search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225460"

    • இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • சிக்கன் சிந்தாமணி செய்முறையை பார்க்கலாம்..

    கோயம்புத்தூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் சிக்கன் சிந்தாமணியும் ஒன்று. நம்மில் பலரும் தயிர் சாதத்திற்கு சைடிஷாக எடுத்துக் கொள்வது ஊறுக்காய், உருளைக்கிழங்கு வறுவல் அதிகபட்சமாக சிப்ஸ். ஆனால் கோவை மக்களோ தயிர் சாதத்திற்காகவே சிக்கன் சிந்தாமணியை செய்வார்களாம். அந்த அளவுக்கு சாதம், கஞ்சி, தோசையென எல்லா வகையான உணவுகளுக்கும் சிறந்த சைடிஷாக சிக்கன் சிந்தாமணி பொருந்துகிறது.

    இதில் மசாலா பொடி எதுவும் சேர்க்காமல் காரம் மட்டும் தூக்கலாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் சேர்க்கும் மிளகாயின் சுவை. சிக்கன் என்றாலே சூடு என்பார்கள். ஆனால், சிக்கன் சிந்தாமணி மட்டும் உடலுக்கு சூடே கிடையாது. காரணம் அதை மண் சட்டியில், நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஊற்றி சமைப்பார்கள். ஈரோடுவாசிகள் சிக்கன் சிந்தாமணியை மிளகாய் கறி எனவும் அழைப்பார்கள். எப்போதுமே சிக்கனை வைத்து வறுவல், தொக்கு, பிரட்டல் என ஒரே மாதிரியான ரெசிபிக்களை சமைத்து கொண்டிருப்பவர்கள் இந்த வாரம் சன்டே சமையலில் சிக்கன் சிந்தாமணியை சமைத்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    நாட்டுக்கோழி - 1 கிலோ

    கடலை எண்ணெய் - 50 மிலி

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    சின்ன வெங்காயம் - 150 கிராம்

    சிவப்பு மிளகாய் - 150 கிராம்

    உப்பு - தேவையான அளவு

    பூண்டு - 5

    தக்காளி - 1

    பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1 கைபிடி அளவு

    சீரகம் - 1 ஸ்பூன்

    நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்

    செய்முறை

    சிக்கன் சிந்தாமணியை மண்சட்டியில் சமைத்தால் மட்டுமே அதன் பாரம்பரிய சுவை கிடைக்கும்.

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    பூண்டை தோல் நீக்கி இடித்துகொள்ளவும்.

    சீரகத்தை இடித்து வைக்கவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    அடுப்பில் சட்டியை வைத்து அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும். 

    அடுத்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இடித்த பூண்டை சேர்த்து வதக்கவும். 

    பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும் நாட்டுக்கோழியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    தேவையான அளவு உப்பு சேர்த்து விட்டு, காரமும் சரியாக இருக்கிறதாக என ஒருமுறை ருசிப்பார்க்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து சிக்கனை 15 நிமிடம் வேக வைக்கவும். 

    இப்போது இளசான தேங்காய் துண்டுகள், இடித்த சீரகம் சேர்த்து நன்கு கிளறவும். 

    மீண்டும் 15 நிமிடத்திற்கு சிக்கனை சுண்ட வேக விடவும்.

    இறுதியாக நல்லெண்ணெய் சேர்த்து கறிவேப்பிலையை தூவவும். 

    அடுப்பை அணைத்து விட்டு சுடச்சுட பரிமாறலாம்.

    சுவையான கொங்குநாடு ஸ்பெஷல் சிக்கன் சிந்தாமணி தயார்.

