search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228048"

    • நிரந்தர ஆதார் சேர்க்கை சேவை மையங்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் ஆதார் பதிவை புதுப்பித்து பயன்பெற வசதியாக சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமையும் செயல்பட உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் நிரந்தர ஆதார் சேர்க்கை சேவை மையங்கள் மாவட்டம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையமானது தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் முகமையினை பதிவாளராகவும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவை ஆதார் சேர்க்கை முகமையாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களின் முகவரி நிரந்தரமாக இருந்தால் ஆதார் தரவை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை சேவை மையங்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்பட்டு வருகிறது.

    தற்போது பொதுமக்கள் ஆதார் பதிவை புதுப்பித்து பயன்பெற வசதியாக சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமையும் செயல்பட உள்ளது. அதன்படி திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் மார்ச் மாதம் 5-ந் தேதியும், திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 18-ந் தேதி மற்றும் மார்ச் மாதம் 12-ந் தேதியும், அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் வருகிற ஜனவரி மாதம் 8-ந் தேதி மற்றும் மார்ச் மாதம் 19-ந் தேதியும் ஆதார் சேவை மையம் செயல்படும்.

    ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகத்தில் ஜனவரி மாதம் 22-ந் தேதி மற்றும் மார்ச் மாதம் 26-ந் தேதி, பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் ஜனவரி மாதம் 29-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 2-ந் தேதியும், தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 9-ந் தேதியும், காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் 12-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 16-ந் தேதியும், உடுமலை தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் 19-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 23-ந் தேதியும், மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி 26-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 30-ந் தேதியும் ஆதார் சேவை மையங்கள் செயல்படும்.

    இதுபோல் எல்காட் மூலமாக நடக்கும் திருப்பூர் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், தொட்டிப்பாளையம், நல்லூர் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், பல்லடம், உடுமலை, காங்கயம், வெள்ளகோவில் நகராட்சி அலுவலகங்கள், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகம், தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் உள்ள ஆதார் மையங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை செயல்படுகிறது.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும். ஆதார் புதிய பதிவு, 5 வயது மற்றும் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை பதிவு, பெயர், முகவரி, பிறந்ததேதி மாற்றம் செய்தல், புகைப்படம், கைவிரல், கருவிழி மாற்றம் செய்தல், ஆவணங்களை புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளலாம்.

    தமிழக அரசின் சலுகைகளை பெற ஆதார் அட்டை கட்டாயம் என்பதை கருத்தில் கொண்டு அனைவரும் ஆதார் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளாக ஆதார் புதுப்பிக்காதவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்யலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • 3 தினங்களாக கொண்டாடப்பட்டு பொது மக்களுக்கு நலதிட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
    • குடும்ப விழாவாக சிறப்பாக கொண்டாடுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் தலைமையில் மேற்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளை கழகங்கள் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் சிறப்பாக கடந்த 3 தினங்களாக கொண்டாடப்பட்டு பொது மக்களுக்கு நலதிட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    இதையொட்டி பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தி.மு.க. தலைவர்,தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினின் ஆசியோடும்,தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும்,தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நல் வாழ்த்துக்களுடனும், தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் ஆலோசனைபடி கழக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கிளை கழகங்கள் தோறும் கட்சியின் கொடியினை ஏற்றியும் ஏழை, எளிய மக்கள்,மாணவ,மாணவியர்கள்,முதியவர்கள்,மாற்று திறனாளிகள் பயன்பெறும் வகையில் நலதிட்ட உதவிகள் வழங்கி குடும்ப விழாவாக சிறப்பாக கொண்டாடுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு பி.எஸ்.சரவணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • கொசு மருந்து அடிக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    • நோய்கள் பரவும் நிலை உள்ளது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் நிலை உள்ளது. இதனை தடுக்க நீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தியாகாத வகையிலும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அரியலூர் நகரில் வாகனம் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. அந்த வாகனம் விரைவாக செல்வதால் முறையாக கொசு மருந்து அடிக்கப்படவில்லை என்றும், தெருக்களில் சந்துகளில் உள்ள வீடுகளில் கொசு மருந்து அடிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே அனைத்து பகுதிகளிலும் முறையாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பல்வேறு நூதன வழிகளில் பொதுமக்களிடம் பணம் பறிக்கப்படுகிறது.
    • ஆன்லைனில் கடன் வாங்குவதற்கு முன்பணம் கட்ட சொன்னால் அவர்களும் போலியாக இருக்க வாய்ப்புள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆன்லைனில் புதுப்புது வழிகளில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்ள் அதிகரித்துள்ளன. குறைந்த முதலீட்டில் அதிக லாபம், பணம் இரட்டிப்பு, செயல்முறை கட்டணம் என பல்வேறு நூதன வழிகளில் பொதுமக்களிடம் பணம் பறிக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, ஜனவரி மாதம் முதல் தற்போது வரை, 1,200 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில், ஆன்லைன் கடன் வழங்குவதாக கூறி பணப்பறிப்பில் ஈடுபட்டதாக, 160 புகார்கள், குறைந்த முதலீட்டுக்கு அதிக பணம் எனக்கூறி 140, போலி வாடிக்கையாளர் சேவை மையம் எனக்கூறி, 116, 'பான் கார்டு அப்டேட்', செயல்முறை கட்டணம், ஜி.எஸ்.டி., இவற்றிக்கு முன் பணம் கட்டினால் பெரிய கடன் தொகை எனக்கூறி, 92 புகார்களும் பெறப்பட்டுள்ளன.

