என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்கள்"

    • திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
    • தொடர்ந்து 2 நாட்களாகவே பூக்களின் விலை ஏறுமுகத்தில் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை இயங்கி வருகிறது.

    இங்கு திண்டுக்கல், ஓசூர் , நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதுபோல் இங்கிருந்தும் வியாபாரிகள் பூக்கள் வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்வர். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான பூக்கள் வாங்குவர்.

    விஷேச தினங்கள், பண்டிகை காலங்கள், திருவிழாக்கள், சுப முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை சற்று அதிகரிக்கும். வரத்து , விளைச்சல் குறைவாக இருந்தாலும் விலை அதிகரிக்கும்.

    இந்த நிலையில் தற்போது ஆவணி மாதம் என்பதால் சுபமுகூர்த்த நாட்கள் அதிகளவில் உள்ளது. இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதனால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகளவில் தேவைப்பட்டது. இதனால் இன்று தஞ்சை பூச்சந்தையில் இன்று பூக்களின் விலையும் சற்று அதிகரித்தது.

    அதன்படி மல்லிகை கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டன. இதேப்போல் முல்லை கிலோ ரூ.800, ஆப்பிள் ரோஸ் ரூ.250, கனகாம்பரம் கிலோ ரூ.800, சம்பங்கி ரூ.600, அரளி ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டன.

    நேற்றும் பூக்களின் விலை கணிசமாக அதிகரித்தது. தொடர்ந்து 2 நாட்களாகவே பூக்களின் விலை ஏறுமுகத்தில் உள்ளது.

    இது பற்றி வியாபாரிகள் கூறும்போது, ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அதிகளவில் உள்ளதால் சுபநிகழ்ச்சிகள் ஏராளமாக நடக்கும். இதனால் பூக்களின் தேவையும் அதிகரிக்கும்.

    அதன் அடிப்படை யிலேயே இன்று பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது . பூக்களின் வரத்தும் பரவலாக உள்ளது என்றனர்.

    • ஓணம் பண்டிகையையொட்டி மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
    • மல்லிகை 900 ரூபாய்க்கு விற்பனையானது.

    மதுரை

    ஓணம் பண்டிகை மற்றும் வரலட்சுமி பூஜையை யொட்டி மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ 900 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

    கேரளாவில் கொண்டா டப்படும் முக்கிய மான பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை ஆகும். இந்த பண்டிகையை மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங் களில் அதிக அளவில் வசிக்கும் கேரளாவை சேர்ந்தவர்களும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

    பண்டிகை கொண்டாட் டத்தில் மலர்களால் கோலமிட்டு பண்டிகையை வரவேற்பதால் இந்த பண்டிகைக்கு அதிகளவில் பூக்களின் தேவை இருக்கும். அதுபோல வரலட்சுமி பூஜைக்கும் மலர்களின் தேவை அதிகம் என்பதால் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஒருங்கிணைந்த பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகி றார்கள்.

    தற்போது பூக்களின் வரத்தும் அதிகரித்துள்ள தால் பூக்களின் விலை கடந்த சில நாட்களாக ஓரளவுக்கு இயல்பான விலைக்கு விற்கப்பட்டன. அந்த வகையில் மல்லிகை பூ 500 முதல் 600 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. மேலும் இதர பூக்களான பிச்சி, முல்லை, கன காம்பரம், சம்பங்கி, அரளி உள்ளிட்ட பூக்களும் வழக்கமான விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் வருகிற 29-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டியும், வரலட்சுமி பூஜை தினத்தையொட்டியும் மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள் ளது.

