search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றி"

    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் உலக அளவிலான யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
    • மாணவ-மாணவிகளுக்கு, எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    ஸ்கூல் கேம் ஆக்டிவிட்டி டெவலப்மெண்ட் பவுண்டேஷன் சார்பில் தேசிய அளவிலான யோகா போட்டி கடந்த 17-ந் தேதி மதுரை பாத்திமா கல்லூரியில் நடைபெற்றது. இதில் வீ.கே.புதூர் பீனிக்ஸ் யோகா பயிற்சி மையத்தை சேர்ந்த அரசு, தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 40 பேர் கலந்து கொண்டனர். அதில், 26 பேர் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்று நவம்பர் மாதம் நடக்க உள்ள உலக அளவிலான யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

    தேர்வான மாணவ-மாணவிகள் தங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.வை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தினர். அவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி கல்வி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு, எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர்கள் மருதுபாண்டி, ரேவதி, மூர்த்தி, கணேஷ், ஜெயக்குமார், கார்த்தி, வக்கீல் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாஜக.வின் பிளவுபடுத்தும் இந்துத்துவா சித்தாந்தத்தால் நாட்டில் ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிா்கொள்கிறது.
    • நிரந்தரத் தொழிலாளா்களின் எண்ணிக்கை குறைப்பு அதிகரித்துள்ளது.

    திருப்பூர்,செப்.24-

    ஏஐடியூசி., தேசிய பொதுக்குழுக்கூட்டம் திருப்பூா் பல்லடம் சாலையில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் தொடங்கியது. கூட்டத்தில் ஏஐடியூசி., அகில இந்திய பொதுச்செயலாளா் அமா்ஜித் கெளா் பேசியதாவது:-

    பாஜக.வின் பிளவுபடுத்தும் இந்துத்துவா சித்தாந்தத்தால் நாட்டில் ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிா்கொள்கிறது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதுடன் மட்டுமல்லாமல் பொருளாதாரம் பின்னடைகிறது.மதச்சாா்பின்மை, பன்முகத்தன்மை ஆகியவை கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. வேலையிழப்பு, ஊதிய குறைப்பு, சமூக பாதுகாப்பு பறிக்கப்பட்ட நிலை, நிரந்தரத் தொழிலாளா்களின் எண்ணிக்கை குறைப்பு அதிகரித்துள்ளது.

    ஆகவே எதிா்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய 'இந்தியா' கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றாா்.

    • முகாமில் கலந்து கொண்ட அனை வரும் உங்கள் வாழ்வில் ஒருஇலக்கினை வைத்துக் கொள்ள வேண்டும்.
    • பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் வளாகத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம்இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன், உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல வேலை வாய்ப்பு இணை இயக்குநர் லதா அனைவரையும் வரவேற்றார். முகாமில் பொதுப்பணிகள் நெடுஞ் சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-வேலைவாய்ப்பு அலு வலகத்தில் பதிவு செய்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பதிவினை புதுப்பிக்க வேண்டும்.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் தற்போது இத்துறைக்குதிறன் மேம்பாட்டுத்துறை வேலை வாய்ப்பு அலுவலகம் என பெயர் சூட்டியுள்ளார்கள். படித்த அனைத்து இளைஞர் களுக்கும் அரசு வேலை வழங்க இயலாது என்பதனால், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்தி, வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும் என் பதற்காகத்தான் இத்த கைய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப் படுகின்றன.இந்த முகாமில் கலந்து கொண்ட அனை வரும் உங்கள் வாழ்வில் ஒருஇலக்கினை வைத்துக் கொள்ள வேண்டும். இலக்கினை அமைத்துக் கொண்டு வாழ்ந்தால் தான் உழைக்கும் எண்ணம் வரும். எனவே, இம்முகாமில் பணி நியமன ஆணை பெறும் அனைவரும் தங்கள் பணியில் முழு ஈடுபாட்டுடன் இருந்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும்  இவ்வாறு அவர் பேசினார்.தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல-அைமச்சர் தமிழ்நாட்டில் உள்ள படித்த அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு உருவாக் கிட வேண்டும் என்ற நோக் கத்தில், செயல்படுத்திய திட்டம் தான் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் இன்று நடைபெறும் 41-வது தனியார் வேலைவாய்ப்பு முகாம். இன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 150 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளது. இளைஞர்கள் தாங்கள் விரும்பிய எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சரியான வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். தனியார் துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. இளைஞர்கள் தன்நம்பிக்கையுடனும்,விடாமுயற்சியுடனும் செயல்பட வேண்டும். போராட்டங்கள் இல்லாமல் வாழ்க்கையில் வெற்றிகள் இல்லை, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றுங்கள். முடியாது என்பது உலகில் இல்லை, வெற்றி என்பதும் வெகு தொலைவில் இல்லை. எட்டும் தூரத்தில் தான் இருக்கிறது. கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம், அலட்சியமான மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகசரித்திரம் இல்லை எனவே இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பை பெற்று வாழ்வில்வெற்றி பெற வேண்டும் . இவ்வாறு அவர் பேசி னார்.

