search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படிப்பு"

    • படகிற்குள் குழந்தைகள் அமர்ந்து படிப்பதற்கு ஏதுவாக விசாலமான அறை அமைக்கப்பட்டுள்ளது.
    • குழந்தைகளை கவரும் விதத்தில் இந்த நூலக படகை அழகுபடுத்தி இருக்கிறார்கள்.

    புத்தகங்களை கைகளில் புரட்டி படிக்க வேண்டிய வயதில் ஸ்மார்ட்போன்களில் அத்தனையையும் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். அதனால் புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சினையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இவை பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் விதமாக ஒடிசாவில் படகு நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

    அங்குள்ள பிதர்கனிகா தேசிய வன பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகத்தில்1,500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. குழந்தைகளை புத்தகங்களை படிக்க வைப்பதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த படகு நூலகம் நிர்வகிக்கப்படுகிறது. இதுகுறித்து பிதர்கனிகா கோட்ட வன அலுவலர் ஜே.டி. பதி கூறுகையில், ''குழந்தைகள் மற்றும் இளைஞர்களை இயற்கையுடன் ஒன்றிணைப்பதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் நூலகத்தின் நோக்கமாகும்" என்கிறார்.

    சிதிலமடைந்த நிலையில் இருந்த படகை புதுப்பித்து, குழந்தைகளை கவரும் விதத்தில் அலங்கார வேலைப்பாடுகள் செய்து இந்த நூலக படகை அழகுபடுத்தி இருக்கிறார்கள். படகிற்குள் குழந்தைகள் அமர்ந்து படிப்பதற்கு ஏதுவாக விசாலமான அறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை சூழ்ந்து 30-க்கும் மேற்பட்ட அலமாரிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்குள் இருக்கும் புத்தகங்களை குழந்தைகள் எளிதாக எடுத்து படிக்கும் வண்ணம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

    இந்த படகு நூலகத்திற்கு சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் வருகை தருகிறார்கள். நாட்டுப்புறக் கதைகள், சுயசரிதைகள், சிறுகதைகள், கலைக்களஞ்சியங்கள், அட்லஸ், அறிவியல் புத்தகங்கள் என ஏராளமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. வனவிலங்கு பாதுகாப்பு, சூழலியல், சதுப்புநிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய அரசாங்க வெளியீடுகள் மற்றும் பிரசுரங்களும் இந்த படகு நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    • படிப்பு, மதிப்பெண் போன்ற வார்த்தைகளை பெரும்பாலான மாணவர்கள் கசப்பாகவே நினைக்கின்றனர்.
    • படிப்பும் மதிப்பெண்களும் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானித்துவிடாது.

    வாழ்க்கைக்கு வெறும் பள்ளி, தேர்வு சார்ந்த விஷயங்கள் மட்டுமே பிரதானம் என்ற கண்ணோட்டத்திலேயே பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கல்வி சார்ந்த விஷயங்களை கூறுகின்றனர். இதனால் படிப்பு, மதிப்பெண் போன்ற வார்த்தைகளை பெரும்பாலான மாணவர்கள் கசப்பாகவே நினைக்கின்றனர். இதுவே பெற்றோர் - பிள்ளை உறவினில் சுமூகமான சூழலை சீர்குலைக்கிறது.

    ''படிப்பும் மதிப்பெண்களும் அவசியம்தான். ஆனால் அதுமட்டுமே வாழ்க்கையைத் தீர்மானித்துவிடாது. இன்றைய பெற்றோர் - குழந்தைகள் உறவில் அதீத பிரச்னைகளை ஏற்படுத்தும் பிள்ளைகளின் படிப்பு, மதிப்பெண் சார்ந்த விஷயங்களில் உண்மையான சிக்கல்களை பெற்றோர்கள் கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை காண வேண்டும்.

    * ''ஒவ்வொரு மாணவ/மாணவிக்கும் திறன் அளவு மாறுபடும். அவர்களின் திறனையும் தாண்டி அதிக மதிப்பெண்கள் எடுக்கச் சொன்னால், அவர்களால் என்ன செய்ய முடியும்? மனஉளைச்சலுக்கு ஆளாகி, சமயங்களில் தவறான முடிவுகளைக்கூட எடுக்கத் தோன்றும். அதற்குப் பெற்றோர்களும், பள்ளிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும். தங்கள் பிள்ளை குறைவான மதிப்பெண் எடுத்தாலோ, அல்லது தேர்வில் தோல்வியடைந்தாலோ அவர்கள் அந்தச் சூழலை எதிர்கொள்ள பெற்றோர்தான் தன்னம்பிக்கை தரவேண்டும்.

    * கிரிக்கெட்டில் பல உலக சாதனைகளைப் படைத்த சச்சின் டெண்டுல்கரே, பல முறை டக் அவுட் ஆகியிருக்கிறார். பல தோல்விகளைக் கடந்துதான் இன்று உலகம் புகழும் விளையாட்டு வீரராகச் சாதித்திருக்கிறார். அதோடு விஞ்ஞானிகள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் என பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள்தான் பின்னாளில் வெற்றியாளர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். அதனால், தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிக்காது என பெற்றோர்கள் புரிந்துகொள்வதுடன், அதைப் பிள்ளைகளுக்கும் சொல்லி, அவர்கள் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்தால் அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற அவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும்.

    * ஒவ்வொரு கல்வியாண்டிலும் துவக்கத்தில் இருந்தே பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் அன்போடு பேசி, அவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் வரும்படிச் செய்ய வேண்டும். மேலும் முதல் டெர்ம், காலாண்டுத் தேர்வு போன்ற ஆரம்பகட்ட தேர்வு சமயங்களில் மதிப்பெண் குறைவாக எடுத்தால், அப்போதே எதனால் மார்க் குறைந்தது, படிப்பதில் என்ன சிரமம் இருக்கிறது, படித்தது ஏன் மறந்து போகிறது என அவர்களுடன் பேசி தீர்வு காண வேண்டும். இது பிள்ளைகள் அடுத்தடுத்த தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்ள வைக்கும்.

    * பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் பிள்ளையிடம் தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அன்றைய நிகழ்வுகள் குறித்து பெற்றோர் பேச வேண்டும். 'இன்னைக்கு புதுசா என்ன கத்துகிட்ட? பாடம் எல்லாம் புரிஞ்சுதா? அது எதனால புரியல?' எனக் கேட்டால், எதாச்சும் பிரச்னைகள் இருந்தால் பிள்ளைகளும் கூறுவார்கள். அத்துடன் மாணவர்களின் அறிவியல் சிந்தனைகளை வளர்க்கும் கேள்விகளைக் கேட்க வேண்டும். தங்களுக்குத் தெரிந்ததை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதோடு, அவர்கள் வாயிலாக பெற்றோர்களும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். பிள்ளைகளிடம் நண்பர்களாக மனம்விட்டுப் பேசி, பழக வேண்டும்.

    * பிள்ளை ஒரு பாடத்தில் 50 மதிப்பெண் பெறுகிறார் எனில் அவரை 55, 60, 65 என படிப்படியாக அதிக மதிப்பெண் பெற ஊக்கப்படுத்தலாம். அதைவிடுத்து, 'அடுத்த தேர்வில் கட்டாயம் 80-90 மார்க் எடுத்தே ஆக வேண்டும்' எனச் சொன்னால் பிள்ளைகளுக்கு படிப்பின் மீது ஆர்வமின்மையும், மன அழுத்தமும்தான் அதிகமாகும். பாடங்களைப் புரிந்து படிக்கும் குழந்தைகள், 45 மதிப்பெண்கள் எடுத்தாலும் வாழ்வில் எப்படியும் முன்னேறிவிடுவார்கள், பிரச்னையான சூழல்களைத் தைரியமாக எதிர்கொள்ளவார்கள். ஆனால், மனப்பாடம் செய்து 90-100 மதிப்பெண்கள் எடுத்தாலும், அது எதிர்கால வேலைச்சூழலுக்கு உதவாது என்பதுடன், அவர்கள் சிறு பிரச்னையைக்கூட பெரிய பிரச்னையாக நினைத்து கவலைப்படுவார்கள்.

