என் மலர்
நீங்கள் தேடியது "slug 225970"
- முதியோர் உதவித்தொகை 50பேருக்கு தீபாவளி விழா தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.
- மாரிமுத்து எம்எல்ஏ, மன்றத்தலைவர் கவிதா பாண்டியன் ஆகியோர் விலையில்லா வேட்டி சேலை வழங்கினர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் முதியோர் உதவித்தொகை பெறும் 50பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் விழா தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆர்டி.ஓ கீர்த்தனா மணி தலைமை வகித்தார்.
துணை கலெக்டர் கண்மணி முன்னிலை வகித்தார்.
தாசில்தார் மலர்கொடி வரவேற்றார்.
மாரிமுத்து எம்எல்ஏ, மன்றத்தலைவர் கவிதா பாண்டியன் ஆகியோர் விலையில்லா வேட்டி சேலை வழங்கினர்.
இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகுமார், வி.ஏ.ஓ.க்கள் முருகானந்தம், தினேஷ்குமார், உயரதிகாரிகள், முதியோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.
- தகுதியுள்ள பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022 ஆம் ஆண்டு சேர்க்கைக்கு இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு முடிந்துள்ளது.
இதில் மகளிர் பிரிவுகளான இயந்திர மின்னணுவியல் மற்றும் கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் அதிகமாக உள்ளன.
பொது பிரிவான தொழிற்சாலை வர்ணம் பூசுபவர் தொழிற்பிரிவில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன.
எனவே இதில் சேர விருப்பம் உள்ள 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக வந்து சேர்ந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு இலவச பஸ் கட்டண சலுகை, விலையில்லா சைக்கிள், சீருடைகள், காலணி, வரைபடக்கருவி, நோட்டு புத்தகம் போன்றவை வழங்கப்படும்.
தவிர அனைத்து பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.750 உதவி தொகை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 7708709988, 9442705428, 9442521649, 9943130145 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மாணவ-மாணவிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
- பொறியியல், சட்டம், தொழில் கல்வி, மருத்துவம் படித்தவர்கள் உதவித்தொகை பெற இயலாது.
மதுரை
தமிழக அரசின் வேலைவாய்ப்பு துறை சார்பில் படித்து முடித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு மையத்தில் மனுக்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பட்டியல் இனத்தவர் 45 வயது வரையிலும் இதர வகுப்பினர் 40.வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு மையத்தில் பொதுப் பிரிவின் கீழ் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பட்டதாரிகள் உதவித்தொகை பெறலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் ஓராண்டு முடித்தவர்கள் வருமானம் மற்றும் வயது வரம்பின்றி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
பொறியியல், சட்டம், தொழில் கல்வி, மருத்துவம் படித்தவர்கள் உதவித்தொகை பெற இயலாது. ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் மீண்டும் வர வேண்டியது இல்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வழங்கி பயன் பெறலாம்.
ஓராண்டுக்கு பிறகு தொடர்ந்து உதவித்தொகை பெற விரும்புவோர் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ், சுய உறுதிமொழி ஆவணம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
- தனியார் பள்ளியில் படிக்கும் சிறுபான்மையினர் உதவித்தொகைக்கு விண்ணபிப்பது 31-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- (www.scholarships.gov.in) என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர்
தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்க ப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, ஜெயின் மதங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியாா கல்வி நிலையங்களில் 2022-23ம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் (www.scholarships.gov.in) என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு ள்ளது.
தகுதியான சிறுபான்மை யின மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தி ற்கு வருகிற 31-ந் தேதி வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் உதவித்தொகைக்கு விண்ண ப்பிக்கலாம்.
இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.
திருப்பூர் :
வேலைவாய்ப்பற்ற பொது மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காத படித்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு இதுவரை மூன்று மாதத்திற்கு ஒருமுறை உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இனி மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படும். பொதுமனுதாரர்களுக்கு காலாண்டிற்கு (மூன்று மாதம் ) ஒருமுறைவழங்கப்படும்.
10-ம்வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு(பொது) ரூ.200, மாற்றுத்திறனாளிக்கு ரூ.600 வழங்கப்படும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொது -ரூ.300, மாற்றுத்திறனாளி ரூ.600 வழங்கப்படும்.
12-ம்வகுப்பு மற்றும் அதற்கு சமமான கல்வி தகுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொது ரூ.400, மாற்றுத்திறனாளிக்கு ரூ.750 வழங்கப்படும். பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு பொது-ரூ.600, மாற்றுத்திறனாளி ரூ.1000 வழங்கப்படும்.
