search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229679"

    • ரோட்டில் சுற்றித்திரியும் கழுதைகள் சண்டையிட்டு ஓடுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
    • பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அன்றாடம் சாலையில் செல்கின்றனர்.

    கடலூர்; 

    கடலூர் மாவட்டம் திட்ட க்குடியில் விருத்தாச்சலம் மாநில சாலையில் போக்கு வரத்துக்கு இடையூறாக ரோட்டில் சுற்றித்திரியும் கழுதைகள் சண்டையிட்டு ஓடுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் சாலையில் செல்லும் இருசக்கர வாக னங்கள், 4 சக்கர வாகன ங்கள், பாதசாரிகள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அன்றாடம் சாலையில் செல்கின்றனர்.

    திட்டக்குடியில் மண ல்மேடு பகுதியைச் சேர்ந்த கழுதைகள் ரோட்டில் காலை, மாலை, இரவு என அனைத்து நேரங்களிலும் ரோட்டில் சுத்தி திரிவது மட்டு மில்லாமல் ஒன்று க்கொன்று சண்டையிட்டுக் கொண்டு தாறுமாறாக ரோட்டில் ஓடுவதால் இருசக்கர வாகனங்கள் மீது மோதுவதால் அன்றாட விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே திட்டக்குடி காவ ல்து றை மற்றும் நகரா ட்சி நிர்வாகம் திட்டக்கு டியில் கழுதை களை பராமரிக்கும் உரிமையாளர்களை வரவ ழைத்து ரோட்டில் சுத்தி திரியும் கழுதைகளை கட்டிப்போட்டு முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்துமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கன்றுகள் நட்டு மரமாகும் வரை பராமரிக்க வேண்டும்.
    • மரக்கன்றுகள் நட்டு சிறந்த முறையில் பராமரித்து வரும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் வீட்டுக்கு ஒரு விருட்சம் மரக்கன்றுகள் வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தலைமை ஆசிரியர் மகேஸ்வரி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமமூர்த்தி, பேராவூரணி லயன்ஸ் சங்க தலைவர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி கலந்துரையாடினார். கன்றுகள் நட்டு மரமாகும் வரை பராமரிக்க வேண்டும். இதன் மூலம் பசுமை புரட்சி ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

    மரக்கன்றுகள் நட்டு சிறந்த முறையில் பராமரித்து வரும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, 2-ம் பரிசாக 2 பேருக்கு ரூ.2000 3-ம் பரிசாக 3 பேருக்கு ரூ.1000 என மொத்தம் 6 பேருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என தலைமை ஆசிரியர் அறிவித்தார்.

    நிகழ்ச்சியில் கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் ராதிகாமைக்கேல், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ பிரபாகரன், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, செல்வேந்திரன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பசுமை பூமி வேளாண்மை சமூக நல அறக்கட்டளை சார்பில் 1000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் கிராமத்தில் தாய் தந்தையரை இழந்து, மூளை நரம்பியலால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சகோதரியுடன் வசித்து வந்த பாண்டிமீனா என்ற ஏழை மாணவிக்கு சாலை வசதியுடன் கூடிய கான்கிரீட் வீடு பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் சொந்த நிதி, தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.6 லட்சம் செலவில் கட்டி கொடுத்து திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி கண்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி மரக்கன்றுகளை பராமரிப்பது குறித்து பேசினார்.
    • பள்ளி வளாகத்தில் மாணவர்களுடைய பெயரில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் காரப்பிடாகை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில் 100 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் இன்டராக்ட் கிளப் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க பள்ளி) கார்த்திகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாகை வனச்சரகர் ஆதி லிங்கம் மாணவர்களுக்கு 100 மரக்கன்றுகளை வழங்கி மரக்கன்றுகளை பராமரிப்பது குறித்து பேசினார்.

    தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் "சுற்றுச்சூழல் காப்பதில் மாணவர்களின் பங்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார். வேளாங்கண்ணி ரோட்டரி கிளப் சார்பில் ஐந்து இரும்பு கூண்டுகள் வழங்கப்பட்டன.

    இன்டராக்ட் சங்க தொடக்க விழாவில் ரோட்டரி கிளப்பை சேர்ந்தவர் சாமிநாதன், பிரகாஷ், அனுஷா நீலகண்டன், ஆராமுதன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாணவிகள் சுதர்ஷினி மற்றும் ஹரிணி இன்ட்ராக்ட் சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நடராஜன் வரவேற்புரை ஆற்றினார். தேசிய பசுமைப்படை பள்ளி பொறுப்பாசிரியர் கயிலை ராஜன் நன்றி கூறினார்.

