என் மலர்
நீங்கள் தேடியது "தண்டவாளம்"
- எதிர்பாராத விதமாக தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
- அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருவாரூர்:
ரெயில் நிலையங்களில் ரெயில்கள் வரும்போது இருக்கையில் அமர வேண்டி பயணிகள் அவசர, அவசரமாக முண்டியடித்து பெட்டிகளில் ஏற முயலும் போது சில சமயங்களில் தண்டவாளத்தில் விழுந்து தனக்கு ஆபத்தை விளை வித்து கொள்கின்றனர்.
இது போன்ற சம்பவம் தற்போது திருவாருரில் நடந்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
நாகை மாவட்டம் குருவாடி பகுதியை சேர்ந்தவர் நாடிமுத்து மகன் வெங்கடேஷன் (வயது 20).
இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் சென்னைக்கு செல்வதற்காக தனது ஊரிலிருந்து திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
மன்னார்குடியில் இருந்து சென்னை வழியாக வெளிமாநிலத்திற்கு செல்லக்கூடிய ரெயிலில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது ரெயிலானது திருவாரூர் ரெயில் நிலையத்தில் நடைமேடையில் வரும் போது, பொது பெட்டியில் ஏறுவதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை வெளியில் இழுத்துள்ளனர்.
இதில் அவர் கணுக்கால் துண்டாகியது.
இதில் வலியால் துடித்த அவரை பயணிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- உத்தர பிரதேசத்தில் வெப்ப அலையால் ரெயில் தண்டவாளம் வளைந்து நெளிந்து போனது.
- இதைக்கண்ட ரெயில் டிரைவர் சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்தார்.
லக்னோ:
வட இந்தியாவின் சில மாநிலங்களில் தொடர்ந்து வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக உத்தர பிரதேசம், பீகார், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பக் காற்று வீசுகிறது. வெப்ப அலையின் தாக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நேற்று உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் - பிரதாப்கர் வழித்தடத்தில் உள்ள நிகோஹான் ரெயில் நிலையத்தை நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை நெருங்கியது. இந்த வேளையில் வழக்கமாக செல்லும் தண்டவாளத்தில் ஒரு ரெயில் நின்றது. இதனால் நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் லூப் லைன் தண்டவாளத்தில் மாற்றி விடப்பட்டது.
இதனால் அந்த ரெயில் லூப்லைனில் செல்ல வேண்டி இருந்தது. அப்போது தண்டவாளத்தில் ரெயில் செல்லும்போது வரும் அதிர்வில் மாற்றம் உருவானது. இதனால் சந்தேகத்தில் பைலட் ரெயிலை இயக்காமல் நிறுத்தினார். உடனே அவர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ரெயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
அப்போது தண்டவாளங்கள் சீர்குலைந்து இருப்பது தெரியவந்தது. கடும் வெப்பத்தின் காரணமாக தண்டவாளங்கள் உருகி வளைந்து நெளிந்து இருந்தது. இதையடுத்து ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு இந்த ரெயில் மாற்று தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. அதோடு லூப் லைனில் பிற ரெயில்கள் இயங்காமல் உடனடியாக தடை செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த லக்னோ கோட்ட ரெயில்வே மேலாளர் (டிஆர்எம்) சுரேஷ் சப்ரா உத்தரவிட்டுள்ளார்.
பைலட்டின் சாமர்த்தியத்தால் ரெயில் விபத்து தடுக்கப்பட்டதால், அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- சத்தம் கேட்டதால் ரெயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
- மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பச்சக்குப்பம் பகுதியில் சோதனை நடத்தினர்.
ஜோலார்பேட்டை:
வேலூர் மாவட்டம் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 120 ரெயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை, பெங்களூர், கேரளா மற்றும் கோவை, சேலம் பகுதிகளை இணைக்கும் முக்கிய ரெயில்வே பாதையாக இது உள்ளது.
இந்நிலையில் இன்று ஆம்பூர் அருகே சென்னை ரெயிலை கவிழ்க்க மாபெரும் சதி அரங்கேற்றப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் ரெயில் நிலையம் அருகே வீரவர் கோவில் என்ற இடத்தில் 3.45 மணிக்கு ரெயில் வந்தது. அந்த இடத்தில் கான்கிரீட் கலவையால் செய்யப்பட்ட சிமெண்ட் கல் மற்றும் கருங்கற்களை தண்டவாளத்தில் அடுக்கி வைத்திருந்தனர். ரெயில் அருகே வந்த போதுதான் என்ஜின் டிரைவர் அதை கவனித்தார்.
அதனால் ரெயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை. வேகமாக வந்த ரெயில் தண்டவாளத்தில் இருந்த கற்கள் மீது மோதி தூக்கி வீசியது.
