என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 229679"
- நாகர்கோவில்-கொல்லம் உள்பட 3 ரெயில்கள் ரத்து
- மதுரை சந்திப்பு-புனலூர். எக்ஸ்பிரஸ் ரெயில் திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்
நாகர்கோவில் :
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நேமம்-நெய்யாற்றின்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை (சனிக்கிழமை) தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி நாகர்கோவில்-கொல்லம் உள்பட 3 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி நாளை நாகர்கோவில்-கொல்லம் பயணிகள் ரெயில் (வண்டி எண். 06426), கொல்லம்-நாகர்கோவில் பயணிகள் ரெயில் (வண்டிஎண்.06427), திருவனந்த புரம்-நாகர்கோவில் பயணிகள் ரெயில் (வண்டிஎண்.06433) ஆகிய 3 ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், நாகர்கோவில்-கோட்டயம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ்ரெயில் (வண்டி எண். 16366) திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயத்திற்கு இயக்கப்படும். அதாவது நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) புறப்படும் மதுரை சந்திப்பு-புனலூர். எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டிஎண்.16729) திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். அதாவது நாளை இந்த ரெயில் திருநெல் வேலி-புனலூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டிஎண்.16730) 18-ந்தேதி திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு வழக்கமான நேரத்தில் புறப்படும். அதாவது இந்த ரெயில் புனலூர்-திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது. நாளை புனலூர்-நாகர்கோவில் பயணிகள் ரெயில் (வண்டிஎண்.06639) திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதாவது இந்த ரெயில், திருவனந்தபுரம்-நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உயர் அழுத்த மின்பாதைகளில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது.
- திம்மநாயக்கன்புதூர், செட்டிபுதூர், தண்டுக்காரன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
திருப்–பூர்,
தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அவினாசி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துணை மின்நிலையங்களில் உள்ள உயர் அழுத்த மின்பாதைகளில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை பரமசிவம்பாளையம், பச்சாம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், ஜெ.ஜெ.நகர், கந்தம்பாளையம், நாதம்பாளையம், புள்ளே கவுண்டம்பாளையம், வினாயகா ரிச் லேண்ட், அபிராமி கார்டன், இந்திராநகர், ஏ.எஸ்.காலனி, காவிலிப்பாளையம்புதூர், அப்போலோ அகரம், மொண்டிபாளையம், ஆலத்தூர், தொட்டிபாளையம், திம்மநாயக்கன்புதூர், செட்டிபுதூர், தண்டுக்காரன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்