search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228415"

    • ஜாம்புவானோடை தர்காவின் 721-ம் ஆண்டு பெரிய கந்திரி விழா நடைபெறுகிறது.
    • தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் சாக்கடை போன்ற அனைத்தும் துப்புர பணிகளும் நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்குள் பட்ட ஜாம் புவானோடை தர்கா 721 ம் ஆண்டு பெரிய கந்திரி விழா நடை பெறுவதை முன்னிட்டு தர்கா பகுதியில் துப்புரப் பணிகள் மருந்து அடித்தல் மற்றும் அனைத்துசாலை ஓரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் சாக்கடை போன்ற அனைத்து துப்புர பணிகளும் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன் தலைமையில் சாலை ஓரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் சாக்கடை போன்ற அனைத்து துப்புர பணிகளும் நடைபெற்றது.

    கந்திரி விழாவை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி சந்தனக்கூடு விழா மற்றும் 8-ந் தேதி அன்று புனித கொடி இறக்கும் விழா ஜாம் புவா னோடை தர்காவில் நடைபெறுவதை ஒட்டி அனைவருக்கும் தப்ரூக் (அன்னதானம்) வழங்கப்படும் என பாரம்பரிய தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப் கூறினார்.

    • என் குப்பை எனது பொறுப்பு தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மக்கும் குப்பை ,மக்காத குப்பை அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பெருமாம்பாளையம் பகுதியில் "நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம்" திட்டத்தின் சார்பில் என் குப்பை எனது பொறுப்பு தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி பொதுமக்களிடம் மக்கும் குப்பை ,மக்காத குப்பை பிரித்து தர வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றதுணைத்தலைவர் குட்டிவரதராஜன் , சாமளாபுரம் பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி, முன்னாள் வார்டு கவுன்சிலர் பொன்னுச்சாமி, மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் , மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வழங்கிய பெருமாம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டது . 

      

    • தூய்மை இந்தியா திட்டத்தில் சுத்தம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
    • அடுத்த 6 மணி நேரத்தில் குறை நிவர்த்தி செய்யப்படும் வகையில் இத்திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் : 

    தூய்மை இந்தியா திட்டத்தில் சுத்தம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அதன்படி பிரத்யேக செல்போன் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் சார்ந்து, உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பணிகள் இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் பொதுக்கழிப்பிடங்களில் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், க்யூ ஆர் கோடு உதவியுடன் செல்போன் மூலம் புகார் செய்யும் நோக்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி தூய்மை இந்தியா திட்ட இணைய தள செயலியுடன் இணைக்கப்பட்ட க்யூ ஆர் கோடு பொதுக் கழிப்பிடங்களில் முகப்பில் வைக்கப்படும்.

    பொதுக்கழிப்பிடங்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பது, சுகாதாரம் மற்றும் தண்ணீர், விளக்கு வசதி இல்லாமல் இருப்பது போன்ற குறைகளை, தங்கள் செல்போனில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலம், தூய்மை இந்தியா திட்ட இணைய செயலியில் அது பதிவாகிவிடும். அந்த தகவல் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    அடுத்த 6 மணி நேரத்தில் குறை நிவர்த்தி செய்யப்படும் வகையில் இத்திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சிகள் அளவில் இத்திட்டத்தை வேகப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு பொதுக் கழிப்பிடத்திலும் தூய்மை இந்தியா திட்டத்துடன் இணைந்த க்யூ ஆர் கோடு வைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

    • தூய்மை நகரத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சி, வைமா இளம்படை மாணவர்கள் மற்றும் கேசா டி மிர் இணைந்து தூய்மை நகரத்தி ற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தொடங்கி வைத்தார்.

