என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் நிறுத்தம்"

    • குன்னத்தூர் ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
    • நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

    அன்னூர்,

    கோவை மாவட்டம்

    அன்னூர் வட்டத்திற்கு ட்பட்ட குன்னத்தூர் ஊராட்சியில் 6 குக்கிரா மங்களுடன் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சியானது கோவை வழித்தடம் சத்தியமங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஊராட்சி அலுவலகத்திற்கு எதிராக பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள மரத்தடியில் பயணிகள் நின்று பஸ் ஏறி செல்வார்கள்.

    திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் இந்த பஸ்நிறுத்தத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    ஆனால் பல ஆண்டுகளாக இவர்கள் மரத்தடியில் நின்றபடியே பஸ் ஏறுகிறார்கள். மழை காலங்களில் நனைந்தபடியே நின்று பஸ் ஏறுவதை காண முடிகிறது. இதனால் இங்கு பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த கோரிக்கையை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ஜக்கனாரை கிராமத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் குவியலாக உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சிக்கு உட்பட்ட ஜக்கனாரை ஊராட்சியில் 2021ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சமீப காலம் வரை அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளன. இந்நிலையில் கோத்தகிரி ஜக்கனாரை கிராமத்தில் பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் குவியலாக உள்ளது.

    இதனால் காட்டு பன்றி, கரடி போன்ற வனவிலங்குகள் குப்பைகளை கிளரி விடுவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஜக்கனாரை கிராமத்தில் பஸ் நிறுத்தம் பராமரிப்பின்றி குப்பைகளால் சூழ்ந்துள்ளது இதனால் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஜக்கனாரை ஊராட்சி பகுதிகளில் அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நடுவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
    • பேரூராட்சி மன்றத் தலைவி பாக்கியலட்சுமி அறவாழி உள்ளிட்ட பலர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள நடுவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு செபத்தையாபுரம் லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் விஸ்வநாதன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் ஆலயமணி, சங்கத் தலைவர் ஜெயராஜ் சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவி பாக்கியலட்சுமி அறவாழி, சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரபா, கூட்டுறவு பண்டக சாலை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் த.அறவாழி, நகர தி.மு.க. செயலாளர் நா.கண்ணன், பேரூராட்சி துணை தலைவர் பிரியா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெப தங்கம் பிரேமா ஜெயக்குமார், எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார், முத்துராஜ்,இந்திரா, சுமதி, அமுதா, ப்ளாட்டினா மேரி, மற்றும் சாயர்புரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் நாகராஜன், பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் பேரூராட்சி ஊழியர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை லயன்ஸ் சங்க செயலர் சாலொமோன் பொன்ராஜ், செபத்தையாபுரம் ஊர் நலக் கமிட்டி தலைவர் அமிர்தராஜ் மற்றும் எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • பஸ் நிறுத்தம் அடையாளம் தெரியாத நபரால் ஜே.சி.பி எந்திரம் மூலம் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • சந்தேகம் படும்படியாக ஜே.சி.பி எந்திரத்துடன் நின்றார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மற்றும் அரசு விளையாட்டு அரங்கம் அருகே பஸ் நிறுத்தம் இருந்தது. கடந்த 7ந் தேதி நள்ளிரவு இந்த பஸ் நிறுத்தம் அடையாளம் தெரியாத நபரால் ஜே.சி.பி எந்திரம் மூலம் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அன்று நள்ளிரவு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்கால் நகர போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி மர்ம நபர்களை கண்டுபிடித்து உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில், காரைக்கால் நகராட்சி பில் கலெக்டர் ஜோசப் என்பவர் நேற்று காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், கடந்த 7ந் தேதி இரவு விழுப்புரம் வானூர் பகுதியைச்சேர்ந்த செந்தில்குமார் (வயது 44) பஸ் நிறுத்தம் அருகே சந்தேகம் படும்படியாக ஜே.சி.பி எந்திரத்துடன் நின்றார். அவர்தான் நகராட்சிக்கு சொந்தமான ரூ.2 லட்சம் மதிப்பிலான பஸ் நிறுத்தை இடித்திருக்கவேண்டும். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதன்படி போலீசார் செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நாள்தோறும் பல்வேறு தேவைகளுக்காக உடுமலை ஒன்றிய அலுவலகத்திற்கு பல்வேறு கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.
    • பல ஆண்டு காலமாக சாலை ஓரம் நின்று பஸ்சில் ஏறி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு ட்பட்ட 29 வது வார்டு பகுதியில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளன. மேலும் அந்த பகுதியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அதிக அளவு உள்ளன. இந்த நிலையில் நாள்தோறும் பல்வேறு தேவைகளுக்காக உடுமலை ஒன்றிய அலுவலகத்திற்கு பல்வேறு கிராம மக்கள் வந்து செல்கின்றனர். இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு மாதந்தோறும் மாத்திரைகள் வாங்குவதற்கும் தினமும் சிகிச்சைக்காகவும் பலர் தினம் வந்து செல்கின்றனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-

    இந்த பகுதிக்கு அடிப்படை தேவைகளுக்காக வந்து செல்லும் பொதுமக்களுக்கு பேருந்துக்காக காத்திருக்க வேண்டிக்கும்போது தளி சாலையில் பஸ் நிறுத்தம் அமைக்கப்படாத காரணத்தால் பல ஆண்டு காலமாக சாலை ஓரம் நின்று பஸ்சில் ஏறி வருகின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மழை, வெயில் காலங்களில் அருகில் உள்ள கடைகளில் ஒதுங்கி நிற்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் ஆக்கிரப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றை அகற்றி பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் தற்பொழுது வரை பேருந்து நிறுத்த அமைக்கப்படவில்லை.ஆகையால் சம்பந்தப்பட்ட உடுமலை நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு உடனடியாக பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கமுதி முஷ்டகுறிச்சியில் பஸ் நிறுத்தம் கட்ட பூமிபூஜை நடந்தது.
    • இதில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி-கீழ்குடி சாலையில் உள்ள முஷ்டகுறிச்சி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் மெயின் ரோட்டுக்கு வந்து தான் மற்ற ஊர்களுக்கு செல்ல முடியும். இங்கு பஸ் நிறுத்தம் இல்லாததால், வெளியூர் செல்பவர்கள், வெயில் மற்றும் மழையில் நின்று சிரமப்படும் நிலை இருந்தது. இங்கு பஸ் நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று தெற்கு மாவட்ட தி.மு.க. கவுன்சிலர் போஸ் சசிக்குமார் தனது மாவட்ட கவுன்சில் நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிறுத்த கட்டிடம் கட்ட ஒப்புதல் அளி்ததார். இதையடுத்து பூமி பூஜை நடந்தது. இதில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • பஸ் நிறுத்தத்தை சிறிது தொலைவில் அமைப்பது தொடர்பாக ஆலோசித்துள்ளோம்
    • இறைச்சி கடைக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் சுகாதார சீர்கேடு, கழிவுநீர் பிரச்சனை, குடிநீர் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சனைகளை விரைந்து தீர்க்க மேயர் மகேஷ் தினமும் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்.

    பால்பண்ணை சந்திப்பு பகுதியில் இருந்து இன்று தனது ஆய்வை மேயர் மகேஷ் தொடங்கினார். அப்போது அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் போக்குவரத்துக்கு இடை யூறாக இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த பஸ் நிறுத்தத்தை சிறிது தொலை வில் மாற்றுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண் டார். பின்னர் டெரிக் சந்திப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது அந்த பகுதியில் உள்ள இறைச்சிக் கடை ஒன்று அரசின் விதிமுறைக்குட்பட்டு செயல்படாதது தெரிய வந்தது. ஏற்கனவே அந்த இறைச்சி கடைக்கு நோட் டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

    டெரிக் சந்திப்பு பகுதியில் மழை நேரங்களில் தண்ணீர் சாலைகளில் தேங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடைகளை சீரமைத்து சாலைகளில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரி யிடம் கூறினார்.