    தொடர்ந்து அமைச் சர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட இளைஞர் களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர். இந்த முகாமில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 152 முன்னனி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. மாவட்டம் முழுவதும் இருந்து 16 மாற்றுத்திறனாளிகள், 4,520 பெண்கள் உட்பட 10,132 வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். இதில் 338 பெண்கள்மற்றும் 9 மாற்றுத்திறனாளிகள் உட்பட 1021 வேலைநாடு நர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 64 நபர்கள் திறன் பயிற்சிக்கு பதிவு செய்தனர். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பொருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், துணை இயக்குநர் மணி, உதவி இயக்குநர் பாலமுருகன், ஏ.கே.டி மேல்நிலைப்பள்ளி தாளாளர் மகேந்திரன், அனைத்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் நன்றி கூறினார்.

    • தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் ஜெய்க் சி.தாமசை 37ஆயிரத்து 719 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
    • தொடர்ந்து 53 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பள்ளி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருந்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி இறந்ததையடுத்து, அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த புதுப்பள்ளி தொகுதியில் கடந்த 5-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட உம்மன்சாண்டியின் மகனான சாண்டி உம்மன் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் ஜெய்க் சி.தாமசை 37ஆயிரத்து 719 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    53 ஆண்டுகளாக புதுப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வாக உம்மன்சாண்டி இருந்தார். இந்நிலையில் தற்போது நடந்த இடைத் தேர்தலில் அவரது மகன் சாண்டி உம்மன் வெற்றி பெற்றிருக்கிறார். இதன்மூலம் தொடர்ந்து 53 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பள்ளி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருந்து வருகிறது.

    இந்நிலையில் புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சாண்டி உம்மன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். முன்னதாக அவர் இன்று காலை சட்டசபை சபாநாயகர் ஷம்சீரை சந்தித்தார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு
    • எழுச்சி மாநாடு மாபெரும் வெற்றியினை வரலாற்றில் இடம்பெற செய்துள்ளது

    நாகர்கோவில் :

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டுக்கு சென்று திரும்பிய குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வினருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி படிவம் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோ விலில் நேற்று நடந்தது.

    அவை தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் வரவேற்று பேசி னார். எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், வக்கீல் பிரிவு துணை செயலாளர் பரமேஸ்வரன், இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், கவுன்சி லர்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூத் கமிட்டி படிவத்தை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    மதுரையில் நடைபெற்ற வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு மாபெரும் வெற்றியினை வரலாற்றில் இடம்பெற செய்துள்ளது. தொண்டர்களிடம் புதிய தெம்புடனும் எதிர் காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

