என் மலர்
நீங்கள் தேடியது "தீக்குளிக்க முயற்சி"
- மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.
- ஒரு பெண் திடீரென்று மண்எண்ணை கேனை எடுத்து வந்து தீக்குளிக்க முயன்றார்.
கடலூர்:
கடலூர் புருக்கீஸ் பேட்டை மஞ்சனிக்குப்பம் பகுதியில் அ ரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 8 வீடுகள் கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் முரளி தலைமையில் ஆய்வாளர்கள் அருள், தினகரன் மற்றும் ஊழியர்கள் ஜேசிபி எந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் ஜேசிபி எந்திரம் மூலம் வீடுகளை இடிக்க சென்றபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் அமர்நாத் தலைமையில் பொதுமக்கள் ஜேசிபி வாகனத்தை முற்றுகையிட்டு வீடுகளை இடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அங்கிருந்த அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் திடீரென்று மண்எண்ணை கேனை எடுத்து வந்து தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த பெண்ணிடம் இருந்து உடனடியாக கேனை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். இங்கு இருந்து காலி செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தாசில்தாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இதுசம்பந்தமாக உரிய முறையில் விசாரணை நடத்தி பொதுமக்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து தற்காலிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை இடிக்காமல் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- போலீசார் தடுத்து நிறுத்தினர்
- கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவல கத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட் டம் நடைபெற்றது. இதையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் மனு அளிக்க வருபவர் களை தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்த னர்.
அப்போதுநுழைவு வாயில் அருகில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அவரது மகனுடன் வந்து திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளிக்கமுயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தண்டராம்பட்டு எடத்தனூர் பகுதியை சேர்ந்த காமாட்சி என்றும், அவரது கணவர் சென்ன கிருஷ்ணன் குடும்பம் நடத்த சம்பள பணம் கொடுக்காமல் அடித்து கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக வும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தீக்குளிக்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
- கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 60 வயது முதியவர் ஒருவர் நேரில் வந்தார்.
- பிலஞ்சம் தராத காரணத்தினால் வீடு இல்லை என கூறியதை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு காண வந்து சென்றனர்.
அதன்படி இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 60 வயது முதியவர் ஒருவர் நேரில் வந்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக முதியவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பண்ருட்டி கீழ்மாம்பட்டு சேர்ந்தவர் சிகாமணி (வயது 65) என தெரிய வந்தது. இவருக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வந்துள்ளதாக கூறியதாகவும், தற்போது வீடு கட்ட தொடங்கிய பின் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.இதன் காரணமாக லஞ்சம் தராத காரணத்தினால் வீடு இல்லை என கூறியதை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து முதியவர் சிகாமணியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு ஜேசிபி வாகனத்துடன் வீடுகளை இடிக்க சென்றனர் .
- துணை மேயர் தாமரைசெல்வன் மற்றும் போலீசார் மண்எண்ணை கேனை பிடுங்கினர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன் குளம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 7 வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக ஒரு சிலர் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் முரளி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு ஜேசிபி வாகனத்துடன் வீடுகளை இடிக்க சென்றனர் . அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டனர். பின்னர் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இத்தகவல் அறிந்த கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், அ.தி.மு.க கவுன்சிலர் தஷ்ணா, நிர்வாகி நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குளோப் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் அதிகாரியிடம் பேசுகையில், இந்த பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பதாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது மேலும் இவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட உள்ளது ஆகையால் வீடுகள் இடிப்பதற்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும். இந்த பகுதியில் ஒரு சில கட்டிடங்கள் அரசு இடங்களை ஆக்கிரமித்து பெரிய அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதனையும் உரிய முறையில் அளவீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக ஆணையாளர் நேரில் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர் தஷ்ணா மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இதற்கு ஆதரவாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் எழில் என்பவர் திடீர் என மண்எண்ணை கேனுடன் வந்தார். அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் தனது உடலில் மண் எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே துணை மேயர் தாமரைசெல்வன் மற்றும் போலீசார் மண்எண்ணை கேனை பிடுங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- மாற்றுத்திறனாளி கஞ்சனூர் பகுதியில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி கோரியிருந்தார்.
- மண்ணெண்ணை கேனை எடுத்து உடலின் மீது ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சித்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அடுத்த பெரிய தச்சூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 36). மாற்றுத்திறனாளியான இவர் கஞ்சனூர் பகுதியில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி கோரியிருந்தார். இதற்கு நெடுஞ்சாலைத் துறை அனுமதியளிக்க மறுத்துவிட்டது. இதனால் மன உளைச்சலடைந்த நாகராஜ், இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ஒளித்து வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து உடலின் மீது ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சித்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைவாக சென்று அவர் மீது நீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- நில மோசடி புகாரில் அடுத்தடுத்து 2 குடும்பத்தினர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடந்த வாரமும் இதேபோல நில மோசடி புகார் தொடர்பாக தீக்குளிக்க முயன்ற சம்பவம் நடந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இவர்களுக்கு சொந்தமான ¾ செண்டு நிலம் உள்ளது.
இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர் கோவில் கட்டுவதற்கு நிலம் தேவை என எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த நிலத்திற்கு இழப்பீட்டு தொகையும் வழங்கவில்லை. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று விஜயன், காளியம்மாள், அவரது மகள் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்தனர்.
அவர்கள் திடீரென தங்கள் உடலில் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது நடந்த விவரங்களை கூறினர். இதனையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துச் செல்லுமாறு தெரிவித்தனர்.
திண்டுக்கல் மக்கான்தெருவை சேர்ந்த தாதர்மைதீன் மகன் சையது இப்ராகிம். இவரது மனைவி ரசீதாபேகம். இவர்களுக்கு அரசு சார்பில் 1 ஏக்கர் 26 செண்டு நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தை பித்தளைப்பட்டியை சேர்ந்த நாகராஜன் என்பவர் அபகரித்துக் கொண்டார். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என சையது இப்ராகிம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்ததில் நடந்த விவரங்களை தெரிவித்தனர். நில மோசடி புகாரில் அடுத்தடுத்து 2 குடும்பத்தினர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வாரமும் இதேபோல நில மோசடி புகார் தொடர்பாக தீக்குளிக்க முயன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
- சிறுமி கூறும்போது, போலீசார் என்னை மிரட்டி வாக்குமூலம் வாங்கி எனது தந்தை மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- வழக்கின் விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
நெல்லை:
தென்காசி பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி கடந்த 2021-ம் ஆண்டு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பான விசாரணை நெல்லை போக்சோ கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று அந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் அந்த தொழிலாளியின் 17 வயது மகள், 15 வயது மகன் ஆகியோர் கோர்ட்டில் இன்று திடீரென தங்கள் மீது மண்எண்ணையை ஊற்றியவாறு கோர்ட்டின் மாடியில் ஓடியவாறு தீக்குளிக்க முயன்றனர்.
இதை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசார் இருவரையும் மீட்டு, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி கூறும்போது, போலீசார் என்னை மிரட்டி வாக்குமூலம் வாங்கி எனது தந்தை மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
இன்று அந்த வழக்கின் விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அவருக்கு தண்டனை கிடைத்து விடும் என்ற பயத்தில் தீக்குளிக்க முயன்றோம் என கூறிஉள்ளார்.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சத்துணவு வேலை வாங்கித் தருகிறேன் என்று எமிலிமேரி டெய்சியிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய டெய்சி 4 பவுன் தங்கச் சங்கிலியை எமிலிமேரியிடம் கொடுத்து உள்ளார்.
- அதிர்ச்சியடைந்த டெய்சி இது தொடர்பாக கண்டாச்சிபுரம் போலீசில் புகார் அளித்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் ஒதியத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் டெய்சி (வயது 40). திருமணமானவர். அதே ஊரில் வசிப்பவர் எமிலிமேரி சத்துணவு கூடத்தில் பணி செய்கிறார்.இவர் சத்துணவு கூடத்தில் வேலை வாங்கித்தருகிறேன். பணம் கொடு என்று டெய்சியிடம் கேட்டுள்ளார். என்னிடம் பணம் இல்லை என்று டெய்சி கூறவே, நகையை அடமானம் வைத்தாவது பணம் கொடு, நான் நிச்சயமாக சத்துணவு வேலை வாங்கித் தருகிறேன் என்று எமிலிமேரி டெய்சியிடம் கூறியுள்ளார்இதனை நம்பிய டெய்சி 4 பவுன் தங்கச் சங்கிலியை கடந்த டிசம்பர் 26-ந்தேதி எமிலிமேரியிடம் கொடுத்து உள்ளார். இதையடுத்து எமிலிமேரியிடம் வேலை எப்போது கிடைக்கும் என்று சில தினங்களுக்கு முன்பாக டெய்சி கேட்டார். இதற்கு எமிலிமேரி சரியான பதில் கூறவில்லை.அதிர்ச்சியடைந்த டெய்சி இது தொடர்பாக கண்டாச்சிபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்எனவே டெய்சி 3 பெண் குழந்தைகளுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது தான் கொண்டு வந்த மண்எண்ணை கேனை திறந்து மேலே ஊற்றிக் கொண்டார். மேலும், 3 பெண் குழந்தைகள் மீது ஊற்ற முயற்சித்தார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தனர். டெய்சியுடன் வந்த 3 பெண் குழந்தைகளை பாதுகாப்பாக அமரவைத்தனர். இது தொடர்பாக விழுப்புரம் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
- சொத்து தகராறில் விபரீதம்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர்.
காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் வெங்கடேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி பிரபு (வயது 40) என்பவர் அவரது தாயார் முனியம்மாள் என்பவருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
தீக்குளிக்க முயற்சி
மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்து கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கம் முன்பு பிரபு திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி சமாதானம் செய்தனர். சொத்து தகராறில் அவர் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்மவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. லதா சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் பள்ளிக்குப்பம், கொல்லமங்கலம், சின்னசேரி, அகரம் சேரி, கூத்தம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.இந்த ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்தில் இணைக்க கூடாது.
அந்த பகுதி திருப்பத்தூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டால் மாவட்ட தலைநகரத்திற்கு 60 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இந்த ஊராட்சிகளை மையப்படுத்தி அகரம் சேரி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதே போல அ. கட்டுப்படி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் தங்கள் கிராமத்தின் அடையாளமாக கட்டுபடி கூட்ரோட்டில் அனைத்து மதத்தினரையும் மதிக்கும் வகையில் இருந்த நுழைவு வாயில் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது.
மீண்டும் அந்த பகுதியில் நுழைவாயில் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
- பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருபா(வயது 24). இவர் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.
- கடனைப் பெற்றுக் கொண்டு அவர்கள் இதுவரை பணம் செலுத்தாமல் கொலை மிரட்டல் விடுத்தனர்.
சேலம்:
சேலம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருபா(வயது 24). இவர் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா(20). இவர்கள் தங்களது 2 குழந்தைகளுடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்தார். அப்போது மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அம்மாபேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிருபா கூறும் போது, என்னுடன் வேலை பார்த்து வரும் 3 பேருக்கு 7 லட்சம் ரூபாய் வேறொரு நபரிடம் வாங்கித் தந்தேன். ஆனால் கடனைப் பெற்றுக் கொண்டு அவர்கள் இதுவரை பணம் செலுத்தாமல் கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே 3 பேர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்றார்.
- சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த இவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
- அவரை தடுத்து நிறுத்திய போலீசார், சதீஷ்கு மாரிடம் விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த இவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், சதீஷ்கு மாரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலீ சாரிடம் கூறுகையில், மெக்கானிக்கல் என்ஜினீ யரிங் படித்துள்ள நான் சேலத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக கூறியதால் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். ஆனால் ஓராண்டு ஆகியும் எந்த வட்டியும் வரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.
இதனால் நான் மன உளைச்சலில் உள்ளேன். எனவே அந்த பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து நபரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.
- கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஆட்டோ வேலுவை அழைத்து சென்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று காலை வாலிபர் ஒருவர் நேரில் சென்றார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அந்த நபரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் கடலூரை சேர்ந்த ஆட்டோ வேலு என்பதும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக இருப்பதும் தெரியவந்தது. இவர் ஒரு பெண்ணிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் பணத்தை வழங்கி உள்ளார். அந்த பணத்தை திருப்பி கேட்டு உள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் பணம் தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இருந்து பணத்தை பெற்று தர வேண்டும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஆட்டோ வேலுவை அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.