    இது போன்ற மோசடிகளில் ஏமாறாமல் இருக்க செல்போனில் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யும்போது செயலின் நம்பகத்தன்மை, அதில் சுயவிவரங்களை கொடுக்கலாமா என ஆராய வேண்டும். ஆன்லைனில் முதலீடு செய்யும் முன் நிறுவனத்தின் உண்மைதன்மையை அறிய வேண்டும்.

    ஆன்லைனில், 99 சதவீத நிறுவனங்கள் போலியாக உள்ளன. நாம் செலுத்தும் பணத்திற்கு முதலில் லாபம் தருவது போல் பணம் கொடுத்து, முதலீடு செய்யும் பெரிய தொகையை ஏமாற்றி விடுவார்கள். எனவே ஆன்லைன் முதலீட்டை தவிர்ப்பது நல்லது. ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள அவர்களது இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

    'கூகுள் கஸ்டமர் கேர்' என தேடி அந்த எண்களை தொடர்பு கொண்டால் மோசடி நிகழ வாய்ப்புள்ளது. 'பான்கார்டு' விவரங்களை பதிய செல்போனுக்கு எந்த வங்கியும்

    குறுஞ்செய்தி அனுப்புவதில்லை. அவ்வாறு வருபவை அனைத்தும் போலியானது. கடன் தருவதாக கூறும் நிறுவனத்தின் உண்மை தன்மையை அறிந்த பின்னரே கடனுக்குமுயற்சிக்க வேண்டும். ஆன்லைனில் கடன் வாங்குவதற்கு முன்பணம் கட்ட சொன்னால் அவர்களும் போலியாக இருக்க வாய்ப்புள்ளது.

    மேற்கண்ட வகைகளில் பொதுமக்கள் தங்கள் பணத்தை இழந்தால், 1930 என்ற 'டோல்பிரி' எண் அல்லது இணையதள முகவரியில் புகார் அளிக்கவும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசிலும் நேரில் புகார் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04343-294755 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வடக்குப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் காலை 10 மணிக்கு மேல் திறந்து, மதியம் ஒரு மணிக்குள் அடைத்து விடுகின்றனர்.
    • ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறந்து, மக்களுக்கு பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சரவணன் திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூரில் உள்ள ரேஷன் கடைகள் சரியான நேரத்துக்கு திறப்பதில்லை. வடக்குப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் காலை 10 மணிக்கு மேல் திறந்து, மதியம் ஒரு மணிக்குள் அடைத்து விடுகின்றனர். மாலை, 4 மணிக்கு திறந்து 5:30 மணிக்குள் அடைத்து விட்டு செல்கின்றனர். மாதந்தோறும் 1, 30, 31-ந் தேதிகளில் கடைகளை திறப்பதே இல்லை. போயம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் 31ந் தேதி விடுமுறை என இரண்டு நாட்களுக்கு முன்னரே தகவல் பலகையில் எழுதி வைத்து விடுகின்றனர். ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறந்து, மக்களுக்கு பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குண்டடம் மற்றும் ருத்ராவதி ஆகிய பகுதிகளில் நிா்வாக காரணங்களுக்காக மின் அளவீடு மேற்கொள்ள முடியவில்லை.
    • கணக்கீட்டுப் பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை அக்டோபா் மாதத்துக்கும் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாராபுரம்:

