search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதிடம்"

    • இவர்கள் காயப்படுத்தியவர்களை மன்னித்தாலும் அதனை ஆயுள் முழுவதும் மறக்கமாட்டார்கள்.
    • ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் நல்ல குணங்கள், கெட்ட குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

    ஜூலை மாதத்தில் பிறந்தவர்களுக்கென சில தனிப்பட்ட குணங்கள் உள்ளது, இவை உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதேசமயம் இவர்களின் சில குணங்கள் வேடிக்கையானதாகவும் இருக்கும். வாழ்க்கை மீதான அவர்களின் அணுகுமுறை எப்பொழுதும் அன்பை அடிப்படையாக கொண்டிருக்கும்.

    மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும், எப்படி மதிப்பிட வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். மனிதனாக பிறந்த அனைவரிடமும் நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் கலந்துதான் இருக்கும். இந்த பதிவில் ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் நல்ல குணங்கள் மற்றும் கெட்ட குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

    ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்புக்கு ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். கடின உழைப்பாளியாக இருந்தாலும் திட்டமிடுவதில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் திட்டமிட்டே இவர்கள் செய்வார்கள். இவர்கள் எதையும் சொன்ன நேரத்தில் செய்து முடிக்க கூடியவர்கள். அதனால் எப்பொழுதும் பாராட்டை பெறுபவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாய் இவர்கள் இருப்பார்கள்.

    ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் அதிகப்படியான உணர்ச்சிகரமான அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறார்கள், இதை நாம் மனநிலை மாற்றங்கள் என்றும் அழைக்கலாம். இவர்கள் மிகவும் தனிப்பட்ட நபராக இருப்பவர்கள், நெருக்கமானவர்களுக்கு கூட தங்கள் மனதில் இருப்பதை இவர்கள் வெளிப்படையாக கூறமாட்டார்கள். இதனால் மற்றவர்களுக்கு இவர்களிடம் நெருங்குவதோ அல்லது இவர்களை புரிந்து கொள்வதோ மிகவும் கடினமானதாக இருக்கும்.

    இவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பதால் தான் செய்யும் அனைத்து வேலையும் நூறு சதவீதம் சரியானதாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். தான் செய்யும் அனைத்துமே சிறந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பும் இவர்களின் குணம் சிலசமயம் ஆச்சரியத்தையும், சிலசமயம் எரிச்சலையும் ஏற்படுத்தும்.

    அனைத்தையும் திட்டமிட்டு செய்யக்கூடிய இவர்கள் தன்னுடைய எதிர்காலத்தை பற்றியும், தன்னுடைய குடும்பத்தின் எதிர்காலம் பற்றியும் எப்போதும் சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் ரிஸ்க் எடுக்க தயங்கினாலும் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையாக எடுத்து வைப்பார்கள்.

    ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கடக ராசிக்காரர்களாக இருப்பார்கள். அதிக உணர்ச்சிவசப்படக்கூடிய இவர்கள் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். சிலசமயம் இவர்களின் அதீத அக்கறை தவறானதாக தெரிந்தாலும் அது இவர்களின் நல்ல குணங்களில் ஒன்றுதான். இவர்களுடன் இருக்கும்போது இவர்களின் குடும்பத்தினர் மிகவும் பாதுகாப்பாக உணருவார்கள்

    ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் அன்பானவர்களாகவும், அமைதியானவர்களாகவும் இருப்பார்கள். மேலும் அனைவரையும் புரிந்து கொள்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் உணவர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் இவர்களின் குணம் இவர்களை அதிக இரக்கமுள்ளவர்களாக மாற்றும். நெருக்கமானவர்களின் உணர்வுகள் மட்டுமின்றி புதிய நபர்களின் உணர்வுகளை கூட இவர்களால் புரிந்து கொள்ள இயலும்.

    ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் தனக்கானவர்கள் என்று வரும்போது அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைத்தையுமே இவர்கள் கொஞ்சம் தீவிரமாகவும், தனிப்பட்டரீதியாகவும் எடுத்துக்கொள்வார்கள். இதனால் இவர்களின் இதயம் எளிதில் நொறுங்கிவிடக்கூடும். மேலும் இவர்கள் அதிலிருந்து மீண்டு வர நீண்ட காலம் எடுத்துக்கொள்வார்கள். இவர்கள் காயப்படுத்தியவர்களை மன்னித்தாலும் அதனை ஆயுள் முழுவதும் மறக்கமாட்டார்கள்.

    • மிகக்குறுகிய காலத்திலேயே நல்ல மாற்றத்தை நிச்சயமாக நீங்கள் உணருவீர்கள்!
    • 27 நட்சத்திரங்களையும் அவர்களுக்கு உகந்த கோவில்களையும் பார்க்கலாம்.

    இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஆலயங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறையாவது நீங்கள் சென்று தரிசித்து வருவது மிக மிக முக்கியம். மிக மிக நல்லது. நற்பலன்களை அள்ளித் தரும்.

    அஸ்வினி - கலைவாணி ஸ்ரீசரஸ்வதி ஆலயம், கூத்தனூர். மற்றும் பிறவி மருந்தீஸ்வரர் கோயில், திருத்துறைப்பூண்டி.

    பரணி நட்சத்திரம் - ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம், திருப்புகலூர்,

    கார்த்திகை நட்சத்திரம் - ஸ்ரீ காத்ர சுந்தரேஸ்வரர், மயிலாடுதுறை.

    ரோகிணி நட்சத்திரம் - ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் ஆலயம், காஞ்சிபுரம். மற்றும் ஸ்ரீபக்தவத்சல ஆலயம், திருக்கண்ணமங்கை, குடவாசல்.

    மிருகசீரிடம் - ஸ்ரீ முருகன் ஆலயம் - எண்கண், திருவாரூர். மற்றும் ஸ்ரீஆதிநாராயண பெருமாள் கோயில்,முகூந்தனூர். திருவாரூரில் இருந்து 13 கி.மீ. தொலைவு.

    திருவாதிரை - ஸ்ரீஅபய வரதீஸ்வரர் ஆலயம், அதிராம்பட்டினம். மற்றும் ஸ்ரீசோழீஸ்வரர் சேங்காலிபுரம் திருவாரூர்.

    புனர்பூசம் - ஸ்ரீஅதிதீஸ்வரர் ஆலயம், வாணியம்பாடி, ஸ்ரீ சட்டைநாதசுவாமி ஆலயம், சீர்காழி.

    பூசம் - ஸ்ரீ அட்சய புரீஸ்வரர் ஆலயம், பட்டுக்கோட்டை அருகில் விளங்குளம். மற்றும் சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை. மேலும் கும்பேஸ்வரர் ஆலயம் கும்பகோணம்.

    ஆயில்யம் - ஸ்ரீ கற்கடேஸ்வரர் ஆலயம், திருத்தேவன்குடி, கும்பகோணம் அருகில். ஸ்ரீசாட்சி நாதேஸ்வரர் திருப்புறம்பியம் கும்பகோணம்.

    மகம் -ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில் விராலிப்பட்டி விலக்கு, திண்டுக்கல். மற்றும் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு, சீர்காழி.

    பூரம் - ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் ஆலயம், திருவரங்குளம், புதுக்கோட்டை. மற்றும் ஸ்ரீ தக்ஷின புரீஸ்வரர் கோவில், தலச்சங்காடு, நாகப்பட்டினம்.

    உத்திரம் - ஸ்ரீ மாங்கல்யேஸ்வரர், லால்குடி, திருச்சி. மற்றும் ஸ்ரீகரரவீரநாதர் கோயில், திருவாரூர். திருவாரூரில் இருந்து 10 கி.மீ. தொலைவு.

    அஸ்தம் - ஸ்ரீ கிருபாகூபாரேஸ்வரர் ஆலயம், கோமல், குத்தாலம், மயிலாடுதுறை.

    சித்திரை - ஸ்ரீ சித்திரரத வல்லப பெருமாள் ஆலயம், குருவித்துறை, மதுரை. மற்றும் ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில், திருவையாறு.

    சுவாதி - ஸ்ரீ தாத்திரீஸ்வரர் ஆலயம், தண்டுரை, பூந்தமல்லி. ஸ்ரீமகாலிங்க சுவாமி ஆலயம், திருவிடைமருதூர்.

    விசாகம் - ஸ்ரீ முத்துக்குமார சுவாமி கோவில், திருமலை, செங்கோட்டை, மற்றும் ஸ்ரீ கஜேந்திர வரதப் பெருமாள் ஆலயம், கபிஸ்தலம்.

    அனுஷம் - ஸ்ரீமகாலட்சுமி புரீஸ்வரர் ஆலயம், திருநின்றியூர், மயிலாடுதுறை. மற்றும் திருநரையூர் நம்பி கோயில், (நாச்சியார்கோவில்) கும்பகோணம்.

    கேட்டை - ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம், தஞ்சாவூர். மற்றும் ஸ்ரீவீரட்டானேஸ்வரர் ஆலயம், வழுவூர், நாகப்பட்டினம்.

    மூலம் - ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயில் மப்பேடு, பூந்தமல்லி, மற்றும் ஸ்ரீமயூரநாதர் மயிலாடுதுறை.

    பூராடம் - ஸ்ரீ ஆகாசபுரீஸ்வரர் கோயில், திருவையாறு. திருவையாறில் இருந்து 4 கி.மீ. தொலைவு.

    மற்றும் ஸ்ரீ பரமநாத சுவாமி கோவில், கடுவெளி, திருவாரூர். (கடுவெளி சித்தர் ஜீவ சமாதி ஆலயம்)

    உத்திராடம் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில், ஒக்கூர். சிவகங்கை. மற்றும் எழுத்தறி நாதேஸ்வரர் திருஇன்னம்பூர், கும்பகோணம்.

    திருவோணம் - ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம், திருப்பாற்கடல் வேலூர், மற்றும் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோயில் திருமுல்லைவாயல், சென்னை.

    அவிட்டம் - ஸ்ரீ பிரம்ம ஞான புரீஸ்வரர் ஆலயம், கும்பகோணம். தாராசுரம் அருகில் கொற்கை திருத்தலம். மற்றும் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் கோயில் திருப்பூந்துருத்தி, திருவையாறு.

    சதயம் - ஸ்ரீஅக்னீபுரீஸ்வரர் ஆலயம், திருப்புகலூர், நன்னிலம் அருகில். திருவாரூர்.

    பூரட்டாதி - ஸ்ரீ திருவானேஸ்வரர் ஆலயம், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு. மற்றும் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், திருக்குவளை.

    உத்திரட்டாதி - ஸ்ரீசகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆலயம், தீயத்தூர், ஆவுடையார் கோவில், மற்றும் ஸ்ரீமதங்கீஸ்வரர் கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம்.

    ரேவதி - ஸ்ரீ கயிலாசநாதர் கோவில், காருகுடி, தாத்தையங்கார்பேட்டை, திருச்சி. மற்றும் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோயில், இலுப்பைப்பட்டு, மயிலாடுதுறை.

    • இந்த மலர்களை ஒவ்வொரு ஆலயத்திற்குச் செல்லும் போதும் பயன்படுத்துங்கள்.
    • இறைவனுக்கு இந்த மலர்களைச் சூட்டி வணங்குங்கள்.

    இந்த மலர்களை ஒவ்வொரு ஆலயத்திற்குச் செல்லும் போதும் பயன்படுத்துங்கள். அதாவது இறைவனுக்கு இந்த மலர்களைச் சூட்டி வணங்குங்கள். உங்களுடைய பூஜையறையில் தவறாமல் பயன்படுத்துங்கள். அலுவலகத்திலும், தொழில் செய்யும் இடத்திலும் வியாபார தலங்களிலும் இந்த மலர்களை வைத்துக் கொள்வது நல்ல பலன்களைத் தரும்.

    இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நட்சத்திரத்திற்கான மலர்களை தெய்வ வழிபாட்டில் அவசியம் பயன்படுத்துங்கள். நீங்கள் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் இந்த மலர்களைப் பயன்படுத்துவதும், உங்கள் வீட்டு பூஜை அறை, அலுவலகம், தொழிலகம், வியாபார ஸ்தலங்கள் முதலான இடங்களில் பயன்படுத்துவதும் நல்ல பலன்களைத் தரும்.

    மன அமைதியை உண்டாக்கும். நல்ல சிந்தனையைத் தரும். இவற்றைத் தவறாமல் பயன்படுத்துங்கள். மிகக்குறுகிய காலத்திலேயே நல்ல மாற்றத்தை நிச்சயமாக நீங்கள் உணருவீர்கள்!

    அஸ்வினி - சாமந்தி

    பரணி - முல்லை

    கார்த்திகை - செவ்வரளி

    ரோகிணி - பாரிஜாதம், பவளமல்லி,

    மிருகசீரிடம் - ஜாதி மல்லி

    திருவாதிரை - வில்வப் பூ, வில்வம்

    புனர்பூசம் - மரிக்கொழுந்து

    பூசம் - பன்னீர் மலர்

    ஆயில்யம் - செவ்வரளி

    மகம் - மல்லிகை

    பூரம் - தாமரை

    உத்திரம் - கதம்பம்

    அஸ்தம் - வெண்தாமரை

    சித்திரை - மந்தாரை

    சுவாதி - மஞ்சள் அரளி

    விசாகம் - இருவாட்சி

    அனுஷம் - செம்முல்லை (செந்நிற மலர்கள்)

    கேட்டை - பன்னீர் ரோஜா

    மூலம் - வெண்சங்கு மலர்

    பூராடம் - விருட்சி (இட்லிப்பூ)

    உத்திராடம் - சம்பங்கி

    திருவோணம் - ரோஜா

    அவிட்டம் - செண்பகம்

    சதயம் - நீலோற்பவம்

    பூரட்டாதி - வெள்ளரளி

    உத்திரட்டாதி - நந்தியாவட்டம்

    ரேவதி - செம்பருத்தி

    • வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு குணத்துடன் திகழ்கின்றது.
    • ஒருவரின் கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.

    பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவாக அவர்களுடைய செயல்பாடுகளின் பலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. ஒருவரின் கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.

    வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு குணத்துடன் திகழ்கின்றது. ஆனால், ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிழமையில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொருவிதமான குணம் இருக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை

    ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள், எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும், அதில் வென்று முடிக்கும்வரை ஓயமாட்டார்கள். எதிலும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையான குணமுள்ளவர்களாக இருப்பார்கள். ''இங்கே என்ன தோணுதோ அத பேசறேன், இங்க என்ன தோணுதோ அதைச் செய்றேன்'' என்கிற டைப். இவர்கள்,சொல்வதைத்தான் செய்வார்கள் செய்வதைதான் சொல்வார்கள். மற்றவர்கள் கடினமாகச் செய்யும் செயல்களைக்கூட இவர்கள் போகிறபோக்கில் செய்துவிடுவார்கள். ஆளுமைத் திறன் மிக்கவர்கள்.

    திங்கள்கிழமை

    திங்கள்கிழமை பிறந்தவர்கள், வசீகரமான தோற்றத்தாலும், நகைச்சுவைமிக்க பேச்சாலும் மற்றவர் மனதில் எளிதில் இடம்பிடித்து விடுவார்கள். இவர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட நண்பர்களுடன் பொழுதுபோக்குவதில்தான் இவர்களுக்கு ஆர்வம் அதிகம். எங்கு இருந்தாலும், இவர்கள் அந்தச் சூழ்நிலையைத் தனதாக்கிக்கொள்வார்கள். உதவி என்று யார் வந்து கேட்டாலும், உடனே செய்துவிடுவார்கள். பிறகு தங்களின் கைச் செலவுக்கு இல்லாமல் அவதிப்படுவதும் உண்டு.

    செவ்வாய்க்கிழமை

    செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள், வம்புசண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். இவர்களுடன் பேசும்போது மற்றவர்கள் கவனமாக இருக்கவேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது இவரும் கவனமாக இருக்க வேண்டும். சூடம் காண்பித்துக் கொண்டே மணி அடிப்பது போல் விவாதம் செய்யும்போது மிகச் சரியாக எதிராளியை உரிய ஆதாரங்களுடன் வீழ்த்திவிடுவார்கள். முணுக் முணுக்கென இவர்களுக்குக் கோபம் வருவது வாடிக்கை. ஆனால் கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்பது போல் இவர்களாகவே வலிய வந்து ஸ்நேகமாகி விடுவார்கள்.