மேலும் தண்டவாளத்தில் இருந்த சிமெண்டு கற்களை நொறுக்கியபடி ரெயில் சென்றது.
மற்ற பெட்டிகளில் உள்ள சக்கரங்களும் கற்கள் மீது ஏறி நொறுக்கின. இதனால் பயங்கர சத்தம் கேட்டது. ரெயிலில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் கண்விழித்தனர்.
சத்தம் கேட்டதால் ரெயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ரெயிலை என்ஜின் டிரைவர் மெதுவாக இயக்கினார். பச்சகுப்பம் ரெயில் நிலையத்தில் காவேரி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது.
அங்கிருந்து ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு என்ஜின் டிரைவர் தகவல் தெரிவித்தார்.
பின்னர் என்ஜின் கல் மீது மோதிய பகுதிகளை பார்வையிட்டார். அதில் சிறிய அளவு சேதம் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து 15 நிமிடம் காலதாமதமாக காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.
தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட இடத்திற்கு ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் தண்டவாளத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் போலீசார் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பச்சக்குப்பம் பகுதியில் சோதனை நடத்தினர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒடிசாவில், 3 ரெயில்கள் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், 292 பேர் உயிரிழந்தனர். 1100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில்வே அதிகாரிகள் உஷார் படுத்தபட்டனர்.
ரெயில் என்ஜின் டிரைவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தபட்டனர்.
திருச்சியில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் சமயபுரம் அருகே உள்ள வாளாடி ரெயில் நிலையத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தண்டவாளத்தில் லாரி டயர்களை அடுக்கி வைத்து கவிழ்க்க சதி நடந்தது.
இதில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.
இதேபோல திருப்பத்தூர் ரெயில்நிலையத்தில் சிக்னல் பெட்டி கற்கள் வீசி உடைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தினர். இந்த சதி சம்பவங்களில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.தொடர்ந்து விசாரணை நடப்பதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ரெயில்களை கவிழ்க்க அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். தண்டவாள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.
- குடிபோதையில் இருந்த ஜெயபிரகாசை கைது செய்தனர்.
- குடிபோதையில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் அருகேயுள்ள தேலே செவ்வா என்ற இடத்தில் ரயில்வே கேட் உள்ளது.
இந்த ரெயில்வே கேட் அருகே நேற்றிரவு ஜெயபிரகாஷ் என்பவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார்.பின்னர் அவர் தண்டவாளத்தில் 15 மீட்டர் துரம் காரை ஓட்டி சென்றுள்ளார். இதை கண்ட கேட் கீப்பர் பதறி போய் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தண்டவாளத்தில் இருந்த காரை அப்புறப்படுத்தினர். மேலும் குடிபோதையில் இருந்த ஜெயபிரகாசையும் கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது குடிபோதையில் வாகனத்தை இயக்குதல் மற்றும் ரெயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடிபோதையில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பெண் தண்டவாளத்தை கடக்க முடியவில்லை.
- சம்பவம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்து எலஹங்கா அருகே ராஜன குண்டே ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
இந்த ரெயில் நிலையத்தில் பெண் ஒருவர் நடந்து சென்றார். அவர் அங்கிருந்த தண்டவாளம் வழியாக நடந்து சென்றபோது அவருக்கு பின்னால் சரக்கு ரெயில் ஒன்று வேகமாக வந்தது. தண்டவாளத்தில் பெண் நடந்து சென்றதை பார்த்த ரெயில் டிரைவர் ஹாரன் அடித்துள்ளார்.
ஆனால் அந்த பெண் தண்டவாளத்தை கடக்க முடியவில்லை. உடனே சுதாரித்துக்கொண்ட அந்த பெண் தண்டவாளத்தில் கை, கால்களை நீட்டியபடி படுத்து கொண்டார்.
இதையடுத்து அந்த சரக்கு ரெயில் அவரை கடந்து சென்றது. தண்டவாளத்தில் படுத்துகொண்டதால் அவர் ரெயிலில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அப்போது அவரை மற்றொரு பெண் கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் விட்டார்.
இதை அந்த பகுதியில் நின்றவர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக பெங்களூரு ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.
அந்த பெண் தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருக்கும்போது, ரெயில் வருவதை பார்த்ததும், கீழே படுத்திருக்கலாம். எனவே, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
- தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக செங்கல்பட்டு அருகே ஒத்திவாக்கம் ரெயில் நிலையத்தில் நடை மேடையில் நின்று கொண்டிருந்த மரம் முறிந்து தண்டவாளத்தில் விழுந்தது.
இதன் காரணமாக அந்த வழியாக ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் தென் மண்டலங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
அதன்பிறகு தண்ட வாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் வரை தாமதமாக வந்தன. சென்னை வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது.
செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை தாம்பரம், மாம்பலம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் ஆகியோர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஏறி செல்வது வழக்கம். அந்த ரெயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக வந்ததால் சென்னைக்கு வேலைக்கு செல்பவர்களும், மாணவ-மாணவிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
- மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- 8 விரைவு ரெயில்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காலதாமதமாக சென்னை நோக்கி சென்றது.
திண்டிவனம்:
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு திண்டிவனம், விழுப்புரம் வழியாக ரெயில்கள் சென்று வருகின்றன.
இரவு திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதையடுத்து திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியில் காரைக்காலில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயில் மீதும், தண்டவாளத்திலும் அருகே இருந்த மரம் விழுந்தது.
இதனால் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்திவிட்டார். மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மரம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. மரம் விழுந்ததால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. பின்னர் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில்களும், வட மாவட்டத்தில் இருந்து வந்த கம்பன் ,பாண்டியன் முத்துநகர், கன்னியாகுமரி , போன்ற 8 விரைவு ரெயில்களும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காலதாமதமாக சென்னை நோக்கி சென்றது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
- தண்டவாளத்தில் பாறாங் கற்கள் வைக்கப்பட்டிருந்த விவரம் குறித்து அந்த ரெயில் என்ஜின் டிரைவருக்கு தெரிவிக்கப்பட்டது.
- சமீப காலமாக ரெயில்களை கவிழ்க்க நடந்து வரும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன.
மும்பை:
மராட்டிய மாநிலம் மும்பை- புனே ரெயில்வே வழித்தடத்தில் உள்ள அகுர்டி மற்றும் சின்ச்வாட் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று மாலை சந்தீப் பரோவ் என்ற ஊழியர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது சின்ச்வாடி அருகே ரெயில்வே தண்ட வாளத்தில் பெரிய அளவிலான பாறாங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதே போல அருகருகே 5 இடங்களில் பாறாங்கற்கள் இருந்ததையும் அவர் கவனித்தார். இது பற்றி உடனடியாக அவர் சின்ச்வாட் ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் உஷார் அடைந்தனர்.
அந்த சமயம் நாகர்கோவிலில் இருந்து மும்பை சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையத்தை நோக்கி மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் பாறாங் கற்கள் வைக்கப்பட்டிருந்த விவரம் குறித்து அந்த ரெயில் என்ஜின் டிரைவருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் நடுவழியில் ரெயிலை நிறுத்தினார்.
சம்பவ இடத்துக்கு ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தண்டவாளத்தில் இருந்த பாறாங்கற்களை அகற்றினார்கள். அதன் பிறகு நாகர்கோவில் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
ரெயில்வே ஊழியர் தக்க சமயத்தில் கற்கள் வைக்கப்பட்டு இருந்ததை பார்த்ததால் பெரும் விபத்து நடக்க இருந்தது தவிர்க்கபட்டது.
இந்த செயலில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. மும்பை- புனே வழித் தடத்தில் தினமும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும். இதை கருத்தில் கொண்டு ரெயில்களை கவிழ்த்து நாச வேலையில் ஈடுபட சமூக விரோத கும்பல் சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
சமீப காலமாக ரெயில்களை கவிழ்க்க நடந்து வரும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உதய்பூர்- ஜெய்ப்பூர் இடையே தண்டவாளத்தில் கற்கள் வைத்து அந்த வழியாக வந்த வந்தேபாரத் ரெயிலை கவிழ்க்க முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.
- 2 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதி
- திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயில் வேகமாக வந்தது.
குழித்துறை :
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இளம்பிலாம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ் (வயது 24). இவரது நண்பர்கள் தினேஷ் (23), அபினேஷ் (23).
இவர்கள் 3 பேரும் நேற்று இரவு மார்த்தாண்டத்தை அடுத்த ஞானன் விளை பகுதியில் உள்ள ெரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அந்த வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயில் வேகமாக வந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த 3 பேரும் தண்டவாளத்தில் இருந்து நகர்ந்து செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் ரெயில் அருகில் வந்து விட்டது. இதனால் தினேஷ், மற்றும் ரதீஸ் மீது ரெயில் உரசியபடி சென்றுள்ளது. இதில் அவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று காயம்அடைந்த தினேஷ் மற்றும் ரதீசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் ெரயில்வே கேட் மாற்றி அமைத்தல், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் போன்றவை நடக்கிறது.
