search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றிலை"

    • பயிர்களில் பணப்பயிர் என்று அழைக்கப்ப டும் வெற்றிலை இன்று மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய பொருளாக இருந்து வருகிறது.
    • இறை வழி பாட்டிலும் சரி, சித்த மருத்துவத்திலும் சரி முக்கிய பொருளாக விளங்கி வருகிறது.

    கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றி லைக்கு மாறு கொள்வோம் என்றார் பாரதியார். காவிரிக்கரையில் விளையும் வெற்றிலைக்கு என்றுமே மவுசு உண்டு.

    பயிர்களில் பணப்பயிர் என்று அழைக்கப்ப டும் வெற்றிலை இன்று மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய பொருளாக இருந்து வருகிறது. எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் அங்கு வெற்றிலை முதலிடம் பிடித்து வருகிறது. அதேபோல இறை வழி பாட்டிலும் சரி, சித்த மருத்துவத்திலும் சரி முக்கிய பொருளாக விளங்கி வருகிறது.

    வெற்றிலை என்பது மிளகு வகையை சேர்ந்தது, அது கொடி போல படர்வதால் வெற்றிலை கொடிக்கால் என்று சொல்வார்கள். வெற்றிலை என்ற பெயருக்கு முக்கிய காரணம் உள்ளது. வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக் கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும்.

    இதனால் வெற்று இலை என்பது சுருங்கி வெற்றிலை ஆகிவிட்டது. இது வளர்வதற்கு தண்ணீர் அதிகம் தேவை, வெற்றிலையைப் பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள்.

    வெற்றிலையில் கரும்பச்சை நிறத்தில் இருப்பது ஆண் வெற்றிலை என்றும், இளம்பச்சை நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் 2 வகையாகப் பிரிக்கிறார்கள். சிலர் அதில் பின்புறம் இருக்கும் நரம்புகளைப் பார்த்தும் ரகம் பிரிப்பதுண்டு. ஒரு வருடத்தில் நன்கு வளரும், பின்னர் 3 வருடங்களுக்கு வெற்றிலையை பறிக்கலாம்.

    வெற்றிலை கொடிக்கு பராமரிப்பு மிகவும் தேவை. அது கொடி போல வளர ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு கொடியையும் கட்டிக்கொண்டே வர வேண்டும். அது நன்கு வளர்ந்தவுடன் நீங்கள் வெற்றிலையை கிள்ள ஆரம்பிக்கலாம். சிலர் வெற்றிலையை ஒரு மரத்துடன் கட்டி வளர்த்து வருவார்கள்.

    இதனால் மரம் வளர வளர வெற்றிலைக்கு ஒரு ஊன்றுகோலாய் இருக்கும். ஒரு சிலர் வெற்றிலையை பாத்தி கட்டி வளர்ப்பார்கள், சிலர் திராட்சை கொடி போல படர விடுவார்கள். வெற்றிலை வளர்ப்பது என்பது எளிது, ஆனால் பறிப்பது என்பது மிகவும் கடினம். அது வளர ஆரம்பிக்கும்போது கீழே எளிதாக பறிக்கலாம்.

    ஆனால் மேலே செல்ல செல்ல பறிப்பது என்பது கடினமாக இருக்கும். இந்த வெற்றிலையில் இரண்டு வகை உண்டு. கறுப்பு நிறத்தில் அதிகக் காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது கற்பூர வெற்றிலை. மிகுந்த மணத்துடன் காரம் அவ்வளவாக இல்லாமல் ஓரளவு வெளிர் நிறத்தில் இருப்பது சாதாரண வெற்றிலை.

    வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் தேவை, காவிரி ஆற்றின் கரையிலே இருக்கும் ஊர்களில் எல்லாம் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை, இதனால் வெற்றிலை பாக்கு எல்லாம் அங்கு நிறைய விளைகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வெற்றிலைக்கு தனி மவுசு உண்டு. பரமத்திவேலூர், நன்செய் இடை யாறு, குப்புச்சிபாளையம், ஓலப்பாளை யம், பாலப்பட்டி, செங்கப்பள்ளி, மணப்பள்ளி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக் கான ஏக்கரில் வெள்ளைக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங்களை பயிர் செய்துள்ளனர். காவிரி ஆற்றின் நேரடி பாசனத்தால் வளர்வதால் ஒரு வாரம் ஆனாலும் வாடாமல் வதங்காமல் அப்படியே இருக்கும். இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த வெற்றிலைக்கு தனி சிறப்புகள் உண்டு.

    வெற்றிலை வேர் குச்சியை நட்டு வைத்தால் அது முளைத்து, அருகில் உள்ள மரம், சுவற்றில் பற்றி வளரும். மண் வளத்தைப் பொறுத்து ஒரு மாதம் முதல் 3 மாதங்களில் வெற்றிலையைப் பறிக்கலாம். வீட்டில் நடக்கும் விசே ஷங்கள், திருமணம், காது குத்து, சீமந்தம்என அனைத்து சுப நிகழ்ச்சி யானாலும் வெற்றிலை பாக்கு இல்லாமல் இருக்காது. வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகள், சுவாச பிரச்சனை, இருமல், சளி என பல வற்றிற்கும் வெற்றிலை ஒரு அருமருந்து. வெற்றிலை போட்டால் தொண்டை கரகரப்பு சரியாகி விடும். குரல் வளமும் பெருகுமாம். கணவன், மனைவி இருவரில் யார் வெற்றிலை போட்டு நாக்கு செக்கச் செவேல்னு சிவந்தால் அவர்கள் மற்றவர் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லும் வழக்கம் இன்றளவும் கிராமங்களில் உண்டு.

    வெறும் வாயில் வெற்றிலை மென்றால் போதும் வாய் துர்நாற்றம் நீங்கும். தொடர்ந்து தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் குடல் புண்வாய், புண்கள் ஆறிவிடும். தலையில் பொடுகு பிரச்சனை இருந்தால் வெற்றி லையை அரைத்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கிவிடும். முகத்தில் ஏற்படும் முகப்பருக்களுக்கு வெற்றி லையை வைத்து தேய்த்தால் போதும் முகப்பரு போய்விடும். உடலில் வியர்வை துர்நாற்றம் அதிகம் அடித்தால் தண்ணீரில் வெற்றிலையை போட்டு காயவைத்து சுடு தண்ணீராக குளித்து வந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கிவிடும்.

    குழந்தை பெற்ற தாய்மார்கள் வெற்றிலை தின்றால் பால் அதிகமாக சுரக்கும். வெற்றிலையில் இவ்வளவு மருத்துவ குணம் அடங்கியுள்ளது. ஆயுர்வேத மருந்துகளில் வெற்றிலையே அதிகம் பயன்படுத்தப்படு கிறது. சங்க கால நூல்களான பத்துப்பாட்டு, மணிமேகலை, சீவக சிந்தாமணி, கம்பராமா யணம் உட்பட பல்வேறு நூல்களில் வெற்றி லையின் சிறப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது. மருத்துவ குணங்கள் கொண்ட காவிரிக் கரை வெற்றிலை நம் வாழ்வின் அங்கமாக உள்ளது.

    வெற்றிலையில் உள்ள சத்துக்கள்

    நீர்ச்சத்து – 90 சதவீதம், புரதச்சத்து – சதவீதம், கொழுப்புச்சத்து – சதவீதம், தாது உப்பு – சதவீதம், நார்ச்சத்து – சதவீதம், பச்சையம் – 0.25சதவீதம், மாவுச்சத்து – 6.10 சதவீதம், நிகோடினிக் அமிலம் – 0.89 மி.கி, வைட்டமின் சி – 0.01, வைட்டமின் ஏ – 2.9 மி.கி., தயாமின் – 10 கி, ரிபோப்ளேவின் –, நைட்ரஜன் – 7.0சதவீதம், பாஸ்பரஸ் – 0.6சதவீதம், பொட்டாசியம் – 4.6 சதவீதம், கால்சியம் – 0.2 சதவீதம், சத்தூட்டம் –

    44 கலோரி, இரும்புச்சத்து – 0.007சதவீதம்.

    • கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.12 ஆயி ரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ.2 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது.
    • முகூர்த்தங்கள்‌ இருப்ப தாலும் விலை உயர்வ டைந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்த னூர், வேலூர், அனிச்சம்பா ளையம், குப்புச்சிப்பா ளையம், நன்செய்இடை யாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வெற்றி லைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.12 ஆயி ரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ.2 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.14 ஆயி ரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயி ரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது.

    வெற்றிலை வரத்து குறைந்ததாலும், அதிக அள வில் முகூர்த்தங்கள் இருப்ப தாலும் விலை உயர்வ டைந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • பரமத்தி வேலூர் கரூர் சாலையில் செயல்பட்டு வரும் வெற்றிலை ஏல மார்க்கத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
    • வெற்றிலை உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது. இதனால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், குப்பிச்சிபாளையம், பொத்தனூர், பாண்டமங்கலம், அண்ணா நகர், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்றவற்றை பயிர் செய்துள்ளனர். வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்தி வேலூர் கரூர் சாலையில் செயல்பட்டு வரும் வெற்றிலை ஏல மார்க்கத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து, தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா ,கர்நாடகா , மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் க டந்த வாரம் 104 கவுளி கொண்ட இளம் பயிர் வெள்ளைக்கொடி ஒரு சுமை ரூ.6,500-க்கும், 104 கவுளி கொண்ட இளம் பயிர் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.2,700-க்கும் விற்பனையானது. 104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.2000-க்கும் , 104 கவுளி கொண்ட முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.1000-க்கும் விற்பனையானது.

