search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை"

    • ராஜபாளையம் அருகே கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இந்த முகாமை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி புத்தூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, கால்நடைகளை சிறப்பாக பராமரித்த பயனாளிகளுக்கு பரிசுக ளையும், சான்றிதழ்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக கால்நடை வளர்ச்சிக்கு எவ்வித திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

    தற்போது மு.க.ஸ்டா லின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஊசிகள், மருந்துகள் என அனைத்தும் கட்டணமில்லாமல் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறார்.

    மேலும் அனைத்து கிராமங்களிலும் கால்நடை மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    இந்த நிகழ்வில் கால்நடை உதவி இயக்குநர் ராஜேஸ்வரி, மருத்துவர் கோவிந்தசாமி மற்றும் சேகர், பயனாளிகள், பொதுமக்கள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இந்திய கால்நடை மருந்தியல் மற்றும் நற்செயல் சொசைட்டி சார்பில் 22-வது அகில இந்திய மருந்தியல் நச்சியல் துறை தேசிய கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது.
    • தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் இந்திய கால்நடை மருந்தியல் மற்றும் நற்செயல் சொசைட்டி சார்பில் 22-வது அகில இந்திய மருந்தியல் நச்சியல் துறை தேசிய கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது.

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் தலைமை தாங்கினார். நாமக்கல் கால்நடை மருத்து வக் கல்லூரி முதல்வர் செல்வராஜ் வரவேற்றார். இதில் உத்தர பிரதேச கால்நடை மருத்துவக் பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ வஸ்தவர, ராஜஸ்தான் பல்கலை துணை வேந்தர் சதீஷ் கே கர்க், ஐ.எஸ்.வி.பி.டி தலைவர் தாக்கர், கருத்தரங்க அமைப்புச் செயலாளர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கருத்தரங்கம் முடிவில், தமிழ்நாடு கால்நடை மருத்துவர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் செல்வகுமார் கூறியதாவது:-

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை மூலம் தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை பிரிவில் பி.வி.எஸ்.சி கால்நடை மருத்துவம் மற்றும் பி.டெக் தொழில்நுட்ப பிரிவில் பி.டெக் உணவு தொழில்நுட்பம், பி.டெக் பால்வளம், பி.டெக் கோழி வளர்ப்பு ஆகிய பாடப்பிரிவுகள் நடைபெற்று வருகிறது.

    தற்போது 2023-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளின் தரவரிசை பட்டியல் ஏற்கனவே கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

    கிராமப்புற மற்றும் 7.5 சதவீத அரசு ஒதுக்கீடுகள் வழங்கப்படும் இடங்கள் விரைவில் நிரப்பப்படும். பொது பிரிவு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை இந்த வாரத்தில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். 

    • பேராவூரணி பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல்.
    • பல குடும்பங்கள் கால்நடைகளை இழந்து வருமானமின்றி தவித்து வந்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்ற ஆண்டு வடகிழக்கு பருவ மழையால் பேராவூரணி பகுதியில் பல்வேறு இடங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கி கால்நடைகள் திடீரென இறந்து விட்டது.

    இதனால் பல குடும்பங்கள் கால்நடைகளை இழந்து வருமானமின்றி தவித்து வந்தனர். இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் உள்ள கால் நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    • மேலும் கால்நடைகளுக்கு தாது உப்புக்களும், சிறந்த கன்று பராமரிப்பவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
    • பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த முகாமை தொடங்கி வைக்கிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டாரம் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் நாளை ( வெள்ளிக்கிழமை ) சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த முகாமை தொடங்கி வைக்கிறார். இந்த முகாமில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை, கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி, ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் சிறப்பு மகப்பேறியியல் மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட உள்ளது.

    மேலும் கால்நடைகளுக்கு தாது உப்புக்களும், சிறந்த கன்று பராமரிப்பவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. எனவே இக்கிராம மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து முகாமில் பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏராளமான கால்நடைகள் வந்து வயல்களில் சுற்றித்திரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.
    • கால்நடைகளை பிடித்து கால்நடை பட்டியில் அடைக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    மேலும் நேரடி சம்பா விதைப்பு நடைபெறுகிறது. தற்சமயம், சாகுபடி நிலங்களில் ஏராளமான கால்நடைகள் வந்து வயல்களில் சுற்றித் திரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

    மேலும் நகர் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வியாபாரிகள் தங்கள் பொருட்களை வைக்கும் போது அதை தின்று சேதப்படுத்துகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, கால்நடைகளை பிடித்து கால்நடை பட்டியில் அடைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முன்னோடி விவசாயிகள், கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம்.
    • விருதுநகரில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னோடி விவசாயிகள், செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் தேசிய அளவில் சிறப்பாக செயல்பாட்டில் இருப்பவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்க ''ராஷ்ட்ரிய கோகுல் இயக்கம்'' மூலம் மத்திய அரசின் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    முதலாவதாக முன்னோடி விவசாயிகள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு 50 பசுவினம் மற்றும் 17 எருமை இனங்களில் ஒன்றினை பராமரித்து நல்ல முறையில் கால்நடை செல்வத்தை பெருக்கி சிறப்பாக பண்ணை தொழிலை மேற்கொள்ளும் விவசாயிக்கு தேசிய அளவில் விருது வழங்கப்பட இருக்கிறது.

