search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாகுபடி"

    • குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து விதைகள், உரங்களை வழங்கியது.
    • குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் எதிர்வரும் பருவநிலை மாற்றங்களால் ஏற்பட போகும் நிலைமையை எண்ணி கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    பூதலூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது. இதனால் வேளாண் துறையால் நிர்ணயிக்கப்பட்ட குறுவை சாகுபடி இலக்கை தாண்டி ஐந்தரை லட்சம் ஏக்கர் பரப்பில் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து விதைகள், உரங்களை வழங்கியது.

    தற்போது அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் நடவு செய்யப்பட்ட குறுவை இளம் பயிர்களில் இருந்து வளர்ந்த பயிர்கள் வரை பாதிப்படைய கூடும் என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    அதே சமயத்தில் டெல்டா மாவட்டங்களில் நிலவும் கடுமையான உரத்தட்டுப்பாடு காரணமாக விளைச்சல் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் பயிர் இன்சூரன்ஸ் திட்டம் விவசாயிகளுக்கு இழப்பை ஓரளவுக்கு ஈடு செய்யும் திட்டமாக அமைந்திருந்தது. கடந்த ஆண்டு குறுவைக்கு பயிர் இன்சூரன்ஸ் திட்டம் தமிழகத்தில் அமுல்படுத்தப்படவில்லை. இந்த ஆண்டு இந்த பருவத்திற்கான பயிர் இன்சூரன்ஸ் திட்டம் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.

    ஆனால் காலக்கெடு முடிவடைந்த நிலையிலும் எந்த அறிவிப்பும் வராததால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் எதிர்வரும் பருவநிலை மாற்றங்களால் ஏற்பட போகும் நிலைமையை எண்ணி கவலையில் ஆழ்ந்துள்ளனர். தமிழக அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு விவசா–யிகளை காப்பாற்றும் நோக்கில் குறுவை சாகு–படிக்கான புதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    • விசேஷ நாட்களில் வெண்டைக்கு விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
    • கிணற்றுப்பாசனத்துக்கு சீசனை திட்டமிட்டு இந்த சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

    குடிமங்கலம் :

    வெண்டைக்கு சந்தையில் நிலையான விலை கிடைத்து வருகிறது. விசேஷ நாட்களில், விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    உடுமலை கண்ணமநாயக்கனூர், கணக்கம்பாளையம், ஆண்டியகவுண்டனூர், குட்டியகவுண்டனூர்,பெரிசனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெண்டை பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. கிணற்றுப்பாசனத்துக்கு சீசனை திட்டமிட்டு இந்த சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். அவ்வகையில், ஆடிப்பட்ட சாகுபடியில் வெண்டைக்காய் அறுவடை துவங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி உடுமலை உழவர் சந்தையில் வெண்டை கிலோ 18-24 ரூபாய் வரை விலை கிடைத்தது.விவசாயிகள் கூறுகையில், பண்டிகை மற்றும் முகூர்த்த சீசனில் வெண்டைக்கு நல்ல விலை கிடைக்கும். வரும் ஆவணி மாதத்தில் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.

    ஏக்கருக்கு 12 டன் வரை மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காய் பறிப்புக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை என்றனர்.

    • வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மகசூலை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
    • முயற்சி வெற்றி பெற்றால் விவசாயிகள் கூடுதல் மகசூல் உடன் அதிக லாபத்தை ஈட்ட முடியும்.

    பல்லடம் :

    பல்லடம் அடுத்த கேத்தனூரை சேர்ந்தவர் பழனிசாமி, (வயது 82). இயற்கை விவசாயி. காய்கறிகள் மட்டுமன்றி, கொடி பந்தல் முறையில் விவசாயம் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மகசூலை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    பழனிசாமி கூறுகையில், இன்றைய சூழலில் விளைபொருட்களுக்கு விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் புலம்பி வருகின்றனர். கூடுதல் மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும் என்பதால், வேளாண் பல்கலைக்கழகம் இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.இதன்படி சுண்டைக்காய் செடியுடன் கத்தரி செடியை இணைத்து ஒட்டுரக செடியை வேளாண் பல்கலை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்கள் முன் இது குறித்த ஆய்வுக்காக, அரை ஏக்கரில் ஒட்டுரக கத்தரி சாகுபடி செய்யப்பட்டது.இந்த முயற்சியில் வழக்கத்தை காட்டிலும் இரண்டு மடங்கு மகசூல் கிடைத்தது.

