search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227251"

    • மனிதனுக்கு வயதான பின்புதான் அல்சைமர், மனநல இழப்பு நோய் ஆகியவை தாக்குகின்றன.
    • மனிதன் 40 வயதை கடந்துவிட்டாலே மூளையின் எடை குறைய தொடங்கும்.

    இந்தியாவிற்கு இளமையான நாடு என்றொரு பெயர்இருக்கிறது. அதே நேரத்தில் முதியோர்களின் எண்ணிக்கை சதவீதமும் அதிகரித்து வருகிறது.

    முதுமைக்கு அரசு ஓர் அளவுகோல் வைத்திருக்கிறது. ஆண்களுக்கு 65 வயது, பெண்களுக்கு 60 வயது. ஆனால் உளவியல் கணக்குப்படி ஒருவருக்கு முதுமை என்பது 50 வயதிலேயே தொடங்கி விடுகிறது.

    இப்போது போகும் வேகத்தில் போனால் 2060-ல் இந்திய மக்களில் 34 கோடி பேர் முதியவர்களாக இருப்பார்கள்.

    பொதுவாகவே மனிதன் 40 வயதை கடந்துவிட்டாலே மூளையின் எடை குறைய தொடங்கும் என்கிறது, மருத்துவ உலகம்.

    சராசரியாக 1394 கிராம் எடை கொண்ட மூளை, அதன்பின் 1161 கிராமாக குறைந்துவிடுகிறது. அதோடு மூளைக்கு போகும் ரத்த ஓட்டமும் நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக குறைய தொடங்குகிறது. மூளையில் ஏற்படும் இந்த மாற்றம் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.

    நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண், காது, சுவை உணர்வு, வாசனை உணர்வு, தசைகளின் இயக்கம், உணர்திறன் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறைகிறது. நரம்பணு இழப்பும், இணைப்பு திசுக்களில் ஏற்படும் மாற்றம்தான் இந்த எடை குறைவுக்கு காரணம் என்கிறார்கள், மருத்துவர்கள்.

    மேலும் மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் மற்றும் சிங்குலேட் மேடு என்ற பகுதிதான் மனதை கட்டுப்படுத்துகிறது. முதுமை வந்தபின் இவை தங்கள் சக்தியை இழந்து விடுகின்றன. இதனால் முதுகெலும்பும் பாதிக்கப்படுகிறது. உணர்வு முடிச்சுகள், உள் மூளை நரம்பு அணுக்கள், சிறு மூளை அணுக்கள் ஆகியவை சுமார் 25 சதவீதம் வரை குறைந்துவிடுகிறது.

    ஒரு மனிதனுக்கு வயதான பின்புதான் அல்சைமர், மனநல இழப்பு நோய் ஆகியவை தாக்குகின்றன. இவை ஒரு மனிதனின் சுய நினைவாற்றல், மானம், வெட்கம் ஆகிய உணர்வுகளை மழுங்க செய்துவிடுகிறது. இதன் தாக்கம் உள்ளவர்கள் நெருப்பு, மின்சாரம், கத்தி போன்றவற்றின் ஆபத்தை உணராமல் கூட செயல்படுவார்கள். காலை, மாலை நேரம் போன்ற எதையும் புரிந்துகொள்ள முடியாது. உடையில் சிறுநீர் கழிப்பார்கள். குளித்துவிட்டு ஆடை அணியாமல் வெளியே வருவார்கள். எனவே இதுபோன்ற நிலையில் உள்ள முதியோர்களை பாதுகாக்க அரசுமருத்துவமனைகளில் முதியவர்களுக்கென்று தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    • ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளவர்களுக்கு மட்டும் உதவித்தொகை
    • இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைத்திருக்கும் முதியோர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும்

    நாகர்கோவில்:

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் வறிய நிலையில் வாழும் முதியோர்களுக்கு அரசின் சார் பில் ரூ.1,000 உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைத்திருக்கும் முதியோர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும் என்ற அரசு திடீரென அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு முதியோர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.

    ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளவர்களுக்கு மட்டும் உதவித்தொகை என்ற அறிவிப்பை தொடர்ந்து இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைத்திருப்பவர்கள் ஒன்றை திரும்ப ஒப்படைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன் சிலிண்டர்வைப்பு தொகை ரூ.450 மட்டுமே இருந்தது.

    எனவே அந்த எரிவாயு சிலிண்டரை திருப்பி ஒப்படைக்கும் போது ரூ.450 மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரே வைப்புத் தொகையின் மூலம் இரண்டு சமையல் எரி வாயு சிலிண் டரை பெற்றவர்கள் ஒரு சிலிண்ட ரை மட்டும் ஒப்படைக்க முடியாது.

    இரண்டு சிலிண்டர்களை யும் ஒன்றாகதான் ஒப்படைக்க முடியும். அப்படி ஒப்படைக்கப்படும்போது அவர்களுக்கு இரண்டு சிலிண்டர்களுக்கான வைப்புத் தொகையாக ரூ.900 வழங்கப்படுகிறது.

