search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்டம்"

    • மணல் கடத்தலுக்கு உடந்தையாய் இருந்ததால் நடவடிக்கை
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மணல் கடத்தல் சம்பவங்கள் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அஞ்சுகிராமம் பகுதியில் செம்மண் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    செம்மண் கடத்தல் கும்ப லோடு அஞ்சுகிராமம் போலீஸ் நிலைய தலைமை காவலர் லிங்கேஷ் என்ப வருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    இந்த நிலையில் தலைமை காவலர் லிங்கேஷ் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பிறப்பித்து உள்ளார்.

    • கலெக்டர் அரவிந்த் வழங்கினார்
    • மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டன

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா, தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாண வியர்களுக்கிடையே நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அரவிந்த் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசிய போது கூறியதாவது:-

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுப்போ ட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிர மும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயி ரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், சிறப்பு பரிசாக தலா 2 நபர்களுக்கு ரூ.2 ஆயிரமும், தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சு ப்போட்டி மற்றும் கட்டு ரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில், கலைஞர் பிறந்த நாளை யொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் பேயன்குழி அரசு உயர்நி லைப்பள்ளி மாணவி ஹரிசபரிஷா முதல் பரிசும், நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர் லீனஸ்ஷேரன் 2-ம் பரிசும், தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தனா 3-ம் பரிசும், மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி ஸ்ரீமதி மற்றும் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி பபினாசெர்லின் ஆகி யோருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

    மேலும், கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டிகளில் இந்துக்கல்லூரி மாணவி ஈஸ்வரபிரியா முதல் பரிசும், நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி மாணவி சுப்புலெட்சுமி, 2-ம் பரிசும், முளகுமூடு குழந்தை இயேசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி விஜித்ரா மூன்றாம் பரிசும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    மேலும், தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட பள்ளி அளவில் நடைபெற்ற கட்டுரை ப்போட்டியில் மேல்பாலை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவி பிறைஸ்னீம் முதல் பரிசும், கோட்டார் கவிமணி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி பிரம்ம அக் ஷயா 2-ம் பரிசும், ஆளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சிவபிரியா, 3-ம் இடத்தை பெற்றார்கள்.

    பேச்சுப்போட்டிகளில் நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி மாணவி ரஷ்மி முதல் பரிசும், ஆளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுகைனா பாத்திமா 2-ம் இடத்தையும், தெங்கம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அகஸ்தியா மூன்றாம் பரிசும், பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    நடைபெற்ற போட்டி களில் பரிசு பெற்ற அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுக்களை தெரி வித்துக்கொள்வதோடு, இதுபோன்று மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    நிக ழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பி ரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, தனித்துணை கலெ க்டர் (ச.பா.தி) திருப்பதி, தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடுகள்
    • ஊர்வலத்தின் போது பிற மதத்தை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது.

    நாகர்கோவில்:

    விநாயகர் சதுர்த்தி விழா நேற்று மாவட்ட முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இந்து முன்னணி, இந்து மகா சபா, பாரதிய ஜனதா, சிவசேனா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அரை அடி முதல் 10 அடி வரை உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

    வீடுகளிலும், கோவில்களி லும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பொரி கொழுக்கட்டை படைத்தும் வழிபாடு செய்தனர். இன்று காலையில் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. காலை மாலை இரு வேளை களிலும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை முதல் 3 நாட்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நி லைகளில் கரைக்கப்படு கிறது. சிலைகளை கரைப்ப தற்கு மாவட்ட நிர்வா கம் 10 இடங்களில் அனுமதி வழங்கி யுள்ளது. கன்னியாகுமரி சொத்தவிளை, சங்குத்துறை, பள்ளிகொண்டான் தடுப் பணை, குழித்துறை தாமிர பரணி ஆறு, திற்பரப்பு, மணவாளக்குறிச்சி, சின்ன விளை, மண்டைக் காடு, வெட்டுமணி, தேங்காய் பட்டிணம் மற்றும் மிடாலம் ஆகிய பகுதிகளில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சிலைகள் கரைக்கப்பட உள்ள பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. அந்த பகுதிகளில் மின்விளக்கு வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது.

    நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து புறப்படும் விநாயகர் சிலை ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் கடற்கரையில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய் யப்பட்டு அதன் பிறகு கடலில் கரைக்கப்படும். இதே போல் மேற்புறத் திலிருந்து கொண்ட செல்லப் படும் விநாயகர் சிலைகள் குழித்துறை ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.

    நாளை மறுநாள் 3-ந்தேதி இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்த விளை கடலில் கரைக்கப்படுகிறது. இதே போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து சிலைகள் ஊர்வல மாக எடுத்துச் செல்லப் பட்டு கரைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    4-ந்தேதி இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சங்குத்துறை கடலில் கரைக் கப்படுகிறது. இதே போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதி களில் வைக்கப் பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஆங் காங்கே இருந்து ஊர்வல மாக எடுத்து செல்லப்பட்டு கரைக்க ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகிறது.

    சிலைகள் ஊர்வலம் நடைபெறும் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை களை மூடுவதற்கும் நடவ டிக்கையை எடுக்கப்பட்டுள் ளது. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். விநாயகர் சிலைகளை அதற்காக ஒதுக்கப்பட்ட வழியாக மட்டுமே ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

    ஊர்வலத்தின் போது கூம்பு வடிவ ஒலிபெருக்கி களை பயன்படுத்தக்கூடாது. பிற மதத்தை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது. விநாயகர் சிலைகளை மினி டெம்போக்கள் மற்றும் டிராக்டர்கள் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். விநாயகர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள் துணிகள் அழகு சாதன பொருட்களை கரைப்பதற்கு முன்னதாக பிரிக்கப்பட வேண்டும்.

    விநாயகர் சிலை ஊர்வ லத்தின்போது பட்டாசு கள் வெடிக்க தடை விதிக்கப் பட்டு உள்ளது. மேலும் சிலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் கிடைக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    • விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    • கொழுக்கட்டை, பொரி படைத்து வழிபாடு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி இந்து மகா சபா பாரதிய ஜனதா தமிழ்நாடு சிவசேனா உள்பட பல்வேறு இந்த அமைப்பு கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முக்கிய சந்திப்புகள் பொது இடங்களில் விநா யகர் சிலைகளை இன்று அதிகாலையிலேயே பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலை களுக்கு பக்தர்கள் கொழுக்கட்டை படைத்தும் வழிபாடு செய்தார்கள். மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 2 அடி முதல் 10 அடி உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ளது. கற்பக விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர் உள்பட பல்வேறு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய் யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய் யப்பட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற் கொண்டனர். விநாயகர் சிலைகள் உரிய அனுமதி வாங்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி விநாயகர் கோவில்களிலும் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள், அபிஷேகங்கள் நடந்தது. இதை எடுத்து விநாயகர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோட்டார், மீனாட்சிபுரம், வடசேரி, கிருஷ்ணன் கோவில் உள்பட நாகர் கோவில் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநா யகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய் யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    விநாயகருக்கு பொரி, கொழுக்கட்டை படைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர். கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம் பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேற்றிரவு தக்கலை, குளச்சல் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட் டார். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • குளச்சலில் துணை சூப்பிரண்டு தங்கராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • குளச்சல் சப்-டிவிசன் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்ட னர்.

    கன்னியாகுமரி:

    மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமரி மாவட்ட போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவிகளிடையே போதை எதிர்ப்பு பிரசாரமும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவுப்படி குளச்சல் சப் - டிவிசன் சார்பில் போதை எதிர்ப்பு இரு சக்கர வாகன பேரணி நேற்று மாலை குளச்சல் காமராஜர் பஸ் நிலையம் முன்பு நடந்தது. குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    பேரணி உடையார்விளை, லட்சுமிபுரம், செட்டியார் மடம், திங்கள்நகர் வழியாக இரணியல் போலீஸ் நிலையம் சென்றடைந்தது.இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியன் பெஞ்சமின், சப் - இன்ஸ் பெக்டர்கள் சுரேஷ்குமார், பாலசெல்வன், குருநாதன் மற்றும் மகளிர் போலீசார் உள்பட குளச்சல் சப்-டிவி சன் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்ட னர்.

    • அது சமயம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது.
    • தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பங்கஜவல்லி தாயார் சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பங்கஜவல்லி தாயார் சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவோண ஜேஸ்டாபிஷேகம் என்கிற பெரிய திருமஞ்சனம் நடைபெற்றது.

    அது சமயம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது. விழாவில் கோயில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், தக்கார் லட்சுமி, பாபநாசம் இறைப்பணி மன்ற தலைவர் குமார், கோவில் எழுத்தர் முருகபாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும், ஆறுகளை பாதுகாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரெயிலடியில் இன்று ஏ .ஐ. டி. யூ .சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் துரை. மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்டத் தலைவர் சேவையா, மின்வாரிய சம்மேளன துணைத்தலைவர் பொன்.தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாய சங்கத்தலைவர் முத்து உத்திராபதி நன்றி கூறினார்.

