search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229974"

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் நாளை செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.


    பொன்னியின் செல்வன்

    ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


    சரத்குமார்

    இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார். அதில் நடிகர் விஜய்க்கு 'பொன்னியின் செல்வன்' படத்தில் எந்த பாடல் பிடிக்கும் என பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சரத்குமார், " விஜய்க்கு 'பொன்னிநதி' பாடல் மிகவும் பிடிக்கும் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் அந்த பாடலை தான் பாடிக் கொண்டிருப்பார்" என்று கூறினார்.

    விஜய் நடிக்கும் 'வரிசு' திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • வெளிமாநிலங்களில் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த நடிகர்கள் சென்னை திரும்பினர்.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.


    பொன்னியின் செல்வன்

    ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் வெளிமாநிலங்களின் புரொமோஷன் பணிகளை முடித்துவிட்டு நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் திரிஷா ஆகியோர் இன்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.


    பொன்னியின் செல்வன்

    அப்போது நடிகர் கார்த்தி பேசியதாவது, "பல பேர் இந்த படத்தை பார்ப்பதற்காக 'பொன்னியின் செல்வன்' புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வெளிமாநிலத்தவர்களும் நம் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

    முதல் பான் இந்திய திரைப்படத்தை மணி சார் தான் ஆரம்பித்தார். அதனால் மணி சாரை அனைவருக்கும் தெரிகிறது. அவர் நம்முடைய பெரிய அடையாளமாக இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானும் மணிசாரும் வரும் பொழுது தமிழ்நாட்டில் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்களோ அதுபோல் தான் வெளிமாநிலங்களிலும் இருக்கிறார்கள்" என்று கூறினார்.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்ட வேடத்தில் நடித்த அனுபவம் பற்றி சரத்குமார் கூறினார்.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

     

    பொன்னியின் செல்வன் - சரத்குமார்

    பொன்னியின் செல்வன் - சரத்குமார்

    ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

     

    பொன்னியின் செல்வன் - சரத்குமார்

    பொன்னியின் செல்வன் - சரத்குமார்

    "பொன்னியின் செல்வன்" படத்தில் இடம்பெறும் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்டதாகவும், இதற்காக அவர் இயக்குனர் மணிரத்னத்தை நேரில் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

     

    சரத்குமார்

    சரத்குமார்

    தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ரஜினி விருப்பம் தெரிவித்த அந்த வேடத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார். பழுவேட்டரையர் வேடத்தில் நடித்த அனுபவம் பற்றி சரத்குமார் கூறியதாவது:- "பழுவேட்டரையர் 64 விழுப்புண்களை பெற்ற மாவீரர். பொன்னியின் செல்வன் கதையை படிக்கும்போதே பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    பொன்னியின் செல்வன் - சரத்குமார்

    பொன்னியின் செல்வன் - சரத்குமார்

     

    அந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குனர் மணிரத்னத்துக்கு நன்றி. அந்த வேடத்தில் யாரெல்லாம் நடிக்க ஆசைப்பட்டார்கள் என்று தெரியாது. ரஜினிகாந்த் நடிக்க விரும்பியதை பெருமையாக கருதுகிறேன்.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன்.
    • இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    பொன்னியின் செல்வன்

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.



    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    • இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    பொன்னியின் செல்வன்

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.


    பொன்னியின் செல்வன்

    இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' அருண்மொழி வர்மன் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அருண்மொழி வர்மன் என்ற பேரரசர் மிகவும் அமைதியானவர். உதவும் தன்மை கொண்டவர். யார் மனதும் புண்படக் கூடாது என்று நினைப்பவர்.