    புதன்கிழமை

    புதன்கிழமை பிறந்தவர்கள், எதையாவது எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருப்பார்கள். தங்களுக்குத் தேவை இல்லையென்றாலும்கூட, அதை அறிந்து வைத்துக்கொள்வதில் அதிகம் ஆர்வமுள்ளவர்கள். இயல்பிலேயே கொஞ்சம் ரிசர்வ் டைப்பான இவர்கள், கொஞ்சம் கூச்ச சுபாவமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களைத் தேர்ந்தெடுத்துத்தான் பழகுவார்கள். பழகிவிட்டால் நட்புக்காக உயிரையும் கொடுப்பார்கள். திடுக்கெனப் பறந்து சென்று மீனைக் கவ்விடும் மீன்கொத்திப் பறவையைப்போல் தங்களுக்கான இடத்தை எந்தச் சபையிலும் பெற்று விடுவார்கள்.

    வியாழக்கிழமை

    வியாழக்கிழமையில் பிறந்தவர்கள், நன்நெறிகளுக்கு இருப்பிடமாகத் திகழ்வார்கள். அதனால், இவர்கள் பெரும்பாலும் தேவையில்லாத பிரச்னைகளில் அத்தனை எளிதாகச் சிக்கமாட்டார்கள். தன்னடக்கம் மிக்கவர்களாக இருப்பார்கள். இருந்த இடத்திலிருந்துகொண்டே எல்லா விஷயமும் அறிந்தவர்களாக இருப்பார்கள். இதனால் சிலர் இவரைக் கர்வம் பிடித்தவர் என்றுகூட எண்ணுவார்கள். தெய்வ வழிபாட்டிலும், ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்பதிலும் அதிகம் ஆர்வம் இருக்கும். வாழ்க்கை குறித்த தெளிவான திட்டமிடலும் முறையான அணுகுமுறையும் இவரை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்லும்.

    வெள்ளிக்கிழமை

    வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் வாழ்க்கையின் சகல சுகங்களையும் அனுபவிக்கப் பிறந்தவர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்பவர்கள். அதனால், தங்கள் மனதுக்கு எது பிடிக்கின்றதோ அதை எந்தச் சூழ்நிலையிலும் அடைந்தே தீருவார்கள். சுற்றுலா பிரியர்களான இவர்கள், காலில் சக்கரம் கட்டாத குறையாக அலைந்துகொண்டிருப்பார்கள். ஆனால், இவரது உழைப்பு முழுவதும் மற்றவர்களுக்கே சென்று சேரும். புகழ்ச்சியை விரும்பும் இவர்கள் எதையும் எல்லோரையும் எளிதாக நம்பி விடுவார்கள். எல்லா மதநம்பிக்கையாளர்களும் புனிதமான நாளாக நினைப்பது வெள்ளிக்கிழமையைத்தான்.

    சனிக்கிழமை

    சனிக்கிழமை பிறந்தவர்கள், தூங்கினால் கும்பகர்ணன், எழுந்து நின்றால் இந்திரஜித் போன்றவர்கள். சோம்பலும், தள்ளிப்போடுவதும் இவர்களது பிறவிக்குணம். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் உள்ளவர்கள். எதிலும் ஒரு அலட்சியப் போக்கு எதைப் பற்றியும் கவலைப்படாத கடைசி பெஞ்ச் மனோபாவம். 'எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் 'என்கிற டைப். எதிலும் ஷார்ட் கட் ரூட்டை ஃபாலோ பண்ணுவார்கள். மேற்கிலிருந்து கிழக்கைப் பார்ப்பார்கள். மற்றவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டு இருப்பார்கள். ஆனால், எல்லோரிடமும் ஒரு 'பர்சனல் டச்' வைத்திருப்பார்கள். அதனாலேயே இவரைப் பலரும் விரும்புவார்கள்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும்.
    • 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம்.

    திருமண தடை பெற்றோரை மட்டுமல்லாமல், பிள்ளைகளையும் மன ரீதியாக மிகவும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. சரியான வயதில் திருமணம் நடக்காதவர்கள், சில தோஷங்களால் திருமண தடையை எதிர் கொள்ளக்கூடியவர்கள் ஒவ்வொரு ராசிக்கு ஏற்ற மந்திரத்தை உச்சரித்தால் திருமண தோஷம் நீங்கும். ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும்.

    ஒருவருக்கு சரியான வயதில் திருமணம் நடந்தால் தான், அவரின் வாழ்க்கையை சரியாக வழிநடத்திச் செல்ல முடியும். திருமண தடைக்கான தோஷத்தை நீக்கக்கூடிய 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம்.

    மேஷம் :

    தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    ரிஷபம் :

    தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    மிதுனம் :

    தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    கடகம் :

    தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    சிம்மம் :

    தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    கன்னி :

    தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    துலாம் :

    தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    விருச்சிகம் :

    தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    தனுசு :

    தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    மகரம் :

    தினமும் அல்லது திங்கட்கிழமைகளில் 'ஓம் சோம் சோமாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    கும்பம் :

    தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 'ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    மீனம் :

    தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    • நம் தினசரி காலண்டரில் அன்றைய திதி, நட்சத்திரம் என்ன என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.
    • திதிகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நாளின் பலன்களும் குறிப்பிடப்படுகிறது.

    வளர்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன.

    பிரதமையில் பிறந்தவர்கள், எதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும் ஆற்றல் உடையவர்கள்.

    துவிதியையில் பிறந்தவர்கள், உண்மையை பேசுபவர்கள். பொய் பேசுவது அரிது.

    திருதியையில் பிறந்தவர்கள், தான் நினைக்கும் காரியத்தை செய்து முடிப்பவர்கள்.

    சதுர்த்தியில் பிறந்தவர்கள், மந்திர சக்தியில் விருப்பம் உடையவர்கள்.

    பஞ்சமியில் பிறந்தவர்கள், பொன் ஆசை உடையவர்கள்.

    சஷ்டியில் பிறந்தவர்கள், செல்வந்தராக விருப்பப்படுவார்கள்.

    சப்தமியில் பிறந்தவர்கள், மற்றவர்களின் மேல் இரக்க குணம் உடையவர்கள்.

    அஷ்டமியில் பிறந்தவர்கள், குழந்தைகளின் மேல் மிகவும் அன்பு உடையவர்கள்.

    நவமியில் பிறந்தவர்கள், அதிக புகழ் பெறுவதில் நாட்டம் உடையவர்கள்.

    தசமியில் பிறந்தவர்கள், ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக விளங்குவார்கள்.

    ஏகாதசியில் பிறந்தவர்கள், புதுமையான தொழில்களில் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்கள்.

    திரயோதசியில் பிறந்தவர்கள், உறவினர்களிடம் அதிகம் பேச மாட்டார்கள்.

    பௌர்ணமியில் பிறந்தவர்கள், தெளிவான சிந்தனை உடையவர்கள்.

    அமாவாசையில் பிறந்தவர்கள், தன் அறிவை மேலும் பெருக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் உடையவர்களாக இருப்பர்.

    • கீழே கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் பொதுப்படையாக ஜோதிட ரீதியாக கணிக்கப்பட்ட விஷயங்கள்.
    • ஒருவரின் ஜாதகம், பிறந்த தேதி, நேரத்தை பொறுத்து இவை சற்று மாறுபடும்.

    எல்லோருமே பொய் சொல்கிறோம்.

    எவ்வளவு பொய் சொல்கிறோம்?

    எதற்காகப் பொய் சொல்கிறோம்?

    என்பதில் தான் வேறுபாடு இருக்கிறது.

    அரிச்சந்திரனுக்குப் பிறகு பொய்சொல்லாதவர்களை விரல்விட்டுத்தான் எண்ணவேண்டியதாக இருக்கிறது. ஜாதகப்படி எந்த ராசிக்காரர்கள் அதிகமாக பொய் சொல்வார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.

    மேஷம்: இவர்கள் பல நேரங்களில் அமைதியாக இருக்கிறேன் என்று சொல்லும் வார்த்தைக்குப் பின்னால் எரிமலை குழியில் அமர்ந்திருப்பது போன்று எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும் அளவிற்கான கோபத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களின் கோபத்தை மறைப்பதற்காகவே அமைதியாக இருக்கிறேன் என்று பொய் கூறுவார்கள்.

    ரிஷபம்: இவர்களை காளை அல்லது கருப்பு குதிரை என்று கூறலாம். இவர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள். தங்களுக்கு பிடித்த நபர், பொருள், அல்லது ஏதேனும் ஒரு விஷயம் மற்றவர்களிடம் இருந்தால் அதனைக் கண்டு பொறாமைப்படுவார்கள். இவர்கள் பொறாமை படுவது மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக அசடு வழிந்து பொய் கூறுவார்கள்.

    மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் எளிதில் பழகக் கூடியவர்கள். சில சமயங்களில் அமைதியாக இருப்பது போலவும், வெட்கப் படுவது போலவும் பொய் கூறுவார்கள்.

    கடகம்: இவர்கள் அதிகம் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். எனவே மற்றவர்களினால் இவர்கள் மனது எளிதில் காயமடையும். எனினும் அந்த வழியை மறைத்துக் கொண்டு நன்றாக இருப்பதாக சொல்லி பொய் கூறுவார்கள்.

    சிம்மம்: இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்கள் தன்னைப் பார்க்கும் பொழுது அது தெரியாதது போல் காட்டிக் கொள்வார்கள். இவர்கள் வேதனைப்படும் நேரங்களில் அதனை வெளிக்காட்டாமல் பொய் கூறுவார்கள்.

    கன்னி: இவர்கள் தங்களது வாழ்வில் எல்லாவற்றையும் திட்டமிட்டு தான் செய்வார்கள். பரிபூரணமானவர்களாக திகழ்வார்கள். மற்றவர்களிடம் தனக்கு எல்லாம் தெரிந்தவர் போல் காட்டிக் கொள்ளும் இவர்கள், ஏதேனும் ஒரு விஷயம் தங்களுக்கு தெரியவில்லை என்றால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பொய் கூறுவார்கள்.

    துலாம்: இவர்கள் பல நேரங்களில் செய்ய முடியாத விஷயம் என்று தெரிந்த போதும் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பார்கள். அதுமட்டுமல்லாமல் யாரேனும் வயதானவர்கள் இவர்களிடம் சிக்கினால் இன்னும் அதிகமான பொய்களை கூறுவார்கள்.

    விருச்சிகம்: இவர்கள் மிகவும் மர்மமானவர்கள். எளிதில் மற்றவர்களுடன் பழகக்கூடிய இவர்கள் தங்களின் வாழ்க்கை நிலையை வெளியில் கூறாமல் பொய்யாக நடிப்பார்கள். பல நேரங்களில் தனக்கு என்ன தேவையோ அதற்காக மட்டும் பொய்யாக நடிப்பார்கள்.

    தனுசு: இவர்கள் யாருடைய உணர்வு, மரியாதை இவை எதையும் பொருட்படுத்தாமல் பொய் கூறுவார்கள். தங்களை மிகவும் ஆளுமை உடையவர்கள் என்று காட்டிக்கொள்ளும் இவர்கள் எப்பொழுதும் பல காரியங்களுக்காக மற்றவர்களுடன் ஒட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் மற்றவர்களால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பொய் கூறுவார்கள்.

    மகரம்: மகர ராசியினர் மிகவும் வலிமையானவர்கள். எனினும் இவர்களால் எல்லா காரியங்களையும் தனியாக செய்து முடிக்க முடியாது. இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களிடம் எந்த உதவியும் கேட்க மாட்டேன். மற்றவர்களுக்கு உதவி செய்ய பெருமைப்படுகிறேன் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் மற்றவர்களிடம் உதவி கேட்காமல் தவித்துக் கொண்டு பொய் கூறுவார்கள்.

    கும்பம்: இவர்களின் எண்ணம் மற்றும் சுவை சற்று வித்தியாசமாகவே இருக்கும். பலருக்கும் புதுமையான விஷயங்களை கையாளுவதில் சற்று பயம் இருக்கும். ஆனால் இவர்களோ தனக்கு எந்த பயமும் இல்லை என்று அதனை செய்யத் தொடங்கி,தான் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இந்த விஷயத்தை செய்து முடித்தேன் என்று பொய் கூறுவார்கள்.

    மீனம்: மகர ராசியினர் போல் இவர்களும் உதவி கேட்க தயக்கம் காட்டுவார்கள். இருப்பினும் தன்னிடம் அனைத்து விஷயங்கள் இருந்தும் மற்றவர்களிடம் வெறும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதாக சொல்லி, தங்கள் காரியத்தை முடித்துக் கொள்வார்கள். இவ்வாறு நேரடியாக உதவி என கேட்காமல் பொய் கூறுவார்கள்.

    -மேலே சொல்லப்பட்டிருக்கும் அத்தனை பலன்களும் அனைவருக்கும் பொதுப்படையாக ஜோதிட ரீதியாக கணிக்கப்பட்ட விஷயங்கள். ஒவ்வொரு தனி நபருடைய ஜாதகம், பிறந்த தேதி, நேரத்தை பொறுத்து இவை சற்று மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமா? காதல் திருமணமா என்பதை எளிதாக கூற முடியும்.
    • நவகிரக அமைப்பை வைத்து ஜாதகருக்கு எப்படி திருமணம் நடக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.

    மனித வாழ்வின் மிக முக்கிய அங்கமான திருமணத்தை பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம், சுய விருப்ப விவாகம் என இரண்டாக வகைப்படுத்ததலாம். ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் விருப்ப திருமணமா? ஜாதகரின் விருப்ப திருமணமா என்பதை எளிதாக கூற முடியும்.

    சூரியன்

    சூரியன் மனக்கோட்டை, கற்பனை, கனவுகளுக்கு காரக கிரகமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 5ம் பாவகத்துடன் சூரியன் சம்பந்தம் பெற்றால் காதல் பற்றிய பல விதமான கற்பனைகளும், கனவுகளும் இருக்கும். இதில் அந்தஸ்து மற்றும் கவுரவம் பற்றிய மிகைப்படுத்ததலான எதிர்ப்பார்ப்பு இருக்கும். தன் கனவிற்கும், கற்பனைக்கும் அந்தஸ்திற்கும் சமமான நபர் கிடைத்தால் மட்டுமே காதலிக்க துவங்குவார்கள்.

    சந்திரன்

    சந்திரன் உடலையும், மனதையும் குறிக்கும் கிரகம். ஒருவரின் ஜாதகத்தில் ஜந்தாம் இடத்திற்கு சந்திரன் சம்பந்தம் பெற்றால் மன உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தங்கள் மன உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு நபரின் அன்பு கிடைத்தால் அவர்கள் மேல் காதல் வந்து விடும். செவ்வாய் செவ்வாய் வேகத்திற்கும், வீரத்திற்கும், தைரியத்திற்கும் காரககிரகம். ஐந்தாம் பாவகத்துடன்

    செவ்வாய்

    சம்பந்தம் இருந்தால் காதலிக்கும் தைரியம் வரும். செவ்வாய்க்கு சுப கிரக சம்பந்தம் இருந்தால் நல்ல தரமான நபருடன் காதல் ஏற்படுகிறது. அசுப கிரகம் சம்பந்தம் பெற்றால் தரமில்லாத, தகுதி குறைந்த நபருடன் காதல் உருவாகிறது.

    புதன்

    காதலுக்கான காரக கிரகம் புதன். ஒருவரின் புத்திசாலித்தனத்திற்கும், நுண்ணறிவிற்கும் காரக கிரகமான புதன் காதலிக்கும் போது மட்டும் மதியை இழந்து நிற்கும். எத்தனை வயதானாலும் புதன் தசை, புத்தி அந்தர காலங்களில் காதல் அவஸ்தையால் மன நோயாளியாகிறார்கள். குரு குரு மதிப்பிற்கும், மரியாதைக்கும் காரக கிரகம்.

    குரு

    ஐந்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றவர்களுக்கு மரியாதைக்குரிய நபர்கள் மற்றும் கவுரவமான நபர்கள் மீது காதல் வரும். இவர்கள் கவுரவத்திற்கு பயந்து பெற்றோர்களுக்காகவும், உறவுகளுக்காகவும் தங்கள் காதலை வெளிப்படுத்துவதில்லை. வாழ்நாள் முழுவதும் தங்கள் காதலை ஆழ்மனதில் அசை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இது தான் காதலுக்கு மரியாதை.

