல் வெயிலில் காய வைத்து எடுத்து விட்டால் போதும் அருமையான பழைய சாத வத்தல் தயார்.
இதை வீட்டின் நிழலிலும் காய வைக்கலாம். மேற்கொண்டு ஒன்று இரண்டு நாட்கள் ஆகும் அவ்வளவு தான்.
நன்றாக காய்ந்த வத்தலை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து தேவைப்படும் போது எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம்.
- இந்த சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
- இந்த சட்னி செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்:
தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 2,
புதினா - அரை கைப்பிடி,
வர மிளகாய் - 5,
புளி - ஒரு சிறு நெல்லி அளவு,
இஞ்சி - ஒரு சிறு துண்டு,
கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
சமையல் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க
கடுகு, கறிவேப்பிலை
செய்முறை :
தக்காளி, வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
புதினா இலைகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இஞ்சியை தோல் உரித்து கொள்ளுங்கள்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுபட்டதும் அதில் புளி மற்றும் இஞ்சி சேர்த்து வறுக்கவும்.
அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி சேர்த்த பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வதங்கி விடும்.
அடுத்து புதினா இலைகளைச் சேர்த்து சுருள வதங்கியதும், அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.
இந்த பொருட்களெல்லாம் நன்கு ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு நைஸாக அரைக்க வேண்டும்.
ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டுதாளித்து சட்னியில் கொட்டி இறக்கினால் தக்காளி புதினா சட்னி தயார்.
இதனுடன் சூடான இட்லி, தோசை வைத்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.
- சிக்கன், மட்டனில் கபாப் செய்து இருப்பீங்க.
- இன்று காய்கறியில் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - அரை கிலோ
பச்சை பட்டாணி - 50 கிராம்
கேரட் - 1,
பீன்ஸ் - 10,
காலிஃப்ளவர் - கொஞ்சம்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு, வெண்ணெய் - தேவைக்கு
செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
கேரட், பீன்ஸ், காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும். கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் போட்டு வதக்கவும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும் ஆறவைத்து அதனுடன் பச்சை பட்டாணி சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இத்துடன் மிளகாய் தூள், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு கலந்து மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
கிரில் கம்பியில் வெண்ணெய் தடவி கொலுக்கட்டை போல் மாவை கம்பியில் பிடித்து வைக்கவும். இதனை பார்பிக்யூ சார்க்கோல் கிரில் அடுப்பில் வைத்து 20 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.
அவ்வப்போது உணவுகள் மீது வெண்ணெய் தடவி விட்டால் சட்டென கருகாது. வெந்ததும் மெதுவாக கம்பியில் இருந்து உருவி, சாஸ், உடன் பரிமாறவும். பார்பிக்பூ அடுப்பு இல்லாதவர்கள் தோசைக்கல்லில் போட்டும் எடுக்கலாம்.
இப்போது சூப்பரான வெஜிடபிள் சீக் கபாப் ரெடி.
இதில் எந்த காய்கறிகளை வேண்டுமானலும் சேர்த்து செய்யலாம்.
- இப்பொழுதே கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது.
- வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 2 கிலோ
வெள்ளை முழு உளுந்து - 200 கிராம்
பெருங்காயப்பொடி - 1 தேக்கரண்டி
கடுகு - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
வெந்தயப்பொடி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - 1 கட்டு
கறிவேப்பிலை - ஒரு சிறிய கப் அளவு
கரகரப்பாக அரைக்க
மிளகாய் வத்தல் - 10
சீரகம் - 2 மேஜைக்கரண்டி
பூண்டு - 1 பெரியது
செய்முறை
2 கிலோ வெங்காயத்தை தோலுரித்து பொடிதாக நறுக்கி ஒரு பேப்பரில் பரப்பி நான்கு மணி நேரம் உலர விடவும்.
உளுந்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
பூண்டை தோலுரித்து வைக்கவும்.
மிளகாய் வத்தல், சீரகம், பூண்டு மூன்றையும் மிக்ஸ்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பருப்பை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இட்லி பதத்திற்கு அரைக்க தேவை இல்லை. 10 நிமிடம் அரைத்தால் போதும்.
அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், கடுகு, பெருங்காயப்பொடி, மஞ்சள்பொடி, வெந்தயப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
பிறகு கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வெங்காய கலவையை உருட்டாமல் சிறிது சிறிதாக எடுத்து தட்டுகளில் வைத்து வெயிலில் காய வைக்கவும். உருட்டி வைத்தால் வறுக்கும் போது சரியாக வேகாது.
அடுத்த நாள் வடகம் தட்டோடு ஒட்டி இருக்கும். எனவே ஒரு சிறிய மேஜைக்கரண்டி கொண்டு எடுத்து ஒரு பேப்பரில் பரப்பி வெயிலில் காய வைக்கவும்.