    அதன்படி இன்று காலை மல்லிகை பூ கிலோ 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.முல்லை 700 ரூபாய்க்கும், பிச்சி 600 ரூபாய்க்கும், கனகாம்பரம் 500 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டன. அரளி, பட்டன் ரோஸ், சிவந்தி ஆகிய மலர்கள் 300 ரூபாய்க்கும், வாடாமல்லி 150 ரூபாய்க்கும், சம்பங்கி 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பூஜைக்கு தேவையான மற்ற வண்ண மலர்களின் விலையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

    இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்கள் தொடரும் என்று வியாபா ரிகள் தெரிவித்துள்ளனர். பூக்களின் விலை திடீரென அதிகரித்துள்ளதால் பூக்களை வாங்க சென்ற பொதுமக்கள் சற்று தயக்கத்துடனே பூக்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் வசிக்கும் மலையாளிகள் அத்தப்பூ கோலமிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்
    • கோவையில் மல்லி ரூ.800க்கு விற்பனையாகிறது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் பூ மார்க்கெட், மேட்டுப்பா–ளையம், வால்பாறை, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலர்ச்சந்தைகள் இயங்கி வருகின்றன.

    இங்கு உள்ளூர் விவசாயிகள் சாகுபடி செய்த பூக்களை விற்பனைக்கு கெர்ண்டு வருகின்றனர். மேலும் வெளியூர் மாநிலம்-மார்க்கெட்டுகளில் இருந்து பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

    கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் வசிக்கும் மலையாளிகள் அத்தப்பூ கோலமிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் கல்லூரிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பூக்கோலத்தை பார்க்க முடிகிறது.

    கோவை மற்றும் பல்வேறு பகுதிகளில் தற்போது வறண்ட வானிலை நிலவுகிறது. போதியஅளவில் மழை இல்லை. எனவே அங்கு பூக்களின் விளைச்சல் குறைந்து உள்ளது.

    மேலும் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன்கணக்கில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. எனவே கோவைக்கு மலர்வரத்து குறைந்து உள்ளது.

    இதன்காரணமாக கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. அங்கு தற்போது ஒரு கிலோ மல்லி ரூ.800க்கு விற்கப்படுகிறது. அதேபோல ஜாதி மல்லி ரூ.400-க்கு விற்பனை–யாகிறது. இருந்தபோதிலும் ஓணம் பண்டிகை என்பதால் பொதுமக்கள் விலைஉயர்வு பற்றி கவலைப்படாமல் பூக்களை கிலோக்கணக்கில் வாங்கி செல்கின்றனர்.

    கோவை பூ மார்க்கெட்டில் விற்பனை–யாகும் பூக்களின் விவரம் (கிலோவுக்கு): செவ்வந்தி-160, செண்டு மல்லி-50, சம்பங்கி-120, அரளி-120, ஒரு கட்டு மருகு-10, வாடாமல்லி-80, ரோஜா-240, மரிக்கொழுந்து-30, துளசி-40, கலர் செவ்வந்தி-240, வெள்ளை செவ்வந்தி-200, மஞ்சள் செவ்வந்தி-100, ஜாதிப்பூ-400, கோழிக்கொண்டை-100, ஒரு தாமரைப்பூ-20, முல்லை-400.

    இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், கோவை மலர்ச்சந்தைக்கு பூக்களின் வரத்து போதிய அளவில் இல்லை. உற்பத்தியும் சற்று குறைந்து உள்ளது. ஓணம் பண்டிகைக்காக பெருமளவில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    எனவே கோவை மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை உயர்ந்து உள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை முடிந்தபிறகு கோவை மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை குறைய வாய்ப்பு உண்டு என்று தெரிவித்து உள்ளனர்.

    • கரூரில் வரத்துக்கு குறைவால் பூக்களின் விலை உயர்வு உள்ளது
    • பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், மூலியமங்கலம், கொங்கு நகர், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, அரளி, ரோஜா, செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.உள்ளூர் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் குண்டுமல்லி ரூ.300- க்கும், சம்பங்கி கிலோ ரூ.80- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.300- க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் வாங்கிச் சென்றனர். நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100 க்கும், அரளி கிலோ ரூ.150- க்கும், ரோஜா கிலோ ரூ.250- முல்லைப் பூ கிலோ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் வாங்கிச் சென்றனர். பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    • விநாயகர் பூஜைக்காக பூக்களும் அதிக அளவில் விற்பனையாகும்.
    • சிவகாமிபுரம் பூ சந்தையில் பிச்சி பூ-ரூ.1,250-க்கு விற்பனையானது.