    * 'நம் பிள்ளை குறைவான மதிப்பெண்கள் எடுத்தாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ சமூகத்தில் அவமானமாகிவிடும்' என்ற எண்ணம் வேண்டாம். இந்தச் சமூகம் நமக்கு சோறு போடப்போவதில்லை. ஆறுதல் கூறப்போவதில்லை. பல வருடம் பள்ளியில் படித்து ஒரு மாணவன் தோல்வி அடைந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியும், அரசும்தான் சரியாக செயல்படவில்லை என அர்த்தம். அதனால் அவர்கள்தான் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

    * அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை எழுத, பட்டம் பெற்றிருந்தால் போதும். எனவே, குழந்தைகளின் பள்ளி நாட்களில் மதிப்பெண் பந்தயத்தில் மட்டுமே குறியாக அவர்களை ஓடவைக்காமல், போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளுக்கு அவர்களை தயார்படுத்தலாம். உங்கள் பிள்ளைக்கு எதிர்கால ஆசை என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற படிப்பை படிக்க வையுங்கள்.

    * படிப்பு பாதிக்கப்படும் என, உறவினர்கள் திருமணம், திருவிழா என எந்த நிகழ்ச்சிகளுக்கும் பிள்ளைகளை அழைத்துச் செல்லாமல் இருக்கும் பழக்கத்தை மாற்றுங்கள். உறவினர், நண்பர்களைச் சந்திப்பதும், இரண்டு நாட்கள் அவர்களுடன் சந்தோஷமாகக் கழிப்பதும், படிப்பு தரும் மனச்சுமையில் இருந்து அவர்களை மீட்கும், மனவளம் தரும். தொடர்ந்து வரும் நாட்களில், ஃப்ரெஷ் மைண்டுடன் படிப்பார்கள். எப்போதும் புரிந்துகொள்ளாமல் படித்துக்கொண்டே இருப்பதால், மனப்பாடத்திறமை மட்டும்தான் அதிகமாகும்; கல்வி அறிவு வளராது. தினமும் குழந்தைகளை குறிப்பிட்ட நேரம் விளையாடவிடுங்கள்.

    • குறிப்பிட்ட ஒன்றை பற்றி ஆராய்ச்சி செய்ய, இதுபோன்ற தரவுகளே அடிப்படையாகின்றன.
    • 'டேட்டா சயின்ஸ்' படிப்பு பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோமா..?

    சமீபத்திய இளைஞர்களின் பேசுபொருளாக மாறியிருக்கும் 'டேட்டா சயின்ஸ்' படிப்பு பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோமா..?

    டேட்டா சயின்ஸ்

    டிஜிட்டல் உலகில், இணையதளம், சமூக வலைத்தளங்களில் உற்பத்தியாகும் ஒட்டுமொத்த தரவுகளைத் தொகுத்து, அவற்றை ஒருங்கிணைத்து அவற்றிலிருந்து பயன்படக்கூடிய தேவையான தரவுகளைப் பிரித்து குறிப்பிட்ட புதிய தரவுகளை எதிர்காலச் செயல்பாட்டுக்கு தொகுப்பது, தரவு அறிவியல் எனப்படுகிறது. அதாவது டேட்டா சயின்ஸ். 'டேட்டா சயின்ஸ்' என்பது எண், வெப்பநிலை, ஒலி-ஒளி, அழுத்தம், உயரம் முதலான அளவீடுகளாகவோ, சொற்களாகவோ, மற்ற குறிப்புகளாகவோ இருக்கலாம்.

