search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227505"

    • 10 நிமிடத்தில் இந்த் ஸ்நாக்ஸ் செய்யலாம்.
    • குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருள்கள்:

    உருளைக்கிழங்கு - 4

    ரவை -1 கப்

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    பச்சை மிளகாய் - 4

    வெங்காயம் - 2

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் தேவையான உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ரவையை சேர்த்து கட்டி வராமல் நன்றாக கிளறி விட வேண்டும். 10 நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    ரவையில் மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

    பிசைந்த கலவையை விரல் வடிவில் உருட்டி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அதில் உருட்டி வைத்த ரவை உருளைக்கிழங்கை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    பொரித்ததை ஒரு தட்டில் வைத்து தக்காளி சாஸுடன் சேர்த்து சாப்பிட்டால் கலக்கல் சுவையாக இருக்கும்..

    • இது அனைவருக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ்.
    • 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    சுத்தம் செய்த காலிஃப்ளவர் -1 கப்,

    மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்,

    கான்ஃபிளவர் மாவு – 2 ஸ்பூன்,

    கடலை மாவு – 1 ஸ்பூன்,

    காஷ்மீரி சில்லி – 2 ஸ்பூன்,

    மிளகு தூள் – 1 ஸ்பூன்,

    சீரகத்தூள் -1/2 ஸ்பூன்,

    உப்பு – 1ஸ்பூன்,

    கரம் மசாலா – 1/2 ஸ்பூன்,

    தனியா தூள் -1 ஸ்பூன்,

    கறிவேப்பிலை -1 கொத்து,

    எண்ணெய் – 250 கிராம்.

    செய்முறை

    அடுப்யில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதிக்கும் போது அதில் அரை ஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், இதை சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு சுத்தம் செய்து வைத்து காலிஃப்ளவரை இதில் சேர்த்து பத்து நிமிடம் கழித்து காலிஃப்ளவரை எடுத்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு பவுலில் கான்பிளவர் மாவு, கடலை மாவு, காஷ்மீரி சில்லி தூள், தனியா தூள், கரம் மசாலா, மிளகு தூள், சீரகம் தூள், மஞ்சள் தூள், உப்பு இவை அனைத்தையும் சேர்த்து பிறகு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி (இது போன்று மசாலா பொருட்களை பொரிக்க தயார் செய்யும் போது அத்துடன் எப்போதும் எண்ணெய் சேர்த்து பிசையும் போது மசாலாக்கள் அதில் நன்றாக ஊறி உதிராமல் இருக்கும் அதே நேரத்தில் நல்ல மொறு மொறுப்பாகவும் இருக்கும்). அத்துடன் லேசாக தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்தில் மாவை கரைத்து கொள்ளுங்கள்.

    காலிஃப்ளவரை மசாலாவில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் அதிக சூட்டுடன் இருக்கும் போது காலிஃப்ளவரை போட்டால் கருகி ருசி மாறி விடும். எண்ணெய் அதிகம் சூடாகாமல் காலிஃப்ளவரை பொரித்தால் எண்ணெய் அதிகமாக குடித்து காலிஃப்ளவர் மெது மெது வென்று ஆகி விடும்.

    இப்போது காய்ந்த எண்ணெயை மிதமான சூட்டிற்கு மாற்றிய பிறகு, மசாலா கலந்த காலிஃப்ளவரை ஒவ்வொன்றாக எடுத்து போட்டு விடுங்கள். காலிஃப்ளவரை போட்ட உடன் திருப்பி போடக் கூடாது. எதையும் செய்யாமல் இரண்டு நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். எண்ணெய் சலசலப்பு பாதி வரை அடங்கிய பிறகு தான், அதை மறுபுறம் திருப்பிப் போட வேண்டும். எண்ணெய் சலசலப்பு முழுதாக அடங்கிய பிறகு காலிஃப்ளவரை அதிலிருந்து எடுத்து ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் உறிஞ்சிய பிறகு கறிவேப்பிலை மேலே தூவி பரிமாறுங்கள்.

    • பூசணியில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் இருக்கிறது.
    • பூசணியில் பலவகையான உணவுகளை தயாரிக்க முடியும்.

    தேவையான பொருட்கள்:

    பூசணிக்காய் (துருவியது) - 300 கிராம்

    உருளைக்கிழங்கு - 1

    சோளமாவு - 2 தேக்கரண்டி

    அரிசி மாவு - 2 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1 கறி

    மசாலாத்தூள் - 1

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    எலுமிச்சம்பழச்சாறு - 1 தேக்கரண்டி

    ரொட்டித்தூள் - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து மேல் தோலை உரித்து மசித்துக்கொள்ளவும்.