    பின்னர் பள்ளி வளாகத்தில் 100 மாணவர்களுக்கு நூறு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு மாணவர்களுடைய பெயரில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    • 500-க்கும் மேற்பட்ட பழமரக்கன்றுகள் நடப்பட்டு கூண்டு வைத்து பராமரிக்கும் பணி நடைபெற்றது.
    • செம்பனார்கோயில், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் 2600 மரக்கன்றுகள் நட தீர்மானம்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த கன்னியாக்குடி கிராமத்தில் அரசு மனநல காப்பகம் அமையவுள்ள வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு வீட்டிற்கு மூன்று மரக்கன்றுகள் என்ற அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சீர்காழி ஒன்றிய ஆணையர் இளங்கோவன் தலைமை வகித்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய பொறியாளர் கலைசெல்வன், ஒரு வீட்டிற்கு மூன்று மரக்கன்றுகள் அமைப்பினை சேர்ந்த யாமினிஅழகுமலர் முன்னிலை வகித்தனர். சீர்காழி கோட்டாட்சியர் உ.அர்ச்சனா பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு துவக்கிவைத்தார்.

    தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பல்வேறு பலன் தரும் பழமரக்கன்றுகள் ஒரேநாளில் நடப்பட்டு கூண்டு வைத்து பராமரிக்கும் பணி நடைபெற்றது. இந்த அமைப்பு சார்பில் மயிலாடுதுறை, கொள்ளிடம், செம்பனார்கோயில், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் 2600மரக்கன்றுகள் நட தீர்மானிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    • சுமார் 80 ஆயிரம் மரக்கன்றுகள் பாதுகாக்கப்பட்ட இடங்களில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றோம்.
    • இம்மாத இறுதியில் ஒரு லட்சமாவது மரம் நடப்பட உள்ளது என்பது சிறப்புக்குரியதாகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமைக் குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட பசுமைக் குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டம் உலக புவி தினத்தன்று துவங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 80 ஆயிரம் மரக்கன்றுகள் பாதுகாக்கப்பட்ட இடங்க ளில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றோம்.

    இம்மாத இறுதியில் ஒரு லட்சம் ஆவது மரம் நடப்பட உள்ளது என்பது சிறப்புக்குரியதாகும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவினை அதிகப்படுத்தும் நோக்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தினை தொடர்ந்து ஊருக்கு ஒரு வனம் திட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சி யில் தொடங்கப்பட்டு உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் மியாவாக்கி அடிப்படையில் அடர்ந்த காடுகள் உருவாக்கப்படுகிறது. இதில் ஆயிரம் சதுர அடியில் 200 முதல் 250 மர கன்றுகள் நடலாம். தற்போது ஒரு ஏக்கர் பரப்பளவில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டுள்ளது.

    இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 ஊராட்சிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன் இன்னும் 4 மாத காலத்தில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சங்கர், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர். ராதிகா மைக்கேல், செயலாளர் முனைவர் ராம் மனோகர், இணைச் செயலாளர் பொறியாளர். முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம் பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், துணைத் தலைவர் ஜெயந்தி சதானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் சௌமியா ஜனார்த்தனன், ஊராட்சி மன்ற செயலாளர் சக்தி, இயக்க உறுப்பினர்கள் முனைவர் சுகுமாரன், செல்வராணி, தன்னார்வலர்கள் லத்தீப், ரவிக்குமார், கார்த்தி, பிரபாகரன், குருபிரசாத், அருந்ததி, இளவரசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 2030-ம் ஆண்டுக்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்ஜியமாக்க வேண்டும்.
    • பொதுமக்கள், தங்கள் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    சுவாமிமலை:

    உலக வெறிநோய் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதன்படி, கும்பகோணத்தில் 'ஒன் ஹெல்த்ஜீரோ டெத்' அடிப்படையில் அனைத்து துறைகளும் 2030-ம் ஆண்டுக்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடைபிடிக்கப்படுகிறது.

