search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்"

    • அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
    • சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.

    நீடாமங்கலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு அரவைக்காக 2,000 டன் பொதுரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது.

    • பிள்ளபாளையத்தில் நெல் அறுவடை பணி நடந்து வருகிறது
    • இந்த நெல் வயல்களுக்கு கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனத்திலிருந்து தண்ணீர் பாய்ச்சப்பட்டது

    கரூர்:

    பிள்ளபாளையம் கிராமத்தில் நெல் வயல்களில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணி துரிதமாக நடந்து வருகிறது. கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பிள்ளபாளையம் கிராம பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த நெல் வயல்களுக்கு கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனத்திலிருந்து தண்ணீர் பாய்ச்சப்பட்டது.

    இதன் மூலம் நெல் வயல்களில் நெற்கதிர்கள் வளர்ச்சியடைந்து முதிர்ந்தன. தற்போது இயந்திரம் மூலம் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


    • காரையூர் பகுதியில் 1000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை பணி நடந்து வருகிறது.
    • வசாயிகள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் பகுதியில் 1000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது இங்கு அறுவடை பணி நடைபெற்று வருகிறது.அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிட்டது.இந்நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி காரையூர் பகுதியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாராணி உத்திராபதி தலைமை தாங்கினார்.

    ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரூர் மணிவண்ணன் முன்னிலை வகித்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

    இதில் வார்டு உறுப்பினர் கார்த்திக் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • குறைந்த காலத்தில் கூடுதல் வருமானம் ஈட்டிடவும் பயறு வகை சாகுபடி அவசியம்.
    • நெல் தரிசுக்கு ஏற்ற பயறு ரகங்கள் 8 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யம் பகுதியில் வேளாண் விளை நிலங்களில் மண்வளத்தை அதிகரித்திடவும் குறைந்த காலத்தில் கூடுதல் வருமானம் ஈட்டிடவும் பயறு வகை பயிர்கள் சாகுபடி அவசியமாகும்.

    சம்பா நெல் அறுவடைக்கு பிறகு பயறு சாகுபடி செய்ய ஏதுவாக தலைஞாயிறு வட்டாரத்திற்குட்பட்ட தலைஞாயிறு, நீர்முளை, பனங்காடி மற்றும் கொத்தங்குடி ஆகிய வேளாண் விரிவாக்க மையங்களில் நெல் தரிசுக்கு ஏற்ற பயறு ரகங்கள் 8 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இதனை மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.

    எனவே தேவைப்படும் விவசாயிகள் கிலோ ரூ. 118 என்பதில் இருந்து மானிய தொகை ரூ. 48 கழித்து ரூ. 70 விலையில் பயறு விதைகளை பெற்று பயனடையலாம். மேலும், நெல்லுக்கு பின் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்து மண்வளத்தை பெருக்கிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை விற்க முடியாமல் காத்து கிடக்கின்றனர்.
    • விவ–சாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா முன்பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    ராராமுத்திரகோட்டை அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக அரசு கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் பலர் தாங்கள் அறுவடைசெய்த நெல்லை கொட்டி வைத்து காத்து கிடக்கின்றனர்.

    கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.

    • விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்கப்பட வில்லை. இருப்பு விலை குறித்து விவரங்கள் கடைகளில் வைக்கப்பட வில்லை
    • உரம் இருப்பு மற்றும் விலை தொடர்பான பட்டியல் வைக்காத கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவ சாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் இன்று நடந் தது.

    மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா மற்றும் அதிகாரிகள் கூட் டத்தில் கலந்து கொண் டனர். கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக் கொண்டார்.கூட்டத்தில் விவசாயிகள் புலவர் செல்லப்பா, வின்ஸ்ஆன்றோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்கப்பட வில்லை. இருப்பு விலை குறித்து விவரங்கள் கடைகளில் வைக்கப்பட வில்லை. அதிக விலைக்கு உரங்கள் விற்கப்பட்டு வருகிறது. தோட்டக்கலை துறை மூலமாக மானியங்கள் விவசாயிகளுக்கு வழங் கப்படவில்லை. குமரி மாவட்டத்தில் மூன்று போகம் மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லினுடைய ஈரப்பதம் எப்பொழுதும் அதிகமாக தான் இருக்கும்.

