search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229383"

    • மணிகண்டன் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூர் வீரமாத்தி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தனலட்சுமி (60). இவரது மகன் மணிகண்டன் (34) கூலி தொழிலாளி. இந்த நிலையில் இவர் வேலைக்கு சரியாக செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார்.

    இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் இல்லை என்று மறுத்து விட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அவரது தாயை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினார். இதனை தடுக்க வந்த அவரது சகோதரியையும் அவர் தாக்கினார். பின்னர் இதுகுறித்து தனலட்சுமி குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நீண்ட நேரம் காத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
    • பாலத்தின் கீழ் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்படியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    குனியமுத்தூர்

    கோவை பாலக்காடு ரோட்டில் மதுக்கரை அடுத்து மரப்பாலம் பகுதி உள்ளது. இங்கு ஒரு ெரயில்வே மேம்பாலம் உள்ளது. பாலத்தின் மேல் ெரயில் செல்லும் செல்லும்படியாகவும், பாலத்தின் கீழ் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்படியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    கீழே பஸ், லாரிகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் பகுதியானது மிகவும் குறுகலாக காணப்படுகிறது. பாலத்தின் உட்பகுதிக்குள் ஒரு பஸ் அல்லது லாரி வந்தால், எதிரே வரும் வாகனங்கள் காத்திருந்து நின்று, அவை சென்ற பிறகுதான் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

    கேரளா வந்து, செல்லக்கூடிய அனைத்து லாரிகள் மற்றும் பஸ்கள் அனைத்தும் இந்த வழியாகத்தான் சென்றாக வேண்டும். மேலும் காலை மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி பஸ்கள் ஏராளமாக இந்த வழியாக செல்லக்கூடிய நிலை உள்ளது. எனவே வாகனங்கள் அனைத்தும் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும் காட்சியை அடிக்கடி காண முடிகிறது.

    தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப சாமி வாகனங்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது இப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த எரிச்சலைத் தரும் நிலை உள்ளது.

    எனவே ெரயில்வே நிர்வாகம் ெரயில்வே மேம்பாலத்தின் கீழ் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையை சற்று அகலப்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் 2 நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் அளவுக்கு அகலப்படுத்தினால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  

    • அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தி கண்டறிய வேண்டும்.
    • நள்ளிரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூர், காஸ்மோ காலனியை சேர்ந்த கல்லூரி மாணவர்களான பிரேம்குமார்(19), தரணிதரன்(20) ஆகியோர் வீட்டில் செல்போன், லேப்டாப், கடிகாரம் ஆகியவையும், குனியமுத்தூர் கே. ஜி .கே ரோட்டை சேர்ந்த துரைக்கண்ணு (40) என்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 2 செல்போன் ரொக்கப்பணம் ரூபாய்13, 500 ஆகியவையும் திருட்டு போனது. தொடர் திருட்டால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    கல்லூரி மாணவர்கள் இங்கு அறை எடுத்து தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களை சந்திக்கும் நோக்கத்தில் சாதாரணமாக ஒவ்வொரு மாணவரின் வீட்டிற்கும் பலரும் வந்து செல்வது வழக்கம்.

    இதனால் பெரும்பாலும் அவர்கள் தங்கி இருக்கும் அறையின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் மர்மநபர்கள் எளிதாக திருடி விட்டு செல்கின்றனர். இதன் காரணமாக வெளியூரில் இருக்கும் மாணவர்களின் பெற்றோர் தங்களது மகன்களுக்கு போன் செய்து, பொருட்கள் பத்திரமாக உள்ளதா? என கேட்கின்றனர்.

    எத்தனையோ மாண வர்களின் செல்போன்கள் மற்றும் இதர பொருள்கள் காணாமல் போயுள்ளது. ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. தொடர் திருட்டு சம்பவங்களால் வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்வதற்கு மிகவும் பயமாக உள்ளது.

    இவ்வாறு திருடும் மர்ம நபர்களை போலீசார் கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும் நள்ளிரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தி மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்டறிய வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே திருட்டுக்களை தடுக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • போக்குவரத்து நிறைந்த இந்த இடத்தில் டிராபிக் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
    • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த இடத்தில் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அடிக்கடி அந்த சிக்னல் பழுதாகி வருகிறது.

    குனியமுத்தூர்:

    பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூரில் ஜங்ஷன் உள்ளது. இங்கு 4 புறமும் வாகனங்கள் அடிக்கடி சென்று கொண்டிருக்கும். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

    கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் வாகனங்களும் மற்றும் பாலக்காடு, மதுக்கரை, கோவைபுதூர் போன்ற பகுதியில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களும் இப்பகுதியை கடந்து தான் வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இப்படி போக்குவரத்து நிறைந்த இந்த இடத்தில் டிராபிக் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் அடிக்கடி சிறு, சிறு விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் சிக்னல் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த இடத்தில் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அடிக்கடி அந்த சிக்னல் பழுதாகி வருகிறது. இதனால் மீண்டும் வாகன தடுமாற்றமும், வாகன போக்குவரத்து தடை ஏற்படும் நிலை உள்ளது.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சாலையின் இருபுறங்களிலும் செல்லும் குறுக்கு சாலையில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளது. எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் இரு சக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் அதிகமாக இப்பகுதியை கடந்து சென்று கொண்டிருக்கும்.

    ஆனால் சிக்னல் பழுது ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் தாறுமாறாக ஓடுகிறது. இதனால் சிறு, சிறு விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே பழுது இல்லாத சிக்னல் இப்பகுதியில் தேவை என்று வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • நொய்யலாறு கிட்டத்தட்ட 7ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் புதர் மண்டி காட்சியளிக்கிறது.
    • நொய்யல் ஆற்றின் ஒரு பகுதி நீர் நிரம்பி வரும் தருவாயில் வெள்ளலூர் குளத்தில் கலக்கிறது.

    குனியமுத்தூர்

    குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் அருகே மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வரும் நொய்யலாறு கிட்டத்தட்ட 7ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் புதர் மண்டி காட்சியளிக்கிறது. நொய்யல் ஆறு முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்த நிலையில் உள்ளது.

    மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கிளம்பும் இந்த நொய்யல் ஆறு ஏராளமான தோப்புகள், தோட்டங்கள் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதன் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள தோட்டங்களில் உள்ள கிணறுகளுக்கு நீரூற்று அதிகம் ஏற்படும் நிலை உள்ளது.

    இந்நிலையில் புதர் மண்டி கிடக்கும் காரணத்தால் நீர் போக்குவரத்து தடைபடுகிறது. நொய்யல் ஆற்றின் ஒரு பகுதி நீர் நிரம்பி வரும் தருவாயில் வெள்ளலூர் குளத்தில் கலக்கிறது. மறுபகுதி காவேரி சென்றடைகிறது. ஆகாய த்தாமரைகளையும், முட்புதர்க ளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று குளம் சீரமைப்பு குழுவினரும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

    ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு குளங்களை சீர் அமைப்போம் என்னும் பணியில் ,ஏராளமான குளங்களுக்கு பராமரிப்பு பணி செய்தனர். ஆனால் நொய்யல் ஆற்றை அப்படியே விட்டு விட்டனர். எனவே இதனை தூர்வாரி ஆகாயத்தாமரை களையும், புதர்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    • நெடுஞ்சாலை துறையில் புகார் தெரிவித்துள்ளனர்.

    குனியமுத்தூர்,

    கோவை பாலக்காடு சாலை குனியமுத்தூர் அடுத்த பி .கே .புதூர் அருகே மெயின் ரோட்டிலிருந்து குறுக்குச்சாலை யாக குளத்துப்பாளையம் பிரதான சாலை உள்ளது .அந்த வழியாக குளத்துப்பாளையம் மற்றும் கோவைபுதூர் ஆகிய பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வது வழக்கம்.

    இந்நிலையில் பாலக்காடு மெயின் ரோட்டில் இருந்து குளத்துப்பாளையம் செல்லும் சாலை சந்திப்பில் மின் கம்பம் ஒன்றும் மரம் ஒன்றும் உள்ளது. சந்திப்பில் அமைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை திருப்புவதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    மெயின் ரோட்டிலிருந்து செல்லும் வாகனமும், குறுக்குச் சாலையில் இருந்து மெயின் ரோட்டுக்கு வரும் வாகனமும்,ஒன்றை ஒன்று உரசிக் கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. மின் கம்பம் மற்றும் மரத்தை அகற்றினால் வாகனங்கள் சிரமம் இன்றி திரும்பக் கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்திலும், தெற்கு மண்டல அலுவலகத்திலும், நெடுஞ்சாலை துறையிலும் ஏற்கனவே புகார் அனுப்பியுள்ளனர்.

    நெடுஞ்சாலைத் துறையினரும் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் இதுவரை அந்த மின்கம்பம் மற்றும் மரம் அகற்றப்படவில்லை எனவே பெரிய அளவில்சேதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் மரத்தையும், மின்கம்பத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    ×