search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்கள்"

    • புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு, நீருண்டு என்பது திமுறை வாக்கு
    • இத்தகைய வழிபாடு இரண்டு வகைப்படுகிறது. ஒன்று கோவில்களில் செய்யப்படுவது

    புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு, நீருண்டு என்பது திமுறை வாக்கு

    இந்த மண்ணில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் இறைவனை நினைத்து தினமும் வழிபாடு செய்வது அவசியமானது.

    இந்த உலகத்தில் நம்மை பிறக்க வைத்து, உண்பதற்கு உணவும், சுவாசிக்க காற்றும், குடிப்பதற்கு தண்ணீரும், குளிர்காய்வதற்கும், சமைப்பதற்கும் உதவும் நெருப்பையும் கொடுத்த வள்ளல், இறைவன்.

    ஒவ்வொரு நொடியும் நாம் அவன் தந்த இயற்கை சக்திகளைப் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்கிறோம். அதற்கு கடனாக அவனிடம் அன்பு கொண்டு, வழிபாடு செய்வது நம் கடமை.

    இத்தகைய வழிபாடு இரண்டு வகைப்படுகிறது. ஒன்று கோவில்களில் செய்யப்படுவது. அது பரார்த்த வழிபாடு எனப்படும். மற்றொன்று நாமே வீட்டில் இறைவனின் திருவுருவச் சிலைகளை வைத்து வழிபடுவது. இது ஆத்மார்த்த வழிபாடு எனப்படும்.

    இந்த இரண்டு வகையான வழிபாட்டிலும் இறைவனின் திருமேனிகளுக்கு அபிஷேகம், அர்ச்சனை ஆகியவை உண்டு.

    அபிஷேகத்திற்கு தூய்மையான கிணற்று நீர் ஆகியவை சிறந்தவை.

    இறைவனுக்கு உகந்த மலர்களை வைத்து அவனை உள்ளன்போடு பூசிக்க வேண்டும். இறைவனின் திருமுடியில் மலர் இல்லாமல் ஒருபோதும் இருப்பது கூடாது.

    நாம் அன்றாடம் வழிபடும் விநாயகப் பெருமான், சிவபெருமான், மகாவிஷ்ணு, முருகப்பெருமான், காமாட்சி அம்மன், மகாலட்சுமி போன்ற தெய்வங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள மலர்களை உபயோகிக்கலாம்.

    இவை பொதுவானவை. காலை நேரத்தில் தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, செண்பகம், புன்னாகம் ஆகிய பத்துவிதமான மலர்களைக் கொண்டு இறவனை வழிபட வேண்டும்.

    தாழைமலரை மட்டும் சிவபெருமானுக்கு உபயோகிப்பது கூடாது. நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்கு புஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ் தாமரை ஆகியன கொண்டு பூஜை செய்தால் நன்மை அடையலாம்.

    மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியன உகந்தன. அறுகு, தும்பை, புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, செண்பகம் ஆகியவை அஷ்ட புஷ்பங்கள் எனப்படும். 

    • தரமற்ற, வாசனையற்ற மலர்களை கொண்டு கடவுளை பூஜித்தவர்களுக்கு,
    • ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வ இலை போதும்!

    இறைவனை பூக்கள் கொண்டு பூஜை செய்தவற்கும் இந்த ஜென்மாவில் நாம் அனுபவிக்கும் சுக துக்கங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

    வாசனையற்ற மலர்களை கொண்டு இறைவனை பூஜை செய்யவே கூடாது. (சில மலர்கள் விதிவிலக்கு). தரமற்ற, வாசனையற்ற மலர்களை கொண்டு கடவுளை பூஜித்தவர்களுக்கு புத்திரர்கள் இருந்தும் அவர்களால் எந்த வித சந்தோஷமும் இல்லாதவாறு அமைந்துவிடும்.

    தொன்மையான ஆலயங்களில் நடைபெறும் பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளுக்கு பூஜைக்கு ஏற்ற வாசனைமிக்க மலர்களை உபயமாக தரவேண்டும். தொடர்ந்து இது போன்று செய்துவந்தால் புத்திரர்கள் நல்ல புத்தி பெறுவார்கள்.

    சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கந்த சஷ்டி, விநாயகர் சதுர்த்தி, ஹனுமத் ஜெயந்தி, பொங்கல் மற்றும் தீபாவளி திருநாள் ஆகிய விஷேட நாட்களில் திருக்கோவில்களுக்கு பூஜைக்கு மலர்கள் வாங்கித் தரும் கைங்கரியத்தை அனைவரும் இயன்றவரை செய்துவர வேண்டும்.

