search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229611"

    • மாற்றுப் பயிர்களுக்கு மானிய விலையில் இடுபொருட்களான விதை, நுண்ணூட்ட சத்து, உயிர் உரம், உயிர் காரணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • உயிர் உரங்கள், மண்ணில் இடம் நுண்ணுயிர்கள், உயிர் உரங்கள், விதைப்பு மற்றும் அறுவடைக்கான ஊக்கத் தொகை ரூ. 810 பொது பிரிவினருக்கும், ரூ934 சிறப்பு பிரிவினருக்கும் வழங்கப்படுகிறது.

    திருச்சி :

    தா.பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பா சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    தா.பேட்டை வட்டாரத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் மாற்றுப் பயிர் சாகுபடியின் உளுந்து, நிலக்கடலை, சோளம் போன்ற மாற்றுப் பயிர்களுக்கு மானிய விலையில் இடுபொருட்களான விதை, நுண்ணூட்ட சத்து, உயிர் உரம், உயிர் காரணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    சிறு தானியங்கள் தொகுப்பில் விதைகள், உயிர் உரங்கள், மண்ணில் இடம் நுண்ணுயிர்கள், உயிர் உரங்கள், விதைப்பு மற்றும் அறுவடைக்கான ஊக்கத் தொகை ரூ. 810 பொது பிரிவினருக்கும், ரூ934 சிறப்பு பிரிவினருக்கும் வழங்கப்படுகிறது.

    பயறு தொகுப்பில் ரூ1,250, ரூ1,570-ம், எண்ணெய் வித்து தொகுப்பில் ரூ 4,002, ரூ5,600-ம் மானியமும் இடுபொருள்களுக்கு வழங்கப்படுகின்றன. விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேலும் இந்த ரகமானது அதிக எண்ணை சத்து கொண்ட தாகவும், அதிக விளைச்சல் கொண்ட தாகவும் ஹெக்டருக்கு 4000 முதல் 5000 கிலோ வரை மகசூல் கிடைக்க கூடிய ரமாக உள்ளது.
    • இந்த ரகத்தினை விவசா–யிகள் அனைவரும் மானியவிலையில் வாங்கி விதைத்து பயன் பெருமாறு பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரோஜா கேட்டுகொண்டுள்ளர்.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    ஆந்திரமாநிலம் கதிரி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மூலம் கதிரி லாப்பாக்சி 1812 என்ற புதிய நிலக்கடலை கண்டு பிடிக்கப்பட்டது.

    இந்த ரகத்தினை பயிரிட அடி உரமாக தொழு உரமும், 12.5 டன் தழை மற்றும் 30 கிலோ சாம்பல் சத்தினை இடவேண்டும். வரிசைக்கு வரிசை 30 செ.மீ செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைத்த 20 நாட்களுக்கு பிறகு 12.5 - 50 - 30 தழை மணி சாம்பல் சத்தினை இடவேண்டும். ஹெக்டருக்கு 12.5 கிலோ நுண்ணூட்ட கலவையை தொழுஉரம் அல்லது மணலில் கலந்து இடலாம்.

    பயிர் நட்ட 35-45 நாட்களுக்குள் களை யெடுத்து ஜிப்சம் 400 கிலோ எக்டருக்கு என்ற அளவில் இட்டு மண் அணைக்கவேண்டும். இதனால் மண்ணின் தன்மை இலகுவாகி காய்பிடிப்பு திறன் அதிகமாகிறது.

    மேலும் இந்த ரகமானது அதிக எண்ணை சத்து கொண்ட தாகவும், அதிக விளைச்சல் கொண்ட தாகவும் ஹெக்டருக்கு 4000 முதல் 5000 கிலோ வரை மகசூல் கிடைக்க கூடிய ரமாக உள்ளது. இத்தகைய ரகத்தினை பவானிசாகர் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் புளியம்பட்டி துணை வேளாண்மை விரிவாக்கமையத்திலும் நடப்பு பருவத்திற்கு போதுமான அளவு விதைகள் இருப்பில் உள்ளது.