    தற்போது இரண்டாம் கட்ட ஆய்வு பணிக்காக மீண்டும் கத்தரி சாகுபடி செய்துள்ளேன். இந்த முயற்சி வெற்றி பெற்றால் விவசாயிகள் கூடுதல் மகசூல் உடன் அதிக லாபத்தை ஈட்ட முடியும் என்றார்.

    • மரங்கள் செழித்து வளர்ந்து, பாக்கு அறுவடையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
    • அறுவடை எண்ணிக்கை பயிரிடும் இடம் மற்றும் பருவத்திற்கு ஏற்ப மாறுபடும்.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்று ப்பாசனத்துக்கு, தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. வறட்சி மற்றும் நோய்த்தாக்குதல் உட்பட காரணங்களால் தென்னை மரங்கள் பாதிப்பு தொடர்கதையாக உள்ளது.இதனால் மாற்று பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். அதன்படி விளைநிலங்களில் தனிப்பயிராக பாக்கு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கின்றனர். தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் மரங்கள் செழித்து வளர்ந்து, பாக்கு அறுவடையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:-

    பாக்கு மரங்களுக்கு நவம்பர் ,பிப்ரவரி மாதங்களில் வாரம் ஒரு முறையும், ஜூன், ஜூலை மாதங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். வாய்க்கால் முறையில் ஒரு மரத்துக்கு 175 லிட்டர் தண்ணீரும், சொட்டு நீர்ப்பாசன முறையில் 16 - 20 லிட்டரும் தேவைப்படும். மரம் ஒன்றுக்கு தொழு உரம் 10 முதல் 15 கிலோ, 100 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 150 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். 5 வயதுக்கு குறைவான மரங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள உர அளவில் பாதி இட வேண்டும். நடவு செய்த 5 ஆண்டுகளில் பாக்கு மரம் காய்ப்புக்கு வரும். கால் பங்கு அளவு பழுத்த பழங்களை அறுவடை செய்யவேண்டும். ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து முறை அறுவடை செய்யலாம். அறுவடை எண்ணிக்கை பயிரிடும் இடம் மற்றும் பருவத்திற்கு ஏற்ப மாறுபடும். எக்டருக்கு 1,250 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என்றனர்.

    • குறுவை பயிரிடப்படாத விவசாயிகளும் கூட சில அதிகாரிகளின் துணையுடன் தொகுப்பு திட்ட பயன்களை பெற முடிவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
    • உரங்கள் தட்டுப்பாடு நிலவிய போதிலும் விவசாயிகள் விலை அதிகம் கொடுத்து உரங்களை வாங்கி குறுவை பயிருக்கு இட்டு வருகின்றனர்.

    பூதலூர்:

    தமிழக காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்குமுன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. குறுவை சாகுபடி ஊக்கப்ப டுத்தும் விதமாக தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து, விதைநெல், உரங்கள் ஆகியவற்றை வழங்கியது. குறுவை தொகுப்பு திட்ட த்தில் குறுவை சாகுபடி செய்த அனைத்துவிவசாயி களுக்கும் என்றுஅறிவி க்காமல் அதில் கட்டுப்பா டுகள் விதிக்க ப்பட்டு உள்ளது ஏற்புடையதாக இல்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதைப்போல குறுவை பயிரிடப்படாத விவசாயிகளும் கூட சில அதிகாரிகளின் துணையுடன் தொகுப்பு திட்ட பயன்களை பெற முடிவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வேளாண் துறை நிர்ணயித்த இலக்கை தாண்டி இது வரை 4லட்சத்து17ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெற்று உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறுவை சாகுபடி பணிகளில்ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆங்கா ங்கே யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு நிலவிய போதிலும், விவசாயிகள் தட்டு தடுமாறி விலை அதிகம் கொடுத்து உரங்களை வாங்கி குறுவை பயிருக்கு இட்டு வருகின்றனர்.