    நாம் தனிப்பட்ட முறையிலும் நம் தளம் சார்பாகவும், சிவராத்திரி உள்ளிட்ட விஷேட நாட்களில் இந்த கைங்கரியத்தை செய்ய தவறுவதேயில்லை.

    சென்ற நவராத்திரி சமயத்தின் போது கூட நம் தளம் சார்பாக குமணன்சாவடி அருகே உள்ள கண்ணபிரான் திருக்கோவிலுக்கு பூஜைக்கு மலர்கள் வாங்கித் தந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு மலருக்கும் ஒரு குணமும் சக்தியும் உண்டு.

    உதாரணத்துக்கு ஒரு வில்வ தளம் லட்சம் பொன்மலர்களுக்கு சமம். ஒரு வில்வ தளத்தை பக்தியோடு சிவனுக்கு சமர்ப்பித்தால் எப்பேர்ப்பட்ட பாவங்களும் விலகும்.

    ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வ இலை போதும்! (மாதப்பிறப்பு, திங்கட்கிழமை, அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி நாட்களில் வில்வம் பறிக்கக்கூடாது).

    வில்வத்திற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது உபயோகப்படுத்தி விட்டு தண்ணீர் விட்டு அலம்பி மீண்டும் உபயோகப்படுத்தலாம். (இந்த சிறப்பு தங்கத்திற்கு மட்டுமே உண்டு).

    ஆனால் ஒரு தெய்வத்திற்கு அர்ச்சித்த பூக்களையோ அல்லது இதர பொருட்களையோ மற்ற தெய்வத்திற்கு பயன்படுத்தக்கூடாது.

    சீரும் சிறப்புமாக தற்போது வாழ்ந்து வருபவர்களை காண நேர்ந்தால் "சென்ற ஜென்மத்தில் இறைவனுக்கு நல்ல மலர்களை கொண்டு பூஜை செய்திருப்பார்கள்" என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னர் வீடு கட்டுபவர்கள் பெரும்பாலும் வீட்டின் முன்பகுதியில் நிச்சயம் தோட்டம் அமைப்பர். அதில் பூஜைக்குரிய மலர்களின் செடிகள் வளர்க்கப்படும்.

    அதில் பூக்கும் மலர்களை கொண்டு தான் இறைவனுக்கு பூஜை செய்வார்கள். மிகுதியாக உள்ளவற்றை அருகே உள்ள ஏதாவது ஆலயத்திற்கு தருவார்கள்.

    ஆனால் இப்போது வீட்டின் முன்னே இடமிருந்தால் கடையை கட்டி வாடகைக்கு விட்டுவிடுகிறார்கள். இந்த ஜென்மாவில் கூட நாம் முழுமையாக அனுபவிக்க முடியாத செல்வத்தை சேர்ப்பதில் குறியாய் இருப்பவர்கள், பல ஜென்மங்களில் நமக்கு நற்பேறுகளை அளிக்கவல்ல இந்த மலர்க் கைங்கரியத்தை செய்ய தலைப்படுவது கிடையாது.

    வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள், வீட்டில் தோட்டம் நந்தவனம் அமைத்து, அதில் மலரும் பூக்களை பறித்து இறைவனுக்கு பூஜை செய்ய வேண்டும். சௌபாக்கியங்களில் இதுவும் ஒன்று. அத்தனை சுலபத்தில் எல்லோருக்கும் கிட்டாது.

    • ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.400-க்கு விற்பனை
    • இந்த சந்தையில் பூக்கள் மாவட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் விற்பனையாகி வருகிறது

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூ சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு ஆரல்வாய்மொழி, தோவாளை, குமாரபுரம், ராதாபுரம், பழவூர், மாடநாடார் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், சங்கரன்கோவில், கோவில்பட்டி, வத்தலகுண்டு, கொடைரோடு, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும், பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கிரேந்தியும், பட்ட ரோஷும், திருக்கண்ணங்குடி, தென்காசி, அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களில் இருந்து பச்சையும், துளசியும் வருகிறது. அதேபோல் சேலம் பகுதியில் இருந்து அரளிப்பூவும், தோவாளை, ராஜாவூர், மருங்கூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அரளிப்பூவும், சம்மங்கி, கோழி கொண்டை, அருகம்புல், தாமரை உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    இந்த சந்தையில் பூக்கள் மாவட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் விற்பனையாகி வருகிறது. ஆடி மாதம் என்பதால் பூக்கள் விலை குறைந்து காணப்படுகிறது.

    பூக்களின் விலை கிலோ ஒன்றுக்கு வருமாறு:-

    பிச்சிப்பூ ரூ.600, மல்லிகைப்பூ ரூ.400, சம்பங்கி ரூ.125, ரோஸ் பாக்கெட் ரூ.20, பட்டரோஸ் ரூ.110, மஞ்சள் கிராந்தி ரூ.60, சிவப்பு கிராந்தி ரூ.70 என அனைத்து பூக்களும் விலை குறைந்தே காணப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வருகிற 19-ந்தேதி முதல் கேரளா முழுவதும் ஓணம் கொண்டாட இருப்பதால் பூக்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

    • கர்நாடகத்திலும், ஓசூர் பகுதியிலும் போதுமான அளவுக்கு மழை பெய்யாததால் பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது.
    • பெண்களின் பூ மீதான ஆசையை நிறைவேற்ற பிளாஸ்டிக்கில் ஒரிஜினல் பூ போலவே தயாார் செய்து விற்பனைக்கு வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வேலூர், திருவள்ளூர், பெரிய பாளையம், காஞ்சிபுரம், ஓசூர் மற்றும் கர்நாடக பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

    கர்நாடகத்திலும், ஓசூர் பகுதியிலும் போதுமான அளவுக்கு மழை பெய்யாததால் பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்தும் பெருமளவு குறைந்துவிட்டது.

    வரத்து குறைவால் கடந்த ஒரு மாதமாகவே பூக்கள் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஆடி மாதம் பிறந்துள்ளதால் ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெறும். இதனால் கோவில் வழிபாட்டுக்கும் பெண்கள் தலையில் சூடவும் பூக்கள் வாங்குவார்கள்.

    ஆனால் தேவையான அளவுக்கு பூக்கள் வராததால் விலை கடுமையாக உயர்ந் துள்ளது. சாமந்தி பூ கிலோ ரூ.220, ரோஜா ரூ.100 முதல் ரூ.120, மல்லிகை கிலோ ரூ.800, சேர் ரூ.250 வரை அதிகரித்துள்ளது.

    பெண்கள் தலையில் சூட விரும்பும் மல்லி விலை உயர்வால் ஒரு முழம் ரூ. 50-க்கு விற்கப்பட்டது.

    சாதாரணமாக இருபது, முப்பது ரூபாய்க்கு மல்லிகை பூ வாங்கி தலையில் வைக்கும் பெண்கள் விலை உயர்வை பார்த்து பூ வாங்க முடியாமல் தவித்தனர்.

    இதற்கிடையில் பெண்களின் பூ மீதான ஆசையை நிறைவேற்ற பிளாஸ்டிக்கில் ஒரிஜினல் பூ போலவே தயாார் செய்து விற்பனைக்கு வந்துள்ளது. அந்த பூக்களையும் வாங்கி சூடுகிறார்கள்.

    மல்லிகை பூக்களை தலை நிறைய சூடி மகிழ்ந்தும், அதன் வாசனையை ரசித்தும் மகிழ்ந்த பெண்கள் பிளாஸ்டிக் பூக்களை சூடி பூ வைக்கும் ஆசையை நிறைவேற்றி கொள்வது பரிதாபமானது.

    சாமந்தி பூக்கள் ஐதராபாத்தில் கிலோ ரூ.350-க்கு மேல் விற்பனையாவதால் விவசாயிகள் பெருமளவு பூக்களை அங்கு அனுப்புகிறார்கள். மேலும் எல்லா பூக்களின் வரத்தும் குறைவாக இருப்பதால் இன்னும் பூக்கள் விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக கோயம்பேடு மொத்த வியாபாரி எஸ்.பி.எல்.பாண்டியன் கூறினார்.

    • சிறப்பு அலங்காரங்கள் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறும்.
    • பல்வேறு வகையான பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகில் உள்ள கோவிலூர் நெல்லித்தோப்பு காத்தாயி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதன்படி நேற்று ஆடி மாதத்தின் முதல் செவ்வாய் கிழமையை முன்னிட்டு காத்தாயி அம்மனுக்கு பூச்சொரிதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் நூற்று க்கணக்கான பக்தர்கள் கொண்டு வந்த பல்வேறு வகையான பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • விவசாயிகள் கார்,பிசான சாகுபடி காலங்களில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவார்கள்.
    • பூ மகசூல் பயிர்களை பயிரிட ஆர்வம் காட்ட விவசாயிகள் தயங்கி வருகின்றனர்.