    தென்காசி:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனை யொட்டி முழு முதற் கடவுளான விநாயகருக்கு படையலிட அவல், பொறி உள்ளிட்டவை வாங்குவது வழக்கம். மேலும் விநாயகர் பூஜைக்காக பூக்களும் அதிக அளவில் விற்பனையாகும்.

    இதனையொட்டி தென்காசி மாவட்டத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் பூ சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.1500-க்கு விற்பனையானது. பிச்சி பூ-ரூ.1,250, சம்பங்கி-ரூ.350, கேந்தி பூக்கள்-ரூ.40, கோழி கொண்டை-ரூ.50, முல்லை ரூ.1,000, பச்சை கொழுந்து-ரூ.40 என இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் பருவமழை போதிய அளவில் பெய்யாததால் வறட்சி காரணமாக தோட்டங்களில் பூக்கள் பயிரிட்ட விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுவதற்கு பெரிதும் சிரம் அடைந்தனர்.

    இதனால் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பாவூர், மேலப்பாவூர், திப்பணம்பட்டி, ஆவுடையா னூர், கல்லூரணி, சிவநாடா னூர், முத்து மாலைபுரம், பெத்த நாடார்பட்டி, சாலைப்புதூர், கரிசலூர், ஆலங்குளம், வீரகேர ளம்புதூர், ஆண்டிப்பட்டி, அத்தியூத்து, முத்து கிருஷ்ணபேரி போன்ற பகுதிகளில் பூக்கள் விளைச்சல் மிகவும் குறைந்து காணப்பட்டது.

    இதனால் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் பூக்களின் வரத்தும் கணிசமாக குறைந்தது. இதன் காரணமாகவே பூக்களின் விலை உயர்ந்துள்ளது எனவும், இன்றும், நாளையும் பூக்களின் விலை மேலும் உயரும் எனவும் வியாபாரிகள் கூறினர்.

    • விலை குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    • மலர் வளையம் பக்கத்தில் பூக்களை பாதுகாக்க குளிர்சாதன கிட்டங்கி அமைத்து தர வேண்டும்

    ஆரல்வாய்மொழி :

    குமரி மாவட்டம் தோவாளை பூ சந்தை மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கேரளா, வேளச்சேரி மூலம் வெளிநாடுகளுக்கும் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுமார் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகளும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களும் பூக்களால் தினசரி வருவாய் பெற்று வருகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூர், ஆவரைகுளம் மாட நாடார் குடியிருப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பிச்சிப்பூ வும், மதுரை, மானா மதுரை, வத்தலகுண்டு, கொடை ரோடு, திண்டுக்கல், ராஜ பாளையம், சங்கரன் கோவில், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து மனம் வீசும் மல்லிகை பூவும், சேலம், ராயக்கோட்டை, தர்மபுரி, ஓசூர், பெங்களூர் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டர்ரோஸ் ஆகிய பூக்களும், தென்காசி, புளியங்குடி, அம்பாச முத்திரம், திருக்கண்ணங்குடி ஆகிய ஊர்களில் இருந்து பச்சை துளசி, கொழுந்து, மரிக்கொழுந்து, தோவாளை, செண்பகரா மன்புதூர், தோப்பூர், மருங்கூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து அரளிப்பூ, சம்பங்கி, கோழிக் கொண்டை, அருகம்புல், தாமரை ஆகிய பூக்கள் பூச்சந்தைக்கு வந்து விற்பனையாகி வருகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரிக்கும் என எண்ணிய விவசாயிகள், தற்போது விலை குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    ஒரே ஒரு நாள் மட்டும் ஆயிரத்துக்கும், 1500-க்கும் விற்பனையான பூக்கள், புரட்டாசி மாதம் என்பதால் கோவில் திருவிழாக்கள், திருமணங்கள் போன்ற விசேஷ வீடு இல்லாததால் பூக்கள் விலை மிகவும் குறைந்துவிட்டது.