    வைமா வித்யாலயா பள்ளி முதல்வர் கற்பகலட்சுமி தலைமை தாங்கினார். வைமா இளம்படை இணை ஒருங்கிணைப்பாளர் ராமராதா வரவேற்றார். ஜே.சி.ஐ. ராஜபாளையம் கேசா டி மிர் தலைவர் தேவி நிகழ்ச்சியை அறிமுகம் செய்தார். இளம்படை ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி, இளம்படை மாணவர்களை அறிமுகம் செய்தார். இளம்படை மாணவர்கள் ''எனது குப்பை எனது பொறுப்பு'' என்ற தலைப்பில் பாடல் பாடினர். 4-ம் வகுப்பு மாணவர் ஆதேஷ் ''மக்கும் குப்பை மக்காத குப்பை'' என்ற தலைப்பில் பேசினார். குப்பையை தரம் பிரித்தல் பற்றி வைமா இளம்படை மாணவர்கள் பொதுமக்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர். வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திருப்பதிசெல்வன், மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • ஆகாய தாமரைகள் படர்ந்தும் நீரோட்டம் தடைப்பட்டு கழுமலை ஆறு தூய்மையை இழந்து வருகிறது.
    • குப்பைகள் மற்றும் தண்ணீர் வேகமாக ஓடுவதற்கு தடையாக உள்ள பொருட்களை அகற்றி தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரதான கழுமலை பாசன ஆறு உள்ளது. கொண்டல் பகுதியில் உருவாகும் கழுமலையாறு கொண்டல், வள்ளுவக் குடி, அகனி, சீர்காழி, திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம், செம்மங்குடி உள்ளிட்ட சுமார் 15க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6000 ஏக்கரில் பாசன வசதி நடைபெறுகிறது.

    சீர்காழி நகர் பகுதியில் கழுமலை பாசன ஆறு நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுநீர் மற்றும் நகர் பகுதியில் இருந்து குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உடைந்த பாட்டில்கள் ஆகியவை கொட்டப்பட்டும், ஆகாயத் தாமரைகள் படர்ந்தும் நீரோட்டம் தடைப்பட்டு கழுமலை ஆறு தூய்மையை இழந்து வருகிறது.

    இதனிடையே நகர் பகுதியில் கழுமலை ஆற்றில் தேங்கி இருந்த குப்பைகள், மண்டி கிடந்த ஆகாயத் தாமரை செடிகள், மழைக்காலம் வர உள்ளதால் நகர் பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் தண்ணீர் வேகமாக ஓடுவதற்கு தடையாக உள்ள பொருட்களை அகற்றி தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.

    இதனை நகர் மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன், ஆணையர் (பொ) ராஜகோபால், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், எழுததர் ராஜகணேஷ், திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பேரணியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், மழைநீரை சேமித்து வைக்கவும் வலியுறுத்தினர்.
    • மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பண்டாரவாடை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுல்தானாபர்வீன் தலைமை வகித்தார்.

    பள்ளி நிர்வாகக்குழு தலைவர் ஜபரூல்லா, செயலாளரும் தாளாளருமான முஹமதுபா ட்சா, பள்ளி முதல்வர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பண்டாரவாடை அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர் தீபக் கலந்து கொண்டு தூய்மைக்கான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வலியுறுத்தியும், மழைநீரை சேமித்து வைக்கவும், மரங்களை நடவு செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பேரணி பள்ளி அருகே தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் பள்ளியை வந்தடைந்தது.

    இதில் பள்ளியின் நிர்வாக அலுவலர் கரிகாலன், நிர்வாககுழு உறுப்பினர் முகமது பாரூக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மை பணியை மேற்கொள்ள நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து வடசேரி பஸ் நிலையத்தில் தூய்மை பணியை மேயர் மகேஷ் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த எந்திரத்தின் மூலமாக கழிவறைகள் நவீன முறையில் சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து மேயர் மகேஷ் பொன்னப்ப நாடார் காலனியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான சாலை பணியையும் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆணை யாளர் ஆனந்த மோகன்,தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் முத்துராமன், கவுன்சிலர் நவீன்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . வ.உ.சி. பிறந்த நாளையொட்டி தாழக்குடியில் உள்ள அவரது சிலைக்கு மேயர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விளம்பர பேனர்களை அகற்றும் பணிகளை நகராட்சி கமிஷனர் தொடங்கி வைத்தார்.

