search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225867"

    • சாயல்குடியில் தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன்- தங்கம் தென்னரசுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
    • தி.மு.க. கிழக்கு மேற்கு ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன்ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், மாநில இலக்கிய அணி செயலாளர் பெருநாழி போஸ், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்பா ரகு, சாயல்குடி நீர்ப்பாசன சங்கத் தலைவர் ராஜாராம், ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, ஊராட்சி மன்ற தலைவர்கள் இதம்பாடல் மங்கள சாமி, காணிக்கூர் தென்னரசி, செல்லபாண்டியன், ஏ. புனவாசல் ராஜேந்திரன், செஞ்சடைநாதபுரம் லிங்கராஜ், டி. கரிசல்குளம் அப்பனசாமி, எஸ். வாகைக்குளம் ஜெயலட்சுமி, வடமலை மூக்கையூர் தொம்மை, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் எஸ்.வாகைகுளம் பால கிருஷ்ணன், டி.கிருஷ்ணாபுரம் இளங்கோவன், வாலிநோக்கம் வகிதாசகர், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அமீர்ஹம்சா, தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ் செழியன், தி.மு.க. முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் சாயல்குடி ராஜேந்திரன், நரிப்பையூர் ராஜபாண்டியன், நரிப்பையூர் கோகுலம் மொபைல்ஸ் மருதுபாண்டியன், தி.மு.க. கிளைச் செயலாளர் குருவாடி சேதுராமன், மேலக் கிடாரம் குமாரராஜா, காலாகுளம் முருகேசன், ஆர்.சி.புரம் பிரான்சிஸ், பிரதிநிதி பழனிச்சாமி. ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் நாகரத்தினம், இளைஞரணி துணை அமைப்பாளர் நந்தகுமார், பிரமுகர் காலாகுளம் சேகர் உள்ளிட்ட தி.மு.க. கிழக்கு மேற்கு ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • மாநில தடகள போட்டியில் வென்ற மாணவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
    • காமராஜ் உள்பட ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் ஆகியோர் மாணவர் வசந்தகுமாரை பாராட்டினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் வசந்தகுமார் திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.

    இதில் இவர் ''போல் வால்ட்'' எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதலில் 2-வது பரிசு பெற்றார். இவரை பாராட்டும் வகையில் பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவ-மாணவிகள், கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளித்தனர்.

    கிராம எல்லையில் இருந்து மாணவர் வசந்தகுமார் உடற்உகல்வி ஆசிரியர் கார்த்திகேயன் ஆகியோரை மாலை அணிவித்து பள்ளிச் செயலாளர் பாலாஜி நாடார், தலைவர் லட்சுமண நாடார், உப தலைவர் ஜெய் கணேஷ், பெற்றோர் ஆசிரியர்-சங்கத் தலைவர் தர்மராஜ் நாடார், உறவின்முறை தலைவர் ராமசாமி நாடார், பொருளாளர் ராதாகிருஷ்ணன் நாடார், செயலாளர் கள்ள கொண்ட ராஜன் நாடார், கணக்கர் முத்தையா நாடார் ஆகியோர் வரவேற்று ஊர்வலமாக மேளதாளங்களுடன் அழைத்து வந்தனர்.

    பள்ளியில் நடந்த பாராட்டு கூட்டத்திற்கு தலைமை ஆசிரியை பேச்சியம்மாள் வரவேற்றார். ஒன்றிய குழு உறுப்பினர் காமராஜ் உள்பட ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் ஆகியோர் மாணவர் வசந்தகுமாரை பாராட்டினர்.

    • முதல்வருக்கு பேரளி, குன்னத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
    • பெரம்பலூருக்கு வருகை தந்த

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரியலூரில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவிற்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று மாலை பெரம்பலூரிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் பேரளி மற்றும் குன்னம் கிராமத்தில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக அதன் ஒன்றிய செயலாளரும் ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான என். கிருஷ்ணமூர்த்தி சார்பில் மேலமாத்தூரில் சிறப்பான வரவேற்பு முதல்வருக்கு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர் அணியினர் இளைஞர் அணியினர் தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • மக்களை தேடி மருத்துவ திட்டம் பற்றி பாடல் பாடியுள்ளார்.
    • பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

    வேதாரண்யம்:

    பொதுசுகாதார த்துறை நூற்றாண்டு நிறைவ டைவதை தமிழகம் முழுவதும் அத் துறையினர் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில்தலை ஞாயிறு ஆரம்பசுகாதார நிலையத்தில்வட்டார சுகாதார மேற்பார்வை யாளராக பணியாற்றும் நாகை செல்வன் சமீபத்தில் ரஜினி நடித்த முரட்டுகாளை படத்தில் வரும் பொதுவாக எம் மனசு தங்கம் பாடல் வரிகளை மாற்றி அமைத்து பொது சுகாதாரத் துறையின் சேவைகளையும் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டம் பற்றியும் பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார் .

    அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்பாடலை சிறப்பாக பாடியத்தற்காக நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், நாகை செல்வனை பாராட்டினார்.

    • உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை நடந்தது.
    • மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் தி.மு.க. ஒன்றியம் மற்றும் பேரூர் நிர்வாகிகள் இந்த கூட்டம் நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் தி.மு.க. ஒன்றியம் மற்றும் பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய அவை தலைவர் நடராஜன், பேரூர் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துணை சேர்மன் சுவாமிநாதன் வரவேற்று பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்க மதுரை வருவதையொட்டி அவருக்கு அலங்காநல்லூர் ஒன்றியம் மற்றும் பேரூர் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய சேர்மன் பஞ்சு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி சந்தனகருப்பு, மாணவரணி பிரதாப் ஆகியோர் நன்றி கூறினர்.

    • தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
    • போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கட்டுப்பாடுடன் வரவேற்பது அவசியம்.

    நாகர்கோவில்:

    உலக மீனவர் தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் முட்டத்தில் விழா நடைபெற உள்ளது. இந்த மீனவர் தினவிழாவில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார்.

    இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் வருகை யையொட்டி அவருக்கு அளிக்க வேண்டிய வர வேற்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு அவை தலைவர் எப்.எம்.ராஜ ரத்தினம் தலைமை வகித் தார். சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மேயருமான மகேஷ் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 20-ந் தேதி இரவு தூத்துக்குடி வருகிறார். பின்னர்

    21-ந்தேதி காலை அங்கு திரைப்பட விழாவை தொடக்கி வைத்து விட்டு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கு மதிய உணவை முடித்த பிறகு முட்டத்தில் நடைபெறும் மீனவர் தினவிழாவில் கலந்து கொள்கிறார்.

    நான் மாவட்ட செயலா ளராக புதிதாக பொறுப்பு ஏற்றுள்ளேன். அதோடு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார். எனவே அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்க வேண்டும். கடந்த 7.9.2022 அன்று ராகுல்காந்தி நடை பயணத்தை தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த போது காவல்கிணறு சந்திப்பில் கொடுத்த வரவேற்பை போலவும், அதை விட எழுச்சியுடனும் வரவேற்க வேண்டும்.

    இதுவரை குமரி மாவட்டம் பார்த்திடாத வரவேற்பை அவருக்கு அளிக்க வேண்டும். போக்கு வரத்து நெரிசல் இல்லா மல் கட்டுப்பாடுடன் வர வேற்பது அவசியம்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில், குமரி மாவட்டம் வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக யார் அறி விக்கப்பட்டாலும் அவரது வெற்றிக்கு பாடுபட வேண் டும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாமில் புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் ஆனந்த், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், செயற்குழு உறுப்பினர்கள் பார்த்தசாரதி, தாமரை பாரதி, சதாசிவம், பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் லிவிங் ஸ்டன், சுரேந்திரகுமார், பாபு, மதியழகன், பிராங்கி ளின், ரமேஷ்பாபு, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், துணைச் செய லாளர்கள் பூதலிங்கம், சோமு, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய இணை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அமைச்சர் கபில் மோரே ஷ்வர் பாட்டீல் ராமநாதபுரம் வந்திருந்தார்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் மத்திய அரசின் வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மோரே ஷ்வர் பாட்டீல் ராமநாதபுரம் வந்திருந்தார்.

    மத்திய அமைச்சரை வரவேற்கும் வகையில் ராமநாதபுரம் பா.ஜ.க. தலைவர் இ.எம்.டி. கதிரவன் தலைமையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் பாஜக பிரமுகருமான சண்முகநாதன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்து பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்து வந்தனர்.

    அங்கு பாஜக கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹேமா மாலினி, தேசிய பொதுக்குழு உறுப்பி னர் மற்றும் சிவகங்கை மாவட்ட பார்வை யாளர் சண்முகராஜா, பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் ஆத்மா கார்த்தி, மாவட்ட துணை தலைவர் விஜய ராணி கருணாநிதி, மாவட்ட செயலாளர் கலை யரசி அசோக், மாவட்ட துணைத் தலைவர் சங்கீதா, தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் கலைவாணி, மண்டபம் ஒன்றிய தலைவர் விக்ராத் சந்துரு, மண்டபம் ஒன்றிய செயலாளர் இளசு என்ற இளையராஜா, வெளிநாடு வாழ் தமிழ்மக்கள் பிரிவு மாவட்ட தலைவர் சரண்யன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் சண்முகநாத சேதுபதி, தங்கச்சிமடம் பேக்கரும்பு சந்திரகுமார் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் மத்திய அமைச்சருக்கு மரியாதை செய்து உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.