    குறிப்பாக ஒரு கிலோ பிச்சி ரூ.350-க்கும், மல்லிகைப்பூ ரூ.500-க்கும், அரளிப்பூ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும், வாடாமல்லி ரூ.30-க்கும், சிவப்பு கிரேந்தி ரூ.20-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், முல்லை ரூ.300-க்கும், துளசி ரூ.40-க்கும், கொழுந்து ரூ.90-க்கும், மரிக்கொழுந்து ரூ.120-க்கும் மற்ற பூக்களும் விலை குறைந்தே காணப்படுகிறது.

    பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் பறிப்பு செலவு கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். பூக்கள் அதிகமாக வருகிறது. ஆனால் விலை இல்லை. இதனால் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.

    இதுகுறித்து பூ வியாபாரி கேசவ முருகன் கூறுகையில், ஓணத்தை நம்பி விவசாயிகள் அதிகளவு பூக்களை உற்பத்தி செய்தார்கள். விற்பனையும் இல்லை, விலையும் இல்லை. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் விலைகள் இல்லை. இனி ஆயுத பூஜை வந்தால் தான் பூக்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

    மேலும் பூக்களை பாதுகாக்க குளிர்சாதன கிட்டங்கி அமைத்து தந்தால் பூக்களை பாதுகாக்க முடியும் இல்லையென்றால் விற்பனையாகாத பூக்களை மலைபோல குவித்து குப்பை தொட்டிக்கு தான் அனுப்ப முடியும். எனவே அரசு மலர் வணிக வளாகத்தில் அல்லது மலர் வளையம் பக்கத்தில் பூக்களை பாதுகாக்க குளிர்சாதன கிட்டங்கி அமைத்து தர வேண்டும் என கூறினார்.

    • புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதால் கரூரில் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது
    • குண்டு மல்லி கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100 க்கும் விற்பனையானது

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,குளத்துப்பாளையம், காளிபாளையம் ,வேட்டமங்கலம், குந்தாணிபாளையம் ,மூலியமங்கலம், கொங்கு நகர், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி ,முல்லை, சம்பங்கி ,அரளி,ரோஜா ,செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர் .பூக்கள் பூக்கும் தருவாய்க்கு வரும்போது உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் ,அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர் .பூக்களை வாங்கி செல்வதற்கு வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை வருகின்றனர். கடந்த வாரம் குண்டு மல்லி கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100 க்கும், அரளி கிலோ ரூ.150- க்கும், ரோஜா கிலோ ரூ.250- முல்லைப் பூ கிலோ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் வாங்கிச் சென்றனர் நேற்று குண்டுமல்லி ரூ.300- க்கும்,சம்பங்கி கிலோ ரூ.80- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.300- க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் வாங்கிச் சென்றனர். புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால் திருமணம் மற்றும் கோவில் விசேஷங்கள் இல்லாததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.

    • கடந்த 20நாட்களாக மார்கெட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் மார்கெட் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
    • வரக்கூடிய நாட்களில் மெல்ல மெல்ல பூ விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    போரூர்:

    கோயம்பேடு, பூ மார்கெட்டுக்கு ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், திருவண்ணாமலை, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 60-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

    தற்போது புரட்டாசி மாதம் என்பதால் முகூர்த்தம், விஷேச நாட்கள், திருவிழாக்கள் ஏதும் இல்லை. இதனால் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது மேலும் மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் தினசரி 20முதல்30டன் அளவிலான சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்து வீணாகி குப்பையில் கொட்டப்படுகிறது இதனால் பூ வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து பூ மொத்த வியாபாரி மூக்கையா கூறியதாவது:

    புரட்டாசி தொடங்கியது முதலே கடந்த 20நாட்களாக மார்கெட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் மார்கெட் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் பூக்கள் தேவை குறைந்து உள்ள நிலையில் கோயம்பேடு சந்தைக்கு வரும் பூக்கள் வரத்து வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் அதை வாங்கி செல்ல வியாபாரிகள் யாரும் வரவில்லை.

    இதனால் அதிகளவிலான பூக்கள் தேக்கமடைந்து குப்பையில் வீசபடுகிறது. வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) அமாவாசை மறுநாள் நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது அதன்பிறகு ஆயுதபூஜை வர உள்ளது. எனவே வரக்கூடிய நாட்களில் மெல்ல மெல்ல பூ விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    • வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உற்பத்தி குறைவு
    • பூக்களின் விலை உயர்வு


    வேலாயுதம் பாளையம்


    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,குளத்துப்பாளையம், காளிபாளையம் ,வேட்டமங்கலம், குந்தாணிபாளையம் ,மூலியமங்கலம், கொங்கு நகர், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி ,முல்லை, சம்பங்கி ,அரளி,ரோஜா ,செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.


    பூக்கள் பூக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் பூக்களைப் பறித்து கோணி பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் ,அருகில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர் .பூக்களை வாங்கி செல்வதற்கு வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர்.


    கடந்த வாரம் குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.150- முல்லைப் பூ கிலோ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் வாங்கிச் சென்றனர். தற்போது குண்டுமல்லி ரூ.900- க்கும்,சம்பங்கி கிலோ ரூ.150- க்கும், அரளி கிலோ ரூ.180- க்கும், ரோஜா கிலோ ரூ.260- க்கும், முல்லைப் பூ ரூ.800- க்கும், செவ்வந்திப்பூ ரூ.320- க்கும், கனகாம்பரம் ரூ.850-க்கும் வாங்கிச் சென்றனர். ஜப்பசி மாதம் தொடங்கி விட்டதால் திருமணம் மற்றும் பல்வேறு விசேஷங்கள் வருவதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.




    • மல்லி ஒரு கிலோ ரூ.1200-க்கு விற்பனை
    • பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கோவை,

    நவராத்திரி விழா தொடங்கி நடந்து வருகிறது. வீடுகளிலும், தொழில் நிறுவ னங்களிலும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

    மேலும் கோவில்களில் தினந்தோறும் அம்மனுக்கு வெவ்வேறு விதமான அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. இதற்காக பூக்கள் அதிக ளவில் பயன்படுத்தப்படு கிறது. பூக்களின் தேவை அதிகமாக இருப்பதால் அதன் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கோவை பூ மார்க்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக பூக்கள் வாங்குவதற்காக பொது மக்கள் கூட்டம் அலைமோது கிறது. பூக்கள் விலை உயர்ந்திருந்தாலும் பூஜை க்காக பொதுமக்கள் பூக்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள்.

    மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1200-க்கும், மற்றொரு ரகம் ரூ.800-க்கும் விற்பனையானது. முதல் ரக மல்லிகைப்பூ மார்க்கெட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் விற்று தீர்ந்தது.முல்லைப்பூ ஒரு கிலோ ரூ.600-க்கும், செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ.320-க்கும் விற்கப்பட்டது. மற்ற பூக்கள் விற்பனையான விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-

    சம்பங்கி - ரூ.240, அரளி - ரூ.400, ஜாதி பூ- ரூ.800, ரோஜா - ரூ.300, கலர் செ வ்வந்தி - ரூ.240, தாமரை 1 - ரூ.40, செண்டுமல்லி - ரூ.80, கோழிக்கொண்டை பூ - ரூ.120, மஞ்சள் அரளி - ரூ.400, துளசி - ரூ.50, மருகு ஒரு கட்டு -ரூ.20, மரிக்கொழுந்து 1 கட்டு - ரூ.30, வாடாமல்லி -ரூ.120