    ரேபிஸ் நோயால் ஏற்படும் மனித மற்றும் செல்லப் பிராணிகளின் உயிரிழப்புகளை தவிா்க்கவும், ரேபிஸ் இல்லா உலகை உருவாக்கும் வகையிலும் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் டெல்டா இன்னர் வீல் கிளப் சார்பில் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி, உதவி இயக்குனர் மருத்துவர் கண்ணன், கால்நடை மருத்துவமனையில் டெல்டா இன்னர் வீல் கிளப் தலைவர் பிஸ்மில்லா பேகம் தலைமையில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    முகாமில் டெல்டா இன்னர் வீல் கிளப் செயலாளர் மணிமேகலை ராஜேந்திரன், துணைத்தலைவர் வச்சலா கருப்பண்ணன், துணைச் செயலாளர் லட்சுமி பிரபாகரன், பொருளாளர் இந்திராணி கிருஷ்ணன், இதழாசிரியர் சந்திரா, ஐஎஸ்ஓ ஜெயந்தி, உறுப்பினர்கள் வைத்தியநாதன், பிரேமா பாலு மருத்துவ ஷெரின் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் கணேஷ், ரகுநாத், யாழினி தேவி, தேவ பிரசன்னா, கால்நடை ஆய்வாளர் ரமேஷ், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பழனிவேல், மதியழகன், கற்பகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பொதுமக்கள், தங்கள் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    • பெரிய கோவில் குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் புதிதாக விட்டு நிரப்பப்டும்.
    • குளத்தை பராமரிக்காமல் தண்ணீர் விட்டதால் சாக்கடை நீர் மற்றும் பாசி படிந்து கிடைக்கிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டத்துக்கு உள்பட்ட நெடும்பலம் கிராமத்தில் திருத்துறைப்பூண்டி பெரிய கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் புதிதாக குளத்தில் விட்டு நிரப்பப்டும்.

    அதுபோல் இந்த ஆண்டும் குளத்தில் தண்ணீர் விடப்பட்டது.

    குளத்தில் மழை பெய்து சாக்கடை நீர் மற்றும் பாசி படிந்து கிடைக்கிறது.

    அதை பராமரிக்காமல் தண்ணீர் விட்டதால் பாசி படிந்த தண்ணீருடன் கலந்து கிடைக்கிறது.

    அதனால் துர்நாற்றம் வீசுகிறது.

    அதனை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கோவில் நிர்வாகம் தண்ணீரை இறைத்து விட்டு புதிதாக நீர் விட்டு கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது.
    • நடைபாதை அமைத்தல், சுற்றுச்சுவர் சீர்செய்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் பணிகள் செய்யப்படஉள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதியில் அமைந்துள்ள குமரன் பூங்காவில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது.

    அதன்படி, நடைபாதை அமைத்தல், சுற்றுச்சுவர் சீர்செய்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், குழந்தைகள் விளையாட்டுகளுக்கான ஏற்பாடுகள் ஆகியன செய்யப்படவுள்ளது.

    அடுத்து பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்காக நடைபெற்ற பூமி பூஜையில் ராஜகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

    நகராட்சித் மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி உறுப்பினர்கள் ராஜலெட்சுமி ராஜேந்திரன், சர்வோதயன், ரமேஷ், மணிமேகலை மணிவண்ணன் மற்றும் நகராட்சி பணி ஆய்வர்கள் ரம்யா, ராஜாராமன், ஒப்பந்தகாரர் ரிஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சான்றிதழ் கிடைக்க பெற்றதால் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் பராமரிப்பு செலவை மத்திய அரசு வழங்கும்.
    • 350 படுக்கை வசதிகள் உள்ளதால், சுமார் ரூ.35 லட்சம் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மாவ ட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தேசிய தர மதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இதற்கான சான்றிதழை மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயகுமார், லக்ஷயா மருத்துவ அலுவலர் டாக்டர் கவிதா ஆகியோரிடம் வழங்கினார்.

    இந்த சான்றிதழ் கிடைக்கப் பெற்றதால் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் பராமரிப்பு செலவை மத்திய அரசு வழங்கும்.

