search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229919"

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.
    • நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறுவன புதுமையாக்க அமைப்பின் சார்பில் "வடிவமைப்பு சிந்தனை, விமர்சன சிந்தனை மற்றும் புதுமை வடிவமைப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கோவை சி.வி.ஓ. விட்டி வைஸ் நிறுவனர் சன்மதி கார்த்திக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், வடிவமைப்பு சிந்தனையை விமர்சன சிந்தனையுடன் இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களை மைய மாக கொண்ட தீர்வுகளை வழங்கும் படைப்பாற்றலை புதுமை தூண்டுகிறது என்றார். வடிவமைப்பு சிந்தனை என்பது புதிய மற்றும் பழைய தீர்வுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கு வதற்கான உலக ளாவிய பயன்பாடாகும்.

    வணிகத் துறையில் உள்ள இடைவெளியைக் கண்டறிந்து புதுமைகளைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் விளக்கினார். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் வர வேற்றார். தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் முருகன் நன்றி கூறினார். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 114 மாணவர்கள் பங்கேற்றனர். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கு நடந்தது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்) துறை சார்பில் வணிகத்தில் சமீபத்திய கணினி தொழில்நுட்ப பயன்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீ செளடாம்பிகா பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் முத்துக்குமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் இரண்டாமாண்டு மாணவி பத்மகலா அனைவரையும் வரவேறறார். முதல்வர் பாலமுருகன் பேசுகையில் மாணவர்களின் போட்டியிடும் திறனை வளப்படுத்த இத்தகைய கருத்தரங்குகள் அவசியம் என்றார்.

    சிறப்பு விருந்தினர் முத்துக்குமார் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பல்வேறு பயன்பாடுகளை சுட்டிக்காட்டினார். மேலும் நிலையான வளர்ச்சிக்கு கணினி சார்ந்த தொழில்நுட்பத்தின் தற்போதைய கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். நிறைவாக, இரண்டாமாண்டு மாணவி அபிலட்சுமி நன்றி கூறினார். துறை தலைவர் நளாயினி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் கிருஷ்ணன் செய்திருந்தார். இந்தக் கருத்தரங்கில் வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்) துறையைச் சேர்ந்த 238 மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • ஒற்றை சாளர முறை தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.
    • குண்டூசி முதல் விமான உதிரி பாகங்கள் வரை தயார் செய்யப்படுகிறது.

    ஓசூர்,

    ஓசூரில், வழிகாட்டி தமிழ்நாடு மற்றும் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், ஒற்றை சாளர முறை தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.

    ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் உள்ள ஓட்டல் ஹில்ஸ் கூட்டரங்கில் நடந்த கருத்தரங்கினை, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தொடங்கி வைத்து பேசியதாவது: -

    முன்னேறி வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 110 பெருநிறுவனங்கள், ஏராளமான சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் உள்ளன. இந்த நிறுவனங்களில் குண்டூசி முதல் விமான உதிரி பாகங்கள் வரை தயார் செய்யப்படுகிறது.

    மேலும், கிரானைட் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களான மா, காய்கறிகள், கொய்மலர்கள் போன்ற ஏற்றுமதி செய்யக்கூடிய மலர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி 14 - ஆம் தேதி, காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு ரூ 4 கோடி முதல் 5 கோடி வரை ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மோட்டார் வாகன உதிரி பாகங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த உற்பத்தி பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில், 15 சதவீதம் இந்த மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஒற்றைச் சாளர முறையில் உணவு பாதுகாப்பு மருத்துவம், தீயணைப்பு, நகர கட்டமைப்பு, மின்சார உற்பத்தி, வேளாண்மை சார்ந்த தொழில்கள் குறித்து வரப்பெற்ற 367 மனுக்களில் 317 மனுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு, தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை, போக்குவரத்து, மின்சாரம், குடிதண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை தங்குதடையின்றி வழங்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஆகவே, தொழில் முனைவோர்கள் அரசின் வழிகாட்டுதலின்படி தொழில் தொடங்கி, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் தீபக் ஜேக்கப் கருத்தரங்கில் பேசினார். 

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.
    • நிறைவு விழாவில் 4-ம் ஆண்டு மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கை (ELCOWARZ-2023) நடத்தியது.

    பி.எஸ்.ஆர். கல்விக் குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தொடங்கி வைத்தார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

    டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார். மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி கருத்தரங்கின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார். 4-ம் ஆண்டு மாணவர் அய்யனார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோவை ''மைண்ட்நோடிக்ஸ் டெக்னாலஜிஸ்'' நிறுவனர் சதீஷ்குமார் சேட்டு கலந்து கொண்டார். அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவாறு செயல்புரிய வேண்டும்.

    மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். புதுமையான செயல்திறன் மிக்க கண்டுபிடிப்புகளை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஆய்வு கட்டுரைகளை உருவாக்க வேண்டும் என்றார்.

    கருத்தரங்கில் தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர். கனெக்சன். போன்ற தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளும், தொழில் நுட்பம் சாராத போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

    நிறைவு விழாவில் 4-ம் ஆண்டு மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசியர் ஒருங்கினைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ராமலட்சுமி மற்றும் துறைப்பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் இணைந்து செய்திருந்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.
    • இதில் 270 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் சார்பில் ''ஜும்பா உடற்பயிற்சி (கற்றுநர் மற்றும் தகுதி யாகுதல்)'' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

    முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர்- கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் பொறுப்பாளர் பாபு பிராங்கிளின் அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மதுரை ஜும்பா உடற்பயிற்சி பயிற்சி யாளர் சுதா தயாளன் கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், ஜூம்பா உடற்பயிற்சி என்பதன் பொருள், மற்ற உடற்பயிற்சிகளை விட இதிலுள்ள உற்சா கமான விஷயம் உடலில் உள்ள கலோரிகளை எரித்தல், மனதிலும், உடலிலும் ஏற்படும் ஆரோக்கியமான மாற்றங்கள் பற்றி எடுத்து ரைத்தார். மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

    வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவி ஹேமியஸ்ரீ தொகுத்து வழங்கினார். மாணவி ஜமுனாதேவி வரவேற்றார். மாணவி ஜெயராசாத்தி நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியர், ஜூனியர் ஜேசிஸ் விங் பொறுப்பாளர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார். இதில் 270 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • ஊடகத்துறையில் மகளிர் பங்களிப்பு எனும் தலைப்பில் தனியார் கல்லூரியில் கருத்தரங்கு நடைபெறுகிறது.
    • ஊடகத்துறையில் மகளிர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சர்வதேச கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.

    சென்னையில் உள்ள பிரபல மகளிர் தனியார் கல்லூரியில் ஊடகங்களில் மகளிர் பங்களிப்பு என்ற தலைப்பில் வரும் 3ஆம் தேதி முதல் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைப்பெற இருக்கிறது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவி மகளிர் கல்லூரியில் ஊடகப்பிரிவு தொடர்பான பாடப்பிரிவில் பயின்ற மகளிர் ஊடகத்துறையில் சிறந்து விளங்குகின்றனர். இந்த நிலையில் அந்த கல்லூரியில் ஊடகங்களில் மகளிரின் பங்களிப்பு என்ற தலைப்பை மையமாகக் கொண்டு சர்வதேச கருத்தரங்கம், நடைபெற உள்ளது.

    பிப்ரவரி 3 மற்றும் 4 தேதிகளில் நடக்கும் இந்த கருத்தரங்கில், அதே கல்லூரியில் பயின்று வெளி நாடுகளில் பணியாற்றுபவர்கள் பங்கேற்கிறார்கள். ஊடகத்துறையில் மகளிரின் பங்களிப்பு மாற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சர்வதேச கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.

    • வேளாண்மை அறிவியல் நிலையம், அட்மா திட்டம் சார்பில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.
    • கருத்தரங்கில் நாமக்கல், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வராஜூ சிறப்புரை ஆற்றினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம், அட்மா திட்டம் சார்பில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியை நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி தலைமை தாங்கி ெதாடங்கி வைத்தார்.உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் நாமக்கல், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வராஜூ சிறப்புரை ஆற்றினார் .

    மேலும் சேலம், சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம், திட்ட ஒருங்கிணைப்பாளர், ஜெகதாம்பாள், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுதுரை, உதவி பேராசிரியர்கள் முருகன், சங்கர், சத்யா, முத்துசாமி, பால்பாண்டி, தேன்மொழி ஆகியோர் விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் சந்தேகங்களை கேட்டறிந்து விளக்கம் அளித்தனர்.

    கண்காட்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய முறையில் சிறுதானிய மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் பி.ஜி.பி வேளாண்மை கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள் வாயிலாக இயற்கை வேளாண்மை குறித்தும், சிறுதானியங்கள் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினர். முடிவில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனலட்சுமி நன்றி கூறினார்.

    • பயோமெடிக்கல் துறையில் சாப்ட்வேர் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • சிறப்பு விருத்தினராக புனே ‘‘பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்’’ தலைமை பொறியாளர் தங்கராஜ் கலந்துகொண்டார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் பயோமெடிக்கல் துறையின் சார்பில் ''பயோமெடிக்கல் துறையில் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு'' என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடந்தது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார்.