    பின்னர் ஜேக்கப் தெரு பகுதியில் ஆய்வு மேற் கொண்டபோது காலி இடத்தில் குப்பைகள் மழை போல் குவிந்து கிடந்தது. அந்த இடத்தில் கிடந்த குப்பைகளை உடனடியாக மாற்றுவது தொடர்பாக அதிகாரியிடம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பால்பண்ணை பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் போக்கு வரத்துக்கு இடையூறாக இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.பஸ் நிறுத்தத்தை சிறிது தொலை வில் அமைப்பது தொடர் பாக ஆலோசித் துள்ளோம். இது தொடர்பாக ஆலோ சித்து நடவடிக்கை எடுக்கப் படும்.

    ஏற்கனவே நாகர்கோவில் மாநகர பகுதியில் இறைச்சி களை வெட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. தற்பொழுது இறைச்சி கடையில் உள்ள கழிவுகள் சாக்கடையில் கலப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் துர்நாற் றம் வீசுவதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இறைச்சிகளை வெட்டும் ேபாது அரசின் விதிமுறைகள் உட்பட்டு வெட்ட வேண்டும். இல்லாத இறைச்சி கடைக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஜேக்கப் தெரு பகுதியில் காலி இடத்தில் குப்பைகள் அதிகளவு கொட்டப்பட்டு இருந்தது. அந்த இடம் யாருக்கு சொந்தமான இடம் என்று தெரியவில்லை. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமா னோர் அந்த பகுதியில் குப்பைகளை தொடர்ந்து கொட்டி விடுவதால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. உடனடியாக அந்த குப்பை களை அகற்ற அதிகாரி களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளரிடம் பேசி குப்பைகளை அங்கே கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் நகரில் மழை நேரங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் சாக்கடைகள் சுத்தம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது ஆணை யாளர் ஆனந்த மோகன், நகர்நல அதிகாரி ராம் மோகன், என்ஜினீயர் பால சுப்ரமணியன், மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • பஸ் நிறுத்தம் அருகே மயங்கி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை பாண்டியன் நகர் முல்லை நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (49). இவர் தெற்குவாசல் பஸ் நிறுத்தம் அருகே காத்திருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.

    அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து உறவினர் சாகுல் ஹமீது கொடுத்த புகாரின் பேரில் தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள ஐகோர்ட்டு அதிகாரிகள் குடியிருப்பில் வசித்தவர் பாரதிராஜா (41). இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மனைவி ஹேம சிவரஞ்சனி கொடுத்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிண்டி தபால் நிலையம் அருகில் ஒரு பஸ் நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
    • பூங்கா ரெயில் நிலைய சுரங்கப்பாதை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் சென்னை நகரம் முழுவதும் சோதனை செய்து ஒரு சில இடங்களில் புதிய பஸ் நிலையங்களை நிறுவவும், நடை பாதைகள் அமைக்கவும், பஸ் நிறுத்தத்தை மாற்றவும் பரிந்துரை செய்துள்ளனர்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முன்புறம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

    அண்ணாசாலையில் உள்ள நடைபாதையை சிட்கோ பஸ்நிறுத்தம் வரை நீட்டிப்பதன் மூலம் ரெயில்வே நடைபாலத்தை ஒருங்கிணைக்க பரிந்துரை செய்துள்ளனர். இதே போல் நுங்கம்பாக்கத்தில் உள்ள காதர் நவாஸ்கான் சாலை நடைபாதையாக மாற்றப்பட உள்ளது.

    கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிண்டி தபால் நிலையம் அருகில் ஒரு பஸ் நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும் சின்ன மலை மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் ஒரு பஸ் நிலையம் அமைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு நடைபாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பூங்கா ரெயில் நிலைய சுரங்கப்பாதை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.

    இதற்கிடையே சில அமைப்புகள் சென்னையில் உள்ள 10 பஸ் நிறுத்தங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாக கண்டறிந்து உள்ளன. சென்னை கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் கல்லூரி, அசோக் பில்லர், சின்னாண்டி மடம், ஐ.ஓ.சி. நகர், முத்தமிழ் நகர், வியாசர் பாடி மார்க்கெட், சிட்கோ, வாசுகி நகர், சைதாப்பேட்டை ஆகிய பஸ் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளன.

    சில பஸ் நிறுத்தங்கள் மதுக்கடை அருகில் அமைந்துள்ளன. சில பஸ் நிறுத்தங்களில் ஆண்கள் மது அருந்துகிறார்கள். விளக்குகள் இல்லாத சில பஸ் நிறுத்தங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன என்றும் தெரிவித்துள்ளன.

    • பஸ்கள் வரும் நேரத்தை காண்பிப்பது பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.
    • பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் அறிவிப்புகள் வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பஸ்கள் எந்தெந்த பஸ் நிறுத்தத்துக்கு எப்போது வரும். அங்கிருந்து எப்போது புறப்படும் என்ற தகவலை வழங்குவதற்காக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இந்த தகவல்களை செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உள்பட தமிழகத்தில் உள்ள 7 போக்குவரத்து கழகங்கள் டெண்டர் விட்டுள்ளன. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விழுப்புரம், கும்பகோணம், திருநெல்வேலி, சேலம், கோவை, மதுரை ஆகிய 7 போக்குவரத்து கழகங்களில் பஸ் நிறுத்தத்துக்கு பஸ்கள் வரும் நேரம், அங்கிருந்து புறப்படும் நேரம் ஆகியவை செல்போன் செயலி மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்ப டும். இது அனைத்து பஸ் நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள், பஸ் வழித் தடங்களில் பஸ்களின் வருகை, புறப்படும் நேரம் பற்றிய தற்போதைய போக்குவரத்து தகவல்களை வழங்கும்.

    இந்த டெண்டரில் 7 போக்குவரத்து கழகங்களுக்கான வடிவமைப்பு, மேம்பாடு, செயல்படுத்தும், ஒருங்கிணைப்பு, வாகன திட்டமிடல் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.

    இந்த வசதி 2213 புதிய டீசல் பஸ்கள், 500 மின்சார பஸ்களில் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பஸ்களின் வருகை, புறப்பாடு குறித்த தகவல் அமைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். பஸ்கள் வரும் நேரத்தை காண்பிப்பது பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.

    மேலும் பஸ்கள் வரும்போது பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் அறிவிப்புகள் வழங்க வேண்டும் என்றனர்.

    • சென்னை வாழ் மக்களுடன் பிரிக்க முடியாத அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த மின்சார ரெயில் சேவையை போலவே பஸ் போக்குவரத்தும் உள்ளன.
    • போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவையும் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

    'பெருநகரம்' என்ற அந்தஸ்தை பெற்ற சென்னை மாநகராட்சி சுமார் 90 லட்சம் மக்கள் தொகையை கொண்டதாகும். சென்னை நகரத்தோடு புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் கொண்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

    சென்னை வாழ் மக்களுடன் பிரிக்க முடியாத அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த மின்சார ரெயில் சேவையை போலவே பஸ் போக்குவரத்தும் உள்ளன. 620 வழித்தடங்களில் 3 ஆயிரம் மாநகர பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. அதில் 30 லட்சம் மக்கள் தினமும் பயணம் செய்கிறார்கள். மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களை அன்றாடம் மாநகர பஸ்கள் சுமந்து செல்லும் சேவையை செய்து வருகிறது.

    இதற்கிடையில் சென்னையை சிங்கார சென்னையாக மாற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகிறது. தூய்மை, பசுமையான எழில்மிகு நகரமாக உருவாக்குவதற்கான பல்வேறு திட்டப்பணிகள் கடந்த 2 வருடமாக முழு வீச்சில் நடைப்பெற்று வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவையும் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. மெட்ரோ ரெயிலில் தினமும் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

    சென்னையில் நாளுக்கு நாள் வாகன பெருக்கமும், மக்கள் நெருக்கமும் அதிகரித்து வரும் நிலையில் அதனை கண்காணித்து அதற்கேற்றவாறு புதிய மேம்பாலங்களும், ரெயில்வே மேம்பாலங்களும் கட்டும் பணியும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வருகிறது. இலவசமாக பயணம் செய்யலாம் என்பதால் தினமும் 10 லட்சம் பேருக்கு மேல் பஸ்களை மகளிர் ஆக்கிரமிக்கிறார்கள்.இதனால் பஸ் நிறுத்தங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னையில் மாநகர பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்லும் நிறுத்தங்களில் கடந்த சில மாதங்களாக கூட்டமாக உள்ளது.

    மாதவரம், மூலக்கடை, பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, மாத்தூர், கொளத்தூர், திருமங்கலம், அண்ணாநகர், முகப்பேர், மதுரவாயல், பாடி, அம்பத்தூர், திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாய்பேட்டை, அடையார், திருவான்மியூர், மயிலாப்பூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், வடபழனி, அசோக்நகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் நெரிசலில் பயணம் செய்கின்றனர். பஸ் நிறுத்தங்களில் பயணிகள் கும்பல் கும்பலாக காத்து நிற்பதை காண முடிகிறது.

    ஸ்மார்ட் சிட்டி, சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தப்படும் சென்னை நகரத்தில் பஸ் நிழற்கூடங்கள் ஒரு சில இடங்களில் அவலமாக காட்சி அளிக்கின்றன. மேற்கூரை உடைந்தும், இருக்கைகள் சேதம் அடைந்தும் இருப்பதால் பயணிகள் உட்கார முடிவதில்லை. சில இடங்களில் இருக்கைகள் மாயமாகி உள்ளன.

    மழை காலங்களில் ஒதுங்கி நிற்பதற்கு கூட இடம் போதவில்லை. குறுகிய அளவில் இந்த நிழற்கூடங்கள் இருப்பதால் பயணிகள் மழையிலும் வெயிலிலும் நின்று கஷ்டப்படுகிறார்கள். சென்னையில் 2 ஆயிரம் பஸ் நிழற் கூடங்கள் தற்போது உள்ளன. இதில் 730 நிழற்கூடங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அதில் விளம்பரங்கள் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது.

    1000 இடங்களில் உள்ள நிழற்கூடங்கள் மாநகராட்சி தற்போது கவனித்து வருகிறது. அவை கடந்த 5 வருடத்திற்கு முன்பு நிறுவப்பட்ட நிழற்கூடங்கள் ஆகும். இந்த நிழற்கூடங்களை தனியாருக்கு விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் அனைத்து நிழற்கூடங்களும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஆனால் தற்போது இந்த நிழற்கூடங்களில் சில பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தற்போது அமைக்கப்படுகின்ற நிழற்கூடங்கள் பெரும்பாலும் 30 அடி நீளம், 8 அடி அகலத்தில் உள்ளன. இவற்றில் மேல் பக்கவாட்டு பகுதி அடைக்கப்படாமல் திறந்து இருப்பதால் பயணிகள் மழையில் நனைகின்ற நிலை உள்ளது. மேலும் நீளமான இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 'ஸ்டெய்ன்லஸ்' இரும்பு குழாயால் போடப்பட்டு இருப்பதால் அதில் உட்கார முடியவில்லை என்ற குற்றச்சாட்டையும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் முக்கிய பிரதான சாலைகளில் உள்ள நிழற்கூடங்கள் அழகாக பளிச்சிடும் அதேவேளையில், உட்புற சாலைகளில் உள்ள நிழற்கூடங்கள் கேட்பாரற்று கிடக்கிறது. அதில் வியாபாரிகளும், சாலையோரத்தில் இருப்பவர்களும் நிரந்தரமாக ஆக்கிரமித்துள்ளனர். பயணிகள் நிற்பதை விட வியாபாரிகளின் வாகனங்களும், கடைகளும் தான் அங்கு உள்ளன.

    இதனால் பயணிகள் சாலையில் பஸ்சுக்கு காத்து நிற்கின்ற நிலை உள்ளது. நிழற்கூடங்களை மது அருந்தி விட்டு புகழிடமாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக தனித்தனி இருக்கைகளாக போடாமல் நீளமான இருக்கையாக போடப்பட்டு உள்ளது. அதுவும் ஒரே வரிசையில் இடம்பெற்றுள்ளது. சிறிய பஸ் நிறுத்தங்களுக்கு அது போதுமானதாக இருந்தாலும் கூட மக்கள் அதிகளவில் நிற்கக் கூடிய நிறுத்தங்களில் நிழற்கூடங்களின் அளவை பெரிதுபடுத்தவோ, இருக்கைகளை அதிகப்படுத்தவோ செய்யலாம் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நிழற்கூடங்கள் சேதம் அடைந்து அமர முடியாமல் இருப்பதை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கண்காணித்து அவற்றை சரி செய்ய வேண்டும். நகரை அழகுப்படுத்தும் விதமாக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் சிறப்பாக இருக்கின்ற வேளையில் பஸ் நிழற்கூடங்கள் பயணிகளுக்கு பயன் இல்லாமல் வெறும் காட்சி பொருளாக இருப்பது சரியல்ல. நூற்றுக்கும் மேற்பட்ட நிழற்கூடங்கள் பொதுமக்களுக்கு பயன் இல்லாமல் உள்ளன. அதனை வணிக ரீதியாகவும், தங்கும் இடமாகவும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை எல்லாம் ஆய்வு செய்து முறையாக பராமரிக்க வேண்டும்.

    உடைந்து சேதம் அடைந்த நிழற்கூடங்களை உடனே சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாநகராட்சி கொண்டு வர வேண்டும். ஒரு சில பஸ் நிறுத்தங்களில் உள்ள நிழற்கூடங்களை விரிவுப்படுத்தலாம். இடவசதி இல்லாத இடங்களில் சிறியதாகவும், விசாலமான பகுதியில் மக்கள் அதிகம்பேர் நிற்கும் வகையில் பெரியதாகவும் நிழற்கூடங்களை அமைக்கலாம் என கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் நிழற்கூடங்களில் சிலர் நிரந்தரமாக ஆக்கிரமித்து இருப்பதால் பயணிகள் அதற்குள் செல்ல தயங்குகிறார்கள். அத்தகைய நிலையை மாற்றி அனைத்து நிழற் கூடங்களையும் பயணிகள் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    பகலில் மட்டுமின்றி இரவு நேரங்களில் பயணிகள் பாதுகாப்பாக நிற்கவும், இருள் சூழ்ந்த இடங்களில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவும் கோரிக்கை வைக்கின்றனர். ஒரு சில இடங்களில் நிழற்கூடங்களில் இரவில் பெண்கள் நிற்க முடியாத அளவிற்கு வெளிச்சமின்றி இருளாக உள்ளது. இதனால் அச்சத்துடன் காத்து நிற்கின்றனர். அதுபோன்ற இடங்களில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். நிழற்கூட விளம்பரங்கள் மூலம் வருவாயை ஈட்டும் மாநகராட்சி பயணிகளுக்கு அடிப்படையான சில வசதிகளை செய்து கொடுத்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    • சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழாவுக்காக தாணிப்பாறையில் தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது.
    • துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 6 நாட்க ளுக்கு பக்தர்கள் கோவி லுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்படவுள்ள தற்காலிக பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளவும், கூட்ட நெரிசலை ஒழுங்குப் படுத்தவும் போலீசார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் குடிநீர், சுகாதார வசதிகள் செய்து தரப்படும். வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வண்ணம் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப் படும்.

    மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழு அமைக்கப் பட உள்ளது. ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக், போதை பொருட்களை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

    தாணிப்பாறை அடி வாரத்தில் சேரும் குப்பை களை அகற்றுவதற்கு போதுமான துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    வெளியூர் பஸ்கள், தனி நபர்களுக்கு சொந்தமான வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்க ளையும் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது. சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது துணை இயக்குநர் மேகமலை புலிகள் காப்பகம் (ஸ்ரீவில்லி புத்தூர்) திலீப்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், ஸ்ரீவில்லி புத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×