    தாராபுரம் :

    தாராபுரம் பஸ் நிலையத்தில் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி கமிஷனர் ராமர் கலந்துகொண்டு மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்து உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் பவர் சேகர், அம்மன் நாகராஜ், முத்துலட்சுமி ,பழனிசாமி ,புனிதா, சக்திவேல், தேவிஅபிராமி, கார்த்திகேயன் மற்றும் நகராட்சி ஆய்வாளர் அருண் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தாராபுரம் நகரில் அனுமதி பெறாத பிளக்ஸ் மற்றும் சினிமா சுவரொட்டிகள் , விளம்பர சுவரொட்டிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்படும் என கூறி விளம்பர பேனர்களை அகற்றும் பணிகளை நகராட்சி கமிஷனர் தொடங்கி வைத்தார். 

    • முட்புதர்கள் அதிகமாக இருப்பதால் வழிப்பறி சம்பவங்களும் நடந்து வந்தன.இதனால் சாலையோரங்களில் இருந்த முட்செடிகள் அகற்ற பட்டன.
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் பணியை சிறப்பாக செய்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு நல்ல பெயரைக் கொண்டு வரவேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மண்டலங்கள் வாரியாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனியாக பிரித்து போடும் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொது இடங்களில் மாநகராட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ளது.

    இதனை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார் அப்போது அவர் கூறுகையில்,

    நமது மாநகரை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார், ஏற்கனவே மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் குப்பைகளை மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்துமாநகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட கே.வி.கே.நகர் மெயின் ரோட்டில் அதிகமான வாகனங்கள் செல்லும் தென்பகுதி முழுவதும் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து கிடந்தன,முட்புதர்கள் அதிகமாக இருப்பதால் வழிப்பறி சம்பவங்களும் நடந்து வந்தன.

    இதனால் முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.அதனைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் செடிகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

    முதல் கட்டமாக கே.வி.கே. சாமி நகர் சாலையோரங்களில் இருந்த முட்செடிகள் அகற்ற பட்டன.

    இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில்,மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

    பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறும் போது,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் பணியை சிறப்பாக செய்து ஆட்சிக்கு நல்ல பெயரைக் கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.

    அதன்படி தூத்துக்குடியில் பணிகள் நடந்து வருகிறது. மாநகர பகுதியில் உள்ள முட்செடிகள் அனைத்தையும் அகற்றி முட்செடிகள் இல்லாத நிலையை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார், நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் ரங்கசாமி முன்னாள் கவுன்சிலர் அசோக்குமார் சுகாதார அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் துவங்கப்பட்டது.
    • 80-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து தூய்மை பணி செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் துவங்கப்பட்டு வார்டு 10 திருவள்ளுவர்சாலை (குமரன் நகர்) பகுதிகளில் பொதுசுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வார்தல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெரு மின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டது. பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து தூய்மை பணி செய்தனர்.

    2-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாமிற்கு பேரூராட்சி மன்றத்தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். முகாமில் மன்ற உறுப்பினர்கள், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன் மற்றும் அலுவலக பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், தன்னார்வலர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நெற்குப்பையில் தூய்மை இயக்க நிகழ்ச்சி நடந்தது.
    • செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன், வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் நகரங்களின் தூய்மை இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சி சேர்மன் புசலான் தலைமையில் நடந்தது.

    இதில் சைக்கிள் பேரணி, மாராத்தான் ஓட்டம், மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலை தொட்டிகளை சுத்தம் செய்தல், நீர்வரத்து கால்வாய்களை சுத்தம் செய்தல், போன்றவை நடத்தப்பட்டு அதில் பங்கேற்ற மகளிர் சுயஉதவி குழுவினர், மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன், வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

    • தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழா நடந்தது.
    • முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மேரி அனைவரையும் வரவேற்றார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் ஆணையர் அறிவுரையின்படியும், சிவகங்கை மண்டல உதவி இயக்குநர் அறிவுறுத்தலின் படியும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழா நடைபெற்றது.

    இதில் திடக்கழிவு மேலாண்மை குறித்து மீனாட்சி ஆச்சி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ரமேஷ்பாபு, பேரூராட்சி தலைவர் ராதிகா ராமச்சந்திரன், வார்டு உறுப்பினர் அன்புக்கரசி மற்றும் பாண்டிச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மேரி அனைவரையும் வரவேற்றார். முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    ×