search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229611"

    • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனுக்கும் இடையேயான தொடா்பு வலுவாக இருந்ததில்லை.
    • புதிய வகை தொழில்களில் ஈடுபட உதவும் விதமாக மாவட்ட வாரியாக தொழில்நுட்பப் பொருளாதார ஆய்வு நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் வல்லம் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகம் சாா்பில் நடைபெற்ற தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான தேசிய பட்டியல் இனத்தவா் மற்றும் பட்டியல் பழங்குடியினா் மைய மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை இணை மந்திரி பானு பிரதாப்சிங் வா்மா பேசியதாவது:

    நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏறத்தாழ 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.

    இந்தியப் பொருளாதாரத்துக்கான பாதையாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளன. வலுவான மற்றும் தன்னிறைவு கொண்ட இந்தியாவை உருவாக்குவதில் 6 கோடிக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

    இந்திய பொருளாதாரத்துக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனுக்கும் இடையேயான தொடா்பு வலுவாக இருந்ததில்லை.

    வரும் ஆண்டுகளில் இந்த உறவு இன்னும் நெருக்கமாக மாறும்.

    தற்போது, 1.09 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளன.

    இவற்றில் 11.46 லட்சம் நிறுவனங்கள் தமிழ்நாட்டைச் சாா்ந்தவை.

    நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான பல்வேறு முயற்சிகளை இந்த அமைச்சகம் முன்னெடுத்துள்ளது.

    வலுவான இந்தியாவை உருவாக்குவதில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன .

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் பேசும்போது:

    தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மூலம் பட்டியல் இனத்தவா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் பட்டியல் இனத்தவா், பழங்குடியின இளைஞா்களுக்கு ரூ. 37 கோடி மானியத்துடன் ரூ. 148 கோடி கடனுதவி அளிக்கப்பட்டு, 1,535 படித்த இளைஞா்கள் புதிய தொழில்முனைவோா்களாக உருவாக்கப்பட்டுள்ளனா்.தி.மு.க அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் இந்த 3 வகையான திட்டங்களின் கீழ் ரூ. 399 கோடி மானியத்துடன் ரூ. 1,596 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு, 11,330 படித்த இளைஞா்கள் புதிய தொழில்முனைவோா்களாக உருவாக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

    பொருளாதார ஆய்வு

    ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பேசும்போது:

    ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தொழில்மு னைவோருக்காகத் தொழில்நுட்பப் பொருளாதார ஆய்வு மூலம் ரூ. 100 கோடி செலவில் திட்ட அறிக்கை வங்கி ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் தொடங்குவதற்குச் சாதகமாக உள்ள தொழில் திட்டங்களைக் கண்டறிந்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் புதிய வகை தொழில்களில் ஈடுபட உதவும் விதமாக மாவட்ட வாரியாக தொழில்நுட்பப் பொருளாதார ஆய்வு நடத்தப்படும் என்றாா் .

    மாநாட்டில், வெற்றிகரமாகத் தொழில் செய்யும் தொழில் முனைவோா்களைப் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மத்திய அரசின் குறு, சிறு நிறுவனங்கள் துறை இணைச் செயலா் மொ்சி, ஆதிதிராவிடா் நலத் துறை அரசுக் கூடுதல் தலைமைச் செயலா் டி.எஸ். ஜவஹா், தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, தொழில் வணிகத் துறை ஆணையா் சிஜி தாமஸ், தாட்கோ மேலாண் இயக்குநா் கந்தசாமி, தாட்கோ தலைவா் மதிவாணன், மாநிலங்களவை உறுப்பினா் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார தோட்டக்கலைத் துறை சார்பாக காய்கறிகள், வாழை ஊடுபயிராக பயிரிட மானியம் வழங்கப்படுகிறது.
    • பயிர் செய்ய மானியமாக எக்டருக்கு ரூ.26,250, நடவுப்பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார தோட்டக்க லைத் துறை சார்பாக, வாழையில் ஊடுபயிராக காய்கறிகளை வளர்க்க மானியமாக எக்டருக்கு ரூ.10 ஆயிரம் நடவுப்பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. அடுத்ததாக, தென்னை யில் ஊடுபயிராக வாழை பயிர் செய்ய மானியமாக எக்டருக்கு ரூ.26,250, நடவுப்பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தில் பயன் பெற பரமத்தி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    • பழுதடைந்த நிலையில் உள்ள பழைய ஆரம்ப சுகாதார கட்டிடத்தினை புதிதாக கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
    • சுமார் 10 கிலோ மீட்டர் வரை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் 15-வது நிதிகுழு சுகாதார மானியத்தின் கீழ் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    அப்போது கலெக்டர் அருண்தம்புராஜ் கூறும்போது:-

    திட்டச்சேரி பேரூராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள பழைய ஆரம்ப சுகாதார கட்டிடத்தினை புதிதாக கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 15-வது நிதிகுழு மானியம் (சுகாதார மானியம்) கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை தொடங்கி வைக்கப்பட்டு கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறும். இந்த புதிய சுகாதார கட்டிடத்தின் மூலம் திட்டச்சேரியை சுற்றி சுமார் 10 கிலோ மீட்டர் வரை உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு பயன்பெறுவார்கள் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் ஆயிஷா சித்திகா, பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், திட்டச்சேரி திமுக நகர செயலாளர் முகமது சுல்தான், பேரூராட்சி துணைத் தலைவர், பேரூராட்சி உறுப்பினர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துேவாம் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
    • தி.மு.க.வுக்கு துணை போய் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறவர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சி.வி.சேகர், மா.கோவிந்தராசு, ராமசந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், அம்மா பேரவை இணை செயலாளரும் பால்வளத் தலைவருமான காந்தி , எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் பகுதி செயலாளரும் கூட்டுறவு அச்சகத் தலைவருமான புண்ணியமூர்த்தி, திராவிட கூட்டுறவு வங்கி தலைவர் கரந்தை பஞ்சு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பகுதி செயலாளரும் நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவருமான சரவணன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகிறது. இந்த காலத்தில் அவர்கள் ஒரு சாதனை கூட செய்யவில்லை. 15 மாதத்தில் என்ன செய்தது என்று வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? .ஆட்சிக்கு வந்தால் இல்லதரசிகளுக்கு மாதம் ரூ.1000, சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துேவாம் என மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் இவைகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. தி.மு.க.வுக்கு துணை போய் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறவர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மேயர் சாவித்ரி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட பிரதிநிதி பூபதி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி வாஞ்சிநாதன், அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதி கோட்டை பகுதி மோகன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் திருநீலகண்டன், கிளை செயலாளர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி , கேசவன், காந்திமதி, விளார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தம்பி என்ற சோம ரத்தினசுந்தரம், 51-வது வட்ட செயலாளர் மனோகரன், மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் பாலை ரவி, ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி, மாணவரணி முருகேசன், மாவட்ட பொருளாளர் தம்பிதுரை , மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் மலைஅய்யன், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மதுக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் துரைசெந்தில், மாவட்ட துணை செயலாளர் தவமணி மலையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி போன்ற நெல்விதை மூட்டைகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கினார்.
    • கடவாசல், எருக்கூர் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் கட்டிடங்களையும் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் புதிதாக ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட திறப்பு விழா வேளாண்மைஇணை இயக்குனர் சேகர் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், துணை தலைவர் அன்புசெழியன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா.அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து நெல்ஜெயராமன் மரபுசார் பாரம்பரிய விதை ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி போன்ற நெல்விதை மூட்டைகள் மானிய விலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு முதல்கட்டமாக வழங்கினார். தொடர்ந்து அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

    இதில் வேளாண் அலுவலர் சுப்பராயன், உதவிஅலுவலர்கள் ராமலிங்கம் மற்றும் தி.மு.க. இளைஞரணி ஒன்றியஅமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கடவாசல், எருக்கூர் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் கட்டிடங்களையும் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    • இணை இயக்குனர் தகவல்
    • 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அவ்வை மீனாட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட மூலம் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த வேலையில்லா இளைஞர்களை தொழில் முனைேவாராக்கும் திட்டம் இந்த ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது. இதில் அக்ரி கிளினிக் (வேளாண்) அல்லது வேளாண் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும்.

    பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்ப டுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்டம் மூலம் பயனடைய தகுதியான பயனாளிகளுக்கு 25 சதவீத மானியம் அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் வேளாண், தோட்டக் கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    எனவே இதற்கான விண்ணப்பங்களை கல்வி தகுதி ஆவணங்களுடன் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் இது தொடர்பாக குமரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அல்லது அந்தந்த தாலுக்காக்களில் செயல்பட்டு வரும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் நேரில் அணுகி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் நிலப்போர்வை அமைத்து காய்கறிகள் மற்றும் பழ மரங்கள் பயிரிட்டு வருகின்றனர்.
    • விவசாயிகள் நிலப்போர்வை அமைத்து காய்கறிகள் மற்றும் பழ மரங்கள் பயிரிட்டு வருகின்றனர்.

    மடத்துக்குளம்:

    உடுமலை,மடத்துக்குளம் வட்டாரத்தில் காய்கறி பயிர்களுக்கு நிலப்போர்வை அமைக்க தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    இது குறித்து மடத்துக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார்கூறியதாவது:-

    மடத்துக்குளம் வட்டாரத்தில் தக்காளி, சின்ன வெங்காயம், கத்தரி, மிளகாய் என தோட்டக்கலை பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்வதோடு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும்ஆர்வம் காட்டி வருகின்றனர்.நுண்ணீர்ப்பாசனம் அமைத்துள்ள விவசாயிகள் நிலப்போர்வை அமைத்து காய்கறிகள் மற்றும் பழ மரங்கள் பயிரிட்டு வருகின்றனர்.

    நிலப்போர்வை என்பது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாலிதீன் ஷீட்கள், மெல்லிய காகிதம்போன்றதாகும்.நிலத்தில் போர்வை போல பரப்பி துளையிட்டு அங்கு மட்டும் நாற்றுக்களை நடவு செய்து நல்ல பயிர் வளரும் சூழலைஉருவாக்கலாம்.அதிலும் தக்காளி மிளகாய் மற்றும் தர்பூசணி பயிர்களுக்கு நிலப்போர்வை நல்ல பலன் தருகிறது.மேலும் நீண்ட கால பயிர்களான வாழை, பப்பாளி, மா, கொய்யா போன்றபழ மரப்பயிர்களுக்கும் நிலப்போர்வை அமைத்து பயிர் செய்வதால் நல்ல பலன் கிடைக்கிறது.அனைத்து விதமான மண்ணிலும் களைகள் வளரும். அதனை தடுக்கும் சிறந்த முறையே மல்சிங் ஷீட் தொழில்நுட்பமாகும்.மேலும் நீர் ஆவியாவதை தடுத்தல், மண்ஈரம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவது, மண்ணில் உள்ள உப்பு மேல் நோக்கி வருவது தடுத்தல், இரவு மற்றும் குளிர்காலத்தில் கூட மண்ணில் சீரான வெப்பத்தை நிலைநிறுத்தி பயிர் சிறந்து வளர்வதற்கும், முளைவிடும் தன்மையை துரிதப்படுத்துவதற்கும், தாவரங்களில் அதிகஅளவு ஒளிச்சேர்க்கைநடக்கிறது.

    காய்கறிப்பயிர்களுக்கு ஒரு முறை நிலப்போர்வைகள் அமைத்தால் 3 அல்லது 4 முறை பயிர் சாகுபடிக்கு தொடர்ந்து பயன்படுத்தலாம்.காய்கறி மற்றும் குறுகிய கால சாகுபடிக்கு 2,5-30 மைக்ரான் அளவுள்ளபாலிதீன் ஷீட்டும், நீண்ட கால வயதுடைய மரக்கன்றுகள் சாகுபடிக்கு 50-100 மைக்ரான் பாலிதீன்ஷீட்கள் பயன்படுத்த வேண்டும்.2022 - 23ம் நிதியாண்டில், மடத்துக்குளம் வட்டாரத்திற்கு காய்கறிப் பயிர் சாகுபடி செய்வதற்கான நிலப்போர்வைகள் வழங்கப்பட உள்ளது.

    ஒரு ஹெக்டருக்கு 16 ஆயிரம் வீதம் 10 ஹெக்டருக்கு, 1.60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பம் உள்ள விவசாயிகள், சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, ரேஷன் கார்டு, ஆதார், பாஸ் போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு, துங்காவி குறு வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரனை 96598 38787 என்ற எண்ணிலும், மடத்துக்குளம் குறு வட்ட விவசாயிகள் நித்யராஜ் 63821 29721 என்றஎண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • தாட்கோ மூலம் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும்.
    • வயது 18 முதல் 65 வயதுவரை இருக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் 500-ல் 450 ஆதிதிராவிடர்களுக்கும் மற்றும் 50 பழங்குடியினருக்கும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் மானியம் ரூ.2.25 கோடி, வங்கி கடன் ரூ.4.87 கோடி என முடிவு செய்யப்பட்டு, கறவை மாடு வாங்க ஒதுக்கீடு அரசாணை வரப்பெற்றுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்திற்கு 18 ஆதிதிராவிடர்களுக்கு மானியம் ரூ.45 ஆயிரம் வீதம் ரூ.8.10 லட்சம் ஆகவும், பழங்குடியினர் 3 பேருக்கு தலா 45,000 வீதம் ரூ.1.35 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும், வயது 18 முதல் 65 வயதுவரை இருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும், விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும், தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது, இத்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்படும் திட்டத் தொகை ரூ.1.50 லட்சத்தில் 30 சதவீத மான்யம் அதாவது ரூ.45 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் பயன்பெற சம்பந்தப்பட்ட அரசு கால்நடை மருத்துவரிடம் உரிய காப்பீடு செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பயனாளிகள் http://application.tahdco.com, http://application.tahdco.com என்ற இணையதளத்திலும் மற்றும் பழங்குடியினர் http://fast.tahdco.com, http://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • டிரோன் மூலம் பருத்தி பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ.500 அல்லது 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பருத்தி காய் காய்த்து அறுவைடைக்கு தயாராகும் நிலையில் மாவு பூச்சி, இலைபேன் தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது.

    இதனை கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஆள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் பூச்சி மருந்து தெளிக்க செலவு அதிகமாகிறது. டிரோன் மூலம் பருத்தி பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ.500 அல்லது 50 சதவீதம் மானியம் இதில் எது குறைவோ அது வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் நீடித்த நிலையான பருத்தி இயக்கத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் தேவையற்ற கூடுதல் செலவுகள், நேர விரயம் தவிர்க்கப்படுகிறது. குறிப்பாக பூச்சி மருந்து செலவும் குறைவாகிறது.

    எனவே பரமத்தி வட்டாரத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை த்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் வகையில் 44 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • தொழில் முனைவோராக விருப்ப முள்ள வேளாண் பட்டதா–ரிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை த்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் வகையில் 44 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்வு செய்ய ப்பட்டுள்ள 44 கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த வேளாண் பட்டதாரிகள், அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் பொருட்டு பட்டதாரி ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வீதம் 6 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

    திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகள் குறைந்த பட்சம் இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை அல்லது வேளா ண்மை பொறியியல் பட்டப் படிப்பு படித்து இருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் பணி யாற்றுபவராக இருக்க கூடாது.

    கணிணி மற்றும் இதர வேளாண் செயலிகளில் பணியாற்ற தெரிந்தவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பட்டதாரி மட்டுமே திட்டத்தில் பயன்பெற முடியும். 21 முதல் 40 வயதுடையவர்கள் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

    முன்வைக்கும் திட்டத்தின் உரிமை ஒற்றை உரிமை யாளருடையதாக இருக்க வேண்டும். பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் இ வேளா ண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் நிறுவ வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்கள் போன்ற உள்கட்டமைப்பு க்கான செலவுகளை திட்ட மதிப்பீட்டில் சேர்க்க இயலாது.

    தொழில் முனைவோராக விருப்ப–முள்ள வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ண ப்பத்துடன் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பட்டதாரி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், வங்கிகளில் பெறப்பட்ட கடன் ஒப்பதல் ஆவணம் ஆகிய ஆவணங்க ளுடன் வருகிற 20-ந் தேதிக்குள் ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

    எனவே தொழில் முனைவோராக விருப்ப முள்ள வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    • மணப்பாறை வாழை விவசாயிகளுக்கு மானியம் பெ ற விண்ணப்பிக்கலாம்
    • இணையதளத்தில் பதிவேற்றம் செய்தும் பயன்பெறலாம்

    திருச்சி

    திருச்சியை அடுத்துள்ள மணப்பாறையில், தோட்டக்கலை துறையின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னைக்கு இடையில் ஊடுபயிராக வாழை பயிர் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10500 மதிப்பில் மானியமும், இடுபொருட்களும் வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள விவசாயிகள் இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு திட்டப் பயன்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

    மணப்பாறை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தும் பயன்பெறலாம் என மணப்பாறை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • மத்திய கயிறு வாரியம் சார்பில் தென்னை நாரில் கால் மிதியடி தயாரிக்கும் பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டது.
    • மலைவாழ் மக்களுக்கு சுய தொழில் கற்றுத்தர, பல்வேறு திட்டங்கள் முன்பு செயல்படுத்தப்பட்டன.

    உடுமலை :

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனச்சரகத்தில் 13 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் வனத்தில் சீமாறு புல் உட்பட பொருட்களை சேகரித்து விற்பனை செய்வதன் வாயிலாக கிடைக்கும் குறைந்த அளவு வருவாயை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.எனவே மலைவாழ் மக்களுக்கு சுய தொழில் கற்றுத்தர, பல்வேறு திட்டங்கள் முன்பு செயல்படுத்தப்பட்டன. அதில் மத்திய கயிறு வாரியம் சார்பில் தென்னை நாரில் கால் மிதியடி தயாரிக்கும் பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டது.இப்பயிற்சியை கரட்டுப்பதி, தளிஞ்சி, கோடந்தூர், நல்லாறு காலனி உட்பட குடியிருப்புகளை சேர்ந்த 400க்கும் அதிகமான பெண்கள் பெற்றுள்ளனர்.

    ஆனால் இத்தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள அவர்களுக்கு கால் மிதியடி தயாரிப்பதற்கான எந்திரம் இல்லை. இதனால் பயிற்சி பெற்றும் சிறுதொழிலை துவக்க முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு கிராம கூட்டமைப்பு வாயிலாக எந்திரம் மற்றும் தொழில் துவங்க கடனுதவி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

    மேலும் தமிழக அரசு சார்பில் தற்போது வன உரிமைச்சட்டத்தின் கீழ் அங்குள்ள விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. சிறு தானியங்கள் மற்றும் இதர சாகுபடிகளை மலைவாழ் மக்கள் துவக்கியுள்ளனர்.எனவே வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய தேவையான பயிற்சி வழங்கவும் அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    ×