    பொன்னியின் செல்வன்

    இவர் மிருகங்களிடம் பேசும் திறன் கொண்டவர். அதாவது, மிருகங்கள் நினைப்பதை புரிந்து கொள்ளும் அளவிற்கு திறமையும் பாசமும் கொண்டவர். எதிரி நம் நாட்டினராக இருந்தாலும் அவருடன் நட்புடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். இப்படியான சிறப்பு மிக்க கதாபாத்திரத்தில் தான் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    • இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

     

    பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

    பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

     

    பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

    பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

    இதனிடையே நடிகர்-நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் சரித்திர காலத்து ஆடை ஆபரணங்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை தங்கள் வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். நேற்று நடிகர் பார்த்திபன் படப்பிடிப்பு தளத்தில் கண்ணாடி அணிந்து ஐஸ்வர்யாரா மற்றும் சரத்குமாருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு ஐஸ்வர்யாராயை கவிதை வடிவில் பாராட்டியிருந்தார்.

     

    பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

    பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

    இந்த புகைப்படத்திற்கு கீழே ஒரு ரசிகர் சார் எனக்கு ஒரு சின்ன ஹாய் சொல்லுங்க என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பார்த்திபன் அந்த ரசிகரை கலாய்க்கும் வகையில் "சின்ன ஹாய்" என்று பதிவிட்டிருந்தார். இதனை ஒரு மீம் பக்கத்தில் குறிப்பிட்டு இந்த புகைப்படத்துடன் ஒரு மீம் வெளியிட்டிருந்தனர்.

    பார்த்திபன் பதிவு

    பார்த்திபன் பதிவு

     

    இந்நிலையில் அந்த மீம் புகைப்படத்தை இணைத்து நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார். அதில், மீன்ல விரால் நல்லது, மீம்ஸ் வைரல் ஆவது நல்லது! (எடிட்டர் ஹரீஷ் அனுப்பியதால் வந்த தத்துவமிது) இங்கு நல்ல மீம்கள் விற்கப்படும்! என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    • இப்படத்தின் புரமோஷனுக்காக படக்குழு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    பொன்னியின் செல்வன்

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


    பொன்னியின் செல்வன்

    இதில் நடிகர் விக்ரம் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், "இந்த படத்தில் எனக்கு இருக்கும் ஒரு சோகம் இதிலும் ஐஸ்வர்யா ராய் எனக்கு கிடைக்கவில்லை.

    ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் நடித்த 'ராவணன்' படத்தில் ஐஸ்வர்யா ராய் மீது காதல் கொள்ளும் கதாபத்திரத்தில் நடித்திருந்தாலும் கடைசியில் ராவணன் இறந்துவிடுவார். இதை தொடர்ந்து இந்த முறை 'பொன்னியின் செல்வன்' படத்தில், இணைந்துள்ளோம். ஏன் ஐஸ்வர்யா இப்படி செய்தீர்கள்" என்று ஜாலியாக பேசினார்.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    • இப்படத்தின் புரமோஷனுக்காக படக்குழு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

     

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    அந்த வகையில் மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினர். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், "வரலாற்றை தெரிந்து கொள்வது எந்த அளவு முக்கியமானது?" என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த நடிகர் விக்ரம் பேசியதாவது;- "நாம் எகிப்தில் உள்ள பிரமீடுகள் பற்றி பேசுகிறோம். அதை எப்படி கட்டி இருப்பார்கள் என்றெல்லாம் யோசிக்கிறோம். ஆனால் நம் இந்தியாவில் நிறைய கோவில்கள் இருக்கின்றன. அதில் உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் என்றால் அது தஞ்சை பெரிய கோவில் தான்.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    சோழ மன்னர் ராஜராஜ சோழன் அந்த கோவிலைக் கட்டினார். உலகத்திலேயே உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் அதுதான். அந்த கோவில் கோபுரத்தின் உச்சியில் உள்ள கல் மட்டும் 80 டன் எடை கொண்டது. பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்தைப் பார்த்து நாம் வியப்படைகிறோம், பாராட்டுகிறோம். ஆனால் தஞ்சை பெரிய கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக 6 பூகம்பங்களை தாங்கி இன்று வரை நிற்கிறது.

    அதிலும் எந்த வகையான பிளாஸ்டர்களும் இல்லாமல் அந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியமானது என்றால், முதலில் சுற்றுச்சுவர், பின்னர் 6 அடி நீளத்துக்கு தாழ்வாரம் அமைத்து அதன்பின்னர் மையப்பகுதியில் கோவிலை கட்டி உள்ளனர். அதனால் தான் அது இத்தனை பூகம்பங்களையும் தாண்டி இன்றளவும் நிலைத்து நிற்கிறது.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    எந்திரங்கள் எதுவும் இல்லாமல், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களைக் கொண்டு அவ்வளவு பெரிய கட்டுமானத்தைக் கட்டியுள்ளனர். மேலும் ராஜராஜசோழன் தனது காலத்தில் 5 ஆயிரம் அணைகளை கட்டியுள்ளார். நீர் மேலாண்மைக்கு தனி துறையை அமைத்துள்ளார். அந்த காலத்திலேயே தேர்தல்கள் நடத்தியுள்ளனர். ஆறுகளுக்கு பெண்களின் பெயர்களை சூட்டியுள்ளனர். இலவச மருத்துவமனைகள் கட்டியுள்ளனர். கடன் உதவிகளையும் வழங்கி கண்ணியமாக வாழ்ந்துள்ளனர்.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    இவையெல்லாம் 9-ம் நூற்றாண்டில் நடந்தவை என்றால் ஆச்சரியமாக உள்ளது. இதெல்லாம் நடந்து சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு தான் கொலம்பஸ் அமெரிக்காவையே கண்டுபிடித்தார். இதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். வட இந்தியா, தென் இந்தியா என பிரித்து பார்க்க வேண்டாம். நாமெல்லாம் இந்தியர்கள். அதனால் நாம் இவர்களையெல்லாம் கொண்டாட வேண்டும்." என்றார். 

    • பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின்செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.


    பொன்னியின் செல்வன்

    "பொன்னியின் செல்வன்" திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


    பொன்னியின் செல்வன் படக்குழு

    இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது, "இயக்குனர் மணிரத்னத்திற்கு நன்றி கூறுகிறேன். 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை பார்த்த பின்னர் ஓடிடி தளங்களில் வெளிநாட்டு தொடர்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன். நமது கலாசாரத்தை 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகவும் அழகாக பிரதிபலிக்கிறது" என்று பேசினார்.

    • மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன்.
    • இந்த படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின்செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.


    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜெயம் ரவி நடிகர் ஜெயராமுடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளார்.


    ஜெயம் ரவி - ஜெயராம்

    இதனை புகைப்படத்துடன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜெயம் ரவி "பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராமுடன் பம்பையில் !!" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின்செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.


    பொன்னியின் செல்வன்

    இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது. மேலும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


    பொன்னியின் செல்வன்

    இந்நிலையில், இப்படத்தின் 'தேவராளன் ஆட்டம்' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.





    • 'பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின்செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.


    பொன்னியின் செல்வன்

    இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது. மேலும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் குந்தவை மற்றும் பூங்குழலி கதாபாத்திரம் குறித்து படக்குழு  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடிகை திரிஷா கூறியதாவது, "முதல் நாள் படப்பிடிப்பில் நான் மிகவும் பதற்றத்துடன் இருந்தேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் கதாபாத்திரங்களாகவே இருந்தோம். ஐஸ்வர்யா ராய், திரிஷாவாக இல்லாமல் குந்தவை மற்றும் நந்தினியாகவே இருந்தோம்.


    பொன்னியின் செல்வன்

    நானும் ஐஸ்வர்யாவும் பேசினால் மணி சார் கூறுவார் நந்தினியும் குந்தவையும் நண்பர்களாக இருக்க முடியாது. அதனால் அதிகம் பேசாதீர்கள். என் கதாபாத்திரத்திற்காகவாது உங்கள் இருவருக்கும் இடையில் சிறிய போட்டி இருக்க வேண்டும் என கூறுவார்" என்று ஜாலியாக தெரிவித்தார்.


    ×