என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் ஆய்வு"

    • குடியிருப்பு பகுதியில் நோய் தொற்று ஏற்படுவதாக புகார்
    • விதிமுறைகள் பின்பற்றபடுகின்றதா? என விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த அரிசி ஆலைகள் 24 மணி நேரமும் இயங்குகின்றன.

    அரிசி ஆலைகளிலிருந்து கரும்புகை நச்சு துகள் மற்றும் தூசி வெளியேறுவதால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளன. இதனால் குடியிருப்பு பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகின்றது.

    மேலும் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் ஊராட்சி மற்றும் மாசுகட்டுபாட்டு வாரியம் ஆகிய நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தோம் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த ராட்டினமங்கலம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் அரிசி ஆலைகளில் இருந்து வரும் கரும்புகை துகள்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி ஆரணி ராட்டினமங்கலம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதன் எதிரொலியாக மாவட்ட சுற்றுசூழல் மற்றும் மாசு கட்டுபாடு வாரிய இணை இயக்குநர் கதிர்வேல் தலைமையில் அதிகாரிகள் ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் உள்ள அரிசி ஆலைகளில் திடீரென ஆய்வு மேற்கொ ண்டனர்.

    இதில் கருப்புகை தூசிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் வருகின்றதா மற்றும் மாசுகட்டு ப்பாடு வாரிய விதித்த விதிமுறை களை பின்பற்றுகி ன்றதா என பல்வேறு கோணத்தில் ஆய்வு மேற்கொ ண்டனர்.

    • குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானைகள் அதிகளவு வாழ்ந்து வருகின்றன.
    • யானைகள் சென்றுவர தேசிய நெடுஞ்சாலை துறையினர் கான்கிரீட் வழித்தடம் அமைத்தனர்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானைகள் அதிகளவு வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவு - தேடி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் சாலை விரிவாக்க பணி மேற்கொண்ட போது யானைகள் சென்றுவர தேசிய நெடுஞ்சாலை துறையினர் கான்கிரீட் வழித்தடம் அமைத்தனர்.

    இதனால் யானைகள் அவ்வழியாக செல்லாமல் ஆபத்தான முறையில் வழுக்கி கொண்டு சென்ற சம்பவம் இணையத்தில் வைரலானது. இைதயடுத்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் யானை சறுக்கி சென்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அந்த இடத்தில் கான்கிரீட் பாதையை அகற்றி யானைகள் எளிதில் சென்று வர ஏதுவாக புல்தரை அமைக்க முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து 2-வது நாளாக மீண்டும் வனத்துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் கே.என்.ஆர் பகுதியில் இருந்து பர்லியாறு வரை யானைகள் கடந்து செல்லும் இடங்களை பார்வையிட்டனர்.

    இதுகுறி த்து தேசிய நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.பின்னர் யானைகள் பாதுகாப்பாக செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வெண்டை செடிகளும் விளைநிலத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கியதால் சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
    • பீட்ரூட்,சின்ன வெங்காயம்,தக்காளி உள்ளிட்ட காய்கறிப் பயிர்களும் பலத்த மழையால் சேதமடைய வாய்ப்புள்ளது.

      உடுமலை:

    குடிமங்கலம் வட்டாரத்தில் காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் பல இடங்களில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.சேதம் குறித்த தகவல் கிடைத்ததும் குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத்,உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கவி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    குடிமங்கலம் வட்டாரத்தில் கொண்டம்பட்டி பகுதியில் காலிபிளவர் சாகுபடியில் சேதம் ஏற்பட்டுள்ளது.சொட்டு நீர்ப் பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் ஒரு மாதம் வயது கொண்ட காலிபிளவர் மழைநீரில் முழுவதுமாய் மூழ்கி விட்டது.அத்துடன் சுமார் 65 முதல் 70 நாள் வயது கொண்ட காலிபிளவர் பூக்கள் முழுவதும் அழுகி வீணாகியுள்ளது.காலிபிளவரைப் பொறுத்தவரை பூக்கும் பருவத்தில் மழை பெய்வது மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.தற்போது பெய்துள்ள கனமழையால் இந்த பகுதியில் பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த காலிபிளவர் முற்றிலும் சேதமடைந்துள்ளது.இதுதவிர சில பகுதிகளில் வெண்டை செடிகளும் விளைநிலத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கியதால் சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    பீட்ரூட்,சின்ன வெங்காயம்,தக்காளி உள்ளிட்ட காய்கறிப் பயிர்களும் பலத்த மழையால் சேதமடைய வாய்ப்புள்ளது.இதுதவிர பலத்த காற்று வீசினால் வாழை மரங்களும் சேதமடையும் வாய்ப்பு உள்ளது.சேதத்தைத் தவிர்க்க விவசாயிகள் வடிகால் வசதி,முட்டு கொடுத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.அதையும் தாண்டி மழை மற்றும் காற்றினால் தோட்டக்கலைப் பயிர்களில் சேதம் கண்டறியப்பட்டால் விவசாயிகள் உடனடியாக தோட்டக்கலைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பும் அறிக்கையின் அடிப்படையிலேயே விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.எனவே விவசாயிகள் துணை தோட்டக்கலை அலுவலர் சிவானந்தம்-9944937010,உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சரவணக்குமார்-9789197648,சங்கவி-8111055320,ராஜசேகரன்-8675556865 ஆகியோரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

    • தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியத்துறை, வருவாய்த்துறையினர் விரைந்து சென்று மரத்ைத அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீரமைத்தனர்.
    • அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. மேலும் நாயுடுபுரம் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியத்துறை, வருவாய்த்துறையினர் விரைந்து சென்று மரத்ைத அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீரமைத்தனர்.

    மேலும் மண் சரிவு ஏற்பட்ட இடங்கள், மரங்கள் முறிந்து கிடந்த பகுதியில் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணை த்தலைவர் மாயகண்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்க ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    இது குறித்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், கொடைக்கா னலில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆற்று பகுதியை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது. மேலும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    • குளத்தில் ஆங்காங்கே மீன்கள் செத்து மிதப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
    • நீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையத்தில் நல்லாற்றின் குறுக்கே 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. திருப்பூரில் ஏராளமான விதிமீறல் பட்டன், ஜிப் நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்நிறுவனங்களில் இருந்து சுத்திகரிக்காத சாயக்கழிவுநீர், மாநகர பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் நல்லாற்றில் கலக்கிறது.

    தொடர் மழையால் நல்லாற்றில் உள்ள சாயம், சாக்கடை கழிவுகள், நஞ்சராயன் குளத்தில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இதையடுத்து குளத்தில் ஆங்காங்கே மீன்கள் செத்து மிதப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்தநிலையில் மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் வடக்கு சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தியுள்ளனர். நல்லாற்றில் சாயக்கழிவுநீர் கலக்கிறதா,ஆற்றுநீரின் டி.டி.எஸ்., அளவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இது குறித்து மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணத்தை கண்டறிவதற்காக 2 நாட்கள் தொடர் ஆய்வு நடத்தியுள்ளோம். டி.டி.எஸ்., அளவு 900 க்கு கீழ் சீராகவே உள்ளது. நீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். குளத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நீர் மாதிரி பரிசோதனை முடிவுகள் வந்தபின்னர் அறிக்கை தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடமும், வாரிய உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்படும் என்றனர்.

    • ரூ.110 கோடி மதிப்பில் பணி நடைபெற உள்ளது
    • நில உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்காமல் பணிகள் தொடங்கியது வருந்தத்தக்கது என பொதுமக்கள் வேதனை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க, வேலூர் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் தொடங்கி, கீழ்பள்ளிப்பட்டு நாகநதி ஆற்றுக்கால்வாய் வரை 16 பில்லர்களுடன், 12 மீட்டர் அகலம் கொண்ட மேம்பாலம் ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்படும் பணி நடைபெற உள்ளது.

    இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ஜெயக்குமார் உதவி பொறியாளர் இளங்கோவன் ஆகியோர் அளவீடு செய்தனர்.

    சர்வீஸ் ரோடு பெட்ரோல் பங்க் முதல் கீழ்பள்ளிப்பட்டு கால்நடை மருத்துவ நிலையம் வரையிலும், கீழ்பள்ளிப்பட்டு பழைய லெவல் கிராசிங் ரோடு வழியாக 9 மீட்டர் உயரத்தில், 3.5 மீட்டர் அகலத்தில் சப் வே சுரங்கப்பாதை அமைத்து திருவண்ணாமலை ரோட்டில் இணைக்கப்படுகிறது.திட்ட மதிப்பில் நில ஆர்ஜிதம் இழப்பீட்டுத் தொகையும் அடங்கும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

    இந்த அளவீடு செய்யும் போது கீழ்வல்லம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், மற்றும் கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர். நிலம் மற்றும் கட்டிடங்கள் வழங்கிய உரிமையாளர்கள் தங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்காமல் பணிகள் தொடங்கியது மிகவும் வருந்தத்தக்கது என தெரிவித்தனர்.

    • முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாக புகார்
    • தரமற்ற முட்டைகள் சப்ளை செய்தால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க அறிவுரை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மையங்களுக்கு கடந்த வாரம் சப்ளை செய்யப்பட்ட முட்டைகளில் ஒரு சில சத்துணவு மையங்களில் தரமற்ற முட்டைகள் இருந்ததாகவும், ஒரு சில முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், ஊரக வளர்ச்சி துறை வேலூர் மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோரின் உத்தரவின் பேரில் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன் அதிகாரி களுடன் தாழையாத்தம் ஊராட்சி, மேல்முட்டுகூர் ஊராட்சி, உள்ளி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்யப்பட்ட முட்டைகளை பார்வையிட்டு தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    அப்போது சத்துணவு பணியாளர்களுக்கு தரமற்ற முட்டைகள் சப்ளை செய்யப்பட்டால் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கோ அல்லது வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    • சாலை அமைப்பதற்கான பணிகளை பார்வையிட்டார்
    • பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்து விசாரித்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பாச்சல் ஊராட்சியில் உள்ள பல்வேறு பணிகள் மற்றும் பழுதடைந்த கட்டிடங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதியான இதயநகரில் நடைபெற்றுவரும் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.

    இதனை அடுத்து பாச்சல் டிவி ஸ்டேஷன் பகுதியில் பழுதடைந்துள்ள பயணியர் நிழற்க்கூடத்தை அகற்றி புதிய நிழல் கூடம் அமைக்க வேண்டும் எனவும் புளியாங்கொட்டை பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள அங்கன்வாடிமையம் கட்டிடத்தை அகற்றி புதிய அங்கன்வாடிமையம் அமைக்க வேண்டும் என பாச்சல் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா திருப்பதி, துணைத்தலைவர் சஞ்சீவி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

    அதன் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், உதவி செயற்பொறியாளர் சேகர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பழுதடைந்த கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

    மேலும் புளியாங்கொட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தும் வகையில் ஏரிக்கரையின் மீது புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர் வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்து சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை வைத்ததின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் புளியாங்கொட்டை ஏரிக்கரையில் சாலை அமைப்பதற்கான பணி குறித்து ஆய்வு செய்தார்.