    • சதய விழா தஞ்சை பெரிய கோவிலில் இன்று தொடங்கி நாளை வரை சதய விழா தொடங்கியது.
    • பல்வேறு கலைநடனங்கள், கலை நாட்டியங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரம் அன்று கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவலால் 1 நாள் மட்டுமே சதய விழா கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததால் வழக்கம்போல் 2 நாள் விழாவாக நடைபெறுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு சதய விழா தஞ்சை பெரிய கோவிலில் இன்று தொடங்கியது. நாளை வரை சதய விழா நடைபெற உள்ளது.

    விழாவின் முதல் நாளான இன்று காலை 9 மணிக்கு இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக பெரியநாயகி அம்மனுக்கு சந்தனம் காப்பு அலங்காரமும், பெருவுடையாருக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.

    காலை 9.15 மணிக்கு டி.கே.எஸ். பத்மநாபன் குழுவினரின் மங்கள இசை நடைபெற்றது . தொடர்ந்து களிமேடு அப்பர் பேரவையின் திருமுறை அரங்கம் நடைபெற்றது ‌‌‌ .

    இதையடுத்து மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இந்த நிகழ்ச்சிக்கு சதய விழா குழு தலைவர் து.செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசினார். போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சதய விழா குழு துணை தலைவர் மேத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பலர் கலந்துகொண்டு பேசினர்.

    இதையடுத்து கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தொடக்க உரையாற்றினார். தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். திருக்கோவில் தேவார இன்னிசை முழக்கம் என்ற தலைப்பில் திருவையாறு அரசர் கல்லூரி முதல்வர் சண்முக செல்வகணபதி பேசினார். இதேபோல் ராஜராஜன் பெற்ற வெற்றிகள் என்ற தலைப்பில் தமிழ் வேள் உமாமகேசுவரனார் கல்லூரி பேராசிரியர் இளமுருகன், மாமன்னரின் சமயபொறை என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் சிவபெருமான், செம்பியன் மாதேவி குந்தவை நாச்சியார் வளர்ப்பில் அருண்மொழித்தேவன் என்ற தலைப்பில் ந.மு.வே‌. நாட்டார் கல்லூரி குழு உறுப்பினர் விடுதலை வேந்தன், தஞ்சை ராஜராஜேஸ்வரமும் திருவிசை பாவும் என்ற தலைப்பில் சென்னை புலவர் பிரபாகரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இன்று மாலையில் திருமுறை பண்ணிசை, திருமுறையின் திரு நடனம், பரதநாட்டியம், நாதசங்கமம், வயலின் இசை நிகழ்ச்சி , கவியரங்கம், நகைச்சுவை சிந்தனை பாட்டு பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகிறது.

    இன்று நடந்த முதல் நாள் விழாவில் சதய விழா குழு உறுப்பினர் இறைவன், கோவில் உதவி ஆணையர் கவிதா, மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் , தாசில்தார் சக்திவேல் மற்றும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

    தொடர்ந்து நாளை இரண்டாம் நாள் விழா நடைபெற உள்ளது. நாளை காலை கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதேபோல் பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர் மாலை அணிவிக்கின்றனர். பின்னர் திருமுறை திருவீதி உலா, பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெறும்.

    இதையடுத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்காக நடத்தப்பட்ட தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு மேடை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    • மண்டபம் ஒன்றிய தி.மு.க.செயலாளர் பிரவீன் தலைமையில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மேற்கு ஒன்றிய தி.மு.க, செயலாளர் பிரவீன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ராமநாதபுரம்

    பசும்பொன்னில் தேவர் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜையையொட்டி முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகை தந்த இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர்கள் ஆகியோர்களுக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. ஆணைக்கிணங்க மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் பிரவீன் தலைமையில் மாவட்ட நிர்வாகம் அறிவித்த வழிமுறைகளை பின்பற்றி ஏராளமான கட்சி நிர்வாகிகள் காரில் சென்று உற்சாக வரவேற்பளித்தனர்.

    முன்னதாக அகஸ்தியர் கூட்டத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க, செயலாளர் பிரவீன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட கவுன்சி லர்கள் கவிதா கதிரேசன், ரவிச்சந்திர ராமவன்னி, பொதுக்குழு உறுப்பினர் தண்டபானி, ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி, கிளை செயலாளர்கள் கிருஷ்ணா, ராக்கு, மகேசுவரன், சங்கர், சாமி, சுகுன சீலன், சோமசுந்தரம், கோட்டைசாமி, செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகாலை 5.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக அகமதாபாத்துக்கு சென்று அடையும்.
    • அதிகாலை திருச்சியில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 6.30 மணிக்கு தஞ்சாவூர் ரெயில் நிலையம் வந்தது.