    இதுபோன்ற சூழ்நி லையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தஞ்சை மாவட்டத்தின் பூதலூர் தாலுகா பகுதியில் ஒரேநாளில் கொட்டி தீர்த்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் நீரில் மூழ்கின.நீரில் மூழ்கிய பயிர்கள் இளம் பயிர்களாக இருந்ததால் உடனடியாக அழுகிப் போகக் கூடிய சூழ்நிலை உருவானது. இந்த பயிர்களை மீட்டு கொண்டு வருவது மிகவும் சிரமமான காரியம் என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர். மழையில் மூழ்கிய பயிர்களை மீட்க கூடுதலாக உரம் போட வேண்டிய நிலைமையிலும் விவசாயிகள் உள்ளனர்.

    கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் இன்சூ ரன்ஸ் செய்ய முடியவில்லை. இந்த ஆண்டு காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை பயிருக்கு பயிர் இன்சூரன்ஸ் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.மத்திய அரசு, மாநில அரசு, விவசாயிகள் ஆகிய முத்தரப்பு செலுத்த வேண்டிய தொகை குறித்த முரண்பாட்டினால் தமிழகத்திற்கு பயிர் இன்சூரன்ஸ் கடந்த ஆண்டு கிடைக்காமல் போனது.

    பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர காலக்கெடு ஜூலை 31ஆம் தேதி அன்று முடிவடைய உள்ளது. கடைசி தேதிக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. குறுவை இன்சூரன்ஸ் திட்டம் குறித்து இதுவரை தமிழக அரசிடம் இருந்து சாதகமான அறிவிப்பு வராதது குறித்து விவசாயிகள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். திடீரென மாறி வரும் பருவச் சூழலில் எந்த நேரத்தில் மழை வரும், பூச்சி தாக்குதல் ஏற்படும் என்று புரியாத நிலையில், இன்சூரன்ஸ் ஓரளவுக்கு காப்பாற்றும் என்று எண்ணிக்கொண்டு உள்ளனர். இனியும் காலம் தாழ்த்தாது டெல்டா விவசாயிகளின் நலன் கருதி குறுவை பயிர் காப்பீடு திட்டத்தை அறிவித்து, அதற்கான இன்சூரன்ஸ் பிரீமிய தொகையை கட்டும் தேதியையும் நீட்டித்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறு த்துகின்றனர்.

    • மாற்றுப் பயிர்களுக்கு மானிய விலையில் இடுபொருட்களான விதை, நுண்ணூட்ட சத்து, உயிர் உரம், உயிர் காரணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • உயிர் உரங்கள், மண்ணில் இடம் நுண்ணுயிர்கள், உயிர் உரங்கள், விதைப்பு மற்றும் அறுவடைக்கான ஊக்கத் தொகை ரூ. 810 பொது பிரிவினருக்கும், ரூ934 சிறப்பு பிரிவினருக்கும் வழங்கப்படுகிறது.

    திருச்சி :

    தா.பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பா சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    தா.பேட்டை வட்டாரத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் மாற்றுப் பயிர் சாகுபடியின் உளுந்து, நிலக்கடலை, சோளம் போன்ற மாற்றுப் பயிர்களுக்கு மானிய விலையில் இடுபொருட்களான விதை, நுண்ணூட்ட சத்து, உயிர் உரம், உயிர் காரணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    சிறு தானியங்கள் தொகுப்பில் விதைகள், உயிர் உரங்கள், மண்ணில் இடம் நுண்ணுயிர்கள், உயிர் உரங்கள், விதைப்பு மற்றும் அறுவடைக்கான ஊக்கத் தொகை ரூ. 810 பொது பிரிவினருக்கும், ரூ934 சிறப்பு பிரிவினருக்கும் வழங்கப்படுகிறது.

    பயறு தொகுப்பில் ரூ1,250, ரூ1,570-ம், எண்ணெய் வித்து தொகுப்பில் ரூ 4,002, ரூ5,600-ம் மானியமும் இடுபொருள்களுக்கு வழங்கப்படுகின்றன. விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உரங்கள் வழங்கும் பணிகளை இலக்கின்படி விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • உரங்கள் இருப்பு விவரம் மற்றும் இருப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள படி உரங்கள் கையிருப்பில் உள்ளதா என ஆய்வு செய்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் பகுதியில் உள்ள 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக குறுவை சாகுபடி தொகுப்பு திட்ட இலவச ரசாயன உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    ஒரு ஏக்கருக்கு யூரியா 45 கிலோ டி.ஏ.பி. 50 கிலோ பொட்டாஷ் 25 கிலோ என ரூ.2465 மதிப்புள்ள ரசாயன உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்ப டுகிறது. குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானிய விலையில் இலவசமாக ரசாயன உரங்கள் வழங்கப்பட்டு வரும் பணிகளை சோழபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சென்னை வேளாண்மை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது உரங்கள் இருப்புப் பதிவேடு, உரங்கள் இருப்பு விவரம் மற்றும் இருப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள படி உரங்கள் கையிருப்பில் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து உரங்கள் வாங்க வந்த பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அருகில் உள்ள சோழபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்திலும் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து இலவச ரசாயன உரங்கள் வழங்கும் பணிகளை இலக்கின்படி விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் போது தஞ்சை வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், தஞ்சை வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ஈஸ்வர், தஞ்சை வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) பால சுப்ரமணியன், கும்பகோணம் வேளா ண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) தேவி கலாவதி ஆகியோர் இருந்தனர்.

    • குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.2466 மதிப்பிலான ரசாயன உரங்கள் வழங்கினார்.
    • ஒரு ஏக்கருக்கு பொதுப் பிரிவினருக்கு 50 சதவீத மானியமும், தனி பிரிவினருக்கு 70 சதவீத மானியத்தில் இடுபொருட்களும் வழங்கி பேசினார்.

    பேராவூரணி:

    தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டம்-2022 மானியத்தில் இடுபொருட்கள் வழங்கும் விழா சேதுபாவாசத்திரம் வட்டாரம் குருவிக்கரம்பையில் நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் ஈஸ்வர் தலைமை வகித்தார். அசோக் குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சாந்தி வரவேற்றார்.

    சேதுபாபாசத்திரம் வட்டாரத்தில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.2466 மதிப்பிலான ரசாயன உரங்களும், மாற்றுப்பயிர் சாகுபடி திட்டத்தில் சிறுதானிய பயிர்களான கேழ்வரகு, நிலக்கடலை, உளுந்து சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு பொதுப் பிரிவினருக்கு 50 சதவீத மானியமும், தனி பிரிவினருக்கு 70 சதவீத மானியத்தில் இடுபொருட்கள் தொகுப்பை சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் வழங்கி பேசினார். விடுபட்ட தகுதி உள்ள விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, கணினி சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி பாஸ் புத்தகங்க நகலுடன் நேரடியாகவோ, உழவன் செயலிலோ அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதன் அடிப்படையில் மதுக்கூர் வட்டாரத்தில் முகாம்கள் நடைபெற்று வருகிறது.
    • உடனடியாக உழவன் செயலியிலும் பதிவேற்றம் செய்து வேளாண் உதவி இயக்குனர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர்.

    மதுக்கூர்:

    குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு தகுதியான விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி .ஏ .பி, அரை மூட்டை பொட்டாஸ் ஆவணங்களின் அடிப்படையில் மற்றும் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்து அதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

    இதற்காக தஞ்சை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண் துறை, வேளாண் உதவி அலுவலர்களும், வருவாய் துறை கிராம நிர்வாக அலுவலர்களும் அனைத்து கிராமங்களிலும் முகாம் நடத்தி தகுதியான விவசாயிகளுக்கு அடங்கல் சான்று வழங்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

    அதன் அடிப்படையில் மதுக்கூர் வட்டாரத்தில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. சொக்கநாவூர் கிராமத்தில் வேளாண்உதவி இயக்குனர் திலகவதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி குறுவை சாகுபடிக்கான அடங்கல் வழங்கும் பணி யினை ஆய்வு செய்தனர்.

    சொக்கநாவூர் மற்றும் புளியங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் வேளாண் உதவி அலுவலர் தினேஷ்குமார் ஆய்வு செய்து உடனடியாக உழவன் செயலியிலும் பதிவேற்றம் செய்து வேளாண் உதவி இயக்குனர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர்.

    புளியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளை ஊக்கப்படுத்தி காலத்தை உரிய ஆவணங்களை வழங்கி பயன்பெற கேட்டுக் கொண்டார்.

    வேளாண் உதவி இயக்குனர் திலகவதி சொக்கநாவூர் கிராமத்தில் நடவு செய்யப்பட்டுள்ள ஏஎஸ்டி16 வயலினை ஆய்வு செய்து பதிவு செய்யாத விவசாயிகளை உடனடியாக பதிவு செய்து மானியத்தில் உரங்கள் பெற கேட்டுக் கொண்டார்.

    • பி.ஏ.பி., அமராவதி பாசனத்துக்கு முன் பரவலாக எண்ணெய் வித்து பயிரான சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
    • அயல் மகரந்த சேர்க்கைக்காக விளைநிலங்களில் தேனீ பெட்டி வைக்க வேளாண், தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் கிணற்றுப்பாசனத்துக்கும், பி.ஏ.பி., அமராவதி பாசனத்துக்கு முன் பரவலாக எண்ணெய் வித்து பயிரான சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது.விலை வீழ்ச்சி, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் படிப்படியாக சூரியகாந்தி சாகுபடியை விவசாயிகள் கைவிட்டனர்.

    தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு உரல்பட்டி, மலையாண்டி கவுண்டனூர், பாப்பன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி - பிப்ரவரி பயிரிடுவதற்கு ஏற்ற பருவமாகும்.வீரிய ரக விதைகளே இப்பகுதியில் பயன்படுத்தப்படுகிறது. நோய்த்தாக்குதல் இச்சாகுபடியில், குறைந்தளவு இருந்தாலும் அறுவடை தருணத்தில், பறவைகளால் அதிக சேதம் ஏற்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு பெரியளவில் இழப்பு ஏற்படுகிறது.

    மகரந்த சேர்க்கை பாதிப்பு காரணமாக பூவில், விதைகள் பிடிக்காமல் பதராக மாறுவதும் சாகுபடியில், முக்கிய பிரச்னையாக உள்ளது. எனவே முன்பு அயல் மகரந்த சேர்க்கைக்காக விளைநிலங்களில் தேனீ பெட்டி வைக்க வேளாண், தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சூரியகாந்தி சாகுபடியில் ஏக்கருக்கு குறைந்தபட்சம், 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவாகிறது. ஏக்கருக்கு, 700 கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்கிறது.அறுவடைக்கு முன் பூக்களை பறவைகளிடமிருந்து பாதுகாப்பது மிகுந்த சிரமம் அளிக்கிறது. காலை, மாலையில் காவல் இருந்தாலும் சேதம் அதிகம் ஏற்படுகிறது. மகசூல் பாதிக்கும் போது விலையும் இல்லாததால் பெரிய அளவில் லாபம் கிடைப்பதில்லை.விற்பனை சந்தையும் இல்லாததும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எண்ணெய் வித்து சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • உழவு பணிகள் நடைபெற்ற வயல்களில் ஆங்காங்கே களைகளை அகற்றும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • கடந்த ஆண்டு பூதலூர் பகுதியில் குறுவை நடவு செய்யாமலேயே சான்று பெற்று உரங்களை வலிமை வாய்ந்த விவசாயிகள் பெற்று சென்று விட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    பூதலூர்:

    பூதலூர் பகுதியில் மேட்டூர் அணை திறந்து அதில் இருந்து வந்த தண்ணீர் கல்லணைவந்தடைந்து, கல்லணையில் இருந்து பிரதான ஆறுகளில் திறக்கப்பட்டது. அதன் பின்னர் கிளை ஆறுகளில் மற்றும் வாய்க்கால்களில் திறக்கப்பட்டு, குறுவை சாகுபடிக்காக நாற்றங்கால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

    குறுவை சாகுபடியை சிலர் பாய் நாற்றங்கால் மூலம் இயந்திர நடவு பணிகளிலும், பலர் நாற்றங்காலில் விதைப்பு செய்து அதை பறித்து நடவு செய்யும் பணிகளிலும் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பூதலூர் ஆனந்த காவேரி பாசனப்பகுதியில் உள்ள விவசாயிகள் முன்கூட்டியே நாற்றுவிட்டவர்கள் நடவு பணிகளைமுடித்துள்ளனர்.கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வந்து நாற்று விட்டவர்கள்

    தற்போது தங்கள் வயல்களை நடவு செய்வதற்கு ஏற்றவாறு பண்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனந்த காவேரி பாசனப்பகுதியில் உள்ள வயல்களில் எங்கு நோக்கினும் டிராக்டர்கள் மூலம் உழவு பணிகள் நடைபெற்று வருகின்றன.உழவு பணிகள் நடைபெற்ற வயல்களில் ஆங்காங்கே களைகளை அகற்றும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர. வயல்வரப்புகளை சீரமைக்கும் பணிகளில் ஆண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கப்பட்டுள்ளதாகவும். இன்னமும் உரம் வழங்கபடவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் குறுவை நடவு செய்த பின்னரே சான்று வழங்க முடியும் என்று சொல்வதால் உரம் கிடைக்காத நிலை ஏற்படும் என்று கூறுகின்றனர். கடந்த ஆண்டு பூதலூர் பகுதியில் குறுவை நடவு செய்யாமலேயே சான்று பெற்று உரங்களை வலிமை வாய்ந்த விவசாயிகள் பெற்று சென்று விட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    தஞ்சை மாவட்ட கலெக்டர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி குறுவை தொகுப்பு திட்ட பயன்கள் குறுவை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளனர். யூரியா உரம் கிடைப்பது சிரமமாக உள்ளது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    காம்ளக்ஸ் உரம் வாங்கினால் யூரியா தருவதாக தனியார் வியாபாரிகள் தெரிவிப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். உர விற்பனை யாளர்கள்மொத்தமாக யூரியா கொள்முதல் செய்ய முற்படும் போது காம்ளக்ஸ் உரம் வாங்க வேண்டும் என்று உர நிறுவனங்கள் நிர்பந்தம் செய்வதாக கூறுகின்றனர்.

    இது போன்ற சூழ்நிலையில் விவசாயிகளை நிம்மதியாக விவசாயம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இதற்கிடையே ஜுன் 15ம் தேதி காவிரி மற்றும் வெண்ணாற்றில் 6நாட்களுக்கு மாறி மாறி தண்ணீர் குறைந்த அளவில் திறக்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி காவிரியில் குறைந்த அளவு 714கன அடியும் வெண்ணாற்றில் 6514கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கிளை வாய்க்கால்கள் கடைமடை பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

    இதனால் குறுவை நடவு பணிகள் தாமதம் அடையும் வாய்ப்பு உள்ளது. கல்லணை கால்வாயில் தற்போது வரை முழு அளவில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.தற்போது 1901கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. குறுவை நடவு முடியும் வரை அனைத்து ஆறுகளிலும் முழு அளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • மானியத்தில் ரசாயன உரங்கள் 4000 ஏக்கருக்கு வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு உரம் வழங்கிட ஆணை வழங்கப்பட்டுள்ளது.
    • விதைகள் மற்றும் உயிர் உரங்கள் 50 சதவீதம், பொதுப்பிரிவினருக்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 70 சதவீதம் மான்ய விலையிலும் வழங்கப்படுகிறது.

    பூதலூர்:

    பூதலூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு குறுவை சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு மானியத்தில் இடுபொருட்கள் விநியோகம் செய்திட குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.பூதலூர் வட்டாரத்திற்கு 100 சதவீதம் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் மானியத்தில் ரசாயன உரங்கள் 4000 ஏக்கருக்கு வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு உரம் வழங்கிட ஆணை வழங்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை யுரியா (45 கி), ஒரு மூட்டை டி.ஏ.பி (50 கி) மற்றும் அரை மூட்டை பொட்டாஷ் (25 கி) மட்டும் வழங்கப்படும்.இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்களது நடப்பு ஆண்டு பசலியில் குறுவை சாகுபடி செய்துள்ளார் என சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் - 1 ஆகியவற்றுடன் கைபேசி எடுத்துக்கொண்டு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி பயன்பெற கேட்டு–கொள்ளப்படுகிறது.

    மேலே குறிப்பிட்ட ஆவணங்களை உழவன் செயலியில் நேரடியாக விவசாயிகள் பதிவு செய்யலாம். மேலும் பதிவு செய்த பிறகு அந்த ஆவணங்களுடன் உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி உரங்கள் பெற ஆணை பெற்றுக்கொள்ளலாம். குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் மாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்கு விக்க ஆடிப்பட்டத்தில் உளுந்து, கடலை மற்றும் சிறுதானியப்பயிரான ராகி சாகுபடி செய்ய விதைகள் மற்றும் உயிர் உரங்கள் 50 சதவீதம், பொதுப்பிரிவினருக்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 70 சதவீதம் மான்ய விலையிலும் வழங்கப்படுகிறது.எனவே விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×