    அதன் அடிப்படையில் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் 350 படுக்கை வசதிகள் உள்ளதால், சுமார் ரூ.35 லட்சம் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அதுபோல் மகப்பேறு அறுவை சிகிச்சை அறைகளை சிறந்த முறையில் பராமரித்ததற்காக நடத்தப்பட்ட லக்ஷயா ஆய்வின் மூலம் பெறப்பட்ட சான்றிதழ் அடிப்படையில் ஆண்டுதோறும் சுமார் ரூ.5 லட்சம் சிறப்பு நிதி கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஒரு நாள் முழுவதும் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.
    • அதன் பின்பு தற்காலிகமாக சாலை சீரமைப்பு செய்யப்பட்டு மலை பாதையில் போக்கு வரத்து தொடங்கப்பட்டது.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் பெய்த கனமழை காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலைப் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்றப்பட்டு ஒரு நாள் முழுவதும் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்பு தற்காலிகமாக சாலை சீரமைப்பு செய்யப்பட்டு மலை பாதையில் போக்கு வரத்து தொடங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட சாலைகளை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். மேலும் பாதிப்படைந்த தடுப்புச்சுவர்களுக்கு திட்ட மதிப்பீடு செய்யவும், மழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய சாலை பராமரிப்பு குறித்தும் அறிவுரைகளை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் துரை, ஏற்காடு உதவிக் கோட்டப் பொறியாளர் பிரபாகரன், உதவிப் பொறியாளர் ராஜேஷ்குமார் மற்றும் சாலை ஆய்வாளர்கள் ரமேஷ் மற்றும் செல்வராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
    • நடப்படும் மரக்கன்றுகள் நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் பணியினை தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமை குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் சர்வதேச நீல வானம் தூய காற்று தினத்தை முன்னிட்டு வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்கொண்டார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    தஞ்சாவூர் யாகப்பா நகர் பிஷப் தேவதாஸ் ஆம்ப்ரோஸ் பள்ளியில் (அன்னை வேளாங்கண்ணி கல்லூரி வளாகம்) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம் ,மாவட்ட பசுமை குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின்கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதுவரை வரை கல்லூரி மற்றும் பொது இடங்களில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் நடப்படும் மரக்கன்றுகள் நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் பணியினை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் யாகப்பா நகர் பிஷப்தேவதாஸ் ஆம்ப்ரோஸ் பள்ளியில் கலெக்டர் தலைமையில் சர்வதேச நீல வானம், தூய காற்று தினத்தை முன்னிட்டு மாணவ -மாணவியர்கள் பசுமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்வில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற் பொறியாளர் விஜயப்பிரியா, கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர். ராதிகா மைக்கேல், இணைச் செயலாளர் பொறியாளர்முத்துக்குமார், பிஷப் பள்ளி தாளாளர் அருட்தந்தை வின்சென்ட் செபாஸ்டின், முதல்வர் சகோதரி பிரமிளா, கவின்மிகு தஞ்சை இயக்க உறுப்பினர்கள் செல்வராணி, கவிஞர் ராமதாஸ், தன்னார்வலர்கள் இளவரசன், பிரபாகர், ரவிக்குமார், குரு பிரசாத், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மல்பெரி செடிகளில் இருந்து ஆண்டுக்கு, 6 முறை தண்டு மற்றும் இலைகள் வெட்டி எடுக்கப்படுகிறது.
    • ஒரு செடியிலிருந்து ஆண்டுக்கு 10 கிலோ பறிக்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை, பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, பழநி உள்ளிட்ட பகுதிகளில் மல்பெரி சாகுபடி செய்து பட்டுக்கூடு வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.நிலைப்பயிராக பயிரிடப்படும் மல்பெரி செடிகளில் இருந்து ஆண்டுக்கு, 6 முறை தண்டு மற்றும் இலைகள் வெட்டி எடுக்கப்படுகிறது.சராசரியாக ஒரு செடியிலிருந்து ஆண்டுக்கு 10 கிலோ பறிக்கப்படுகிறது. இவ்வாறு அறுவடை செய்யப்படுவதால் செடிகளுக்கு அதிக அளவு நுண்Èட்டம் உள்ளிட்ட சத்துகள் தேவைப்படுகிறது.செடிகளுக்கு தேவையான உரங்களை அளிக்காவிட்டால் மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு இலைகளின் தரம் குறையும். தரமற்ற இலைகள் பட்டுப்புழுக்களுக்கு உணவாக அளிப்பதால், புழுக்களுக்கு நோய்த்தாக்குதல் ஏற்பட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், தரமற்ற கூடுகளும் உற்பத்தியாகிறது.

    எனவே மல்பெரி தோட்ட பராமரிப்பில் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வகையில் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் தொழு உரம் இடும் பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.

    மல்பெரி தோட்டங்களை பராமரிக்கும் விவசாயிகள், மண் பரிசோதனை செய்வது அவசியம். பரிசோதனையில் மண்ணின் கார அமிலத்தன்மை, மின் கடத்து திறன், கரிம கார்பன் அளவு, பாஸ்பரஸ், பொட்டாஷ் ஆகிய தன்மைகளின் அளவுகள் கண்டறியலாம்.இதன் அடிப்படையில் நுண்Èட்டசத்து மற்றும் பேரூட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து அதற்கேற்ப உரமிடலாம். மண்ணில் குறைபாடுள்ள சத்துகளை மேம்படுத்தினால் தரமான இலைகளை உற்பத்தி செய்ய முடியும் என கோவை வேளாண் பல்கலைக்கழகமும் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கி வருகிறது.

    ×