    சுக்ரன் சுக்ரன் அழகிற்கும், ஆடம்பரத்திற்கும், காமத்திற்கும் காரக கிரகம். எந்த வயதினராக இருந்தாலும் சுக்ரன் தசை, புத்தி காலங்களில் அழகு, ஆடம்பரம்,காமம் போன்றவற்றினால் காதல் வருகிறது. சுக்ரனால் ஏற்படும் காதலில் பெரும்பாலும் ஆழமான அன்பு இருக்காது. பலர் போக்சோவில் தண்டனை அனுபவிப்பது, பல பெண்களிடம் தவறாக பழகுபவர்களுக்கு சுக்ரன், ராகு சம்பந்தம் இருக்கும். இவர்களின் காதல் திருமணத்தில் முடிவதில்லை, திருமணம் நடந்தாலும் தோல்வியைத் தழுவுகிறார்கள்.

    சனி

    சனி துன்பத்திற்கும், துயரத்திற்கும் காரக கிரகம். ஐந்தாம் பாவகத்துடன் சனி சம்பந்தம் பெற்றால் தங்கள் துன்பம், கவலைகளில் ஆர்வம் செலுத்துபவர்கள் மீது காதல் கொள்கிறார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் வேலை பார்க்கும் இடத்தில் காதல் வருகிறது. இளம் பருவத்தில் வயது வித்தியாசமில்லாமல் ஏற்படும் காதல் நிறைவேறாது. காதலர்கள் பலர் நம்பிக்கை துரோகத்தால் உயிரை துறக்கிறார்கள்.

    ராகு

    ராகு வேற்று மொழி பேசுதல் மற்றும் திருட்டுத்தனத்தைக் குறிக்கும் கிரகம். தவறான நபர்களிடம் காதல் கொள்ளுதல், ஏற்கனவே திருமணமானவர்களை காதலிப்பதையும் கூறும் கிரகம். ராகு. பலருக்கு திருமணத்திற்கு பிறகு ஏற்படும் மனச்சுமையை பகிர்ந்து கொள்ளும் தகாத உறவைத் தருகிறது. முகம் சுளிக்க வைக்கும் காதல் உறவை ஏற்படுத்துகிறது.

    கேது

    கேது ஞானத்திற்கும் பக்திக்கும், வேற்று மதத்திற்கும் காரக கிரகம் என்பதால் மதம் மாறிய காதலுக்கு வழி வகுக்கிறது. இவர்கள் காதலால் சட்ட நெருக்கடியை சந்திப்பவர்கள்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குருபகவான் கடந்த ஏப்ரல் 22-ம்தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.
    • எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பார்வையால் கட்டாயம் திருமணம் நடக்கும் என்று பார்க்கலாம்.

    குருபகவான் கடந்த ஏப்ரல் 22-ம்தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனார். 2023 குருப்பெயர்ச்சிக்கு பிறகு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பார்வையால் கட்டாயம் திருமணம் நடந்தே தீரும் என்பதை பார்க்கலாம்.

    சரியான வரன் கிடைக்காமல் , வரன் கிடைத்தாலும் பல காரணங்களால் திருமணம் தடைபட்டு விரக்தியில் இருக்கும் இந்த 7 ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சிக்கு பிறகு கட்டாயம் சிறப்பாக திருமணம் நடைபெற போகிறது.

    மேஷ ராசி – ஜென்ம குரு

    மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ஜென்மத்தில் ராகுவும் ஏழாவது இடத்தில் கேதுவும் இருந்து திருமணத்தடை கொடுத்து வந்த நிலையில் குருப்பெயர்ச்சிக்கு பிறகு குரு பகவான் ஏழாவது வீட்டை பார்ப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சிக்கு பிறகு திருமண தடை நீங்கும். ராகு கேதுவால் ஏற்பட்ட திருமண தடையை குரு பகவான் விலக்கி கொடுத்து வெற்றிகரமான திருமண வாழ்க்கையை அமைத்து தருவார்.

    மிதுன ராசி – லாப குரு

    அஷ்டமா சனி காலம் முடிந்து வெற்றியின் தொடக்கத்தில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு, குருப்பெயர்ச்சியால் திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையப் போகிறது. குரு பகவான் 11ஆம் வீட்டுக்கு மாறப் போகிறார். இதனால் வரையில் வாழ்க்கையிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து கோடீஸ்வர யோகத்தோடு திருமண வாழ்க்கை அமையும்.

    சிம்ம ராசி – பாக்ய குரு

    சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன் கிடைக்கும் குருப்பெயர்ச்சி இதுவாக இருக்கப்போகிறது. பாக்கியஸ்தானத்தில் பயணம் செய்யப் போகும் குரு பகவான் , அற்புதமான பண வரவோடு இனிமையான வாழ்க்கை துணையை உங்களுக்கு கண் முன்னே நிறுத்துவார். சனி பகவான் பார்வை சிம்ம ராசிக்கு ஏழாம் இடத்தில் விழுவதால் ஒரு சில மனக்கசப்புகள் ஏற்படும் எனினும் குரு பகவான் ஆசியோடு திருமணம் நடைபெறும்.

    துலாம் ராசி – களத்திர குரு

    குரு பகவான் ஏழாம் வீட்டிற்கு மாறி உங்கள் ராசியை பார்வையிடுகிறார். இதனால் வரை ஜென்மத்தில் கேதுவும் ஏழாம் இடத்தில் ராகுவும் இருந்து திருமண தடை ஏற்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் மாதம் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குரு பார்வை கிடைப்பதால் கட்டாயம் திருமணம் நடந்தே தீரும்.

    தனுசு ராசி – பூர்வ புண்ய குரு

    ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்து விட்டது , ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு மாறப்போகிறார் குரு பகவான். குருவின் பார்வை ஒன்பதாம் இடத்திற்கு கிடைக்கப் போவதால், காதல் திருமணம் கைகூடவும், நீங்கள் விரும்பிய பெண்ணை மனம் முடிக்கவும் வாய்ப்புகள் வந்து சேரும். தனுசு ராசிக்காரர்களுக்கு அமோகமான திருமண வாய்ப்பு ஏற்படும்.

    கும்ப ராசி – தைரிய குரு

    கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி காலம், எனினும் ஏழாம் வீட்டில் குரு பார்வை விழுவதால், பல பிரச்சனைகள் வந்தாலும் திருமணம் தடை பெறாது. திருமணம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் அமைப்பு கும்ப ராசிக்காரர்களுக்கு உள்ளது.

    மீன ராசி - குடும்ப குரு

    2023 குருப்பெயர்ச்சியின் போது குரு பகவான் இரண்டாம் இடத்திற்கு செல்கின்றார். ராசிநாதனாகிய குரு பகவான் ஆசி இருப்பதால் மீன ராசிக்காரர்கள் ஏழரை சனியை நினைத்து கவலைப்பட வேண்டியது இல்லை. குரு பகவான் குடும்ப ஸ்தானத்துக்கு செல்வதால், இது வரையில் இருந்த திருமண தடை நீங்கும். கட்டாயம் மீன ராசிக்காரர்களுக்கு 2023 குருப்பெயர்ச்சி முடிந்தவுடன் திருமணம் நடந்தே தீரும்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    குருப்பெயர்ச்சி பலன்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்...https://www.maalaimalar.com/rasipalan

    • குரு பகவான் தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார்.
    • நாளை இரவு 11.24 மணிக்கு மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார்.

    சுபஸ்ரீ சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9-ந் தேதி (22.4.2023) சனிக்கிழமையன்று இரவு 11.24 மணிக்கு அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குருவின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளில் பதிகின்றது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கு ஏற்ப, குரு பகவான் தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார்.

    குரு பகவான் 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்த்துப் புனிதப்படுத்துவார். அந்த இடங்களின் மூலம் நமக்கு அதிகப்பலன்கள் கிடைக்கும். மேஷத்திற்கு குருப்பெயர்ச்சியாகும் நேரத்தில் சூரியன் உச்சம் பெற்று புதனுடன் இணைந்து புத-ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகின்றார். சுக்ரன் மற்றும் சனி தங்களது சொந்த வீடுகளில் பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்கள். இந்த குருப்பெயர்ச்சி நாட்டிற்கும், வீட்டிற்கும் நன்மை அளிக்கும் பெயர்ச்சியாகவே அமையும்.

    குருவின் பார்வையைப் பெறும் மூன்று ராசிகள்: சிம்மம், துலாம், தனுசு.

    குரு தன ஸ்தானத்தைப் பார்க்கும் ராசிகள்: கடகம், கன்னி, விருச்சிகம். மேற்கண்ட ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும். பணவரவு திருப்தி தரும். பதவி வாய்ப்பு கைகூடும். செல்வாக்கு உயரும்.

