search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரங்கசாமி"

    • கடந்த மாதம் இவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • பணி மூப்பு அடிப்படையில் தான் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் காரைக்கால் அரசு தொடக்கப்பள்ளிகளில் புதுவையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    காரைக்காலில் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் புதுவை பிராந்தியத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தங்களை மீண்டும் சொந்த பிராந்தியமான புதுவைக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் இவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதனிடையே, அரசின் கல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய பணியிட மாறுதல் கொள்கையை வெளியிட்டது. இதற்கு ஆசிரியர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பணி மூப்பு அடிப்படையில் தான் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    புதிய இடமாற்றல் கொள்கையில் முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் நேற்று அரசு பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை வளாகத்தில் ஒன்று கூடினர். அப்போது பணியிட மாறுதல் விவகாரத்தில் சம்மேளனமும், கூட்டமைப்பும் இணைந்து, கூட்டாக போராட்டக்குழுவை உருவாக்கி போராடுவது என முடிவு எடுக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை கோரிமேட்டில் உள்ள அப்பாபைத்தியசாமி கோவில் வளாகத்தில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்று திரண்டனர். ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி அங்கு இல்லை.

    இதனால் போலீசார் அவர்களை காத்திருக்கும்படி கூறினர். அவர்கள் வீட்டின் முன் முற்றுகையிட்டு காத்திருந்தனர். விழா முடிந்து வந்த முதலமைச்சரை சந்தித்து பேசினர்.

    அப்போது அவர்கள் பணிமூப்பு அடிப்படையில் தான் இடமாற்றம் செய்ய வேண்டும், அதற்கு முன்பாக புதிய ஆசிரியர்களை நியமித்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.

    அதற்கு முதலமைச்சர் கல்வித்துறை அமைச்சரை சந்தித்து பேசும்படி கூறினார். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அவர்கள் நாளை கல்வித்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளனர்.

    • முதலமைச்சர் ரங்கசாமி வீட்டை இரவு 11 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ரங்கசாமியை ஆசிரியர்கள் நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் புதுவையை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட ஆசிரியர்-ஆசிரியைகள் பணியாற்றி வருகிறார்கள்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த நிலையில் காரைக்காலில் இருந்து தங்களை புதுவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இவர்களுக்கு பணியிட மாற்றம் அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு இறுதியில் புதுவையில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் காரைக்காலுக்கு மாற்றப்பட்டனர். ஆனால் அவர்கள் யாரும் அங்கு பணிக்கு செல்லவில்லை. இதனால் காரைக்காலில் ஏற்கனவே பணியாற்றி வந்த ஆசிரியர்களே கோடை விடுமுறைக்குப் பிறகும் பணியை தொடர வேண்டியது ஏற்பட்டது.

    இந்நிலையில் காரைக்காலில் பணியாற்றி வரும் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று மாலை பணியை முடித்துக் கொண்டு 2 பஸ்களில் புதுவைக்கு வந்தனர்.

    கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி வீட்டை இரவு 11 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா, போலீஸ் சூப்பிரண்டுகள் பக்தவச்சலம், சுவாதி சிங், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமியை ஆசிரியர்கள் நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர். அப்போது அவர், இன்று (சனிக்கிழமை) சட்டசபைக்கு வந்து தன்னை நேரில் சந்திக்க வருமாறும், அதிகாரிகளை வரவழைத்து இந்த பிரச்சினை குறித்து தீர்வு காணலாம் என்றும் ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.

    இதை ஏற்றுக்கொண்ட ஆசிாியர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். நள்ளிரவில் பணியிட மாறுதல் கோரி ஆசிரியர்கள் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டை முற்றுகையிட்டதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    முன்னதாக புதுவை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணி யிடங்களை தேர்வு நடத்தி நிரப்பக்கோரி 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு வந்து முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு கொடுத்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் ரங்கசாமி தனது காரில் சட்டசபைக்கு வந்தார்.
    • அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து நன்றி கூற சட்டசபைக்கு வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசுத்துறைகளில் 625 உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இந்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் மேல்நிலை எழுத்தர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்று அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் தொடர் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

    ஆனாலும் இறுதி முடிவு எட்டப்படாமல் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமைசெயலாளர் மற்றும் அதிகாரிகள், அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உதவியாளர் பணியிடங்களை மேல்நிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நிரப்பவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அதேபோல் அமைச்சக ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளிடமும் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து நன்றி கூற சட்டசபைக்கு வந்தனர். சட்டசபைக்கு வெளியே முதலமைச்சரின் வருகைக்காக அவர்கள் காத்திருந்தனர்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமி தனது காரில் சட்டசபைக்கு வந்தார். அங்கு காத்திருந்த அமைச்சக ஊழியர்கள் மனித சங்கிலி போன்று நீண்ட வரிசையில் நின்று கைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
    • தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்பட்டது.

    தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கட்சிக்கு உழைத்தவர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறினார்.
    • கட்சியினர் பதவிகள் இல்லாததால் சோர்வான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு நடக்கிறது.

    ரங்கசாமி பதவியேற்று 2 ஆண்டு முடிவடைந்துள்ளது. ஆட்சியில் முதலமைச்சர் உட்பட 4 அமைச்சர், துணை சபாநாயகர், அரசு கொறடா பதவிகளை என்.ஆர். காங்கிரசாரும், சபாநாயகர், 2 அமைச்சர் பதவியில் பா.ஜனதாவினரும் உள்ளனர்.

    ஆட்சியில் இடம் பெறாத என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் வாரிய பதவி வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகின்றனர். கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில்கூட இது எதிரொ லித்தது.

    எம்.எல்.ஏக்கள் பேசும் போது, அரசு சார்பு நிறுவன தலைவர்களாக தங்களை நியமித்தால் நஷ்டத்தில் இருந்து மீட்டு லாபகரமாக செயல்படுத்துவோம் என தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

    ஏற்கனவே பா.ஜனதா தரப்பில் எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான அ.தி.மு.க.வுக்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லை. ஆனாலும் தேர்தல் உடன் படிக்கையின்படி தங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வாரிய பதவி அளிக்க வேண்டும் என அ.தி.மு.க. தரப்பிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஆனாலும் கடந்த 2 ஆண்டு காலமாக முதலமைச்சர் ரங்கசாமி மவுனம் சாதித்து வருகிறார். இருப்பினும் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது, கட்சிக்கு உழைத்தவர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறினார்.

    இது வாரிய பதவியை மையமாக வைத்தே ரங்கசாமி பேசியதாக கருதப்பட்டது.

    இந்நிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவு பெற்றது. இதை என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் உற்சாகமாக கொண்டாடவில்லை. இதற்கு கட்சியினர் பதவிகள் இல்லாததால் சோர்வான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    அதே நேரத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணிக்கு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது அவசியமானது. இல்லாவிட்டால் ஆளும்கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கருதப்படும்.

    எனவே பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கட்சியினர், எம்.எல்.ஏ.க்களை உத்வேகப்படுத்த தொகுதிகளில் வாக்கு பெற்றுத் தரும் எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்குவது அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது.

    பா.ஜனதா, அ.தி.மு.க. தரப்பிலும் வாரிய தலைவர் பதவியை வழங்கும்படி நெருக்கடி அளிக்கின்றனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசிக்க தொடங்கியுள்ளார்.

    • மத்திய அரசு புதுச்சேரிக்கு 1,250 கோடி அதிகம் தந்துள்ளதாக பா.ஜ.க. கூறியுள்ளது.
    • புதுவையில் பொதுப்பணித்துறையில் 20 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் அமைச்சர் முதலமைச்சர் ரங்கசாமிதான். அவர் உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து மாணவர் சேர்க்கை நடைபெற ஏற்பாடு செய்யவேண்டும். இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    மத்திய அரசு புதுச்சேரிக்கு 1,250 கோடி அதிகம் தந்துள்ளதாக பா.ஜ.க. கூறியுள்ளது. அதில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை, ரூ.200 கோடி 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக வழங்கப்பட்டது. உண்மையில் நமக்கு கிடைத்தது ரூ.350 கோடிதான்.

    புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படவில்லை. அதேபோல் தமிழ் கட்டாயம் என்று அறிவிக்கப்படவிலை. தமிழ் மண்ணில் தமிழ் புறக்கணிக்கப்படுவது வேதனையாக உள்ளது.

    புதுவையில் பொதுப்பணித்துறையில் 20 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள். கலால்துறை முறைகேடு தொடர்பாக நிதித்துறை செயலாளர் ராஜூ, கலால்துறை துணை ஆணையர் சுதாகர் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர் என நினைக்கிறோம்.

    ஆனால் உண்மையில் நகரப்பகுதியில் அமைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைக்கும் கண்ட்ரோல் ரூம் ரூ.170 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை மத்திய அரசு நிறுவனமான ரெயில்டெல்லுக்கு அல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் வகையில் அவர்கள் இருவரும் சாதகமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசு செயலாளராக இருந்த அருண் தலைமை செயலாளருக்கு புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில் முகாந்திரம் இருந்ததால் அதனை தலைமை செயலாளர் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளார். உள்துறைதான் அவர்களுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னர் தான் இருவரும் மாற்றப்பட்டு உள்ளனர். தலைமை செயலாளர் இதில் நடவடிக்கை எடுக்காதிருந்தால் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கும்.

    முதலமைச்சரின் உத்தரவு இல்லாமல் அவர்கள் இவ்வாறு நடந்திருக்க மாட்டார்கள். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளேன். ஆனால் அவர்கள் பதில் சொல்வதில்லை. எனக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மட்டும் பதில் சொல்கிறார். விரைவில் கவர்னர் மீதான ஊழல் புகாரையும் வெளியிடுவேன்.

    இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து குறித்து எதுவும் பேசவில்லை.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரங்கசாமி நிர்வாகத்தை நடத்துவதில் ஞானசூனியமாக செயல்படுவதால், அதிகாரிகள் நீட்டும் கோப்புகளில் ஏன் என்று கேட்காமல் கையெழுத்திட்டு வருகிறார்.
    • விஷ சாராயம் தயாரிக்க பயன்படுத்தும் மெத்தனால் புதுவையிலிருந்து சென்றுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்காலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    யூனியன் பிரதேசங்களின் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்க வேண்டும் என்பதுதான் மோடி அரசின் வேலை. அதிகாரிகளை நிர்வகிக்கும் அதிகாரம் இல்லை என்றால் துணை நிலை ஆளுநர்களை மதிக்கமாட்டார்கள் என்பதால் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார்.

    முதலமைச்சர் ரங்கசாமி நிர்வாகத்தை நடத்துவதில் ஞானசூனியமாக செயல்படுவதால், அதிகாரிகள் நீட்டும் கோப்புகளில் ஏன் என்று கேட்காமல் கையெழுத்திட்டு வருகிறார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் என டெல்லி சுப்ரீம்கோர்ட்டு அளித்த தீர்ப்பு புதுவை உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

    இதை செயல்படுத்த கவர்னர் தமிழிசை மறுக்கிறார். அவரின் பகல் கனவு பலிக்காது.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கள்ளச்சாராய உயிரிழப்புக்கு பொறுப்பேற்று 2 தமிழக அமைச்சர்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என கவர்னரிடம் மனு கொடுத்துள்ளார்.

    விஷ சாராயம் தயாரிக்க பயன்படுத்தும் மெத்தனால் புதுவையிலிருந்து சென்றுள்ளது. அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறிய புதுவை முதலமைச்சர் ரங்கசாமியை பதவிநீக்கம் செய்ய முடியுமா? பா.ஜனதாவினர் ஊருக்குத்தான் உபதேசம் செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்லுயிர் பேரவையும், வனம் மற்றும் வனவிலங்கு துறையும் இணைந்து நடத்திய சர்வதேச பல்லுயிர் தின விழாவில் ரங்கசாமி கலந்து கொண்டார்.
    • புதுவை வனத்துறை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    கடந்த 13-ந் தேதி காரைக்கால் துறைமுகப்பகுதியில் 45 அடி நீளமுள்ள 15 டன் எடை உள்ள திமிங்கலம் கரை ஒதுங்கியது. அது உயிருடன் இருந்ததால் பட்டினச்சேரி மீனவர்கள் 13 பேரும், துறைமுக ஊழியர்கள் 7 பேரும் கப்பல் படை உதவியுடன் காலை 11 முதல் இரவு 7 வரை மீட்பு பணியில் ஈடுபட்டு மீண்டும் ஆழ்கடலில் சேர்த்தனர்.

    உயிரை பணயம் வைத்து திமிங்கலத்தை கடலுக்குள் கொண்டு செல்ல உதவிய மீனவர்கள், துறைமுக ஊழியர்கள் 20 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    புதுவை பல்லுயிர் பேரவையும், வனம் மற்றும் வனவிலங்கு துறையும் இணைந்து நடத்திய சர்வதேச பல்லுயிர் தின விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு இதனை வழங்கினார்.

    மேலும் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் தொடங்கப்பட்ட 14 கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.60 ஆயிரமும், உழவர்கரை நகராட்சிக்கு ரூ.1 லட்சமும் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். அத்துடன் புதுவை வனத்துறை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், தலைமை வனஉயிரினக் காப்பாளர் வஞ்சுளவள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.

    • மக்களோடு மக்களாக சிக்னலில் நின்று காத்திருந்து பயணம் செய்ய விரும்புகிறேன்.
    • கோடை வெயிலில் மக்கள் சிரமத்தை தவிர்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி, தலைமை செயலர் ஆகியோர் வாகனங்களில் செல்லும் போது, போக்குவரத்து சிக்னல்கள் நிறுத்தப்பட்டு வி.ஐ.பிக்கள் சென்ற பின்பு சிக்கனல்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    இதற்கிடையே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிக்னலில் நிற்க மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பகல் நேரத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வாகனம் சென்றபோது அவருக்காக போக்குவரத்து சிக்னல் நிறுத்தப்பட்டு அவரது வாகனம் சென்ற பின்பு சிக்னல் இயக்கப்பட்டது.

    தனது வாகனத்தால் பொதுமக்கள் வெயிலில் அவதிப்படுவதை கண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி போலீசாருக்கு திடீர் உத்தரவு பிறப்பித்தார்.

    எனது வாகனம் செல்லும் போது சிக்னல்களை நிறுத்தி யாரையும் காத்திருக்க வைக்க வேண்டாம். மக்களோடு மக்களாக சிக்னலில் நின்று காத்திருந்து பயணம் செய்ய விரும்புகிறேன்.

    கோடை வெயிலில் மக்கள் சிரமத்தை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் ரங்கசாமியின் இந்த உத்தரவை முன் உதாரணமாக கொண்டு அமைச்சர்கள், அதிகாரிகளும் சிக்னலில் காத்திருந்து செல்வார்களா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

    • பள்ளி மற்றும் கல்லூரி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது.
    • முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவையில் தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளி மற்றும் கல்லூரி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு பகுதிதான். வாழ்க்கை இன்னும் நிறைய இருக்கிறது. தேர்வு எழுதாதவர் பல பேர் வாழ்க்கையில் முன்னுக்கு வந்துள்ளனர். மாணவர்கள் எந்த ஒரு தவறான முடிவு எடுக்க வேண்டாம்.

    தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வைக்க வேண்டும், தன்னம்பிக்கை வைக்க மாரல் கிளாசஸ் நடத்த வேண்டும், தற்காப்பு கலைக்கான வகுப்புகள் வைக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    கவர்னருக்கு அதிகாரம் என்பதில் புதுவையில் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் எந்த வகையிலாவது கருத்து வேறுபாடு வருமா? என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காத்துக்கொண்டிருக்கிறார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு வராது. டெல்லி நிலை வேறு, புதுவை நிலை வேறு, மற்ற யூனியன் பிரதேசங்களுக்கான நிலை வேறு.

    மக்கள் சார்ந்த விஷயங்கள் புதுவையில் சிறப்பாக நடைபெறுவதுதான் நாராயணசாமிக்கு கவலையாக இருக்கிறது என தெரிவித்தார்.

    அப்போது அவரிடம், மத்திய அரசின் ரூ.2 ஆயிரம் நோட்டு தடை குறித்து கேள்வி எழுப்பியபோது, இந்த தடை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் போட்டு இருக்கும் கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட். ரூ.2 ஆயிரம் நோட்டு தடை பற்றி இன்னும் அறியவில்லை. விபரங்களை அறிந்து பதிலளிக்கிறேன் என்றார்.

    கவர்னர் தமிழிசை டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகத்தில் முத்தான திட்டங்களை அறிவித்ததின் மூலம் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
    • கள்ளக்சாராயம் தயாரிக்க மெத்தனால் புதுச்சேரியில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது.

    பழனி:

    புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். மலைக்கோவிலுக்கு ரோப்கார் மூலம் சென்று சாயரட்சையின்போது தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தார். பின்னர் அடிவாரத்தில் அவர் ஓய்வு எடுத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் முத்தான திட்டங்களை அறிவித்ததின் மூலம் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பா.ஜனதாவை மக்கள் நம்ப தயாராக இல்லை. இனி நடைபெற உள்ள அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ.க. தோல்வியையே சந்திக்கும்.

    விழுப்புரம் பகுதியில் விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சென்று பார்த்தது பாராட்டுக்குறியது. வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்சாராயம் தயாரிக்க மெத்தனால் புதுச்சேரியில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது. புதுச்சேரியில் கடந்த 1½ ஆண்டுகளாக கள்ளச்சாராயம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கலால்துறையில் ஊழல் அதிகரித்துள்ளது. இதில் அம்மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க வில்லை. கள்ளச்சாரயம், சட்ட ஒழுங்கு பிரச்சினைக்காக போராட்டம் நடத்த உள்ளோம்.

    கவர்னர் தமிழிசை முதலமைச்சர் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளார். அவரின் கைப்பொம்மையாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செயல்படுகிறார். மாநிலத்தில் தொழில் வளம் முதல் எந்த வளமும் மேம்படுத்தப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும்
    • அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ரங்கசாமி தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பொதுப்பணித் துறையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதியம் 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

    புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும், நியாய விலைக்கடைகளில் 2 கிலோ சர்க்கரை, கோதுமை, சிறுதானியங்களை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரங்கசாமி கூறினார்.

    ×