    வருகிற 23-ந் தேதி ஆயுத பூஜை மற்றும் 24-ந் தேதி விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்களுக்கு பூக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் என்பதால் பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தாமரை பூ ஒன்று ரூ.25-க்கு விற்பனை
    • இந்த மாதம் திருமண விழாக்களும் அதிக அளவு இருப்பதால் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

    ஆரல்வாய்மொழி :

    தோவாளை பூ மார்க்கெட்டிற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தோவாளை, செண்பக ராமன் புதூர் பகுதிகளில் இருந்து கேந்திபூக்களும் நெல்லை மாவட்டம் பழவூர் உள்பட பல்வேறு பகுதிக ளில் இருந்து பிச்சி, மல்லிகை பூக்களும் அதி களவு விற்பனைக்கு வருகி றது.

    மேலும் பெங்களூர், ஓசூர், சேலம், சத்தியமங்கலம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஆயுத பூஜையையொட்டி இன்று பூக்கள் அதிகளவு விற்பனைக்கு வந்திருந்தது. பூக்களை வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் மார்க்கெட்டில் குவிந்திருந்தனர்.

    இதனால் தோவாளை பூ மார்க்கெட் களை கட்டியி ருந்தது. சில்லறை வியாபாரிகள் முதல் மொத்த வியாபாரிகள் வரை பலரும் பூக்களை வாங்கி சென்றனர். இதனால் இன்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. மல்லிகை, பிச்சி பூக்களின் விலை வழக்கத்தை விட 2 மடங்கு உயர்ந்து இருந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1200-க்கு விற்பனை யானது. பிச்சிப்பூ கிலோ ரூ.1500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    தாமரை பூக்கள் விற்பனைக்கு குறைவாக வந்திருந்தது. இதனால் தாமரை பூவின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. தாமரை பூ ஒன்று ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி ரூ.200, ரோஜா ரூ.300, கேந்தி ரூ.60, வாடாமல்லி ரூ.100, மஞ்சள்செவந்தி ரூ.170, வெள்ளை செவந்தி ரூ.200, அரளி ரூ.290-க்கு விற்பனை யானது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், மார்க்கெட்டுக்கு ஆயுத பூஜையையொட்டி ஏராள மான வியாபாரி களும், பொதுமக்களும் பூக்கள் வாங்க வந்திருந்த தால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை உயர்ந்து இருந்தது. வழக்கமாக பண்டிகை காலங்களில் பூக்களின் விலை உயர்வது என்பது வழக்கமான ஒன்றுதான். இந்த மாதம் திருமண விழாக்களும் அதிக அளவு இருப்பதால் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

    • ஆயுத பூஜையில் பொரி, பழங்கள், இனிப்புகள் வைத்து வழிபடுவார்கள்.
    • ஆப்பிள், இன்று ரூ.140 முதல் ரூ.200 வரை விற்பனையானது.

    நெல்லை:

    நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி திருவிழாவின் 9-வது நாளான நாளை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும், 10-வது நாள் விஜயதசமியும் கொண்டா டப்படுகிறது.

    இதில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையான நாளைய தினம் தொழிலாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு பொரி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள். ஆயுத பூஜையில் பொரி, பழங்கள், சர்க்கரை, பழங்கள், இனிப்புகள் வைத்தும், வாழை மரக்கன்று கள் கட்டியும் பூ மாலை அணிவித்தும் பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள். கல்வியாளர்கள் தங்களது படிப்பறை, புத்தகங்களில் பூஜை செய்வார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் சரஸ்வதி பூஜைக்கு தேவை யான பொருட்கள் வாங்குவதற்காக இன்று சந்தைகளில் மக்கள் கூட்டம் களை கட்டியது. டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட்டுகளில் அவல், பொரி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் காலை முதலே வர தொடங்கினர்.

    நேற்று தொடங்கி 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பெரும்பாலா னோர் தங்களது குடும்பத்து டன் இன்று மார்க்கெட்டு களில் குவிந்தனர். இதனால் மார்க்கெட்டுகள் களைகட்டி காணப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தக்காளி, கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட், கொத்தமல்லி இலை உள்ளிட்ட அனைத்து வகையான காய்கறிகளையும் வாங்கி சென்றனர்.

    பண்டிகை தினம் என்பதால் அவற்றின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. காய்கறிகள் மட்டுமல்லாது பழங்களின் விலையும் உயர்ந்திருந்தது. கடந்த வாரம் ரூ.120 முதல் ரூ.180 வரை விற்கப்பட்ட ஆப்பிள், இன்று ரூ.140 முதல் ரூ.200 வரை விற்பனையானது. கொய்யாப்பழம், மாதுளை, அன்னாசி பழம் உள்ளிட்ட அனைத்து பழங்களும் கிலோவுக்கு ரூ.25 வரை அதிகரித்து காணப்பட்டது.

    இதேபோல் பூஜைக்கு தேவைப்படும் முக்கிய பொருளான பொரி ஒருபடி ரூ.45-க்கு விற்பனையானது. உடைத்த கடலை கிலோ ரூ.70-க்கும், சிறிய ரக அவல் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகளில் வெள்ளை பூசணிக்காய் கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது. வாழைத் தார்கள் ரூ.300 முதல் ரூ.500 வரையிலும், சிறிய ரக வாழைகள் ரூ.40 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    பாளை காந்தி மார்க்கெட்டில் மல்லிகை, பிச்சிப்பூக்களின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்ட நிலையில் இன்று மேலும் ரூ.300 வரை அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனையான நிலையில் இன்று ரூ.1,800 வரை விற்கப்பட்டது. பிச்சிப்பூ விலை நேற்று ரூ.1,200 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.1,500 ஆக அதிகரித்தது.

    மேலும் சம்பங்கி ரூ.500, ரோஜா ரூ.300, கேந்தி ரூ.100-க்கு விற்பனை யானது. இதேபோல் அரளி பூ ரூ.500-க்கும், கோழி பூ ரூ.60-க்கும், நந்தியா விட்டம் ரூ.500-க்கும் விற்பனை யானது. பூக்கள், காய்கறிகள், பூஜை பொருட்கள் விலை உயர்ந்து காணப்பட்டாலும் பொதுமக்கள் அதனை கருத்தில் கொள்ளாமல் வாங்கி சென்றனர்.

    இன்று மாலை மார்க்கெட்டுகளில் பொருட் கள் வாங்க வரும் பொது மக்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் அந்த பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று வரு கின்றனர். மாவட்டத்தில் திசையன் விளை, வள்ளியூர், அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதி களிலும் பஜார் பகுதிகளில் களை கட்டி காணப்பட்டது.

    இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களி லும் சரஸ்வதி பூஜையை யொட்டி பொதுமக்கள் அதிகளவில் மார்க்கெட்டு களில் குவிந்தனர்.

    சங்கரன் கோவில், தென்காசி பூ மார்க்கெட்டு களிலும் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. தூத்துக்குடி யில் பஜார் பகுதிகளில் காலை முதலே அவல், பொரி வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.


    சந்திப்பு மேல்பாலம் கீழ் பகுதியில் சிறிய வாழைகள் விற்பனை நடைபெற்ற காட்சி.

    சந்திப்பு மேல்பாலம் கீழ் பகுதியில் சிறிய வாழைகள் விற்பனை நடைபெற்ற காட்சி.


    நெல்லை சந்திப்பில் அவல், பொரி, கடலை விற்பனை மும்முரமாக நடைபெற்ற காட்சி.

    நெல்லை சந்திப்பில் அவல், பொரி, கடலை விற்பனை மும்முரமாக நடைபெற்ற காட்சி.


     


     


    ×