    துறையின் 3-ம் ஆண்டு மாணவி நூரூல் பெர்த்ஹெஸ் வரவேற்றார். மாணவி சோபியா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். பயோமெடிக்கல துறையின் தலைவர் மணிகண்டன் வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு விருத்தினராக புனே ''பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்'' தலைமை பொறியாளர் தங்கராஜ் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், நவீன காலத்தில் பயோமெடிக்கல் துறையின் பங்களிப்பானது சமுதாயத்திற்கும், மருத்துவத்துறைக்கும் மாற்றத்தை ஏற்படுத்திய துறை ஆகும்.

    ஏெனனில் கொரோனா காலக்கட்டத்தில் நோயின் தீவிரத்தை கண்டறிய பி.சி.ஆர். கிட், தடுப்பூசிகள் போன்றவை பயோமெடிக்கல் துறையின் வளர்ச்சிகள் ஆகும். இன்று மருத்துவ துறையில் உள்ள அனைத்து விதமான எலக்ட்ரானிக்ஸ் கருவிகளான (இ.சி.ஜி., சி.டி., எம்.ஆர்.ஐ., பல்ஸ் ஆக்சிமீட்டர்) வெப்ப நிலைமானி, ரத்த அழுத்தமானி, புற்றுநோய் சிகிச்சைக்கான கதிர்வீச்சு கருவி, ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சை கருவிகள் அனைத்தும் ''எம்படட்'' தொழில்நுட்ப த்தின் மூலம் கருவிகள் ஆகும்.

    எம்படட் தொழில்நுட்பம் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பைப் பெறுவது எளிதானது என்றார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் கீர்த்திகா, காளீஸ்வரி மற்றும் துறையின் பிற பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணிதவியல் துறை கருத்தரங்கு நடந்தது.
    • இந்த கருத்தரங்கில் 114 கணிதத்துறை மாணவர்கள் மற்றும் 9 உதவிப்பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ''காளீஸ் கணித மன்றம்'' சார்பில் ''தரவு பகுப்பாய்வின் தற்போதைய போக்கு'' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் சிவகாசி மெப்கோ ஷ்லெங்க் பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை உதவிப்பேராசிரியர் வீணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கணிதவியல் துறைத் தலைவர் லலிதாம்பிகை வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினர் பேசுகையில், தரவு பகுப்பாய்வு என்பது மூலத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து நமக்குத் தேவையான முடிவுகள் மேற்கொள்ளப் பயன்படுத்தும் கருவிகள் ஆகும். தரவு பகுப்பாய் விற்குப் பயன்படக்கூடிய கருவிகள் மற்றும் நுட்பங்கள் பற்றி விளக்கினார். தரவு பகுப்பாய்விற்கு உறுதுணையாக இருக்கும் மென்பொருள்களின் வகைகளைச் சுட்டிக்காட்டி அவற்றின் நன்மைகள் மற்றும் வரம்புகள் பற்றி எடுத்துரைத்தார். தரவு பகுப்பாய்விற்கு நிகழ் நிலையில் கிடைக்கப்பெறும் மென்பொருள்கள் பற்றி செய்முறை விளக்கம் அளித்தார். "Tableau" என்ற மென்பொருளின் Excel பதிப்பு பற்றி விரிவான செய்முறை விளக்கம் அளித்தார்.

    இந்த கருத்தரங்கில் 114 கணிதத்துறை மாணவர்கள் மற்றும் 9 உதவிப்பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். உதவிப்பேராசிரியர் காளீஸ்வரி நன்றி கூறினார்.

    • கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார்.
    • கருத்தரங்கில் 32 ஆய்வு மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணிதத் துறை சார்பில் ' இன்றைய நடைமுறை வாழ்வில் இயற் கணிதம் மற்றும் பகுப்பாய்வு கணிதம்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்த ரங்கம் நடைபெற்றது.

    கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, அன்றாட வாழ்வில் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் குறித்து பேசினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி பல்கலைக்கழக கணிதவியல் பேராசிரியர் ஜோசப் கென்னடி கலந்து கொண்டு, எண் அமைப்பு மற்றும் புலங்கள் என்ற தலைப்பில் பேசினார். இதில் ஆய்வு மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார்.

    கருத்தரங்கில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பரணிதர் கலந்து கொண்டு, குவிந்த தொடர்கள் குறித்தும், கணிதத்துறை பகுப்பாய்வு செய்து கற்பது குறித்தும் விளக்கம் அளித்து பேசினார். சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் 32 ஆய்வு மாணவர்கள், தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

    இந்த கட்டுரைகள் ஐ.எஸ். பி.என். எண் கொண்ட புத்தகமாக வெளியிடப்பட்டது. கருத்த ரங்கின் பொறுப்பாளராக கணிதத் துறை பேராசிரியை செண்பகா தேவி செயல் பட்டார். இதில் 19 கல்லூரி களை சேர்ந்த பேராசிரி யர்கள், ஆய்வு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கை கணிதத்துறை தலைவர் வழிகாட்டுதல்படி, துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    • திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்ற விலங்கு மேம்பாடு சோதனை குறித்த கருத்தரங்கு நிறைவுபெற்றது
    • இதில் திருச்சியில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், 25 பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை வழங்கினர்.

