search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்முதல்"

    • குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய தங்களது பெயர்களை பதிவு செய்திடலாம்.
    • கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    விளைபொருளின் விலை குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழ் செல்லும் போது, ஆதார விலை திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதார விலையில் விளைபொருட்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் மூலம் நேரடி கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைத்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தற்போது தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில், விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

    விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து விவசாயிகளை பாதுகாத்து, விவசாயி களின் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்திடும் பொருட்டு விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொப்பரை எளிதில் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் 75 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரை ஆதார விலைத் திட்டத்தில் கொள்முதல் செய்திட அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசினால் 2023-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான கொப்பரைக்கு கிலோ ரூ.108.60 என்ற விலையில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை அரவைக் விற்பனை கூடத்தில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கொள்முதல் செய்யப்படும்.

    ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் விற்பனைக்கூட பொறுப்பாளரை அணுகி தங்களது பெயர்களை பதிவு செய்திடலாம். பெயர்களை பதிவு செய்யும் போது, நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான நாபெட் நிறுவனம் பரிந்து ரைக்கும் குறைந்தபட்ச தரத்தில் விளைபொருள் இருத்தல் அவசியமாகும். விவசாயிகள் தரத்தினை உறுதி செய்து குறைந்தபட்ச ஆதார விலை பெற்றிடலாம்.

    தமிழகத்தில் கொப்பரை கொள்முதலுக்கு தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் மாநில முகமையாக செயல்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் தேங்காய் கொப்பரைக்கான தொகையினை விரைவில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்திட அனைத்து நடவடிக்கை களையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.

    சேமிப்பு கிடங்குகளில் கொப்பரை குவியல்கள் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குள் அதற்குரிய தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 1-ந் தேதி முதல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
    • 15 ஆயிரத்து 500 டன் அரவை கொப்பரை மற்றும் 400 டன் பந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 15,900 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 1-ந் தேதி முதல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் விளைவித்த அரவை கொப்பரை, பந்து கொப்பரை ஆகியவற்றை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 500 டன் அரவை கொப்பரை மற்றும் 400 டன் பந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் காங்கயம், பொங்கலூர், பெதப்பம்பட்டி, அலங்கியம், மூலனூர், உடுமலை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் முதன்மை கொள்முதல் நிலையங்களாக செயல்பட உள்ளன. இந்த மையங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோ ஒன்றுக்கு அரவை கொப்பரை ரூ.108.60 மற்றும் பந்து கொப்பரை ரூ.117.50 வீதம் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் அரவை கொப்பரை மற்றும் பந்து கொப்பரைக்கான கிரையத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் எண், வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் அந்தந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குனர், வேளாண்மை விற்பனைக்குழு அலுவலகத்தை 0421 2213304 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 10 கிலோ உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பங்கு பெற்று கொள்முதல் செய்தது.
    • வாகன செலவு, ஏற்று இறக்கு கூலிகள், நேர விரயம் உள்ளிட்டவை தவிர்க்கப்படுவதாக கூறி விவசாயிகள் மகிழ்ச்சி.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் வெல்லம் கொள்முதல் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் தேசிய வேளாண்மை மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டது.

    இதன்படி பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தாட்சாயணி தலைமையிலும், வேளாண்மை உதவி அலுவலர் பாலமுருகன் முன்னிலையிலும் மாகாளிபுரம் கிராமத்தில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே நேரடியாக சென்று 7.5 குவின்டால் வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.28,750 ஆகும்.

    இதில் 10 கிலோ உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பங்கு பெற்று கொள்முதல் செய்தது.

    விவசாயிகளின் இடத்துக்கே சென்று வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டு பணம் பரிவர்த்தனை செய்யப்படுவதால் வாகனச் செலவு ஏற்று இறக்கு கூலிகள் நேர விரயம் உள்ளிட்டவை தவிர்க்கப்படுவதாக கூறி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    • குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • இதற்கான கொள்முதல் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தற்போது, தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் விலை ஆதரவுத் திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் வகையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் தென்னை விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய சிவகங்கை மாவட்டத்திற்கு அனுமதி மற்றும் இலக்கீட்டை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.

    இதன்படி சிவகங்கை விற்பனைக் குழு விற்குட்பட்ட சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் 400 மெட்ரிக் டன், சிவகங்கை ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் 100 மெட்ரிக் டன், திருப்புவனம் ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் 50 மெட்ரிக் டன் என மொத்தம் 550 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    இதற்கான கொள்முதல் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளால் வழங்கப்பட வேண்டிய அரவைக் கொப்பரையின் தரம் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    வைக்கோல், தூசு, நார் போன்ற அயல் பொருட்கள் அதிக பட்சம் 1 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும். பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை, சுருக்கம் கொண்ட கொப்பரை மற்றும் சில்லு கொப்பரை ஆகியவை அதிகபட்சம் 10 சதவீதம் மட்டுமே இருக்கலாம்.

