search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவுறுத்தல்"

    • தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.
    • கட்சிக்கொடிக்கம்பங்கள் அனைத்தும் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமையில், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.திருப்பூர் மாநகர பகுதியில் கட்சிக்கொடிக்கம்பங்கள் அனைத்தும் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டது.

    ஆனால் மீண்டும் நடுவதாக புகார் எழுந்துள்ளது. கொடிக்கம்பங்களை கட்சியினர் அகற்றாவிட்டால் மாநகராட்சி சார்பில் அவை அகற்றப்படும். சாலையின் மையத்தடுப்பில் கட்சிக்கொடிகள் கட்டக்கூடாது. ரவுண்டானா பகுதியில் விளம்பர பதாகைகளை வைக்கக்கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக்கூடாது. வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண் இணைக்கும் பணிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சியினரிடம் வலியுறுத்தப்பட்டது.

    • பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் ராகிங் எதிர்ப்பு என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • விளையாட்டாக ஆரம்பிக்கும் கேலி கிண்டல்கள் அடுத்தவர்களின் மனதை புண்படுத்துவதிலிருந்து ராகிங் என்பது உருவாகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு "பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் ராகிங் எதிர்ப்பு" என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர். ரேச்சல் நான்சி பிலிப் வரவேற்புரை வழங்கினார்.

    இதில் சட்ட உதவி மைய வக்கீல் தி பிரகாஷ் பேசியதாவது:, சிறு விளையாட்டாக ஆரம்பிக்கும் கேலி கிண்டல்கள் அடுத்தவர்களின் மனதை புண்படுத்துவதிலிருந்து ராகிங் என்பது உருவாகிறது. அதன் உச்ச கட்டம் தான் நாவரசு கொலை வழக்கு .எனவே எந்த ஒரு செயலும் அடுத்தவர் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று கூறினார். அந்தோணி ஷர்லின், பெண்களுக்கு அவசியமான மற்றும் பாதுகாப்பான சட்டங்கள் பற்றி விளக்கினார். ராஜசேகரன், சமூக வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் குற்றங்கள் பற்றியும் விழிப்புணர்வுடன் இருந்து தற்காத்து கொள்வது பற்றியும் விளக்கினார். தலைமையுரை ஏற்று பேசிய திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மேகலா மைதிலி , எந்த ஒரு செயலையும் செய்யும் முன்பு அது நம்மையும், நம்மை சார்ந்துள்ள குடும்பத்தாரையும் எண்ணி பார்த்து செயலாற்றிட வேண்டும். நம்மை மீறி எந்த ஒரு கெடுதலான விஷயமும் நடக்காதவாறு விழிப்புணர்வுடனும் கவனமுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் மாணவி ஷிபானா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பேராசிரியர் ராதாமணி ஆகியோர் செய்திருந்தனர். இதில் 70க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    • உணவுப் பொருட்கள் சரியான அளவில் வழங்க கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • பொதுவிநியோகம் திட்டம் குறித்து காலாண்டு கூட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பொதுவிநியோகம் திட்டம் குறித்த, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் மற்றும் தன்னார்வ நுகர்வோ ர் அமைப்புகளுடனான 2-வது காலாண்டு கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் பொதுவிநியோகம் திட்டம் குறித்த புகார்களை 1967 மற்றும் 1800 4255 901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி வழியே புகார் தெரிவிக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும்,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைகள் குறித்தும், நடப்பு காலாண்டில் வழங்கப்பட்ட புதிய மின்னணு குடும்ப அட்டைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, நியாயவிலைக் கடைகளை இரண்டாக பிரித்து புதிய பகுதிநேர அங்காடி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    மேலும் அனைத்து நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விபரங்கள், விலைப் பட்டியல், அங்காடி வேலை நேரம் மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அலைபேசி எண்கள் உள்ளிட்டவைகள் காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கேட்டறிந்தார்.