    தாராபுரம் கோட்டம், குண்டடம் மற்றும் ருத்ராவதி பகுதி மக்கள் கடந்த ஆகஸ்ட் மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.காா்த்திகேயன் (பொறுப்பு) விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

    தாராபுரம் கோட்டம், வடக்கு குண்டடம் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட குண்டடம் மற்றும் ருத்ராவதி ஆகிய பகுதிகளில் நிா்வாக காரணங்களுக்காக மின் அளவீடு மேற்கொள்ள முடியவில்லை.எனவே, இப்பகுதி மின் நுகா்வோா் கடந்த ஆகஸ்ட் மாதம் கணக்கீட்டுப் பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை அக்டோபா் மாதத்துக்கும் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை மின்நுகர்வோர் அக்டோபர் மாதத்திற்கு செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    • மின் நுகர்வோர் தாங்கள் பயன்படுத்திய மின் அளவீடு நிர்வாகக் காரணத்தினால் மேற்கொள்ள முடியவில்லை.

    தாராபுரம்:

    தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தாராபுரம் கோட்டத்தில் மானூர்பாளையம் பிரிவு அலுவலகதிற்குட்பட்ட காசிலிங்கபாளையம்,நிறையூர் மேற்கு சடையபாளையம் ஆகிய மின் பகிர்மான அலுவலகத்திற்குட்ட பகுதி மின் நுகர்வோர் தாங்கள் பயன்படுத்திய மின் அளவீடு நிர்வாகக் காரணத்தினால் மேற்கொள்ள முடியவில்லை. ஆகையால் கடந்த ஆகஸ்டு மாதம் கணக்கீட்டு பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை மின்நுகர்வோர் அக்டோபர் மாதத்திற்கு செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்க ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    • சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம்


    பெரம்பலூர்

    தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் தலைவர் வரதன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் நிறுவனர் நல்லப்பன் சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர், சங்கத்தின் பொதுச் செயலாளர் நேரு, அமைப்பு செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து பணியாற்றி கொண்டிருக்கும் 171 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு விரைவில் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். மாறுபட்ட பாடத்தில் உயர்கல்வி பயின்ற அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் 2 ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும். அரசாணை எண் 194, நாள் 12.9.2018-ன்படி 6.4.2018 என்ற தேதியை நீக்கம் செய்து அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் 50 சதவீதத்தை கணக்கில் எடுத்து ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தின் பொருளாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்."

    • புதிய பஸ் நிலையம் அம்பேத்கர் சிலையிலிருந்து காந்தி சிலை வரை போராட்டம் நடைபெற இருக்கிறது.
    • துண்டு பிரசுரம் விநியோகித்து ஆதரவு திரட்டுவது என முடிவு.

    பேராவூரணி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் சமூக நல்லிணத்தை விரும்புகின்ற அனைத்துக் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், இயக்கங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இந்த அடிப்படையில் பேராவூரணியில் மனித சங்கிலி போராட்டம் புதிய பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலையிலிருந்து காந்தி சிலை வரை நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும், உழைக்கின்ற தொழிலாளர்களும், ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டி அனைத்து கட்சிகள் சார்பில் நேற்று பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி பேராவூரணி சட்டமன்றத் தொகுதி செயலாளர் அரவிந்த் குமார் தலைமையில் நடைபெற்றது.