    துருவிய பூசணிக்காயின் மேல் சிறிது தண்ணீர் தெளித்து, 10 நிமிடங்கள் இட்லி வேகவைப்பது போல ஆவியில் வேகவைத்து குளிர்விக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் குளிரவைத்தப் பூசணிக்காய் துருவல், மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறி மசாலா தூள், மிளகு தூள், எலுமிச்சம்பழச்சாறு, அரிசி மாவு, சோளமாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.

    இந்தக் கலவையை கட்லெட் வடிவத்தில் தட்டிக்கொள்ளவும்.

    பின்பு ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.

    அடிகனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் கட்லெட்டை அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    இப்பொழுது சுவையான பூசணிக்காய் கட்லெட் தயார்.

    இதை தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    • மழை நேரத்தில் சூடான காபி, டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
    • காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்துகொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - சிறியது 1

    கேரட் - 1

    கோஸ் - 100 கிராம்

    பீன்ஸ் - 75 கிராம்

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

    மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு,

    எண்ணெய் - 250 கிராம்.

    மேல்மாவுக்கு:

    கடலை மாவு - 150 கிராம்,

    அரிசி மாவு - 25 கிராம்,

    உப்பு - சிறிதளவு.

    செய்முறை:

    காய்கறிகளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய காய்களை போட்டு நன்கு வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் நீர் சேர்த்து, தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் வெஜிடபிள் கலவை உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    இதை சாஸ் உடன் பரிமாறவும்.

    தேங்காய் சட்னி, புதினா சட்னியும் தொட்டுக்கொள்ளலாம்.

    • இன்று அனுமனுக்கு படைக்க நைவேத்தியத்தை செய்யலாம்.
    • இந்த வடை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள்

    முழு கருப்பு உளுந்து - 1 கப்

    மிளகு - 2 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

    செய்முறை

    முழு உளுந்தை நன்றாக கழுவி ஐந்து மணி நேரம் ஊற வைத்து , தோலுடன் சிறிது கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    மிளகு, சீரகத்தை வெறும் கடாயில் வறுத்து, மிக்சியில் கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்.

    அரைத்த மாவுடன் மிளகு, சீரகப்பொடி, உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை மெல்லிய வடைகளாக, வாழை இலையில் தட்டிப் போட்டு போடவும்.

    நன்றாக வெந்து பொன்னிறமாக முறுவலாக வந்ததும் எடுக்கவும்.

    இப்போது சுவையான ஆஞ்சநேயர் கோவில் மிளகு வடை ரெடி.

    • இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்யலாம்.
    • திடீரென விருந்தினர் வந்தால் இந்த ரெசிபி செய்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள் :

    உளுந்து அப்பளம் அல்லது மிளகு அப்பளம் - 4,

    கடலை மாவு - 100 கிராம்,

    அரிசி மாவு - 20 கிராம்,

    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

    சமையல் சோடா- ஒரு சிட்டிகை,

    பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு,

    எண்ணெய் - 300 கிராம்.

    செய்முறை:

    ஒவ்வொரு அப்பளத்தையும் நான்காக கட் செய்துகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

    இதில் ஒரு டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய் விட்டுக் கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அப்பளத் துண்டுகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான அப்பள பஜ்ஜி ரெடி.

    குறிப்பு: அப்பளத்தில் உப்பு இருக்கும் என்பதால், கவனமாக சற்று குறைவான உப்பை மாவில் சேர்க்கவும்.

    • இந்த சமோசா செய்வது மிகவும் சுலபம்.
    • குழந்தைகள் இந்த சமோசாவை விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    வெங்காயம் - 3 கப்

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 2

    கொத்தமல்லி தழை- 1/2 கப்

    எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து தண்ணீர் விட்டு சாப்பாத்தி மாவு போல் பிசைந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    சிறிதளவு மைதாவை தண்ணீர் சேர்த்து பசை போல் கரைத்து வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெங்காயம், மிளகாய் தூள், சீரக பொடி, பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து பிசரி கொள்ளவும்.

    பிசைந்து வைத்த மாவை சாப்பாதி போல் மெல்லியதாக திரட்டி அதை முக்கோணமாக மடித்து கொண்டு செய்து வைத்திருந்த வெங்காய கலவையை நிரப்பி ஓரங்களில் மைதா பசையை தடவி மூடிவிடவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சுவையான வெங்காய சமோசா ரெடி.

    • சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • காபி, டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    பெரிய வெங்காயம் - கால் கிலோ,

    கடலை மாவு - 150 கிராம்,

    அரிசி மாவு - 25 கிராம்,

    கறிவேப்பிலை - 2 ஆர்க்கு,

    இஞ்சி - ஒரு துண்டு,

    பச்சை மிளகாய் - 5

    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு,

    எண்ணெய் - 300 கிராம்.

    செய்முறை:

    பெரிய வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவை போட்டு நன்றாக கலந்த பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் சூடான எண்ணெய் 2 டீஸ்பூன், சிறிது தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சூடான எண்ணெயில் உதிர்த்து போட்டு சிவக்க பொரிக்கவும். விருப்பப்பட்டால்... 4, 5 பூண்டுப் பற்களை நசுக்கி சேர்க்கலாம்.

    இப்போது சூப்பரான தூள் பக்கோடா ரெடி.

    • பாகற்காய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • பாகற்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - 200 கிராம்,

    கடலை மாவு - 100 கிராம்,

    அரிசி மாவு - 20 கிராம்,

    ஓமம் - கால் டீஸ்பூன்,

    ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை,

    மோர் - சிறிதளவு,

    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,

    மிளகாய்த்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    பாகற்காயை விதை நீக்கி வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

    நீரை சூடாக்கி பாகற்காயை போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டவும்.

    பிறகு பாகற்காயை மோரில் போட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். அப்போது தான் கசப்பு இருக்காது.

    அடுத்து பாகற்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடலை மாவு, அரிசிமாவு, உப்பு, மிளகாய்த்தூள், ஓமம் மற்றும் ஃபுட் கலர் சேர்த்து, நீர் தெளித்து நன்கு பிசிறவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்தக் கலவையை சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பாகற்காய் பக்கோடா ரெடி.

    • மாலையில் டீ, காபியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
    • இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    உளுத்தம் பருப்பு - 1 கப்

    கறிவேப்பிலை - சிறிது

    பச்சை மிளகாய் - 3

    மிளகு - 1 டீஸ்பூன்

    தேங்காய் - விருப்பத்திற்கேற்ப

    அரிசி மாவு - 2 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை

    ப.மிளகாய், கறிவேப்பிலை, தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்து நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாகவும், ஓரளவு கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, மிளகு, தேங்காய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் நெருப்பை மிதமாக வைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எடுத்து போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இதேப்போன்று அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சுவையான மைசூர் போண்டா ரெடி!!!

    • இந்த பூரிக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
    • இந்த பூரி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 1 1/2 கப்

    சீரகம் - 1/2 தேக்கரண்டி

    சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி

    எண்ணெய்

    வாழைப்பழம் - 1

    ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி

    சர்க்கரை - 2 தேக்கரண்டி

    தயிர் - 1 மேசைக்கரண்டி

    செய்முறை

    மிக்சியில் வாழைப்பழம, ஏலக்காய் தூள், சர்க்கரை, தயிர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் சீரகம், சமையல் சோடா சேர்த்து நன்றாக கலந்த பின்னர் அரைத்த வாழைப்பழ விழுதை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். இதற்கு தண்ணீர் சேர்க்க தேவையில்லை. அரைத்ததே போதுமானது.

    மாவை நன்றாக பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    பின்னர் மாவை பூரிகளாக தேய்த்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான வாழைப்பழ பூரி ரெடி.

    • இந்த ரெசிபி வெளியே மொறு மொறு என்றும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.
    • சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 200 கிராம்

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    மிளகு தூள் - ½ தேக்கரண்டி

    சோள மாவு - 5 தேக்கரண்டி

    ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறை - 100 கிராம்

    பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    தண்ணீர் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    பன்னீரை சிறிய சதுர வடிவ துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகள், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை, சிறிது மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் மீதமிருக்கும் மிளகு தூள், சோள மாவு, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் தோசை மாவு பதத்தில் கலக்கிக்கொள்ளவும்.

    பின்னர் மசாலா கலந்திருக்கும் பன்னீர் துண்டுகளை, சோளமாவு கலவையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையில் புரட்டி எடுத்து, மீண்டும் சோளமாவு கலவையில் தோய்த்து, எண்ணெய்யில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

    இப்போது சுவையான மொறு மொறு பன்னீர் பாப்கார்ன் தயார்.

    இதை தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    ×