என் மலர்
நீங்கள் தேடியது "மின்கம்பம்"
- தொடர்ந்து 5 மணி ேநரம் இடைவிடாது கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் முட்டளவு தண்ணீர் தேங்கியது. தஞ்சை காந்திஜி சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
- புதுஆற்றுபாலம் அருகே ராணிவாய்க்கால் தண்ணீர் வேகமாக வந்ததால் ஆற்றங்கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகலில் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.
மாலை 4 மணியளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கி சிறிது நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது.
நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. மேலும் இடி- மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.
தொடர்ந்து 5 மணி ேநரம் இடைவிடாது கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் முட்டளவு தண்ணீர் தேங்கியது. தஞ்சை காந்திஜி சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
சேவப்பநாயக்கன்வாரி வடகரையில் 12-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
புதுஆற்றுபாலம் அருகே ராணிவாய்க்கால் தண்ணீர் வேகமாக வந்ததால் ஆற்றங்கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அருகில் இருந்த மின்கம்பம் சாய்ந்தது. தகவல் அறிந்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், ஆணையர் சரவணக்குமார், மேயர் சண்.ராமநாதன்மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கலெக்டர் உத்தரவுப்படி பணிகள் துரிதப்படுத்தப்பட்டு மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.
தொடர்ந்து இடைவிடாது பெய்த மழையால் தஞ்சையில் எங்கு பார்த்தாலும் வெள்ள க்காடாக காட்சியளித்தது. சாலைகளில் தண்ணீர் ெபரும ளவில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே சென்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த கனமழைக்கு ஒரு கூரைவீடு பகுதி அளவில் சேதமடைந்தது. 2 கால்நடைகள் இறந்தன.
இதேப்போல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 409.90 மி.மீ. மழை பதிவாகியது.
அதிகபட்சமாக தஞ்சையில் 177.50 மி.மீ. பெய்தது.இன்று காலை 9 மணி வரை தஞ்சையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.
தொடர்ந்து நேற்று போல் இன்றும் கனமழை பெய்வதற்கான அறிகுறி தென்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடள் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ. வருமாறு:-
தஞ்சாவூர்-177.50, நெய்வாச ல்தென்பாதி-72.60, வல்லம்-40, குருங்குளம்-34.60, கீழணை-28, அய்யம்பேட்டை-16, பூதலூர்-10.80.
- பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
- இதில் மின்கம்பம் முறிந்து மின்கம்பிகள் அறுந்தன.
திருவாரூர்:
திருத்துறைப்பூண்டியில் இருந்து ராயநல்லூர் புழுதிக்குடி வழியாக விக்கிரபாண்டியம் வரை தனியார் மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த மினி பஸ்சை டிரைவர் சுந்தரம் (வயது 50) ஓட்டினார்.
கண்டக்டர் வருண்குமார் (25) பணியில் இருந்தார். மினி பஸ் விக்கிரபாண்டியம் வந்து விட்டு திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் விக்கிரபாண்டியம் கீழத்தெரு அருகே பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி அருகிலிருந்த குட்டையில் இறங்கியது.
இதில் பயணம் செய்த மஞ்சவாடி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா (22), டிரைவர் சுந்தரம், கண்டக்டர் வருண்குமார் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
இவர்கள் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் மின்கம்பம் முறிந்து மின்கம்பிகள் அறுந்தன.
இதனால் அங்கு மின்தடை ஏற்பட்டது. மின் கம்பம் முறிந்தபோது அங்கு மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து விக்கிரபாண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின் வாரிய ஊழியர்கள் இந்த கம்பத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
- வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
உடுமலை :
உடுமலை-தாராபுரம் சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த மின் கம்பத்தில் காங்கிரீட் உடைந்தும், வெடிப்புகள் ஏற்பட்டும், இப்ப விழுமோ, எப்ப விழுமோ என்ற நிலையில் உள்ளதால் அச்சத்துடனேயே மக்கள் அந்த பகுதியை கடக்கும் நிலை உள்ளது.
அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்லும் முக்கிய சாலையில் உள்ள இந்த மின் கம்பம் உடைந்து விழுந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் மின் வாரிய ஊழியர்கள் இந்த கம்பத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
மேலும் பொதுமக்கள் இந்த கம்பத்துக்கு அருகில் வருவதற்கே அஞ்சும் நிலை உள்ளதால் அருகிலுள்ள வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. எனவே இந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மின் கம்பம் ஒன்று சிதலமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் உள்ளது.
- விபத்து ஏற்படும் முன் இந்த கம்பம் மாற்றி அமைக்கப்படுமா என கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.
பாப்பாரப்பட்டி,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாக்கனூர் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் மின் கம்பம் ஒன்று சிதலமடைந்து மிகவும் ஆபத்தான நிலையிலும் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் உள்ளது.
இதனைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள் அந்த மின் கம்பத்திற்கு செங்கல் மற்றும் கற்கள் கொண்டு மின் கம்பம் சாயாதவாறு முட்டுக்கொடுத்து உள்ளனர்.
ஊரின் நடுவே அமைந்துள்ளதால் மின் கம்பம் சாய்ந்து பெரும் விபத்து ஏற்படும் முன் இந்த கம்பத்தை மாற்றி அமைக்கப்படுமா என இந்த கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்தக் மின் கம்பத்தால் அசம்பாவிதம் ஏற்படும் முன் கம்பத்தை மாற்றி தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கார் திடீரென நிலை தடுமாறி வலது பக்க மின்கம்பம் மீது வேகமாக மோதி நின்றது
- விபத்து காரணமாக இப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது
கன்னியாகுமரி :
மண்டைக்காடு பகுதியை சேர்ந்த வர் விஜின் (வயது37) இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தையுடன் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கோவிலுக்கு சென்று விட்டு தோட்டி கோடு வழியாக திங்கள் நகர் நோக்கி வரும்போது தபால் அலுவலகம் அருகே கார் திடீரென நிலை தடுமாறி வலது பக்க மின்கம்பம் மீது வேகமாக மோதி நின்றது. இதில் விஜின் மற்றும் குடும்பத்தார் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக இப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது இது குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்தடை செய்யப்பட்டதால் பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் சற்று அவதியடைந்தனர்.
- கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நிகழ்கிறது.
திருப்பூர் :
திருப்பூர் பெரிய கடைவீதி பகுதியில் சென்ற கண்டெய்னர் லாரி அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் மீது உரசியது. இதில் மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் இருந்தது. இந்தநிலையில் இன்று காலை மின்கம்பம் அருகே காரில் பயணிகள் 4பேர் ஏறிக்கொண்டிருந்த போது திடீரென மின்கம்பம் சாய்ந்து கார் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 4பேரும் உயிர் தப்பினர். மின்சாரம் இருந்த நிலையில் கம்பம் சாய்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகள் சென்று மின்சாரத்தை துண்டித்தனர். போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர். மின்தடை செய்யப்பட்டதால் பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் சற்று அவதியடைந்தனர். தொடர்ந்து மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மேலும் சம்பவ இடத்தை செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர். நகர்ப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நிகழ்கிறது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.
- செய்தி வெளியிட்ட மாலைமலர் நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பல்லடம்:
பல்லடம்- பொள்ளாச்சி மெயின் ரோட்டில், பழைய பல்லடம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு உள்ள மின் கம்பம் பழுதடைந்து எந்த நேரமும் சாய்ந்து விழும் அபாய நிலையில் இருந்தது.இதனை மாற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இது குறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனைப் படித்த மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய கம்பத்தை நட்டனர். மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட மாலைமலர் நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- நாளை மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
- காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக் கிழமை) நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்க பணி காரணமாக மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. எனவே வண்டிக்காரத்தெரு மின்வழித்தடத்தில் உள்ள நாகை ரோடு, திருவள்ளுவர் நகர், சேவியர் நகர் பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சாலையின் மையப்பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டிருந்ததால் அதனை கடந்து செல்ல பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
- போக்குவரத்து இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள சமாதானபுரம் 11-வது வார்டு மங்கம்மாள் சாலை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் மங்கம்மாள் சாலையையே பயன்படுத்தி வரும் நிலையில் குடியிருப்புகள் வருவதற்கு முன்பாக சாலையின் மையப் பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டிருந்ததால் தற்பொழுது பொதுமக்கள் அச்சாலையை கடந்து செல்ல பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். பள்ளி குழந்தைகள் செல்வதற்கு ஆட்டோ, வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே வர முடியாத சூழ்நிலையால் பெற்றோர்கள் அருகில் உள்ள மற்றொரு தெருவில் கொண்டு தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொது மக்களுக்கு போக்குவரத்து இடையூறாக சாலையின் நடுவே நிற்கும் மின்கம்பத்தை சாலையோரம் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மின்சார வாரியத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கொல்லகுப்பம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் மின் கம்பம் சேதமடைந்து உள்ளது.
- சேதமடைந்துள்ள மின்கம்பங்களால் இந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
கனகம்மாசத்திரம்:
திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு- பொன்பாடி செல்லும் சாலையில் உள்ள கொல்லகுப்பம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் மின் கம்பம் சேதமடைந்து உள்ளது. அதில், சிமெண்ட் பூச்சு உதிர்ந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. எந்நேரமும் உடைந்து விழும் நிலையில் உள்ளது.
அதே வழியில் உள்ள மின்கம்பம் ஒன்றும் சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்துள்ள மின்கம்பங்களால் இந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. சேதம் அடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் கம்பங்களையும், சாலையில் உள்ள மின்கம்பத்தையும் உடனடியாக மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தார் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு அந்த பணியானது கடந்த 2 வாரங்களுக்கு முன் தொடங்கியது.
- ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதும் அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள வேதாச்சலம் நகர் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு சாலை அமைத்து தரக்கோரி அந்த பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்து மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் வந்தனர்.
இந்த நிலையில் அங்கு தார் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு அந்த பணியானது கடந்த 2 வாரங்களுக்கு முன் தொடங்கியது. முதற்கட்டமாக அங்கு குறிப்பிட்ட அளவு ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை அமைக்கும் பணியானது நடைபெற்றது. அப்போது 2 மின்கம்பத்தை அகற்றி சாலை அமைத்திடாமல் மின்கம்பம் நடுவில் இருந்தபடியே சாலை பணியானது நடைபெற்று கடந்த வாரம் முடிந்துள்ளது.
இந்த பணிகளே முடிவுற்று இரண்டு வாரங்கள் ஆகியும் தற்போது வரை மின்கம்பம் அகற்றப்படாமல் சாலையின் நடுவே இருந்து வருகிறது. முறையாக சாலை பணியின்போது மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு மின்கம்பங்களை இடமாற்றம் செய்த பின்னரே சாலை அமைத்திட வேண்டுமெனும் விதிமுறைகள் இருக்கும் நிலையில் இத்தகைய ஒப்பந்ததாரரின் செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னரே மின்கம்பத்தினை இடம் மாற்றி, மின்கம்பத்தினை இடம் மாற்றிடாமல் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதும் அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- தூத்துக்குடிக்கு எரிவாயு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்றது
- மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நாகர்கோவில் :
கேரளாவில் இருந்து நாகர்கோவில் வழியாக தூத்துக்குடிக்கு எரிவாயு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்றது. இன்று காலை வடசேரி பகுதியில் வந்தபோது அந்த பகுதியில் உள்ள மின்கம்பம் மீது லாரி மோதியது. இதில் மின்கம்பம் உடைந்தது.
மின்கம்பிகளும் அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மின்வாரிய ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்து உடைந்து விழுந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.