search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்மாற்றி"

    • செம்பு கம்பியின் மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது.
    • மின்மாற்றி உடைக்கப்பட்டு அதில் இருந்த செம்புக்கம்பி திருடு போனது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மரக்காவலசை கிராமத்தில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையில் இணையும் காரங்குடா செல்லும் சாலையின் இடதுபுறத்தில் சுடுகாடு உள்ளது.

    இதன் அருகே விவசாய நிலங்கள், தென்னந்தோப்புகள் உள்ளன.

    இப்பகுதியில், விவசாயிகளின் மின்மோட்டார்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு மின் வாரியம் சார்பில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் சம்பவதன்று அதிகாலை இப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது.

    இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, மின்மாற்றி உடைக்கப்பட்டு அதில் இருந்த செம்புக்கம்பி (காயில்) திருட்டுப்போனது தெரியவந்தது.

    இதன்மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது.

    இது குறித்து நாடியம் உதவி மின் பொறியாளர் சிவசங்கர் சேதுபாவா சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதன்பேரில் போலீசார் மின்மாற்றியில் செம்புக்கம்பி களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • மின்மாற்றி பழுதடைந்தால் அதனை மாற்றி தருமாறு விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
    • அதிகாரிகள் இதுவரை டிரான்ஸ்பார்மர் வெடித்த தாக தங்களுக்கு தகவல் இல்லை என்று கூறு கிறார்கள்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணப்பாக்கம் கிராமத்தில் உள்ள மின்மாற்றி மூலமாக 50-க்கும் மேற்பட்ட விவ சாயிகள் மின்மோட்டார் களுக்கு மின்சாரம் செல்கிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மின்மாற்றி பழுத டைந்தது. இதையடுத்து மின்மாற்றி பழுதடைந்தால் அதனை மாற்றி தருமாறு விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். 2மாத காலமாகி யும் மின்மாற்றி சீரமைக்கப் படாததால் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருக்கும் கரும்பு, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதாக விவசாயி கள் வேதனை தெரி விக்கின்றனர். பழுத டைந்த மின்மாற்றியை சீர மைத்து, கருகி வரும் பயிர்களை காப்பாற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பது பணப்பாக்கம் கிராம விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    இதுகுறித்து விவசாயி சேஷாயிலு கூறியதாவது:-. ஒன்றரை ஏக்கர் நிலம் வைத்திருக்கிறேன்.தனது நிலத்தின் மின்மோட்டா ருக்கு மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆகியும் புதிய டிரான்ஸ் பார்மர் வைக்கப்படாததால் பயிர்கள் காய்ந்து கருகி உள்ளது இதே மின் டிரான்ஸ்பார்மரில் இருந்து 2 செங்கல் சூளைக்கு மின்சாரம் சென்று கொண்டிருந்தது. தற்போது அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படாமல் வேறு டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டு விவசாயிகளை நிற்கதியில் விட்டு விட்டனர். பண்ருட்டி மின்துறை அதிகாரிகளோ சீனியாரிட்டி அடிப்படை யில் தான் டிரான்ஸ்பார்மர் வரும் என்று சொன்னார்கள். சென்னை மின்னக தொலைபேசியில் புகார் செய்த போது கடலூரில் இருந்து தொடர்புக்கு வந்த அதிகாரிகள் இதுவரை டிரான்ஸ்பார்மர் வெடித்த தாக தங்களுக்கு தகவல் இல்லை என்று கூறு கிறார்கள். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

    • 2 மின்மாற்றியில் ஒன்று கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு பழுதாகி செயல்படாமல் உள்ளது.
    • மாற்று லைன் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தில் மெயின் ரோடு பகுதியில் 200 கேவிஏ மின் திறன் கொண்ட 2 மின் மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி மூலம் 20-க்கும் மேற்பட்ட விவசாய பம்பு செட்டுகள் மூலம் விவசாய பயிர்களுக்கு மின்சாரம் செல்கின்றது. மேலும் யாதவர் வீதி, வாணியர் வீதி, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் மின்சாரம் செல்கின்றது.

