search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • ஏழு வகையான கலவை சாதங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
    • கண்ணாடி வளையல், பட்டுசேலை, நெத்திசூடி அணிவித்து அழகு பார்த்து மகிழ்ந்தனர்

    கரூர்

    கரூர் வாங்கல் சாலையில் உள்ள தண்ணீர்பந்தல் பாளையத்தில் நவநீதகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் கோசலையில் உள்ள பசுவிற்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி கோவில் பசுவிற்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்து, பட்டு சேலையை கட்டிவிடப்பட்டனர். மேலும் நெத்திச்சூடி அணிவித்து, பசுவின் வாலில் பூக்களால் பின்னி அலங்கரிக்கப்பட்டன. இவ்விழாவில் இனிப்பான தின்பண்டங்களை உணவாக பசுவிற்கு பெண்கள் வழங்கினர். ஒரு பெண்ணிற்கு எந்தவகையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறதோ அதைபோல கோவில் பசுவிற்கும் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி பெண்கள் அழகு பார்த்தனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நவநீதகிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு ஏழு வகையான கலவை சாதங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • தொழிற் சங்க 4-ம் ஆண்டு தொடக்க விழா
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அரியலூர்:

    அரியலூரில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் தொழிற்சங்க 4-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர்,பொருளாளர், செயற்குழு உறுப்பினர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஆன்லைன் மூலம் சவாரிக்கு ஆட்டோ, டாக்ஸி முன்பதிவு செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும். இரு சக்கர வாகன வாடகை முறையை ரத்து ெ சய்ய வேண்டும். சொந்த வாகனத்தை வாடகைக்கு விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 3 நாட்கள் யாகசாலை நடைபெற்ற பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    அறந்தாங்கி, 

    ஆவுடையார்கோவில் தாலுகா பில்லுவலசை கிராமத்தில் முத்துமாரியம்மன் ேகாவிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்ததையொட்டி கும்பாகிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. விழா தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித ர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சார்யார்கள் புனித நீரினை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்தனர். அதனை தொடர்ந்து ராமானுஜம் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை கலந்து கொள்வதற்காக பில்லுவலசை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். கும்பாகிஷேகத்திற்கு பின்னர் அவர்கள் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

    வாராப்பூர்மா மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாராப்பூரில் பூரணபுஷ்கலா உடனுறை பெரிய அய்யனார், பாலையடி கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது.இந்த கோயிலில் மாசி மக திருவிழா கடந்த 3ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் மண்டகப்படி நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மனித ரத்தம் கலந்து சோறு பிசைந்து, பில்லி எறியும் வினோத திருவிழா நடைபெற்றது.பாரம்பரியமாகஉள்ள வழக்கப்படி ஒரு சிறுவன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த வேஷ்டி குகையால் மறைக்கப்பட்ட மறைவில் அமரவைக்கப்பட்டிருந்த நிலையில் பூசாரிகளில் ஒருவர் அந்த சிறுவனின் கழுத்தை அறுப்பதுபோல் செய்துவிட்டு, தனது தொடையை கீறி அதில் இருந்து வந்த ரத்தத்தை அங்கு தயாராக இருந்த சோற்றில் கலந்து பிசைந்து வைத்தார்.பின்னர் சுமார் 20-க்கும் மேற்பட்ட கோயில் பூசாரிகள் இந்த பில்லி சோற்றை எடுத்துக்கொண்டு காட்டு பகுதிக்கு ஓடிச்சென்று வானத்தைநோக்கி 4 திசைகளிலும் வீசினர். இந்த பில்லி எரியும் வினோத நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவினை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் வாராப்பூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அன்னதானமும், நீர் மோர் பந்தலும் அமைக்கப் பட்டிருந்தது. செம்பட்டி விடுதி போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்இன்று கிடாய் வெட்டு பூஜை களும் மற்றும் நாளை தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    • எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவேரி ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்ல கொண்டான் முனியப்ப சாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.
    • காவிரி ஆற்றங்கரையிலிருந்து தீர்த்த குடம் சுமந்த பக்தர்கள், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து யாக சாலையில் சேர்த்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவேரி ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்ல கொண்டான் முனியப்ப சாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.

    பூலாம்பட்டி - மேட்டூர் பிரதான சாலையை ஒட்டிய காவிரி ஆற்றங்கரையோரம், கல்ல கொண்டான் முனி யப்பன் மற்றும் எல்லை முனியப்பன் பரிவார தெய்வங்கள் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோ வில் பகுதியில் இருந்து, அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்காக தண்ணீர் பெற்று வருவதால் விவசாயி களின் காவல் தெய்வமாக அமைந்துள்ள கல்ல கொண்டான் முனியப்ப சாமி கோவில், சுற்று வட்டார பகுதி கிராம மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது.

    இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவுற்ற நிலையில், கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையிலிருந்து தீர்த்த குடம் சுமந்த பக்தர்கள், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து யாக சாலையில் சேர்த்தனர்.

    கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, கும்ப பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாக வேள்விகளை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற கோ பூஜையில் கன்றுடன் அழைத்து வரப்பட்ட பசு மாட்டின் முன், 7 சிறுமிகள் அலங்கரிக்கப்பட்டு அவர்களுக்கு பாத பூஜை செய்த பக்தர்கள் தெய்வமாக வழிபாடு செய்தனர்.

    இந்த விழாவில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாக குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா விற்கான ஏற்பாடுகளை கல்லகொண்டான் முனி யப்ப சாமி ஆலய நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

    • ஆடுகளின் ரத்தத்தை மருளாளி உறிஞ்சி குடித்தார்
    • திருச்சி புத்தூர் மந்தையில் குவிந்த பக்தர்கள்

    திருச்சி,

    உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் ஆறுகண் பாலம் (தற்போது தொட்டி பாலம்) அருகில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோவில். சோழ மன்னர்களின் குலதெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி மாநகர மக்களின் காவல் தெய்வமாகவும், கருணை மழை பொழியும் அம்மனாகவும் திகழ்ந்து வருகிறார்.பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குட்டி குடித்தல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதில் திருச்சி மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்துகொள்வார்கள். அதே போல் பல்வேறு மாநிலங்க ளில் பிழைப்புக்காக சென்றவர்களும் மறக்காமல் இந்த விழாவில் பங்கேற்பார்கள்.இந்தாண்டுக்கான குட்டிக்குடி திருவிழா கடந்த மாதம் 22-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 6-ந்தேதி இரவு மறு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதைத்தெடர்ந்து காளியாவட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அம்மனை கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க புத்தூர் மந்தைக்கு அழைத்து வந்தனர்.முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு தன்னக்காடு, வண்ணாரப்பேட்டை, அரசு மருத்துவமனை வழியாக புத்தூர் நால்ரோட்டை சென்றடைந்தது. பின்னர் புத்தூர் மந்தைக்கு நள்ளிரவு 2 மணிக்கு வந்தடைந்தார். அதன்பின் பின்னர் அதிகாலை 5 மணிக்கு அம்மன் சுத்த பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் ஓலைப்பிடாரி அலங்காரத்தில் எழுந்தருளிய தேர்பவனி நடைபெற்றது. தேர் உறையூரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. அப்போது பக்தர்கள் வீடுகள் தோறும் அர்ச்சனை தட்டுகளுடன் சாமி தரிசனம் செய்தனர்.அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி இன்று (9-ந்தேதி, வியாழக்கிழமை) புத்தூர் மந்தையில் தொடங்கி நடந்தது. மருளாளி சாமி ஆடியபடி மரியாதையுடன் புத்தூர் மந்தைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது பாரம்பரியமிக்க கொம்பு உள்ளிட்ட வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. 2 பக்தர்களின் தோள் மீது அமர்ந்தபடி மரு ளாளியை பக்தர்கள் ஊர் வலமாக தூக்கி கொண்டு வந்தனர். அதன் பின்னர் முதல் மரியாதையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்டுக்கிடா வழங்கப்பட்டது.

    அதனை கடித்து மருளாளி ரத்தத்தை உறிஞ்சி குடிக்க தொடங்கினார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கள் கொண்டு வந்த கருப்பு கிடாய் ஆட்டு குட்டிகளை அருள் வந்த ஆடிய மருளாளிக்கு தந்தனர். இவ்வாறு பொதுமக்கள் நேர்த்திக்கடனாக அளித்த ஆயிரக்கணக்கான ஆடுகளின் ரத்தங்களை மருளாளி உறிஞ்சி குடித்து, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.

    இதனை தொடர்ந்து நாளை (10-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா மற்றும் 11-ந்தேதி சாமி குடிபுகுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. குட்டி குடி திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருவிழாவின் காரணமாக அப்பகுதியில் ஏராளமான தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே பக்தர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து பானகம், நீர்மோர், சர்பத் உள்ளிட்டவற்றை பக்தர்களுக்கு வழங்கினர். மேலும் பல இடங்களில் அன்னதானமும் நடைபெற்றது.

    • கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
    • மகளிர் போலீசார் புத்தாடை உடுத்தி கலந்து கொண்டனர்

    ஆலங்குடி, 

    ஆலங்குடி காவல் நிலையத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொள்ள ஆலங்குடி மற்றும் செம்பட்டிவிடுதி காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீசார் அனைவரும் வந்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பெண் போலீசார் அனைவரும் புத்தாடை அணிந்து வந்திருந்தனர். மகளிர் போலீசார் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டினர். சப் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, கலைச்செல்வன், லதா, நதியா, மற்றும் மாவட்ட எஸ்பி. தனிப்பிரிவு வெங்கடேஷ், மற்றும் மணிரெத்தினம் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கேக், இனிப்பு வழங்கப்பட்டது.  

    • ஆலங்குடி அருகே குளமங்கலம் அய்யனார் கோவில் நடைபெற்றது
    • ஜொலி, ஜொலிக்கும் வர்ண விளக்குகளில் வலம் வந்த தெப்பத்தை கண்டு பக்தர்கள் பரவசம்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசி மகத் திருவிழா தொடங்கியது.குளமங்கலம் பெருங்காயைடி மீண்ட அய்யனார் கோவிலில் மாசிமக நாளில் நடைபெறும் திருவிழாவில்கோவில் முன்பு உள்ள 33 அடி உயரமுள்ள குதிரை சிலைக்கு அதன் உயரத்திலேயே பொதுமக்கள் பூ மற்றும் காகித மாலைகளை அணிவித்து வழிபடுவது வழக்கம்.நடப்பாண்டு விழாவைெயாட்டி கிராம மக்களின் சார்பில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து குதிரை சிலைக்காக தயாரிக்கப்பட்ட நீளமான வேட்டி, துண்டு, பச்சை நிற வஸ்திரம் ஆகியற்றை கயிறு மூலம் கட்டி குதிரை சிலைக்கு அணிவித்தனர்.தொடர்ந்து சிலைக்கு மாலை அணிவிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கார், வேன், சுமை ஆட்டோ, லாரி, டிராக்டர்களில் பூ மற்றும் காகித மாலைகளை எடுத்து வந்து, கோவிலின் இருபுறச்சாலையிலும் பல கி.மீ. தொலைவுக்கு காத்திருந்து குதிரை சிலைக்கு 2,500க்கும் மேற்பட்ட மாலைகள் அணிவித்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.இந்நிலையில் அருகே உள்ள பெரிய குளத்தில் தெப்பம் அமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுவாமிகள் அலங்காரத்துடன் அமர வைக்கப்பட்டு மேளதாளங்களுடன் தெப்பம் இழுக்கப்பட்டது. பின்னர் உற்சவ ரத்தத்திலிருந்து ஆலயத்திற்கு கொண்டு வந்து வைத்தனர்.இதனை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

    • ஜெயங்எகொண்டாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், எம்.எல்.ஏ. கண்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது
    • பெண்கள் அனைவரும் கேக் வெட்டி மகிழ்ந்தனர்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்சர்வதேச மகளிர் தின விழா எம்எல்ஏ கண்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் பெண்களுடன் இணைந்து எம்எல்ஏ கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தளித்தார். ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் விஜயசங்கர், மண்டல அலுவலர் தமிழ்மணி, ஊரக வளர்ச்சி உதவி செயற்ப்பொறியாளர் வஹிதாபானு, ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர் பஞ்சாபிகேசன், ஒன்றியக்குழு தலைவர் ரவிசங்கர், துணைத்தலைவர் லதா கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகானந்தம் (வட்டார ஊராட்சி), முருகன் (கிராம ஊராட்சி) மற்றும் அனைத்து ஒன்றிய அரசு அலுவலர்கள் இந்த பெண்கள் தின விழாவில் கலந்து கொண்டனர்.

    • மாசி மக திருவிழாவையொட்டி நடைபெற்றது
    • மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமி உலா நடைபெற்றது.

    புதுக்கோட்டை,

    மாசி மகத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவிலில் சாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவில் தெப்ப உற்சவம் பல்லவன் குளத்தில் நடைபெற்றது. இதில் சாந்தநாத சாமி, வேதநாயகி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமி உலா நடைபெற்றது. சாமி தரிசனத்திற்காக பல்லவன் குளக்கரையில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். தெப்பம் வலம் வரும்போது பக்தர்கள் சிவ, சிவா... என பக்தி கோஷமிட்டனர். தெப்பம் கரையை வந்தடைந்ததும் சாமி புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சாந்தநாத சாமி, வேதநாயகி அம்பாள் எழுந்தருளினர். கீழ ராஜ வீதி உள்பட நான்கு வீதிகளிலும் சாமி வீதி உலா நடைபெற்றது.இதேபோல் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில்,தி ருவேங்கைவாசல் சிவன் கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நேர்த்திகடன்
    • இன்று தெப்பத் திருவிழா நடைபெறுகிறது

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது.குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவிலில் மாசிமக நாளில் நடைபெறும் திருவிழாவில், கோவில் முன்பு உள்ள ஆசிய அளவில் சிறப்பிடம் பெற்ற 33 அடி உயர குதிரை சிலைக்கு அதன் உரத்திலேயே பக்தர்கள் பூ மற்றும் காகித மாலைகள் அணிவித்து வழிபடுவது வழக்கம்.நடப்பாண்டு திருவிழாவையொட்டி கிராம மக்களின் சார்பில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, குதிரை சிலைக்காக தயாரிக்கப்பட்ட நீளமான வேட்டி, துண்டு, பச்சை நிற வஸ்திரம் ஆகியவற்றை கயிறு மூலம் கட்டி குதிரை சிலைக்கு அணிவித்தனர்.தொடர்ந்து சிலைக்கு மாலை அணிவிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கார், வேன், சுமை ஆட்டோ, லாரி, டிராக்டர்களில் பூ மற்றும் காகித மலைகளை எடுத்து வந்து, கோவிலின் இருபுறச் ச ாலையிலும் பல கி.மீ. தொலைவிற்கு காத்திருந்து குதிரைக்கு மாலை அணிவித்து வழி பாடு மேற்கொண்டனர். கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. கோவிலை சுறி 50க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு குதிரைக்கு சுமார் 2,500க்கு மேல் மாலை பக்தர்களால் அணிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.இன்று மாலை தெப்ப திருவிழா நடைபெற உள்ளதை தொடர்ந்து பக்தர்கள் குதிரைக்கு மாலை அணிவித்து வருகின்றனர்.

    • பெண்கள் அதிக அளவு கலந்து கொண்டு வடம் பிடித்தனர்
    • இன்று தீர்த்த வாரி நடைபெறுகிறது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. உலக புராதன சின்னமாக விளங்கும் இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி பிரம்மோத்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்காக விழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினசரி சாமிக்கு மகா அபிஷேக ஆராதனையும், யாகசாலை பூஜைகள், சாமி வீதிஉலா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை யாகசாலை பூஜைகள் முடிந்து தேர் வீதி உலா நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சந்திரசேகர சுவாமி, சந்திரமவுலி தாயார், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். வீதி உலாவின்போது ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தேரை வடம் பிடத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர்வாக அலுவலர் செந்தமிழ் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தேர் புறப்பட்டு ராஜவீதி, கணக்க விநாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் இதன் நிலையை அடைந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரியும், கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×