    பொதுமக்களிடமும், தொழிலாளர்களிடமும் துண்டு பிரசுரம் விநியோகித்து ஆதரவு திரட்டுவது என முடிவு செய்யப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் மைதீன், திராவிடர் கழகம் மாவட்ட அமைப்பாளர் சிதம்பரம், தி.வி.க மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம், தமிழக மக்கள் புரட்சி கழகம் மதியழகன், அறநெறி மக்கள் கட்சி ஜேம்ஸ், தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு வெங்கடேசன் மற்றும் அப்துல் சலாம், முஜிபுர், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக விசிக பேராவூரணி ஒன்றிய செயலாளர் சிவா நன்றி கூறினார்.

    • சவேரியார் ஆலயம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதையடுத்து கோட்டார் சவேரியார் ஆலய சாலையில் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.
    • செட்டிகுளம் பீச் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சவேரியார் ஆலயம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதையடுத்து கோட்டார் சவேரியார் ஆலய சாலையில் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.

    இதனால் வடசேரி பஸ் நிலையத்திற்கு கன்னியாகுமரிக்கு செல்லும் அனைத்து பஸ்களும் வேப்பமூடு பொதுப்பணித்துறை சாலை செட்டிகுளம் சந்திப்பு வழியாக சவேரியார் ஆலயத்திற்கு செல்கிறது. கன்னியாகுமரியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பீச் ரோட்டில் இருந்து ஆயுதப்படை மைதானம் ராமன் புதூர் வழியாக செட்டிகுளத்திற்கு வருகிறது. வாகனங்கள் மாற்று பாதை வழியாக இயக்கப்படுவதையடுத்து செட்டிகுளம் பீச் ரோடு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து போலீசார் அதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் செட்டிகுளம் பீச் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இன்று காலையில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்தனர்.

    குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் செட்டிகுளம் பகுதியில் சிக்கி பரிதவிப்பிற்கு ஆளானார்கள். சாலை நடுவே கான்கிரீட்டுக்களால் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளதால் பஸ்கள் மட்டுமே செல்ல முடியும் நிலை உள்ளது.ஆனால் அதன் இடையே இருசக்கர வாகனங்களும் செல்வதால் அவர்கள் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சூழல் ஏற்பட்டது.

    செட்டிகுளம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் காலை மாலை நேரங்களில் இன்னும் அதிகமாக கூடுதல் போலீசாரை நியமனம் செய்து போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பாராமரிப்புச் சட்டம் -2007ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
    • விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு பதிவு செய்யுமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் :

    தமிழக அரசின் விதிமுறைகளின் படி தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாராமரிப்புச் சட்டம் -2007ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் பதிவு செய்யாத முதியோர் இல்லங்கள் தாங்களாகவே முன்வந்து பதிவு செய்து கொள்ளுமாறும், அவ்வாறு பதிவு இல்லாமல் முதியோர் இல்லங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

    மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம் அறை எண்:35,36 தரைத்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு பதிவு செய்யுமாறு மாவட்ட கலெக்டர் வினித் தெரிவித்துள்ளார். 

    • அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை துணை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • கீழக்கரை நகராட்சி பகுதியில் 95 சதவீதம் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    கீழக்கரை

    கொரோனா பரவல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரானா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. கீழக்கரை நகராட்சி மற்றும் தனியார் கல்லூரி முகாமில் நேற்று 300-க்கும் மேற்பட்ட மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

    ஆய்வு பணி மேற்கொள்ள வந்த சுகாதார துறை துணை இயக்குனர் அஜீத் பிரபு குமார் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    கீழக்கரை நகராட்சி பகுதியில் 95 சதவீதம் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்று அரசு அறிவித்துள்ளது. உருமாறிய ஒமைக்ரான் கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் 85 சதவீதம் சிறப்பாக செயல்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. தற்போது கொரானா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இதைத் தொடர்ந்து நாளை (7-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை கீழக்கரை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலக வளாகம், ஆரம்ப சுகாதார நிலையம், நாடார் பள்ளி, பி.எஸ்.எம் மருத்துவமனை உள்பட பல்வேறு இடங்களில் இலவச பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும். பொதுமக்கள் அனை வரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வட்டார மருத்துவர் செய்யது ராசிக்தீன், வட்டார சுகாதார துறை மேற்பார்வையாளர் பக்கீர் முகமது, கவுன்சிலர் மீரான் அலி, நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி உள்பட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×