    இந்த 2 மின்மாற்றியில் ஒன்று கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு பழுதாகி செயல்படாமல் உள்ளது. இன்று வரை இந்த மின் மாற்றியை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யாத தால் விவசாயிகள், பொது மக்கள் மின்சாரம் பற்றாக் குறையால் அவதிப்பட்டு வருகின்றனர். மாற்று லைன் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் மின் விளக்கு, மின்விசிறி, வீட்டு உப யோகப் பொருட்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். மின்மாற்றி யை சரி செய்வ தற்கு அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கீரனூர் அருகே மின்மாற்றி சீரமைக்கபட்டது
    • கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    கீரனூர்,

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கீரனூர்அருகே உள்ள குளத்தூர் கடை வீதியில் உள்ள மின்மாற்றியில் இடி விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிராமம் முழுவதும் இருளில்் மூழ்கியது. இதையடுத்து உடனடியாக கீரனூர் கோட்ட மின்வாரிய ஊழியர்கள் மாற்று ஏற்பாடுகள் செய்து மின்சப்ளை செய்தனர். மேலும் இடி விழுந்து பழுதான மின்மாற்றியை ஊழியர்கள் சீரமைத்து முழுமையாக மின்சாரம் கிடைக்க செய்தனர்.

    • மின்மாற்றி பயன்பாட்டை கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.
    • உதவி பொறியாளர் சுகவனம் , போர் மேன் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி உத்தரவிட்டார்

    சேலம்:

    சேலம் தெற்கு மின் கோட்டம் வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் கடந்த 4 மாதமாக உதவி பொறியாளராக பணிபுரிந்தவர் சுகவனம் (வயது 52). இவர் வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் உட்பட்ட வெட்டுக்காட்டில் ஏற்கனவே புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இழுத்தடித்து வந்ததாக புகார் இருந்தது.

    இது தொடர்பான புகாருக்கு இவருக்கு முன் பணியில் இருந்த உதவி பொறியாளர் பவ்யா மீது குற்றம் சாட்டி காலம் கடத்தி வந்தார் . கடந்த 23-ந் தேதி நடந்த குறைதீர் கூட்டத்தில் இனியும் தாமதிக்காமல் மின்மாற்றி பயன்பாட்டை கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.

    இதை அடுத்து பணியை விரைந்து முடிக்க ஆட்டையாம்பட்டி உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் பிரேமாவுக்கு உத்தரவிடப்பட்டது. அவரது நடவடிக்கைக்கும் கீழ்படியாமல் பணியை நிறைவு செய்யவும் ஒத்துழைக்காமல் சுகவனம் மறுத்துவிட்டார். இதனால் இதர பிரிவு உதவி பொறியாளரை வைத்து மின்மாற்றி பணியை நிறைவு செய்து பயன்பாட்டு கொண்டுவரப்பட்டது .

    இதன் அறிக்கை சேலம் மின் வட்டம் மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்பப்பட்டது. இதை அடுத்து உதவி பொறியாளர் சுகவனம் , போர் மேன் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி உத்தரவிட்டார்.

    • 30-க்கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
    • தண்ணீர் பாய்ச்ச முடியாமல் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் மின் மாற்றி அமைக்கப்பட்டி ருந்தது. இந்த மின்மாற்றியில் இருந்து சூளாங்குறிச்சி, பல்லகச்சேரி ஆகிய பகுதியைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது. நேற்று மின் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் மாற்றி கீழே கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் மின்கம்பத்தில் இருந்து மின் மாற்றியை கீழே தள்ளியதில் அதிலிருந்த சுமார் 200 லிட்டர் ஆயில் கீழே கொட்டி வீணாகியது. தொடர்ந்து மின் மாற்றியை கழற்றி அதனுள் இருந்த சுமார் 625 கிலோ தாமிர கம்பிகளை திருடி சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து தியாகதுருகம் மின்சார வாரிய அதிகாரி ஒருவர் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகை யில், மர்ம நபர்கள் மின் மாற்றியில் இருந்த தாமிர கம்பிகளை திருடி சென்ற தால் மின் மோட்டார் களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் மின்மாற்றியை சீரமைக்கும் வரை அருகில் உள்ள மின் மாற்றிகளுக்கு விவசாயமின் இணைப்பை பிரித்து வழங்க நடவடிக்கை என வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • கறம்பக்குடி பேரூராட்சியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது
    • அரசு அலுவலகங்கள் மற்றும் சுகாதார நிலையத்தில் மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி பத்தாவது வார்டு உள்ளடக்கிய பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்தப் பகுதியில் தான் அரசு மருத்துவமனை காவல் நிலையம், துவக்கப்பள்ளி, 300க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் மசூதி ஆகியவை உள்ளன. இங்கு அரசு அலுவலகங்கள் மற்றும் சுகாதார நிலையத்தில் மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதனை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார வாரியம் போர்க்கால அடிப்படையில் புதிய மின்மாற்றியை அமைத்தனர். நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவரும் நகர தி.மு.க. செயலாளருமான முருகேசன் தலைமை தாங்கினார். இதில் ஆத்மா கமிட்டி சேர்மன் முத்துகிருஷ்ணன், பத்தாவது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா தேவி, உதவி மின் பொறியாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மேலும் பேரூராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    • தர்காவை சுற்றியுள்ள மின்மாற்றியை அகற்றி தரைவழி மின் கேபிள்கள் பதிக்க வேண்டும்.
    • விரைவில் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு தினமும் ஆயிரகணக்கானோர் வருகின்றனர்.இந்த தர்காவை சுற்றியுள்ள மின்மாற்றியை அகற்றி தரைவழி மின் கேபிள் பதிப்பதற்காக பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன,