வயது வரம்பு (உதவித் தொகை பெறும் நாளில்)ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் - 45 வயதிற்குள். இதர வகுப்பினர்- 40 வயதிற்குள் மாற்றுத் திறனாளிகள்- உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை (45 வயதுக்கு மேல் சுய சான்று வழங்க வேண்டும்) /மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.
மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப்படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்கவேண்டும். மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ மாணவியராக இருக்கக் கூடாது. ஆனால் தொலை தூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பித்து பொது மனுதாரர்கள் 5 வருடங்கள், மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்று வேலையில்லாமல் காத்திருப்பவர் www.tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்திலிருந்தோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ இப்படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்விற்கும் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்வதற்கும், தேர்வுமையங்களுக்கு சென்று வருவதற்காகவும் இத்தொகை வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் வேலைவாயப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் (2022-2023) இவ்வாண்டுக்கான சுயஉறுதி மொழி ஆவணத்தை 10 டிசம்பர் 2022க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் உடனடியாக மேற்கண்டவாறு படிவங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை சிவகங்ககை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் உயிர்்ப்பதி வேட்டில் காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற, 9-ம் வகுப்பில் தோல்வியுற்றவா்களுக்கு மாதம் ரூ.200, 10-ம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு (பி.இ. போன்ற தொழில்சார்் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொகை நேரடியாக மனுதாரா்களது வங்கிக்கணக்கில் காலாண்டுக்கொருமுறை வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞா்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வி தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.
தொடா்ந்து, பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாராரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படமாட்டாது.
எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவா்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே, உதவித்தொகை பெற்று வருபவா்கள் தொடா்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடா்ந்து உதவித்தொகை பெற்றுகொள்ள வேண்டும்.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்று திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவா்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்துக் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தென்காசி மாவட்ட பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினர் மாணவர்கள் உதவி தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இது வரையில் விண்ணப்பிக்காத சிறுபான்மையின மாணவர்கள் கால அவகாசத்தை பயன்படுத்தி வருகிற 15-ந் தேதிக்குள் தவறாமல் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் 15- ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே இது வரையில் விண்ணப்பிக்காத சிறுபான்மை யின மாணவ, மாணவிகள் கால அவகாசத்தை பயன்படுத்தி வருகிற 15-ந் தேதிக்குள் தவறாமல் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
- இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் திருப்பூர் மாவட்ட மாநாடு நடந்தது.
- கோவில்களுக்கு நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
உடுமலை :
உடுமலையில் இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் திருப்பூர் மாவட்ட மாநாடு நடந்தது.உடுமலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மாநாட்டுக்கு முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்.
மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.நாகுமணி மாதாஜி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாவட்ட அமைப்பாளர் சேகர் வரவேற்றார்.மாநாட்டில், நலிவடைந்த கிராம கோவில் பூஜாரிகள் அனைவருக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத்தொகையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.பூசாரிகளுக்கு பூஜை செய்யும் கோவிலுக்கு அருகிலேயே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.அனைத்து கோவில்களுக்கும் நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பயிற்சி கல்லூரி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 37 மனுக்கள், அடிப்படை வசதிகோரி 5 மனுக்கள் என மொத்தம் 175 மனுக்கள் பெறப்பட்டன.
- மாணவனுக்கு ரூ.23,000-க்கான காசோலையை தாய் சித்ராவிடம் கலெக்டர் வழங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 40 மனுக்களும், வேலைவாய்ப்புகோரி 30 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை கோரி 38 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 25 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 37 மனுக்களும், அடிப்படை வசதிகோரி 5 மனுக்களும், மொத்தம் 175 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வானதிராஜபுரத்தை சேர்ந்த ஜெயவசந்தன் கல்வி உதவி கேட்டு, கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்திருந்தார்.
மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு வாரக் காலத்திற்குள் அம்மாணவனுக்கு மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியில் இருந்து ரூ.23,000-க்கான காசோலையினை அவரின் தாயார்சித்ரா விடம் கலெக்டர் லலிதா வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி ஆணையர் கலால் அர.நரேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்பாலாஜி மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
- ராம்கோ நூற்பாலை பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.42 லட்சம் இலவச கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
- தலைவர் மோகனரங்கன், துணைத்தலைவர் (மனிதவளம்) நாகராஜன், மூத்த பொது மேலாளர் (பணிகள்) பாலாஜி ஆகிேயார் கல்வி உதவித்தொகையை வழங்கினர்.