    குறிப்பிட்ட ஒன்றை பற்றி ஆராய்ச்சி செய்ய, இதுபோன்ற தரவுகளே அடிப்படையாகின்றன. அதை சேகரிப்பதும், அதன்மூலம் பல பயனுள்ள ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதுவுமே 'டேட்டா சயின்ஸ்' துறையின் மிக முக்கிய பணி. ஆராய்பவர், டேட்டா சயின்டிஸ்ட் என அழைக்கப்படுகிறார். ஒரு வாரத்தில் பதிவாகியிருக்கும் கொரோனா தொற்றின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தடுத்த வாரங்களில் தொற்றுப் பரவலின் எண்ணிக்கையை கணிப்பது வரை என பல தளங்களில் விரியும் பயன்பாடு என இன்றைக்கு ஏறக்குறைய அனைத்து செயல்பாடுகளிலும் டேட்டா சயின்ஸின் தாக்கம் பிரதிபலிக்கிறது.

    யாரெல்லாம் படிக்கலாம்?

    எண்கள், கணக்குகளில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் டேட்டா சயின்ஸ் படிக்கலாம். 12 வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணினி அறிவியல் படித்தவர்கள், இளங்கலை படிப்புகளுக்கு தகுதியானவர்கள். அதேபோல இளங்கலை படிப்பில் கணிதம், புள்ளியியல், அறிவியல் பயின்ற மாணவர்கள், முதுகலை படிப்பாக டேட்டா சயின்ஸ் படிப்புகளை படிக்கலாம்.

    மற்ற படிப்புகளில் இருந்து சற்றே மாறுபட்ட இந்தத் துறையில், எண்ணற்ற அளவிலான தரவுகளைக் கையாள்வதற்கு மன ஆற்றலும் அவசியமாகிறது. எக்ஸெல் (Excel) குறித்த அறிவும் தேவை. ஆர் (R) ப்ரோகிராமிங், டாப்ளூ (Tableau), மைக்ரோசாப்ட் பி.ஐ. (BI), கூகுள் சார்ட்ஸ் (Charts), பைதன் (Python), சாஸ் (SAS) போன்ற மென்பொருள் குறித்த அறிவு இருப்பதும் அவசியமானது.

    வேலைவாய்ப்புகள்

    டேட்டா சயின்ஸ் படித்தவர்களுக்கு, டேட்டா சயின்டிஸ்ட், டேட்டா ஆர்க்கிடெக்ட், டேட்டா மைனிங் என்ஜினீயர், பிசினஸ் இன்டலிஜென்ஸ் அனாலிஸ்ட்... என ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. தமிழகம், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான வேலைவாய்ப்புகள் உள்ளதால், வரும் காலங்களில் மாணவர்களின் தவிர்க்கமுடியாத தேர்வாக டேட்டா சயின்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

    • காகிதக்கூழ் பிரிவில் கட்டணமில்லா தொழிற் கல்வி புதிய பட்டயப்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • விண்ணப்பிக்க அடுத்த மாதம் 11-ந்தேதி கடைசி நாள்

    கரூர், ஜூன்.28-

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் 5 மாணாக்கர்கள் தேர்வு செய்து, அவர்கள் திருச்சிராப்பள்ளி சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் காகிதக் கூழ் பிரிவில் மூன்றரை ஆண்டுகள் இலவச கல்வி பயில வழிவகை செய்யப்படுகிறது. மாணக்கர்களுக்கான கல்விக் கட்டணம், தேர்வுகட்டணம் ஆகியவை காகித நிறுவனத்தால் கல்லூரிக்கு செலுத்தப்படும்.

    இந்த கட்டணமில்லாக் கல்வித்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற, கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை, அலகு ஒன்றை சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, பு.தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் ந.புகழூர், புன்னம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை,

    அலகு இரண்டை சுற்றி அமைந்துள்ள மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி, சித்தாநத்தம் மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்து குறைந்தபட்சம் பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வில் முதன் முறையில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் தகுதியுடையவர்களாவர். 18 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் மொத்தம் 5 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    பயிற்சி பெற விருப்பமுள்ள மாணாக்கர்கள் விண்ணப்ப படிவங்களை தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், காகிதபுரம் அலகு-1 மற்றும் மொண்டிப்பட்டி அலகு இரண்டு ஆகிய அலுவலகங்களில் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் 11-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று மாலை 5.30 மணிக்குள் சேர்ப்பிக்குமாறு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

    ×