search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#ஒகேனக்கல்"

    • நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
    • கோடைவிடுமுறை நாளையுடன் முடிய இருப்பதாலும் ஒகேனக்கல்லில் இன்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இந்த நீர்வரத்தால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1000 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக நேற்று ஒகேனக்கல்லில் நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 2000 கனஅடியாக வந்தது. இந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி மேலும் அதிகரித்து 3000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.

    வருகிற 10-ந்தேதி பள்ளி திறப்பாலும், கோடைவிடுமுறை நாளையுடன் முடிய இருப்பதாலும் ஒகேனக்கல்லில் இன்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் பரிசல் நிலையத்தில் இருந்து ஊட்டமலை, ஐந்தருவி, அத்திமரத்துகடுவு ஆகிய பகுதி வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், பஸ் நிலையம், கடைவீதிகள், ஓட்டல்கள் கூட்டம் அலைமோதியது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் பிலிக்குண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
    • கோடைவிடுமுறை முடிய இன்னும் 2 நாட்கள் இருப்பதாலும் ஒகேனக்கல்லில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளிலும் கோடைடமழை பெய்து வருவதால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இந்த நீர்வரத்தால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1000 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 2000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.

    வருகிற 10-ந்தேதி பள்ளி திறப்பாலும், கோடைவிடுமுறை முடிய இன்னும் 2 நாட்கள் இருப்பதாலும் ஒகேனக்கல்லில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் பரிசல் நிலையத்தில் இருந்து ஊட்டமலை, ஐந்தருவி, அத்திமரத்துகடுவு ஆகிய பகுதி வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, தொங்கும் பாலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் பிலிக்குண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
    • நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளிலும் கோைடமழை பெய்து வருவதால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

    இந்த நீர்வரத்தால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் கடந்த 31-ந் தேதி நீர்வரத்து சற்று சரிந்து ஆயிரம் கனஅடியாக வந்தது. இந்த நீர்வரத்து இன்று 3-வது நாளாக தொடர்ந்து அதே அளவில் நீடித்து வந்து கொண்டிருக்கிறது.

    நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அவர்கள் பரிசல் நிலை யத்தில் இருந்து ஊட்டமலை, ஐந்தருவி, அத்திமரத்துகடுவு ஆகிய பகுதி வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முதலைப் பண்ணை, தொங்கும் பாலம் ஆகிய பகுதிகளுக்கு சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிக ளில் குளித்து மகிழ்ந்தனர்.

    சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால், ஓட்டல்கள், கடைவீதி, மீன்விற்பனை கடைகள் ஆகிய கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரண மாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறை வதும் இருப்பதால், பிலிக் குண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நேற்று நீர்வரத்து சற்று அதிகரித்து 3 ஆயிரம் கனஅடியாக வந்தது.
    • ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் இருப்பதால், பிலிகுண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளிலும் கோடைமழை பெய்து வருவதால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இந்த நீர்வரத்தால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நேற்று நீர்வரத்து சற்று அதிகரித்து 3 ஆயிரம் கனஅடியாக வந்தது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நீர்வரத்து இன்றும் 3 ஆயிரம் கனஅடி அளவில் நீடித்து வந்து கொண்டிருக்கிறது. இதன்காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் இருப்பதால், பிலிகுண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • சிறுவர்கள் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன்-சவுந்தர்யா தம்பதியினர். இவருடைய மகன்கள் பவின் (வயது 10), சுதீப் (8) இவர்கள் 2 பேரும் ஊட்டமலை முனியப்பன் கோவில் அருகே உள்ள தடுப்பணை ஓடையில் விளையாடி கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்ப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்த பெரியபாறை விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுவர்கள் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே பவின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சுஜித் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில நாட்களாக தமிழக, கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கல்:

    காவிரி ஆற்றில் கடந்த 6 மாத காலமாக கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து கடுமையாக சரிந்து வினாடிக்கு 200 கன அடியாக இருந்தது. மேலும் கடுமையான வெப்பம் வீசி வந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்றி வெறும் பாறைகளாக காட்சியளித்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை மழை பெய்ய தொடங்கியது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4 மாதங்களுக்கு பிறகு வினாடிக்கு 200 கன அடியில் இருந்து, வினாடிக்கு 3000 கன அடி வரை உயர்ந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக, கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்பொழுது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் வெறும் பாறைகளாக வறண்டு கிடந்த இடங்களில் தற்பொழுது தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

    நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதுடன், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. அதே போல் சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்வதால் கோடை விடுமுறையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
    • சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்தும், மெயின் அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் காவிரி கரையோர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், நாட்றம்பாளையம், ஊட்டமலை ஆகிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி பகுதியிலும் மழை பெய்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சற்று சரிந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    குறைந்த அளவில் நீர்வரத்து இருந்தபோதிலும், ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.

    ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்வதால் கோடை விடுமுறையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்தும், மெயின் அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் இருப்பதால், பிலிகுண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • தமிழக எல்லை பகுதியான பிழிகுண்டுளுவில் நீர்வரத்து படிப்படியாக அடியாக அதிகரித்து வருகிறது.
    • ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.

    ஒகேனக்கல்:

    தமிழக கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுளுவில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தமிழக எல்லை பகுதியான பிழிகுண்டுளுவில் நீர்வரத்து படிப்படியாக அடியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெய்த மழையால் நேற்று வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது அதிகரித்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் ஒகேனக்கல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.

    • காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்து வர தொடங்கியது.
    • தொடர்ந்து 1000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து வருவதால், மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் சில தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்றம்பாளையம், ஓசூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலை குன்றுகளில் பெய்த மழையின் காரணமாகவும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகும் நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்து வர தொடங்கியது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நேற்று 3 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், இன்று காலை சற்று சரிந்து 1500 கனஅடியாக நீர்வரத்து குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்லில் தொடர்ந்து 1000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து வருவதால், மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    • நீர்வரத்தானது பெய்யும் மழையை பொறுத்தே அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பு உள்ளது.
    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கோடை கால சீசனில் இந்த முறை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இந்த நீர்வரத்து ஒகேனக்கல், அஞ்செட்டி, நாட்றம்பாளையம், ஓசூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மலை குன்றுகளில் பெய்த மழையின் காரணமாகவும், காவிரி கரையோர எல்லைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாகும் அதிகரித்து உள்ளது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்து வர தொடங்கியது.

    இந்த நிலையில் நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் கனமழை காரணமாக படிப்படியாக அதிகரித்து நேற்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி 3 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறி பாய்ந்து சென்றது. காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நீர்வரத்தானது பெய்யும் மழையை பொறுத்தே அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பு உள்ளது. எனவே, தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிக்குண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கோடை கால சீசனில் இந்த முறை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே, மீன் சமையல் தொழிலாளர்கள், வியாபாரிகள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளிகள் என அனைத்து தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

    • கோடை விடுமுறை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • ஓட்டல்கள், கடைவீதி ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    ஒகேனக்கல்:

    பருவ மழை பொய்த்து போனதாலும், கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும், தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள பிலிகுண்டுலு வழியாக செல்லக்கூடிய காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிந்து வண்ணமாக இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் 200 கனஅடியாக குறைந்து இருந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மற்றும் அஞ்செட்டி, கேரட்டி, நாட்ரபாளையம், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 1200 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. தற்போது கோடை மழை குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று சரிந்து இன்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1000 கனஅடி அளவில் குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சீராக தண்ணீர் கொட்டுகிறது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் சீராக பாய்ந்து செல்கிறது.

    கோடை விடுமுறை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு செல்லக்கூடிய சோதனை சவாடிகளில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுந்து நின்றன.

    இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின்அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பரிசல் நிலையத்தில் இருந்து ஊட்டமலை வரை பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனால் பரிசல் நிலையத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    மேலும், ஓட்டல்கள், கடைவீதி ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    ஒகேனக்கல்லில் கோடைகாலம் தொடங்கியதாலும் காவிரி ஆற்றில் சீராக தண்ணீர் செல்வதாலும், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கின.

    • காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் ஆங்காங்கே மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • ஒகேனக்கல் ஐந்தருவி, சீனி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிகிறது.

    ஒகேனக்கல்:

    தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. கோடை காலம் மற்றும் மழை இன்மையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து, தொடர்ந்து கடந்த 20 நாட்களாக வினாடிக்கு 200 கன அடியாக நீர்வரத்து தற்போது காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் ஆங்காங்கே மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் நேற்று வினாடிக்கு 800 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது அதிகரித்து வினாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்துள்ளது.

    இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, சீனி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிகிறது.

    ×