இரண்டு நாட்களில் வடகம் நன்கு காய்ந்து விடும்.
பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். தேவையான போது வறுத்து கொள்ளலாம்.
- சிக்கனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூ
முந்திரி - ஒரு கைப்பிடி
மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
சோம்பு - கால் ஸ்பூன்
கசகசா - கால் ஸ்பூன்
பட்டை, கிராம்பு - சிறிதளவு
ஏலக்காய் - 2
ஜாதிக்காய் - 1
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - 4 ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - ஸ்பூன்
தயிர் - 1 ஸ்பூன்
பால் - 2 ஸ்பூன்
செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
பாதி முந்திரி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய், புதினா மல்லித்தழையை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை போட்டு, அதில் இஞ்சி, பூண்டு விழுது, முந்திரி மிளகு அரைத்த விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தயிர், நெய், எலுமிச்சை சாறு, சோயா சாஸ், தேவையான அளவு உப்பு போட்டு நன்கு பிசைந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதமுள்ள முந்திரியை போட்டு சிவந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் ஊறவைத்த சிக்கன் மசாலா கலவையை போட்டு, மிதமான தீயில் கிளறவும்.
சிக்கனில் உள்ள நீரே போதுமானதும். சிக்கன் நன்றாக வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லி தழைதூவி இறக்கவும்.
இப்போது சூப்பரான செட்டிநாட்டு முந்திரி சிக்கன் கிரேவி ரெடி.
- மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.
- முட்டைகோஸில் உள்ள நார்சத்து செரிமான, மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது.
தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் - 200 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி - 1/2 இன்ச்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
புளி - சிறு துண்டு (நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்)
துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 1
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
தாளிப்பதற்கு...
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முட்டைகோஸ், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து பொன்னிறமாக தாளித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் முட்டைக்கோஸ் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து, பின் அதில் புளிச்சாறு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றினால், முட்டைகோஸ் சட்னி ரெடி!!!
- முட்டையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இது சப்பாத்தி, தோசைக்கு அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 5
பட்டை - 1 இன்ச்
பிரியாணி இலை - 1
கிராம்பு - 2
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்
ஹரியாலி மசாலாவிற்கு…
கொத்தமல்லி - 1 கட்டு (பெரியது)
புதினா - 1 கட்டு
பச்சை மிளகாய் - 3
வெங்காய மசாலாவிற்கு…
வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 இன்ச்
செய்முறை:
* முட்டையை வேக வைத்து இரண்டாக வெட்டி கொள்ளவும்.
* வெங்காயம், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முதலில் ஹரியாலி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருளை மிக்சியில் போட்டு அதனுடன் அரை கப் நீரை ஊற்றி நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்த வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டுகளை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, சேர்த்து தாளித்த பின்னர், அரைத்த வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த ஹரியாலி மசாலா மற்றும் பிரஷ் க்ரீம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, வெட்டிய முட்டைகளை போட்டு மூடி வைத்து, 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால், சுவையான ஹரியாலி முட்டை கிரேவி தயார்.
- இறாலில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இந்த ரெசிபி செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
இறால் - 1/4 கிலோ,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
பச்சைமிளகாய் - 5,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
சோம்பு, சீரகம் - தலா 20 கிராம்,
மஞ்சள் தூள்- 10 கிராம்,
நல்லெண்ணெய் - 10 மி.லி.,
எலுமிச்சை பழம் - 1,
உப்பு,கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவைக்கு.
செய்முறை
இறாலை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சுத்தம் செய்த இறாலை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்த இறாலை போட்டு கிளறவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
இறால் வெந்து உதிரியாக வரும் போது கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு பிழிந்து புட்டு மாதிரி வரும்வரை கிளறி இறக்கவும்.
இப்போது சூப்பரான இறால் புட்டு ரெடி.
- கிரீன் சிக்கன் டிக்கா சூப்பராக இருக்கும்.
- இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
புதினா - 2 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
எலுமிச்சை சாறு - பாதி
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா, கொத்தமல்லி அனைத்தையும் விழுதாக அரைக்கவும்.
* சிக்கனுடன் அரைத்த விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கலந்து 4 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் ஊற வைக்கவும்.
* ஊறிய சிக்கனை மைக்ரோவேவ் ஓவனில் கிரில் செய்து எடுக்கவும்.
* மைக்ரோவேவ் ஓவன் இல்லையெனில், பேனில் நெய் விட்டு, மிதமான சூட்டில் சிக்கனை போட்டு வேக விட்டு எடுக்கவும்.
* சுவையான கிரீன் சிக்கன் டிக்கா ரெடி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்