    தஞ்சாவூர்:

    அகமதாபாத்- திருச்சி இடையே வாராந்திர ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

    அதன்படி கடந்த 27-ந் தேதி முதல் இந்த ரெயில் சேவை தொடங்கியது.

    அதாவது வாரந்தோறும் வியாழக்கிழமையில் காலை 9.30 மணிக்கு அகமதாபாத்தில் புறப்பட்டு ரேணிகுண்டா, சென்னை, சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு சனிக்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு சென்று அடையும்.

    மறுமார்க்கத்தில் ஞாயிற்றுகிழமை அதிகாலை 5.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம், சென்னை வழியாக மறுநாள் இரவு 9.15 மணிக்கு அகமதாபாத்துக்கு சென்று அடையும்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்க திருச்சியில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 6.30 மணிக்க தஞ்சாவூர் ரெயில் நிலையம் வந்தது.

    ஒரிரு நிமிடங்கள் இந்த ரெயில் நின்றது.

    அப்போது காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் ஆகியோர் தலைமையில் ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர்ரெயில்ஓட்டு னருக்க சால்வை அணிவிக்க ப்பட்டுகவுரவிக்கப்பட்டார்.

    பயணிகளுக்குஇனிப்பு வழங்கி கொண்டாட ப்பட்டது.

    இது குறித்து செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் கூறும்போது;-

    அகமதாபாத்- திருச்சி இடையே இயக்கப்படும் வாராந்திர ரெயிலை வரவேற்கிறோம்.

    இந்த ரெயிலில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

    எனவே வாராந்திர ரெயிலை தினமும் இயக்கும் ரெயிலாக மாற்ற வேண்டும் என்றார்.

    இந்நிகழ்வில் வழக்கறி ஞர்கள் உமர்முக்தார், பைசல் அகமது, கண்ணன், பேராசிரியர்கள் திருமேணி, செல்வகணேசன் மற்றும் காஜாமொய்தீன், கூத்தூர் ரங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கோரிப்பாளையம் தேவர்சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
    • முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் ஏற்பாட்டில் வழிநெடுக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மதுரை

    பசும்பொன் முத்துராம லிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா நாளை (30-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை கோரிப்பாளையம் ரவுண்டானாவில் உள்ள தேவர் சிலை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாளை காலை 9.30 மணிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கோரிப்பா ளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

    இதற்காக ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு மதுரை வருகிறார். பின்னர் நாளை காலை 9 மணிக்கு அழகர் கோவில் ரோட்டில் உள்ள விடுதியில் இருந்து கோரிப்பாளையம் புறப்படும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முன்னாள் எம் பி. கோபால கிருஷ்ணன் தலைமையில் திரளானோர் பங்கேற்று உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    தல்லாகுளம், தமுக்கம் மைதானம், கோரிப்பாளையம் வரை வழிநெடுக ஓ.பன்னீர் செல்வத்துக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்படுகிறது.

    இதையடுத்து கோரிப்பாளையம் தேவர் சிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து ஆதரவாளர்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்று காலை 11 மணியளவில் தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

    அவருடன் முன்னாள் அமைச்ச ர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் மற்றும் ஜே. சி. டி. பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

    இதுகுறித்து முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஒருங்கிணை ப்பாளர்-முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செ ல்வம், தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக இன்று இரவு மதுரை வருகிறார். மதுரை அழகர் கோவில் ரோட்டில் உள்ள விடுதியில் தங்கும் அவர் நாளை (30-ந்தேதி) காலை 9 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு வருகிறார். வழிநெடுக அவருக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க படுகிறது.

    கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பசும்பொன் செல்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் அம்மாவின் உண்மை விசுவாசிகள் அனைவரும் பங்கேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இதில் அனைத்து நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
    • மதுரை விமான நிலையத்திற்கு நாளை (29-ந் தேதி) மாலை 5 மணிக்கு வருகிறார்.

    அவனியாபுரம்

    பசும்பொன் முத்துராம லிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும், இதில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும், வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை, மாமன்னர் மருது சகோதரர்களின் ஜெயந்தி விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நாளை (29-ந் தேதி) மாலை 5 மணிக்கு வருகிறார்.

    இந்த சிறப்பு மிக்க விழாக்களில் பங்கேற்க வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் இருவண்ண கொடியினை கையில் ஏந்தி வரவேற்பு கொடுக்கும் வகையில் மதுரை வடக்கு மாவட்டம், மதுரை மாநகர் மாவட்டம் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக்கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், கழக முன்னோடிகள், கழகத்தி னர் என பெரும்பாலானோர் பங்கேற்று வரவேற்பு நிகழ்ச்சியினை சிறப்பிக்கு மாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×