search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதிடம்"

    • கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் விருட்சப வாகனம்.
    • சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    31-ந்தேதி (செவ்வாய்)

    * கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் விருட்சப வாகனம்.

    * திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை கமல வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி தங்கப் பூமாலை சூடியருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    1-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    *உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.

    * கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் பவனி.

    * சமநோக்கு நாள்.

    2-ந்தேதி (வியாழன்)

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    3-ந்தேதி (வெள்ளி)

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் அலங்காரத்துடன் பவனி.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    4-ந்தேதி (சனி)

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன், காலையில் தவழும் கண்ணன் திருக்கோலத்தில் காட்சி, இரவு காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    5-ந்தேதி (ஞாயிறு)

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் காலை வெள்ளி சப்பரத்தில் கோலாட்ட அலங்காரம், இரவு தங்கக் கிளி வாகனத்தில் வீதிஉலா.

    * மதுரை தெற்கு மாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    6-ந்தேதி (திங்கள்)

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் மாலை சிவ பூஜை செய்தல், இரவு சப்தாவரண பல்லக்கில் பவனி.

    * தூத்துக்குடி பாகம்பிரியாள் அலங்காரத்துடன் திருவீதி உலா.

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    • 22-ந்தேதி துர்க்காஷ்டமி.
    • முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலை மகள் திருக்கோலக்காட்சி.

    17-ந்தேதி (செவ்வாய்)

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.

    * மதுரை மீனாட்சி சிறப்பு அலங்காரத்துடன் கொலு மண்டபத்தில் காட்சி.

    * குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் சுவாமி புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    18-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி சேவை.

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மயில் வாகனத்தில், பாலசுப்பிரமணிய கோலத்துடன் காட்சி.

    * சமநோக்கு நாள்.

    19-ந்தேதி (வியாழன்)

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணன் கோலத்தில் காட்சி.

    * காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி அலங்காரம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    20-ந்தேதி (வெள்ளி)

    * முகூர்த்த நாள்.

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில், மகிஷா சுரமர்த்தினி கோலத்தில் காட்சி.

    * திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.

    * கீழ்நோக்கு நாள்.

    21-ந்தேதி (சனி)

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலில் கோவர்த்தனாம்பிகைக்கு, மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் பூச்சப்பரத்தில் ஆனந்த நட ராஜர் கோலம்.

    * கீழ்நோக்கு நாள்.

    22-ந்தேதி (ஞாயிறு)

    * துர்க்காஷ்டமி

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கமல வாகனத்தில், கஜலட்சுமி கோலத்துடன் காட்சி.

    * மதுரை மீனாட்சி கொலு மண்டபத்தில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்துடன் காட்சியருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    23-ந்தேதி (திங்கள்)

    * சரஸ்வதி பூஜை.

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலை மகள் திருக்கோலக்காட்சி.

    * உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    • 14-ந்தேதி மகாளய அமாவாசை.
    • 15-ந்தேதி நவராத்திரி விழா ஆரம்பம்.

    10-ந்தேதி (செவ்வாய்)

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

    * திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி. அலங்கார திருமஞ்சனம்.

    11-ந்தேதி (புதன்)

    * திருப்பதி ஏழுமலையான் கத்த வால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    12-ந்தேதி (வியாழன்)

    * பிரதோஷம்.

    * திருப்பதி எழுமலையாள் புஷ்பாங்கி சேவை.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    13-ந்தேதி (வெள்ளி)

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    14-ந்தேதி (சனி)

    * மகாளய அமாவாசை.

    * திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.

    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷ்ண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

    * சமநோக்கு நாள்.

    15-ந்தேதி (ஞாயிறு)

    * நவராத்திரி விழா ஆரம்பம்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கொலு மண்டபத்தில் ராஜ ராஜேஸ்வரி அலங்காரம்.

    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை அலங்காரத்துடன் காட்சி.

    * சமநோக்கு நாள்.