    நெல் கொள்முதல் நிலை யங்களில் 22 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் இருந்தால் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பு தெரிவிக்கி றார்கள். ஆனால் டெல்டா மாவட்டத்தில் 22 சதவீதத்திற்கும் மேல் ஈரப்பதம் இருக்கும் நெல்களையும் கொள்முதல் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

    எனவே குமரி மாவட் டத்திலும் 22 சதவீ தத்திற்கு மேல் ஈரப்பதம் உள்ள நெல்களை கொள்மு தல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜாக்க மங்கலம் தென்னை உற்பத்தி நிலையத்தில் உள்ள முறை கேடுகளை கண்டு பிடித்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் 2350 டன் உரம் இருப்பில் உள்ளது. உரம் இருப்பு மற்றும் விலை தொடர்பான பட்டியல் வைக்காத கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். கால்நடை மருத்துவ மனைகளில் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1962 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் நடமாடும் ஆம்புலன்ஸ் மூலமாக சென்று அந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையத்தில் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்களை கொள்முதல் செய்வது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விலை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்ப டுவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை அழிக்கப்படுகிறது.
    • சீராக சம்பா மற்றும் தூயமல்லி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி.

    பேராவூரணி

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் பேராவூரணி வட்டாரத்தை சார்ந்த விவசாயிகளை பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த விவசாயிகள் சுற்றுலாவிற்கு மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அங்கு பாரம்பரிய நெல் சாகுபடி இயற்கை விவசாயி ராஜா கிருஷ்ணன் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து வருகிறார்.

    இவர் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய நெல் ரகங்களை விதையாகவும், அரிசியாகவும் விற்பனை செய்து வருகிறார்.

    நீண்டகால வயதுடைய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் பொழுது நடவு செய்த 30 நாட்களில் நெல் பயிர் நுனியினை வெட்டி விடுவதால் நெல் பயிர் பக்க கிளைகள் அதிகரிக்கிறது.

    இதனால் மகசூல் 25 சதம் அதிகரிக்கிறது.இவ்வாறு நுனியினை வெட்டுவதால் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை அழிக்கப்படுகிறது.

    பொதுவாக நீண்ட கால நெல் ரகங்கள் பயிரின் உயரம் அதிகரித்து பக்கக் கிளைகள் குறைவாகவும் காணப்படும் இந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதால் பயிரின் உயரம் குறைவாகவும் பக்க கிளைகள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளதாக கூறினார்.

    அவர் தனது வயலில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, வாசனை சீரக சம்பா, சொர்ண மயூரி, ஆத்தூர் கிச்சடி சம்பா, கருடன் சம்பா, தங்க சம்பா, சீராக சம்பா மற்றும் தூயமல்லி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.

    இவ்வாறு சாகுபடி செய்து மருத்துவ குணமிக்க பாரம்பரிய நெல் ரகங்களை அழியாமல் பாதுகாத்து தனது வருமானத்திலையும் அதிகப்படுத்தி உள்ளதாகவும் விவசாயிகளிடம் அவரது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்.

    பாரம்பரிய நெல் சாகுபடி செய்துள்ள வயலினை விவசாயிகளிடம் நேரடியாக காண்பித்தார்.

    பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன்.செல்வி பாரம்பரிய நெல் ரகங்களை ஒரு குழுவாக சேர்ந்து இயற்கையான முறையில் சாகுபடி செய்வதால் எளிமையான முறையில் சந்தைப்படுத்த முடியும் எனவும் கூறினார்.

    • பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல்மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.
    • அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் அசேஷம், ஆதனூர், தெற்குநத்தம், இடையர்நத்தம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல்மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • நெல் சாகுபடியில் சுமார் 110 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் விளைச்சல் தரும்.
    • விதை நெல் விற்பனை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் அறிக்கை விடுத்துள்ளார்.

    மூலனூர் :

    திருப்பூர் மாவட்டம் மூலனூர், கருப்பன் வலசு, தலையூர், எல்லப்பாளையம் பெரமியம், ஆத்துக்கால்புதூர், காளிபாளையம், வீராச்சிமங்கலம், படுகை தாராபுரம் ஆகிய அமராவதி ஆற்றுப் படுகைகளில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க அமராவதி அணையின் நீர் பாசனத்தை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது இந்த பகுதியில் நடைபெறும் நெல் சாகுபடியில் சுமார் 110 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் விளைச்சல் தரும் நெல் ரகங்களான ஏடிடி 45, ஏடிடி37, சாவித்திரி போன்ற நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன.

    இதில் குறைந்த நாட்களில் மகசூல் தரும் இதில் ஏ.டி.டி. 45 ரக நெற்பயிர்களை அதிக அளவில் நடப்படுகிறது. இந்த ரக நெல் ஒரு ஏக்கருக்கு 50 முதல் 60 மூட்டைகள் வரை மகசூல் கிடைப்பதால் இந்த ரக நெல் பயிரை இப்பகுதி விவசாயிகள் நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது இந்த பகுதிகளில் நாற்றங்கால் அமைக்கும் பணி சுமார் 90 சதவீத நடவு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

    இதுபற்றி அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையால் பெரும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் அதிக அளவில் திருப்பூர் பனியன் கம்பெனிகளில் மற்றும் நூல் மில்களுக்கு சென்று விடுவதால் நெல் நடவு செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த வேலை செய்ய யாரும் முன்வருவதில்லை.

    இதன் காரணமாக தற்போது தர்மபுரி, சேலம், ஈரோடு போன்ற வெளியூர்களிலிருந்து ஏஜெண்டுகள் மூலம் ஆட்கள் வரவழைக்கப்பட்டு வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. எந்திர நடவு செய்வது இப்பகுதியில் அறிமுகம் இல்லாததாலும் அதன் பயன் இப்பகுதி விவசாயிகள் தெரிவதில்லை. இதே நிலை நீடிக்குமானால் வரும் காலங்களில் விவசாயம் செய்ய இந்தப்பகுதிகளில் ஆட்களே இல்லாத நிலை ஏற்படும் என்பதில் ஐயமில்லை என்று அவர் கூறினார்.

    விதை நெல் விற்பனை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் கே.ஜெயராமன் அறிக்கை விடுத்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகளுக்கு தரமான விதைகள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தவும், விதை விற்பனையாளர்களை கண்காணிக்கவும், விதை சட்டத்தை அமல்படுத்தவும், தமிழக அரசின் விதை சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறையின் விதை ஆய்வுப்பிரிவு செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டார பகுதிகளில் 138 விதை விற்பனை நிலையங்கள் உள்ளது. அதில் 50-க்கும் மேற்பட்ட நெல் விதை உற்பத்தி நிலையங்கள் உள்ளது. அரசுத்துறைகளான வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் அரசு சார்புத்துறைகளான வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் கூட்டுறவு விற்பனை மையங்கள், மற்றும் விதை விற்பனை உரிமம் பெற்று விதை விற்பனை செய்யும் தனியார் விற்பனை மையங்கள் ஆகியவற்றின் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம் வட்டாரத்தில் தற்போது நெல், மக்காசோளம், பருத்தி மற்றும் பயறு வகைகள் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விதை குவியலுக்கும், குவியல் வாரியாக விதை இருப்பு பதிவேட்டில் இருப்பு வைத்து, முளைப்புத்திறன் பரிசோதனை செய்த முடிவு அறிக்கை மற்றும் பதிவுச்சான்றிதழ் கண்டிப்பாக ஒவ்வொரு விதை விற்பனையாளரும் கடையில் வைத்திருக்கவேண்டும். மேலும் விதை விற்பனையாளர் கொள்முதல் செய்த விதைகளை பாதுகாப்பாகவும், முறையாகவும் விதை விற்பனை உரிமம் பெற்ற இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