    • காய்கறிகளில் அனைத்து சத்துக்களும் உள்ளது.
    • சூடான சாதத்துடனும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    பெரிய வெங்காயம் - 2,

    கேரட் - 1,

    உருளைக்கிழங்கு - 2,

    காலிஃப்ளவர் சிறியது - 1,

    பீன்ஸ் - 10,

    பச்சை பட்டாணி - அரை கப்,

    இஞ்சி சிறிய துண்டு - 2,

    பச்சை மிளகாய் - 3,

    முந்திரி பருப்பு - 15,

    எண்ணெய் - 5 ஸ்பூன்,

    கடுகு - அரை ஸ்பூன்,

    சோம்பு - ஒரு ஸ்பூன்,

    பட்டை சிறிய துண்டு - 1,

    ஏலக்காய் - 2 ,

    கிராம்பு - 2

    பிரியாணி இலை - 1,

    உப்பு - ஒரு ஸ்பூன்,

    தனி மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்,

    கறிவேப்பிலை - ஒரு கொத்து,

    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி.

    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    மிக்சியில் வெங்காயம், இஞ்சி, இரண்டு பச்சை மிளகாய் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் கடாய் வைத்து ஊற்றி சூடானதும் காய்கறிகளை சேர்த்து 10 நிமிடம் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை வேறு ஒரு தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சோம்பு, கடுகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

    மசாலா நன்றாக வதங்கியதும் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    பின்னர் வதக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, இவற்றுடன் தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு கொதிக்கவைக்க வேண்டும்.

    பிறகு இவை அனைத்தும் சேர்ந்து நன்றாக வெந்ததும் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.

    இப்போது சூப்பரான வெஜிடபிள் மசாலா ரெடி.

    • பச்சை பட்டாணி குருமா ரொம்பவே ஈஸியான ரெசிபி
    • இந்த ரெசிபியை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பச்சை பட்டாணி - 1 கப்

    வெங்காயம் - 3

    தக்காளி - 4

    பச்சைமிளகாய் - 4

    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

    கரம் மசாலா தூள் - 1ஸ்பூன்

    இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்

    கொத்தமல்லி - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    தேங்காய் பால் முதல் பால் - 1 கப்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    பச்சைப்பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, பச்சை மிளகாயை அரைத்து கொள்ளவும்.

    2 தக்காளியை தனியாக அரைத்து கொள்ளவும்.

    மீதமுள்ள 2 தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, லவங்கம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்ததாக வெட்டி நறுக்கி வைத்துள்ள 2 தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கிய பின்னர் முன்பு அரைத்து வைத்த தக்காளி சேர்க்கவும்.

    தொடர்ந்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    பிறகு வேகவைத்த பச்சைப்பட்டாணி போட்டு உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

    தொடர்ந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்த பிறகு தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு கீழே இறக்கவும்.

    இப்போது நீங்கள் எதிர்பார்த்த டேஸ்டியான பச்சை பட்டாணி குருமா தயார்.

    • குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் - 1/2 கிலோ 

    மிளகுத்தூள் - 4 ஸ்பூன் 

    எலுமிச்சைசாறு - 2 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு 

    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து, கழுவி தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி வைக்கவும்.

    கழுவிய மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் எலுமிச்சை சாற்றை ஊற்றி, உப்பு, கறிவேப்பிலை, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பிசறி அரைமணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை போட்டு ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

    இப்போது சூடான மீன் மிளகு வறுவல் ரெடி.

    • கிராமப்புறங்களில் நந்தை கறி சாப்பிடுவது வழக்கம்.
    • நத்தை கறி சுவையானது, ஆரோக்கியமானது.

    தேவையான பொருட்கள்

    நத்தை - அரை கிலோ

    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    வெங்காயம் - 2

    தக்காளி - 1

    ப.மிளகாய் - 3

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

    கரம் மசாலா - அரை டீஸ்பூன்,

    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு,

    தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    வயல்களில் கிடைக்கும் நத்தைகளை உயிரோடு பிடித்து வந்து கொதிக்க வைத்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் போதும் நத்தை இறந்து விடும். பிறகு ஓடுகளை உடைத்து நத்தையின் கறியை தனியாகப் பிரித்தெடுத்து நல்ல தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்கு அலசி கொள்ள வேண்டும்.

    வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து தக்காளி குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

    அடுத்து நத்தை கறியினை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    நத்தை கறியின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் விட்டு கறியை நன்கு வேக விடவும்.

    அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

    கறி நன்கு வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    இப்போது நத்தை கறி பரிமாறத் தயார்.