    திருச்சி:

    பெங்களூர் இந்திய அறிவியல் அகாடமியின் நிதி உதவி உடன் விலங்கு வளர்ச்சி மற்றும் நோயை புரிந்து கொள்வதற்கான சோதனை மாதிரிகள் குறித்த அறிவியல் அகாடமியின் கருத்தரங்கம் திருச்சி தேசிய கல்லூரியில் 2 நாட்கள் நடைபெற்றது.புதுடெல்லி இந்திய தேசிய அறிவியல் அகாடமி, அலகாபாத் நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸஸ் மற்றும் திருச்சி தேசிய கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல் துறை மேற்கண்ட கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

    நிறைவு நிகழ்ச்சியில் பெங்களூரு இந்திய அறிவியல் அகாடமியின் ஒருங்கிணைப்பாளரும் சென்னை ஐ.ஐ.டி. பயோ டெக்னாலஜி துறை பேராசிரியருமான டாக்டர் கே. சுப்பிரமணியம் எலிக்கன்ஸை மாதிரி உயிரினமாக பயன்படுத்தி ஸ்டெம் செல் உயிரியலுடன் கூடிய ஆராய்ச்சி நுண்ணறிவுகள் குறித்து பேசினார்.பெங்களூர் ஜே.என்.சி.ஏ. எஸ்.ஆரின் நரம்பியல் பிரிவு இணை பேராசிரியர் டாக்டர் ரவி மஞ்சுதயா மனிதர்களில் தன் இயக்கியவியல் முக்கியத்துவம் குறித்து விரிவாக பேசினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் கே. குமார் தலைமை தாங்கினார். திருச்சி தேசிய கல்லூரி விலங்கியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை உதவி பேராசிரியர் டி. கந்தசாமி வரவேற்றார் .

    இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் உறுப்பினரும் டாடா மரபியல் மற்றும் சமூகத்தின் இயக்குனராகவும் இருக்கும் ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா நிறைவுறை ஆற்றினார். இதில் திருச்சியில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், 25 பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை வழங்கினர். பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் திருச்சி தேசிய கல்லூரி விலங்கியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறையின் உதவி பேராசிரியரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான டி. காயத்ரி நன்றி கூறினார்.






    • நாடு முழுவதும் பெண்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சைபர் கிரைம் பாதுகாப்பு கோவையில் இருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக காத்மாண்டு வரை 7000 கி.மீ தூரம், கடந்த 20 நாட்களாக மோட்டார் சைக்கிளின் பேரணி சென்று பிரசாரம் செய்தனர்.
    • பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் வன்கொடுமை தவிர்ப்பு உத்திகள் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வாழப்பாடி:

    நாடு முழுவதும் பெண்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சைபர் கிரைம் பாதுகாப்பு பயிற்சியாளர் சங்கர்ராஜ் சுப்பிரமணியன் தலைமையிலான இளைஞர்கள் அகிலன், அருண்பிரசாத், உமாசங்கர், திலீப்குமார், தினேஷ் ஆகியோர் கோவையில் இருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக காத்மாண்டு வரை 7000 கி.மீ தூரம், கடந்த 20 நாட்களாக மோட்டார் சைக்கிளின் பேரணி சென்று பிரசாரம் செய்தனர்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக மீண்டும் கோவை திரும்பிய இக்குழுவினருக்கு, வாழப்பாடி நெஸ்ட் மற்றும் துளி அறக்கட்டளை தன்னார்வலர்கள், காவல் துறையினர் சார்பில் வாழப்பாடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து வாழப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.சி.செல்வம் தலைமையில் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. பள்ளித் தலைமையாசரியர் ஜெயலட்சுமி வரவேற்றார்.

    வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, பயிற்சியாளர் சங்கர்ராஜ் சுப்பிரமணியன், ஜவஹர், சட்டக்கல்லுாரி மாணவி விவேகா, தன்னார்வலர் லோகநாதன் ஆகியோர் இணைய குற்றங்கள் தவிர்ப்பு, இணைய தளம், சமூக ஊடகங்களை பாதுகாப்பாக கையாளும் முறை, சட்டவிதிமுறைகள், சட்ட பாதுகாப்பு குறித்தும், பாதுகாப்பு செயலி, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் குறித்தும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் வன்கொடுமை தவிர்ப்பு உத்திகள் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியில் ஆசிரியர் வெங்கடாஜலம் நன்றி கூறினார்.

    ×