    இதனை அடுத்து ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு வளர்ச்சி பணிகளையும், பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்தும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    • பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பல்வேறு புகார் சென்றனர்.
    • சுமார் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுமார்4 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலம் கீழ்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிக விலையில் மதுபானங்கள் விற்கப்படுவதாகவும்,போலி மதுபானங்கள்,மற்றும் புதுவை மதுபானங்கள் விற்கப்படுவதாகவும்,விற்பனையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், போன்ற பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பல்வேறு புகார் சென்றனர். இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து மாவட்ட மேலாளர் சத்தியன் தலைமையிலானசுமார் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுமார்4 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.இதனால் திண்டிவனத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • காரைக்காலில் டெங்கு பரவும் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில், டெங்கு நோய் பரவும் பகுதிகளில், மாவட்ட நலவழித்துறை அதிகாரிகள் ஆய்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கியதிலிருந்து, ஒரு சில நகர் பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை காரைக்கால் மாவட்டத்தில் 4 பேருக்கு டெங்கு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காரைக்கால் ராம்நகர், நேரு நகர் விரிவாக்கத்தில் இருவருக்கு நேற்று டெங்கு நோய் கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து, மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் தலைமையில், நோய்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர், சுகாதர ஆய்வாளர் சிவவடிவேல், சுகாதார உதவியாளர் மரிய ஜோசப் மற்றும் கிராமப்புற செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தி, டெங்கு சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    மேலும், அப்பகுதி மக்களுக்கு, கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்கள் குறித்து, அதனை தடுக்கும் முறைகள், சிகிச்சை முறை, டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக, அப்பகுதி முழுவதும், கொசுக்களை அழிக்கும் புகை மருந்து அடிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, நோய்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர் பொதுமக்களிடம் பேசியதாவது:-மழை காலங்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்க கூடும். அவற்றில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் முட்டையிட்டு கொசு உற்பத்தியை பெருக்கும். இதனால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகையால் பொதுமக்கள் இந்த மழைக்கால, பேரிடர் காலங்களில் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி இருந்தால், மருந்துகளை உட்கொள்ளா மல், அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். என்றார்.

    • தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக காவல்துறையில் தனி பாதுகாப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.
    • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்ட் சுவாமிநாதன் தலைமையிலான குழுவினர் வந்தனர்.

    திருத்தணி:

    தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக காவல்துறையில் தனி பாதுகாப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு பிரிவின் போலீஸ் சூப்பிரண்டாக சுவாமிநாதன் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்ட் சுவாமிநாதன் தலைமையிலான குழுவினர் வந்தனர். இதனை தொடர்ந்து அங்குள்ள மண்டபத்தில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், வருவாய் ஆர்.டி.ஓ.ஹஸ்ரத்பேகம், முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா, தாசில்தார் வெண்ணிலா, இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தலைமை மருத்துவர் லட்சுமி நரசிம்மன், தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு, சுகாதாரத்துறை, மின்சார துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோவிலின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, கோவில் தங்க கோபுரம், கோவிலில் உள்ள அறைகள், கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், ஜெனரேட்டர் அறை, கோவிலில் பணிபுரியும் ஊழியர்களின் விவரங்கள், மலை மேல் உள்ள கடைகள், கோவில் தங்கத்தேர், வெள்ளி தேர் உள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

    • வெல்லம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 4700 கிலோ (அஸ்கா) சர்க்கரை மற்றும் வெல்லத்தை பிளீச்சிங் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • பொதுமக்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும் வெல்லத்தை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் திருப்பூர்மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிரஞ்சீவி, பாலமுருகன், விஜயகுமார் மற்றும் ரகுநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மடத்துக்குளம் வட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது ஆலைகளில் தயாரித்து விற்பனைக்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்ததில் கலப்படம் என சந்தேகிக்கப்பட்ட 2500 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதிலிருந்து 2 வெல்லம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 

    மேலும் வெல்லம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 4700 கிலோ (அஸ்கா) சர்க்கரை மற்றும் வெல்லத்தை பிளீச்சிங் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெல்லம் அடர் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். மாறாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக வேதிப்பொருட்களான சோடியம் பை சல்பேட், கால்சியம் கார்பனேட், சல்பர் டை ஆக்சைடு, சூப்பர் பாஸ்பேட் போன்ற ரசாயன பொருட்களை பயன்படுத்தக்கூடாது. வெல்லம் தயாரிக்க அஸ்கா பயன்படுத்தக்கூடாது என வெல்லம் தயாரிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

    வெல்லம் உற்பத்தியாளர்கள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்றிருக்க வேண்டும் . அரசு உத்தரவின்படி வெல்லம் தயாரிக்கும் இடங்களில் சிசிடிவி. கேமரா பொருத்தி இருக்க வேண்டும். வெல்லம் தயாரிப்பில் விதிமீறல் இருப்பது தெரியவந்தால், உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை பாயும்.

    பொதுமக்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும் வெல்லத்தை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். வியாபாரிகள் தரமற்ற வெல்லத்தை வாங்கி விற்கக்கூடாது.

    இவர் அவர் கூறினார்.

    ×