    அதன் பிறகு புதிதாக ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் பெற வைப்புத் தொகையாக ரூ.2,500 ரூபாய் கட்டி சமையல் எரிவாயு சிலிண் டர் பெறுகின்ற சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு முதியோர் உதவித் தொகை பெற ஒரு சமையல் எரிவாயு என்ற அரசின் புதிய உத்தரவினை ரத்து செய்து முதல்வர் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ரோஜாவனம் செவிலியர் கல்லூரி மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்
    • முதியோர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ரோஜாவனம் முதியோர் இல்லம் சார்பில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் இல்ல இயக்குனர் அருள் ஜோதி தலைமையில், மேலாளர் கோபி முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதியோர்களுக்கு இனிப்பு, கதர் ஆடை வழங்கி பேசினார். முதியோர் பராமரிப்பில் சிறப்பாக சேவை செய்யும் சேவையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    நாகர்கோவில், கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, குற்றாலம், சென்னை மற்றும் புதுடில்லி உள்ளிட்ட பகுதிகளில் ரோஜாவனம் முதியோர் இல்லம் செயல்பட்டு வருவதாகவும் இங்கு வந்து முதியோர்கள் பயன் பெறலாம் என ரோஜாவனம் இயக்குனர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ரோஜாவனம் செவிலியர் கல்லூரி முதல்வர் புனிதா டேனியல், மருத்துவர் ஸ்டீவ் வாழ்த்துரை வழங்கினர். ரோஜாவனம் செவிலியர் கல்லூரி மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். முதியோர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    முன்னதாக செவிலியர் கல்லூரி ஆசிரியர் பரமேஸ்வரி வரவேற்று பேசினார். நிறைவாக முதியோர் இல்ல ஆலோசகர் சுசீலா நன்றி கூறினார்.மேலாளர் சாமுவேல் ராஜன், செவிலியர் கல்லூரி பேராசிரியர்கள் சிபியா, செல்லம்மாள், பிரியா, மற்றும் மலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வயதானவர்கள் எல்லோரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுடன் இருப்பார்கள் என்பதில்லை.
    • வயதானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்க செய்ய வேண்டியவை குறித்து பார்ப்போம்.

    வயதானவர்கள் எல்லோரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுடன் இருப்பார்கள் என்பதில்லை. அது அவர்களின் மனம் மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தது.

    நோய் எதிர்ப்பு சக்தி என்பது உடலுக்கு பாதுகாப்பு கவசமாகும். பிறக்கும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று பலவீனமாக இருக்கும். தாய்ப்பாலும், ஊட்டச்சத்து உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். அதுபோலவே வயதாகும்போது மீண்டும் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும். தன்னம்பிக்கையும், ஊட்டச்சத்துமிக்க உணவும்தான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    வயதானவர்கள் எல்லோரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுடன் இருப்பார்கள் என்பதில்லை. அது அவர்களின் மனம் மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. நல்ல உணவை உட்கொள்வதும், உணர்ச்சிகளை சமநிலையில் வைத்திருப்பதும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். கொரோனா வைரஸ் நீடிக்கும் இந்த காலகட்டத்தில் வயதானவர்கள் உடல்நலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வயதானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    1. தினமும் மேற்கொள்ளும் வழக்கமான உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும். மெதுவான மற்றும் ஆழமான சுவாசம் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும். சிந்தனைகளை பகுத்தறிந்து செயல்படவும் ஊக்குவிக்கும்.

    2. முதிய தம்பதியர் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம். குழந்தை பருவத்தில் விளையாடிய விளையாட்டுகளை மீண்டும் விளையாடி மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளலாம்.

    3. தயிர், கஞ்சி போன்ற இயற்கை புரோபயாட்டிக்குகளை எடுத்துக்கொள்வதும், கோதுமை புல், ஸ்பைருலினா எனப்படும் சுருள் பாசி போன்றவற்றை சாப்பிடுவதும் ரத்தத்தை உருவாக்க உதவும்.

    4. சமையலில் உப்பையும், எண்ணெய்யையும் குறைத்துக்கொள்வது செரிமான அமைப்புக்கு நல்லது. பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதும் செரிமான செயல்பாடுகளுக்கு துணைபுரியும். தண்ணீர், பழஜூஸ், மூலிகை தேநீர், காபி போன்ற பானங்களை குறிப்பிட்ட இடைவெளியில் பருகுவது நீர்ச்சத்தை தக்கவைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

    5. நோய் எதிர்ப்பு சக்தி தூக்கத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. தூக்கமின்மை நோய்களுக்கு நுழைவுவாயிலாக அமைந்துவிடும். இளைஞர்களுடன் ஒப்பிடும்போது வயதானவர்கள் தூக்க விஷயத்தில் அசட்டையாக இருக்கக்கூடாது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு போதுமான அளவு ஓய்வு எடுத்தாக வேண்டும். தினமும் இரவு குறைந்தது 7 மணிநேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    6. அலைபேசி, டி.வி., கணினி ஆகியவை உடலின் இயற்கையான தூக்கவிழிப்பு சுழற்சியை சீர்குலைக்கும் என்பதால் தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அவைகளை தவிர்க்க வேண்டும்.

    7. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் கலந்த உணவுகளும், சர்க்கரையும் அதிக எடை, உடல் பருமனுக்கு வித்திடும். வயதான காலத்தில் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்வது இருதய நோய்கள், நீரிழிவு போன்ற நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டுவிடும். ஆதலால் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

    8. உடற்பயிற்சி செய்தாலோ, வேலை செய்தாலோ, வெப்பமான காலநிலையில் வாழ்ந்தாலோ உடலுக்கு அதிக திரவங்கள் தேவைப்படும். வயதானவர்களுக்கு பெரும்பாலும் தாகம் எடுப்பதில்லை. தாகத்தை உணராவிட்டாலும் போதுமான இடைவெளியில் தவறாமல் திரவ உணவுகளை பருக வேண்டும். வயதானவர்கள் இன்றைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களில் போதிய மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமானது.

    ×