search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225640"

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை ப்படுத்த வேண்டும்.

    இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

    முடக்கப்பட்ட அகவிலைப்படி, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

    தஞ்சை ரெயிலடியில் இருந்து புதுஆற்றுப்பாலம் வரை ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

    இதற்கு போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் இளையராஜா, சத்யசீலன், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கேரள - தமிழக அரசுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தி 1967ல் திட்டம் தொடங்கப்பட்டது.
    • கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    உடுமலை :

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுத்து வறட்சிப்பகுதிகளை பசுமையாக்கும் வகையிலும், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் (பி.ஏ.பி.,) செயல்படுத்தப்பட்டது.

    கேரள - தமிழக அரசுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தி 1967ல் திட்டம் தொடங்கப்பட்டது. திட்ட தொகுப்பு அணைகளான சோலையாறு, தூணக்கடவு, பெருவாரிபள்ளம், பரம்பிக்குளம், மேல்ஆழியாறு, ஆழியாறு அணைகளில் நீர் சேகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு அணைகள் வழியாகவும் மின் உற்பத்தி செய்து மலைப்பகுதியில் 49 கி.மீ.,தூரம் சுரங்கத்துடன் கூடிய சமமட்ட கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பிரதான கால்வாய், கிளைக்கால்வாய் வழியாக பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது. இத்திட்டம் ஆசிய அளவில் சிறந்த பொறியியல் தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. இப்பாசன திட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுழற்சி முறையில் இரு ஆண்டுக்கு ஒரு முறை ஆறு மாதம் நீர் வினியோகிக்கப்படுகிறது.கேரள அரசு, இடைமலையாறு அணை கட்டியதும் தமிழக அரசு ஆனைமலையாறு மற்றும் நல்லாறு அணைகளை கட்டும் வகையில் ஒப்பந்தம் உள்ளது. ஆனால் கேரள அரசு 1997ல் இடைமலையாறு அணை கட்டிய நிலையில் ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் கட்டப்படாமல் இழுபறியாகி வருகிறது. நல்லாறு அணை கட்டினால் தற்போது மலைப்பகுதிகளில் 100 கி.மீ., தூரம் பயணம் செய்து, திருமூர்த்தி அணைக்கு வரும் நீர் 20 கி.மீ., தூர பயணத்தில் எளிதில் வந்தடையும். கூடுதலாக 7.5 டி.எம்.சி., நீரும் கிடைக்கும். அதே போல் ஆனைமலையாறு அணை கட்டினால் மழை காலத்தில் வீணாகி கடலை நோக்கி செல்லும் 2.5 டி.எம்.சி., நீர் சேமிக்கப்படும். மின் உற்பத்தி திட்டங்களும் செயல்படுத்த முடியும்.

    பி.ஏ.பி., திட்டம் தொடங்கப்பட்ட போது ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவாக இருந்த பாசன பரப்பு 3.77 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தப்பட்ட நிலையில் பாசன நீர் அளவை அதிகரிக்க நிலுவையிலுள்ள இரு அணைகளுடன் கட்டப்படாமல் உள்ளது. இதனால் பாசன நிலங்களில் முறையான பயிர் சாகுபடி மேற்கொள்ள முடியாமல் சிறப்பான இத்திட்டம் கேள்விக்குறியாகி வருகிறது. அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலின் போது இத்திட்டம் குறித்து வாக்குறுதி மட்டுமே இடம் பெறுகிறது. இரு அணைகளையும் கட்ட வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை, அணைகள் கட்ட விரிவான ஆய்வறிக்கை தயாரிக்க தொழில் நுட்ப கமிட்டி என கடந்த 35 ஆண்டுகளாக திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. கடந்த தேர்தலிலும் இரு அணைகளும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க., வாக்குறுதி அளித்துள்ள நிலையில் நடப்பாண்டு பட்ஜெட்டில் இத்திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் பேச்சு வார்த்தை என்று இல்லாமல் இரு மாநில முதல்வர்கள் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இத்திட்டத்தில் நிலுவையி லுள்ள அணைகளை கட்டி முழுமையான பாசனம் மற்றும் பயிர் சாகுபடி திட்டமாக பி.ஏ.பி., திட்டத்தை புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கேரளா அரசு இடைமலையாறு அணை கட்டியதும், ஆனைமலை யாறு, நல்லாறு அணைகள் தமிழகம் கட்டிக்கொள்ள ஒப்பந்தம் உள்ளது. கேரள அரசு, அணை கட்டி 30 ஆண்டுக்கு மேலாக பயன்படுத்தி வரும் நிலையில், ஆவணங்கள் வெளிப்படையாக உள்ளது. ஆனால் திட்ட ஒப்பந்தம் அடிப்படையில் தமிழக பகுதியில் கட்ட வேண்டிய இரு அணைகளும் கட்டவில்லை.விவசாயிகள் போராட்டம் நடத்தினால், தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை, தொழில் நுட்ப கமிட்டி ஆய்வு என இழுத்தடித்து வருகின்றனர்.

