search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227505"

    • அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது.
    •  உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

    தேவையான பொருட்கள்

    முளைகட்டிய கொள்ளு - 1 கப்,

    வெங்காயம் - 4,

    பச்சைமிளகாய் - 2,

    உப்பு, எண்ணெய்-தேவைக்கு,

    பெருங்காயத்தூள், சமையல் சோடா - தலா 1 சிட்டிகை,

    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது.

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொள்ளு பருப்பை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து 8 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து கரகரவென அரைத்துக் கொள்ளவும்.

    இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சமையல் சோடா, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கொள்ளு வடை தயார்.

    • பூசணியில், கண்களின் ஆரோக்கியத்துக்கு அவசியமான வைட்டமின் 'ஏ' அதிக அளவில் இருக்கிறது.
    • பூசணிக்காயைக் கொண்டு காரம் மற்றும் இனிப்பு என பலவகையான உணவுகளை தயாரிக்க முடியும்.

    தேவையான பொருட்கள்:

    பூசணிக்காய் (துருவியது) - 300 கிராம்

    உருளைக்கிழங்கு - 1

    சோளமாவு - 2 தேக்கரண்டி

    அரிசி மாவு - 2 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1 தேக்கரண்டி

    கறி மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    எலுமிச்சம்பழச்சாறு - 1 தேக்கரண்டி

    ரொட்டித்தூள் - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    துருவிய பூசணிக்காயின் மேல் சிறிது தண்ணீர் தெளித்து, 10 நிமிடங்கள் இட்லி வேகவைப்பது போல ஆவியில் வேகவைத்து குளிர்விக்கவும்.

    வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து மேல் தோலை உரித்து மசித்துக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் குளிரவைத்தப் பூசணிக்காய் துருவல், மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறி மசாலா தூள், மிளகு தூள், எலுமிச்சம்பழச்சாறு, அரிசி மாவு, சோளமாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.

    இந்தக் கலவையை கட்லெட் வடிவத்தில் தட்டிக்கொள்ளவும்.

    பின்பு ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.

    அடிகனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் கட்லெட்டை அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    இப்பொழுது சுவையான பூசணிக்காய் கட்லெட் தயார்.

    இதை தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    • நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.
    • இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மெல்லிய அவல் - 2 கப்,

    அரிசி மாவு - 1/4 கப்,

    ரவை (வெள்ளை) - 3 டேபிள் ஸ்பூன்,

    பெரிய வெங்காயம் - 1.

    கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 2,

    கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன்,

    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,

    பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கு,

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மெல்லிய அவலை நன்றாகக் கழுவி (ஊற விட வேண்டாம்), நீரினை வடிகட்டி கொள்ளவும்.

    வடிகட்டிய அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடைசியாக ரவை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

    சிவபெருமானுக்கு நைவேத்தியமாக படைக்க அவல் வடை ரெடி.

    • பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும்.
    • இது பற்கள், எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

    தேவையான பொருட்கள்

    பன்னீர் - 200 கிராம்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 3

    பூண்டு - 2 பல்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    இஞ்சி - சிறிய துண்டு

    சீரகம் - 1 டீஸ்பூன்

    கடுகு - ½ டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    * பூண்டை தோல் நீக்கி நசுக்கிகொள்ளவும்.

    * ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    * ஒரு ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம், சேர்த்து தாளிக்கவும்.

    * பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் நசுக்கிய பூண்டு, இஞ்சி துருவல், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

    * பிறகு துருவி வைத்துள்ள பன்னீர் சேர்த்து அதனுடன் மிளகுத் தூள், சேர்த்து கிளறி கொத்தமல்லி தலை தூவி இறக்கவும்.

    * இப்பொழுது சுவையான பன்னீர் பொடிமாஸ் தயார்.

    • மீனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • மீனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் - அரை கிலோ

    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    வினிகர் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்

    சோள மாவு - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை :

    வெங்காயத்தை தோல் நீக்கி பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

    மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வண்டும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கழுவிய மீனை போட்டு, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி ஆற விடவும்.

    மீனில் உள்ள தோல், முள்ளை எடுத்து விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து மசித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, வெங்காய விழுது, உப்பு, வினிகர் சேர்த்து நன்றாக பிசைந்து, அதனை உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையையும் நீளவாக்கில் தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள மீன் கபாப்பை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    அருமையான பிஷ் கபாப் ரெடி.