    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • இதை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள்

    தக்காளி - 10 பழுத்தது

    தண்ணீர் - 1 கப்

    கிராம்பு - 6

    பட்டை - 1 துண்டு

    மிளகு - 1 தேக்கரண்டி

    உப்பு - 1 தேக்கரண்டி

    சர்க்கரை - 2 தேக்கரண்டி

    வினிகர் - 1 தேக்கரண்டி

    செய்முறை

    தக்காளியை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

    கடாயில் தண்ணீர் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, மிளகு, நறுக்கிய தக்காளி போட்டு கடாயை மூடி, 30 நிமிடம் வேகவிடவும்.

    தக்காளி நன்கு வெந்ததும், இதை ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து அரைத்த தக்காளி விழுதை வடிகட்டவும்.

    வேறொரு கடாயில், வடிகட்டிய தக்காளி விழுது ஊற்றி, கொதிக்கவிடவும்.

    5 நிமிடம் கழித்து, இதில் உப்பு மற்றும் சர்க்கரை போட்டு கிண்டவும்.

    தக்காளி கெட்சப்'பின் சுவையை சரி பார்த்து இறுதியாக வினிகர் சேர்த்து கிளறவும்.

    கெட்சப்'பின் ஈரம் நீங்கி, கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.

    தக்காளி கெட்சப் இப்பொழுது தயார்.

    நன்கு ஆறியபின் கண்ணாடி ஜாடியில் போட்டு பிரிட்ஜ்ஜில் வைக்கவும். 1 மாதம் வரை கெட்டுப்போகாது.

    • மட்டன் நல்லி எலும்பு வறுவல் ஒரு சூப்பரான உணவாகும்
    • எலும்பு பிரியர்களுக்கு இது ஒரு சிறப்பான டிஷ்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் எலும்பு - முக்கால் கிலோ

    வெங்காயம் - 250 கிராம்

    தக்காளி - 150 கிராம்

    இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    பெருஞ்சீரகம் தூள் - ½ டீஸ்பூன்

    கரம் மசாலா தூள் - ¼ டீஸ்பூன்

    கருப்பு மிளகு தூள் - ½ டீஸ்பூன்

    தேங்காய் பால் - அரை கப் கெட்டியானது

    உப்பு - தேவைக்கேற்ப

    தாளிப்பு

    கடுகு - அரை டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை

    காய்ந்த மிளகாய் - 2

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டன் எலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    குக்கரில் சுத்தம் செய்த மட்டன் எலும்பை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து 4 விசில் வரை வேக விடவும். எலும்புகள் நன்கு வேகவைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், பெருஞ்சீரகம் தூள், கரம் மசாலா தூள், கருப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

    எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும் போது, ​​மட்டன் எலும்பை வேக வைத்த நீருடன் சேர்க்கவும். தண்ணீர் வற்றும் வரை அடுப்பை மிதான தீயில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

    அடுத்து அதில் தேங்காய் பால் சேர்க்கவும்.

    எண்ணெய் பிரிந்து, தண்ணீர் வற்றி திக்கான தொக்கும் பதம் வந்ததும் இறக்கி தனியாக வைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெயை சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து வறுத்த எலும்புகளுடன் சேர்க்கவும்.

    நன்றாக கலந்து சாதம், ரொட்டி அல்லது தோசையுடன் பரிமாறவும்!

    இப்போது சூப்பரான மதுரை ஸ்டைல் மட்டன் நல்லி எலும்பு வறுவல் ரெடி.

    • வயிறு தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்யும்.
    • இந்த கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    வெந்தயக் கீரை - 2 கட்டு,

    வெங்காயம் - 1,

    தக்காளி - 2,

    இஞ்சி - ஒரு துண்டு,

    காய்ந்த மிளகாய் - 8,

    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,

    கடுகு - சிறிதளவு,

    கறிவேப்பிலை

    பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை.

    செய்முறை:

    கீரையை நன்றாக ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, ஆறவைக்க வேண்டும்.

    ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தை சேர்த்து தாளித்து துவையலில் சேர்க்க வேண்டும்.

    இப்போது சூப்பரான வெந்தயக்கீரை துவையல் ரெடி.

