search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226238"

    • போலீஸ் டி.எஸ்.பி. எச்சரிக்கை
    • பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டம்

    கன்னியாகுமரி:

    ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

    காதலர் தினத்தை யொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இப்போது முதலே காதல் ஜோடிகள் குவியத் தொடங்கி விட்டனர். கன்னியாகுமரிக்கும் காதல் ஜோடிகள் வந்து இருந்தனர். இதைத் தொடர்ந்து காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரியில் காதலர் தினத்தையொட்டி பலத்த போலீஸ் பாது காப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரைப் பகுதி, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, வட்டக்கோட்டை பீச், சொத்த விளை பீச், மருந்து வாழ் மலை போன்ற சுற்றுலாத் தலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும்.

    இதுதவிர சுற்றுலாத் தலங்களில் போலீசாரும் வாகனம் மூலம் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். குறிப்பாக கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் காதல் ஜோடியினர் அத்துமீறி நடந்து கொள்கிறார்களா? என்று போலீசார் தீவிரமாக கண்காணிப்பார்கள். அப்படி அத்துமீறி நடந்து கொள்ளும் காதல் ஜோடிகள் போலீசாரால் எச்சரிக்கப்படுவார்கள். அதையும் மீறி நடந்து கொள்ளும் காதல் ஜோடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காதலர் தினத்தன்று கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் பைக் ரேஸ் செல்லும் காதல் ஜோடியினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கபடும்.

    இவ்வறு அவர் கூறினார்

    • கடற்கரையில் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கே போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர்.
    • உடைந்த மது பாட்டில்கள் கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் கால்களை பதம் பார்த்து விடுகிறது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் இயற்கை துறைமுக கடற்கரை பகுதிக்கு மாலை வேளை களில் பொதுமக்கள் பொழுது போக்க மற்றும் காற்று வாங்க வந்து செல்வர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் அனுமதியின்றி இங்கு மது விற்பனை செய்யப்ப டுவதாக குளச்சல் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. மேலும் கடற்கரையில் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கே போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர். உடைந்த மது பாட்டில்கள் கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் கால்களை பதம் பார்த்து விடுகிறது.

    எனவே அங்கு மது அருந்துபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் குளச்சல் போலீஸ் நிலையம் சார்பில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, புனித காணிக்கை அன்னை திருத்தல செயலா ளர் வால்டர், இணை செயலாளர் ரெக்சன், பொரு ளாளர் ஜெயசீலன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசின் “புனீத் சாகர் அபியன்” திட்டத்தின் கீழ் நடந்தது
    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் கடற்கரை பகுதியை குப்பைகள் இல்லாமல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்காக மத்திய அரசு "புனீத் சாகர் அபியன்" என்னும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    கடற்கரையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை சேகரித்து கடற்கரையை அழகான பாதுகாப்பான சுத்தமான இடமாக மாற்று வதுடன் கடற்கரை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி நாகர்கோவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த என்.சி.சி. மாணவ- மாணவிகள் கன்னியா குமரியில் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் தூய்மை பணி யில் ஈடுபட்டனர்.

    இந்தப் பணியை கன்னி யாகுமரி சிறப்பு நிலை பேரூ ராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச் சிக்கு 11-வது தமிழ்நாடு பெட்டாலியன் என்.சி.சி. அதிகாரி கேப்டன் கே.ஆர். அஜீந்திரநாத் தலை மை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் தாமஸ் தி.மு.க. நிர்வாகிகள்அன்பழகன், ரூபின், ஷியாம்தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கடற்கரை தூய் மை பணியில் 70-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவ-மாண விகள் கலந்து கொண்டு கடற்கரையில் கிடந்த குப்பைகள் மற்றும் கழிவு களை அப்புறப்படுத்தி னார்கள்.

    முன்னதாகபொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணி களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காந்தி மண்டபம் முன்பு இருந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி த்துறை கடற்கரைவரை என்.சி.சி. மாணவ-மாண விகள் கடற்கரையை தூய்மை யாக வைப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்தபடி விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள்.

    • வேதாரண்யம் கடலோர பகுதியில் சீனா நாட்டை இளைஞர்கள் 4 பேர் வருவதாக மத்திய, மாநில உளவு துறை எச்சரிக்கை விடுத்தனர்.
    • வேதாரண்யம் கடற்கரை முழுவதும் விடிய, விடிய போலீசார் ரோந்து பணியாற்றினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கடலோர பகுதியில் சீனா நாட்டை இளைஞர்கள் 4 பேர் வருவதாக மத்திய, மாநில உளவு துறை எச்சரிக்கையை அடுத்து வேதாரண்யம் ஆறுகாட்டு துறை,கோடியக்கரை, பெரியகுத்தகை, புஷ்பவனம், வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் வேதாரண்யம் டிஎஸ்பி முருகவேல் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர் மத்திய மாநில அரசுஉளவுத்துறை சீனா நாட்டை சேர்ந்த நான்கு போர் தமிழ் இளைஞர் படகை ஒட்டி வர அதில் தமிழகத்தை நோக்கி வருகிறார்கள.

    அதனை கண்காணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்திருந்தது.

    இதையொட்டி வேதாரண்யம் கடற்கரை முழுவதும் விடிய, விடிய ரோந்து பணியை வேதாரண்யம் போலிசார், கடலோர காவல் குழுமபோலீசார் சுங்கத்துறையினர் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் என்ன விடிய விடிய கடற்கரை பகுதிகளிலும், மற்றும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

    இச்சோதனையால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது

    • புதிதாக அமைக்கப்படும் மீன் மார்க்கெட்டில் 1,240 சதுர மீட்டரில் மீன் கடைகளும், 164 சதுர மீட்டரில் மீன் கொட்டும் இடங்களும் அமைகிறது.
    • சிங்கார சென்னை திட்டத்தின்கீழ் ரூ.8.5 கோடி செலவில் அமையும் இந்த சந்தையில் 50 சதவீத மராமத்து பணிகள் நிறைவடைந்து உள்ளன.

    சென்னை:

    சென்னை கலங்கரை விளக்கம்-பட்டினப்பாக்கத்தை இணைக்கும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் 2 ஏக்கர் பரப்பளவில் மீன் மார்க்கெட் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங்பேடி கூறியதாவது:-

    புதிதாக அமைக்கப்படும் மீன் மார்க்கெட்டில் உள்ள 366 கடைகள் இழுவிசை தன்மை கொண்ட கூரையுடன் செயல்படும். 1,240 சதுர மீட்டரில் மீன் கடைகளும், 164 சதுர மீட்டரில் மீன் கொட்டும் இடங்களும் அமைகிறது.

    இதனால் காற்றோட்டத்துடன் காணப்படும். இங்கு வாகன நிறுத்தும் வசதி மேம்படுத்தப்படும். ஒரே நேரத்தில் 155 மோட்டார் சைக்கிள்கள், 62 கார்களையும் நிறுத்த முடியும். பெண்களுக்காக 13 கழிப்பறைகளும், ஆண்களுக்காக 7 கழிப்பறைகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

    படகுகள் வந்ததும் இந்த மீன் மார்க்கெட்டில் வியாபாரம் தொடங்கிவிடும். மேலும் இரவு நேரத்தில் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உயர் கோபுர மின்விளக்கு ஒன்றும் அமைக்கப்படும்.

    மேலும் மழைநீர் கட்டமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவையும் அமைக்கப்படும்.

    சிங்கார சென்னை திட்டத்தின்கீழ் ரூ.8.5 கோடி செலவில் அமையும் இந்த சந்தையில் 50 சதவீத மராமத்து பணிகள் நிறைவடைந்து உள்ளன. மீதமுள்ள பணிகள் அடுத்த 2 மாதங்களுக்குள் முடிவடை யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் புதிய சந்தை பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • கோடியக்கரை கடற்கரையில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மீன் வாங்க பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தனர்.
    • கோடியக்கரை மீனவர்கள், பாம்பன், காசிமேடு பகுதியில் இருந்து சுமார் 5 டன் வாலைமீன்களை இறக்குமதி செய்து செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதல் கடற்கரையில் குவிந்தனர்.

    இதனால் வழக்கத்திற்கு மாறாக மீன் விலை இரு மடங்காக உயர்ந்தது.