    அதனைத் தொடர்ந்து, கலெக்டர் தலைமையில் நடைபெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான 2வது காலாண்டு கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    உணவுப் பொருட்களை சரியான அளவிலும், தரத்திலும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், துணைப் பதிவாளர் (பொ) அப்துல் சலீம் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் அவசியமாகிறது.
    • மூன்றாவது தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளி வழங்குகிறது. கொரோனா கடும் தொற்று அலைகளுக்கிடையே, தொழிலாளருக்கு பணிவாய்ப்பையும் மறுக்காமல் பின்னலாடை நிறுவனங்கள் வழங்கின. தற்போதைய மந்தமான வர்த்தகச்சூழலிலும் நெருக்கடியான தருணத்திலும்கூட, தொழிலாளருக்கு வேலைவாய்ப்பு தொடர்கிறது.

    தற்போது கொரோனா பரவல் உள்ள நிலையில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்குவதோடு, முடிந்தவரை சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் அவசியமாகிறது.எனவே தொற்று பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்களின் நிர்வாகங்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அந்த வகையில் வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர் அதிகம் வசிக்கும், திருப்பூரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

    முடிந்தவரை பொதுமக்களே, தங்களைத் தற்காத்துக்கொள்வது தான் சிறந்ததாக இருக்கும். தொழில்துறையினரும், தொழிற்சாலைகளில், தொற்று தடுப்பு விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.தொழிலாளருக்கும் இதுதொடர்பான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்ட இருக்க வேண்டும்.வணிக மையங்களிலும், விழாக்களிலும் கூட்ட நெரிசலை சிறிது நாட்களுக்கு தவிர்ப்பதே நல்லது.பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு செயல்படுத்தப்படுவதில்லை. ஆனால், அபராதம் விதித்தபின் தான் முக கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாய சூழலை பொதுமக்கள் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதையும் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

    இரண்டு டோஸ் தடுப்பூசியுடன் நில்லாமல், முன்னெச்சரிக்கையாக மூன்றாவது தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஆர்வமும், அக்கறையும் குறைவாக இருக்கிறது.வருமுன் காப்பதுதான் சிறந்தது. இதை உணர்ந்தால், ஒவ்வொருவரும் தாங்களாக முன்வந்து பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்வர். தொற்றில்லா சூழலை உருவாக்குவோம் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்க வேண்டிய தருணம் இது. எனவே கொரோனா தடுப்பு வழிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.  

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிசு மரணங்களை டாக்டர்கள் தடுத்திட வேண்டும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தல்
    • மார்ச் 2022 முதல் மே 2022 வரை உள்ள மாதங்களில் நடைபெற்ற 17 சிசு மரணம் மற்றும் 1 மகப்பேறு மரணம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி :

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிசு மரணம்மற்றும் மகப்பேறு மரணம் தடுப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பிரசவங்கள் நடைபெறுகிறது. அவ்வாறு மார்ச் 2022 முதல் மே 2022 வரை உள்ள மாதங்களில் நடைபெற்ற 17 சிசு மரணம் மற்றும் 1 மகப்பேறு மரணம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.சிசு மரணம் நடைபெற்ற சம்மந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிசு மரணம் குறித்து ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தனர். இவ்வாய்வறிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இனிவரும் காலங்களில் பிரசவத்தின்போது சிசு மரணம் ஏற்படாதவாறு மருத்துவர்கள் தேவையான அனைத்து மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி கவனமுடன் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் சிசு மரணம் தடுத்திட பச்சிளம் குழந்தைகளுக்கு கிருமி தொற்று ஏற்படாதவாறு தொடர் கண்காணிப்புகளை மருத்துவர்கள் மற்றும் தாய்மார்கள் மேற்கொள்ள வேண்டும்.மகப்பேறு மருத்துவம் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகளில் தரமாகவும், சிறப்பாகவும், இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகப்பேறுகளுக்கு அரசு மருத்துவமனைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் கருக்கலைப்புகள் சட்டப்பூர்வமற்ற இடங்களில் மேற்கொள்ளாமல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவரின் உரிய ஆலோசனையின்படி, மேற்கொள்ளவும், அரசின் விதிமுறைகளை மீறி கருக்கலைப்புகளில் ஈடுபடும் மருந்தகங்கள் தனியார் மருத்துவமனைகள் மீதுசட்டப்பூர்வமான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிசு மரணம் மற்றும் மகப்பேறு மரணம் முற்றிலும் தவிர்க்கப்படுவதற்கு அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், நிலைய மருத்துவ அலுவலர்கள், தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோர்கள் கர்ப்பிணி பெண்கள்மீது தனிக்கவனம் செலுத்தி சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கிட வேண்டும்.மகப்பேற்றிற்கு பின் பச்சிளம் குழந்தைகளுக்கு கிருமித்தொற்று ஏற்படாதவாறு மருத்துவர்கள் சிறப்பாக மருத்துவப்பணியை மேற்கொள்ள வேண்டும் என கூறினார். அப்போது இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பாலச்சந்தர், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பூங்கொடி, அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், நிலைய மருத்துவ அலுவலர்கள், தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • 100 சதவீதம் குழந்தைகளை அரசுப்பள்ளிக்கு அனுப்பிய கிராமங்களுக்கு பரிசு உள்ளிட்ட விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
    • மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் (நாகர்கோவில்), ராமச்சந்தி ரன் நாயர் (குழித்துறை), பெருமாள் (தக்கலை), ராமசுப்பு (திருவட்டார்), ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் அரவிந்த் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் குறித்தும், மாணவ-மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறை குறித்தும், துறைசார்ந்த அலுவலர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    அரசு பள்ளிகளில் பராமரிக்கப்படும் பதிவேட்டில் கணக்கெடுப்பின்படி, 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், அனை வரையும் முதல் வகுப்பில் சேர்த்தல் வேண்டும். அனைத்து அரசு பள்ளிகள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 1, முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி கற்று கொடுக்க வேண்டும்.

    1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசுப்பணியில் 20 சதவீத மும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் முன்னுரிமை, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000 என அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

    ஒற்றை இலக்க மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் அர்ப்பணிப்புடன் அதிகமாக மாணவ, மாணவியர்களை அப்பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து ஆசிரியர்களும் விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்து செல்வதோடு, பள்ளிகள் திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக முக்கியமான பகுதிகளில் பேரணி நடத்தப்பட வேண்டும்.

    இடைநிற்றல் அதிகமான இடங்களில் பேரணி நடத்தி மாணவர் சேர்க்கை செய்தல், உள்ளாட்சி பிரதிநிதிகள் போன்றவர்களை ஈடுபடுத்து வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளலாம். 100 சதவீதம் குழந்தைகளை அரசுப்பள்ளிக்கு அனுப்பிய கிராமங்களுக்கு பரிசு உள்ளிட்ட விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடி குழந்தைகளை அரசுப்பள்ளி யில் சேர்க்க வேண்டும். வீடு வீடாக சென்று அழைப்பு விடுக்கலாம்.

    தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆன்லைன் கிளாஸ், வாட்ஸ் ஆப் குரூப்-ல் பயிற்சி, ஆசிரியர் மாணவர் பாட பரிமாற்றம் நடைபெறுவதை விளக்கலாம். சமூக வலை தளங்களில் ஆடியோ வீடியோ பதிவுகள் மேற்கொள்ளச் செய்யலாம்.

    பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கலாம். ஒவ்வொரு பள்ளித்தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கடமைகளாக கருதி மேற்கொள்ள வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் தன்னார்வர்கள் பெற்றோரிடம் நேரடியாக உரையாடுவதோடு, குழந்தை களின் பெற்றோர்களை வரவழைத்து புகைப்ப டங்கள் காணொளிகளை திரை யிட்டு நலத்திட்டங்களை எடுத்துக் கூறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் (நாகர்கோவில்), ராமச்சந்தி ரன் நாயர் (குழித்துறை), பெருமாள் (தக்கலை), ராமசுப்பு (திருவட்டார்), ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×