    இந்த விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விவசா–யிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ரகத்தினை விவசா–யிகள் அனைவரும் மானியவிலையில் வாங்கி விதைத்து பயன் பெருமாறு பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரோஜா கேட்டுகொண்டுள்ளர்.

    • பசுமைப் புரட்சிக்கு பின் செயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்தது.
    • செயற்கை உரங்களை இவ்வளவு செலவு செய்து நிலத்துக்கு இட்டாலும் மண் வளம் பாதித்து மண் மலடாகிறது.

    திருப்பூர் :

    பசுமை புரட்சிக்கு முன் பலரும் இயற்கை உரத்தையே பயன்படுத்தி வந்தனர். பசுமைப் புரட்சிக்கு பின் செயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்தது. துவக்கத்தில் விலை குறைவாக கிடைத்தது.தற்போது விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதற்கு பெருமளவு அரசு மானியம் கொடுத்து உர விலையை குறைத்து வினியோகிக்கிறது. அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் உர மானியத்திற்கு செலவாகிறது.செயற்கை உரங்களை இவ்வளவு செலவு செய்து நிலத்துக்கு இட்டாலும் மண் வளம் பாதித்து மண் மலடாகிறது.

    மனிதர்கள், விலங்குகள், பறவைகளுக்கு நோய்கள் பெருகி வருகின்றன. இதனால் மருத்துவச் செலவு சாமானிய மக்கள் சமாளிக்க முடியாத அளவு உயர்ந்து விட்டது.

    இது குறித்து பொங்கலூர் வட்டார விவசாயிகள் கூறியதாவது:-

    செயற்கை உரத்துக்கு மானியம் தரும் அரசு இயற்கை உரம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதன்மூலம் மண்வளம் காப்பதோடு மக்கள் நலனும் காக்கப்படும். மருத்துவ செலவு குறையும். அமெரிக்கா, ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளில் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மானியம் வழங்கப்படுகிறது.இது போல செயற்கை உரங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை முற்றிலும் ஒழித்து விட்டு, விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளின் எண்ணிக்கை அடிப்படையில் மானியம் வழங்கினால் இயற்கை உரம் தயாரிப்பு அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சாத்தூர், பாலவநத்தத்தில் 100 பயனாளிகளுக்கு மானியத்தில் ஆடுகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
    • 100 பயனாளிகளுக்கு ஒட்டு மொத்தச் செலவினமாக தலா ரூ.19 லட்சத்து 4 ஆயிரத்து 75 வீதம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.2.09 கோடி மதிப்பில் தமிழக அரசு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் பாலவநத்தத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் செம்மறியாடுகள், வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மேக நாதரெட்டி தலைமை தாங்கினார். விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 100 பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கினார்.பின்னர் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 1100 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு பயனாளிக்கு 4 பெட்டை ஆடுகள் மற்றும் 1 கிடா என மொத்தம் 5 ஆடுகள் என்ற விகித்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகளுக்கு 500 ஆடுகள் வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1100 பயனாளிகளுக்கு மொத்தம் 5500 ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    சாத்தூர் ஒன்றியத்தில் 100 பயனாளிகளும், அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் 100 பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டு, ஒரு பயனாளிக்கு ஆடு ஒன்றுக்கு ரூ.3500/- வீதம் 5 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் (1 கிடா மற்றும் 4 பெட்டை ஆடுகள்) தலா ரூ.17 ஆயிரத்து 500 என்ற விகிதத்தில் மொத்தம் 200 பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆரம்ப கட்டச் செலவினமாக பயனாளிக்கு ஆடு 1க்கு ரூ.200 வீதம் 5 ஆடுகளுக்கு மொத்த தொகை ரூ.1000 பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. ஒரு பயனாளிக்கு அரசால் வழங்கப்படும் 5 ஆடுகளுக்கு காது வில்லைகள் பொருத்தப்பட்டு, அரசு செலவில் 2 ஆண்டுகளுக்கு காப்பீட்டுத் தொகை ரூ.540.75 வீதம் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தப்படுகிறது.

    ஒரு ஒன்றியத்திற்கு இந்த திட்டத்திற்காக 100 பயனாளிகளுக்கு ஒட்டு மொத்தச் செலவினமாக தலா ரூ.19 லட்சத்து 4 ஆயிரத்து 75 வீதம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.2.09 கோடி மதிப்பில் தமிழக அரசு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, சாத்தூர் நகர்மன்ற தலைவர் குருசாமி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி ராஜசேகர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ரவிச்சந்திரன், துணை இயக்குநர் கோவில்ராஜா, சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை தொகுப்பு திட்ட ரசாயன உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் உரங்களை எம்.எல்.ஏ, வழங்கினார்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள மாரநேரி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை தொகுப்பு திட்ட ரசாயன உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் தலைமையில் நடைபெற்றது. பூதலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வரவேற்றார்

    நிகழ்ச்சியில் துரைசந்திரசேகரன் எம்.எல்.ஏ, குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் உரங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பூதலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன், வேளாண்மை துணை இயக்குனர் ஈஸ்வர், மாரநேரி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • புதிய தொழில் முனைவோருக்கு மானியத்துடன் ரூ.75 லட்சம் கடன் உதவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
    • இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட தொழில் மையபொது மேலாளரை 8925534036 என்ற செல்போன் எண்ணில் அணுகலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்படவும், முதல் தலைமுறை தொழில் முனைவோர் நிறுவனங்களைத் தொடங்க "புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் (பிளஸ்-2 தேர்ச்சி) மற்றும் பட்டய தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    வயது வரம்பு பொது பிரிவினருக்கு 21-க்கு மேல் 35-க்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். இந்த திட்டத்திற்கு ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ஏதுமில்லை.

    அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க இந்த திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை கடன் பெற்று 25 சதவீத அதிகபட்ச மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த திட்டத்தின் கீழ் பட்டியல் இனம், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி தொழில் முனைவோருக்கு கூடுதலாக 10 சதவீத மானியம் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் அரிசி ஆலை, மர இழைப்பகம், மாவு மில், மிளகாய் எண்ணெய் அரைக்கும் ஆலை, லேத் எந்திரம், அட்டைபெட்டி தயாரித்தல், பிரிண்டிங் எந்திரங்கள், பேப்பர் போர்ட், பேண்டேஜ் கிளாத், நடமாடும் உணவகம், கடலைமிட்டாய் தயாரித்தல், கால்நடை தீவனம் தயாரித்தல், பவர் லாண்டரி, ஸ்கேன் சென்டர், பிஸியோதெரபி கிளினிக், ஹாலோபிளாக் மற்றும் பிளை ஆஷ் பிரிக்ஸ், ஜிம் சென்டர் (ஆண்-பெண்), ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, ஸ்டீல் கட்டில் பீரோ மற்றும் சேவை சார்ந்த தொழில்களும் தொடங்கலாம்.

    ஆன்லையனில் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியின் அடிப்படையில் வங்கிக்கு பரிந்துரைக்கப்படும்.

    இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட தொழில் மையபொது மேலாளரை 8925534036 என்ற செல்போன் எண்ணில் அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாய பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 1 ஏக்கருக்கு யூரியா, 45 கிலோ டிஏபி, 50 கிலோ பொட்டாஷ், 25 கிலோ வீதம் ரசாயன உரத்தை வழங்கினார்.
    • 75 ஏக்கருக்கு பயறு தொகுப்பும், 20 ஏக்கருக்கு எண்ணை வித்து தொகுப்பும் வழங்கப்படவுள்ளதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே அகணி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் குறுவை தொகுப்பு திட்டத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் சேகர் குறுவை தொகுப்பு திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினார். விழாவில்சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பங்கேற்று 33 விவசாய பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 1 ஏக்கருக்கு யூரியா, 45 கிலோ டிஏபி, 50 கிலோ பொட்டாஷ், 25 கிலோ வீதம் ரசாயன உரத்தை வழங்கினார். சீர்காழி வட்டாரத்தில் 6500 ஏக்கருக்கு சுமார் 7100 விவசாயிகளுக்கு இலவசமாக ரசாயன உரம் வழங்கப்படவுள்ளதாகவும், 10 ஏக்கருக்கு சிறுதானிய தொகுப்பும், 75 ஏக்கருக்கு பயறு தொகுப்பும், 20 ஏக்கருக்கு எண்ணை வித்து தொகுப்பும் வழங்கப்படவுள்ளதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்தனர். விழாவில் வேளாண்மை அலுவலர் சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர் தமிழரசன், ஒன்றியக்குழு உறுப்பினர் ரிமா, ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன், தி.மு.க. நிர்வாகி முருகன் பங்கேற்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் தோட்டக்கலைத் துறையின் மூலமாக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகிறது.
    • லக்கம்பட்டி பேரூராட்சி செங்கலரை பகுதியில் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த நிரந்தர காய்கறி பந்தலை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் வட்டம் லக்கம்பட்டி பேரூராட்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கொடி வகை காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நிரந்தர காய்கறி பந்தல் அமைக்கப்பட்டிருந்ததை ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வி ன்போது கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தோட்டக்கலைத் துறையின் மூலமாக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகிறது.

    இதில் குறிப்பாக கொடி வகை காய்கறிகளான பீர்க்கன்காய், புடலை, அவரை மற்றும் சுரைகாய் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்ய நிரந்தர கல்தூண் பந்தல் அமைக்க 50 சதவீதமானியமாக ஒரு எக்டருக்கு ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இது வரை 309 பயனாளிகளுக்கு 133 எக்டர் பரப்பில் அமைத்ததற்கு ரூ.2.66 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகை பந்தல் மூலம் கொடி வகை காய்கறிகளை சாகுபடி செய்வதால் நல்ல மகசூலும், அன்றாட வருமானமும் கிடைப்பதால் இத்திட்டத்திற்கு விவசாயிகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    விவசாயிகள் அரசால் வழங்கப்படும் பல்வேறு திட்டங்களை அறிந்து கொண்டு, நல்ல முறையில் சாகுபடி செய்து தங்களது வாழ்வாதாரத்தினை பெருக்கி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து லக்கம்பட்டி பேரூராட்சி செங்கலரை பகுதியில் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த நிரந்தர காய்கறி பந்தலை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக கோபி செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் அளுக்குளி ஊராட்சி பிள்ளையார் கோவில் துறை பகுதியில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலகத்தினையும், கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பள்ளியில் செயல்பட்டு வரும் ஆய்வகம் ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    ஈரோடு மாவட்டத்தில் 20,000 ஏக்கருக்கு அதிகமான பரப்பில் வாழையானது கோபி செட்டிபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள வட்டாரங்களில் விளைவிக்கப்பட்டு அறுவடை பின்செய் நேர்த்தி செய்வதற்காக கோபி செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், அளுக்குளி குளிர்ப்ப தனக்கிடங்கு வளாகத்தில் ரூ.6.67 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம் கீழ் முதன்மை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒழுங்குமுறை விற்பனை கூடம்

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் வாழைக்கான முதன்மை பதப்படுத்தும் நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து ஈரோடு விற்பனை குழு சார்பில் கோபி செட்டிபாளையத்தில் செயல்படும் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மஞ்சள், பயறு வகைகள், புளி மற்றும் பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், கோபி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரவடிவேல், மைதிலி, கோபி தாசில்தார் ஆயிஷா ஆகியோர் உடனிருந்தனர்.

    • மானிய விலையில் பசுந்தீவனம் பயிரிட விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    • இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 2022-23-ம் நிதியாண்டில் பசுந்தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக ரூ.2.7 லட்சம் பசுந்தீவனம் வளர்ப்பு நிதி ஒதுக்கப்பட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக, திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது இன்றியமையாதது. கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 70 சதவீதம் தீவனம் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது.

    ஆகவே, தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில், ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் 2022-23-ன் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 90 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கால்நடை வளர்ப்போர் பயன் பெறும் வகையில் நீர்ப்பாசன வசதி கொண்ட தென்னை, பழந்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களான தீவன சோளம், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், பல்லாண்டு பயிர் வகைகள், பல்லாண்டு தீவன புல் வகைகளில் ஏதேனும் ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு 3 வருட காலம் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரமும், ஒரு ஹெக்டேருக்கு ரூ.7ஆயிரத்து500 வரையும் மானியமாக வழங்கப்படவுள்ளது.

    மேலும், இந்த திட்டத்தில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள சிறு, குறு மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். எல்லா திட்ட இனங்களிலும், 30 சதவீதத்திற்கும் மேல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    மேற்காணும், திட்டத்தின் மூலம், பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில், ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள, கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி எழுத்து மூலமாக விண்ணப்பத்தை வருகிற ஜூலை 2-ம் வாரத்திற்குள் அளிக்க வேண்டும்.

    இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகளுக்கு உழவர் சந்தைக்கான அடையாள அட்டை
    • கலெக்டர் அரவிந்த் செய்தி குறிப்பில் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக் அரவிந்த விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    கன்னியாகுமரி மாவட் டத்திற்கு தோட்டக்கலை துறையின் கீழ் 2022-23ம் ஆண்டு மாநில தோட்டக் கலை வளர்ச்சித் திட்டத் தின் கீழ் ரூ.60 லட்சத்து 87 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. அரசு மாணவியர் விடுதிகளில் தோட்டம் அமைத்தல் இனத்தின் கீழ் 8 எண்ணத் திற்கு ரூ.64,000 நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.

    அரசு மாணவியர் விடுதி ஒன்றிற்கு 100 சதவீதம் மானியத்தில் ரூ.8,000 மதிப்பிலான பழச் செடிகள். மூலிகை செடிகள், தென்னங்கன்றுகள், காய் கறி விதைகள், தோட்டக் கருவிகள் உள்ளிட்ட இதர இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.

    ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் அரசு மாணவியர் விடுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    உயர் விளைச்சல் துல்லிய பண்ணையத் திட்டத்தின் கீழ் 48 ஹெக்டேருக்கு ரூ 7 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் துல்லிய பண்ணையம் செயல்படுத்தப்பட உள்ளது. நுண்ணீர் பாசன வசதியை பெற்றுள்ள விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற இயலும்.

    ஒரு ஹெக்டேருக்கு ரூ.15.000 மதிப்பிலான இடுபொருட்கள் வழங் கப்படும். கூடுதல் வருமானம் ஈட்டும் சிறு தொழில் இனத்தின் கீழ் எண்ணத்திற்கு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் காளான் வளர்ப்பு கூடம் அமைத்திட 50 சதவீதம் மானியமாக ரூ.50,000 வழங்கப்படும்.

    உழவர் சந்தையில் காய்கறி வரத்தை அதிகரிப்பதற்கான சிறப்பு திட்டத் தின் கீழ் 70 ஹெக்டேருக்கு ரூ.14 லட்சம் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. உழவர் சந்தையை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும். ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 மதிப்பிலான இடுபொருட்கள் வழங் கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு உழவர் சந்தைக்கான அடையாள அட்டை வழங்கப்படும்.

    ஊடுபயிர் சாகுபடி இனத்தின் கீழ் தென்னையில் ஊடுபயிராக வாழை பயிரிடும் விவ சாயிகளுக்கு 70 ஹெக்டே ருக்கு ரூ.18 லட்சத்து 35 ஆயிரம் நிதி ஒதுக்கீடுசெய் யப்பட்டுள்ளது. இதில் பய னாளிக்கு முதலாண்டிற்கு மானியத் தொகையாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.26.250 மதிப்பிலான இடுபொ ருட்கள் வழங்கப்படும்.

    வாழையில் ஊடுபயிராக காய்கறிகள் பயிரிடும் விவ சாயிகளுக்கு 100 ஹெக்டே ருக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயனாளிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான் இடுபொருட்கள் வழங்கப்படும்.

    தோட்டக்கலை கரு விகள் மற்றும் உபகரணங் கள் விநியோகம் இனத்தின் கீழ் நெகிழி கூடைகள் 10 எண்ணத்திற்கு ரூ.37,500 அலுமினிய ஏணிகள் 40 எண்ணத்திற்கு ரூ.4 லட் சம். பழங்கள் அறுவடை செய்ய பயன்படுத்தும் வலைக் கருவி 30 எண்ணத்திற்கு ரூ.7,500, மலர் அறுவடைக்கான முகப்பு விளக்கு 50 எண்ணத்திற்கு ரூ.12,500, கவாத்து கத்திரி 100 எண்ணத்திற்கு ரூ.20,000 நாப்ஸாக் தெளிப்பான் (8-12 லிட்டர்) 15 எண்ணத்திற்கு ரூ.57,000 போன்ற அலகுக்கு 50 சதவீதம் மானியத்தில் ஒரு பயனாளிக்கு வழங்கப்படும்.

    இத்திட்டங்களை பற்றி மேலும் தகவலறிய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார உதவி தோட்டக்கலை அலுவலகங்களை அணுகி பயன் பெறலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தோட்டக்கலைத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
    • தோட்டக்கலைத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    மடத்துக்குளம்

    மடத்துக்குளம் வட்டாரத்தில் 2020-21ம் ஆண்டில் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்துங்காவி கிராமம் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில்தோட்டக்கலைத்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட 125 விவசாயிகளுக்கு பல்வேறு ரக விதைகள் கொண்ட தொகுப்பு வழங்கப்படுகிறது.பயிர் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் துங்காவியில் நடந்த விழாவில் தலா 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.தற்போது பண்ணை குறைபாடு களைதல் திட்டத்தின் கீழ் 20 விவசாயிகளுக்கு, பிளாஸ்டிக் டிரம், பிளாஸ்டிக் அறுவடை பெட்டி உள்ளிட்ட தொகுப்பு தலா 20 ஆயிரம் ரூபாய் மானியத்தில் வழங்கப்பட்டது.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா, அலுவலர் காவ்யதீப்தினி உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு வழங்கினர்.

    தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: -

    அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்வயல்களின் வரப்பு ஓரங்களில், தோட்டத்தின் எல்லை பகுதிகளில் நடவு செய்யும் வகையில் சீதா, எலுமிச்சை, கொய்யா, நாவல், கொடுக்காப்புளி, நெல்லி, முருங்கை, தேக்கு போன்ற 8வகையான பழம், பயன்தரும் மரக்கன்றுகள், தோட்டக்கலைத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள், சிட்டா, ரேஷன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 ஆகிய ஆவணங்களுடன்மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அரியலூர், திருமானூர் ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை ஆகிய 6 வட்டாரங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ள 38 கிராம பஞ்சாயத்துகளில்ஆதிதிராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • 90 மீட்டர் ஆழம் உள்ள குழாய் கிணறு அமைப்பதற்கு 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதிகபட்சமாக ரூ.3லட்சமும், மின்சாரசக்திமூலம் இயங்கக்கூடிய 5 குதிரைத்திறன் கொண்டபம்புசெட்டுகள் அமைப்பதற்கு ரூ.75ஆயிரமும், நிர்விநியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ.20 ஆயிரமும் உச்சவரம்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட பழங்குடியினவிவசாயி–களுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனவசதி அமைத்துத் தரப்படும் என வேளாண் துறை அமைச்சர் பேரவையில் அறிவித்தார்.

    இதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ளஅரியலூர், திருமானூர் ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை ஆகிய 6 வட்டாரங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ள 38 கிராம பஞ்சாயத்துகளில்ஆதிதிராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின்கீழ் இடத்திற்கு ஏற்றவாறு குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்தல் நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் நிறுவுதல், பாசன நீரினை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    அரசு வெளியிட்ட ஆணையின்படி 90 மீட்டர் ஆழம் உள்ள குழாய் கிணறு அமைப்பதற்கு 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதிகபட்சமாக ரூ.3லட்சமும், மின்சாரசக்திமூலம் இயங்கக்கூடிய 5 குதிரைத்திறன் கொண்டபம்புசெட்டுகள் அமைப்பதற்கு ரூ.75ஆயிரமும், நிர்விநியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ.20 ஆயிரமும் உச்சவரம்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரசக்தி மூலம் இயங்கக்கூடியஇடங்களுக்கு மின்சார இணைப்புக்கான கட்டமைப்புகள் அமைத்திட ரூ.2.50 லட்சமும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு வேளாண் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×