    மேஷத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் இடையில் வக்ரமும் பெறுகின்றார். வக்ர காலத்தில் சிலருக்கு நன்மை ஏற்படும். சிலருக்கு வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். இதற்கிடையில் ராகு-கேதுக்களின் பெயர்ச்சியும் 8.10.2023-ல் ஏற்படுகின்றது.

    ஜென்ம குருவாக மேஷத்திற்கும், அஷ்டமத்து குருவாக கன்னிக்கும், அர்த்தாஷ்டம குருவாக மகரத்திற்கும், விரய குருவாக ரிஷபத்திற்கும் இந்த குருப்பெயர்ச்சி அமைவதால் மேற்கண்ட ராசியில் பிறந்தவர்கள் தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடைபெறும் திசாபுத்தி பலம்பார்த்து, அதற்குரிய அனுகூலம் தரும் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வீடு கட்டும் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவற்றில் உள்ள தடைகள் அகன்று தக்க விதத்தில் பலன் கிடைக்கும்.

    இப்பொழுது பெயர்ச்சியாகும் குரு பகவான் சூரியன்- ராகு சேர்க்கை பெற்ற வீட்டிற்குள் வருகின்றார். ராகுவோடு குரு இணைவதால் குருவிற்குரிய முழுமையான பலன்கள் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னரே கிடைக்கும்.

    நோய் தொற்று ஆபத்து

    இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக நோய்த் தொற்றுகள் கொஞ்சம் தீவிரமாகப் பரவும் சூழல் உருவாகலாம். சனியின் பார்வையும் ராகு மீது பதிவதால் சனி மீண்டும் 24.8.2023-ல் மகரத்திற்கு வக்ரமாகி வரும் வரை மக்கள் அனைவரும் மிகமிக கவனத்தோடு இருக்க வேண்டும்.

    சூரியனோடு ராகு இணைந்திருப்பதால் உஷ்ணாதிக்க நோய், காய்ச்சல் போன்றவை வேகமாகப் பரவக்கூடிய சூழ்நிலை உண்டு. முகக்கவசம் அணிவது மட்டுமல்லாமல் சுகாதாரத்துறை சொல்லும் வழிமுறைகளையும் கடைப்பிடிப்பதோடு, ஜூரஹரேஸ்வரர் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.

    விலை உயரும்

    குருப்பெயர்ச்சியின் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உண்டு. உணவுப் பொருள், காய்கறிகள், வெள்ளை நிறப் பொருட்களின் விலைகளும் உயரலாம். தங்கம், வெள்ளியின் விலை எப்பொழுதும் போல ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும். இரும்பு, மருந்து, மரம், கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் லாபம் குவிப்பர். எழுத்துத் துறை, பத்திரிக்கைத் துறை, கலைத்துறை சம்பந்தப்பட்டவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயரக்கூடிய வாய்ப்பே உண்டு.

    குருவின் வக்ர காலம் மற்றும் செவ்வாய்-சனி பார்வைக் காலங்களில் இயற்கை சீற்றங்கள், நில நடுக்கங்கள், மழை வெள்ளம், நெருப்புப் பாதிப்பு போன்றவைகளில் இருந்து நாம் விடுபட கூட்டுப் பிரார்த்தனைகளை மேற்கொள்வது நல்லது. அல்லது அவரவர் எல்லை தெய்வங்களை முறையாக வழிபடுவதும் பலனளிக்கும்.

    மேஷ குருவின் சஞ்சாரம்

    (22.4.2023 முதல் 1.5.2024 வரை)

    22.4.2023 முதல் 22.6.2023 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் (கேது சாரம்)

    23.6.2023 முதல் 11.9.2023 வரை பரணி நட்சத்திரக்காலில் குரு பகவான் (சுக்ர சாரம்)

    12.9.2023 முதல் 21.11.2023 வரை பரணி நட்சத்திரக்காலில் வக்ர இயக்கத்தில் குரு பகவான் ( சுக்ர சாரம்)

    22.11.2023 முதல் 20.12.2023 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் (கேது சாரம்)

    21.12.2023 முதல் 5.2.2024 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் (கேது சாரம்)

    6.2.2023 முதல் 16.4.2024 வரை பரணி நட்சத்திரக்காலில் குரு பவான் (சுக்ர சாரம்)

    17.4.2024 முதல் 1.5.2024 வரை கார்த்திகை நட்சத்திரக்காலில் குரு பகவான் (சூரிய சாரம்)

    12.9.2023 முதல் 20.12.2023 வரை குரு பகவான் வக்ரம் பெறுகின்றார். (அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக்கால்களில்)

    1.5.2024-ல் ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிச் செல்கின்றார்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    குருப்பெயர்ச்சி பலன் அறிய இங்கே கிளிக்செய்யவும்... https://www.maalaimalar.com/rasipalan

    • ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள்.
    • 27 நட்சத்திரக்காரர்களின் இயல்பான குணங்களைப் பற்றி ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.

    அசுவினி முதல் ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். அவர்கள் பிறந்த நட்சத்திரத்தை 'ஜென்ம நட்சத்திரம்' என்று கூறுவர்.

    ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு விதமான குணமுண்டு. அந்த அடிப்படையில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் இயல்பாக அமைந்த குணங்களைப் பற்றி ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. இவை பொதுவான பலன்கள் தான்.

    அசுவதி:- இது கேதுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள், செய்யும் காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பர். மனோதிடம் கொண்டவர்கள். உண்மைக்குப் புறம்பாக பேசமாட்டார்கள். முன்கோபத்தால் உறவினர்களைப் பகைத்துக்கொள்ளும் சூழல் ஏற்படும். லட்சியத்தை நோக்கிப் பயணிப்பவர்கள். உதவி செய்வதன் மூலம் பதவிகளைப் பெறுவர்.

    பரணி:- இது சுக்ரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள், ஆரம்பித்த காரியத்தை முடிப்பதில் அசகாய சூரர்கள். குடும்பப் பாசம் உள்ளவர்கள். குடும்ப உறுப்பினர்களை அல்லது விபரம் அறிந்தவர்களைக் கலந்து ஆலோசித்தே எந்த முடிவும் எடுப்பர். பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்கள். கலைத்துறையில் ஈடுபாடு இருக்கும். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதிப்பர்.

    கார்த்திகை:- இது சூரியனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். பெருமைக்குரியவர்கள், பிறரால் மதிக்கப்படுபவர்கள். கம்பீரமான தோற்றத்தோடு காட்சியளிப்பர். கடமையைச் செவ்வனே செய்வார்கள். வழக்குகளில் வாதாடி வெற்றி பெறும் தன்மை உண்டு. இனிய பேச்சால் மற்றவர்களை வசமாக்கும் தன்மை கொண்டவர்கள்.

    ரோகிணி:- இது சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இரக்க குணம் கொண்டவர்கள். ஸ்திரமான மனது இவர்களுக்கு இருப்பது அரிது. வளர்பிறையும், தேய்பிறையும் வருவது போல இன்பமும், துன்பமும் கலந்த வாழ்வைப் பெறுவர். சாஸ்திரங்களில் நம்பிக்கை கொண்டவர்கள். அடிமைத் தொழிலைக் காட்டிலும் சுய தொழிலை விரும்புவார்கள்.

    மிருகசீர்ஷம்:- இது செவ்வாயின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக விளங்குவர். இவர்கள் மனதில் உள்ளதை பிறர் அறிந்து கொள்ள இயலாது. சுய ரகசியங்களைக் காப்பாற்றுபவர்கள். பேச்சில் வல்லமை பெற்றவர்கள் என்பதால், பிறருக்கு பிடிகொடுக்க மாட்டார்கள்.

    திருவாதிரை:- இது ராகுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் சகல துறைகளையும் தெரிந்து வைத்திருப்பார்கள். சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்வார்கள். பகை பாராட்டும் தன்மை இவர்களிடம் காணப்படும். மற்றவர்கள் மத்தியில் தான், யார் என்பதை நிரூபிக்கப் பாடுபடுவர். மற்றவர்களிடம் யோசனை கேட்டாலும் தான் எடுத்த முடிவையே மேற்கொள்வர்.

    புனர்பூசம்:- இது குருவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். அன்பாகப் பேசிப் பழகுவார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துபவர்கள். இவர்களுக்கு அதிக நண்பர்கள் உண்டு. நட்பின் மூலம் காரியங்களைச் சாதித்துக் கொள்வதில் வல்லவர்கள். உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பர்.