    நினைவுகள் அழிவதில்லை. வெற்றிகள் முடி வதில்லை. அ.தி.மு.க.-வின் வெற்றிகள் மறைவதில்லை. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக நாம் ஒவ்வொருவரும் முனைப்போடு போர்க ளத்தில் நிற்பது போன்று செயல்பட வேண்டும். எதிரி கள் நமக்கு செய்யும் துரோகங்களை மக்களின் வாக்குகளால் வீழ்த்திக் காட்டி வெற்றி வாகை சூட வேண்டும். இதற்கு உண்மையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய சட்டசபை தொகுதி களில் பூத் கமிட்டி அமைத்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    இதில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், ஒன்றிய செயலாளர்கள் ஜெசிம், பொன் சுந்தர்நாத், ஜீன்ஸ், முன்னாள் நகர செயலாளர் சந்திரன், ராஜாக்கமங்கலம் யூனியன் தலைவர் அய்யப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார்,குளச்சல் நகர கழக செயலாளர் ஆண்ட்ரோஸ் , குளச்சல் சட்ட மன்ற தொகுதி முன்னாள் கழக செயலாளர் ஆறுமுகராஜா , முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் ரவீந்திரவர்சன், ஆனக்குழி சதீஷ் , அருள்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சந்திரயான் வெற்றிகரமாக நிலவில் இறங்கியதை முன்னிட்டு இந்தியா வடிவில் 108 நெய் தீபம் ஏற்றி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ரியாக ஏழு மணிக்கு பொதுச் செயலா ளர் குமரவேல் தீபங்களை ஏற்றி வைத்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் கைலாசநாதர் கோவிலில் சந்திரயான் வெற்றிகரமாக நிலவில் இறங்கியதை முன்னிட்டு இந்தியா வடிவில் 108 நெய் தீபம் ஏற்றி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவிலின் சபா மண்டபத்தில் இந்தியா வடிவத்தில் விளக்கு கள் மற்றும் புஷ்பங்கள் அலங்கரிக்கப்பட்டது. சரியாக ஏழு மணிக்கு பொதுச் செயலா ளர் குமரவேல் தீபங்களை ஏற்றி வைத்தார். முதன்மைச் செயலாளர் மனோகரன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சந்திரயான் வெற்றிக்கும் இதற்காக பாடு பட்ட விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    பின்னர் சுகந்த குந்தலாம்பிகை மற்றும் கைலாசநாதருக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. முடிவில் ஸ்ரீநிதி நன்றி கூறினார்.

    • கோர்த்தகிரி காந்தி மைதானத்தில் தாலுகா அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
    • கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோர்த்தகிரி காந்தி மைதானத்தில் தாலுகா அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக அரவோனு ட்ரீம்ஸ் லெவன் கிரிக்கெட் அணியும், கோத்தகிரி ஸ்டார் ஓம்நகர் கிரிக்கெட் அணியும் தகுதிசுற்று 2வது போட்டியில் மோதின.

    இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ட்ரீம்ஸ் லெவன் அணி, நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 143 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு களமிறங்கிய ஸ்டார் ஹோம் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ட்ரீம்ஸ் லெவன் அணி 3வது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது.

    அப்போது கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கெங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கோத்தகிரி பேரூராட்சி வார்டு உறுப்பினர் அமுதம் பாபு ஆகியோர் விளையாட்டு உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினர்.

    • நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க.வினர் பாடுபட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
    • கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    காரியாபட்டி

    விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மல்லாங்கிணறில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    விருதுநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி பாக முக வர்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ராமநாத புரத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனை வரும் கலந்து கொள்ள வேண்டும்.

    வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் அயராது பாடுபட வேண்டும். முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை அனைத்து தி.மு.க. சார்பு அணிகளும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த கூட்டத்தில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் வனராஜா, மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, ஒன்றிய செய லாளர்கள் காரியாபட்டி செல்லம், கண்ணன், நரிக்குடி போஸ் தேவர், கண்ணன், திருச்சுழி சந்தன பாண்டியன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சி லர்கள் தங்க தமிழ்வாணன், கமலி பாரதி, பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, சந்திரன், முன்னாள் நகர செயலாளர் தங்கபாண்டி யன், மாவட்ட பிரதிநிதி பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தொழிலில் வெற்றி பெற உழைப்பு மட்டுமே போதாது.
    • திறமையான கணிப்பும், யூகங்களும் மிக மிக அவசியம்.

    எந்த ஒரு தொழிலில் ஈடுபட விரும்பினாலும் கண்டிப்பாக யோசனை செய்ய வேண்டியது தான். யோசனையே இன்றி கண்ணை மூடிக்கொண்டு காரியத்தில் இறங்கினோம் என்றால் அதில் எந்தவிதமான நியாயமும் இல்லை. ஆனால் நமது எண்ணம் வெறும் யோசனையாகவே இருந்து விட்டால் எந்தவித பயனும் இல்லை.

    தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பு நன்றாக யோசனை செய்த பின்னர் அதை ஆக்கபூர்வமாக செயல்படும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அபரிமிதமான ஆர்வத்தை முன்வைத்து களத்தில் இறங்க வேண்டும்.

