என் மலர்
நீங்கள் தேடியது "திட்டப்பணிகள்"
- வேதாம்புத்தூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.
- நியாய விலை கடையில் பொருட்களின் தரத்தினையும் சுன் சோங்கம் ஐடக் சிரு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் சுன் சோங்கம் ஐடக் சிரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி வேதாம்புத்தூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
அப்பகுதியில் உள்ள சுமார் 342 வீடுகளில் 1898 பேர் வசித்து வருகின்றனர். அதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 1489 பேர், 1402 நபர்களுக்கு பரி சோதனை செய்யப்பட்டதில் 38 நபர்களுக்கு ரத்த அழுத்த நோயும், 28 நபர்களுக்கு நீரழிவு நோயும், 30 நபர்களுக்கு ரத்த அழுத்த நோய் மற்றும் நீரழிவு நோய் கண்டறியப்பட்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் மூலம் 6 பயனாளிகளுக்கு பிசியோதெரபியும், 4 பயனாளிகளுக்கு முட நீக்கியல் சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வடகரை கீழ்படாக பேரூராட்சி பகுதியில் வா வா நகரம் ஊரணியை தூர்வாரி ஆளப்படுத்தி கரையை பலப்படுத்தும் பணிகள், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாலா மார்த்தாண்டபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் என்னும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவர் களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள் குறித்தும், துரைச்சாமிபுரம் நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொரு ட்களின் தரத்தினையும் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஆகாஷ், கீழ் பிடாகை பேரூராட்சி தலைவர் ஷேக் தாவூத், பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்மணி, துணை இயக்குனர் முரளி சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட வழங்கள் அலுவலர் சுதா,பாலமர்த்தாண்டபுரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- தேவிபட்டினத்தில் ரூ.1.47 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை ராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் சிகிச்சை பிரிவிற்கான கட்டிடம் கட்டும் பணியை ஆய்வு செய்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு சிகிச்சை வழங்கும் பகுதிக்குச் சென்று சிகிச்சை வழங்குவது குறித்து கேட்டறிந்தவுடன் சிகிச்சை பெற வந்த மக்களிடம் காலதாமதமின்றி சிகிச்சை வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.
மரைக்காயர் ஊரணியில் ரூ 15.72 லட்சம் மதிப்பீட்டில கரை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளும் பொழுது இந்த ஊரணிக்கு வரக்கூடிய மழைநீருக்கான வரத்து கால்வாய்களையும் சீரமைத்து ஊரணியில் தண்ணீர் முழுமையாக தேங்கி நிற்கும் வகையில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து தேவிபட்டினம், காந்தி நகர் பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ2.77 லட்சம் மதிப்பீட்டில் பயனாளி வீடு கட்டி வருவதை பார்வையிட்டு பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்திட பயனாளிக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து தேவிபட்டினம் ஊராட்சியில் ரூ11.27 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ரூ8.83 லட்சம் மதிப்பீட்டில் கிணறு, காமராஜர் தெருவில் ரூ9.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையினையும் பார்வையிட்டு பணியின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்தார்.
படையாச்சி காலனியில் ரூ5.23 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு வருவதையும், மேலப்பள்ளிவாசல் பகுதியில் ரூ13.09 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கட்டப்படு வதையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.
சோலைநகர் பகுதியில் ரூ6.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார் சாலை, பூவாடை பகுதியில் ரூ24.40 லட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மனித சக்தியின் மூலம் பண்ணை குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ராமநாத புரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சேவகப்பெருமாள், ஒன்றிய பொறியாளர்கள் அர்ஜுனன், ரவி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜன்னத்து யாஸ்மின், தேவிபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக அதிகாரி ஆய்வு நடத்தினர்.
- கழிவறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத் தில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில், மத்திய அரசின் கூட்டுறவு மற்றும் நிர்வாக இயக்குநர் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் இணைச் செயலர் பங்கஜ்குமார் பன்சால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
போகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவ மனையை பார்வையிட்டார். கால்நடைகளுக்கு முன்னெச்சரிக்கையாக தேவையான சிகிச்சை முறைகளை கையாண்டு கால்நடைகளின் உயிரிழப்பை தடுக்க மருத்து வர்கள் கண்காணிப்பில் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மருச்சுக்கட்டி ஊராட்சி யில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு முழுமையாக குடிநீர் வழங்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார். பொதுமக்களிடம் தனி நபர் கழிவறை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் தனிநபர் கழிவறை கட்டிடம் கட்டி வழங்கப்படுகிறது. கழிவறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கும் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் ஆய்வகம் உட்பட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டதுடன் பொது மக்களுக்கு தேவையான சிகிச்சைகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று மருத்துவர்களிடம் தெரிவித்தார்.