    பூசம்:- இது சனியின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். தாய்ப்பாசம் மிக்கவர்கள். பெற்றோர்களின் ஆதரவால் பெரிய நிலையை அடைவர். செல்வந்தனாகத் திகழும் வாய்ப்பு உண்டு. மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள். பொதுநலத்தில் ஈடுபட்டு நியாயத்திற்காக பாடுபடும் தன்மை கொண்டவர்கள்.

    ஆயில்யம்:- இது புதனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் எதிரிகளையும் தன்வசமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியமிக்கவர்கள். மனதில் உள்ள குறைகளை மற்றவர்களிடம் சொல்ல மாட்டார்கள். தெய்வ சிந்தனை உடையவர்கள். இவர்களைக் கூட்டாளிகளாக வைத்துக்கொள்பவர்கள் விரைவில் முன்னேற்றம் காண்பர்.

    மகம்:- இது கேதுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். மிகுந்த சாமர்த்தியசாலிகள். கோபம் வந்தால் எதிரிகளை இரண்டில் ஒன்று ஆக்கிவிடுவர். அதிக நண்பர்கள் இருந்தாலும் ஒரு சிலரிடம் மட்டுமே மனம் விட்டுப் பேசுவர். எதைச் சொன்னாலும் விவாதம் செய்த பிறகே ஏற்றுக்கொள்வர்.

    பூரம்:- இது சுக்ரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். பழகுவதில் கண்ணியமிக்கவர்கள். பலவிதமான தொழில்களைச் செய்து வெற்றி காண்பர். கலைகளில் ஆர்வம் உள்ளவர்கள். அரசியல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் முன்னின்று காரியங்களைச் சாதிப்பதில் வல்லவர்கள்.

    உத்ரம்:- இது சூரியனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி மிக்கவர்கள். யதார்த்தவாதி. தேசப்பற்று மிக்கவர்களோடு பழக்கம் அதிகம் இருக்கும். கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பர். எல்லோரும் விரும்பும் விதத்தில் நடந்துகொள்வர். பணம் சம்பாதிப்பதில் வல்லவர்கள்.

    ஹஸ்தம்:- இது சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். மற்றவர்கள் போற்றும்படியான வாழ்க்கையை நடத்துபவர்கள். வீர தீரச் செயல்களில் விருப்பம் கொண்டவர்கள். சிறுவயது முதலே தொழில் செய்து சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்கள். குருபக்தியும், விசுவாசமும் இவர்களோடு இணைந்தே இருக்கும்.

    சித்திரை:- இது செவ்வாயின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரமாகும். சரீரபலமும், திடமான பேச்சாற்றலும் கொண்டவர்கள். பிறருக்காக பரிந்து பேசி உரையாடி காரியங்களைச் சாதிப்பீர்கள். சிக்கனமாக வாழ்க்கை நடத்துவதில் வல்லவர்கள். கவுரவத்தைக் காப்பாற்றத் துடிப்பீர்கள்.

    சுவாதி:- இது ராகுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். ஜனவசியம் அதிகம் பெற்றவர்கள். எதையும் ரசித்தும் பார்ப்பார்கள், ருசித்தும் பார்ப்பார்கள். மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவீர்கள். 64 கலைகளில் அதிகமான கலைகளை அறிந்து வைத்திருக்கக் கூடியவர்கள். தனது விருப்பப்படியே எதையும் செய்வர்.

    விசாகம்:- இது குருவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். உறவினர்களையும், நண்பர்களையும் அதிகம் நேசிக்கக் கூடியவர்கள். வேத சாஸ்திரங்களை கற்று வைத்திருப்பர். பழைய சடங்கு சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். பக்திமான், கூர்மையான புத்தியுடையவர்கள். மற்றவர்களிடம் இருந்து தன்னை வித்தியாசமாக காட்டிக் கொள்ளப் பிரியப்படுவர்.

    அனுஷம்:- இது சனியின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். தோஷமில்லாத நட்சத்திரம் என்று சொல்வது வழக்கம். எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் தன்மை கொண்டவர்கள். நல்ல குணமும், நல்ல மனமும், ஒரு காரியத்தைச் செய்து விட்டுப் பிறகு இப்படிச் செய்திருக்கலாமே என்று சிந்திப்பவர்களும் இவர்கள்தான்.

    கேட்டை:- இது புதனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். கடவுள் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். தன்னிச்சையாக செயல்படும்பொழுது தந்திரமான குணத்தைக் கையாள்பவர்கள். கள்ளம் கபடமில்லாத மனத்தைப் பெற்றவர்கள். யாரையும் எளிதில் நம்பமாட்டார்கள்.

    மூலம்:- இது கேதுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். உயர்ந்த சிந்தனை, கூர்மையான அறிவு படைத்தவர்கள். விருந்தினர்களை உபசரிப்பதில் வல்லவர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்பட்டால் முன்னேற்றத்தை விரைவில் காண இயலும்.

    பூராடம் :- இது சுக்ரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்களுக்கு பிடிவாத குணமும் உண்டு. பெருந்தன்மையான குணமும் உண்டு. தாய்ப்பாசம் மிக்கவர்கள். பொதுநலத்தில் அக்கறை காட்டி புகழ் பெறுவார்கள். தொழில் நுணுக்கங்களைக் கற்று வைத்திருப்பர். தர்ம சிந்தனை அதிகம் உள்ளவர்கள்.

    உத்ராடம்:- இது சூரியனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இனிமையாகப் பேசுபவர்கள் எல்லோரிடமும் பிரியமாக நடந்து கொள்வர். பிறர்பொருள் மேல் விருப்பம் கொள்ளமாட்டார்கள். செய்நன்றி மறக்காத குணம் இவர்களுக்கு உண்டு. மூத்த சகோதரர்களிடம் பாசம் காட்டுவார்கள்.

    திருவோணம்:- இது சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர். முன்பின் தெரியாதவர்களிடம் கூட மனம்விட்டுப் பேசுவர். தான தர்மம் செய்வதில் பிரியம் கொண்டவர்கள். முயற்சியில் சளைக்காமல், முன்னேற்றம் காண்பதிலேயே கவனமாக இருப்பர்.

    அவிட்டம்:- இது செவ்வாயின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். எதிரிகளைக் கண்டு அஞ்சாதவர்கள். தான் சொல்லிய கருத்தை மற்றவர்கள் ஏற்க வேண்டுமென்று விரும்புபவர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யவேண்டுமென்ற அற்புதக் குணம் கொண்டவர்கள். சொத்து சேர்ப்பதில் வல்லவர்களாக விளங்குவர்.

    சதயம்:- இது ராகுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். ஆன்ம பலமும், தேகபலமும் மிக்கவர்கள். பகைவர்களை வெற்றி கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தலைமைப் பதவிகள் இவர்களைத் தேடி தானாகவே வரும். திருப்பணிகள் செய்வதிலும் விருப்பம் கொண்டவர்கள். திக்கெட்டும் புகழ்பரப்பும் விதம் ஏதேனும் சாதனைகளைச் செய்வர்.

    பூரட்டாதி:- இது குருவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். நியாயம், நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். பொருட்கள் தேடுவதில் சாதுரியமாக செயல்படுவர். நண்பர்களைப் பூரணமாக நம்பிச் செயல்படமாட்டீர்கள். உறவினர் பகை எப்போதும் இவர்களுக்கு இருக்கும். கடவுள் வழிபாட்டில் கவனம் செலுத்தி காரியங்களை தொடங்கும் குணம் உண்டு.

    உத்திரட்டாதி:- இது சனியின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் பிறருக்கு உதவி செய்யும் குணம் பெற்றவர்கள். பிறருக்கு கொடுத்த வாக்கைக் எப்படியும் காப்பாற்றிவிடுவீர்கள். உறவினர்களை ஆதரிக்கும் குணம் உண்டு. சந்தர்ப்பத்திற்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக் கொள்வார்கள். தர்ம காரியங்களை செய்வதில் நாட்டம் கொள்வர்.

    ரேவதி:- இது புதன் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். பிறரிடம் ஆலோசனை கேட்டு நடக்க விரும்புவர். பேச்சாற்றல் மிக்கவர்கள். பிறரை அணுகும் முறையில் திறமைசாலிகளாக விளங்குவர். உள்ளதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்று எடுத்துரைப்பர்.