    இந்த நிலையில் அதன் சாத்தியகூறுகளை கண்டறிய ஷாநவாஸ் எம்.எல்.ஏ. நாகூர் தர்கா வருகை புரிந்து அந்த பகுதிகளை பார்வையிட்டார்.

    அவருடன் நாகை நகராட்சி துணை தலைவர் செந்தில்குமார், தமிழக அரசு அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் முஹம்மது பைசல், நாகூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் சாஹாமாலிம் மற்றும் நாகூர் தர்கா பிரசிடன்டு கலீபா சாஹிப் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆய்வால் விரைவில் தர்காவை சுற்றி தரைவழி மின் கேபிள் பணி தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

    • பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றனர்
    • கறம்பக்குடி ஒன்றியத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் செங்கமேடு ஊராட்சி கண்ணுத்தோப்பு மற்றும் திருப்பக் கோவிலில் உள்ள டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதடைவதால் இப்பகுதியில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.இது குறித்து கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரையிடம் அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின்படி எம்.எல்.ஏ., மின்சாரத்துரை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி அப்பகுயில் நிறுவப்பட்ட புதிய மின்மாற்றிகளை வைத்து மக்கள் பயன்பாட்டிற்காக அவர் தொடங்கி வைத்தார்.மேலும் இருங்களன் விடுதி மற்றும் ராகியன்விடுதியில் பழுதான நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்களை பார்வையிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடங்களை கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதியினை ஒதுக்கி கட்டிடத்தை கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளரும் ஆத்மா கமிட்டி சேர்மனுமான முத்துகிருஷ்ணன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வெற்றி வேந்தன், சமூக ஆர்வலரும் ஆசிரியருமான அப்பு வடக்கு ஒன்றிய கம்யூனிஸ்ட் செயலாளர் வீரமுத்து, அன்பழகன், பொன்னுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




    • மின்மாற்றி கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது.
    • சேதமடைந்த மின்மாற்றி கம்பம் அகற்றப்பட்டு புதிதாக மின் கம்பம் நட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே, குன்னம் ஊராட்சி, பெரம்பூர் பாப்பாகுளம் பகுதியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள மின்மாற்றி கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த மின்கம்பத்தை புதிதாக மாற்றி தர வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி செல்வகுமார், மின்சார வாரியத்திற்கு கோரிக்கை வைத்தார்.

    இதையடுத்து மின்சார வாரியம் சார்பில் சேதம் அடைந்த மின்மாற்றி கம்பம் அகற்றப்பட்டு புதிதாக மின் கம்பம் நட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில்ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி செல்வகுமார் மின்வாரிய உதவி மின் பொறியாளர் (சீர்காழி மேற்கு) சுமத்திரா, ஊர் பொதுமக்கள் எலக்ட்ரீசியன் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
    • மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    கோத்தகிரி

    கோத்தகிரி அருகே அரவேனு பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் நடைபாதை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலையில் நடப்பதற்கு இடையூறாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தவறி விழுந்து காயமடையும் அபாயம் நிலவுகிறது. இது மட்டுமின்றி பள்ளி கட்டிடத்தின் முன் பகுதியில் மின்மாற்றி ஒன்று உள்ளது. ஆனால் இதற்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்படவில்லை. எனவே மழைக்காலங்களில் அதனருகில் விளையாடும் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளிக்கு செல்லும் சாலையை புதுப்பிக்க வேண்டும், குடிநீர் குழாய்களை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும், மின்மாற்றியை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிதாக 2 மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
    • முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகளை பொதும க்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நாட்டார்மங்கலம் மற்றும் வடகரை ஊராட்சி திருப்பனையூர் ஆகிய பகுதிகளில் மின் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக 2 மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கு திருமருகல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். திருமருகல் நாகை கோட்ட பொறியாளர் சேகர், திருமருகல் உதவி மின் பொறியாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் எரவாஞ்சேரி ரஜினிதேவி பாலதண்டாயுதம், வடகரை மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் மற்றும் மின் ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    ×