    விவசாயிகள் தங்களது சிட்டா, பயிர்சாகுபடி அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக விபர நகல்களுடன் அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து கொப்பரையை ஒப்படைக்கலாம்.

    அலுவலர்களால் தர ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட கொப்பரை எடையிடப்பட்டு அதற்கான விலை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த கொள்முதல் பணி 1.4.2023 முதல் 30.9.2023 வரை மேற்கொள்ளப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்ட தென்னை விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களிடம் உள்ள கொப்பரையை சிங்கம்புணரி, திருப்புவனம் மற்றும் சிவகங்கை ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து விற்று பயனடையலாம்.

    இது குறித்த தகவல்களை பெறுவதற்கு சிங்கம்புணரி- 97862 69851, திருப்புவனம்- 99447 66326 , சிவகங்கை- 70107 92414 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குபதிவு செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கிறது.

    திருவாரூர்:

    தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது அவர் கூறியதாவது,

    சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்து, விமான நிலையத்திலிருந்து அங்குள்ள பேருந்தில் எளிமையான முறையில் பயணம் செய்த எடப்பாடி பழனிச்சாமியை, ஒருவர் தேவையற்ற பிரச்சனைகளை எழுப்புகிறார்.

    கோஷம் போடுகிறார்.

    இதனால், எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அரசு வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது.

    உடனடியாக இந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

    அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கிறது.

    நெல் மூட்டைகள் மட்டுமல்ல அரசின் அனைத்து திட்டமும் தேங்கி கிடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் சிவராஜாமாணிக்கம், மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பிற அணி நிர்வாகிகள் பொன்.வாசுகிராம், பாலாஜி, கலியபெருமாள், ஒன்றியச் செயலாளர்கள் பாப்பா சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வம், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் தனியார் மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
    • கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் தனியார் மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் கரந்தை நெல் கொள்முதல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நுகர் பொருள் வாணிபக் கழக

    ஏ .ஐ. டி. யூ. சி. தொழி–லாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் கோவிந்த–ராஜன் தலைமை வகித்தார்.

    மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் தில்லைவனம், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், சங்க நிர்வாகிகள் தியாகராஜன், செல்வம், ஞானசேகரன், மேஸ்திரி ஆறுமுகம், சந்தான கிருஷ்ணன் மற்றும் சுமைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தென்னை சாகுபடி விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் கொள்முதல் செய்யலாம்.
    • மேலூர் பகுதி விவசாயிகள் 96290 79588 என்ற எண்ணிலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் மேலூர் பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் அரவைக் கொப்பரை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்து 860 என்ற குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் விலை ஆதார திட்டத்தின் கீழ் வருகிற ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்ய அரசு உத்தர விட்டுள்ளது.

    இந்த பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது நிலத்தில் சாகுப்பு செய்தமைக்கான அசல் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் நக லுடன் வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் இப்பொதே பதிவு செய்யலாம்.

    பதிவு செய்த விவசாயி களிடம் இருந்து மட்டுமே அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ள அரவைக் கொப்ப ரையில் அயல் பொருட்கள் 1 சதவீதத்திற்கு குறைவா கவும், பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதத்திற்கு குறைவாகவும் சுருக்கம் கொண்ட கொப்பரைகள் மற்றும் சில்லுகள் 10 சதவீ தத்திற்கு குறைவாகவும், ஈரப்பதமானது 6 சதவீ தத்திற்கு குறைவா கவும்இருக்க வேண்டும்.

    ஆய்வகத் தரப்பரி சோதனை செய்து மேற்கண்ட நியாயமான சராசரி தரத்தின்படி உள்ள அரவைக் கொப்பரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யப்பட்ட அரவைக் கொப்பரைக்கான தொகை விவசாயியின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் கொள்முதல் பணியை செய்ய அரசு உத்தரவு பெறப்பட்டுள்ளதால், வாடிப்பட்டி மற்றும் மேலூர் பகுதி விவசாயிகள் விரைவாக செயல்பட்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட பொருள் தொடர்பாக வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் 87789 81501 என்ற எண்ணிலும், மேலூர் பகுதி விவசாயிகள் 96290 79588 என்ற எண்ணிலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், விவசாயிகள் தங்களது வட்டார விற்ப னைத்துறை உதவி வேளாண் அலுவலர்களிடமும், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவ லத்திலும் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்படுகின்றன.
    • பருவம் தவறி பெய்யும் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் நிலை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லானது, கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்படுகின்றன.