    இரு மாவட்டத்திலுள்ள பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு மாநில முதல்வர்களும் நேரடியாக பேசி தீர்வு காண்பதோடு நடப்பாண்டு பட்ஜெட்டில் இரு அணைகளும் கட்டுவதற்கான ஆய்வு மற்றும் திட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    • பி.எல்.ஐ., திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும்.
    • 10 கோடி ரூபாய முதலீட்டில் துவங்கினாலும், இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

    திருப்பூர் :

    ஜவுளித்தொழிலை பொறுத்தவரை செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி மட்டும் இணைக்கப்பட்டிருந்தது. ஜவுளித்துறையினர் கோரிக்கையை ஏற்று பருத்தி நூலிழை ஆடை உற்பத்தியும் இத்திட்டத்தில் இணைக்கப்பட உள்ளது.பி.எல்.ஐ., திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும்.அடுத்த ஆண்டில் 200 கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

    சிறு, குறு தொழில்கள் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச மூலதன முதலீடு 10 கோடி ரூபாயாக நிர்ணயிக்க வேண்டுமென தொழில்துறையினர் வலியுறுத்தி வந்தனர். இதனால் பல்வேறு நிபந்தனைகளுடன் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிப்பதாக ஜவுளி துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது :- பருத்தி நூலிழை ஆடை உற்பத்தியாளர்களும் பயன்பெறும் வகையில் உற்பத்தி இணைப்பு ஊக்குவிப்பு (பி.எல்.ஐ., - 2.0) திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டு வரம்பு 100 கோடி ரூபாய் என்பது குறைக்கப்பட்டுள்ளது.உதிரிபாகம் உற்பத்தி செய்யும் தொழில்கள் 10 கோடி ரூபாய முதலீட்டில் துவங்கினாலும், இத்திட்டத்தில் பயன்பெறலாம். ஏற்றுமதியாளர்கள் 20 கோடி, 30 கோடி மற்றும் 50 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தியை துவக்கினாலும் பயன்பெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும் கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும் பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் பண்ணீர்செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர்.துணை தலைவர் சிவசங்கர் வரவேற்றார்.

    இதைப் போல் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்றவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    • 25 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரியில் இருந்து சலுகை கிடைக்கிறது.
    • 6 மடங்கு அதிகமாக ஏற்றுமதி நடந்திருக்க வேண்டும்.

    திருப்பூர் :

    மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஓர் அங்கமாக வெளிநாட்டு வர்த்தக பிரிவு இயங்குகிறது. குறிப்பாக ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சியை ஊக்கப்படு த்தும் வகையில் வெளிநாட்டு வர்த்தக பிரிவு மண்டலம் வாரியாக இயங்குகிறது.

    ஏற்றுமதி ஊக்குவிப்பு முதலீட்டு உத்தரவாத திட்டத்தில் (இ.பி.சி.ஜி.,), வெளிநாடுகளில் இருந்து எந்திரங்கள் இறக்குமதி செய்ய, ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு வட்டி சலுகை வழங்கப்படுகிறது. அதாவது 25 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரியில் இருந்து சலுகை கிடைக்கிறது.

    இத்திட்டத்தில் தொடர்புடைய ஏற்றுமதி நிறுவனங்களுடன் இணைந்து பொது சேவை மையமாக பதிவு செய்து விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வரிச்சலுகை பெற வேண்டுமெனில் இறக்குமதி வரி மதிப்பை காட்டிலும் 6 ஆண்டுகளில், 6 மடங்கு அதிகமாக ஏற்றுமதி நடந்திருக்க வேண்டும்.

