search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்கள்"

    • புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க பொது மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
    • இதனால் பூக்கள் விலை இன்று உயர்ந்தது.

    சேலம்:

    சேலம் மார்க்கெட்டு களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க பொது மக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் பூக்கள் விலை இன்று உயர்ந்தது. நேற்று சேலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.320-க்கு விற்பனையானது. முல்லை ரூ. 240, ஜாதி மல்லி, ரூ. 260, காக்காட்டான் ரூ.160, கலர் காக்காட்டான்

    ரூ. 120, அரளி ரூ. 100, வெள்ளைஅரளி ரூ. 100, மஞ்சள் அரளி ரூ. 100, செவ்வரளி ரூ. 120, நந்தியாவட்டம் ரூ. 60, சம்பங்கி ரூ. 80, சாதா சம்பங்கி ரூ. 80 க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் இன்று பூக்கள் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி சேலம் மார்க்கெட்ககளில் மல்லிகைபூ ஒரு கிலோ இன்று 500 ரூபாக்கு விற்பனையானது. முல்லை 360, ஜாதி மல்லி 260, காக்காட்டான் 200, கல்ர் காக்காட்டான் 160, அரளி 120, செவ்வரளி 140, நந்தியாவட்டம் 60, சம்பங்கி 120 ரூபாய்க்கும் விற்பனையாது. ஆனாலும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    • சங்கரன்கோவில், ராஜபாளையம்,மதுரை, மானாமதுரை, திண்டுக்கல், கொடை ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூ வருகை
    • பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து ரோசப்பூ வருகை

    நாகர்கோவில்:

    மலையாள மொழிபேசும் மக்கள் வாழுகின்ற இடமெல்லாம் நகரத்தை காண வரும் மாவேலி மன்னனை வரவேற்க அத்தப்பூ கோலமிட்டு ஓணம் சத்யா விருந்து வைத்து கொண்டாடுவது வழக்கம்.

    கேரளாவில் இன்றைக்கு 4-வது நாளாக ஓணம் கொண்டாடப்படுகிறது. அத்தப்பூ கோலம் இட பலவகை மலர்கள் தேவைப்படுவதால் கேரளா வியாபாரிகளும், பொதுமக்களும் தோவாளை சந்தையில் கூடியுள்ளனர். இன்று 100 டன்கள் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை ஆகி வருகிறது.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பிச்சிபூ ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கிலோ மல்லிகை பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மற்ற பூக்களால் ஆன கோழிப்பூ ரூ. 70 வாடாமல்லி ரூ.200 கனகாம்பரம் ரூ.1000, முல்லை ரூ.900, சம்பங்கி ரூ.300, அரணி ரூ. 250, தாமரை ரூ. 6, கொழுந்து ரூ.120, துளசி ரூ. 30 என எல்லா பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது.

    ஆரல்வாய்மொழி, தோவாளை, குமாரபுரம் மாவட்ட நாடார் குடியிருப்பு, புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் பிச்சி பூ, சங்கரன்கோவில், ராஜபாளையம்,மதுரை, மானாமதுரை, திண்டுக்கல், கொடை ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூவும், பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கம்பியூட்டர் ரோசப்பூ வாழை, செண்பகராமன்புதூர், ராஜாவூர், மருங்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து உளுந்து ,பச்சை துளசி, அருகம்புல், தாமரை, தோவாளை சந்தைக்கு வந்து மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் செல்லுகிறது.

    இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, ஓணத்துக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் இதை விட பூக்கள் வரத்து அதிகமாகவும், விலை உயர்வும் காணப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    • மல்லி கிலோ ரூ.1700
    • வியாபாரிகள் குவிந்தனர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. இங்கு ஆரல்வாய்மொழி, புதியம்புத்தூர், மாடன் நாடார் குடியிருப்பு, ஆவரைகுளம், குமாரபுரம், ஆகிய பகுதிகளிலிருந்து பிச்சிப்பூவும் சங்கரன் கோவில், ராஜபாளையம், வத்தலக்குண்டு, மதுரை, மானாமதுரை, கொடை ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூவும் விற்பனைக்கு வருகிறது.

    சேலத்தில் இருந்து மஞ்சள் அரளியும், பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கேந்தி பட்டர் ரோஸ், தென்காசி, அம்பாசமுத்திரம், புளி யங்குடி, திருக்கனங்குடி ஆகிய பகுதிகளில்இருந்து பச்சை, துளசியும் தோவாளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தாமரை, கோழிக்கொண்டை, அரளி, சம்மங்கி ஆகிய பூக்கள் சந்தைக்கு வருகிறது.

    இங்கிருந்து குமரி மாவட்டம், பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங் களுக்கு விற்பனை ஆகி வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தோவாளை சந்தைக்கு கூடுதல் பூக்கள் வந்தது. இன்று வியாபாரிகள், பொதுமக்களும், அரசு அலுவலர்களும், தோவாளை சந்தையில் பூக்களை வாங்கி சென்றனர்.

    இன்றைக்கு பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.800, மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1700, அரளி ரூ.300, சம்பங்கி ரூ. 500 கோழிக்கொண்டை ரூ.50, பட்டர் ரோஸ் ரூ. 750, சிவப்பு கேந்தி ரூ. 55, மஞ்சள் கேந்தி ரூ.40, துளசி ரூ.30, கொழுந்து ரூ.90, பச்சை ரூ.8, முல்லை ரூ.800, கனகாம்பரம் ரூ.1600 என மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

    இதுகுறித்து வியாபாரி கள் கூறும் போது விநாயகர் சதுர்த்தி மட்டுமல்ல ஓணத்தை முன்னிட்டும் பூக்கள் விலை இதைவிட கூடும் என்றும் தெரிவித்தனர் மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 100 டன் வரை பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

    கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பூக்கள் வரத்து அதிகம் வியாபாரிகள் கூட்டத்தால் வியாபாரம் சூடு பிடித்தது.

    • செண்டு மல்லி பூக்கள் விலை குறைந்ததால் விற்பனை இல்லை
    • பெரும்பாலான விவசாயிகள் பூக்களை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான காருவள்ளி, கொங்கு பட்டி, பூசாரிப்பட்டி, பண்ணப்பட்டி, கொங்காரப்பட்டி, ஜோடுகுளி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவ சாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பூசாரிப்பட்டி பூ மார்க்கெட்டில் அனைத்து வகையான பூக்களும் விற்பனைக்கு வருகின்றனர்.

    இதில் சாமந்தி பூ கிலோ வுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரையும், தக்காளி ரோஸ் ரூ.40 முதல் ரூ.50 வரையும், பன்னீர் ரோஸ் ரூ.120-க்கும், செண்டுமல்லிரூ.20 மற்றும் பல வகையான பூக்கள் வரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. பூக்கள் உற்பத்தி அதிகரிக்கும் நேரங்களில் வியாபாரிகள் போட்டி போட்டு குறைந்து விலைக்கு வாங்கி விற்கின்றனர். இதில் செண்டுமல்லி ரூ.20க்கு விற்கப்படுவதாலும், விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வருவ தாலும் பூக்களை வாங்க வியாபாரிகள் மறுத்து விடுகின்றனர். இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பூக்களை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். பெரும்பா லான விவசாயிகள் பூக்களை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர்.

    • புஞ்சைபுளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஆடிவெள்ளியையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
    • இன்று புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1800-க்கும், ஒரு கிலோ முல்லை ரூ.700-க்கும், ஒரு கிலோ அரளி ரூ.280-க்கும் விற்கப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பூ மார்க்கெட்டில் தினமும் கோட்ட பாளையம், மாதம் பாளையம், தோட்ட சாலை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து பூக்கள் கொண்டுவரப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைந்து வந்த நிலையில் இன்று வரலட்சுமி நோன்பு மற்றும் நாளை ஆடிவெள்ளியை ஒட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    இன்று புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1800-க்கும், ஒரு கிலோ முல்லை ரூ.700-க்கும், ஒரு கிலோ அரளி ரூ.280-க்கும் விற்கப்பட்டது. இன்றும் மூன்று நாட்களுக்கு பூக்கள் விலை உயர்ந்து காணப்படும் என்றும் அதன் பிறகு பூக்கள் விலை குறைந்து விடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பூக்கள் விலை சரிவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    • திருவிழாக்கள் முடிவடைந்ததால் இந்த சரிவு

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் வாங்கல், மாயனூர், லாலாப்பேட்டை உள்ளிட்ட காவிரி ஆற்றுப் பகுதியில் மல்லிகை பூ சாகுபடி அதிகளவு செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் பூக்களை கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது.

    மல்லிகைப்பூ ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்றது. தற்போது 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. முல்லை 200 முதல் 250 ரூபாய், அரலி 150 ரூபாய், ரோஜா 100 ரூபாய், கனகாம்பரம் 150 ரூபாய், ஜாதிமல்லி 200 ரூபாய், தாமரைப்பூ 10 ரூபாய்க்கு ஏலம் போயின.

    திருமணம், கோவில் திருவிழாக்கள் முடிவடைந்ததால் பூக்கள் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ×