search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதாரத்துறை"

    • இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,25,047 ஆக உயர்ந்துள்ளது.
    • நாடு முழுவதும் 197 கோடியே 31 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    பண்டிகை காலம் வருவதால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

    பொதுக்கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் காற்றோட்ட வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • இதுவரை யாருக்கும் பிஏ 4, பிஏ 5 வகை கொரோனா தொற்று உறுதியாகவில்லை.
    • சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா சற்று வேகமெடுத்து வருகிறது. கடந்த ஒரே வாரத்தில், 21 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.இம்மாதத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 9 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

    தினசரி பாதிப்பு உயர்ந்து வருவதால், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் பிஏ 4, பிஏ 5 வகை கொரோனா வேகமாக பரவி வருவதாக அமைச்சர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் பிஏ 4, பிஏ 5 வகை கொரோனா தொற்று உறுதியாகவில்லை. தொற்று பரிசோதனையில் யாருக்காவது தெரிய வந்தால், ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவர். தொற்று பாதித்த 28 பேரில் தற்போது 12 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.மக்கள் பயப்பட வேண்டியதில்லை.

    அதே நேரம்அலட்சியமாக இருப்பது பெரும் தவறு. தொற்று வந்த பின் வருத்தமடைவதை விட முன்னெச்சரிக்கை இருந்து கொள்வது நல்லது.வெளியிடங்களுக்கு செல்லும் போது தவறாமல் முககவசம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் சுயபாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்றை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இதனால், தமிழக சுகாதாரத் துறையின் புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

    நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    வருவய் நிர்வாக ஆணையராக அல்லது கூடுதல் தலைமைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • 3 நாட்களில் 6 பேர் பாதிப்பு
    • பரவல் அதிகரித்ததையடுத்து சோதனையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகா ரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வரு கிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்திருந்தது. இதனால் தினசரி பாதிப்பு பூஜ்ஜியத்தில் இருந்து வந்தது. இருப்பினும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று மேலும் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    செருப்பாலுரை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவரும் தேவிகோட்டை சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் நேற்று 338 பேருக்கு சோதனை நடத்தப்பட்ட நிலையில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பரவல் அதிகரித்ததையடுத்து சோதனையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வரு

    கிறார்கள்.

    இதையடுத்து காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கொரோனாசோதனை நடத்தப்பட்டு வருக்கிறது. வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வருப வர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கும் சோ தனை நடத்தப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 19419 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மாவட்டம் முழுவதும் இதுவரை 79 ஆயிரத்து 936 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளனர்.

    ×