    கொரோனா தொற்று காலத்தில் ஏற்றுமதி இலக்கை எட்ட முடியாத ஜாப் ஒர்க் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், வரிச்சலுகை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. நீண்ட இழுபறிக்கு பின் விடுபட்ட வர்கள் விண்ணப்பித்து சலுகை பெற கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு ள்ளது. திருப்பூர் ஜாப் ஒர்க் நிறுவனங்களுடன் பேசிய வெளிநாட்டு வர்த்தக பிரிவு அலுவலர்கள் பிப்ரவரி 28க்குள் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் விடுபட்ட நிறுவனங்களுக்கு 17ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து வெளிநாட்டு வர்த்தக பிரிவு இணை இயக்குனர் (கோவை) ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொதுசேவை பதிவு இல்லாத, ஜாப் ஒர்க் நிறுவனங்கள், நிலுவையில் உள்ள வரிசலுகையை பெற விண்ணப்பிக்க வேண்டும்.அதற்காக முழு ஆவண ஆதாரங்களுடன் வரும் 17-ந் தேதிக்குள் சம்பந்தப்ப ட்ட சங்க அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு விண்ணப்பித்தால், சலுகை கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று காலத்தில் ஏற்றுமதி இலக்கை எட்ட முடியாத ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்கள், வரிச்சலுகை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. நீண்ட இழுபறிக்கு பின் விடுபட்ட வர்கள் விண்ணப்பித்து, சலுகை பெற கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
    • வருகிற கோடை காலத்தில் மதுரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை வர வாய்ப்புள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. அ.தி.மு.க. பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன் தாஸ் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா பூமி பூஜைக்கு தலைமை தாங்கி கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மதுரையில் தமிழக முதல்வரின் கள ஆய்வு குறித்து முறையான முடிவுகள் வெளி வரவில்லை. கள ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடா ளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் அழைக்கவில்லை. குறைந்தபட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகளையாவது அழைத்து மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்திருக்க வேண்டும்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் ரூ.540 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தற்போது எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. இதேபோல மதுரை டைட்டல் பார்க், மதுரைக்கு முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் எந்த நிலையில் உள்ளது என்றும் தெரியவில்லை.

    வருகிற கோடை காலத்தில் மதுரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. அது தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாக தெரியவில்லை. மொத்தமாக முதல்வரின் கள ஆய்வு கூட்டம் என்பது அவரது சுற்றுப்பயணமாக அமைந்ததே தவிர மதுரை மக்களுக்கு எந்தவித திட்டப் பணிகளும் நடைபெற்றதாக தெரியவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை 2026-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என்றுஅறிவித்த நிலையில் நிதி உதவி செய்யும் ஜப்பான் நிறுவனத்திடம் சுகாதாரத்துறை அமைச்சர் இது தொடர்பாக ஏதேனும் முயற்சி செய்தார்களா? என்பது தெரியவில்லை.

    இவர்கள் மத்திய அரசை குறை கூறுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் கல்லூரி, பள்ளிகள் அருகிலேயே மாணவர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கும் இடத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழடி அருங்காட்சி யகத்தை முதல்வர் திறந்து வைத்தார். இந்த பணி 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டு அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்தது அ.தி.மு.க. தான். மதுரைக்கு ஆய்வுக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணைச் செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் நாகரத்தினம், பாலா, பொன்.முருகன், எம்.ஆர்.குமார், பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் பங்களிப்பு திட்டத்தில் சேரலாம்.
    • ஒரு விவசாயி அனுமதிக்கப் படாத இடுபொருள் பயன்படுத்தினால் அவர் குழுவில் இருந்து நீக்கப்படுவார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் குழுக்கள் அமைத்து உரிய கட்டணம் செலுத்தி தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் கீழ் பதிவு செய்து சான்று பெற்று வருகின்றனர். ஒரே கிராமத்தில் அல்லது அருகாமையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் ஒரு குழுவாக அமைத்து எவ்வித கட்டணமும் இல்லாமல் பங்களிப்பு உறுதி அளிப்புத் திட்டத்தில் அங்ககச் சான்று பெறலாம்.

    இவ்வாறு சான்று பெற்ற பொருட்களை உள்நாட்டு அளவில் மட்டும் விற்பனை செய்யலாம். குறைந்த பட்சம் 10 விவசாயிகள் முதல் 50 விவசாயிகள் வரை இணைந்து குழுவாக அமைத்து அங்கக முறைப்படி விவசாயம் செய்வோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டு புகைப்படம் ஒட்டிய விண்ணப்பத்துடன் பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்யும் விவசாயிகள் உறுதிமொழி படிவம், பண்ணை விபரங்கள், ஆதார் நகல், சிட்டா ஆகியவற்றை மண்டல குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு குழுவிற்கு அங்கீகாரம் வழங்கப்படும். குழு உற்பத்தியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் உறுப்பினர்கள் குழுவில் உள்ள மற்ற விவசாயிகளின் வயலை ஆய்வு செய்ய வேண்டும். 3-ம் நபர் ஆய்வு இல்லை. உற்பத்தி செய்யப்படும் விளை பொருள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதா? என உறுதி செய்ய உபயோகிப்பாளர் ஒருவரை ஆய்விற்கு அமைத்துக கொள்ளலாம்.

    ஆய்வு முடிவுகள் குழுவின் ஒப்புதலுக்கு வைக்கப்படும். உள்ளூர் குழுவின் முடிவு திருப்திகரமாக இருந்தால் சான்று வழங்கப்படும். தனிப்பட்ட விவசாயிகள் இந்த திட்டத்தில் சான்று பெற்றவுடன் 2 வருட காலத்திற்குள் ஏதாவது ஒரு குழுவில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தவறான தகவல்கள் இருந்தால் குழு இடை நீக்கம் செய்யப்படும்.

    குழுவில் யாரேனும் ஒரு விவசாயி அனுமதிக்கப் படாத இடுபொருள் பயன்படுத்தினால் அவர் குழுவில் இருந்து நீக்கப்படுவார். இந்த திட்டத்தில் கட்டணமின்றி எளிமையான முறையில் பதிவு செய்வதால் விவசாயி களுக்கு பயனுள்ளதாகவும், அதிக அளவில் விவசாயிகள் அங்ககச் சான்று பெற முடியும். மேலும் விவசாயிகள் உள்ளூரை சேர்ந்த நபர் என்பதால் இயற்கையில் விளைந்த பொருள் என்ற நம்பகத்தன்மை வாங்குபவர்களுக்கு ஏற்படும். நுகர்வோர்கள் இடைதரகரின்றி பண்ணையிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

    எனவே ஒரே ஊரில் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் குழுவாக இணைந்து பங்களிப்பு உறுதி அளிப்புத் திட்டத்தில் பதிவு செய்து சான்று பெற்று பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைத்தார்.
    • அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திலும் முதற் கட்டமாக தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திலும் முதற் கட்டமாக தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து நாமக்கல் நகராட்சி, கொண்டிசெட்டிபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் வழங்கும் திட்டத்தின், 2-ம் கட்டத்தினை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.

    அப்போது கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறியதாவது:-

    நாமக்கல் நகராட்சியில் முதல் அமைச்சரின் காலை உணவு வழங்கும் 2-ம் கட்டத் திட்டம், சின்ன முதலைப்பட்டி, அழகுநகர், பெரியப்பட்டி, போதுப்–பட்டி, அய்யம்பாளையம், கிருஷ்ணாபுரம், பெரியூர், கருப்பட்டிபாளையம் மற்றும் நாமக்கல் ரங்கர் சன்னதி ஆகிய பகுதிகளில் உள்ள 9 தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த 1,088 மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

    ராமாபுரம் புதூர், முதலைப்பட்டி, கொண்டி செட்டிபட்டி, முதலைப்–பட்டிபுதூர் மற்றும் காவேட்–டிப்பட்டி பகுதிகளில் உள்ள 5 நடுநி–லைப்பள்ளிகளைச் சேர்ந்த 533 மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்–படுகிறது.

    அதேபோல் திருச்செங்கோடு நகராட்–சிக்குட்பட்ட கூட்டப்–பள்ளி, மலையடி–வாரம், சீத்தா–ரம்பாளையம், சாணார்பாளையம், சூரியம்பாளையம் மற்றும் கொல்லப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 6 தொடக்கப்–பள்ளிகளை சேர்ந்த 973 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 2,594 மாணவ, மாணவிகள் முதல்- அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்ட 2-ம் கட்டத்தில் பயன்பெறு கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, நகராட்சி கமிஷனர் சுதா, கவுன்சிலர்கள் ஈஸ்வரன், தவராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • அரியலூரில 540 குழந்தைகள் பயனடைகின்றனர்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி குத்துவிளக்கு ஏற்றி வைத்து அங்கு பயிலும் 76 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை பறிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் முதல் கட்டமாக சின்னவளையம், ஜெயங்கொண்டம் வடக்கு மற்றும் தெற்கு ஆதிதிராவிட நல்ல பள்ளி, செங்குந்தபுரம் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 9 பள்ளிகளை சேர்ந்த 464 குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 540 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் மூர்த்தி, கோட்டாட்சியர் பரிமளம், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம், வட்டாட்சியர் துரை, நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார், வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி, கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார்.
    • சேலம் மாவட்டத்தில் 54 மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 5447 மாணவ, மாணவியர்கள் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

    சேலம்:

    தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும் 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 தொடக்கப்பள்ளி (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 16.09.2022 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.

    சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மணக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 54 மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 5447 மாணவ, மாணவியர்கள் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

    இத்திட்டத்தின் மூலம் மாணவ-மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதோடு, ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தலை உறுதி செய்ய முடியும்.

    மேலும், மாணவ / மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல் குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டினை நீக்குதல், பள்ளிகளில் மாணவ-மாணவியர்களின் வருகையை அதிகரித்தல் மற்றும் கல்வியில் தக்க வைத்துக் கொள்ளுதல் மற்றும் வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையைக் குறைத்தல் உள்ளிட்டவைகள் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    சேலம் மாநகராட்சியில் காலை உணவாக உப்புமா வகைகள், கிச்சடி வகைகள் மற்றும் பொங்கல் வகைகள் உள்ளிட்டவை சுழற்சி முறையில் நாள்தோறும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக சேலம் மாநகராட்சியில் மணக்காடு சமுதாயக் கூடம், இரும்பாலை மெயின் ரோட்டில் உள்ள டாக்டர்ஸ் காலணி, அம்மாப்பேட்டை வித்யா நகர், களரம்பட்டி சமுதாயக்கூடம், மணியனுர் காத்தாயம்மாள் நகர் சமுதாயக்கூடம் ஆகிய 5 ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தினை சேலம் மாவட்டத்தில் திறம்பட செயல்படுத்திடவும், கண்காணித்திடவும் ஏதுவாக 54 பள்ளிகள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு தினசரி காலை உணவு முறையாக வழங்கப்படுவதை உறுதிசெய்திட துணை கலெக்டர் நிலையில் ஒருவர் தினசரி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    • சுற்றுலாத்துறை மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள்
    • சுற்றுலா வரும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை சந்தித்த விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை மனு அளித்தார்.

    அதில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை அழகு நிரம்பி வழியும் மாவட்டம். கடற்கரை, அருவிகள், அணைக்கட்டு என சுற்றுலாப் பயணி களை கவர்ந்திழுக்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது. இந்த மாவட்டம், உல கத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மாற சாத்தி யக்கூறு உள்ளன. ஆனால் போதிய அளவு உட்கட்ட மைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது குறைவாகவே காணப்படுகிறது.

    கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள சுற் றுலா தலங்களுக்கு எந்த தடையும் இன்றி சென்று வர சாலை வசதிகள் மிக முக்கியமாக தேவைப்படு கிறது. மேலும் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையங் கள், தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதும் முக்கிய மாகும். தனியார் நிறுவனங் களுடன் இணைந்து கடல் மற்றும் மலை சார்ந்த பிர தேசங்களில் சாகச விளை யாட்டுக்கள் ஏற்படுத்தி சுற் றுலா பயணிகளை கவர இயலும். மேலும் ரெயில் மற்றும் விமான சேவையும் அவசியம் ஆகும். பிற மாநிலங்க ளில் இருந்து கன்னியாகுமரி வந்து செல்வதற்கான ரெயில் வசதிகள் குறைவாகவே உள்ளதால் சுற்றுலா வரும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அது போன்று கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் அமைந்தால் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு உதவும்.

    இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு வகுத்துள்ள பல்வேறு திட்டங்களின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தை இணைத்து சுற்றுலா உட் கட்டமைப்பு வசதிகள் பெருக்குவதற்கு தேவையானவற்றை சுற் றுலாத்துறை செய்து தர நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், விமான நிலையம் அமைக்கவும் அந்தந்த துறைகளுக்கு சுற்றுலா துறையின் மூல மாக பரிந்துரை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அரசின் திட்டங்களை இடையூறின்றி பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பது எனது பணி.
    • திருவாரூர் நகராட்சியின் மேம்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டராக சாரூஸ்ரீ பொறுப்–பேற்றுக் கொண்டார்.

    இவர் 2014 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்து ஒருகிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் துணைஆ ட்சியராக பதவியேற்று, பின்பு வணிகவரித்துறையின் இணை இயக்குநராக பதவி வகித்து, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பதவி வகித்து,தற்போது திருவாரூர் மாவட்ட கலெக்டராக பொறுப்–பேற்றுள்ளார்.

    பொறுப்பேற்றதற்கு பின் நிருபர்களிடம் கலெக்டர் கூறிய தாவது:-

    திருவாரூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபடுவேன். அரசின் திட்டங்களை இடை யூறின்றி பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பது எனது தலையாய பணி.

    திருவாரூர் நகராட்சியின் மேம்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

    ×