    16-ந்தேதி (திங்கள்)

    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கற்பக விருட்ச வாகனத்தில் விசுவகாமேஸ்வரர் கோலம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
    • திருநாளைப்போவார் நாயனார் குரு பூஜை

    3-ந்தேதி (செவ்வாய்)

    * கார்த்திகை விரதம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருச்செந்தூர் முருகப்பெருமான், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    4-ந்தேதி (புதன்)

    * வியதிபாத மகாளயம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.

    * திருநாளைப்போவார் நாயனார் குரு பூஜை

    * மேல்நோக்கு நாள்.

    5-ந்தேதி (வியாழன்)

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை!.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    6-ந்தேதி (வெள்ளி)

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * திருவல்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    7-ந்தேதி (சனி)

    * திருவல்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோவிலில் கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா.

    * பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.

    * வாடிப்பட்டி குலசேகரன் கோட்டை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    8-ந்தேதி (ஞாயிறு)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    * திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    9-ந்தேதி (திங்கள்)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ் வாருக்கு திருமஞ்சனம்,

    * கீழ்நோக்கு நாள்.

    • 30-ந்தேதி மகாளய ஆரம்பம்.
    • 27-ந்தேதி பிரதோஷம்

    28-ந்தேதி (செவ்வாய்)

    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் மாலை புஷ்ப யாகம் சாற்று முறை.

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * கரூர் கல்யாண வேங்கடேசப்பெருமாள், கஜலட்சுமி வாகனத்தில் வீதி உலா.

    * மேல்நோக்கு நாள்.

    27-ந்தேதி (புதன்)

    * பிரதோஷம்.

    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தெப்ப உற்சவம்.

    * திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் தீர்த்தவாரி.

    * திருப்பதி ஏழுமலையான் சகசர கலசாபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    28-ந்தேதி (வியாழன்)

    * கரூர் கல்யாண வேங்கடேசப் பல்லக்கிலும், இரவு வெள்ளி கருட வாகனத்திலும் பவனி,

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    29-ந்தேதி (வெள்ளி)

    * பவுர்ணமி,

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * மதுரை மடப்புரம் பத்திரகாளி. அம்மன் சிறப்பு அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    30-ந்தேதி (சனி)

    * மகாளய ஆரம்பம்.

    * கரூர் கல்யாண வேங்கடேசப்பெருமாள் ஊஞ்சல் சேவை.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரத ராஜருக்கு திருமஞ்சனம்.

    * திருவல்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    1-ந்தேதி (ஞாயிறு)

    * கரூர் கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஆளும் பல்லக்கில் பவனி,

    *  கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திரு மஞ்சனம்.

    * திருவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. சமநோக்கு நாள்.

    2-ந்தேதி (திங்கள்)

    * சங்கடகர சதுர்த்தி

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * திருப்போரூர் முருகப்பெருமான்சிறப்பு அபிஷேகம்,

    * கீழ்நோக்கு நாள்.

    • திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் அனுமன் வாகனத்தில் பவனி.
    • 20-ந்தேதி சஷ்டிவிரதம்.

    19-ந்தேதி (செவ்வாய்)

    * ரிஷி பஞ்சமி.

    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, இரவு புஷ்ப சப்பரத்தில் ராஜாங்க சேவை.

    ·* திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் அனுமன் வாகனத்தில் பவனி.

    * உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி சேஷ வாகனத்திலும் வீதி உலா.

    * சமநோக்கு நாள்.

    20-ந்தேதி (புதன்)

    * சஷ்டி விரதம்.

    * திருப்பதி ஏழுமலையான் காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபால வாகனத்திலும் பவனி,

    * கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் வெள்ளி கருடவாகனத்தில் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    21-ந்தேதி (வியாழன்)

    * திருப்பதி கருட சேவை. தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் காலை காளிங்க நர்த்தனக் காட்சி.

    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, வெள்ளி தோளுக்கினியானில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    22-ந்தேதி (வெள்ளி)

    * திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் யானை வாகனத்தில் பவனி.

    * திருப்பதி ஏழுமலையான் காலை அனுமன் வாகனத்தில் புறப்பாடு.

    * உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாச பெருமாள் காலை வெள்ளி பல்லக்கில் வீதி உலா.

    * சமநோக்கு நாள்.

    23-ந்தேதி (சனி)

    * திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயருக்கு 5008 வடை அலங்காரம்

    .* கரூர் தான்தோன்றி கல்யாளா வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணம்.

    * திருப்பதி ஏழுமலையான் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    24-ந்தேதி (ஞாயிறு)

    * தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் காலை வெண்ணெய்| தாழி சேவை.

    * உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாச பெருமாள் இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    25-ந் தேதி (திங்கள்)

    * சர்வ ஏகாதசி.

    * திருப்பதி ஏழுமலையான் காலை பல்லக்கு உற்சவம்.

    * சாத்தூர் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    • 14-ந்தேதி அமாவாசை.
    • பிள்ளையார்பட்டி விநாயகர் குதிரை வாகனத்தில் பவனி.

    12-ந்தேதி (செவ்வாய்)

    * பிரதோஷம்

    * திருச்செந்தூர் முருகப்பெருமான், காலை தங்க கயிலாச பர்வத வாகனத்திலும், இரவு வெள்ளி கமல வாகனத்திலும் பவனி.

    * உப்பூர் விநாயகப்பெருமான் மயில் வாகனத்தில் வீதி உலா.

    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, ராமாவதார காட்சி தருதல்.

    * கீழ்நோக்கு நாள்.

    13-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * மாத சிவராத்திரி

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ரத உற்சவம்.

    * பிள்ளையார்பட்டி விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும் புறப்பாடு

    * கீழ்நோக்கு நாள்.

    14-ந்தேதி (வியாழன்)

    * அமாவாசை

    * திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி தெப்ப உற்சவம்.

    * பிள்ளையார்பட்டி விநாயகர் காலை வெள்ளி கேடய சப்பரத்தில் பவனி, மாலை கஜமுகன் சூரசம்ஹாரம்.

    * கீழ்நோக்கு நாள்.

    15-ந்தேதி (வெள்ளி)

    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, காலை ராஜமன்னார் கோலத்தில் காட்சியருளல், மாலை சேஷ வாகனத்திலும், இரவு புஷ்பப் பல்லக்கிலும் கள்ளர் திருக்கோலக் காட்சி

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    16-ந்தேதி (சனி)

    * திருக்குறுங்குடி நம்பி சன்னிதியில் உறியடி உற்சவம்.

    * பிள்ளையார்பட்டி விநாயகர் குதிரை வாகனத்தில் பவனி.

    * உப்பூர் விநாயகர் திருக்கல்யாணம்

    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி ராஜாங்க சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    17-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாச பெருமாள் உற்சவம் ஆரம்பம்.

    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி மச்சாவதாரம்

    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலையில் தேர் பவனி

    * திருப்பதி ஏழுமலையான் உற்சவம் ஆரம்பம்.

    * சமநோக்கு நாள்.

    18-ந்தேதி (திங்கள்)

    * விநாயகர் சதுர்த்தி

    * திருவலஞ்சுழி சுவேத பெருமான் தீர்த்தவாரி.

    * தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கிருஷ்ண அவதாரக்காட்சி

    * திருப்பதி ஏழுமலையான் பகலில் சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் பவனி.

    * சமநோக்கு நாள்.

    • 6-ந்தேதி கோகுலாஷ்டமி
    • திருப்போரூர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    5-ந்தேதி (செவ்வாய்)

    * திருப்போரூர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

    * திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை சிங்க கேடய சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    6-ந் தேதி (புதன்)

    * கோகுலாஷ்டமி.

    * திருப்பதி ஏழுமலையான் கலசாபிஷேகம்.

    * அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பிரார்த்தனை.

    * கீழ்நோக்கு நாள்.

    7-ந்தேதி (வியாழன்)

    * பாஞ்சராத்திர ஜெயந்தி,

    * வரகூர் பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்.

    * திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை தங்க முத்துக்கிடா வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் பவனி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    8-ந் தேதி (வெள்ளி)

    * மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடி சேவை.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்க பல்லக்கில் புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    9-ந்தேதி (சனி)

    • மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ஊஞ்சலில் வீணை மோகினி அலங்கார சேவை.

    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் உற்சவம் ஆரம்பம்

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் காலை கோ ரதத்திலும், இரவு வெள்ளித்தேரிலும் சுவாமி வீதிஉலா.

    * மேல்நோக்கு நாள்.

    10-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * சர்வ ஏகாதசி.

    * திருவல்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.

    * சமநோக்கு நாள்.

    11-ந்தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுகநயினார், சிவப்பு சாத்தி, பச்சை சாத்தி சேவை

    * பிள்ளையார்பட்டி விநாயகர் பூத வாகனத்தில் வீதிஉலா.

    * மேல்நோக்கு நாள்.

    • 30-ந்தேதி பவுர்ணமி, ஆவணி அவிட்டம்.
    • 3-ந்தேதி சங்கடஹரசதுர்த்தி, முகூர்த்தநாள்.

    29-ந்தேதி (செவ்வாய்)

    * ஓணம் பண்டிகை

    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சட்டத்தேர்.

    * சுவாமிமலை ஆயிரம் முருகப்பெருமான் கொண்ட நாமாவளி தங்கப்பூமாலை சூடியருளல்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    30-ந்தேதி (புதன்)

    * பவுர்ணமி.

    * ஆவணி அவிட்டம்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தீர்த்தம்.

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோவிலில் நாசிம்மருக்கு திருமஞ்சனம்.

    * மேல்நோக்கு நாள்.

    31-ந் தேதி (வியாழன்)

    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவில் தெப்பம்.

    * சுவாமி மலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * மேல்நோக்குநாள்

    1-ந் தேதி (வெள்ளி)

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * திருவேடகம் ஏலவார் குழலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.

    * கீழ்நோக்கு நாள்.

    2-ந்தேதி (சனி)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம்.

    * திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    * திருநள்ளாறு சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    3-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * சங்கடகர சதுர்த்தி.

    * திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    4-ந் தேதி (திங்கள்)

    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி

    கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.

    * திருவைகுண்டம் புறப்பாடு.

    * வைகுண்டபதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சனம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சனிப்பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்ற பழமொழி உண்டு
    • எந்த ராசிக்காரர்கள் எந்த சிவனை தரிசனம் செய்யலாம் என பார்க்கலாம்.

    சிவனுக்குரிய வழிபாட்டில் மகா சிவராத்திரிக்கு அடுத்த படியாக முக்கிய இடம் பிடிப்பது பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். சிவபெருமான், ஆலகால விஷத்தை குடித்து உலக உயிர்களை காக்க நீலகண்டனாக காட்சி அளித்த சமயத்தில், தேவர்கள் சிவனை வழிபட்டனர். அவர்களுக்கு நந்தியின் இரு நம்புகளுக்கு இடையே சிவன் காட்சி தந்த காலமே பிரதோஷ காலம் எனப்படுகிறது. அனைத்து விதமான பாவங்களையும், தோஷங்களை நீக்கக் கூடிய வழிபாட்டையே பிரதோஷம் என்கிறோம்.

    ஒரு பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் ஒரு வருடம் முழுவதும் சிவாலயத்திற்கு சென்று வழிபட்ட பலனை பெற்று விடலாம். ஒரு சனிப்பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் ஐந்து ஆண்டுகள் சிவாலயத்தில் தரிசித்த பலனை பெற்று விடலாம் என்பார்கள். நாளை சனிக்கிழமை (15.7.23) சனி மகா பிரதோஷம் வருகிறது. திங்கள் கிழமையில் வருவது சோமவார பிரதோஷம் என்றும், சனிக்கிழமையில் வருவது சனி மகா பிரதோஷம் என்றும் சிறப்பு பெறுகின்றன. இதே போன்று ஒவ்வொரு கிழமையிலும் வரும் பிரதோஷத்திற்கு ஒரு தனிச்சிறப்பு, தனி பலன் உண்டு.

    பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றி கிடைக்கும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். சனி மகாபிரதோஷம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. இன்றைய தினம் 12 ராசிக்காரர்களும் சிவ தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது. எந்த ராசிக்காரர்கள் எந்த சிவனை தரிசனம் செய்யலாம் என பார்க்கலாம்.

    சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்ற பழமொழி உண்டு. சனிக்கிழமையன்று வருகிற பிரதோஷத்தில் கலந்து கொண்டு, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு தரிசித்தால், சகல பாவங்கள் விலகி புண்ணியங்கள் அதிகரிக்கும். சனி பிரதோஷ நாளில் சிவ ஆலய தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும். கடன் சுமை அகலும், மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல் கூடும். படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.

    நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது. மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும். எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது.

    நெருப்பு ராசிகள்:

    12 ராசிகளில் நீர் ராசிகள், நில ராசிகள், நெருப்பு ராசிகள், காற்று ராசிகள் என நான்கு விதமாக பிரித்துள்ளனர். மேஷம்,சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் நெருப்பு தத்துவத்தை தன்னுள்ளே கொண்டுள்ளன. இந்த ராசிக்காரர்கள் பிரதோஷ நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் வர நினைத்த காரியங்கள் நிறைவேறும். திருவண்ணாமலை செல்ல முடியாதவர்கள் அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று அபிஷேகத்திற்கு பழங்கள் வாங்கித்தர பாவங்கள் விலகும்.

    நில ராசிகள்:

    பஞ்ச பூத தத்துவத்தில் நில தத்துவத்தை உணர்த்தும் ராசிகள் ரிஷபம், கன்னி, மகரம். இந்த ராசிக்காரர்கள் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், இந்த ஆலயத்தில் பிருத்வி லிங்கத்தை பிரதோஷ தினத்தில் வழிபட நன்மைகள் நடைபெறும். அருகில் உள்ள சிவ ஆலயங்களுக்கு சென்று அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர தோஷங்களும் பாவங்களும் விலகும்.

    காற்று ராசிகள்:

    மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் காற்று ராசிக்காரர்கள். காளகஸ்தியில் உள்ள திருக்காளத்தி நாதரை பிரதோஷ காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வழிபட புண்ணிய பலன்கள் கிடைக்கும். காளத்தீஸ்வரர் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று பாலபிஷேகம் செய்து வணங்கினால் நோய் நொடிகள் தீரும்.

    நீர் ராசிகள்:

    கடகம் , விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களும் பஞ்சபூத தத்துவத்தில் நீரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். திருச்சி அருகே திருஆனைக்காவில் எழுந்தருளி இருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம்தான் நீர்தலம். இந்த ராசிகளில் பிறந்தவர்கள் பிரதோஷ காலத்தில் திருவானைக்கால் ஜலகண்டேஸ்வரரை தரிசிக்க வறுமை நீங்கி செல்வம் பெருகும். அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று அபிஷேகத்திற்கு பன்னீர் வாங்கித்தர செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்.

    ஆகாய தலம்:

    ராசி நட்சத்திரம் தெரியாதவர்கள் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள நடராஜரை வழிபட வேண்டும். பஞ்ச பூத தலங்களில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். 27 நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் வகையில் 27 தீபங்களை ஏற்றி வழிபடலாம். பஞ்சலிங்கங்களையும், தொடர்ந்து ஐந்து பிரதோஷ தினத்தில் வந்து வழிபடுவது சிறப்பு. சனி மகா பிரதோஷ நாளில் சிவ ஆலய தரிசனம் செய்வது ஆயிரம் ஆண்டுகள் சிவனை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

    • சில சுவாரஸ்யமான தகவல்களும் மணி பிளான்ட்டிற்கு இருப்பதாக கூறப்படுகிறது
    • இந்த செடியை மற்றவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கக் கூடாது.

    வீடுகளில் அலங்காரத்துக்காக செடிகள் வைப்பது வழக்கம். இதில் விலையுயர்ந்த செடிகள் கூட இடம்பெறுகின்றன. ஆனால் வீட்டின் உள்ளே ஏன் சமையல் அறையில் கூட செடி வளர்க்கும் பழக்கம், இப்போது மேலோங்கி வருகிறது. அந்த செடிக்கு பெயர்தான் 'மணி பிளான்ட்'. இப்போது அனைத்து வீடுகளிலும் இந்த செடியை பார்க்க முடிகிறது.

    செடிகள் அலங்காரத்துக்காக வைக்கப்படுவதை தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் 'மணி பிளான்ட்' அப்படி இல்லை. இது அழகுக்காக வைக்கப்படுவது இல்லை. மாறாக இந்த செடி வீட்டின் ஹால், சமையலறை உள்பட வீட்டுக்குள் வைக்கும் அளவுக்கு என்ன ரகசியம் இதில் புதைந்து இருக்கிறது? என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

    இவ்வளவு பாதுகாப்பாக வீட்டின் உள்ளே வைத்து வளர்க்கும் இந்த செடியின் விலை, வாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்குமோ? என்று நாம் நினைக்கலாம். ஆனால் அதுபோன்று எதுவும் இல்லை.

    ஐதீகம்

    'மணி பிளான்ட்' 30 ரூபாயில் இருந்தே நர்சரி கார்டன்களில் கிடைக்கிறது. செடியின் அளவை பொறுத்து விலை மாறுபடும். அதிகபட்சமாக ரூ.1,000-க்குள் தான் இது விற்பனை செய்யப்படுகிறது.

    அலங்காரச் செடிகள் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான விலையில் வாங்கி பங்களா மற்றும் பெரிய நிறுவனங்களின் வெளியில் அழகுக்காக வைக்கப்படும் நிலையில், 30 ரூபாய்க்கு வாங்கும் மணி பிளான்ட்டை மட்டும் வீட்டுக்குள் வைத்து வளர்ப்பது ஏனோ? என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கும்.

    'மணி பிளான்ட்' என்ற பெயரிலேயே பணம் என்பதை தாங்கி சுமக்கிறது. அதிலேயே இதன் ரகசியம் வெளிப்பட்டுவிட்டது. அதாவது, இந்த செடியை வளர்ப்பதினால் வீட்டில் பணம் பெருகும் என்பது ஐதீகமாக காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. இதனாலேயே மணி பிளான்ட் செடியை பெரும்பாலானோர் வீட்டில் வைத்து வளர்க்கின்றனர். இதற்கு இடம் பெரிய அளவில் தேவையில்லை. படரும் வகையில் வளரக்கூடிய இந்த செடியை முறைப்படி பராமரிப்பது அவசியமாக இருக்கிறது. அதிக வெயில் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த செடி வீட்டிற்குள்ளும், சூரிய ஒளி அதிகம் படாத இடத்திலும் வைத்து வளர்க்கிறார்கள்.

    திருடி வைத்தால்...

    அதிலும் வாஸ்து படி வீட்டின் தென்கிழக்கு திசையில் இந்த செடியை வைத்தால் மட்டுமே அதன் பலனை அனுபவிக்க முடியும் என்கின்றனர், ஜோதிடர்கள். அதுமட்டுமல்லாமல், இந்த செடி வாடினால், வீட்டில் உள்ளவர்களும் மனகஷ்டத்தால் வாடிப்போவார்கள் என்றும், பழுத்த இலைகள் இல்லாமல் அவ்வப்போது அதனை பராமரிக்க வேண்டும் என்றும், அது வீட்டில் உள்ளவர்களின் உடல்நலக்குறைவை குறிக்கிறது என்றும் நம்பப்படுகிறது.

    மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களும் இந்த மணி பிளான்ட்டிற்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, இந்த செடியை மற்றவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கக் கூடாது எனவும், அவ்வாறு கொடுத்தால் அதிர்ஷ்டங்களை தாரைவார்ப்பதற்கு சமம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கடையில் பணம் கொடுத்து வாங்குவதைவிட, யாராவது வீட்டில் வைத்திருக்கும் இந்த மணி பிளான்ட் செடியை திருடி வைத்தால் மேலும் நல்லது நடக்கும் என்றும் சொல்கிறார்கள்.

    மணி பிளான்டை போல, 'லக்கிபேம்போ' செடியும் பண அதிர்ஷ்டத்தை வாரித்தரும் செடியாகவே கூறப்படுகிறது. இந்த செடி ரூ.250-ல் இருந்து ரூ.850 வரை கிடைக்கிறது. சிலர் இந்த நம்பிக்கையையெல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு, செடி வளர்ப்பது மனதுக்கு பிடித்தமான செயலாக கருதி வளர்ப்பதாகவும் கூறுகின்றனர்.

    சாத்தியம் இல்லை

    மணி பிளான்ட், லக்கிபேம்போ வளர்ப்பதின் ரகசியம் அனைத்தும் உண்மைதானா? அவ்வாறு எதுவும் நடக்கிறதா? என்பது பற்றி சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சுவாமி கண்ணன் பட்டாச்சாரியாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    மணி பிளான்ட் இந்தியாவை சேர்ந்த செடி வகை கிடையாது. இது ஒரு பூக்காத தாவரம். இந்த செடி மாசை கட்டுப்படுத்துகிறது. ஆனால் இதை வைப்பதால் பணம் வரும் என்று சாஸ்திரத்தில் எங்கும் சொல்லவில்லை. சாஸ்திரத்தில் துளசி, கற்பூரவள்ளி, தொட்டாச்சிணுங்கி ஆகியவற்றை வைப்பதுதான் விசேஷம் என்று சொல்லப்பட்டு உள்ளது. பொதுவாக இந்தியாவில் ஏதாவது ஒரு பயன் இருக்கிறது என்று சொன்னால்தான், அதனை மக்கள் பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் தான் இதுவும் பரப்பப்பட்டு இருக்கலாம். எனவே மணி பிளான்ட் வைத்தால் பணம் வரும் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போல், செடிகளை விற்பனை செய்யும் எம்.கனவாபீர் என்பவர் கூறும்போது 'அது அவரவருடைய ஐதீகம். இன்று இடம் வாங்கி வீடு கட்டும் பெரும்பாலானோரின் வீடுகளில் இந்த செடி இல்லாமல் இருக்காது. இது இன்று, நேற்று அல்ல. எனக்கு தெரிந்து 18 ஆண்டுகள் நான் இந்த வியாபாரம் செய்கிறேன். அப்போது இருந்து இந்த நம்பிக்கை தொடர்ந்து கொண்டுதான் வருகிறது' என்றார்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • தமிழகத்தில் கடை ஏழு வள்ளல்கள் வாழ்ந்தார்கள்.
    • பல வள்ளல்கள் அவதரித்த நாடு, நம்முடைய பாரத நாடு.

    யார் எதைக் கேட்டாலும் உடனடியாகக் கொடுக்கக்கூடியவர், பிறர் வறுமையைப் போக்கக்கூடியவர் போன்றவர்களை 'வள்ளல்' என்று அழைப்பார்கள்.

    தமிழகத்தில் கடை ஏழு வள்ளல்கள் வாழ்ந்தார்கள்.

    முல்லைக் கொடி பரந்து விரிந்து படர்வதற்காக தன்னுடைய தேரை வழங்கியவர் பாரிவள்ளல்.

    மயிலின் குளிரைப் போக்குவதற்காக போர்வையை அளித்தவர், பேகன்.

    இப்படி பல வள்ளல்கள் அவதரித்த நாடு, நம்முடைய பாரத நாடு.

    ஒருவரது லக்னம் விருச்சிகமாக இருந்து, குரு 3-ல் இருந்தால், அவா் நிறைய தர்ம காரியங்கள் செய்வார். கொடையாளியாக விளங்குவார்.

    9-க்கு உரியவன் பலம்பெற்று கேந்திரத்தில் நின்று லக்னாதிபதியைப் பார்த்தால், அவர் கொடை வள்ளலாக விளங்குவார்.

    ×