பரமக்குடி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பார்வையிட்டு அங்கு விவசாயிகள் விற்பனை செய்ய கொண்டு வந்துள்ள தானிய பொருட்களை இருப்பு வைத்துள்ளதை பார்வையிட்டார். அரிய னேந்தல் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் குறுங்காடுகள் அமைத்து ஊராட்சிக்கு வருவாய் ஈட்டும் திட்டம் செயல்பட்டு வருவதை பார்வையிட்டு இதேபோல் மற்ற ஊராட்சிகளிலும் செயல்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்க ளுடன் ஆலோசனை நடத்தி னார். இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, கூட்டுறவு வளர்ச்சிக் கழக முதன்மை இயக்குநர் சந்திரசேகரன், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் முத்துக்குமார், ஒழுங்குமுறை விற்பனை குழு செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திட்டப்பணிகளை தாமதமின்றி முடிக்க வேண்டும் என்று ஊராட்சித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து பொதுமக்களின் தேவைக்கேற்ப பணிகளை முடிக்க வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில், ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது தலைமையில் நடந்தது.
கடந்த நிதியாண்டு மற்றும் நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு செய்தார். இதில் அவர் பேசியதாவது:-
ஊரக வளர்ச்சித்து றையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுதல், அங்கன்வாடி கட்டிடம் சீரமைக்கும் பணி, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 15-வது நிதி குழுவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், சமத்துவபுரம் வீடுகளை சீரமைக்கும் பணிகள், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து பொதுமக்களின் தேவைக்கேற்ப பணிகளை முடிக்க வேண்டும்.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மற்றும் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை பயனாளிகளுக்கு காலதாமதமின்றி கட்டுமான பொருட்களை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு நிதியாண்டி லும் மேற்கொள்ளப்பட தேர்வு செய்யப்பட்ட பணிக ளுக்கான ஆணைகளை காலதாமதமின்றி பயனா ளிகளுக்கு வழங்கி பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் மற்றும் மண்டபம் ஊராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த பதிவேடுகளை ஆணையர் பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி இயக்குநர் ஊராட்சிகள் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு திட்டப்பணிகள் ஊராட்சிகளுக்கு உரிய காலத்தில் அனுமதி வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்து காலதா மதமின்றி பணிகளை வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
- அமைச்சர் பெரியசாமி, துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் பெரியசாமி துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து குக்கிராமங்களி லும் கான்கிரீட் சாலை, தெருவிளக்குகள், குளம், இடுகாடு, சுடுகாடு, குடிநீர், விளையாட்டு, கிராம அங்காடிகள், நூலகங்கள் என பல்வேறு அடிப்படை கட்டமைப்புப் பணிகளை அந்தந்த ஊராட்சிகளே செய்வதற்காக ஆண்டிற்கு சுமார் ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஊரகப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் நடை பெற்று வரும் வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து தொடர்ச்சியான பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகளை அனைத்து அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிடோர் ஒருங்கிணைந்து செய்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் விழுப்பனூர் ஊராட்சி, கிருஷ்ணன் கோவில் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.32லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணிகளையும், திருவண்ணா மலை ஊராட்சி என்.சண் முகசுந்தராபுரம் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.20லட்சம் மதிப்பில் சாலை அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.
மல்லி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணை மற்றும் மியா வாக்கி முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வரும் பணிகளையும், ராம கிருஷ்ணாபுரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ.9.78லட்சம் மதிப்பில் கிழக்கு ஊரணியை ஆழப்படுத்தி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடை பெற்று வருவதையும் அமைச்சர் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பிறகு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பெரியசாமியை கலெக்டர் ஜெயசீலன் வரவேற்றார். இந்தகூட்டத்தில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்ட பாணி, செயற்பொறியாளர் இந்துமதி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் ரவிக் கண்ணன், யூனியன் தலைவர் ஆறுமுகம், வத்திராயிருப்பு யூனியன் தலைவர் சிந்துமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மேலூர் அருகே ரூ.60 லட்சத்தில் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- என்ஜினீயர்கள் ரவிக்குமார், கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி யூனியனைச் சேர்ந்த தும்பைபட்டி ஊராட்சியில் மதுரை தொகுதி எம்.பி. நிதி ரூ.5 லட்சத்தில் செட்டியார்பட்டியில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியையும், தாமரைபட்டி கிராமத்தில் கனிம மற்றும் புவியியல் துறையின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் குடிநீர் போர்வெல் அமைக்கும் பணியையும், தாமரைபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் சமையலறை கட்டும் பணியையும் பார்வையிட்டார்.
மேலூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சாலக்கிபட்டியில் சமுதாயக்கூடம் கட்டிடம் கட்டும் பணியையும் மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.
அப்போது கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், தும்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், கொட்டாம்பட்டி என்ஜினீயர்கள் ரவிக்குமார், கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
- ரூ.24.55 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.
- சுகாதார வளாகம் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காரைக்குடி நகராட்சிக் குட்பட்ட செஞ்சை, முத்துப் பட்டினம் ஆகியப்பகுதி களில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுமானப் பணிகளையும், நமக்கு நாமே திட்டம் 2021-22-ன் கீழ் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணி களையும் கலெக்டர் செய் தார்.
இறகுப்பந்து உள்விளை யாட்டு அரங்கம் கட்டும் பணிகளையும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் பருப்பு ஊரணி, சோமு பிள்ளை தெரு, கணேசபுரம் ஆகிய இடங்களில் கட்டப் பட்டு வரும் சுகாதார வளா கம் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.30 கோடி மதிப் பீட்டில் அறிவுசார் மையம் கட்டுமான பணிகள் மற்றும் எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணிக ளையும், முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 14 நகராட்சி பள்ளிகளில் 1,631 குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.18.57 லட்சம் மதிப்பீட்டில் செயல் படுத்தப்பட்டு வரும் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டப்பணிகளை யும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது காரைக்குடி நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், நகராட்சிப் பொறியாளர் கோவிந்தராஜன், நகர்நல அலுவலர் திவ்யா மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
- மானியத்தில் இருந்து 5 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
- மூன்று பணிகளையும் அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த அகசிப்பள்ளி ஊராட்சி மோட்டூர் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், 15&வது நிதிக்குழு மானியத்தில் இருந்து, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் பஞ்சாயத்து நேதாஜி நகரில் நீண்ட நாட்களாக சாக்கடைக் கால்வாய் வசதி இன்றி கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் சாக்கடைக் கால்வாய் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி அ.தி.மு.க,., எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்தூர் கிராமத்தில், 15வது நிதிக்குழு மானியத்தில் இருந்து 5 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இந்த மூன்று பணிகளையும் அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகர், முன்னாள் வங்கித் தலைவர் சின்னசாமி, கிளை செயலாளர்கள் பாண்டியன், சுப்பு, கவுன்சிலர் ரவி, மாவட்ட பிரதிநிதி மாது, வங்கி துணைத் தலைவர் ரமேஷ், கவுன்சிலர் ராதா சென்றாயன், திம்மராயன், குமார், செல்வன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.75.7 லட்சத்தில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- நிகழ்ச்சி முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
தொட்டியம்:
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.75.7 லட்சம் செலவில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு நகர்புறச் சாலை கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.43.70 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண் 2-ல், அத்தனூர் அம்மன் கோவில் தெரு வார்டு எண் 4-ல், ஆண்டாபுரம் ரோடு வார்டு எண் 1 மற்றும் வார்டு எண் 10, காமராஜர்த் தெரு மற்றும் வார்டு எண் 11-ல் பள்ளிவாசல் தெரு, 5-வது குறுக்குத் தெரு ஆகிய இடங்களில் தார் சாலை வலுப்படுத்துதல் பணிக்கும் தூய்மை இந்தியாத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் ஈரக் கழிவுகளை தீர்வு செய்வதற்கான செயலாக்க கட்டமைப்புப் பணி,முசிறி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் செலவில் கூட்டுறவு வங்கி அருகில் நிழற்குடை அமைத்தல், அதே திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் காட்டுப்புத்தூர் வார்டு எண் 13-ல், வடக்கு முத்துராஜா தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் என மொத்தம் ரூ.75.7 லட்சம் செலவில் மேற்கண்ட திட்ட பணிகள் செய்ய பூமி பூஜை நடத்தி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதாசுரேஷ், துணைத் தலைவர் சுதாசிவ செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல்அமீது, ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், திருஞானம், காட்டுப்புத்தூர் நகர செயலாளர் கே.டி.எஸ்.செல்வராஜ், தொட்டியம் ஒன்றிய சேர்மன் கிருஷ்ணவேணி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சிவசெல்வராஜ், வார்டு கவுன்சிலர்கள் சிவஜோதி, பானுமதி, பழனிவேல், அன்னபூரணி, கருணாகரன், மணிவேல், ராணி, விஜயா, இளஞ்சியம், ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் காட்டுப்புத்தூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் சிவசெல்வராஜ் சிறப்பாக செய்திருந்தார். தொட்டியம் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், காட்டுப்புத்தூர் நகர தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்கள், பெண்கள் திரளாக பங்கேற்றனர்.
- நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் மீனா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
- தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் அடிக்கல் நாட்டினார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் ரூ.11.24 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. மாவட்ட ஊராட்சி தலைவர் நிதியில் இருந்து ரூ.4.64 லட்சம் மதிப்பில் வாறுகால் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் மீனா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இந்திரா, ஒன்றிய குழு உறுப்பினர் கலா, மாவட்ட பிரதிநிதி ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து பணிகள் நிறைவடைந்த மாறாந்தை 8-வது வார்டு ஊர் பொது கிணற்றில் ரூ.3.60 லட்சம் செலவில் நீர்மூழ்கி மோட்டார் அமைத்து குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் ஆதி திராவிடர் மயானத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் தொட்டி கட்டுதல் ஆகிய திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், தி.மு.க. கிளை செயலர்கள் வசந்த், கணேசன், வெள்ளத்துரை, சேகர்,அரசு ஒப்பந்ததாரர் முத்துபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில் க கட்டப்பட்டு வரும் நூலக கட்டிட பணிகளை பார்வைட்டார்.
- மழைநீர் தேங்காத வண்ணம், கால்வாய்களை தூர்வார வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கிருஷ்ணகிரி சின்ன ஏரி, பாப்பாரப்பட்டி ஏரி, அரசு போக்குவரத்து கழக பணிமனை, ஆகிய பகுதிகளல் தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பழைய பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தம், கழிப்பறை வசதிகளை பார்வையிட்டு, பஸ் நிலையத்தை தூய்மையாக பராமரிக்கவும், மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம், மழைநீர் வடிகால் கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 15 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலக கட்டிட பணிகளை பார்வையிட்டு, நூலக கட்டிடத்தை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, பழையபேட்டையிலிருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் சாலையில் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்கள் உடனடியாக தூர்வார வேண்டும். புதிய கால்வாய்கள் கட்ட கருத்துரு தயார் செய்ய வேண்டும். புதிய பஸ் நிலையத்தை பார்வையிட்டு பஸ் நிலையத்தை புதிய வண்ணம் பூசவும், கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கவும், ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ள பஸ்களை சீராக பஸ் நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். பஸ் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் கடைகளை அமைக்க வேண்டும். மேலும், கடைகளில் விற்கப்படும் பொருட்கள் தரமானதாக விற்க வேண்டும். காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், சின்ன ஏரியை அழகுபடுத்தும் பணிகளுக்கு ஏற்கனவே கருத்துரு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்து கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய மீண்டும் கருத்துரு தயார் செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழக புறநகர் பஸ் நிலையத்தை பார்வையிட்டு, பஸ்கள் பராமரிப்பு, இட வசதி குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.79 லட்சம் மதிப்பில் பாப்பாரப்பட்டி, தாசாகவுண்டன் ஏரியில் சுற்றுசுவர் மற்றும் வேலி அமைக்கும் பணிகளையும், ஏரியைச் சுற்றி சுகாதார தூய்மை பணிகளையும், மேலும் பொதுமக்கள் ஏரியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் வசந்தி, நகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், இளநிலை அலுவலர் அறிவழகன் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
- மழைக்காலத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க பணியாளர்களை அறிவுறுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாடானை ஊராட்சி ஒன்றியம், பெரிய கீரமங்கலம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.47.06 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை வணிகவளாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு அரசு வழிகாட்டுதலின்படி நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டு முறையில் கட்டப்பட்டு வருகிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து இந்த பணியை உரிய காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் சமத்துவபுரத்தில் வீடுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு மழைக்காலத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க பணியாளர்களை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பாண்டுக்குடி ஊராட்சி, தினையத்தூர் கிராமத்தில் 15-வது நிதிக்குழு மூலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் திருவாடனை மற்றும் பாசிப்பட்டிணம் ஊராட்சியில், 'நம்ம ஊரு சூப்பரு" எங்களது கிராமம் எழில்மிகு கிராமம் என்பது குறித்தும், சுகாதாரத்துடன் வாழ்வது பற்றிய விழிப்பு ணர்வு குறித்தும் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி செயலர் ரகுவீரக கணபதி, திருவாடனை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முகமது முக்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி பொறியாளர்கள் செல்வகுமார், பாலமுருகன், ஜெயந்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சரளாதேவி (பெரிய கீரமங்கலம்), இலக்கியாராமு (திருவாடானை), உம்மூர் சலீமா நூர் அமீன் (பாசிப்பட்டிணம்) மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.