    செங்கோட்டை:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான செங்கோட்டை சுற்று வட்டார பகுதிக்கே உரிய சிறப்பு பூ மகசூல் ஆகும். ஆண்டுக்கு முப்போகம் விளையக்கூடிய அளவுக்கு பசுமை நிறைந்த பகுதியாக காட்சியளிக்கும் இந்த சுற்றுவட்டாரத்தில், விவசாயிகள் கார் மற்றும் பிசான சாகுபடி காலங்களில் நெல் மற்றும் மா, தென்னை, வாழை உள்ளிட்ட தோட்டப் பயிர்களை பயிரிடுவார்கள்.

    ஏனைய காலங்களில் பூ மகசூலான அத்தியாவசிய தேவையான காய்கறிகள், உளுந்து, சோளம், பயிறு உள்ளிட்ட கோடைகால பயிர்களும், நெல்லி, புளி உள்ளிட்ட வறட்சியை தாங்கும் பயிர்கள் என அனைத்தும் பயிரிடப்படு வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலத்தில் வடகரை, அச்சன்புதூர், இலத்தூர், சிவராமபேட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோளம், மொச்சை, மல்லி உள்ளிட்டவை பயிரிடப்பட்டு நல்ல மகசூல் கிடைக்கும்.

    இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால் மோட்டை, ஸ்ரீமூலப்பேரி, அடவிநயினார் உள்ளிட்ட அனைத்து அணைகளும் குறைந்த அளவிலேயே தண்ணீர் உள்ளது. தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வருவதால் ஆறுகள், கால்வாய்கள் ஓடைகள் அனைத்திலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

    இதனால் செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பூ மகசூல் பயிர்களை பயிரிட ஆர்வம் காட்ட விவசாயிகள் தயங்கி வருகின்றனர். தற்போது காய்கறிகள் விலை உச்சத்தை தொட்ட நிலையில், காலநிலை மாற்றத்தால் நிலத்தினை உழுது பக்குவப்படுத்தி எதிர்ப்புடன் காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

    கோத்தகிரியில் வெளிநாட்டு தாவரங்களும் நன்றாக வளருவதற்கு உகந்த குளுகுளு காலநிலை நிலவுகிறது.

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு தாவரங்களும் நன்றாக வளருவதற்கு உகந்த குளுகுளு காலநிலை நிலவுகிறது. இந்த நிலையில் கோத்தகிரியில் உள்ள பாண்டியன் பார்க் பகுதியில் சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

    மஞ்சள் வண்ணத்தில் வசீகரிக்கும் மலர்கள், காண்போரின் கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் அமைந்து உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் சூரியகாந்தி மலர்களுக்கு மத்தியில் நின்று, குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    • பூங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வரு கின்றனர்.
    • பூக்களை ஏலம் எடுப்பதற்கு கரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா தண்ணீர் பந்தல், கபி லர்மலை, நகப்பா ளையம், செல்லப்பம்பா ளையம், அண்ணா நகர், ஆனங்கூர், பாகம்பாளை யம், கழுவன் காடு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் குண்டு மல்லிகை, முல்லை பூ, காக்கட்டான், சம்பங்கி, சாமந்திப்பூ, செவ்வந்தி, ரோஜா, அரளி உள்ளிட்ட பல்வேறு பூக்களை விவசா யிகள் பயிர் செய்துள்ளனர்.

    இங்கு விளைவிக்கப்ப டும் பூங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வரு கின்றனர்.

    பூக்களை ஏலம் எடுப்பதற்கு கரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்க மாக இருந்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி, வெயில் அதி கரித்துள்ளதால் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரம் குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.300-க்கும், முல்லைப் பூ ரூ.250-க்கும், ரோஜா ரூ.150-க்கும், அரளி ரூ.100-க்கும் சம்பங்கி ரூ.50-க்கும் விற்பனையானது.

    நேற்று குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.400-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கும், ரோஜா ரூ.220-க்கும், அரளி ரூ.150-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும் விற்பனையானது.

    இன்று அமாவாசை என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அள வில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது.
    • பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அள வில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 2 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

    இங்கு கடந்த வாரம் கிலோ ரூ. 240-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று கிலோ ரூ. 480-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ. 140-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூக்கள், நேற்று கிலோ ரூ. 280-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூக்கள் நேற்று கிலோ ரூ. 120-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ நேற்று கிலோ ரூ. 200-க்கும் விற்பனையானது. சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்க ளில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பூஜை நடைபெறும். எனவே பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

    • மார்ச் மாத இறுதியில் பூக்கள் பூக்கத்தொடங்கி மே தொடக்கம் வரை பூத்துக்குலுங்கும்.
    • பூத்துக்குலுங்கும் மலர்களின் அழகை கண்டு ரசித்து இந்த மரத்தை செல்போனில் படம் எடுத்து செல்கின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அடுத்த பாண்டிக்கோட்டகம் பாலம் அருகே ஒரே ஒரு அரிய வகை மரம் உள்ளது.

    இந்த மரத்தின் பெயர் பிங் ட்ரம்பெட் மரமாகும்.

    இந்த வகை மரங்கள் அதிகளவில் பெங்களூரில் தான் காணப்படுகிறது.

    இந்த பிங் ட்ரம்பெட் மரத்தில் மார்ச் மாத இறுதியில் பூக்கள் பூக்கத்தொடங்கி மே தொடக்கம் வரை பூத்துக்குலுங்கும்.

    இதுவே சீசன் காலமாகும்.

    தற்போது சீசன் தொடங்கிவிட்ட நிலையில் அழகிய இளஞ்சிவப்பு மலர்களுடன் காண்போரின் மனதை ஆர்ப்பரிக்கும் வகையில் இந்த மரம் காட்சியளிக்கிறது.

    அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சிலர் பூத்துக்குலுங்கும் மலர்களின் அழகை கண்டு ரசித்து இந்த மரத்தை செல்போனில் படம் எடுத்து செல்கின்றனர்.

    ஆனால், அப்பகுதி மக்களுக்கு இந்த மரத்தின் பெயர் மற்றும் இதன் சிறப்புகள் தெரியவில்லை.

    எனவே, பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த மரத்தை யாரும் வெட்டாமல் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

    • தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    • பூக்கள் விலை‌ உயர்வ டைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம் பளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பா ளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.400- க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.200-க்கும், ரோஜா ரூ.200-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், காக்கட்டான் ரூ.400-க்கும் ஏலம் போனது.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.660-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், அரளி ரூ.320-க்கும், ரோஜா ரூ.260-க்கும், முல்லைப் பூ ரூ.700-க்கும், செவ்வந்திப்பூ ரூ.260-க்கும், கனகாம்பரம் ரூ.900-க்கும், காக்கட்டான் ரூ.600-க்கும் ஏலம் போனது.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ் புத்தாண்டையொட்டி பரமத்தியில் பூக்கள் விலை உயர்வு

    • தோவாளை சந்தையில் பிச்சிப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை
    • விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மலர் சந்தை தோவாளையில் உள்ளது. இந்த சந்தைக்கு ஆரல்வாய் மொழி, குமாரபுரம், பழவூர், ராதாபுரம், புதியம்புத்தூர், ஆவரைகுளம், மாடநாடார் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து பிச்சிப்பூ வும், சங்கரன்கோவில், ராஜ பாளையம், கோவில்பட்டி, மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும் வருகின்றன.

    சேலத்தில் இருந்து அரளி, பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கிரோந்தி, பட்டர்ரோஸ், தென்காசி புளியங்குடி அம்பாச முத்திரம் திருக்கனங்குடி ஆகிய ஊர்களில் இருந்து பச்சை மற்றும் துளசியும். தோவாளை, ராஜாவூர், மருங்கூர், செண்பகராமன் புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து சம்பங்கி, கொழுந்து, கோழி கொண்டை, கனகாம்ப ரம், அருகம்புல், தாமரை உள்ளிட்ட பூக்களும் தோவாளை சந்தைக்கு வருகின்றன. இங்கிருந்து மாநிலம் முழுவதும் மட்டுமின்றி மாவட்ட முழுவ தற்கும் பூக்கள் விற்பனையாகி வருகிறது . இந்த நிலையில் நாளை (14-ந் தேதி) சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு இன்று விலை போனது. மல்லிகைப்பூ ரூ.ஆயி ரத்துக்கும் அரளி ரூ.200-க்கும் விற்கப்பட்டது. சம்பங்கி ரூ.150, மஞ்சள் கிரோந்தி ரூ.60, சிவப்பு கிரோந்தி ரூ.60 ரோஜா பாக்கெட் ரூ.20, பட்டர் ரோஸ் ரூ.100, மரிக்கொழுந்து ரூ.150, கோழிப் பூ ரூ.80, கனகாம்பரம் ரூ.400, தாமரை ரூ.5, என அனைத்து பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×