search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227938"

    • சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மதுரையில் இருந்து 12 மாணவர்கள் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் ஆகியோர் பதக்கம், பரிசு வழங்கி பாராட்டினர்.

    மதுரை

    மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. இதனை தமிழக அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கண்டு களிக்கும் வகையில் ஒன்றிய- மாவட்ட அளவில் சதுரங்க போட்டிகள் நடத்துவது என்று மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முடிவு செய்தது.

    அதன்படி 6,7,8-ம் வகுப்பு,9,10-ம் வகுப்பு, 11, 12-ம் வகுப்பு ஆகிய 3 பிரிவுகளில், சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டன. 6,7,8-ம் வகுப்புகளுக்கான சதுரங்க போட்டியில் மதுரை அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த சோலையம்மாள், தமிழரசி, அனுப்பானடி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மகராஜ், டி.அரசம்பட்டி உயர்நிலைப்பள்ளி பாண்டியராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    9,10-ம் வகுப்புக்கான போட்டியில் அ.வல்லா ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி கலைச்செல்வி, கோகிலா, தேவநாத், சந்தோஷ் ஆகியோர் தேர்வாகினர்.

    11,12-ம் வகுப்புக்கான சதுரங்க போட்டியில் ஒத்தக்கடை மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி சங்கீதா, வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வெற்றிசெல்வி, பிரதீப், பேரையூர் காந்தி நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முகமது தபின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் ஆகியோர் பதக்கம், பரிசு வழங்கி பாராட்டினர்.

    பரிசு பெற்ற மாணவ- மாணவிகளை மாமல்லபுரத்துக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. முதலிடம் பெற்ற 4 பேர் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    மாமல்லபுரம் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வந்த நிகரகுவா நாட்டு வீரர்களை, மதுரை மாணவர் பிரதீப் அடையாள அட்டை ஏந்தியபடி அழைத்து வந்தார்.

    மதுரையில் இருந்து 4 பேர் அடங்கிய குழு, நேற்று பஸ் மூலம் மாமல்லபுரத்துக்கு சென்றது. இந்த நிலையில் 4 பேர் குழு, நாளை மாமல்லபுரம் செல்கிறது. அங்கு அவர்களுக்கு செம்மஞ்சேரி பாலிடெக்னிக் கல்லூரியில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

    • அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
    • 50 அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்துக்கு உட்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் செந்துறை தாலுகாவில் உள்ள 50 அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எரிதல் உள்ளிட்ட தடகள போட்டிகளும், கபடி உள்ளிட்ட குழு போட்டிகளும் நடைபெற்றன. இதில் ஆசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி, வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    • சதுரங்க விழிப்புணர்வு போட்டிக்கு வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை வகித்தார்.
    • கருப்பு வெள்ளை நிறத்தில் கட்டங்கள் வரையப்பட்டு அதில் மாணவர்கள் நின்று சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை வகித்தார். செயல் அலுவலர் அசோகன், பேரூராட்சி துணைத் தலைவர் அன்புச் செழியன் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஆசிரியர் பிச்சுமணி வரவேற்றார். போட்டியில் கருப்பு வெள்ளை நிறத்தில் கட்டங்கள் வரையப்பட்டு அதில் மாணவர்கள் நின்று சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி வரி தண்டலர் அமுதா நன்றி கூறினார்.

    • தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • இந்த போட்டியில் சர்வதேச அளவில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    நாமக்கல்:

    தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம் சார்பில் ஒலிம்பியாட் கோலம் வரையப்பட்டது. மேலும் சிலம்பம், வில்வித்தை போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடத்தப்பட்ட செஸ் போட்டியில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என மொத்தம் 4 நபர்களுக்கு தலா ரூ.3 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலைகளையும், 19 நபர்களுக்கு தலா ரூ.1,000-க்கான வங்கி வரைவோலைகளையும் கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசாக வழங்கினார்.

    செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொள்ளும் 188 நாடுகளை குறிக்கும் வகையில், 188 நாடுகளின் கொடிகள் ஒட்டப்பட்ட, ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களை கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவிகள் பறக்க விட்டனர்.மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழாவிற்கு வருகை தந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் 1,000 பேர் ஒலிம்பியாட் சின்னம் அச்சிட்ட தொப்பிகள் அணிந்து வந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலு–வலர் கதிரேசன், உதவி கலெக்டர் மஞ்சுளா, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, செஸ் சங்கத்தினர், பயிற்சி–யாளர்கள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • எஸ்.என். கல்லூரியில் செஸ் போட்டி நடந்தது.
    • ஏழு சுற்றுக்களில் நடந்த இப்போட்டிகளில் 225 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை பெருங்குடியில் உள்ள சரசுவதி நாராயணன் கல்லூரியில் 44-வது ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியை கொண்டாடும் வகையில் மாநில செஸ் போட்டி நடந்தது.

    ஏழு சுற்றுக்களில் நடந்த இப்போட்டிகளில் 225 மாணவர்கள் கலந்து கொண்டனர். சரஸ்வதி வித்யாலயா பள்ளி ஸ்ரீனிஷ் உதயன், எஸ்.பி.ஓ.ஏ.சீனியர் செகண்ட்ரிபள்ளி அஸ்வின், விசாகா பள்ளி மிர்துன்ராஜ், சி.எஸ்.ஆர்.மெட்ரிக் பள்ளி கெவின்பாரதி, ஜீவனா பள்ளி ஜெய்ஆகாஷ், மகாத்மா பள்ளி அனுஷ்கா, சேதுபதி பள்ளி விஷ்ணுவர்தன், அண்ணாமலையார் பள்ளி கதிர்காமன் முதல் 10 இடங்களை வென்று பரிசுகள் பெற்றனர்.

    மாணவியருக்கான சிறப்பு பரிசில், ஒத்தக்கடை அரசு பள்ளி சங்கீதா, ராஜ் மெட்ரிக் பள்ளி தரணி, அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி சுபஸ்ரீ, கேட்டிவிகாஷ் பள்ளி 7 வயது சக்தி சந்தானம் இளம் வீரருக்கான பரிசு, அதிக மாணவர்கள் பங்கேற்ற அமுதம் மெட்ரிக் பள்ளிக்கு முதல் பரிசும், திருமங்கலம் பி.கே.என். பள்ளிக்கு 2-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். வணிகவியல் துறைத்தலைவர் ஜெயக்கொடி வரவேற்றார். மாவட்ட சதுரங்க சங்க முதுநிலை ஆர்பிட்டா அரசப்பன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் யுவராஜ் நன்றி கூறினார்.

    • பரிசளிப்பு விழா வாசகர் வட்ட பொருளாளர் ரோட்டரியன் யோகா டவர்ஸ் சேகர் தலைமையில் நடைபெற்றது.
    • ஓவியப்போட்டியில் மாணவர்கள் கார்த்திகேயன், கமலேஷ், மாணவி சுஷ்மிதா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

    தென்காசி:

    பள்ளிக்கல்வித்துறை, வ.உ.சி வட்டார நூலகம், ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் இணைந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வினை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஸ்லோகன் எழுதுதல், பேச்சுப்போட்டி தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் நடத்தப்பட்டது. இதில் 310 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முதல் மூன்று பரிசுகள் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா வாசகர் வட்ட பொருளாளர் ரோட்டரியன் யோகா டவர்ஸ் சேகர் தலைமையில் நடைபெற்றது.

    வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார். ரோட்டரியன் லெட்சுநாராயணன் முன்னிலை வகித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கி ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் தலைவர் மாரிமுத்து, செயலாளர் ரமேஷ் விழா பேரூரை ஆற்றினர். விழாவில் வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், மின்வாரிய செயற்பொறியாளர்அருள் வாழ்த்துரை வழங்கினர். கிளை நூலகர் சுந்தர் நன்றி கூறினார்.

    ஓவியப்போட்டியில் பண்பொழி ஆர்.கே.வி. நடுநிலைப் பள்ளி மாணவன் கார்த்திகேயன் முதல்பரிசும், தென்காசி 13-வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவன் கமலேஷ் இரண்டாம் பரிசும், தென்காசி இசக்கி வித்யாரம் பள்ளி மாணவி ஏ.சுஷ்மிதா மூன்றாம் பரிசும், கட்டுரைப்போட்டியில் நெடுவயல் ஸ்ரீ சிவசைலநாத நடுநிலைப் பள்ளி மாணவி மகேஸ்வரி முதல் பரிசும், குற்றாலம் டி.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பவிஷா இரண்டாம் பரிசும், இலஞ்சி பாரத் வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவி கங்காலெட்சுமி மூன்றாம்பரிசும், ஸ்லோகன் எழுதுதல் போட்டியில் இலஞ்சி பாரத் வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவிகள் ஜீவிகா முதல் பரிசும், தீபிகா இரண்டாம் பரிசும், அனுபாரதி மூன்றாம் பரிசும், பேச்சுப்போட்டியில் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி மாணவி ராபிகா, இல்லம்தேடிகல்வி தன்னார்வலர் நல்லமங்கை ஆகியோர் பரிசு பெற்றனர். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது
    • கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை பங்கேற்பு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தக்கூடிய ஐந்தாவது புத்தக திருவிழாவிற்கான விழிப்புணர்வு போட்டிகள் கந்தர்வகோட்டை வட்டார அளவிலான அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலை பள்ளிகளில் நடைபெற்றது.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளி–க்கும் விழா கந்தர்வகோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

    விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கந்த–ர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர்தமிழ்ச்செல்வி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியை சப்னம், மேலாண்மை குழு தலைவர் அகிலா சீனிவாசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமநாதன், தொல்லியல் கழக ஆசிரியர் மணிகண்டன், ஆசிரியர் துரையரசன் , வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை அறிவியல் இயக்க வட்டார தலைவர்ரஹ்மத்துல்லா, சின்ன ராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.நிறைவாக பள்ளி ஆசிரி–யர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

    • ஒலிம்பியாட் சதுரங்க போட்டி நடந்தது
    • 198 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டார அளவிலான சதுரங்க ஒலிம்பியாட் போட்டி ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 198 மாணவர்கள் கலந்துகொண்டனர்.இதில் வெற்றிபெறும் 18 நபர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகிறார்கள்

    போட்டியினை பள்ளி தலைமையாசிரியர் பி.கலைச்செல்வி மற்றும் கணக்கு பட்டதாரி ஆசிரியர் மாரிமுத்து ஆகியோர் முன்னின்று நடத்தினர். இங்கு வெற்றிப்பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வட்டார அளவில் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை போல் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர் பல்வேறு அமைப்பு சார்ந்தவர்கள் வாழ்த்தினர்.

    • சதுரங்க போட்டியை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.
    • பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.

    கயத்தாறு:

    தமிழக அரசு அறிவித்ததின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் சதுரங்க போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் சதுரங்க போட்டி நடைபெற்றது. பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் மரகதம் தலைமை தாங்கினார். போட்டியை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.

    போட்டியில் மாணவ, மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட உடற்பயிற்சி அலுவலர் பால்சாமி, கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், அரசு மேல்நிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்கள் சுப்புராஜ், சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கோகிலா, தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கபிலர்மலை, மோகனூர் பகுதியில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பரமத்திவேலூர்:

    சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28- ந் தேதி தொடங்குகிறது.இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழக முழுவதும் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கபிலர்மலை ஒன்றிய பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) பரமசிவம் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மோகனூர்

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேருந்து நிலையத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) தேன்மொழி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) பரமேஸ்வரன், மோகனூர் பேரூராட்சித் தலைவர் வனிதா மோகன்குமார், துணைத் தலைவர் சரவணகுமார் , இளநிலை உதவியாளர் சுரேஷ்ராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மணி, கார்த்திக் , மகளிர் சுய உதவி குழுவினர்,துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் பேரூராட்சிஅலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கபிலர்மலை, மோகனூர் பகுதியில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பரமத்திவேலூர்:

    சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28- ந் தேதி தொடங்குகிறது.இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழக முழுவதும் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கபிலர்மலை ஒன்றிய பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) பரமசிவம் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மோகனூர்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேருந்து நிலையத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) தேன்மொழி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) பரமேஸ்வரன், மோகனூர் பேரூராட்சித் தலைவர் வனிதா மோகன்குமார், துணைத் தலைவர் சரவணகுமார் , இளநிலை உதவியாளர் சுரேஷ்ராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மணி, கார்த்திக் , மகளிர் சுய உதவி குழுவினர்,துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் பேரூராட்சிஅலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலையில் வட்டார அளவிலான சதுரங்க போட்டி கபிலர்மலை‌ அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • இப்போட்டியில்‌ 72 மாணவர்களும், 69 மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலையில் வட்டார அளவிலான சதுரங்க போட்டி கபிலர்மலை‌ அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு‌ தலைமை ஆசிரியை மெஹருன்னிஷா தலைமை வகித்தார்.உடற்கல்வி ஆசிரியர் ரவீந்திரன் வரவேற்றார்.பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு சதுரங்க போட்டி நடத்தப்பட்டது.

    இப்போட்டியில்‌ 72 மாணவர்களும், 69 மாணவிகளும் கலந்து கொண்டனர்.வெற்றிபெற்ற‌ மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    பரமத்தி வட்டார அளவிலான சதுரங்க போட்டி பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.சதுரங்க போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    வட்டார கல்வி அலுவலர் கொளரி, தலைமை ஆசிரியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போட்டியில் பரமத்தி வட்டாரத்திற்கு உட்பட்ட நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ×