search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229701"

    • பாவூர்சத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது.
    • கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

    தென்காசி:

    தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. 45-வது பிறந்தநாள் விழா கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் சாக்ரடீஸ், விஜயன், ஒன்றிய கவுன்சிலர்கள் வளன் ராஜா, ராஜேஸ்வரி மற்றும் மதிச்செல்வன், ஷாலி மேரி, ஜெகன், டேனியல், குருசிங், செந்தூர் உள்ளிட்ட தி.மு.க. பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • மரக்கன்றுகளின் விவரங்களை உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளவும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் இம்மாதத்திற்குள் மகோகனி, செம்மரம், வேங்கை, தேக்கு , ரோஸ்வுட் ஆகிய மரக்கன்றுகள் பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வரவுள்ளது.

    மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் தேவைப்படும் மரக்கன்றுகளின் விவரங்களை உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளவும் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    • பொது சுகாதாரத் துறை சார்பில் வட்டார அளவில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • இதன்படி, சேலம் மாவட்டம் ஆத்தூர் சுகா தார மாவட்டம், பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    வாழப்பாடி:

    தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை தொடங்கப்பட்டு 100-ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி தமிழகத்தின் அனைத்து சுகாதார மாவட்டங்களிலும் பொது சுகாதாரத் துறை சார்பில் வட்டார அளவில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன்படி, சேலம் மாவட்டம் ஆத்தூர் சுகா தார மாவட்டம், பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில், ஆத்தூர் சுகாதாரப் பணிகள் (பொறுப்பு) துணை இயக்குனர் வித்யா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் மற்றும் மருத்துவ அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு, பனை விதைகள் உள்பட 100 மரக்கன்றுகளை சுகாதார நிலைய வளாகத்தில் நட்டு, முறையாக பராமரித்து வளர்ப்பதென உறுதிமொழி ஏற்றனர். இறுதியில் சுகாதார ஆய்வாளர் செல்வபாபு நன்றி கூறினார்.

    • பிறந்தநாளை முன்னிட்டு வி.ஐ.டி.துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    வேலூர்:

    காட்பாடியில் உள்ள அன்பு உலகம் தொண்டு நிறுவனம் சார்பில் வி.ஐ.டி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அன்பு உலகம் தொண்டு நிறுவன தலைவர் வக்கீல் பி.டி.கே.மாறன் தலைமை தாங்கினார்.

    வி.ஐ.டி.துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் கலந்துகொண்டு சுற்று சூழலின் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்.

    முன்னதாக நேற்று முன்தினம் வி.ஐ.டி.துணை தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு வெலாசிட்டி மால் வளாகத்தில் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் மற்றும் பி.வி.ஆர்.திரையரங்கில் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கும் காலை முதல் இரவு வரை மரக்கன்றுகளையும், இனிப்புகளையும் அன்பு உலக தொண்டு நிறுவன தலைவர் வக்கீல் பி.டி.கே.மாறன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பி.வி.ஆர். திரையரங்க மேலாளர் கலாநிதி, மாறன் அசோசியேட்ஸ் மேலாளர் மணிமாறன் மற்றும் அன்பு உலக தொண்டு நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்‘ திட்டத்தின் கீழ்10,998 தேக்கு மரக்கன்றுகள் விவசாயி களுக்கு வழங்கப்பட்டது.
    • ரூ.15 மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள்உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் உழவர் நலத்துறை மூலம் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்' திட்டத்தின் கீழ்10,998 தேக்கு மரக்கன்றுகள் விவசாயி களுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்ப டுத்த, வனத்துறையின் நாற்றங்கால்களில் ரூ.15மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள்உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது உழவன் செயலி வாயிலா கவோ தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளவும். மேலும் இந்த ஆண்டில் 22,500 செம்மரம், மகோகனி, சந்தனம், சிசு மரம் ஆகிய மரங்கள் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    • 20 நிமிடங்களில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்தனர்.
    • மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனைக்காக அனுப்பட்டுள்ளது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டத்தில் பசுமை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி 6 நாட்களில் 1 லட்சம் மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதனை முன்னிட்டு கடந்த 9-ந் தேதி காரைக்குடி கவிஞர் கண்ணதாசன் மணி மண்டபத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பசுமை திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    5-ம் நாளான நேற்று வரை 80 ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சமுக ஆர்வலர்கள் விவசாயிகள் என அனைத்து தரப்பினர்க ளுக்கும் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, 6-ம் நாளான இன்று கின்னஸ் சாதனை முயற்சியாக, 20 நிமிடங்களில் 25 ஆயிரத்து 350 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது.

    அழகப்பா கலை கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனை முயற்சியை கலெக்டர் மதுசூதன் ரெட்டி, உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் லால்வேனா, காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மரங்களை ஆர்வமுடன் நட்டனர்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனைக்காக அனுப்பட்டுள்ளது. முடிவில் ஐ.எம்.ஏ. காரைக்குடி கிளை செயலாளர் டாக்டர் குமரேசன் நன்றி கூறினார்.

    • குறுங்காடு வளா்ப்பதற்காக மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • 4 ஆயிரத்து 250 மரக்கன்று வகைகள் நடப்பட்டு முறையாக பராமாிக்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் ப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பொட்டபாளையம் ஊராட்சியில் குறுங்காடு வளா்ப்பதற்காக மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இதை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்து, முக்குடி ஊராட்சியில் குறுங்காடு வளா்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் பசுமையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு அதனை முறையாக பராமாிக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டு களுக்குள் 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டு பொதுமக்கள் மற்றும் தன்னார்வலா்களின் பங்களிப்புடன் அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

    மேலும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 2020-21-ம் ஆண்டு மற்றும் 2021-22-ம் ஆண்டிற்கு குறுங்காடு வளா்ப்பதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டு, மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி பொட்டபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் 2022-23-ன் கீழ் சுமார் 3½ ஏக்கா் பரப்பளவில் இடம் தோ்வு செய்யப்பட்டு மரக்கன்று வகைகளான வேம்பு 150 எண்ணிக்கையும், புங்கை 200 எண்ணிக்கையும், பூவரசு 150 எண்ணிக்கையும், தேக்கு 100 எண்ணிக்கையும், மூங்கில் 100 எண்ணிக்கையும், நிலவாகை 100 எண்ணிக்கையும், வாகை 100 எண்ணிக்கை என மொத்தம் 900 எண்ணிக்கை கொண்ட குறுங்காடு அமைப்பதற்காக மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    முக்குடி ஊராட்சியில். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் 2021-22-ம் ஆண்டில் குறுங்காடு வளா்ப்பதற்கான நிர்வாக அனுமதி பெறப்பட்டு, கொய்யா, மா, தென்னை, வேம்பு, புளி, வாழை, மூங்கில், முருங்கை, சப்போட்டா, தேக்கு உள்ளிட்ட 20 வகையான சுமார் 4 ஆயிரத்து 250 மரக்கன்று வகைகள் நடப்பட்டு முறையாக பராமாிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) குமார், உதவிப் பொறியாளா்கள் தமிழரசி, தேவிகா, ப்புவனம் வட்்டார வளா்்ச்சி அலுவலா்கள் அங்கயங்கண்ணி (வ.ஊ.), ராஜசேகரன் (கி.ஊ), ஒன்றியப்பணி மேற்பார்வையாளா் செல்வம் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    • நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரை 14,300 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • வளசரவாக்கம் ரெயில் நகர் பாலம் முதல் மாநகராட்சி எல்லை வரை மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    சென்னை:

    சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் அடையாறு, கூவம் போன்ற ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை சமப்படுத்துதல், திடக்கழிவுகளை அகற்றுதல், மரக்கன்றுகளை நடுதல் மற்றும் தடுப்பு வேலிகளை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக ராயபுரம், அம்பத்தூர் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட கூவம் ஆற்றங்கரையோரங்களில் 4 பகுதிகளில் கரைகளை சமப்படுத்தி, பாரம்பரிய மரக்கன்றுகளான அரச மரம், ஆலமரம், மகிழம், மலைவேம்பு, அசோகமரம், பூவரசு, புங்கன், கல்யாண முருங்கை, மருத மரம், புன்னை, வேம்பு, இலுப்பை, கொய்யா, நொச்சி உட்பட 43 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.

    இதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு தற்சமயம் கரைகளை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ராயபுரம் மண்டலம், வார்டு-59க்குட்பட்ட கூவம் ஆற்றங்கரையோரங்களில் காயிதே மில்லத் பாலம் முதல் லாஸ் பாலம் வரை 2.12 கி.மீ. நீளத்திற்கு 22,990 ச.மீ. பரப்பளவில் ரூ.1.73 கோடி மதிப்பீட்டில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரை 2.1 கி.மீ. நீளத்திற்கு ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் 14,300 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    மதுரவாயல் தாய் மூகாம்பிகை பல் மருத்துவமனை கல்லூரி வளாகம் முதல் பாடிக்குப்பம் மயான பூமி வரை 1.3 கி.மீ. நீளத்திற்கு 11,800 ச.மீ. பரப்பளவில் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் 14,050 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    வளசரவாக்கம் ரெயில் நகர் பாலம் முதல் மாநகராட்சி எல்லை வரை 5.7 கி.மீ. நீளத்திற்கு ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் 21,313 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    ராயபுரம் மண்டலம், வார்டு-59க்குட்பட்ட காயிதே மில்லத் பாலம் முதல் லாஸ் பாலம் வரை மற்றும் வார்டு-60க்குட்பட்ட நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரை கூவம் ஆற்றங்கரையின் சரிவுகளில் அலையாத்தி இனத்தாவர வகைகள் நடவு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • காரைக்குடியில் நடந்த பசுமை திருவிழாவில் மாணவர்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.
    • 3 ஆண்டுகளுக்குள் 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக்கழகம் காரைக்குடி கிளை சார்பில் பசுமை திருவிழா நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி விழாவை தொடங்கி வைத்து பொதுமக்கள், மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் பசுமையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், "பசுமை தமிழ்நாடு" இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார்.அதனடிப்படையில் நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு, அதனை முறையாக பராமாிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

    சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்குள் 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டு, பொது மக்கள் பங்களிப்புடன் அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

    இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை தானாக முன்வந்து அரசுடன் இணைந்து ஒருவார காலத்தில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மரக்கன்றுகளை முறையாகப் பராமரித்திடவும், அதே போன்று பொதுமக்களும் தங்களுக்கு வழங்கப்படும் மரக்கன்றுகளை வீடுகளில் நல்லமுறையில் பராமாித்து, பசுமையான மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பசுமை திருவிழாவினை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பரதநாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மரக்கன்றுகள் வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த வா்களை கலெக்டர் கவுரவித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை மருத்துவா்கள் சந்திர மோகன், குமரேசன், பாலாஜி, வட்டாட்சியா் மாணிக்கவாசகம், வட்்டார வளா்்ச்சி அலுவலா்கள் திருப்பதிராஜன், கேசவன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின் படி தமிழகம் முழுவதும் ரூ.25 கோடி மதிப்பில் நகர்புற காடுவளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
    • கடையநல்லூர் நகராட்சி போகநல்லூர் உரக்கிடங்கில் ரூ. 7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் வேம்பு, கொடுக்காபுள்ளி, நாவல், நெல்லி, புளிய மரம் மற்றும் பாதாம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    கடையநல்லூர்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின் படி தமிழகம் முழுவதும் ரூ.25 கோடி மதிப்பில் நகர்புற காடுவளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

    அதன்படி கடையநல்லூர் நகராட்சி போகநல்லூர் உரக்கிடங்கில் ரூ. 7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் வேம்பு, கொடுக்காபுள்ளி, நாவல், நெல்லி, புளிய மரம் மற்றும் பாதாம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் 2698 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    விழாவிற்கு கடைய நல்லூர் நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, இள நிலை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அய்யாபுரம் கூட்டுறவு சங்க தலைவரும், வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பா ளருமான செல்லத்துரை மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் முகைதீன் கனி, முருகன், மாவட்ட நெசவாளர் அணி அமைப் பாளர் மூவன்னா மசூது, மற்றும் தி.மு.க. பிரமுகர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • இதில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, அதனை முறையாக பராமாிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளையின் சார்பில், கல்வி நிறுவனங்களில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் இயக்கம் செயல்படுத்திட திட்டமிடப்பட்டது.

    அதன் தொடக்கமாக காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு ''பசுமை தமிழகம்'' திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வானதி, இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை மருத்துவர்கள் மணிவண்ணன், காமாட்சி சந்திரன், ராசு, குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதிராஜன், சத்தியன், ராஜேஸ்வரி, பள்ளி தலைமையாசிரியர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கபிலர்மலை வட்டார விவசாயிகள் பாரம்பரிய விதை நெல் ரகங்கள் தேவைக்கு கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.
    • 4903 தேக்குமரக் கன்றுகள் நாமக்கல் மாவட்ட வனத்துறையால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் தூயமல்லி 50 கிலோ மற்றும் கருப்பு கவுனி 30 கிலோ ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் இருப்பு உள்ளது. எனவே, கபிலர்மலை வட்டார விவசாயிகள் பாரம்பரிய விதை நெல் ரகங்கள் தேவைக்கு கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.

    மேலும் தமிழ்நாடு அரசின் வேளாண்மை-உழவர் நலத்துறையின் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கத்தின் கீழ் கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு ரூ.15 மதிப்புடைய தரமான 4903 தேக்குமரக் கன்றுகள் நாமக்கல் மாவட்ட வனத்துறையால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

    இந்த மரக்கன்றுகள் வரப்பில் நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு, ஒரு விவசாயிக்கு 50 கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு, ஒரு விவசாயிக்கு 160 கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும். கூடுதலாக, நடவு செய்த 2-ம் ஆண்டு முதல் 4-ம் ஆண்டு வரை நல்ல முறையில் பராமரிக்கப்படும் தேக்கு கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ 7 வீதம், 3 ஆண்டுகளுக்கு ரூ 21 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    அறுவடைக்கு வரும் வளர்ந்த மரக்கன்றுகளை வெட்ட வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்திட உரிய உதவி செய்யப்படும். இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகியோ அல்லது கைப்பேசியில் உழவன் செயலியில் தங்கள் பெயரை முன்பதிவு செய்தோ, அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலரின் பரிந்துரையின்படி தேவை யான மரக்கன்றுகளை கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இலவசமாக வரும் வாரத்தில் முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம். சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதி திராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். இந்த தகவல்களை கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    ×