    இதனால், மழைக் காலங்களிலும் பருவம் தவறி பெய்யும் மழையிலும் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் நிலையும்,வெயில் காலங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைப்பதால் ஏற்படும் எடை குறைவால் நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கும், அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது.

    எனவே, கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளில் சேமிக்க தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்புக் கிடங்கை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட குழுவின் சாா்பில் மாவட்ட துணைச் செயலாளா் செந்தில்குமாா் வலியுறுத்தி உள்ளார்.

    • அரசு வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் திறந்து வைத்தார்.
    • கூட்டுறவு சங்க பணியாளர்களும், விவசா–யிகளும் கலந்து கொண்டனர்.

    ஆத்தூர்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கீரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் வே.செழியன் திறந்து வைத்தார்.

    கீரிப்பட்டி பேரூராட்சி தலைவர் தேன்மொழி காங்கமுத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீதரன், ஆதி மூலம், குமார், சுரேஷ், கனகராஜ், கணேசன், தமிழ்செல்வன், முருகேசன், ஜெயராமன் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் ராம கோவிந்தன், சிக்கந்தர், ராமு ,சிவ சக்திவேல்,தர்மர், விமல சேகர், முத்துசாமி, சதிஷ்குமார், செந்தில், பழனிவேல் முருகேசன், தண்டபாணி, மகேஸ்வரி, சேட்டு, கருணாநிதி உள்ளிட்டோரும், கூட்டுறவு சங்க பணியாளர்களும், விவசா–யிகளும் கலந்து கொண்டனர்.

    • புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தில் கட்டுமான பணிகள் ஆய்வு.
    • கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் எடை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கும்பகோணம் ஒன்றியம் திருவலச்சுழி ஊராட்சியில் தஞ்சாவூர் -கும்பகோணம் இடையே தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் தார் ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறித்தும், பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பாதுகாப்பாக வை க்கப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலகொற்கை ஊராட்சி யில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தில் கட்டுமான பணிகள் குறித்தும், பொது விநியோகத் திட்ட அங்காடியில் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது.

    கொற்கை ஊராட்சி புதுச்சேரியில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் எடை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின்போது கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமணி, ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அறுவடை நேரத்தில் பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டது.
    • கொள்முதல் நேரத்தில் பெய்யும் மழையால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி நாகை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே அறுவடை நேரத்தில் பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டது.

    தற்போது கொள்முதல் நேரத்தில் பெய்யும் மழையால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    மழையால் வலிவலம், திருக்குவளை, வாழக்கரை, ஈசனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் மூட்டைகளை தார்ப்பாய் கொண்டு மூடும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அது தவிர ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தைத்து அவற்றை பாதுகாப்பாக அடுக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் 172 நேரடி அரசு கொள்முதல் நிலையங்களில் சுமார் 75-க்கும் மேற்பட்ட திறந்தவெளி நேரடி கொள்முதல் நிலையங்களாக செயல்படுவதாகவும் அதை நிரந்தர கட்டிடமாக கட்டி தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 லட்சத்து 22 ஆயிரத்து 515 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
    • விவசாயிகளை காக்க வைக்காமல் உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை 1 லட்சத்து 88 ஆயிரத்து 629 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு கொள்முதல் பருவத்தில் 41 ஆயிரத்து 390 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.404 கோடியாகும்.

    தற்போது 522 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

    நடப்பு கே.எம்.எஸ் 2022-23 கொள்முதலானது கடந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் தொடங்கப்பட்டு குறுவை பருவத்தில் 391 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 2 லட்சத்து 22 ஆயிரத்து 515 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.475 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 46 ஆயிரத்து 596 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

    மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்கள் விவசாயிகளிடம் போது மான ஆவணங்களை மட்டும் பெற்றுக்கொண்டு நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்களிடம் கையூட்டு பெறாமலும் விவசாயிகளை காக்க வைக்காமலும் உடனுக்குடன் நெல்லினை கொள்முதல் செய்ய வேண்டும்.

    வியாபாரிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது எனவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியும் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் சுமைதூக்கும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.

    இது தொடர்பாக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் நிர்வாக இயக்குநர் பிரபாகரன் தஞ்சாவூர் மண்டலத்தில் மருங்குளம், தென்னமநாடு மற்றும் அன்னப்பன்பேட்டை ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடியாக ஆய்வு செய்தார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×