    அடுத்ததாக கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல் பணியினை மேற்கொண்டு சிறப்பாக கிராமங்களில் பணிபுரிந்து அரசின் திட்டங்களில் பங்கேற்று மக்களுக்கு அதனை கொண்டு சென்ற விதத்தில் 90 நாட்கள் பயிற்சி பெற்ற செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.

    சிறப்பாக செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் குறைந்தது ஒரு நாளைக்கு 100 லிட்டர் பால் சேகரிப்புடன் 50 உறுப்பினர்கள் உள்ளடக்கியதோடு அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் செவ்வனே செயல்பட்டு கிராமப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும்படியாக இயங்கி வரும் சங்கங்களுக்கு தேசிய அளவில் விருது வழங்கப்பட இருக்கிறது.

    இந்த விருதின் பெயர் ''தேசிய கோபால் ரத்னா'' விருது ஆகும். இந்த விருது தேசிய பால் தினமான நவம்பர் 26 அன்று மத்திய அரசால் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.5 லட்சம், 2-வது பரிசாக ரூ. 3 லட்சம், 3-வது பரிசாக ரூ. 2 லட்சம் வழங்கப்பட இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் இணையதளத்தில் (https://awards.gov.in/Home/Awardpedia?MinistryId=DO23&OnGoingAwards=1& ptype=P https://awards.gov.in/Home/AwardLibrary) விண்ணப்பிக்க வேண்டும்.

    நாளை (10-ந் தேதி) விண்ணப்பிக்க இறுதி நாளாகும். இந்த விருது தொடர்பாக கூடுதல் விவரங்கள் தேவைப்படின் ராஜபாளையத்திலுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் விருதுநகரில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊராட்சி மன்றம் சார்பில் கால்நடை மருத்துவத்துறை பற்றிய கண்காட்சி முகாம் நடைபெற்றது.
    • குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல் போன்ற பணிகள் சிறப்பாக நடைபெற்றது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மன்றம் சார்பில் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் கால்நடை மருத்துவத்துறை பற்றிய கண்காட்சி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு மனோரா ரோட்டரி சங்க தலைவர சிவச்சந்திரன் தலைமை வகித்தார். முகாமை பட்டுக்கோட்டை ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல் தொடங்கி வைத்தார்.

    கால்நடைமருத்துக்கல்லூரி முதல்வர் டாக்டர் நர்மதா, கால்நடைத்துறை உதவி இயக்குநர் டாக்டர் சுமதி, ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கிடாசலம், சங்க முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியன், விவேகானந்தன், அண்ணாத்துரை மற்றும் உறுப்பினர்கள், கல்லூரி பேராசியர்கள் கலந்துகொண்டனர்.

    முகாம் ஏற்பாடுகளை அதிராம்பட்டினம் கால்நடை மருத்துவர் தெய்வ விருத்தம் செய்திருந்தார்.

    செயலாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார். முகாமில் குடற்புழு நீக்கம், சுண்டுவாத அறுவைச் சிகிச்சை, அல்ட்ரா ஸ்கேன் சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் போன்ற பணிகள் சிறப்பாக நடைபெற்றது. 1800 கால்நடைகள் பயன்பெற்றன.

    • திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழையே அதிக மழைப்பொழிவை தரும்.
    • ஆடி மாதத்தில் வறண்ட வானிலை காணப்படும்.

    திருப்பூர் :

    விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் கணிசமான வருமானம் ஈட்டி வருகின்றனர். மழை குறைவாக பெய்யும் காலங்களில் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு கால்நடை விவசாயிகள் பெரும் துயரத்தை அனுபவிக்கின்றனர். இந்த ஆண்டு கால்நடை விவசாயிகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழையே அதிக மழைப்பொழிவை தரும். ஆடி மாதத்தில் வறண்ட வானிலை காணப்படும். இதனால், புல்வெளிகள் காய்ந்து பசுந்தீவனங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்.ஆனால் இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததால் ஆடி மாதத்தில் நல்ல மழை பெய்தது. இது புல்வெளிகளை செழிப்படையச் செய்துள்ளது. கோரை, கொழுக்கட்டை, அருகு போன்ற புல் வகைகள் நன்கு வளர்ந்துள்ளது. தீவன பற்றாக்குறை நீங்கி உள்ளதால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பிளாஸ்டிக் தடை உத்தரவை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மேய்ச்சல் நிலங்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றன.