    மேலும் விதை இருப்பு பதிவேடு, விதை இருப்பு மற்றும் விலை விவரப்பலகை தினந்தோறும் பதிவு செய்ய வேண்டும். கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல் மற்றும் பிற ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

    விதைகள் விற்பனை செய்யும் போது விற்பனை பட்டியல் கட்டாயம் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும், அதில் பயிர், ரகம், விதைக்குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட வேண்டும். விற்பனை பட்டியலில் விவசாயிகளின் கையொப்பம் பெறப்பட வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேற்கண்ட விதிமுறைகளை மீறுவோர் மீது விதைச்சட்டம் 1966 மற்றும் விதை விதிகள் 1968 மற்றும் விதை (கட்டுப்பாடு) ஆணை 1983 ஆகிய சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மழையையும் கடும் வெயிலையும் தாக்குப்பிடித்து வளர்ந்து குறுவை பயிர் 80 சதவீதம் அறுவடை பணிகள் முடிவடைந்து.
    • பகலில் ஓரளவு வெயில் அடித்து காய வைக்கப்பட்ட நெல் குவியல்கள் இரவு நேரங்களில் கொட்டி தீர்க்கும் மழை.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 1.81 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவ்வப்போது பெய்த மழையையும் கடும் வெயிலையும் தாக்குப்பிடித்து வளர்ந்து வந்த குறுவை பயிர் 80 சதவீதம் அளவிற்கு அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளதாக வேளாண் துறை தெரிவிக்கிறது.

    மனையில் நனைந்தன

    குறுவைப் பருவத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து கொள்முதல் பணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் தொடங்கியது.

    முன்கூட்டியே கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டதால் விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல்லை எளிதாகவும், விரைவாகவும் நேரடி கொள் முதல் நிலையங்களில் விற்பனை செய்து விடலாம் என்று எண்ணினார்கள்.

    இதற்கு மாறாக குறுவை நெருப்பயிரில் ஈரப்பதம் அளவு 17.5 சதவீதம் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்ததால், விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கிடைக்கும் இடத்தில் எல்லாம் காய வைத்து கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

    காய வைக்க போராட்டம்

    ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை பயன்படுத்தி முன்கூட்டியே நடவு செய்த விவசாயிகள் ஓரளவு பாதிக்காத அளவிற்கு தங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து விட்டனர்.

    வாய்க்கால்களில்தண்ணீர் வந்து அந்த தண்ணீரைக் கொண்டு நாற்றுப் பாவி அதன் பின்னர் நடவு செய்த விவசாயிகள் தற்போது தீவிரமாக அறுவடை செய்து கொண்டுள்ளனர்.

    அறுவடை செய்யும் சமயங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கீழ் அடுக்கு சுழற்சியினால் தினந்தோறும் பெய்யும் மழையால் விளைந்த நெல்லை காய வைக்க முடியாமலும், விற்பனை செய்ய முடியாமலும் சுழன்று கொண்டுள்ளனர்.

    பண்டிகை கேள்விக்குறி

    பூதலூர் தாலுகா பகுதியில் அறுவடை செய்யப்பட்டுள்ள குறுவை நெற்மணிகள் பூதலூர் -செங்கிப்பட்டி சாலையிலும் பூதலூர்- தஞ்சை சாலையிலும் கொட்டி வைக்கப்பட்டு தினந்தோறும் காய வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பகலில் ஓரளவு வெயில் அடித்து காய வைக்கப்பட்ட நெல் குவியல்கள் இரவு நேரங்களில் கொட்டி தீர்க்கும் மழையால் ஈரப்பதம் அதிகமாகி மீண்டும் காய வைக்கவேண்டிய சூழ்நிலையால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    குறுவை அறுவடை செய்து அந்த நெல்லை விற்றுதீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடலாம் என்று எண்ணியிருந்த விவசாயிகள் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 48 மணி நேரமே இருக்கும் நிலையில் 25 கிலோ மீட்டர் தொலைவுசாலை முழுவதும் நெல்லை காய வைக்கும் நிலை தொடர்ந்து கொண்டுள்ளது.

    ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் தினந்தோறும் 800 முதல் 1000 சிப்பங்கள் வரை கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    கோரிக்கை

    இரவு நேரங்களில் கொள்முதல் செய்வது நிறுத்தப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    காலச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தொழிலாளர்கள் வேலை செய்ய விரும்பும் இடங்களில் சுழற்சி முறையில் எடையாளர்களையும் சுமை தூக்குப வர்களையும்பணியில் அமர்த்தி இருக்கின்ற 48 மணி நேரத்தில் அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்து, விவசாயிகளை தீபாவளி பண்டிகையை கொண்டாட ஆவன செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    • சோழவந்தான் பகுதியில் 20 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அதிக அளவு வெயில் இல்லாத நிலையில் இரவு பனி பொழிவதாலும் கொட்டி வைத்த நெல் அனைத்தும் ஈரமாகி வருகிறது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கிராமத்தில் தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையம் 10 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் தற்போது சுமார் 60 மூடை நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.முறையாக காய்ந்த நெல்லை 17 சதவீத காய்ச்சல் இல்லை என்று கூறி அதிகாரிகள் கொள்முதல் செய்ய மறுப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனால் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விளைந்த நெல்லை அறுவடை செய்து கொட்டி வைத்துள்ளனர்.

    தற்போது அதிக அளவு வெயில் இல்லாத நிலையில் இரவு பனி பொழிவதாலும் கொட்டி வைத்த நெல் அனைத்தும் ஈரமாகி வருகிறது. இதனால் நெல் மூடைகளை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள ஊருக்குச் சென்று களத்தில் காயப்போட்டு வந்து கொட்டினாலும் அதிகாரிகள் கொள்முதல் செய்வதில்லை. 17 சதவீதம் காய்ந்த நெல் நேற்று எடுக்காததால் இரவு பணியில் நனைந்து தற்போது 18 சதவீதமாக உள்ளது.

    இதனால் சிரமத்தில் உள்ள விவசாயிகள் தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு 20 சதவீத ஈரப்பதத்துடன் இருக்கும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
    • இலவச தொலைபேசி எண்ணான 18005993540-ஐ தொடர்பு கொள்ளலாம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழ கத்தினால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவ லாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி ஏற்கனவே நடைமுறையில் இருந்த அதாவது அடுத்த மாதம் அக்டோபர் 1-ந் தேதி திறக்கப்பட இருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முன்கூட் டியே செப்டம்பர் 1-ந்தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத் தில் நடப்பாண்டு 2022-2023-ல் கன்னிப்பூ கொள்முதல் பருவத்தில் தற்சமயம் 7 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக் கப்பட்டுள்ளன. இதனை விவசா யிகள் பயன்படுத்தி நெல் விற்பனை செய்ய லாம். நெல் கொள்முதல் நிலை யங்கள் செயல்பாடுகள் தொடர்பாக ஏதேனும் குறைபாடோ, புகாரோ இருப்பின் நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக இலவச தொலைபேசி எண்ணான 18005993540-ஐ தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், கட்டுப்பாடு அறை எண்கள் 04652 261214, மாவட்ட கலெக்டர் அலுவலக வாட்ஸ் அப் எண் 9154154598 ஆகியவற்றில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிக்குள் புகார் தெரிவிக்கலாம். விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு செய்யப்படும். அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு நல்கிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சிறு தொழில் மையம், கோணம், நாகர்கோவில்-4 அலுவலக தொலைபேசி எண்.04652-251214-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×