    'ஜோதிடக்கலைமணி' சிவல்புரி சிங்காரம்

    • ஒரு மணி நேரத்திற்கு ஒரு கிரகத்தின் ஓரை நடைபெறும்.
    • ஓரைகளையும், அவற்றிக்கான பலன்களையும் இங்கே பார்க்கலாம்.

    அறிவியல் கணக்குப்படி இரவு 12 மணி முதல் மறு நாள் இரவு 11.59 மணி வரையான நேரத்தை, ஒரு நாள் என்கிறோம். அதே நேரம் ஜோதிட கணக்குப்படி சூரியன் உதிக்கும் நேரத்தில் இருந்துதான் நாள் தொடங்குகிறது. அதன்படி காலை 6 மணி முதல் மறுநாள் காலை 5.59 மணி வரை, ஒரு நாள் ஆகும். ராகு, கேது தவிர மற்ற 7 கிரகங்களும், நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் தங்களின் கதிர்களை, ராசிக்காரர்கள் மீது வீசி அதற்கேற்ப பலன்களைக் கொடுக்கின்றன. இந்த கதிர்வீச்சு நேரத்தை 'ஓரை' என்கிறோம்.

    ஜோதிடக் கணக்குப்படி சூரியன், சுக்ரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற ரீதியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு கிரகத்தின் ஓரை நடைபெறும். ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு ஓரை உரிமையானது. அந்த நாளில் அந்த ஓரையைக் கொண்டுதான் நாள் தொடங்கும். உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உரியது. அந்த நாளில் சூரிய ஓரையுடன் தான் நாள் தொடங்கும். அதன்பிறகு சுக்ரன், புதன், சந்திரன், குரு, செவ்வாய் ஓரைகள் தொடர்ந்து வரும். அதன்பிறகு மீண்டும் சூரியன், சுக்ரன் என்று இந்த வட்டம் சுழலும். இப்படி ஒவ்வொரு நாளும், அந்தந்த கிழமைக்குரிய கிரகத்தின் ஓரையுடன்தான் நாள் தொடங்கும்.

    ஓரைகளையும், அவற்றிக்கான பலன்களையும் இங்கே பார்க்கலாம்.

    சூரிய ஓரை: எல்லாவற்றுக்கும் முதன்மையானது சூரியன். அந்தக் கோள் 'ராஜகிரகம்' என்று அழைக்கப்படுவதால், அரசு சார்ந்த செயல்களைச் செய்ய இந்த நேரம் ஏற்றது. வழக்கு தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வது, உயர் பொறுப்பில் உள்ளவர்களை சந்திப்பது, சொத்துக்கள் தொடர்பான முடிவு எடுப்பது என முயற்சிகளை மேற்கொள்வதற்கு இந்த ஓரை மிகச்சிறப்பானது. அதே நேரம் சூரிய ஓரையில், புதிய முயற்சி களுக்கான ஒப்பந்தங்களை முடிவு செய்யக்கூடாது. நல்ல செயல்களை மேற்கொள்ள இந்த ஓரை சிறந்தது அல்ல. குறிப்பாக புதிய வீட்டிற்கு குடிபோகக் கூடாது.

    சந்திர ஓரை: திங்கட்கிழமை, சந்திர ஓரையை தொடக்கமாக கொண்டு செயல்படும் நாள். வளர்பிறை காலத்தில் வரும் சந்திர ஓரைகள் நற்பலன்களை வழங்கும். இந்த ஓரையில் திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்குதல், கல்வி, கலைகளை கற்கத் தொடங்குதல், நெடுந்தொலைவு பயணம் புறப்படுதல், கால்நடைகள் வாங்குதல் போன்றவற்றைச் செய்யலாம். பொதுவாக இந்த ஓரையில், அனைத்து வகையான நற்காரியங்களையும் செய்யலாம். தேய்பிறை காலத்தில் வரும் ஓரையில் செய்யும் காரியங்கள் அவ்வளவு பலன்களைக் கொடுக்காது.

    சுக்ர ஓரை: வெள்ளிக்கிழமையில் இந்த ஓரையில்தான் நாள் தொடங்கும். ஆண் - பெண் உறவு, அழகு, கவர்ச்சி, தூய்மை, பொருளாதாரம் ஆகியவற்றை சுக்ரன் வழிநடத்துகிறார். எனவே இந்த ஓரை நேரத்தில் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம். ஆண்- பெண் உறவிற்கு, மருந்து சாப்பிட, கடனை மீட்டெடுக்க, புதிய ஆடை, அணிகலன் வாங்க ஏற்ற நேரம் இது. குறிப்பாக பெண்கள் தொடர்பான காரியங்களை மேற்கொள்ள சிறப்பான ஓரையாக, சுக்ர ஓரை பார்க்கப்படுகிறது. நிலத்தை உழவு செய்வதற்கும் இந்த ஓரையை தேர்வு செய்யலாம்.

    சனி ஓரை: சனிக்கிழமையை முதன்மையான கொண்ட ஓரை இது. சனி பகவான், ஆயுள், தொழில், முற்பிறப்பு பலன் ஆகியவற்றின் வழிகாட்டி. தீயவற்றில் எல்லாம் தீயது, கொடிய நேரத்தைத் தரும் ஓரை இது. ஆனாலும் இந்த ஓரையில், நிலம், சொத்து தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். நிலத்தை உழுதல், இரும்பு, மின்சாரப் பொருட்களை வாங்குதல், தோப்பு, கிணறு அமைத்தல் போன்ற காரியங்களை சனி ஓரையில் செய்யலாம்.

    குரு ஓரை: வியாழக்கிழமையில் முதல் ஓரையாக இது தொடங்கும். அனைத்துவிதமான காரியங்களைச் செய்யவும், சிறந்ததாக இந்த குரு ஓரை திகழ்கிறது. அதே போல் தீய செயல்களை இந்த நேரத்தில் செய்தால், கொடிய கேடான பலன் வந்து சேரும். குரு ஓரை நேரத்தில் திருமணத்திற்கான தாலி செய்ய தங்கம் வாங்கலாம். சுப காரியங்களுக்கான ஆடை, அணிகலன்களை வாங்குவதும் நல்லது. தங்கம் தொடர்பான வேலைகள் மற்றும் புதிய தொழில் தொடங்குவதற்கு இந்த ஓரை நேரம் ஏற்றதாகும்.

    முதலிரவு, விதை நடுதல், நாற்று நடுதல், சேமிப்பு கணக்கு தொடங்குதல், தொழில் தொடங்க பொருள் கொள்முதல் செய்தல் போன்ற காரியங்களையும் இந்த ஓரையில் செய்யலாம்.

    செவ்வாய் ஓரை: செவ்வாய்க்கிழமையில் முதல் ஓரையாக இந்த ஓரை வரும். ரத்தம், மருத்துவம், புவி, நெருப்பு மற்றும் அதிகாரம் போன்றவற்றிக்கு உரியவராக செவ்வாய் திகழ்கிறார். எனவே இந்த ஓரையில் நற்காரியங்களை செய்தல் கூடாது. எந்த ஒரு புதிய செயலையும் தொடங்க வேண்டாம். இந்த ஓரையில் போர் தொடுத்தல், போர்க்கருவிகள் செய்தல், வண்டிகளை பழுது நீக்குதல், வீடு மனை நிலம் வாங்குதல் மற்றும் விற்றல், மருந்து சாப்பிடுதல், ஏரிக்கரை மேம்படுத்துதல் மற்றும் அணை கட்டுதல் போன்ற பணிகளைச் செய்யலாம்.

    புதன் ஓரை: புதன்கிழமையானது, இந்த ஓரையில்தான் தொடங்கும். புதன் என்பதற்கு அறிவன் என்றும் பொருள் உண்டு. எனவே இந்த ஓரையில் அறிவுசார்ந்த செயல்களை செய்வது சிறப்பான பலன்களைத் தரும். அறிவியல் ஆராய்ச்சி களை மேற்கொள்வது, ஜோதிடம் கணிக்கத் தொடங்குவது, தேர்வு எழுதுவதற்கான வேலைகளைச் செய்வது, போட்டிகளில் பங்கேற்பது, கடிதத் தொடர்பு மேற்கொள்வது, தொழில்நுட்பம் சார்ந்த புதிய பொருட்களை வாங்குவது, புதிய கணக்கு தொடங்குவது போன்ற செயல்களை இந்த ஓரையில் செய்யலாம். நற்செயல்களைச் செய்ய சிறந்த ஓரை இது.

    ×