- நேரத்துக்கு செல்லாமல் கால தாமதமாகவே ெரயில் சென்று சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பூர்:
சென்னை - மங்களூரு வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ெரயில், இருமார்க்கத்திலும் வருகிற 8-ந்தேதி வரை தாமதமாக பயணத்தை துவங்கும் என, சேலம் ெரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் ெரயில்வே கேட் மாற்றி அமைத்தல், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் போன்றவை நடக்கிறது. இதனால், மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்:22638) இரவு 11.45 மணிக்கு பதிலாக 2 மணி நேரம், 50 நிமிடம் தாமதமாக அதிகாலை 2.35 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும். இதேபோல், மறுமார்க்கமாக, சென்னையில் இருந்து மங்களூருக்கு புறப்படும் ெரயில் (எண்: 22637) மதியம், 1.25 மணிக்கு பதில், 3 மணி நேரம் தாமதமாக மாலை 4.25 மணிக்கு புறப்படும். வருகிற 5, 6, 8-ந்தேதிகளில் ெரயில் இயக்கம் தாமதமாகும். அடுத்தடுத்த நிலையங்களுக்கு அட்டவணையில் உள்ள நேரத்துக்கு செல்லாமல் கால தாமதமாகவே ெரயில் சென்று சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரெயில், தண்டவாளத்தில் இருந்த இந்த கம்பியில் மோதியது தெரியவந்தது.
- போத்தனூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
மதுரையில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக திருவனந்தபுரத்துக்கு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் மதுரையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு செல்கிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் மாலை 4.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு பொள்ளாச்சிக்கு வந்தது.
பின்னர் அங்கிருந்து கேரளா நோக்கி சென்றது.
இந்த ரெயில் இரவு 8 மணியளவில் ஆனைமலை அருகே உள்ள மீனாட்சி புரம்-முதலமடை இடையே சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று தண்டவாளத்தில் ஒரு அடி உயரம் கொண்ட கம்பி கிடந்தது. அந்த கம்பியில் ரெயில் மோதியது. ரெயில் பெட்டிகளும் குலுங்கின. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டனர்.
ரெயிலில் இருந்து ஏதோ ஒரு சத்தம் வருவதை கேட்டதும் ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்.
பின்னர் அவர் கீழே இறங்கி பார்த்தார். மேலும் இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் போத்தனூர் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது ரெயில் நின்ற இடத்தில் இருந்து 100 அடி தூரத்தில் இரும்பால் ஆன கம்பி ஒன்று கிடந்தது. ரெயில், தண்டவாளத்தில் இருந்த இந்த கம்பியில் மோதியது தெரியவந்தது.
இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் மூலம் ரெயில் சரி செய்யப்பட்டு 1 அரை மணி நேரம் தாமதமாக இரவு 9.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கேரளா நோக்கி சென்றது. ரெயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் பெரி தும் அவதியடைந்தனர்.
இதுகுறித்து போத்தனூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தின் மீது இரும்பு கம்பியை வைத்த நபர்கள் யார்? சதிவேலையில் ஈடுபட இதனை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் அங்கு யாராவது சுற்றி திரிகிறார்களா? என்பதையும் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது:-
பொதுவாக தண்டவாளத்தின் ஒரத்தில் தூரம் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஒரு கி.மீ தூரத்துக்கு ஒரு அடி உயரத்துக்கு இரும்பால் ஆன கம்பி வைக்கப்பட்டு இருக்கும்.
அந்த கம்பியை தான் யாரோ எடுத்து, ரெயில்வே தண்டவாளத்தில் வைத்துள்ளனர். அதன் மீது தான் ரெயில் மோதி உள்ளது. இந்த கம்பியை எடுத்து வைத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
- ரெயில் நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மொத்தம் 8 பிளாட்பாரம் உள்ளன. இதில் பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில் நேற்று 5-வது பிளாட்பாரத்திற்கு அரக்கோணம் அரசு ஐ.டி.ஐ. சீருடையில் 2 மாணவர்கள் வந்தனர். அவர்கள் திடீரென தண்டவாளத்தில் குதித்து கட்டி பிடித்து புரண்டனர். ஒரு மாணவன் கஞ்சா போதையில் தண்டவாளத்தில் விழ இன்னொரு மாணவன் அவனை தாங்கிப் பிடித்தான்.
அப்போது அந்த மாணவனும் போதையில் கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் எந்த ரெயில்களும் வரவில்லை. இது ஏதோ சினிமா சூட்டிங் நடப்பது போல் அரங்கேறியது.
இதனை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் மாணவர்களை விரட்டியடித்தனர்.
இந்தக் காட்சி தற்பொழுது அரக்கோணம் மக்களிடையே வீடியோவாக பரவிவருகிறது.
கஞ்சா போதையில் மாணவர்கள் ரெயில் தண்டவாளத்தில் கட்டி புரண்ட சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம் பகுதியில் பள்ளி கல்லூரிகள் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா விற்கும் நபர்களையும் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.