    சாதாரணமாக எந்த ஒரு செயலோ அல்லது தொழிலோ புரிய வேண்டுமானால், அதில் நிறையவே சிரமங்கள் உண்டு. கஷ்டப்படாமல் எதிலும் வெற்றி பெறவும் இயலாது. ஏன், செயல்படவும் இயலாது.

    எனவே மிக அதிக அளவு யோசனை மற்றும் ஆராய்ச்சியில் இறங்கினால் அதில் ஏராளமான பிரச்சினைகள், கஷ்டங்கள், பாதகங்கள் தென்படும். முடிவில் அந்த முயற்சியை கைவிட வேண்டிய நிலை ஏற்படும். ஆகையால் பெண்கள் ஓரளவு சிந்தித்து விட்டு தொழில்முனைவில் ஈடுபடவேண்டும். பிறகு அதில் வரும் சவால்களை எதிர்கொண்டு, அவற்றை சாதுர்யமாக சமாளிக்க வேண்டும். சாதாரணமாக மாத வருமானம் பெறுபவர்களுக்கும், தொழில் மூலம் சம்பாதிப்பவர்களுக்கும் தூரத்தில் இடைவெளி உண்டு.

    சமான்யமானவர்கள், மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வீடு, ஒரு வாகனம் என்ற அளவிலேயே இருப்பது கண்கூடாக காணும் உண்மை. ஆனால் தொழில் மூலம் சம்பாதித்து பல வீடுகள், பல வாகனங்கள், ஏராளமான பணியாட்கள் என பொருளாதாரத்தில் மிகவும் மேன்மையுடன் திகழ்கின்றனர்.

    இது தானாகவோ, வெகு எளிதாகவோ வந்ததாக நிச்சயம் இராது. இரவு, பகல் பாராது உழைத்து எண்ணற்ற சிரமங்களை சமாளித்து அவற்றை தக்க வைப்பது மிகவும் கடினமான காரியம். தொழிலில் வெற்றி பெற உழைப்பு மட்டுமே போதாது. திறமையான கணிப்பும், யூகங்களும் மிக மிக அவசியம். யோசனை ஆக்கப்பூர்வமாக இருத்தல் வேண்டும். தடைக்கல்லாக இருத்தல் கூடாது.

    ஒரு ஆற்றை கடக்க வேண்டுமானால் அதன் பரப்பளவு முழுவதிலும் உள்ள ஆழத்தை எப்படி கண்டறிவது? ஆற்றில் இறங்கி மெதுவாக தடவித்தடவி செல்ல வேண்டியது தான்! கடக்க இயலாத அளவு ஆழம் இருப்பின் மாற்று வழி தேட வேண்டியது தான். இல்லாவிடில் ஆற்றையே பார்த்துக்கொண்டு கரையிலேயே உட்கார வேண்டியது தான்.

    • மாரத்தான் போட்டியில் மாணவன் விஷ்வா முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    • 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    தரங்கம்பாடி:

    தஞ்சாவூர் அத்லடிக் அசோசியேட் மற்றும் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி இனணந்து நடத்திய பசுமை பூமி கும்பகோணம் மாரத்தான் போட்டி நடைப்பெற்றது.

    இதில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 8-மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 12ஆம் வகுப்பு மாணவன் வி. விஷ்வா முதலிடத்தில் வெற்றி பெற்று ரூபாய். 5,000 மற்றும் சான்றிதழ் பரிசாக பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவனையும் உடற்கல்வி ஆசிரியர்களையும் ஆட்சிமன்றக்குழுத் துணைத்தலைவர்கள் பேராசிரியர் முருகேசன், ஞானசேகரன் ஆட்சிமன்றக்குழு செயலர் எஸ். பாஸ்கரன் நிர்வாகச் செயலர் வி.பாஸ்கரன் , பொருளாளர் சுப்பிரமணியன் முதல்வர் சரவணன் மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்களும் வாழ்த்தினை தெரிவித்தார்கள்.

    • நிதி நிலைமைக்கேற்ப பட்ஜெட்டை மாற்றி அமைக்க வேண்டும்.
    • பெண்கள் தொழிலில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க எளிய வழிகள்..

    பெண்களுக்கு குடும்பத்திலும் தொழிலிலும் எதிர்பாராத விதமாக நிதி நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதனை சமாளிப்பதற்காக சில முன்னேற்பாடுகளை செய்து வைத்திருப்பது நன்மை தரும். பெண்கள் தொழிலில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க எளிய வழிகள்..

    நிதி திட்டமிடல்

    எந்த செயலில் இறங்குவதாக இருந்தாலும் அதற்கான நிதி திட்டமிடல் என்பது முக்கியமானது. எப்போதும் பட்ஜெட்டை விட சிறிது கூடுதலாகவே நிதியை இணைத்து திட்டமிட வேண்டும். தொலை நோக்கு சிந்தனையுடன் திட்டமிடும் போது எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் மற்றவர் உதவியின்றி தீர்வு காண முடியும். இதுவே தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கான அடிப்படை தகுதியாகும்.

    அவசரகால நிதி

    தொழிலை பொறுத்தவரை அவசர கால நிதியை தனியாக வைத்திருக்க வேண்டும். மருத்துவச்செலவு, உபகரணங்கள் சேதமடைதல் எதிர்பாராத விபத்து, தொழில் இழப்பு என எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கும் வகையில் இந்த நிதி உதவும். இந்த நிதியை எதிர்பாராமல் ஏற்படும் செலவுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவசர கால நிதிக்கென வங்கியில் தனி கணக்கு தொடங்கி சேமித்து வைக்கலாம். அதன் மூலம் வட்டித்தொகையும் கூடுதலாக கிடைப்பதால் நிதி நெருக்கடி ஏற்படும் போது எளிதாக சமாளிக்க முடியும்.

    கடனை திருப்பி செலுத்துதல்

    யாராக இருந்தாலும் புதிதாக தொடங்கும் தொழிலுக்கு அடிப்படையாக கடன் பெறுவது இயல்பானது. இந்த கடனை குறிப்பிட்ட கால இடைவெளியில் திருப்பி செலுத்துதல் அவசியமானது. கடனைக்கண்டு கொள்ளாமல் விடும்போது மொத்தமாக செலுத்தும் நெருக்கடி ஏற்படலாம். இதனால் நிதி சுமையை சமாளிக்க முடியாமல் தவிப்புகுள்ளாகலாம். எனவே முடிந்தவரை கடனை அவ்வப்போது திருப்பி செலுத்த வேண்டும். கடனை சரியாக செலுத்துவதன் மூலம் கடனுக்கான தரவரிசை அங்கீகாரத்தைபெற முடியும்.

    முதலீடுகள் அவசியம்..

    எதிர்பாராமல் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு சிறந்த வழி முதலீடு செய்வதாகும். தொழில் தொடங்கும் போதே முதலீடு செய்வதில் ஈடுபட வேண்டும். நிதி நெருக்கடி என்பது கண் இமைக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது. கடன் பெறுவது மட்டுமின்றி சேமிப்பு, முதலீடு ஆகியவற்றாலும் அதனை சமாளிக்க முடியும்.

    பிரச்சனையின் தீவிரத்தை உணருதல்

    நெருக்கடியை சமாளிப்பதற்கு முன்பு பிரச்சனையின் தீவிரத்தை உணர வேண்டும். அதை தீர்ப்பதற்கான வழிகளை தகுந்த ஆலோசகரிடம் கேட்டு சரியான வழிமுறைகளை முதலில் பின்பற்ற வேண்டும். இரண்டாவதாக நிதி நிலைமைக்கேற்ப பட்ஜெட்டை மாற்றி அமைக்க வேண்டும். அடுத்து திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏற்றவாறு தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் தொழிலை பிரச்சனையிலிருந்து மீட்டெடுப்பதுடன் நிதி நெருக்கடியை சமாளிக்கவும் முடியும்.

    சந்தைப்படுத்தும் உத்தி

    நிதி நெருக்கடியிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தாமல் அடுத்த நிலைக்கு செல்ல தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தற்போது நடைமுறையில் இருக்கும் செயல்பாட்டில் மாற்றம் கொண்டு வருவதுடன் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான உத்தியையும் மாற்றி அமைக்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளரை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

    • தகுதியான நபர்கள் மூலம் இலக்குகளை அடைவதே சிறந்த தலைமைப்பண்பாகும்.
    • தன்னம்பிக்கை மற்றும் தலைமை பண்புடன் உழைப்பவர்கள் வெற்றியை பரிசாக பெறுகிறார்கள்.

    சுயதொழில் அல்லது வியாபாரத்தை தொடங்கும் இளம் பெண் தொழிலதிபர்கள் அதை வெற்றிகரமாக நடத்தி செல்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் மன அழுத்தத்திற்கும் ஆளாகி விடுவதுண்டு. அதுபோன்ற சந்தர்ப்பத்தில் சூழ்நிலையை புரிந்து கொண்டு தமக்குள் இருக்கும் தலைமை பண்பை வெளிப்படுத்தி எவ்வாறு வெற்றி அடைவது என்பது இக்கட்டுரை விளக்குகிறது.

    தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அனைத்து துறை சார்ந்த செய்திகளும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் வெற்றி பெறுவதற்கான அடிப்படை தகவல்கள் என்பது அனுபவம் வாய்ந்த மனிதர்களிடம் தான் உள்ளது. அப்படிப்பட்டவர்களை தொழில் அல்லது வர்த்தகத்தில் ஒருங்கிணைந்து வழிநடத்தி செல்வது தான் தொழில் முனைவோர்களுக்கான அடிப்படை தகுதியாக உள்ளது. அதாவது குறைந்த ஆற்றலை பயன்படுத்தி குறுகிய காலகட்டத்தில் தகுதியான நபர்கள் மூலம் இலக்குகளை அடைவதே சிறந்த தலைமைப்பண்பாகும்.

    தனது பலம் மற்றும் பலவீனம் ஆகியவை பற்றி தலைமை பொறுப்பில் உள்ளோர் நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் எந்த சூழ்நிலையிலும் தொழிலை நடத்தி செல்வதற்கான மனத்தெளிவு கிடைக்கும். தம்மைப்பற்றி பெருமையாகவோ அல்லது தாழ்வாகவோ நினைப்பவர்கள் எளிதாக சூழ்நிலை கைதிகளாக மாறுகிறார்கள். எனவே தம்முடைய பலம் மற்றும் பலவீனம் குறித்த விழிப்புணர்வு கொண்டவர்கள் ஒரு செயலை செய்ய முடியுமா அல்லது முடியாதா என்பதில்லை தெளிவாக சொல்வதன் மூலம் மற்றவர்களது நம்பிக்கையை எளிதாக பெறுகிறார்கள்.

    தொழில் முனைவோர்கள் எப்போதுமே தன்னம்பிக்கையுடன் முடிவுகளை எடுத்து அதை செயல்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பது அவசியம். அதற்கு தொழில் அல்லது வர்த்தகத்தில் தங்களுக்குரிய இடத்தை கச்சிதமாக அறிந்திருப்பதுடன் சக போட்டியாளர்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் முடிவெடுக்கும் திறன் மேம்படும்.

    திறமையான தொழில் முனைவோர்கள் தங்கள் செயல் திட்டங்களை சரியாக திட்டமிடுகிறார்கள். அவற்றில் மிக முக்கியமானவை, உடனடியாக செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை ஆகிய தகவல்களை தெளிவாக அட்டவணைப்படுத்தி வைத்திருப்பார்கள். குறிப்பாக தினமும் டைரியில் எழுதி வைத்துக்கொள்ளப்படும் குறிப்புகள் கூட வெற்றிக்கு அடிப்படையாக அமையக்கூடும். மேலும் எண்ணங்கள் குறிப்புகளாக எழுதப்படும் போது அவை ஒருவரது நிறை குறைகளை வெளிக்காட்டும் கண்ணாடியாக அமைகிறது. தினமும் டைரியில் அன்றைய தினத்தில் நடந்தவை பற்றி குறிப்பாக எழுதுவதன் மூலம் ஒருவரது நினைவாற்றல் மேம்படுகிறது. வெற்றிக்கு அது அவசியம்.

    தலைமை பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டுமானால் சொந்த அனுபவங்கள் மூலமாகவும், சரியான நபர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் திறனை பெற வேண்டும். தன்னம்பிக்கை மற்றும் தலைமை பண்புடன் உழைக்கும் பெண்கள் வெற்றியை பரிசாக பெறுகிறார்கள்.

    ×