    • முருங்கைக் கீரையில் பொரியல், கூட்டு செய்து இருப்பீங்க.
    • இன்று முருங்கைக் கீரையில் பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கடலை மாவு - 200 கிராம்

    வெங்காயம் - 50 கிராம்

    முருங்கைக் கீரை - 2 கைப்பிடி அளவு

    நறுக்கிய பச்சை மிளகாய் - 2

    நெய் - ஒரு டீஸ்பூன்

    சோம்பு - ஒரு டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    முருங்கைக் கீரையை காம்பு இல்லாமல் இலையை மட்டும் ஆய்ந்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் உருக்கிய நெய்யுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக் கீரை, சோம்பு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    பின்பு சிறிது நீர் தெளித்து கையால் நன்றாக கலக்கிக் கொள்ளவும். மாவு உதிரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயக் கலவையை உதிரி உதிரியாகப் போட்டு, பொன்னிறமாக சிவந்து வரும்வரை பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான முருங்கைக் கீரை பக்கோடா ரெடி.

    • கடல் உணவுகளில் பெரும்பாலானவர்களுக்கு பிடித்தது இறால்.
    • ‘இறால் பால்ஸ்’ எவ்வாறு சமைப்பது என்பதை இங்கு காணலாம்...

    தேவையான பொருட்கள்:

    இறால் - 500 கிராம்

    மிளகு தூள் - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    முட்டை - 1

    சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

    சோளமாவு - 2 தேக்கரண்டி

    ரொட்டித் தூள் / நுணுக்கிய பொறை - 8 தேக்கரண்டி

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 2

    வெங்காயம் பெரியது - 1

    கொத்தமல்லித் தழை - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    இறாலை நன்றாக சுத்தம் செய்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுதுடன், பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    ஊறவைத்த இறாலை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் இறாலுடன் மிளகுத்தூள், உப்பு, சோயா சாஸ், அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    பின்பு முட்டையை சிறிய பாத்திரத்தில் நன்றாக அடித்துக் கலக்கவும். அதனை இறாலுடன் சேர்த்துக் கிளறவும்.

    பின்னர் அதில் சோள மாவு, 4 தேக்கரண்டி ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையை சேர்த்து நன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

    இந்த இறால் உருண்டைகளை மீதமிருக்கும் ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையில் மென்மையாக உருட்டி 30 நிமிடங்கள் வரை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.

    பின்பு அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். அது நன்றாக சூடானதும், அதில் இறால் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

    அதன் மேல் சிறிது கொத்தமல்லித்தழையைத் தூவவும்.

    இப்பொழுது மொறுமொறு இறால் பால்ஸ் தயார்.

    இதனுடன் சில்லி சாஸ் கலந்த மயோன்னசை சேர்த்து சாப்பிடலாம்.

    • மாலை நேரத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் கொத்துக்கறி - அரை கிலோ

    முட்டை - 1

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - 2

    பூண்டு - 2

    துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    கச கசா - 1 டீஸ்பூன்

    முந்திரி பருப்பு - 10

    வறுத்த பொட்டுக்கடலை - 1 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    கிராம்பு - 2

    கசகசா - 2 டீஸ்பூன்

    பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    மட்டன் கொத்துகறியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கசகசா மற்றும் முந்திரி பருப்பை போட்டு வறுக்கவும்.

    அது சற்று பொன்னிறமாக மாறியதும் அதில் பொட்டுக்கடலையை சேர்த்து நன்றாக வறுக்கவும். பின், இந்த கலவையில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்..

    பின், இந்த கலவையில் தேங்காய் துருவல், கொத்தமல்லி, உப்பு மற்றும் கறிவேப்பில்லை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கியதும், இதில் மட்டனை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    பின்னர் இந்த கலவை நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

    அரைத்த மட்டன் விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் முட்டையை சேர்த்து விட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின், அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி செய்து வைத்த மட்டன் உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இதனை அப்படியே சூடாக பரிமாறவும். அவ்ளோ தான் சூடான சூப்பரான மட்டன் கோலா உருண்டை ரெடி.

    • டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் ரொம்ப பிடிக்கும்.

    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 1 கப்,

    அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

    இஞ்சி - சிறிய துண்டு,

    பச்சை மிளகாய் -1,

    கடைந்த தயிர் (புளித்தது) - அரை கப்,

    சீரகம் - அரை டீஸ்பூன் (தட்டிப் போடவும்),

    எண்ணெய் - தேவையான அளவு,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவை போட்டு நன்றாக கலந்த பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி, ப.மிளகாய், கடைந்த தயிர், சீரகம், உப்பு சேர்த்து உருட்டி போடும் பதத்தில், கட்டியின்றி நன்கு கலக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சூடான எண்ணெயில் போண்டாக்களாக உருட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான மைதா போண்டா ரெடி.

    இதை சூடாக சாப்பிட வேண்டும். ஆறிவிட்டால் ருசி மிகவும் குறையும்.

    இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி சூப்பராக இருக்கும்.

    • உருளைக்கிழங்கில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று சில்லி பொட்டேட்டோ செய்முறை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 5

    சோள மாவு - 1/4 கப்

    மைதா - 1/4 கப்

    உப்பு - தேவையான அளவு

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    மிளகு தூள் - விருப்பத்திற்கேற்ப

    சாஸ் செய்ய

    நறுக்கிய பூண்டு - 1 தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    நறுக்கிய குடைமிளகாய் - 1/2 கப்

    சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

    சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி

    மிளகாய் சாஸ் - 1 மேசைக்கரண்டி

    தக்காளி கெட்ச்அப் - 2 மேசைக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    வினிகர் - 2 தேக்கரண்டி

    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

    சோள மாவு - 1 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கு

    செய்முறை

    உருளைக்கிழங்கு தோல்களை சீவி விட்டு நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் சோள மாவு, மைதா மாவு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மிளகுத்தூள் மற்றும் தண்ணீரை படி படியாக சேர்த்து கரைத்துக்கொள்ளவும். சற்று தளர்வாக கரைத்து கொள்ளவும்.

    நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கை கரைத்த மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானவுடன் இதில் குடை மிளகாய், சில்லி சாஸ், பச்சை மிளகாய் சாஸ், தக்காளி கெட்சப், மிளகாய்த்தூள், வினிகர் சேர்த்து நன்கு வதக்கவும்.

    நன்கு வதக்கிய பின்பு இதில் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

    அடுத்து அதில் தண்ணீரில் கரைத்த சோள மாவு கரைசலை சேர்த்து நன்கு கலக்கவும்.

    கலவை திக்கான பதம் வந்ததும் பொரித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலந்து இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சில்லி பொட்டேட்டோ தயார்.

    • உருளைக்கிழங்கில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு, பிரெட் ஸ்லைஸ் - தலா 5,

    மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலா - தலா அரை டீஸ்பூன்,

    எலுமிச்சைச் சாறு -  ஒரு டீஸ்பூன்,

    கொத்தமல்லி - சிறிதளவு,

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்.

    மசித்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நீரில் நனைத்து ஒட்டப் பிழிந்த பிரெட் ஸ்லைஸ், கொத்தமல்லி, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டவும்.

    தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, தட்டிவைத்த டிக்கிகளை போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஆலு பிரெட் டிக்கிஸ் ரெடி.

    • காய்கறி சாப்பிடாத குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடும்.
    • 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள் :

    வடித்த சாதம் - 2 கப்

    கோஸ், கேரட், பீன்ஸ் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப்,

    பெரிய வெங்காயம் - 2

    கார்ன் ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன்

    கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

    பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,

    பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது - 2 டீஸ்பூன்,

    எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,

    கொத்தமல்லி - சிறிதளவு,

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை :

    * கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வடித்த சாதத்தை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

    * கோஸ், பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் அரைத்த சாதம் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கோஸ், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு, கார்ன் ஃப்ளார், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு அனைத்தையும் போட்டு கொட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். மாவு தளர்வாகி விட்டால் கடலை மாவு சேர்த்து கொள்ளலாம்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடனாதும் கலந்து வைத்த கலவையை உருண்டைகளாக பிடித்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    * சூடான ரைஸ் வெஜ் பால்ஸ் ரெடி.

    * தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

    ×