    • நாகை மாவட்டத்தை பொறுத்தவரை நடவு மற்றும் நேரடி விதைப்பு மூலமாக 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.
    • உரம் மற்றும் யூரியாக்கள் கொடுக்கவில்லை என்றால் பயிர்கள் வளர்ச்சி இல்லாமல் பாதிக்கக்கூடும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் ஒரத்தூர், கீழ்வேளூர், திருமருகல், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்தை பொறுத்தவரை நடவு மற்றும் நேரடி விதைப்பு மூலமாக 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஒரத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 25 நாட்களான பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு முட்டை டி ஏ பி, அரை மூட்டை யூரியா கலந்து கொடுக்க வேண்டும். ஆனால் நாகை தாலுக்கா பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய டிஏபி மற்றும் யூரியாக்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தால் வழங்க முடியாத நிலை உள்ளதாக விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    உரம் மற்றும் யூரியாக்கள் கொடுக்கவில்லை என்றால் பயிர்கள் வளர்ச்சி இல்லாமல் பாதிக்கக்கூடும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியாரிடம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குறுவை தொகுப்பு திட்டம் வழங்குவது ஒரு பக்கம் இருந்தாலும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க மூலம் விலைக்கு வழங்க வேண்டும் எனவும் வருங்காலங்களில் தட்டுப்பாடு இல்லாமல் கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடங்கநேரி ஊராட்சியில் திரவ கழிவு மேலாண்மையில் செங்குத்து உறிஞ்சுக்குழி அமைத்தல், மண்புழு உரம் தயாரிக்கும் மையம் உள்ளிட்ட பணிகள் கள ஆய்வு செய்யப்பட்டது.
    • வெங்கடாம்பட்டி ஊராட்சியில், அகழி அமைத்தல், தொகுப்பு மரக்கன்றுகள் நடுதல், மடத்தூர் ஊராட்சியில், மீள்நிரப்பு தண்டு அமைத்தல் ஆகிய பணிகள் கள ஆய்வு செய்யப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டம் மற்றும் மழைநீர் சேகரிப்பு தொடர்பான பணிகளின் நிலை குறித்து மத்திய கண்காணிப்பு அலுவலர், ராஜேஷ் குப்தா மத்திய தொழில்நுட்ப அலுவலர் சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தென்காசி ஊராட்சி ஒன்றியம், குத்துக்கல்வலசை ஊராட்சியில், வட்டார நாற்றங்கால் பண்ணை அமைத்தல், சில்லரைப்புரவு ஊராட்சியில், தனிநபர் உறிஞ்சிக்குழி அமைத்தல், வாறுகால் அமைத்தல், குப்பை பிரித்தெடுக்கும் மையம், மண்புழு உரக் கொட்டகை அமைத்தல் பணிகள் கடையம் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், அகழி அமைத்தல், தொகுப்பு மரக்கன்றுகள் நடுதல், மடத்தூர் ஊராட்சியில், மீள்நிரப்பு தண்டு அமைத்தல் ஆகிய பணிகள் கள ஆய்வு செய்யப்பட்டது.

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குணராமநல்லூர் ஊராட்சியில் அகழி அமைத்தல், தொகுப்பு மரக்கன்றுகள் நடுதல், குத்தப்பாஞ்சான் ஊராட்சியில், கசிவுநீர் குட்டை அமைத்தல், கடங்கநேரி ஊராட்சியில் திரவ கழிவு மேலாண்மையில் செங்குத்து உறிஞ்சுக்குழி அமைத்தல், மண்புழு உரம் தயாரிக்கும் மையம் ஆகிய பணிகள் கள ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வில் செயற்பொறியாளர் ஹசன் இப்ராஹீம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தற்போது வீட்டு தனிைமயில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 700 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய ப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக அந்த பகுதில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளு மாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில், ஜூன்.30-

    குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் வரை கொரோனாவால் 79 ஆயிரத்து 930 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    கடந்த சில மாதங்களாக பாதிப்பு குறைந்திருந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. குமரி மாவட்டத்தையொட்டி உள்ள கேரளாவில் பாதிப்பு வேகமாக பரவியதால் குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் மேற்கொள்ள ப்பட்டது.

    இருப்பினும் கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றியங்களில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது நாகர்கோவில் மாநகர பகுதியிலும் கொேரானா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர், கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவர், ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி கொேரானா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    சிறையில் அவருடன் இருந்த வேறு கைதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்குட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் நாகர்கோ விலைச் சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 டாக்டர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளான நிலையில் மேலும் ஒரு டாக்டர் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது.

    மாவட்டம் முழுவதும் நேற்று 1,040 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் 51 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதி யில் 12 பேரும், அகஸ்தீ ஸ்வரம், ராஜாக்க மங்கலம் ஒன்றியத்தில் தலா 4 பேரும், கிள்ளியூர், குருந்தன்கோடு ஒன்றியத்தில் தலா 3 பேரும், மேற்புறம், தோவாளை ஒன்றியத்தில் ஒருவரும், முஞ்சி றையில் 9 பேரும், திருவட்டாரில் 6 பேரும், தக்கலையில் 8 பேரும் பாதி ப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்களில் 28 பேர் ஆண்கள், 23 பேர் பெண்கள் ஆவார் கள். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தற்போது 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு ள்ளது. சுகாதாரத்துறை அதிகா ரிகள் தடுப்பு நடவ டிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தற்போது வீட்டு தனிைம யில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 700 பேருக்கு கொேரானா தொற்று உறுதி செய்ய ப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக அந்த பகுதில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளு மாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    • நாளை காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
    • இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய நகரங்களிலிருந்து முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.

    இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 159 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
    • இதேப்போல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் அதாவது ஜனவரி முதல் மே மாதம் வரை கஞ்சா விற்பனை தொடர்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதேப்போல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி இதுவரை தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை ரூ.89,720 கைப்பற்றப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை நடந்த 201 குற்ற வழக்குகளில் 152 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட 183 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் கடந்த மே மாதம் மட்டும் நடந்த 41 குற்ற வழக்குகளில் 21 வழங்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.32 லட்சத்து 97 ஆயிரத்து 920 மதிப்புள்ள களவு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

    ×