search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229611"

    • நடப்பாண்டில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 178 ஹெக்டேர் பரப்பளவுக்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    • 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 178 ஹெக்டேர் பரப்பளவுக்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி சிறு, குறு விவசாயிகள் 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.

    விருப்பமுள்ள விவசாயிகள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், நிலவரைபடம், சிறு குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் புதிதாக நுண்ணீர் பாசனம் அமைக்க உள்ள விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மெயின் பைப் லைன் அமைக்க அதிகபட்சமாக ரூ.10 ஆயிரமும், புதிதாக

    பயன்பாட்டிற்கு கொண்டு

    வரும் கிணறு அல்லது போர்வெல்லில் மின்

    மோட்டார் பொருத்திக்

    கொள்ள ரூ.15 ஆயிரம் மற்றும் பாசனத்திற்காக நீர் தேக்க தொட்டி 116 கன அடி அளவில் அமைத்திட மானியமாக ரூ.40 ஆயிரமும் வழங்கப்படும் என கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சின்னதுரை தெரிவித்து உள்ளார். 

    • ஒரு முறை விதைத்தால் மூன்று ஆண்டுகள் வரை மகசூல் கிடைக்கும்.
    • மடத்துக்குளம் வட்டாரம் சங்கராமநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் நாற்றுக்கள் தயார் நிலையில் உள்ளன.

    மடத்துக்குளம் : 

    கொய்யா சாகுபடிக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் குமார் கூறியதாவது :- கொய்யாவின் தேவை அதிகரித்து வருவதால் தோட்டக்கலை துறை சார்பில் கொய்யா சாகுபடிக்கு மானியம் அளிக்கப்பட்டு வருகிறது.

    கொய்யாவில் வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாதுக்களும், உயிர்ச்சத்துக்களும், விதையில் இரும்புச்சத்தும், இலைச்சாறு, வலி மருந்தாகவும், வயிற்றுப் புண் ஆறவும் பயன்படுகிறது. அனைத்து மண் வகையிலும் வளர்ந்தாலும் வடிகால் வசதி மிக முக்கியம்.அவரை வகைப்பயிர்கள் மற்றும் குறைந்த வயதுடைய காய்கறி பயிர்களை கொய்யா காய்ப்புக்கு வரும் வரை ஊடுபயிராக பயிர் செய்யலாம்.

    பூக்கள் பூக்கும் காலத்திலிருந்து ஐந்து மாதங்கள் கழித்து கனிகளை அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டருக்கு ஒரு ஆண்டுக்கு 25 டன் வரை மகசூல் கிடைக்கும்.மடத்துக்குளம் வட்டாரத்தில் கொய்யா சாகுபடிக்கு கொய்யா பதியன்கள், ஒரு எக்டருக்கு 555 செடிகள் மற்றும் இடு பொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது, இதற்காக ஒரு ஹெக்டருக்கு ரூ.17ஆயிரத்து 600 மானியத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

    முருங்கைக்காய் மரங்களில் வளராமல் செடிகளில் வளர்வது செடி முருங்கையாகும். இந்த செடி முறை நான்கு அல்லது ஐந்து மாதங்களில் காய்க்க தொடங்குவதால், விரைவில் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும்.அதே போல் ஒரு முறை விதைத்தால் மூன்று ஆண்டுகள் காய்க்க விவசாயிகளுக்கு பயன்தரும் விவசாயமாகும். 5 மாதத்தில் மகசூல் கொடுக்க துவங்குவதால் அதிக வருவாய் கிடைக்கும்.அதே போல் ஒரு முறை விதைத்தால் மூன்று ஆண்டுகள் வரை மகசூல் கிடைக்கும். விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் இந்த செடி முருங்கையை முறையாக சாகுபடி செய்வதன் மூலம் அதிக லாபம் பெற முடியும்.

    செடிகள் மூன்றடி உயரம் வளர்ந்த பிறகு மாதம் ஒரு முறை அல்லது தேவைப்படும்போது களை எடுக்க வேண்டும்.தனிப்பயிராக முருங்கை சாகுபடி செய்யும் போது ஊடுபயிராக தக்காளி வெண்டை போன்ற குறுகிய கால பயிர்களை பயிர் செய்யலாம். விதைத்த ஆறு மாதங்களில் காய்கள் அறுவடைக்கு வரும். ஒரு ஆண்டில் ஒரு மரத்திலிருந்து சுமார் 220 காய்கள் வரை அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு ஏக்கருக்கு 20 முதல் 25 டன் முருங்கை மகசூல் கிடைக்கும்.மடத்துக்குளம் வட்டாரம் சங்கராமநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் நாற்றுக்கள் தயார் நிலையில் உள்ளன.

    கொய்யா, முருங்கை நாற்றுகள் தேவைப்படும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று, ரேஷன் கார்டு, ஆதார், வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு துங்காவி உள்வட்ட விவசாயிகள் தாமோதரன் 96598 38787, மடத்துக்குளம் உள்வட்ட விவசாயிகள் நித்யராஜ் 84890 95995 ஆகியோரை மேற்குறிப்பிட்ட செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • ரூ.186.35 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசால் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
    • சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்தலுக்கான மானியம் வழங்குதல்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22 ன் கீழ் தமிழ்நாட்டில் மீன்வளர்ப்பினை மேம்படுத்திடும் நோக்குடன் மீன்வளம் தொடர்பான ரூ.186.35 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசால் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

    இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கீழ் காணும் திட்டங்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டம், புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டம், சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்தலுக்கான மானியம் வழங்குதல் திட்டம் ஆகிய திட்டத்திற்கு பொதுப்பயனாளிக்கு 40 சதவீதம் மானியமும், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.

    மேற்கண்ட திட்டத்திற்கு மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

    முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    எனவே, மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் தஞ்சாவூர் கீழவாசல் எண்.873/4 அறிஞர் அண்ணா சாலை என்ற முகவரியில் இயங்கும் தஞ்சாவூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணபங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை தஞ்சாவூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உயர்தரமான அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம் அல்லது திட்ட அறிக்கையில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் தாங்களாக வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கரும்பு விவசாயிகளுக்கு வருவாய் பெருக்கும் வகையில் உயர்தரமான அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் கரும்பு சாகுபடி செய்து வரும் விவசாயிகள் தங்கள் நிலங்களிலேயே மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி செய்யும் வகையில் உயர்தரமான அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைத்துக் கொள்ளலாம்.இதில் விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம் அல்லது திட்ட அறிக்கையில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் 10 அச்சு வெல்லம் தயாரிக்கும் மையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

    எனவே அச்சு வெல்லம் உற்பத்தி மையம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் தேவையான ஆவணங்கள், போட்டோ, ஆதார் அட்டை, நிலச்சிட்டா மற்றும் கரும்பு சாகுபடி செய்வதற்கான இடப் பற்றிய விவரம், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் பெறப்பட்ட கடன், ஒப்படைப்பு கடிதம் ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண் வணிக உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 75488 16636, 86875 40709, 99979 45711, 8610 752985 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் வரப்பில் உளுந்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • வேளாண்மை உழவர் நலத்துறை 3 கிலோ விதையினை ரூ. 150 மானியத்தில் வழங்குகிறது.

    செங்கோட்டை:

    தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத் துறையின் சார்பில் செங்கோட்டை வட்டாரத்தில் எந்திரத்தில் திருந்திய நெல் சாகுபடி மற்றும் வரப்பு பயிராக உளுந்து சாகுபடியை விவசாயிகளிடம் தீவிரமாக ஊக்கப்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின் பேரில் வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் ஆலோசனையின் படி செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் குண்டாறு அணைக்கு செல்லும் பகுதியில் மோட்டை அணைக்கட்டு பகுதிகளில் வரப்பில் உளுந்துதிட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறை தற்போது வரப்பில் உளுந்து என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேர் நெல் பரப்பில் வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்வதற்கு 3 கிலோ விதையினை ரூ. 150 மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்வதால் நன்மை செய்யும் பூச்சிகள் பெருகி நெற்பயிரில் தீமை செய்யும் பூச்சி அழிக்கப்படுகிறது. மண்வளம் பெருகுகிறது. கூடுதலாக ஒரு பயறு வருவாய் கிடைக்கின்றது. எனவே செங்கோட்டை வட்டார விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் கேட்டுக்கொண்டார். செயல் விளக்கத்திற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் குமார் செய்திருந்தார்.

    • வீன விவசாயத்தில் மகசூல் எந்த அளவுக்கு அதிகம் கிடைக்கிறதோ அதே அளவுக்கு பாதிப்புகளும் அதிக அளவில் இருக்கிறது.
    • விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இயற்கை இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.

    உடுமலை :

    முன்னோர்கள் ஒவ்வொரு பகுதியிலுள்ள மண் வளத்துக்கு ஏற்ற விதைகள், பருவத்துக்கு ஏற்ற விதைகள், வறட்சியான பகுதிக்கு ஏற்ற விதைகள் என ஒவ்வொரு பகுதி மற்றும் சூழலுக்கு ஏற்ற விதைகளைப்பயன்படுத்தி வந்தனர். உதாரணமாக கத்தரியை எடுத்துக்கொண்டால் நெகமம் வரி கத்தரி, உடுமலை சம்பா கத்தரி, காரமடை கத்தரி, ஒட்டன்சத்திரம் பச்சைக்கத்தரி, பொள்ளாச்சி புளியம்பூ கத்தரி என்று பகுதிக்கு ஏற்ற ரகங்களைப் பயிரிட்டு வந்தனர். இதனால் இழப்பு இல்லாமல் சிறப்பாக விவசாயம் செய்து வந்தனர்.

    ஆனால் இன்றைய நவீன விவசாயத்தில் மகசூல் எந்த அளவுக்கு அதிகம் கிடைக்கிறதோ அதே அளவுக்கு பாதிப்புகளும் அதிக அளவில் இருக்கிறது. எனவே இயற்கையோடு இணைந்து வாழ்வதில் ஆர்வம் காட்டும் பலரும் நமது பாரம்பரிய ரகப் பயிர்களைத் தேடிப்பிடித்து பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    அந்த வகையில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுப்பதில் இயற்கை ஆர்வலர்களுடன் இணைந்து தமிழக அரசும் கைகொடுக்கிறது. பாரம்பரிய நாட்டு ரகங்களை சாகுபடி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி உடுமலை பகுதியில் பாரம்பரிய ரக அவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இயற்கை இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளதாக உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா தெரிவித்துள்ளார்.

    • பழங்குடியினா் தனிநபா்களுக்கான திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் விடுவிக்கப்படும்.
    • விண்ணப்பதாரா் மற்றும் அவா்களது குடும்பத்தினா் தாட்கோ திட்டத்தில் இதுவரை எந்த மானியமும் பெற்றிருக்கக்கூடாது.

    திருப்பூர்:

    தாட்கோ திட்டத்தின் மூலமாக ஆதி திராவிடா், பழங்குடியினா் தொழில் முனைவோா் ஆவின் பாலகம் அமைக்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம்) சாா்பில் 2022-23 ஆம் ஆண்டில் 50 ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில் முனைவோா் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைக்க ரூ.45 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் 18 வயது முதல் 65 வயதுக்கு உள்பட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா் மற்றும் அவா்களது குடும்பத்தினா் தாட்கோ திட்டத்தில் இதுவரை எந்த மானியமும் பெற்றிருக்கக்கூடாது. கூடுதல் செலவினத்தை ஈடுசெய்யவும் மற்றும் அதிகப்பட்ச மானியத் தொகை சென்றடைய ஆதி திராவிடா் தனிநபா்களுக்கான திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.2.25 லட்சம் மானிமும், பழங்குடியினா் தனிநபா்களுக்கான திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் விடுவிக்கப்படும்.

    இத்திட்டம் தொடா்பாக www.application.tahdco.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடா்பு கொள்ள வேண்டிய முகவரி: மாவட்ட மேலாளா், தாட்கோ, அறை எண்: 501,503, 5வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா்-641604, கைபேசி எண்: 94450-29552, 0421-2971112 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டிராக்டர் வாங்குவதற்கான கடன் விபரங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
    • முடிவில் வேளாண் உதவி அலுவலர் சிற்றரசு நன்றி கூறினார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், அன்னப்பன்பேட்டையில் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை துறை மற்றும் மெலட்டூர் பரோடா வங்கி, இணைந்து விவசாயிகள் தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மெலட்டூர் பரோடா வங்கி மேலாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார்.

    கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பழனி, ஒன்றிய கவுன்சிலர் சுமத்ராமோகன், அன்னப்பன்பேட்டையில் ஊராட்சி தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அம்மாபேட்டை வேளாண்மை உதவிஇயக்குனர் மோகன், பரோடா வங்கி உதவி மேலாளர் கார்த்திக் ஆகியோர் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய கடன், மான்ய விலையில் உழவு, நடவு இயந்திரங்கள், டிராக்டர் வாங்குவதற்கான கடன் விபரங்கள் குறித்து எடுத்து ரைத்தனர்.

    இந்த விழாவில்வேளா ண்மைத்துறை,தோட்ட க்கலைத்துறை, மீன்வள த்துறை, கால்ந டைத்துறை உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு தங்கள் துறை சம்மந்தமான திட்ட ங்கள் குறித்து விவசாயி களுக்கு எடுத்து கூறினர்.

    கூட்டத்தில் மெலட்டூர், கொத்த ங்குடி, அன்னப்பன்பேட்டை அதனை சுற்றியுள்ள கிராம ங்களை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இறுதியில் வேளாண் உதவி அலுவலர் சிற்றரசு நன்றி கூறினார்

    ஏற்பாடுகளை வேளாண்மைத்துறை, மற்றும் மெலட்டூர் பரோடா வங்கி ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • ஒரு நுகர்வோர் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட 100 யூனிட் மானிய மின்சாரம் தொடரும்.
    • 100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.

    சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எல்லா இடங்களிலும் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு எந்த பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

    100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 20,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரித்தார்.

    மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட 100 யூனிட் மானிய மின்சாரம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானிய மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • 2½ வயது முதல் 8 வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம்.
    • குமரி மாவட்ட கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 300 கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள கால்நடை வளர்ப்பவர்களுக்கு 70 சதவீத மானியமும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள கால்நடை வளர்ப்பவர்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ்2½ வயது முதல் 8 வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம். அதிகப்பட்சமாக ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.

    ஓராண்டு காப்பீடு கட்டணமாக கால்நடையின் மதிப்பில் 1.45 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.35 ஆயிரத்துக்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான காப்பீடு கட்டணம் கால்நடை உரிமையாளர்களால் செலுத்தப்பட வேண்டும்.

    ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 கால்நடைகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம். கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய விருப்பம் உள்ள கால்நடை வளர்ப்போர் அருகே உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
    • ஏக்கருக்கு ரூ.10,000/- என்ற மானியத் தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

    கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம்கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம்சேலம்:

    கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டிற்கான புதிய அறிப்பில் கால்ந டைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ரூ.1.00 கோடி செலவில் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 900 ஆதி திராவிடர் மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.90 லட்சம் மானியமும், 100 பழங்குடியின மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சம் மானியமும் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது உறுப்பினராக சேர வேண்டும். பயனாளிக்கு விதைத் தொகுப்பு, புல் கறணைகளுடன் அத்தீவனங்களை வளர்க்கத் தேவையான பயிற்சி, கையேடு மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றின் செலவினங்கள் உள்ளிட்டவை ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10,000/- என்ற மானியத் தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

    மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, எருமாபாளையம் சாலை, சீலநாயக்கன்பட்டி, சேலம் என்ற முகவரியிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

    • விலையில்லா இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணை.
    • சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 321 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொ ள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவல ர்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமைதடுப்பு சட்டத்தின் கீழ்கொலை செய்யப்பட்ட வாரிசுதா ரர்களுக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை களும், 3 நபர்களுக்கும், ஆதிராவிடர் நலத்துறை சார்பில் 19 பயனாளிகளுக்கு இலவச வீட்டு பட்டாவிற்கான ஆணைகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பேராவூரணி வட்டத்தைச் சேர்ந்த 1 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளும், மாவட்ட வழங்கல் துறை சார்பில் புதிய குடும்ப அட்டை 1 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி தலா ரூ. 25,000 வீதம் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 50,000 மதிப்பிலான காசோலைகளையும் என மொத்தம் 26 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட விளையாட்டு துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்ட வில்வித்தை சங்கத்தில் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-, மாணவிகள் கலெக்டரிடம் வெற்றி பெற்ற பதக்கங்களை காண்பித்து பாராடடு மற்றும் வாழ்த்துக்களை பெற்றனர்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா ,கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×