ராஜபாளையம்
ராம்கோ நூற்பாலைகளில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு வருடா வருடம் இலவச கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த வருடமும் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சுமார் 1,905 தொழிலாளர்கள் குழந்தைகளுடன் வந்து கல்வி உதவித்தொகையாக ரூ.42 லட்சம் பெற்றனர். விழாவில் தலைவர் மோகனரங்கன், துணைத்தலைவர் (மனிதவளம்) நாகராஜன், மூத்த பொது மேலாளர் (பணிகள்) பாலாஜி ஆகியோர் கல்வி உதவித்தொகையை வழங்கினர்.
தொழிற்சங்கத்தின் சார்பில் எச்.எம்.எஸ். பொது செயலாளர் என்.கண்ணன், ஐ.என்.டி.யு.சி. தலைவர் ஆர். கண்ணன், ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் விஜயன் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 300 மாணவிகளுக்கு ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
- "புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் உதவியாக உள்ளது.
ஊட்டி
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5-ந் தேதி தொடங்கி வைத்தார்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர்க்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கக் கூடிய ஒரு மகத்தான திட்டம் இத்திட்டமாகும்.
நீலகிரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 300 மாணவிகளுக்கு ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் முதற்கட்டமாக அரசு கலைக்கல்லூரி ஊட்டி மற்றும் கூடலூர், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி, ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாணவிகள் என மொத்தம் 163 கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டப் பைகளுடன் வங்கி பற்று அட்டைகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
புதுமைப்பெண்கள் திட்டத்தில் பயன் அடைந்த மாணவிகள் கூறியதாவது:-
மாணவி சுகாஷிணி:
எனது சொந்த ஊர் சேலம் மாவட்டம். நான் 6 -ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சேலம் ஆட்டயம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்தேன்.அதன் பின்னர் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பதற்கான இடம் கிடைத்து முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.
எனக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டம் "புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் உதவியாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
. இது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வரும், அவருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவி ஆர்.வர்சினி:
நான் 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். தற்பொழுது பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறேன். நான் அரசு பள்ளியில் படித்த காரணத்தினால் எனக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைத்தது. இத்திட்டத்தின் மூலம் மாணவிகள் உயர்கல்வி கற்கும் எண்ணிக்கை அதிகமாகும்.
எனது தோழிகளுக்கும் இத்திட்டத்தினை பற்றி எடுத்துக் கூறி உயர்கல்வி கற்க ஊக்கப்படுத்துவேன். பெண்கள் கல்வித்தரத்தினை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு பள்ளிகளில் பயில்வது வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளம் என்பதனை உணர்த்தும் வகையில், அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி கற்கும் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கிய, முதல்-அமைச்சருக்கு நீலகிரி மாவட்ட கல்லூரி மாணவிகள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
- மகளிர் பிரிவுகளான மெக்கானிக், மெக்க ட்ரானி க்ஸ், கோபா ஆகிய தொழி ற்பிரிவுகளில் காலியிடங்கள் அதிகமாக உள்ளன.
- ஆண் பயிற்சியா ளர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை, பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியு ள்ளதாவது,
தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
2022ம் ஆண்டு சேர்க்கை க்கு 2 கட்டங்களாக கலந்தாய்வு முடிந்துள்ளது. இதில் ஓரா ண்டு தொழிற் பிரிவுகளான வெல்ட ர்கள், தொழி ற்சாலை வ ர்ணம் பூசுபவர் போன்ற ஓரா ண்டு தொழி ற்பிரிவு களில் ஒரு சில இடங்க ள்காலியாக உள்ளன.
மகளிர் பிரிவுகளான மெக்கானிக், மெக்க ட்ரானி க்ஸ், கோபா ஆகிய தொழி ற்பிரிவுகளில் காலியிடங்கள் அதிகமாக உள்ளன. என வே இதில் சேர விருப்பம் உள்ள 8ம்வகுப்பு 10ம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக வந்து சேர்ந்து கொள்ளலாம்.
மாணவர்களுக்கு இலவச பஸ் கட்டண சலுகை, விலையில்லா சைக்கிள், சீருடைகள், காலணி வரைபடக்கரு, நோட்டு புத்தகம் போன்றவை வழங்கப்படும்.
தவிர ஆண் பயிற்சியா ளர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை, பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று த்தரப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.