    பல்லடம் :

    அதிகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகள் அவற்றை உணவாக எடுத்து கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடை உத்தரவை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும்என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- பிளாஸ்டிக் தடை என்பது பெயருக்குத்தான் உள்ளது. எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் கேடு, நீர் வளம், நிலவளம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மேய்ச்சல் நிலங்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றன. விவசாயிகளின் உயிர்நாடியாகவும், குழந்தைகள், பெரியவர்களுக்கு பாலை வழங்கும் கால்நடைகள் பிளாஸ்டிக்கை உண்டு விடுகின்றன. இதனால் செரிமானமும் ஆகாமல், உணவு குழாயில் இருந்து வெளியே வர முடியாமலும் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகளின் வயிற்றிலேயே தங்கி விடுகின்றன.

    சிறிது சிறிதாக பிளாஸ்டிக் கழிவுகள் சேரும்போது மாடுகள் சாப்பிட முடியாமல் பட்டினி கிடந்து பரிதாபமாக உயிரை விடுகின்றன. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வாயில்லா ஜீவன்களான கால்நடைகளின் ஆயுள் குறைந்து அது சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ராகல்பாவி மற்றும் ஆர்.வேலூர் இணைப்பு சாலை வரை செல்வதற்கு நிலவியல் பாதை உள்ளதாக கூறப்படுகிறது.
    • விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அந்த இடத்தை அளக்காமல் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அடுத்துள்ள போடி பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுண்டக்கம்பாளையத்தில் இருந்து ராகல் பாவி மற்றும் ஆர். வேலூர் இணைப்பு சாலை வரை செல்வதற்கு நிலவியல் பாதை உள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் பாதையை அந்தப் பகுதியை சுற்றி உள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அருகில் உள்ளவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிகிறது.

    இதையடுத்து சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வலியுறுத்தலின் பேரில் அந்த இடத்தை அளப்பதற்கு வருவாய் துறையினர் போலீசாருடன் அங்கு சென்றபோது, அந்த பகுதியில் பட்டா இடத்தில் இருக்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அந்த இடத்தை அளக்காமல் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து அந்த இடத்தை நிலவியல் பாதையாக பயன்படுத்தி வந்த சுமார் 20 விவசாயிகள் மற்றும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தலைமையில் உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு ஆடு மாடுகள் உடன் வந்தனர். அவர்கள் அந்தப் பாதையை பயன்பாட்டிற்கு மீட்டு தரக்கோரி தாலுகா அலுவலக வளாகத்தில் தரர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் பிடித்திருந்தனர். ஆடு மாடுகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு போலீசார் குறிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார் கண்ணாமணி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழி வேல், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் ,ராஜ் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கனகராஜ், ஜெகதீசன், பாலதண்டபாணி மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இன்று ஆர். டி. ஓ. ஜஸ்வந்த் கண்ணன் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆடு மாடுகளுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்தில் கொண்டு வந்து விடப்பட்டன.
    • நகரில் சுற்றித்திரிந்த நாய்களை வாகனங்களில் பிடித்து மயிலாடுதுறை கால்நடை மருத்துவமனைக்கு கருத்தடை செய்ய கொண்டு சென்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிகின்ற நாய்களை பிடிக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன், சீர்காழி நகரில் சுற்றி தெரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தார்.

    அதன்படி முதல் கட்டமாக 50 -க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்தில் கொண்டு வந்து விடப்பட்டன. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக சீர்காழி நகரில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது. பப்ளிக் பார் அனிமல் அமைப்பினர் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கொண்ட குழுவினர் நகரில் சுற்றித்திரிந்த 40-க்கும் மேற்பட்ட நாய்களை வாகனங்களில் பிடித்து மயிலாடுதுறை கால்நடை மருத்துவமனைக்கு கருத்தடை செய்ய கொண்டு சென்றனர். கருத்தடைக்கு பின்னர் மீண்டும் அந்த நாய்கள் சீர்காழி நகரப் பகுதியில் பிடிக்கப்பட்ட இடத்தில் விடப்படும் என தெரிவித்துள்ளனர்.

    • எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் கால்நடை சந்தை இயங்கி வருகிறது.
    • குறிப்பாக இறைச்சிக்கான ஆடுகள் மற்றும் கோழிகள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் கால்நடை சந்தை இயங்கி வருகிறது. வாரம் தோறும் சனிக்கிழமை அன்று அதிகாலை முதலே நடைபெறும் இச்சந்தையில் ஆடுகள், கோழிகள்,சண்டை சேவல், பந்தயப்புறா, பசு மாடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கான காளை மாடுகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவது வழக்கம்.

    ஆடிப்பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இச்சந்தையில் வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கையில் கால்நடை விற்பனையாகி வருகிறது. குறிப்பாக இறைச்சிக்கான ஆடுகள் மற்றும் கோழிகள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. மேச்சேரி, பென்னாகரம்,தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்தும் அதிகப்படியான கால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் கால்நடைகளை மொத்தமான கொள்முதல் செய்தனர். ஆடு மற்றும் கோழிகளின் விலை வழக்கத்தை விட சற்று கூடுதலாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×