    நேற்று 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.8600-க்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.3600-க்கும் விற்பனையானது. 104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.4100க்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.1200-க்கும் விற்பனையானது. வெற்றிலை உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது. இதனால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை தேர்தல் அதிகாரியாக இருந்து திருணாகரன் நடத்தினார்.
    • காலியானஇடங்களில் மீண்டும் வெற்றிலை விவசாய பயிர்களை பயிரிட வேண்டும். உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி வெற்றிலை விவசாயிகள் சங்கத்தின் 69-வது வருட ஆண்டு விழா மற்றும் மகாசபை கூட்டம் உடன்குடி தினசரி மார்க்கெட்டில் உள்ள சங்கவளாகத்தில் நடந்தது. சங்கத் தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் ஜெகதீசன் வரவேற்று பேசினார். சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சங்கசெயலாளர் மங்களராஜ் சங்கத்தின் வரவு செலவு மற்றும் ஆண்டறிக்கையை வாசித்தார். புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை தேர்தல் அதிகாரியாக இருந்து திருணாகரன் நடத்தினார். மீண்டும் பழைய தலைவர், பொருளாளர், செயலாளர் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    சங்க உறுப்பினர்கள் கருத்துக்களை பரிமாற்றம் செய்து கொண்டனர். ஊர் கூடி ஊரணி அமைப்போம் தொண்டு நிறுவனம் சார்பில் புதியதாக பல குளங்கள் உருவாகியதால், நிலத்தடி நீரில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் சங்க உறுப்பினர்கள் தங்களது வீடு மற்றும் தோட்டங்களில் உள்ள காலியானஇடங்களில் மீண்டும் வெற்றிலை விவசாய பயிர்களை பயிரிட வேண்டும்.

    தாம்பூல கவர் மற்றும் விசேஷ காலங்களில் வெற்றிலையை பயன்படுத்த வேண்டும் என்றும், புகையிலை இல்லாத வெற்றிலையின் பயன்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் வெற்றிலை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்த னூர், பாண்ட மங்கலம், செல்லப்பம்பாளையம் , வெங்கரை,நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், குப்பிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்றவற்றை பயிர் செய்துள்ளனர்.

    வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து இருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி லாரிகள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் 104 கவுளி கொண்ட இளம் பயிர் வெள்ளைக்கொடி ஒரு சுமை ரூ. 8 ஆயிரத்திற்கும், 104 கவுளி கொண்ட இளம் பயிர் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ. 2,500-க்கும் விற்பனையானது. 104 கவுளிகொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ. 2,500-க்கும், 104 கவுளி கொண்ட முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.1,300-க்கும்விற்பனையானது.

    நேற்று 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ .9000-க்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ. 4 ஆயிரத்திற்கும் விற்பனையானது.104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ. 4 ஆயிரத்திற்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ. 1700- க்கும் விற்பனையானது. வெற்றிலை உற்பத்தி குறைவின் காரணமாக வெற்றிலை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பவானிசாகர் அருகே வெற்றிலை வாங்க சென்று மாயமான மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டார்.
    • இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் அடுத்த கறி தொட்டம்பாளையம், ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (30). இவர் தனது பாட்டி ரங்கம்மாள் (73) உடன் வசித்து வருகிறார். ரங்கம்மாள் தினமும் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நால் ரோடு பகுதிக்கு சென்று தனக்கு தேவையான வெற்றிலை பாக்கு வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் கடந்த 4-ந் தேதி வெற்றிலை பாக்கு வாங்க சென்ற மூதாட்டி ரங்கம்மாள் பின்னர் வீடு திரும்பவில்லை.

    அவரை பல்வேறு இடங்களில் தேடினர் எனினும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் பவானிசாகர் அடுத்த தொப்பம்பாளையம், மாங்கள் மொக்கைக்கு கீழ்புறம் உள்ள காய்ந்த குட்டை பக்கமாக மூதாட்டி உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தேவராஜிக்கும் தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்தது தனது பாட்டி என உறுதிப்படுத்தினார்.

    இதையடுத்து பவானிசாகர் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர் பகுதிகளில் உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், செல்லப்பம்பாளையம், வெங்கரை, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், குப்பிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்றவற்றை பயிர் செய்துள்ளனர்.

    வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர்.

    பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிக்கும், பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து இருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி லாரிகள் மூலம் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா , மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் 104 கவுளி கொண்ட இளம் பயிர் வெள்ளைக்கொடி ஒரு சுமை ரூ 6 ஆயிரத்திற்கும், 104 கவுளி கொண்ட இளம் பயிர் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ 2,500-க்கும் விற்பனையானது. 104 கவுளிகொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமைரூ 2,500-க்கும் ,104 கவுளி கொண்ட முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ1,400-க்கும்விற்பனையானது.

    நேற்று 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ 8,500-க்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.4 ஆயிரத்திற்கும் விற்பனையானது. வெற்றிலை உற்பத்தி குறைவின் காரணமாக வெற்றிலை விலை உயர்ந்துள்ளது. வெற்றிலை விலை உயர்வால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×