    இருப்பினும் இன்று அசைவம் சமைத்து உண்ண வேண்டும் என்பதால் விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காலாமீன், ஷீலாமீன், திருக்கைமீன், வாலைமீன், வாவல் மீன், நண்டு, இறால் உள்ளிட்டைவைகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    பொதுமக்கள் தேவை அறிந்து கோடியக்கரை மீனவர்கள் பாம்பன் மற்றும் காசிமேடு பகுதியில் இருந்து சுமார் 5 டன் வாலைமீன்களை இறக்குமதி செய்து கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.

    • 600 கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சிகளை கடற்கரை, பூங்காக்களில் கண்டு களிக்கலாம்.
    • நாளையும், நாளை மறுநாளும் தீவுத்திடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துகிறார்.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சியில் கடந்த 2007-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரை இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழா நாளை (வெள்ளிக் கிழமை) சென்னை தீவுத் திடலில் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னையில் உள்ள 16 இடங்களில் 'நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்படுகிறது. 600 கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிகளை கடற்கரை, பூங்காக்களில் கண்டுகளிக்கலாம்.

    தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு திடல், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, ராகேஸ்வர ராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு திடல், அண்ணாநகர் டவர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, திருவான்மியூர் கடற்கரை சாலை, சைதாப்பேட்டை அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி விளையாட்டு திடல், தி.நகர் நடேசன் பூங்கா, எலியட்ஸ் கடற்கரை, மே தின பூங்கா, எழும்பூர் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படுகிறது. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    நாளையும், நாளை மறுநாளும் தீவுத்திடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துகிறார்.

    இந்த நம்ம ஊரு திருவிழாவில் கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம் பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    • தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
    • சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற்பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஆங்கில புத்தாண்டு இன்று இரவு 12 மணிக்கு பிறக்கிறது. 2023ம் ஆண்டை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

    தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற்பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை, அண்ணா சாலையில் மாலை முதலே வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • குளச்சல் கடற்கரை பகுதியிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. வட்டகோட்டை, சங்குத்துறை பீச்,கணபதிபுரம்பீச் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது
    • சொத்தவிளை கடற்கரையில் பொதுமக்களை படகுகளில் நடுக்கடலில் சுற்றுலா அழைத்துச் சென்றது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரிக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் ஏராளமானோர் வந்து கடற்கரையில் குவிந்தி ருந்தனர். மாலையிலும் கட்டுக் கடங்காத கூட்டம் இருந்தது.

    சூரியன் மறைவதை பார்க்க சுற்றுலா பயணி கள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குளச்சல் கடற்கரை பகுதியிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. வட்டகோட்டை, சங்குத்துறை பீச்,கணபதிபுரம்பீச் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. திற்பரப்பு அருவியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    சொத்தவிளை கடற்கரை யிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்தோடு அங்கு வந்து இருந்தனர். கடற்கரையில் உள்ள மணலில் குழந்தை கள் விளையாடி மகிழ்ந்த னர். கடலில் ராட்சத அலை எழும்பியதையும் பொருட் படுத்தாமல் எந்த அச்சமும் இன்றி பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இது ஒரு புறம் இருக்க சொத்தவிளை கடற்கரையில் பொதுமக்களை படகுகளில் நடுக்கடலில் சுற்றுலா அழைத்துச் சென்றது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.குமரி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. இதனால் மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு செல்லவில்லை.

    இந்தநிலையில் சொத்த விளை கடற்கரையில் இருந்து 3 படகுகளில் பொது மக்களை சுற்றுலா வாக நடுக்கடலுக்கு அழைத்துச் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    இந்தப் படகில் பொது மக்கள் குடும்பத்தோடு பயணம் செய்தனர். ஆபத்தான முறையில் படகில் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி அதிகமான பொது மக்களை ஏற்றி சென்றனர்.அந்தி சாயும் பொழுது வரை பொதுமக்களை கடலுக்குள் அழைத்து சென்றது வியப்பை ஏற்படுத்தியது.

    சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலை யில் சொத்தவிளை கடற்கரையில் எந்த ஒரு போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு வரவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார்கள்.

    • புயல் கரையை கடந்த போது அதனுடைய தாக்கத்தில் சின்னங்குடி மீனவர்களின் 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தது.
    • கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கைகள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், மருதம்பள்ளம்‌ ஊராட்சி, சின்னங்குடி மீனவ கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் மாண்டஸ் புயல் சென்னையில் கரையை கடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சின்னங்குடி கிராமம், மீனவர்கள் படகுகளை கரைகளில் வரிசையாக அடுக்கி வைத்து பாதுகாத்து வந்தனர்.

    புயல் கரையை கடந்த போது அதனுடைய தாக்கத்தில் சின்னங்குடி மீனவர்களின் 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தது.

    அது மட்டுமல்லாமல் மழைக்காலங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும்போது கடல்நீர் வீட்டுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதற்கு தடுப்பு சுவர் அல்லது கருங்கல் கொட்டி தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கைகள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற நிலைகளில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு சின்னங்குடி கடற்கரையில் தடுப்புச் சுவர் அல்லது கற்களை கொண்டு தடுப்பு நடவடிக்கை எடுக்குமாறும், சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்கவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடல் சீற்றம் அதிகமாகி 15 அடிக்கும் மேல் அலை எழும்பி கிராமத்துக்குள் கடல்நீர் புகுந்தது.
    • கடற்கரையில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள கடைக்கோடி கிராமமான சந்திரபாடியில் 2500 -க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    மீன்பிடித்தொழிலை மட்டுமே நம்பியுள்ள இக்கிராமத்தில் மழை வெள்ளம், புயல் ஏற்படும் போதும் கடல் சீற்றமாக காணப்படும் காலங்களில் கடல்நீர் உட்புகுந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகமாகி 15 அடிக்கும் மேல் அலை எழும்பி கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள தரங்கம்பாடியில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதால், தங்கள் பகுதியில்கடல் சீற்றத்தி ன்போது கடல் நீர் உட்புகுந்து பாதிக்கப்படுவதாகவும் சந்திரபாடி கடற்கரையில் கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

    எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து முகத்துவாரத்தை தூர்வாரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை
    • கல்லூரிக்கு வருகை குறைவு காரணமாக தேர்வு எழுதவில்லை எனப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மேடவிளாகம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், கல்லூரியில் முதுகலை பயின்று வந்தார்.

    அவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை உறவினருடன், பொழியூர் கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் உறவினரின் பார்வையில் இருந்து திடீரென மாயமாகி விட்டார்.

    மாணவியின் கைப்பை மற்றும் காலணிகள் கடற்கரையிலேயே கிடந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் பொழியூர் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியின் வீட்டில் சோதனை செய்த போது, தற்கொலை செய்து கொள்ள மாணவி முடி வெடுத்ததாக எழுதப்பட்ட கடிதம் கிடைத்தது.

    இதனால் மாணவி தற்கொலை செய்திருக்க லாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மரைன் போலீ சாரும் கடற்கரை பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர். இதற்கிடையில் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ேபாலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது, சந்தேகம் அளிக்கும் வகையில் பர்தா அணிந்த ஒருவர் ஆட்டோ வில் ஏறிச் செல்வது தெரிய வந்தது. அது மாணவி யாக இருக்கலாமா? என்ற சந்தே கத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட ஆட்டோ டிரை வரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது பர்தா அணிந்து ஆட்டோவில் ஏறியவர், களியக்காவிளையில் உள்ள ஒரு பேக்கரியில் 'கூகுள் பே' செய்து பணம் பெற்றார் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 'கூகுள் பே' பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து, போலீசார் விசாரணை தொடங்கினர்.

    இதில் தற்போது அந்த செல்போன் சிக்னல் மும்பையில் இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் மாணவி மும்பையில் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்ற னர். இதனை தொடர்ந்து பொழியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிகுமார் தலைமையில் போலீசார் மும்பை சென்றுள்ளனர்.

    மாணவி மும்பை சென்றது ஏன்? அவர் தானாக சென்றாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை தொடங்கினர். அப்போது மாணவி, கல்லூரிக்கு வருகை குறைவு காரணமாக தேர்வு எழுத வில்லை என்பதும் அதனால் அவர் ஊரை விட்டு சென்றிருக்க லாம் என்ற தகவலும் கிடைத்து உள்ளது.

    இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். மும்பை சென்ற போலீசார், மாணவியுடன் திரும்பினால் தான், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

    ×