    • மீனை விதவிதமாக செய்து சாப்பிடலாம்.
    • புது விதமான எளிதான மீன் வறுவல் செய்யலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்

    மீன் - 1/2 கிலோ

    சிறிய வெங்காயம் - 6

    மல்லி - 1/2 டீஸ்பூன்

    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    வர மிளகாய் - 10

    இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு

    எலுமிச்சை - 1

    செய்முறை

    மீனை நன்றாக சுத்தம்செய்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயத்தை போட்டு அதனுடன் சோம்பு, சீரகம், மிளகு வர மிளகாய், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    மீன் வருவளுக்கு தேவையான மசாலா இப்பொழுது ரெடியாகி விட்டது.

    அரைத்த மசாலாவில் எலுச்சை சாறு சேர்த்து அதில் மீன் துண்டுகளை போட்டு நன்றாக கலக்கி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா கலந்து மீன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மொறு மொறு இடித்து அரைத்த சுவையான மீன் வறுவல் ரெடி.

    • தோசை, இட்லிக்கும் தொட்டு கொள்ள அருமையான இருக்கும்.
    • இந்த ரெசிபியை செய்ய 20 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 6

    வெங்காயம் - 2

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    சீரக தூள் - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை, கறிவேப்பிலை - தேவையான அளவு

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.

    அடுத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்

    மசாலா நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி கடாயை மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.

    பின்பு மறுபக்கம் திருப்பி விட்டு 2 நிமிடம் வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இப்போது சூப்பரான முட்டை மசாலா தயார்!

    • நாண், இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இந்த சப்ஜியில் அனைத்து விதமான சத்துக்களும் அடங்கியுள்ளது.

    தேவையான பொருட்கள்:

    வெங்காயம் - 3

    தக்காளி - 4

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    பன்னீர் - 150 கிராம்

    கேரட் - 1

    பீன்ஸ் - 10

    உருளைக்கிழங்கு - 1

    குடைமிளகாய் - 1/2

    காலிஃபிளவர் நறுக்கியது - அரை கப்

    பட்டாணி - 1/2 கப்

    காஷ்மீர் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி

    சீரகம் தூள் - 1 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

    பிரெஷ் கிரீம் - 1/2 கப்

    கசூரி மெதி, கொத்தமல்லி இலை - சிறிதளவு

    செய்முறை

    கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

    பன்னீரை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைகிழங்கு, குடை மிளகாய், காலிஃபிளவர், வேக வைத்த பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

    அடுத்து அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

    அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, கஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    மசாலா நன்கு வதக்கிய பின்பு வதக்கிய காய்கறி மற்றும் வறுத்த பன்னீர் சேர்த்து நன்கு கலந்த பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடத்திற்கு மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

    பத்து நிமிடம் கழித்து இதில் கசூரி மேத்தி, கொத்தமல்லி இலை மற்றும் பிரெஷ் கிரீம் சேர்த்து பரிமாறவும்.

    இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபுள் சப்ஜி தயார்

    • கத்திரிக்காயை வைத்து சாம்பார், புளிக்குழம்பு மட்டுமே செய்திருப்போம்.
    • இன்று கத்தரிக்காயில் அருமையான சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கத்திரிக்காய் - கால் கிலோ

    தக்காளி - 3

    பெ. வெங்காயம் - 2

    ப. மிளகாய் - 2

    காய்ந்த மிளகாய் - 4

    கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பில்லை - சிறிதளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய், 1 வெங்காயம், தக்காளி, ப. மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும்.

    பின்னர் ஆவி அடங்கியதும் தக்காளியின் தோலை மட்டும் நீக்கி கொள்ளவும்.

    தோல் நீக்கிய பின் மிக்ஸியில் இந்த கலவையை நன்கு அரைத்து கொள்ளவும்.

    இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

    பின்னர் நாம் அரைத்து வைத்த கத்திரிக்காய் கலவையை தேவையான தண்ணீருடன் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.

    எண்ணெய் பிரிந்து கெட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    இப்பொழுது இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ் கத்திரிக்காய் சட்னி தயார்.

    ×